ஒரு மனிதனின் ஒவ்வொரு தேவைக்கும் பயன்படுத்துகிற பொருட்கள் வீடு,கார்,கைபேசி,இது போன்ற சொத்துக்கள் உபகரணங்கள் எதுவாக இருந்தாலும் சரி அதன் தயாரிப்பு, தரம்,உத்தரவாதம், அதன் பயன்பாடு என அனைத்தையும் அலசி ஆராய்ந்து பார்த்து தான் அதை நாம் பெற்றுக்கொண்டு பயன்படுத்துவோம்..
மேல் குறிப்பிட்டவாறு பொருட்களின் அனைத்தையும் பார்ப்பது போன்று ஒரு மனிதனிடம் அனைத்தையும் பார்த்து பழகுவது என்பது மிகவும் கடினமான விஷயமாகும்.
இப்போ இதை ஏன் நான் சொல்ல வர்றேன்னா?
இங்கும் உறவுகளை மையமாக வைத்து காதல் விதை போட்டு அந்த விதை முளைத்து துளிர் விட்டு செடியாகி மரமாகி பலன் பெறுவதற்காக எவ்வாறு போராடுகிறது என்பதை காதல் வித்தையாக காட்ட வந்துள்ளேன்..
அனைத்தையும் இயக்குவதற்கு ஒரு உந்து சக்தி இருக்கும் இல்லையா?.
அந்த சக்தி சரியாக இருந்தால் மட்டுமே பொருளாக இருந்தால் நல்ல தரத்தோடு பயன்களைத் தரும். அதுவே மனிதர்களாக இருந்தால் நற்பண்புகளோடு நல்ல பழக்கவழக்கங்களோடும் மாமனிதனாக இந்த சமூகத்தில் வாழமுடியும்.
ஒரு வீட்டை காலகாலமாக தாங்குவதற்கு எவ்வாறு வீட்டை கட்டும்போது போடும் அஸ்திவாரம் தரமாக உள்ளதோ அதேபோன்று அவ்வீட்டில் வாழும் குடும்பத்தை உடையாமல் சிதறாமல் கட்டிப் பாதுகாப்பதற்கு ஓர் உயிர் அவசியமானதாகும்..
ஆரம்பம் என்று ஒன்று இருந்தால் முடிவு என்பது ஒன்று இருக்கும்..
ஒரு குடும்பத்தில் அனைத்து உறவுகளும் இருக்கலாம். ஆனால் உறவுகள் அனைவரையும் சரியான முறையில் வழி நடத்தி சமூகத்தில் அவர்களை உன்னத மனிதர்களாக மாற்றிக் காட்டுவது குடும்பத்தில் இருக்கும் ஓரு உயிர் மட்டுமே ஆகும்..
அதே போன்று இங்கும் பேச்சி எனும் ஓர் உன்னத பெண் இருக்கும் வரை அந்த அழகிய குடும்பம் எனும் கூடு எவ்வாறு இருந்தது அவரின் மறைவின் பின் எவ்வாறு சிதறியது என்பதை நாம் பார்ப்போம்.
சோழன்
மகேஸ்வரன்
செல்லம்மா
உமாதேவி
இவர்கள் கதாநாயகர்கள் மற்றும் நாயகிகள்..
இவர்களுடன் இணைந்து இன்னும் சில முக்கிய கதாபாத்திரங்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இணைந்து நம்மோடு தொடர்ந்து பயணிப்பார்கள்..
போட்டியை பற்றி இவ்வளவு காலமும் நான் அறியாமல் இருந்து விட்டேன்.
ஒன்றரை மாதங்கள் தாமதமாக இறுதி நாள் அன்று போட்டியை பற்றி எனக்கு தெரியவந்து போட்டியில் கலந்து கொள்வதற்கு ஓர் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது..
கிடைத்த இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி இருக்கும் இரண்டு மாத கால அவகாசத்திற்குள் போட்டிக்கான எனது காதல் வித்தை என்னும் கதையை ஆரம்பித்து நிறைவு செய்ய உந்து சக்தியான உங்களது கருத்துக்கள் மற்றும் நிறை குறைகளை என்னோடு பகிர்ந்து என்னை விரைவாகவும் நிறைவாகவும் இக்கதையை எழுதி முடிப்பதற்கு வாசகர்களாகிய நீங்கள் 100 பேரில் ஒருவராக இருக்கும் என்னோடும் இணைந்து என்னை ஊக்கப்படுத்துங்கள்..