நேரம் சரியாக காலை 9 மணி. சோழனை அழைத்துக் கொண்டு மாணிக்கத்திடம் வேலைக்கு செல்ல கதிர் வந்துவிட்டான்.
மறுபக்கம் இருந்து சோழனின் தாய் மற்றும் பாட்டியை பார்த்துக் கொள்ளும் பெண் கீதாவும் வந்துவிட்டாள்.
அவளிடம் சோழன் வழமையாக சொல்பவற்றை இன்றும் சொன்னான்.
” இங்க பாரு பொண்ணு நீ எனக்கு தங்கச்சி மாதிரி நான் உனக்கு அண்ணன் மாதிரி. அப்போ இவங்க ரெண்டு பேரும் உனக்கு யார் மாதிரி?.” என்றான் சோழன்.
தினமும் காலையில் அவன் வேலைக்கு செல்லும்போது இவற்றை கேட்பதால் அவள் சலித்துக் கொண்டு ” நீங்க எனக்கு அண்ணன் மாதிரி அதனால உங்க அம்மா எனக்கு அம்மா மாதிரி உங்க பாட்டி எனக்கு பாட்டி மாதிரி. இப்ப நான் சொன்னது சரியா அண்ணா?. ” என்று கேள்வி கேட்டவனிடமே மீண்டும் கேள்வியால் அவளது பதிலை சொன்னாள் கீதா.
” ம் ம். இது எல்லாம் சரியா பேசு. ஆனா செயல்ல எதுவுமே சரியா செய்யாம கோட்டை விட்டுடு. நேற்று அம்மாக்கு இரவு கொடுக்கிற மாத்திரை முடிஞ்சிட்டு ஆனா அதை நீ என்கிட்ட சொல்லவே இல்லை. பாட்டிக்கு காலைல நான் காச்சி வைத்திருந்த கஞ்சியை சரியான பதத்துக்கு ஆத்தி கொடுக்காமல் சுடச்சுட அவங்க கைல கொடுத்துட்ட. டம்ளரோட சூடு தாங்காமல் அவங்க கஞ்சியை கீழே போட்டு அது அவங்க கையில பட்டு இப்போ அவங்களுக்கு கை புண்ணாகிடுச்சு. வயசானவங்க சின்ன காயம் வந்தாலும் அவங்களுக்கு வலி தாங்க முடியுமா என்ன?. ” என்றான் சிறு அதட்டும் தொணியில்.
அவன் மெதுவாகத்தான் சொன்னான் ஆனால் அவனது கரகரப்பான குரலில் அது சத்தமாக அவளுக்கு கேட்டு கீதாவின் கண்ணில் கண்ணீர் கட்டி விட்டது.
” சாரி அண்ணா இனிமேல் இப்படி தவறு நடக்காம நான் பாத்துப்பேன். இந்த ஒரு முறை மன்னித்துவிடுங்க.” என்றாள் கீதா.
” சரி சரி ஏன் மன்னிப்பு எல்லாம் கேட்டுட்டு விடு. வேலை செய்றவங்க மனசு நோகாமல் அவங்க வேலை செய்ய தாராளமா சம்பளம் கொடுக்கணும். என்பது எங்க முதலாளி மாணிக்கம் ஐயாவோட வாக்கு. அதனால நானும் உனக்கு நீ செய்யும் இந்த வேலைக்கு மாதம் இருபது ஆயிரம் ரூபாய் சம்பளம் தாரேன். நான் உனக்கு தரும் இருபது ஆயிரம் ரூபாய் காசு எனக்கு பெரிய விஷயம் இல்லை. அதனால நீ என் அம்மாவையும் என் பாட்டியும் ரொம்ப கவனமா பார்த்துக் கொள்ளணும். என்ன சரியா?. இதுதான் உனக்கு கடைசி வாய்ப்பு. இனி இப்படி உன்னோட கவனக்குறைவினால் அவர்களுக்கு ஏதாவது நடந்துச்சுன்னு எனக்கு தெரிந்தால் அன்னையோட உன் வேலை போயிடும். என்ன புரிஞ்சுதா?. என்றான் சோழன்.
” சரி அண்ணா இனிமேல் நான் கவனமாக பார்த்துக் கொள்வேன். ” இன்று கீதா கூறவும்.
” நான் நேத்து அம்மாக்கு முடிஞ்ச மாத்திரையை இரவு போய் வாங்கிட்டு வந்துட்டேன். நான் இன்னைக்கு வர தாமதம் ஆனால் இரவுக்கு அம்மாக்கு அந்த மாத்திரை கொடுத்துடு. அப்புறம் கேஸ் வரும் கார்ட்ல பதிஞ்சுட்டு கேஸ் எடுத்து வச்சிட்டு. மதியத்துக்கு உணவு எல்லாத்தையும் கொஞ்சம் சூடு பண்ணி கொடுத்துடு. சரியா?. ” என்று கேட்கவும் கீதா தலையாட்டவும் கதிர் அவனது கையைப் பிடித்து இழுத்துச் சென்றான்.
” டேய் ஏன்டா அந்த பொண்ணை போட்டு பாடா படுத்துற?. ஏதோ நேத்து கவனக்குறைவாக சிறு தப்பு செஞ்சுட்டு அதுக்கு நீ இவ்வளவு பேசி அந்த பிள்ளையை இப்படியா பயப்பட வைப்ப?. நாளைக்கு அந்த பொண்ணுக்கு காய்ச்சல் வந்து வேலைக்கு வராமல் போயிட்டான்னு வை அப்புறம் ஆள் தேடும் போது அதோட கஷ்டம் என்னன்னு உனக்கு தெரியும். இனி உன்னோட யோசனை எல்லாம் இன்னைக்கு யாரை முடிக்கிறதுக்கு மாணிக்கம் ஐயா வேலை தராங்களோ அதை சரியா செய்வதற்கு நீ திட்டம் தீட்டி தயாராகனும் . ” என்று கதிர் சோழனிடம் பேசியவாறு இருவரும் மாணிக்கத்தின் வீட்டிற்கு சென்றார்கள்.
கதிரும் மாணிக்கமும் பேசிய திட்டத்தின்படி மாணிக்கம் அப்பொழுதுதான் பூஜை அறையில் இருந்து வெளியே வந்தார்.
சோழனும் கதிரும் போய் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்ததும். பூஜை அறையில் இருந்து வந்த மாணிக்கம் நேரடியாக உணவு உண்ணும் இடத்தில் போய் இருந்து அவன் வயிறார உணவை உண்டு விட்டு இவர்களை சந்திக்க வந்தான்.
மாணிக்கம் வந்து அவர்களுக்கு எதிர் இருக்கையில் அமர்ந்து. அவனுக்கு அருகே இருந்த பைலில் இருந்து ஒரு போட்டோவை எடுத்து சோழனின் கையில் கொடுத்தான்.
” சோழா ஆளை நல்லா பார்த்துக்கோ இவனைத் தான் இன்னைக்கு நீங்க போடணும். இவன் அடையாளமே தெரியாமல் போட்டுட்டு எரிக்க சொல்லி மேல் இடத்தில் இருந்து தகவல் வந்திருக்கு சரியா?. போய் நான் சொன்ன மாதிரி ஆளை முடிச்சுட்டு வந்து நேத்து நான் உனக்கு தரவேண்டிய பாக்கி சம்பளப் பணத்தை வாங்கிக்கோ.! ” என்று மாணிக்கம் அவர்களுக்கான உத்தரவை போட்டுவிட்டு அவன் அங்கிருந்து சென்று விட்டான்.
கதிர் அதிகமாக வேலை செய்யும் இடங்களில் நிற்க மாட்டான். கதிரின் தந்திர மூளையும் நரி போடும் திட்டமும் ஒன்றாகும்.
எங்கு ஆட்களை போடும் இடத்தில் நின்று விட்டால் அவர்களுக்கே தெரியாமல் பத்திரிகை துறையினர் அதை புகைப்படம் எடுத்து பத்திரிக்கை மற்றும் டீவியில் போட்டால் அவனுக்கு வாழ்க்கையே பாழாகிவிடும் . என்று நினைத்து சோழனை கொலைகளை செய்யுமாறு கூறிவிட்டு யாரும் பார்க்கிறார்களா? அல்லது வருகிறார்களா? என்று கவனிப்பதாக கூறி சற்று தள்ளி சென்று விடுவான்.
இதை சோழன் இதுவரை பெரிதாக எடுத்ததில்லை.
ஆனால் இன்று அவர்கள் பேசியதை கேட்டத்தில் இருந்து ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தான்.
இன்றும் எதிர்க்கட்சியின் முதுகெலும்பு என்று கூறும் அளவுக்கு வயது முதிர்ந்த அனுபவம் உள்ள ஒருவரையே போடுமாறு உத்தரவிட்டிருந்ததை செய்வதற்கு வந்திருந்த இடத்தில் கதிர் சற்று தள்ளியே நின்று விட்டு சோழனை அனுப்பினான்.
நன்றாக இருட்டிய நேரம் உன்னிப்பாக கூர்ந்து கவனித்தால் மட்டுமே அங்கு நடப்பது தெரியும்.
அதை தனக்கு சார்பாக பயன்படுத்திக் கொண்ட சோழன். இவர்களுக்கு சரியாக பாடம் கற்பிக்க வேண்டும். என்று முடிவு எடுத்து அந்த பெரியவரை குத்த சென்ற நேரம் அவர் கத்துவது சோழனிடம் கெஞ்சி கேட்டுக்கொண்டிருப்பது என அனைத்தும் கதிரின் காதில் நன்றாகவே விழுந்தது.
அதை வைத்து சோழன் கச்சிதமாக அந்த பெரியவரை முடித்து விட்டான் என்று நினைத்து விட்டான் கதிர்.
அதனால் சோழனும் இனிதான் அவன் அவனுக்காக வாழ வேண்டும் என்று முடிவெடுத்தபடியால். கிடைத்த இந்த வாய்ப்பை அவனுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டான்.
மாணிக்கம் இரு கட்சிக்கும் பொதுவான அடியாள்.
ஆளும் கட்சியினர் யாரையும் எதிர்க்கட்சியிலோ அல்லது தங்கள் கட்சியிலோ கொலை பண்ண வேண்டும் என்றால் மாணிக்கத்தை தான் தேடுவார்கள்.
எதிர்க்கட்சியினர் அதிகமாக தங்கள் கட்சியினரை எதுவும் செய்யாமாட்டார்கள். அவர்களுக்கு இடையே அதிகம் போட்டி ஏற்படாது. அவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கும் ஆளும் கட்சியினரை கொள்ளும் அளவிற்கு கோவமாக இல்லாமல் அவர்கள் மீது பயம் ஏற்படுவதற்காக சிறிய அளவு தட்டி வைக்குமாறு கூறுவார்கள்.
அதேபோன்று எதிர்க்கட்சியின் இந்த மூத்த உறுப்பினர் அதிக அனுபவத்தால் அவர்களை இந்த தேர்தலில் வெற்றி பெற வைத்து விடுவார். என்ற நம்பிக்கையில் அவரை முடித்து விட்டால் கட்சி ஒன்றும் இல்லாமல் ஆகும் என்று நினைத்து ஆளும் கட்சியினர் மாணிக்கத்திடம் அவரை முடிக்குமாறு உத்தரவிட்டிருந்தார்கள்.
வயதில் மிகவும் மூத்தவர். அதுவும் நல்ல எண்ணங்களை கொண்டவர். அதனால் அவரை தன் கையால் கொள்ள விருப்பம் இல்லாமல். அவரையும் காப்பாற்ற வேண்டும். இதை தனக்கு சாதகமாகவும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். என நினைத்த சோழன். அவரை அங்கிருந்து சென்று விடுமாறு கண்ணால் அவரிடம் ஒரு கடிதத்தை கொடுத்து கூறிவிட்டு. அவர் சிறிது தூரம் சென்றதும். முன்பே சோழன் தயாராக வைத்திருந்த ஒரு அனாதை பிணத்தை கத்தியால் இரண்டு முறை குத்தி விட்டு அவன் எடுத்துவந்த பெட்ரோலை அதன் மேல் ஊற்றி பத்த வைத்து விட்டான்.
கதிரும் சோழன் அந்த எதிர்க்கட்சி ஆளை கொன்று விட்டான். என்பதை கண்ணால் கண்டதால் அவன் இறந்து விட்டான் என்று நம்பிவிட்டான்.
” அப்பாடா வாடா மச்சான். வெற்றிகரமா இன்னைக்கும் நமக்கு தந்த வேலையை முடிச்சிட்டோம். நீ சாதாரணமா குத்தி கொலைபண்ணிடுவ மச்சான். ஆனா யாரும் வராங்களா? இல்லையான்னு பார்த்துகிட்டு இருக்கேன் பாரு எனக்கு தான் ரொம்ப பயமாவும் பயங்கரமாவும் இருக்கு. ” என்றான் கதிர்.
அவன் பேசியதை கேட்டு மனதில் சிரித்துக் கொண்டிருந்தான் சோழன்.
” சரிடா மச்சான் நான் வீட்டுக்கு போறேன் நீயும் பத்திரமா போ.”
” இல்ல கதிர் நான் கொஞ்சம் சரக்கு போட்டுட்டு தான் வீட்டுக்கு போவேன். நீ போ.” என்று கூறியபடி இருவரும் வேறு வேறு திசையில் சென்றார்கள்.
நன்றாக பாரில் குடித்துவிட்டு நேரம் நள்ளிரவை நெருங்கிய போது தள்ளாடிய படியே வீட்டுக்கு வந்தான் சோழன்.
வந்தவன் சாத்தி இருந்த கதவை திறந்து தாய் அருகே சென்றான்.
சென்றவன் அங்கிருந்த பெண்ணை பார்த்து.
” ஏய் பொண்ணு ரொம்ப நன்றி. இவ்வளவு நேரம் நான் வர தாமதமாகியும் என் அம்மாவையும் பாட்டியையும் பார்த்துக்க வீட்டுல இருந்ததுக்கு ரொம்ப நன்றி. வா போகலாம். நானே கொண்டு போய் பத்திரமா உங்க வீட்டுல விட்டுட்டு வரேன்.” என்று சோழன் அழைக்கவும்.
திரும்பிய பெண்ணை பார்த்து சோழன் அதிர்ந்து விட்டான்.
” ஏய் யாருமா நீ?. நீ எப்படி ஏன் வீட்டுக்குள்ள வந்த?. உன்னை தான் கேட்கிறேன். கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு. பேந்த பேந்த முழிச்சிட்டு நின்னா சரியா?. யார் நீ?. எதை களவெடுத்துட்டு சுருட்டிட்டு போறதுக்கு வந்த? ஆளில்லாத வீட்டுக்குள்ள வயதானவர்கள் இருக்கிறாங்க என்பதை தெரிஞ்சிக்கிட்டு இந்த நள்ளிரவு நேரத்துல நீயேன் வந்த?.” இன்று இன்னும் பல கேள்விகள் சோழன் பொறுமையாக கேட்டும் எதிர்தரப்பில் இருந்து எந்த பதிலும் வராததால். கோபமுற்று அடிப்பதற்காக கையை ஓங்கி விட்டான் சோழன்.
” சோழா என்ன பழக்கம் இது?. ஒரு பொண்ணுக்கு அடிக்க கை ஓங்குறது இதை சொல்லிக்கொடுத்தா நான் உன்னை வளர்த்தேன். எல்லாம் காலையில பேசிக்கலாம் நீ போய் முதல்ல தூங்கு. ” என்று சோழனின் பாட்டி முத்தம்மா சத்தம் போடவும் பாட்டியின் பேச்சை கேட்டு சோழன் முன் அறையில் போய் படுத்து உறங்கி விட்டான்.
ஆனால் ஒரு புள்ளிமான் உறக்கத்தை தொலைத்து பயந்தபடி நின்று கொண்டிருந்தது.