பேச்சியம்மாள் இவர் பொறுமையின் சிகரம் என்றுதான் கூற வேண்டும்.
பூமித்தாய் பூமாதேவி இவ்வுலகில் நடக்கும் அனைத்து நன்மை மற்றும் தீமைகள் அழிவுகள் என அனைத்து செயல்களையும் எவ்வளவு பொறுமையாக பொறுத்துக் கொண்டு இருக்கிறாளோ அதே அளவு பேச்சியை சுற்றி நடப்பவைகளும் அவர் வாழ்வில் நடந்த கொடுமைகள் என அனைதையும் பொறுமையாகவே கடந்து வந்தார்.
பேச்சியை பற்றி ஒரு சில வரிகள்.
நான்கு பெண்கள் ஒரு ஆண் என சகோதரர்களோடு பிறந்தவர்.
இதில் பேச்சி இரண்டாவது பெண் குழந்தை.
கடைசி பெண் குழந்தை பிறந்து ஐந்து நாட்களில் பேச்சியின் தாய் சரஸ்வதி வலிப்பு நோயினால் இறந்துவிட்டார்.
பேச்சியின் தந்தை வெளியிடங்களுக்கு தொழிலுக்கு செல்வதால் பேச்சி மற்றும் அவரது அக்கா இருவரும் அவர்களுக்கு கீழ் உள்ள மூன்று குழந்தைகளையும் அவர்களுக்கு தெரிந்த அளவில் பார்த்து பராமரித்து உணவுகள் செய்து சாப்பிட்டு என அவர்களது சிறுவயது கழிந்தது.
இக்குழந்தைகளில் யாரும் அதிகமாக படிக்கவில்லை.
பேச்சி வயதுக்கு வந்து இரண்டு வருடத்தில் அவரது பதினான்காவது வயதில் அவரின் அழகு மற்றும் நிறத்திற்கும் அவரது அன்பான பண்பான குணத்திற்கும் பேச்சியின் மேல் விருப்பம் கொண்டு ராமு என்பவர் பேச்சின் தந்தையிடம் அவரை திருமணம் செய்து தருமாறு கேட்டார்.
ஆனால் பேச்சியின் தந்தையோ பேச்சின் அக்கா இருக்கும் பொழுது அவருக்கு திருமணம் செய்து வைக்க விருப்பம் இல்லாமல் ராமுவை அவரது தொழில் பார்ட்னராக சேர்த்துக்கொண்டு அவரது மூத்த மகளுக்கு 16 வயதில் திருமணம் செய்து வைத்துவிட்டார்.
திருமணம் முடிந்து ஆறு மாதங்களில் ராமு தந்தை மற்றும் சகோதரர்களிடம் இருந்து ராணியை தனியாக பிரித்து அழைத்து சென்று விட்டார்.
அதன் பின் இன்னும் பேச்சின் கீழ் மூன்று சகோதரர்கள் இருப்பதால் நான்கு வருடங்களாக அவர்ககளை பேச்சி வளர்த்தார்.
ஓரளவிற்கு அவர்களின் தேவைகளை அவர்கள் பூர்த்தி செய்து கொள்ள முடியும் என்று அறிந்த பின் தந்தை காட்டிய ஆறுமுகம் என்பவரை இரண்டாம் தாரமாக பேச்சி திருமணம் செய்து கொண்டார்..
பேச்சித் திருமணம் செய்த கொஞ்ச நாட்களில் பேச்சியின் தம்பி மற்றும் கடைசி தங்கை இருவரும் அப்பொழுது ஏற்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டு ஒருவர் பின் ஒருவராக இருவரும் இறந்து விட்டார்கள்..
அதன் பின் பேச்சி மற்றும் ஆறுமுகம் அவரின் தந்தை அவரின் அடுத்த தங்கை ராதா என நால்வரும் வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்தார்கள்.
பேச்சிக்கு அடுத்த பத்தாவது மாதமே அழகான ஆண் குழந்தை பிறந்தது.
ஆறுமுகத்தின் முதல் மனைவிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. அவரின் மனைவி அவரிடம் அன்பாக அனுசரணையாக அவரை புரிந்து நடந்து கொள்ளாமல் தினமும் சண்டை சச்சரவு சந்தேகம் என ஆறுமுகத்தை அவரது மனைவி கஷ்டப்படுத்தியதால் அவரால் சரியாக தொழிலில் கவனத்தை செலுத்த முடியாமல் தொழிலும் சரிவை ஏற்படுத்த மிகவும் மனம் உடைந்து போய்விட்டார்.
அந்த நேரத்தில் தான் பேச்சியின் தந்தையும் ஆறுமுகமும் சந்தித்து கொண்டார்கள். ஆறுமுகத்தை பேச்சியின் தந்தை அவரது தொழிலில் பங்குதாரராக சேர்த்துக் கொண்டு ஆறுமுகத்தின் நேர்மையான குணம் பிடித்து போக இரண்டாம் தாரம் என்றும் பாராமல் மகளை திருமணம் செய்து வைத்து இத்திருமணத்தின் மூலம் பேச்சியின் தந்தை ஆறுமுகத்தை உறவாக மாற்றிக் கொண்டார்.
அதன் பின் சட்டப்படி முதல் மனைவியை விட்டு பிரிந்து வந்து பேச்சியை திருமணம் செய்து கொண்டார். பேச்சி அவருக்கு பிடித்தமான மனைவியாக இருந்ததால் அவர்களின் வாழ்க்கை இரண்டு வருடங்களாக எது வித பிரச்சனையும் இல்லாமல் சென்றது.
பேச்சி இரண்டு வருடத்தின் பின் அடுத்த குழந்தை உண்டாகி இருந்த நேரம் ஆறுமுகத்திடம் ஏதோ ஒரு சில மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை அவர் தெரிந்து கொண்டார்.
அவரும் குழந்தை உண்டாகிருப்பதால் அதற்குரிய சோர்வுகள் களைப்புகள் என தன்னோடும் போராடிக் கொண்டு கணவனின் பிரச்சினைகளையும் என்னவென்று தெரிந்து தீர்க்க முடியாத கவலையில் உடல் மெலிந்து சோர்ந்து துவண்டு போனார்.
பேச்சியின் தங்கை தான் பேச்சிக்கு உற்ற துணையாக இருந்து அனைத்தையும் பார்த்துக் கொண்டார்.
ஆறுமுகத்தின் வருகை இரவுகளில் குறைந்து படிப்படியாக வீட்டிற்கே அவர் வராமல் இருந்துவிட்டார்.
இதை பேச்சியின் தங்கை அவரது தந்தையிடம் கூறினார். அவரும் ஆறுமுகத்தை சந்தித்து என்னவென்று கேட்பதாக கூறி அவரைத் தேடினால் அவர் கிடைக்கவில்லை.
இதில் பேச்சுக்கும் குழந்தை பிறப்பதற்காக நாள் நெருங்கிக் கொண்டிருந்தது.
நாட்கள் எதற்கும் காத்திராமல் வேகமாக சென்று பேச்சிக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்தது.
அக்குழந்தை சிறு சிறு குறைபாடுகளுடன் பிறந்ததால் பேச்சி சிறிதளவும் அக்குழந்தையை விட்டு நகர முடியாமல் மேலும் கணவனின் நினைவாளும் வாடினார்.
குழந்தை பிறந்து எட்டாவது நாள் காலையில்.
கணவனை குழந்தை பிறந்ததிலிருந்து காணாமல் தவித்து போய் இருந்த பேச்சிக்கு வாழ்வே இருண்டது போன்று தலையில் இடி விழுந்த அளவு பாதிப்பை பேச்சியின் தங்கையின் வாயிலாக கேட்ட தகவலில் உணர்ந்தார்.
தகவல் அறிந்து பேச்சியின் தங்கை எவ்வாறு பேச்சியிடம் இதைக் கூறுவது என்று தெரியாமல் அழுது கரைந்து ஒருவழியாக பேச்சியின் கணவன் ஆறுமுகம் அவ் ஊரில் இருந்த சுடுகாட்டில் இறந்து கிடப்பதாக பேச்சின் தங்கை இராதா அறிந்த தகவலை பேச்சியிடம் கூறினார்.
——————–
பசுமைக்கும் குழுமையான அழகிற்கும் காலத்திற்கு ஏற்ப வெயில் காலங்களில் வெயிலின் தாக்கம் ஊரில் வாழும் மக்களுக்கு அதிகம் பாதிக்காமல் இருக்க குழுமையாகவும் என்றுமே குறைவில்லாத ஆற்று நீர் ஓட்டத்திற்கும் சொந்தமான ஊர் பசுஞ்சோலை கிராமமாகும்.
இந்த ஊர் எங்க இருக்குன்னு கேக்க கூடாது கற்பனை ஊர்.
ஒவ்வொரு ஊரிலும் நடக்கும் திருவிழா கொண்டாட்டங்கள் பண்டிகை கொண்டாட்டங்கள் காதல் களியாட்டங்கள் அடிதடி வெட்டு குத்து என அனைத்தும் இவ் ஊரிலும் நடக்கும்.
வெட்டுக்குத்திற்கு இந்த ஊரில் பிரபலமான ராஜமாணிக்கம் என்பவனிடம் தான் சோழன் கைக்கூலியாக வேலை செய்கிறான்.
சோழனின் தந்தை சிறு வயதில் சோழனையும் அவரது தாயையும் விட்டு பிரிந்து வேறு திருமணம் முடித்து சென்று விட்டார்.
சோழனின் பாட்டி முத்தம்மா மகள் வள்ளியை சோழனின் தந்தைக்கு கொடுப்பதாக கூறி திருமணம் செய்து வைத்த நகை மற்றும் பணத்தை கொடுக்க முடியாத காரணத்தால் திருமணம் முடித்து மூன்றே மாதத்தில் வள்ளியை விட்டு சென்றுவிட்டார்.
கணவன் சென்ற துக்கம் ஒரு பக்கம் மசக்கை ஒரு பக்கம் என வள்ளியை வாட்டி வதைக்க வள்ளியின் தாய் முத்தம்மா தான் கண்ணும் கருத்துமாக மகளை கவனித்துக் கொண்டார்.
கணவன் ஒரு பெண்ணை விட்டு சென்று விட்டால் கணவனின் மீது குற்றம் இருந்தாலும் அதன் மொத்த பழி பாவம் தாக்கம் என அனைத்தும் அந்த பெண்ணின் மீதே வந்து சேரும் என்பதற்கு வள்ளியும் விதிவிலக்கு இல்லை.
ஊரில் ஒரு நல்ல காரியங்களுக்கு வள்ளியால் செல்ல முடியவில்லை வாழவெட்டி என்று அனைவரும் ஒதுக்க ஆரம்பித்து விட்டார்கள். அதனால் இனி அவர் வீட்டை விட்டு வெளியே செல்வதில்லை விசேஷங்களில் கலந்து கொள்வதில்லை என்கிற முடிவை எடுத்துவிட்டு அவரை நம்பி மகன் சோழன் இருப்பதால் அவர் தனக்குள்ளே ஒடுங்கி அவரது ஆசை கனவு சந்தோசம் என அனைத்தையும் அவரின் உள்ளே புதைத்துக்கொண்டு மகனுக்காக நடைபிணமாக வாழ்ந்தார்.
உணர்வுகளை வெளி காட்டாமல் தன்னுள்ளேயே அடக்கி வைத்து இருந்த வள்ளிக்கு சோழனுக்கு பதினைந்து வயது ஆகும் பொழுது சித்தபிரம்மை பிடித்து அவரது காலத்தை அவரின் தாய் வீட்டிலேயே கழித்தார்.
இன்று வரையிலும் முத்தம்மா வள்ளி சோழன் என அவர்களது வாழ்வு சென்று கொண்டிருக்கிறது.
தாய்க்கு மனப்பிறழ்வு ஏற்பட்டதால் சோழன் அவனது படிப்பை விட்டு ராஜமாணிக்கத்திடம் சிறு சிறு வேலைகளை செய்து வந்தான்.
அதில் கிடைக்கும் பணத்தின் மூலம் உணவு உடை என அவர்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொண்டார்கள்.
தற்பொழுது சோழனுக்கு 30 வயது ஆகிவிட்டது ஆனால் இன்னும் திருமணம் முடித்து வைப்பதற்கு எந்த ஒரு ஏற்பாடும் முத்தமாவோ செய்யவில்லை.
முத்தமவிற்கும் வயது முதிர்வினால் அவரால் இனி எதுவும் செய்ய இயலாது என்ற நிலைக்கு வந்துவிட்டார்.
அவர்களின் வீட்டில் சமையலை மட்டும் சோழன் செய்துவிட்டு தாய் மற்றும் பாட்டியையும் அவர்களின் தேவைகளையும் வீட்டையும் பார்த்துக் கொள்வதற்கு ஒரு பணிப்பெண்ணை அமர்த்தி விட்டு அவன் ராஜமாணிக்கத்திடம் கைக்கூலிக்கு சென்று விடுவான்.
பதினைந்து வயதில் சிறு சிறு எடுபிடி வேலைக்கு என சென்றவன் தற்பொழுது அவனது வளர்ச்சி உடல் பருமன் என அனைத்தையும் பார்த்து ராஜமாணிக்கம் அவரது வலது கையாகவே வைத்துக்கொண்டார்.
கற்பழிப்பு களவு இது இரண்டையும் தவிர்த்து அனைத்தையும் ராஜமாணிக்கம் சொன்னால் அடுத்த நிமிடம் அதன் நன்மை தீமை என எதையும் யோசிக்காமல் செய்து முடித்துவிட்டு தான் அடுத்த வேலை பார்ப்பான் சோழன்.
ஏன் அவன் இவ்வாறு இருக்கிறான் என்றால் சிறிய அளவு பணமும் நகையும் கொடுக்காததால் தந்தை தாயை விட்டு பிரிந்ததால் தாயின் நிலை இவ்வாறு ஆனதற்கு அந்த பணமே காரணம் என அவனது மனதில் ஆழமாக பதிந்து விட்டது.
சோழனிடம் ஆரம்பத்தில் இருந்து அவன் செய்த வேலைக்கான பணத்தை பெரிய வீடு கட்டுவது ஆடம்பரமான வாழ்க்கை என எதற்கும் செலவழிக்காமல் வங்கி கணக்கில் பணத்தை சேமித்து வைக்கின்றான்.
தாய் மற்றும் பாட்டியின் மருத்துவ செலவு அவர்களுக்கு அத்தியாவசிய தேவையான உணவு, உடை தற்பொழுது அவர்களுக்கான சிறிய வீடு. அந்த வீட்டில் தேவைக்கேற்றவாறு பொருட்கள் என பணத்தை சிறிய அளவில் செலவழித்து விட்டு மிகுதியை சேமித்து வைக்கிறான்.
ஏன் எதற்கு என்று காரணம் தெரியாது ஆனால் பணம் அவனை சுற்றி எப்பொழுதும் இருக்க வேண்டும் என்று நினைப்பான்.
சிறு வயதில் பாட்டியின் போதனையை கேட்டு வளர்ந்த சோழன் ஆண் இவ்வாறு தான் இருக்க வேண்டும் பெண் என்பவள் இப்படி தான் இருக்க வேண்டும் என்று அவன் அறிந்து தெரிந்தவற்றை வைத்து திருமண வாழ்விற்கு என ஒரு அமைப்பை அவன் மனதில் அமைத்து வைத்துள்ளான்.
நேற்று ராஜமாணிக்கம் கொடுத்த வேலையை அவன் சரியாக முடித்தும் அதற்கான பணத்தை உடனடியாக அவன் கையில் கொடுக்காமல் விட்டதால் ராஜமாணிக்கத்திடம் பணம் கேட்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றான் சோழன்.
தினமும் வேலைக்கு மாணிக்கத்திடம் சோழன் காலை 9 மணிக்கு தான் செல்வான்.
வேலை நேரத்தில் ஏதேனும் குறுக்கீடு வந்தால் மாணிக்கத்திற்கு அது கோபத்தை ஏற்படுத்தும் என்பதால் எட்டு மணி அளவில் அவனது பணத்தை வாங்குவதற்காக மாணிக்கத்தின் வீட்டிற்கு வந்தான் சோழன்.
மாணிக்கத்தின் வீட்டிற்கு வந்து போக அவரிடம் வேலை செய்யும் அனைவருக்கும் அனுமதி இல்லை. சோழன் கதிர் இன்னும் சிலர் மட்டுமே மாணிக்கத்தை வீட்டில் வந்து சந்திக்க அனுமதி கொடுத்து இருக்கிறான்.
மாணிக்கத்தின் விசுவாசியான கதிர் சோழன் வந்ததை அறிந்து கொள்ளாமல் சோழனை பற்றி மாணிக்கத்திடம் புகார் கூறிக் கொண்டிருந்தான்.
” ஐயா நம்ம சோழன் பதினைந்து வருஷமா உங்ககிட்ட கைக்கூலியா வேலை பாக்குறானே அவனுக்கு ஏன் இவ்வளவு குறைவான சம்பளம் கொடுக்கறீங்க?. ” என்றான் கதிர்.
அதற்கு மாணிக்கமோ அவனது மனதில் கிடந்த குப்பைகளை கொட்ட ஆரம்பித்தான்.
” அடேய் முட்டாள் பயலே ஐம்பது ஆயிரம் இப்போ சம்பளம் கொடுக்கிறேன். ஆனால் இன்னும் ரெண்டு மடங்கு கூட்டிக் கொடுக்கணும்னு எனக்கும் தெரியும். அவன் உழைக்கிற உழைப்புக்குரிய சம்பளம் எவ்வளவுனு இன்னும் அவனுக்கு தெரியாது. நான் கொடுக்கிறது தான் பணம். அதைத்தான் அவன் வாங்கிட்டு போய் பணக்காரனா இருக்கிரமாதிரி நினைக்கிறான். “
” ஏதோ பெரிய இலட்சக்கணக்கில் சம்பாதிக்கிற நினைப்போட அவன் கிட்ட தான் அதிக பணம் இருக்கின்ற மிதப்புல ஊருக்குள்ள கோவிலுக்கு நன்கொடை அது இதுன்னு கொடுத்துட்டு சுத்தி வருக்கிறான். இதுவே அவனுக்கு நான் கொடுக்க வேண்டிய மாத சம்பளம் ஒன்றரை லட்சம் ரூபாயையும் அப்படியே தூக்கி கொடுத்தேன்னு வை நான் அவன் இடத்துக்கு போகணும். அவன் என் இடத்துக்கும் வந்துருவான். யாரை எங்க வைக்கணும்னு எனக்கு நல்லாவே தெரியும். “
‘ இப்ப பாரு நடக்கப்போற தேர்தலில் யார் ஆட்சிக்கு வர வேண்டி உயிரோட இருக்கணும். யாரு கட்சிக்காக உயிரை கொடுக்கணும்னு நமக்கு வரும் தகவல் படி நம்ம அந்த ஆளோட உயிரை எடுத்துட்டு இருக்கோம். ஆனால் நான் அவனுக்கு பெரிய உதவி செய்ததா அவன் மனசுல நெனச்சிட்டு இருக்கிறான். என்னை மனசுல உயர்ந்த இடத்தில வச்சுட்டு இருக்கிறான். என் பேச்சுக்கு மாற்று பேச்சு பேசவே மாட்டான். நான் மாதம் மாதம் கொடுக்க வேண்டிய சம்பளத்தை சரியா கொடுத்திருந்தா இப்ப அவன் வைத்திருப்பதை விட பத்து மடங்கு பணம் அவன்கிட்ட இருக்க வேண்டியது தெரியுமா? அவனே நாளைக்கு தனி கட்சி ஆரம்பிச்சு வளர்ந்துட்டான்னு வை அப்புறம் இப்ப அவன் செய்றது எல்லாம் தப்பா தெரியும். நல்லது செய்யப் போறேன் நாட்டையும் ஊரையும் திருத்த போறேன்னு கிளம்பி நம்மளை தூக்கி உள்ள போட்டுடுவான் டா. முட்டாள். அவனோட நட்பா நெருங்கி பழகி அவனை பத்தி எனக்கு தகவல் சொல்லத்தான் நான் மாசம் மாசம் உனக்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் தருக்கிறேன். அவனுக்கு ஏதாவது புது சிந்தனை வருதா?. என்னை பற்றி ஏதாவது தவறா குறையா அவன் பேசுறானா? என்று பார்த்து நீ எனக்கு இத்தனை வருடங்கள் சொல்லிக்கிட்டு இருக்கிற. ஆனா உண்மையிலேயே என் மேலே இதுவரைக்கும் அவனுக்கு சந்தேகம் வரவே இல்லை. அவனும் உன்னை நண்பனா பார்க்கிறான். என்னை தெய்வத்துக்கு நிகராக பார்க்கிறான். அவனுக்கே தெரியாம அவனிடம் ஒரு வீரம், விவேகம், ஊக்கம் எடுத்த காரியத்தை முடிக்கணும் என்கிற வெறி எல்லாமே அவனிடம் அதிகமாகவே இருக்கு.”
” சும்மா அல்ப தனமா ஏதோ கொஞ்சம் பணத்தை சம்பாதிச்சுட்டு இருக்கிறான். ஆனா பணத்தை சேமித்து வைக்கணும் என்கிற பணத்தின் மேல் உள்ள போதை அவனுக்கு எப்ப தெளியுதோ? அப்போ அவன் சரியான பாதையில் போக ஆரம்பிச்சிடுவான். அப்புறம் பெரிய ஒரு இடத்தை அவன் ரொம்ப சீக்கிரமாவே அடைஞ்சிடுவான். ஆனா அது நமக்கு ஆபத்தா முடிஞ்சிடும். எப்பவுமே அதுக்கு நாம இடம் கொடுக்க கூடாது கதிர்.”
” ஆனா அவனை பத்தி இந்த பயம் நமக்கு இப்ப தேவையில்லாத விஷயம். அவன் எப்பவுமே நம்ம போடுற இந்த பிச்ச காசுக்கு நம்மகிட்ட அடிபணிந்து தான் இருக்கணும். அவனுக்கு எப்பவுமே சந்தேகம் வராத மாதிரி இன்னும் உன்னோட நடிப்பை ரொம்ப ஸ்ட்ராங்கா எதார்த்தமா போடு.
சரி ஆளுங்க வரும் நேரம் ஆயிடுச்சு நீ இங்க இருந்து பின் வழியா உன்னோட வீட்டுக்கு போயிட்டு சோழனோட திரும்பவும் அப்போ தான் வேலைக்கு வருகிற மாதிரி வா. ” என்று அவரது மனதில் சோழனை பற்றி இவ்வளவு காலமும் வைத்திருந்தவற்றை கொட்டி தீர்த்து விட்டு மாணிக்கமும் சென்று விட்டார்.
அவர்களின் திட்டப்படியே எதையும் கேட்காதவன் போன்று சோழனும் வந்த வழியே கதிருக்கு முன்பாக அவன் வீட்டிற்கு சென்று விட்டான்.
பதினைந்து வருடத்தின் பின் பசுதோல் போர்த்திய நரிகளின் முகத்திரை இன்று கிழிந்தது ஏன்?
இந்த நிகழ்வு எவ்வாறு நிகழ்ந்தது? என்று காரணம் எதையும் யோசிக்காமல் அவன் அவர்களுக்கு என்று புது திட்டத்தை தீட்டிவிட்டு கதரின் வருகைக்காக காத்திருந்தான் சோழன்.