பெண்களுக்கு திருமணத்தின் பின் கணவனை எவ்வாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.. கணவனுக்கு அடுத்து தான் தாய் தந்தை என்று அனைத்தையும் செல்லம்மாவும் உமாவும் தங்களது பெண் குழந்தைகளுக்கு ஒரே மாதிரி சொல்லிக் கொடுத்தார்கள்..
ஆண் பிள்ளைகளுக்கு படிப்பும் உழைப்பும் மட்டும் முக்கியமில்லை பெண்களை அனைத்து இடத்திலும் மதிப்பு மரியாதையாக அன்பாக நடத்த வேண்டும் என்று கூறினார்கள்..
மனைவியின் சுக துக்கம் நான் கணவன்மார்க்கு மிகவும் முக்கியம்..
பெண் எனக்கு அடங்கி இருக்க வேண்டும் என்று கணவனோ..
கணவன் தனக்கு அடிமையாக தான் சொல்வது அனைத்தையும் கேட்டு இருக்க வேண்டும் என்று மனைவியும் நினைப்பது தவறான சிந்தனையாகும்..
ஆணும் பெண்ணும் அனைத்திலும் சமம் என்பது போன்ற வாழ்க்கையிலும் அனைத்திலும் சமமாக இருக்க வேண்டும்..
அனைத்து அறிவுரைகளையும் சொல்லிக் கொடுத்தே குழந்தைகளை வளர்த்தார்கள்..
இதோ உமாவும் செல்லம்மாவும் எதிர்பார்த்தது போன்று.. இரு பெண் குழந்தைகளுக்கும் அடுத்தடுத்து சடங்கு செய்து இன்னும் ஆறு வருடத்தில் அவர்கள் திருமணத்திற்கு தயார் என்னும் நிலையில் இருந்தார்கள்..
மகேஷ் அவனது பினான்ஷியல் கம்பெனியை மேலும் அடுத்தடுத்த கிளைகலோடு விரிவு படுத்தினான்..
சோழன் கந்தசாமியின் மறைவுக்குப் பின் அவரது அனைத்து கொள்கைகளையும் கடைப்பிடித்து அடுத்தடுத்து வரும் இளைய தலைமுறையினருக்கு கட்சியின் மூலம் புகுத்தினான்..
தற்பொழுது சண்முகத்திற்கு வயது முதிர்வினால் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகி வெளியேறுவதாகவும் அந்த பதவிக்கு சரியான ஆள் சோழன் என்றும் ஏகமனதாக அனைவரும் ஒத்துக்கொண்டு சம்மதித்து கட்சி தலைவர் பதவியில் சோழன் அமர்த்தபட்டான்..
இந்த முறை வேறு ஒரு கட்சி ஆட்சியில் இருந்தது..
எலெக்சனுக்கு இன்னும் ஆறு மாதங்களே இருந்தது..
சோழனின் கட்சி போட்டியிட்டு சோழன் முதலமைச்சராக வேண்டும் என்பதே அவர்களின் தீர்மானம்..
தொண்டர்களின் தீவிர உழைப்பால் அதுவும் சாத்தியப்பட்டது..
ஒரு காலத்தில் அடிதடி வெட்டு குத்து என்று திரிந்த சோழன் இன்று அந்த நாட்டின் முதலமைச்சர்..
காலம் அவனுக்கு கை கொடுத்ததும் அவனை சுற்றி இருந்த நல்ல மனிதர்களும் அதற்கு ஊக்குவித்தனர் அதனால் இன்று இது சாத்தியமானது..
வள்ளி முற்றாக குணமாகி அனைத்து விதத்திலும் செல்லமாக்கு உதவியாக இருந்து பேரப் பிள்ளைகளை நன்றாக வளர்த்தார்..
சோழனின் சிறுவயது வளர்ப்பு ஞாபகங்கள் எதுவும் அவருக்கு இல்லாததால் அனைத்தையும் பேரப்பிள்ளைகளில் தீர்த்துக் கொண்டார்..
பழனிச்சாமியின் உண்மையான முகம் கமலாக்கும் குடும்பத்தினருக்கும் தெரியாமல் இருந்தது அப்படியே இருக்கட்டும் இனி தெரிந்தும் அது எவ்வித பிரயோஜனமும் இல்லை அதனால் பல மனங்கள் காயப்படும் என்பதால் அது புதைக்கப்பட்டது புதைக்கப்பட்ட உண்மையாகவே போய்விட்டது..
பாட்டியின் இறப்பிற்கு வந்த இடத்தில் பழனிச்சாமி சோழனை முறை பார்த்து முகத்தில் அன்பையும் கவலையும் தேக்கி வைத்திருப்பதை செல்லம்மாக கவனித்து விட்டாள்..
அவர்கள் சென்றதும் இதைக் கேட்டாள்.. இதைப்பற்றி பேசிய செல்லம்மாவிடம் மறைக்காமல் சோழன் உண்மையை கூறிவிட்டான்..
அன்றில் இருந்து செல்லம்மாவுக்கு பழனிச்சாமியின் மேல் ஒரு வித வெறுப்பு ஏற்பட்டது..
ஏனென்றால் வள்ளியின் நிலையையும் சோழனின் நிலையும் கண்கூடாக பார்த்தவள் ஆயிற்றே..
அன்றிலிருந்து கமலா மற்றும் உமாவிடம் பேசினாலும் பழனிச்சாமியின் நலன் கேட்பதை கூட தவிர்த்து விட்டாள்..
காலங்கள் யாருக்கும் காத்திராமல்.. வருடங்கள் உருண்டோடியது..
வள்ளியும் இறந்துவிட்டார்..
பழனிச்சாமி யாருக்கும் தெரியாமல் அழுதார் என்பது வேறு கதை..
உமாவின் சகோதரர்கள் நால்வரும் அடுத்து அடுத்து திருமணம் செய்து கொண்டார்கள்..
அதே ஊரிலும் பக்கத்து ஊரிலும் என்று திருமணம் செய்து விடுமுறை நாட்களில் கமலா வீட்டில் அனைவரும் ஒன்று கூடி விடுவார்கள்..
இரண்டாவது பெண் குழந்தை பிறந்த நேரம் குழந்தைக்கு தொடர்ந்து காய்ச்சல் சளி நோய் என்று வந்ததால் உமா மகேஷின் விருப்பத்தினால் அவளது தாய் வீட்டிற்கு சென்று கொஞ்ச காலம் இருந்து விட்டு வந்தாள்..
அவர்கள் இங்கே இன்னும் வரவில்லை.. ஆனால் உமா அங்கே சென்று குழந்தைகளை காட்டி விட்டு வருவாள்..
சித்ரா மகனின் கவனிப்பில் நன்றாக இருந்தவர் ஒரு கட்டத்தில் மகளின் வாழ்க்கையை பார்த்து யோசித்து அவரது உடல் நிலையை கவனிக்காமல் விட்டு இதோ அவருக்கு கை கால் எல்லாம் செயலிழந்து போய் விட்டது..
நிஷாவின் கணவன் நிஷாவின் தொல்லை தாங்காமல் அவளை விட்டு சென்று விட்டான்…
கை கால் முடியாத தாய் மற்றும் இரண்டு குழந்தைகளையும் வைத்துக்கொண்டு நிஷா தான் உழைத்து அவர்களை பார்த்துக் கொண்டாள்..
மகேஷ் இப்பொழுது வரை தாய்க்கு அனைத்தையும் கொடுத்து உதவி செய்து கொண்டு தான் இருக்கிறான்..
செய்த வேலைக்கு இங்கு அழைத்து வந்து உமாவை வைத்து பார்த்துக்கொள்ள அவனுக்கு விருப்பமில்லை..
காலையில் எழுந்து வீட்டு வேலை செய்துவிட்டு குழந்தைகள் இருவரையும் பாடசாலைக்கு அனுப்பி விட்டு தாய்க்கு செய்ய வேண்டிய கடமையை செய்து விட்டு வேலைக்கு சென்று அங்கே கஷ்டப்பட்டு வேலை செய்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து வேலை செய்வது என்பது அவளது உடம்பிற்கு ஒத்துக் கொள்ளவில்லை..
வேலை என்பதை இல்லாமல் சொகுசாக அண்ணனின் உழைப்பில் தாயின் சமையலை உண்டு வளர்ந்தவளால் இப்படி கஷ்டப்பட முடியவில்லை..
தாயின் விசயத்தில் முடிவெடுக்க வேண்டும் என்றும் மகேஷை சந்தித்து கூறினாள்..
தாய்க்கான அனைத்து செலவுகளுக்கும் பணம் தருவதாகவும் அவளையே தாயை பார்த்துக் கொள்ளுவும் படியும் கூறினான்..
பார்த்துக் கொள்வதற்கும் சேர்த்து பணம் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள்..
பெற்ற தாயை பார்க்க பணம் கேட்பவளை விசித்திர ஜந்தாக பார்த்துவிட்டு அதற்கும் சரி என்று சம்மதித்தான்..
சொன்னது போன்று மாதம் பணம் கொடுத்து விடுவான்..
ஆனால் தாயை சென்று பார்க்க அவனுக்கு விருப்பமில்லை..
இப்பொழுது உமாவை நல்லபடியாகவே அன்பாக பார்த்துக் கொண்டான்..
அவர்களுக்கு என்று ஒரு அறை இருப்பதால் அவர்களது தாம்பத்திய வாழ்க்கைக்கு எந்த இடைஞ்சலும் இல்லை..
இங்கு சோழனுக்கு இருந்ததை விட பொறுப்பு அதிகமானதால் 24 மணித்தியாலமும் தொண்டர்களுக்கும் தொகுதி நாட்டு மக்களுக்கும் சேவை செய்வதற்கே நேரம் போதவில்லை..
என்று மனைவி குடும்பம் இருப்பது எப்பொழுதாவது நினைவு வரும் பொழுது வீட்டுக்கு வந்துவிட்டு செல்வான்..
இப்பொழுதும் அந்த வீடு அந்த ஊர் கோவில் பிள்ளைகளின் பாடசாலை விஷயங்கள் உமாவோடு பேசுவது என்று தான் செல்லம்மாவின் நாட்கள் கழிந்தது..
ஏதாவது வீட்டிற்கு வரும்போது மட்டும் தான் செல்லம்மாவை சோழன் நாடுவான்..
அவனது பொறுப்பும் அதனால் அவன் கஷ்டப்படுவதும் செல்லம்மாக்கு தெரிந்திருந்தும் அவனை எதிர்பார்க்கும் நேரங்களில் அவன் இல்லாமல் போவதால் அவளுக்கும் கோபம் வந்துவிடும்..
சோழன் வரும் பொழுது அந்த கோபத்தை காட்டி ஊடல் செய்து அந்த ஊடலை நிவர்த்தி செய்ய கூடலில் முடித்துக் கொள்வார்கள்..
இவ்வாறு இரண்டு தம்பதியினருக்கும் தொழில் குடும்பம் என்று நாட்கள் மாதங்களாக மாதங்கள் வருடங்களாக சென்று இன்னும் மூன்று மாதத்தில் அவர்களது பிள்ளைகளுக்கு அவர்களின் விருப்பத்தின்படியே திருமணம் என்னும் நிலையில் வந்து நின்றது..
இப்பொழுது சோழனின் கட்சி தான் ஆட்சியில் இருந்தது..
அதனால் திருமணத்திற்கு உடை எடுக்க நகை எடுக்க என்று சென்ற கடைகளில் அனைத்தும் மரியாதையாகவே அவர்களை நடத்தி தேவையானதை பொறுமையாக எடுத்துக்காட்டி அவர்களது தெரிவின்படியே அனைத்தையும் கவர் செய்து கொடுத்து அனுப்பினார்கள்..
திருமணமும் ஒன்றாக நடைபெறுவதால் அவர்களுக்கு வேலைகள் அதிகமாக இருந்தது..
கட்சி உறுப்பினர்கள் தொண்டர்கள் பிசினஷ் மேன் என பெரியவர்கள் அவர்களது ஒரு மக்கள் என்று அனைவருக்கும் பத்திரிக்கை கொடுத்தார்கள்..
மகேஷ் இருவரும் பார்த்து பார்த்து செய்தார்கள்..
இரண்டு வருடத்திற்கு முன்புதான் பழனிச்சாமி இறந்துவிட்டார்..
ஆனால் கமலா இனியும் தள்ளி இருக்க விரும்பாமல் அவர்களுடன் சேர்ந்து கொண்டார்..
அவன் பழனிச்சாமிடம் சொன்னது போன்று அவனது மகளுக்கும் சீர் கொடுக்காமல் தான் திருமணம் செய்ய போகிறான் மகேஷ்..
உமாவின் தம்பியும் மகேஷிடம் மன்னிப்பு கேட்டு அவர்களுடன் சேர்ந்து கொண்டான்..
இருவருக்கும் சோழனின் ஊரில் தான் திருமணமும் இங்கே வரவேற்பும் என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது..
அப்படி எந்த தடையும் இல்லாமல் திருமணமும் நன்றாக நடைபெற்றது..
திருமணம் முடித்த கையோடு அங்கே தங்காமல் மகேஷும் அவர்களது ஊருக்கு இங்கே ஏற்பாடு பார்க்க வந்து விட்டார்கள்..
நான்கு நாட்கள் கழித்து சோழன் செல்லம்மா அவர்களது பிள்ளைகள் மருமக்களோடு ஊருக்கு வரவேற்புக்காக வந்து சேர்ந்தார்கள்..
வரவேற்பு விமர்சையாக நடத்தப்பட்டது..
நாட்டு முதலமைச்சர் மற்றும் பிசினஸ் புலி இருவரின் பிள்ளைகளின் திருமணம் என்றால் சும்மாவா?..
உணவு வகையிலிருந்து இசையில் இருந்து அனைத்தும் உயர்தரமாகவே இருந்தது..
வரவேற்பு நன்றாக நடந்து முடிந்ததும் இரண்டு குடும்பங்களும் ஒன்றாக சேர்ந்து சந்தோஷமாகவே அவர்களது நாளை கழித்தார்கள்..
செல்லம்மா தனது மகளுக்கும் உமா தனது மகளுக்கும் என அறிவுரைகளை வழங்கி அவர்களுக்கான வாழ்க்கை ஆரம்பிப்பதற்கு முதல் இரவுக்கு நாள் மற்றும் நேரம் குறித்து கொடுத்தார்கள்..
பேச்சி அந்த குடும்பத்து பிள்ளைகளுக்கு பேரப்பிள்ளைகளுக்கு நல்லதை சொல்லிக் கொடுத்து நல்ல விதையை விதைத்தார் ஆனால் அதில் ஒன்று நிர்மல் மூலம் விஷ செடியாக மாறிவிட்டது..
பேச்சியின் வளர்ப்பை பொய்யாகாமல் செல்லம்மா அவரது பிள்ளைகளுக்கு நல்லதை சொல்லிக் கொடுத்து நல்ல விதையை மனதில் விதைத்து வளர்த்து விட்டாள் அவர்களது பிள்ளைகளுக்கு என்று அவர்களது சந்ததி நல்லபடியாகவே மாறும்..
உமாவோ கமலாவின் வளர்ப்பை பொய்யாக்காமல் பிள்ளைகளை நல்ல விதத்தில் தான் வளர்த்தாள்..
மதியும் பேச்சியின் வளர்ப்பை பொய்யாக்காமல் அன்பு விட்டுக்கொடுப்பு அனுசரணை என்று இருந்து மாமியாரின் மனதில் இடம் பிடித்து அவளது சிக்கலான வாழ்க்கையை நல்ல முறையில் மாற்றிக் கொண்டு பேச்சியின் வளர்ப்பை பொய்யாக்காமல் அவளது பிள்ளைகளுக்கும் அவளும் நல்லதை சொல்லிக் கொடுத்து வளர்த்தாள்..
பழனிச்சாமியும் வள்ளி விஷயத்தை ஒரு கட்டத்தில் விஷ செடியாகவும் சித்ரா மற்றும் நிஷாவும் வாழ்க்கை முழுவதும் விஷ செடியாகவும் இருந்து வந்தார்கள்..
தோழன் அடிதடி வெட்டு குத்து என்று இருந்தவன் வாழ்க்கையில் அவன் நீ எதிர்பாராத அளவு பெரிய உயர்ந்த பதவியில் இருப்பதற்கு அம்மாவின் வரவே காரணம் என்பதை சாவியின் வார்த்தை மூலம் உண்மை என்று மனப்பூர்வமாக நம்பி அவளை பெரிய ஒரு மரியாதையான இடத்தில் வைத்து நடத்துகிறான்..
குடும்ப வாழ்க்கை என்று வரும் பொழுது அவனுக்கு எப்பொழுதும் அவள் செல்லாக்குட்டி தான்..
காக கையில் கிடைத்த வாழ்க்கையை ஆரம்பத்தில் சிக்கலாகிக்கொண்டாலும் அதை போகப்போக சிக்கலை நிவர்த்தி செய்து இப்பொழுது பிள்ளைகளுக்கு எடுத்துக்காட்டான தம்பதிகளாக உமாதேவி மகேஷ்வரன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்..
செல்லம்மா மற்றும் அவர்களது பிள்ளைகளின் மனதில் போட்ட நல்ல விதை அவர்களது காலத்திற்கு தொடர்ந்து நல்லதே நடக்கும் என்று நினைப்போம்..
மாணிக்கத்தின் கையாலாக இருந்த அந்த கட்சி உறுப்பினர்கள் தலைவர் மற்றும் தொண்டர்கள் விஷ செடிகளாக இருந்து தற்போது இருந்த இடம் தெரியாமல் அழிந்து விட்டார்கள்..
கந்தசாமி அவருக்கு தெரிந்த நல்லதை சொல்லிக் கொடுத்து சண்முகத்தை வளர்த்து சண்முகத்தின் மூலம் நல்ல கட்சி ஆரம்பித்து குடும்பத்தில் மட்டும் பெண்கள் தாய்மார் நல்லதை சொல்லிக் கொடுத்த சரி வராது நாட்டிற்கும் ஒரு நல்ல தலைவர் வேண்டும் என்பதை கந்தசாமியின் மூலம் அடுத்தடுத்து உருவாக்கப்பட்டவனே சோழன் இப்பொழுது கந்தசாமி அவரது அவரது கட்சி தொண்டர்கள் உறுப்பினர்கள் அனைவருக்கும் நல்லதை சொல்லிக் கொடுத்து அவர்களை மனதில் நல்லதை விதைத்து அது நல்லாட்சி ஒன்றை வெற்றிகரமாக ஆரம்பித்து சூழ்ச்சி இல்லாமல் அதனால் வீழ்ச்சி அடையாமல் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள்..
குடும்பத்திற்கு என் தந்தையும் இவ்வளவு முக்கியமோ அதே போன்று நாட்டிற்கும் நல்ல தலைவர் முக்கியம்..
அதை நல்ல விதையை போட்டு கந்தசாமி நல்ல செடியை மரமாக வளர்த்து உருவாக்கிவிட்டு சென்றிருக்கிறார்..
கந்தசாமி சண்முகம் மறைந்தாலும் அவர்களது நினைவு அனைவர் மனதிலும் நிறைந்து இருக்கும்..
சோழன் செல்லம்மா தம்பதியினர் மற்றும் உமா மகேஷ் தம்பதியினர்கள் போன்று இப்பொழுதும் மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்..
பேச்சி செல்லம்மாவின் சந்ததியினர் வாழும் வரை இந்த உலகில் நினைவாக வாழ்ந்து கொண்டிருப்பார்..
நல்ல விதைகளை விதைத்தவர்கள் நல்லதை அறுவடை செய்வார்கள்..
விஷ வித்து போட்டவர்கள் கள்ளி செடி போன்று தான் பயன் அற்றதை அறுவடை செய்வார்கள்..
நல்லதை நினைப்போம் நல்லதையே செய்வோம்.
நல்லது செய்வதற்கு அன்பும் காதலும் வேண்டும்..
காதல் வித்தை மூலம் இரு தம்பதியினர்கள் நல்ல விதையை விதைத்து பல வித்தை மூலம் அதை அறுவடை செய்தார்கள்..
இவர்களது வாழ்க்கையை பார்த்து நாமும் நல்லதை எடுத்துக் கொண்டு தீயதை தீ வைத்து கொளுத்தி விட்டு நல்ல விதையை போட்டு நல்ல பயனை அடைவோம்..