அடுத்த நாள் காலை யாருக்கு நன்றாக விடிந்ததோ?. இல்லையோ? ஆனால் சோழனுக்கு அமோகமான நாளாக விடிந்தது.
எப்பொழுதும் சுறுப்பாக இருக்கும் செல்லம்மா யார் எவர் என்று தெரியாதவர் வீட்டில் இருப்பதால் தன்னை எதாவது திட்டி விடுவார்களோ என்ற பயத்தினாலும் இரவே சோழன் அடிக்க கையே ஓங்கிய அந்த பயமும் சேர்ந்து கொண்டதால் எழுந்து முகம் கழுவி வேறு எந்த வேலையும் செய்யாமல் பாட்டியின் கட்டிலின் அருகே அமர்ந்து விட்டாள்.
சோழனும் நேற்று எடுத்த முடிவுகளை செயல்படுத்த நினைத்தான். கதிர் வீட்டுக்கு வருவதற்கு முன்பு அவன் வேலைகளை முடித்து விட்டு வந்து விட வேண்டும் என்பதற்காக வழக்கத்தை விட நேரத்திற்கே எழுந்து செய்ய வேண்டிய வேலைகள் அனைத்தையும் செய்து விட்டு பாட்டியிடமும் கூறிவிட்டு அருகே இருந்த செல்லமாவையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியேறி சென்று விட்டான்.
அவன் சென்றது நேற்று அவன் காப்பாற்றிய அந்த முதியவரை சந்திக்க.
அவரும் அவன் தனக்கு உயிர் பிச்சை போட்டு எவ்வளவு பெரிய ஒரு நன்மையை செய்து இருக்கிறான் என்பதை மனதில் கொண்டு அவனை ஏமாற்றாமல் அவன் கூறிய அந்த இடத்திலேயே இன்னும் அவரின் கட்சிக்கு கூட அவர் உயிரோடு இருக்கும் விசயத்தை கூறாமல் அவனுக்காக காத்திருந்தார்.
சோழன் அங்கே வந்ததும் அவன். ஏன் தன்னைக் காப்பாற்றினான்.எதுக்கு தற்பொழுது இங்கே வந்துள்ளான்.
என்பது அனைத்தையும் அவர் யோசித்து வைத்திருந்தார்.
இருவருக்கும் இடையில் பேச்சு வார்த்தை நடைபெற ஆரம்பித்தது.
முதலில் அந்த முதியவர் கந்தசாமியே பேச்சை ஆரம்பித்தார்.
” ரொம்ப நன்றி தம்பி. நீ எவ்வளவு பெரிய உதவி எனக்கு செய்திருக்கிறாய் என்பது உனக்கு தெரியாது. எனக்கு மட்டும் நீ இந்த உதவி செய்யவில்லை என்றால் என்னை நம்பி இருக்கிற கட்சிக்காரர்களுக்கும் கட்சியை நம்பி இருக்கிற தொண்டர்கள். நல்ல ஆட்சியை எதிர்பார்த்து காத்திருக்கும் மக்கள் எல்லாருக்குமே நீ என்னோட உயிரை காப்பாற்றி ரொம்ப பெரிய உதவி செஞ்சிருக்க.”
” என்னோட அனுபவம் மற்றும் நல்ல சிந்தனைகள் மூலமா இந்த கட்சியை இவ்வளவு காலமாக கட்டி காப்பாற்றி வந்திருக்கேன். எங்க இந்த தேர்தல்ல நாங்க ஜெயிச்சிருவோமோ என்று ஆளும் கட்சியினர் என்னை கொலை பண்ண ராஜமாணிக்கத்தின் மூலமா உன்னை அனுப்பி இருக்காங்க. உனக்கு பதிலா வேற யாராவது அந்த இடத்துக்கு வந்திருந்தால் இந்த நேரம் நான் இருந்த தடம் தெரியாமல் போய் இருப்பேன். நீ எனக்கு செய்த இந்த பெரிய உதவிக்கு நானும் என் கட்சிக்காரர்களும் உனக்கு நன்றி கடன் பட்டிருக்கோம். நீ செய்த இந்த உதவிக்கு பதிலா நீ என்ன எதிர்பார்க்கிற என்பதும் பற்றியும் எனக்கு கொஞ்சம் தெரியும்.. இப்ப உனக்குள்ள ஏற்பட்டிருக்கிற இந்த மாற்றத்துக்கு நான் கட்டாயம் மதிப்பு கொடுத்து நீ நினைக்கிறதை நான் நடத்தி வைப்பேன். ” என்று கூறி அவனது தோளில் தட்டி அவன் கொண்டு வந்த உணவை உண்ண ஆரம்பித்தார்.
இதற்கு முன்பு நடந்த எலெக்ஷனில் இவர்கள்தான் வெற்றி பெறுவதாக இருந்தது. ஆனால் இவர்களின் வெற்றியை முறியடிப்பதற்காக அனைத்து கள்ள வாக்குகளையும் பதிவு செய்து ஆளும் கட்சியினர் வெற்றி பெற்று விட்டார்கள்.
கள்ள வாக்குகள் பற்றிய வழக்கும் எதிர்க்கட்சியினர் பதிவு செய்தும் அந்த வழக்கை ஆளும் கட்சியினர் ஒன்றும் இல்லாமல் செய்து விட்டார்கள்.
அதனால் இந்த முறை அனைத்து விதத்திலும் ஆதாரப்பூர்வமாகவும் ஒழுக்க நெறிமுறைகளையும் வைத்து இம்முறை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
அதனால் பல ஊழல் செய்து ஆட்சிக்கு வந்த ஆளுங்கட்சியினர் இந்த முறை சற்று கொஞ்சம் பயந்து விட்டார்கள். அனைத்து நல்ல சிந்தனைகளையும் வெற்றி பெறுவதற்கான அனைத்து சூட்சுமங்களையும் கந்தசாமி எதிர்க்கட்சியினருக்கு சொல்லிக் கொடுப்பதால் அவர்கள் இம்முறை வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதை அறிந்து கொண்டபடியால் தான் அவரை கொலை செய்வதற்கு ராஜமாணிக்கத்திடம் உதவி கேட்டு இருந்தார்கள்.
அவரின் திட்டப்படியே சாமி அன்று அணிந்திருந்த உடை அவரது கை கடிகாரம் ஆதார் அட்டை என அனைத்தையும் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆதாரமாக சிதறவிட்டு கந்தசாமி இறந்துவிட்டார் என்பதை அனைவரையும் நம்ப வைப்பதற்கு அனைத்து வேலைகளையும் சோழன் செய்து வைத்திருந்தான்.
தற்பொழுது தான் தொலைக்காட்சியில் எதிர்க்கட்சியின் மூத்த உறுப்பினர் கந்தசாமி மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டு சம்பவ இடத்திலேயே அவரை அடையாளம் தெரியாத அளவிற்கு எரித்துள்ளார்கள். என்று அவர்தான் இறந்து விட்டார் என்பதற்கு சோழன் செய்து வைத்த அனைத்து ஆதாரங்களையும் ஒன்று திரட்டி அனைத்து தொலைக்காட்சியிலும் இந்த செய்தி வெளியாகி கொண்டிருந்தது.
இதைப் பார்த்து எதிர்க்கட்சி தலைவர் மற்றும் தொண்டர்கள் அனைவரும் அற வழியிலேயே அவரின் இறப்பின் துக்கத்தை கொண்டாடினார்கள்.
அவர்களின் அறவழி துக்க நிகழ்வைப் பார்த்து கந்தசாமி அவர் விதைத்த விதை நன்றாக பலன் தரும் மரமாக வளர்ந்துள்ளதை பார்த்து மகிழ்ந்து போனார்.
ஒரு பக்கம் அவரின் இறப்பு செய்தி தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்தாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இரவும் உணவு உண்ணாததால் சோழன் கொண்டு வந்த உணவை மிச்சம் வைக்காமல் அனைத்தையும் உண்டு கை கழுவி தண்ணீர் குடித்ததும் அவனது முகத்தை மகிழ்ந்து சிரித்து அவனின் சமையலை பாராட்டினார்.
சோழனுக்கு ஏனோ அவரை மிகவும் பிடித்து விட்டது.
அதனால் மனதில் எவ்வித ஒளிவு மறைவும் இல்லாமல் அவனைப் பற்றி அனைத்தையும் அவரிடம் பகிர்ந்து கொண்டான். மாணிக்கம் அவனை நடத்தும் விதத்தையும் நேற்று அவன் அறிந்தவற்றையும் கூறியதும் கந்தசாமியின் முகம் சிறிதாக மாற்றம் ஏற்பட்டது. அதை கவனித்து என்னவென்று கேட்வனிடம் அவர் அதற்கான பதிலை கேள்வியாகவே கேட்டார்.
” முதல் நான் உன்கிட்ட ஒரே ஒரு கேள்வி மட்டும் தான் தம்பி கேக்கணும். கேட்க்கலாமா?. ” என்றார் சாமி.
” கேளுங்க ஐயா இனிமே நீங்க காட்டுற பாதையில தான் நான் போக போறேன். நல்ல தலைவர்கள் நல்ல தொண்டர்கள் மனிதர்களை உருவாக்கி இருக்கீங்க. உங்க சாந்தமான அமைதியான அறவழி குணத்தால். அவர்களைப் போன்று என்னையும் ஒரு சிறந்த மனிதனாக நீங்களே வழி நடத்துங்க.” என்று அவனை முழு மனதோடு அவரிடம் ஒப்படைத்தான்.
அவன் பேசியதை கேட்டதும் அவனுக்கு அவர் செய்ய இருக்கும் உதவியை மனதில் நினைத்துக் கொண்டு அவனின் தலையை வருடி எதிர் இருக்கையில் அவனை அமர வைத்தார்.
தேர்தல் நெருங்குவதால் தற்சமயம் அவரின் உதவி அவர்களின் கட்சிக்கு மிகவும் தேவை. ஆனால் அவர் இறந்ததாகவும் அறிவித்து விட்டார்கள். இனி எவ்வாறு அவரின் கட்சிக்கு உதவ முடியும் என்று அவர் ஆழ்ந்த யோசனையில் இருந்தபோது சோழனும் சற்று அறிவுத்திறன் வாய்ந்தவன் என்பதை நிரூபிப்பதற்காக அவர் யோசனை என்ன என்பதை சற்று தெரிந்து கொண்டு ” நீங்க என்னை முழுசா நம்பினால் அடுத்த கட்டம் உங்களுடைய ஆலோசனை என்ன என்பதை என்கிட்ட சொன்னீங்கன்னா நான் நம்ம கட்சியின் முக்கியமான நபரிட்டம் அதை தெரியப்படுத்திருவேன் ஐயா. ” என்றான் சோழன்.
அவன் நம்ம கட்சி என்று குறிப்பிட்டதை மனதில் பதிய வைத்துக்கொண்டு வெளியே சிரித்தபடி ” உயிரையே காப்பாத்திருக்க உன்னை நம்பாமல் எப்படி இருக்க முடியும். அதற்கான நேரம் வரும்போது அதை நான் உனக்கு சொல்லுவேன். இப்ப நான் கேட்க வந்த கேள்வியை இதுக்கு மேலயும் தாமதிக்காமல் கேட்கணும். உனக்கும் மாணிக்கத்திடம் வேலைக்கு போவதற்கு லேட்டாகுது. ” என்று கூறிவிட்டு அங்கிருந்து சமையல் அறைக்கு சென்று இருவருக்கும் காபி தயாரித்து கொண்டு வந்தார்.
அவரின் வயதுக்கு அவர் சமையலறை சென்று அவனுக்கு காபி தயாரிப்பதை குற்ற உணர்வாக கருதி அவனும் சமையலறைக்கு வந்தான்.
” தம்பி எனக்கு இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை. நீ போய் இரு இப்ப வந்துடறேன். ” என்று கூறி அவனை அனுப்பி விட்டு இருவருக்கும் காபி எடுத்துக் கொண்டு வந்து அவன் கையில் கொடுத்துவிட்டு அமர்ந்தார்.
” பள்ளிப்படிப்பு விட்டு இந்த பதினைந்து வருஷமா நீ இவ்ளோ கஷ்டப்பட்டு வேலை செய்து இதோ சுமாரான அளவுக்கு இவ்வளவு பணம் வைத்திருக்கிற. ஆனா திடீரென்று இன்னைக்கி உனக்கு அந்த மாணிக்கத்தின் உண்மை குணம் தெரியணும்?. அதனால நீ ஏன் என்னை காப்பாத்தணும்?. எல்லாம் ஒரு காரணம் இல்லாமலுக்கு நடக்காது. ஒருவரோட வயசு பொறுத்து அவங்களுக்கு என்ன மாற்றம் நடந்திருக்கும் என்பதை கணிக்கலாம். உன்னோட வயது திருமண வயது அதனால் அதிர்ஷ்ட தேவதையான ஒரு பொண்ண நீ இந்நேரத்துக்கு சந்தித்து இருக்கணும். அப்படி ஒரு விஷயம் சமீபத்துல நடந்ததா? உன் வாழ்க்கையில ” என்றார் சாமி.
சோழன் கேள்வி பாதி புரிந்தும் புரியாமலும் சற்று குழம்பி விட்டு எதற்கும் இருக்கட்டும் என்று அவன் தினமும் பார்க்கும் அவனது தாய் மற்றும் பாட்டியை தவிர்த்து அவன் தாயை கவனிக்க வரும் பெண்ணை பற்றியும் நேற்று இரவு புதிதாக வந்த பெண்ணை பற்றியும் சாமியிடம் அனைத்தையும் கூறினான்.
” நான் கணித்தது சரியா இருக்கு. வேலைக்கு வந்த பொண்ணு நீயே தங்கச்சின்னு ஒத்துக்கிட்ட. உன் வாழ்க்கையில் இனி நடக்க போற அனைத்து மாற்றத்திற்கும் காரணமாக இருக்கிறது அதிர்ஷ்ட தேவதை நேத்து நைட்டு உன்னை தேடி வந்த பொண்ணுதான்.”
” நேத்து வந்து அந்த பொண்ணு தான் இனி உன் வாழ்க்கையில் நடக்க போற மாற்றத்திற்கு காரணம். இவ்வளவு வருஷமும் தெரியாத மாணிக்கத்தோட குணம் உனக்கு தெரிய வந்ததும் என்னை காப்பாற்றி இனி ஒவ்வொரு அடியும் நீ நல்ல வழியில் நேர்மையாகவும் ஒழுக்கமான மனிதனாகவும் எடுத்து வைத்து நீ மாற உனக்கு சந்தர்ப்பம் ஒன்னு இருக்கிறது என்பதை காட்டிக் கொடுத்து இருக்கு.”
” நான் சொல்ல போறது உனக்கு காமெடியாகவும் முட்டாள்தனமாகவும் தெரியலாம். ஆனா அதுதான் உண்மையான நிஜம். நான் இப்படி ஒரு ஆலோசராகவும் நல்ல சிந்தனையாளராகவும் இருப்பதற்கு காரணம் என்னோட தியானமும் அமைதியான இறை வழிபாடு தான் காரணம். அதனால எனக்கு கிடைத்த சில ஞானங்கள் மூலமாகத்தான் நான் இந்த அளவுல இருக்கேன். முழுவதுமா நீ உன்னை என்னிடம் ஒப்படைச்சுட்ட அப்படின்னு நீ சொன்ன. அது 100% உண்மையா இருந்தால் உனக்கு இனி நல்லது மட்டுமே நடக்க வேண்டும் என்று இதுவரை உன் வாழ்க்கையில் நீ செய்த கொலை குற்றங்கள் அனைத்தையும் நீ செய்யப் போகும் நன்மைகளில் அந்த பாவங்கள் காணாமல் போக வேண்டும் என்றால் நான் சொல்ற படி கேளு. கேட்ப்பியா?. என்று சந்தேகமாக அவனைப் பார்த்துக் கொண்டு கேட்டார்.
சோழன் பெரிய அளவில் குழம்பி இருந்தாலும் அனைத்தையும் அவரிடம் கேட்டு தெளிவு பெற்றுக்கொண்டு அவர் கூறுவதை கேட்பதாக தலையாட்டி சம்மதம் தெரிவித்தான்.
” நாளை காலை பிரம்ம முகூர்த்தத்தில் நீயும் அந்த பொண்ணும் திருமணம் செய்து கொள்ளணும். நான் சொல்லுற கோவிலுக்கு சரியா காலை 3:30 மணிக்கு எல்லாம் நீங்க ரெண்டு பேரும் வந்துடனும். நானே பூஜை பண்ணி உங்க ரெண்டு பேருக்கும் திருமணம் செய்து வைப்பேன். நம்ம கட்சியால் நாங்களே கட்டின கோவில் அதால அதோட சாவி எப்பவும் என்கிட்ட தான் இருக்கும். அந்த டைம் யாருக்கும் சந்தேகம் வராத மாதிரி நம்ம அந்த இடத்துக்கு போயிரலாம். அந்த பொண்ண கூப்பிட்டு பொறுமையா தன்மையா பேசி சீக்கிரமா நல்ல முடிவா எடு. இன்று ஒரு நாள் மட்டும் தான் உனக்கு டைம் இருக்கு. அந்த பொண்ணு சம்மதித்ததும் நான் முன்னே நின்று திருமணம் நடத்தி வச்சதும் அன்னைக்கு நான் குறித்து தரும் முகூர்த்த நேரத்தில் நீங்க உங்க வாழ்க்கையை ஆரம்பிக்கணும்.”
” இப்ப நான் சொன்னதும் தலையாட்டி விட்டு கல்யாணம் முடிஞ்சதும் வாழ்க்கையை ஆரம்பிக்காமல் விட்டுடலாம் என்று நீ எனக்கு அதெல்லாம் எங்க தெரிய போகுது என்று நினைத்து நீ அந்த பொண்ணை கண்டு கொள்ளாமல் இருந்து விட்டால் இப்போ உனக்கு கிடைச்ச இந்த வாய்ப்பு பெரிய ஒரு துரதிஷ்டவசமான வாய்ப்பாக மாறிடும். “
” ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் ஒரு முறை அல்லது இரண்டு முறை நல்ல வாய்ப்பு தேடி வரும். அது சரியான முறையில் சரியான ஆலோசனைப்படி அந்த வாய்ப்பை பயன்படுத்தினால் நாமே எதிர்பாராத அளவுக்கு உயரமான இடத்துக்கு ரொம்ப ஈஸியா போக முடியும். அதே அவன் அந்த வாய்ப்பை தவற விட்டுட்டா இருந்ததை விட ரொம்ப கீழான நிலைக்கும் போக வேண்டி வரும். இப்ப நீ எந்த நிலையில் இருக்கப் போற என்பது நீதான் இனி முடிவு செய்யணும். “
” நான் சொன்னதை நல்லா யோச்சி பாரு. இனி எல்லாமே உனக்கு நல்லதாகவே நடக்கும்னு நம்பு. இப்ப சீக்கிரமா இங்க இருந்து போயிடு. நம்ம கட்சி ஆட்சிக்கு வந்து சரியான சந்தர்ப்பம் வரும் வரைக்கும் நான் இந்த இடத்தை விட்டு வெளியே போகவும் மாட்டேன். நம்ம கட்சிக்கு தெரியப்படுத்தவும் மாட்டேன். காலை உன்னோட திருமணம் முடிந்ததும் இனி நீ என்னை பார்க்கிறதை தவிர்த்திடு. அது நம்ம எல்லாருக்கும் நல்லது. ரெண்டு புதிய செல்போன் நாளைக்கு வாங்கிட்டு வந்துடு. அந்த புதிய செல்போன்ல தான் இனி நம்மளோட உரையாடல் இருக்கும். மாணிக்கத்திற்கு சின்ன சந்தேகமும் வராத மாதிரி ஆட்சிக்கு நம்ம வரும் வரைக்கும் கொஞ்ச காலத்துக்கு அவன் கூடவே இரு. இனி உன் கையால ஒரு உயிர் போகக்கூடாது. மாணிக்கத்துக்கு கூடவே இருந்து அவன் செய்யும் குற்றங்களுக்கு ஆதாரம் எடுத்து சேகரித்து வை. அவனை உள்ள போடும்போது தேவை படும். அவன் கூடவே நீ இருந்தாலும் இனி கொலை செய்ற வேலையை செய்வதை கொஞ்சம் ஏதாவது காரணம் சொல்லி தவிர்த்துவிடு. ” என்று அவர் கூறிய அனைத்தையும் கேட்டிருந்து விட்டு அவனின் சில சந்தேகங்களையும் கேட்டு தெளிவு படுத்திக் கொண்டு அவர் கூறியபடி செய்வதாக கூறிவிட்டு வந்த வழியாக நேரம் எட்டு மணி ஆனதும் அங்கிருந்து அவன் வீட்டுக்கு சென்று விட்டான்.
அங்கே செல்லம்மா காலையில் அவன் செய்து வைத்த உணவை பாட்டிக்கும் அவனது தாய்க்கும் பதமாக பக்குவமாக கொடுத்துவிட்டு அவன் வந்ததும் அவனுக்கு நன்றி கூறிவிட்டு அங்கிருந்து செல்வதாக முடிவு செய்திருந்தாள்.
அதன் பின் சிறிது நேரம் கழித்து அவன் வந்ததும் நேற்று இரவு அவளை திட்டி அடிக்க வந்தது போன்று இன்றும் ஏதாவது பிரச்சினை வந்துவிடுமோ என்று நினைத்தாள். அதனால் சொல்லிவிட்டு செல்வது அவளுக்கு ஏதோ தவறாக பட்டது. பாட்டியும் வள்ளியும் உணவு உண்டதும் களைப்பில் உறங்கி விட்டார்கள்.
அவளுக்கு தெரிந்த அளவில் ஒரு பேப்பரில் கடிதம் எழுதி வைத்து விட்டு அங்கிருந்து வெளியேறி விட்டாள் செல்லம்மா.
நடக்க ஆரம்பித்தவள் அவளின் வாழ்வில் நடந்த திடீர் மாற்றம் மற்றும் அவளின் இன்னிலைக்கு காரணம் என்ன என்பதும் அவளின் மனதில் படமாக ஓட ஆரம்பித்தது.
அவளுக்கு இறைவன் கொடுத்த வாய்ப்பை அவள் சரியாக பயன்படுத்தி அந்த வீட்டை விட்டு வெளியேறி விட்டாள்.
ஆனால் விதி அவளை மீண்டும் சோழனிடம் சிக்க வைக்குமா?.