பழனிச்சாமி கமலா தம்பதியினர் மகேஷின் இந்த அதிரடி பேச்சிலிருந்து இன்னும் வெளிவராமல் திகைத்த நிலையிலே நின்றிருந்தார்கள். அவர்களின் பிள்ளைகள் அவர்களை அதிர்ச்சியில் இருந்து தட்டி உலுக்கியதும் தான் அவர்கள் நிகழ்வுக்கு வந்து வேகமாக மகேஷை பின் தொடர்ந்து அவன் போகும் இடத்திற்கு சென்றார்கள்.
அவனும் யாரையும் கண்டு கொள்ளாமல் அவளை அழைத்துக்கொண்டு அவர்களுக்கு என புதிதாக கட்டி குறையில் இருக்கும் அந்த வீட்டிற்கு அழைத்து சென்றான்.
திருமணத்துக்கு முதல் நாள் ஓரளவிற்கு அவர்கள் இருவரும் அந்த வீட்டில் வாழ்வதற்கு தேவையான முக்கியமான பொருட்களை வாங்கி வைத்து தேவையானவற்றை தயார் செய்து வைத்திருந்தான்.
இன்று அந்த பூஜை அறையில் சாமி படங்கள் வைக்கப்பட்டிருந்தது.
வீட்டுக்கு உள்ளே கால் எடுத்து வைக்கும் முன்பு பழனிச்சாமி தம்பதியினர் அங்கே வந்து விட்டார்கள்.
திருமணம் முடித்த புது பெண் புகுந்த வீட்டுக்கு செல்வதற்கு முன்பு ஆரத்தி எடுக்க வேண்டும் என்பது ஒரு சடங்காகும்.
அச்சடங்கு இல்லாமல் உள்ளே செல்ல வேண்டாம் என நினைத்து அவர்களை தடுத்து கமலா உள்ளே சென்று ஆரத்தி தயார் செய்து எடுத்து வந்து மனசார அவர்களை ஆசீர்வதித்து அவர்களுக்கு ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச் சென்றார்கள்.
மகேஷ் உமா இருவரும் பூஜை அறைக்குள் சென்று உமா அவளது கையால் விளக்கேற்றி இறைவனை வணங்கிய பின்பு அறையை விட்டு வெளியே வந்தார்கள்.
அதன் பின் பால் பழம் கொடுப்பது என சிறு சிறு சடங்குகள் அனைத்தையும் முடித்துவிட்டு.
அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் மகேஷ் முகத்தை பார்த்து நின்றார் கமலா.
அதுவரையும் சித்ராவும் அவரது மகளும் அந்த வீட்டிற்கு வரவே இல்லை.
திருமணம் முடிந்த கையோடு மகேஷ் வந்தபடியால் பழனிச்சாமி இங்கிருந்து அங்கே சென்று வந்தவர்களுக்கு விருந்து அளித்து மனநிறைவோடு அவர்களை எல்லாம் அனுப்பி வைத்து மண்டபத்திற்குரிய அனைத்து செலவு கணக்கு வழக்குகளையும் பார்த்துக் கொண்டிருந்தார்.
அவர்களின் மற்றைய நான்கு பிள்ளைகளும் கமலாவுடன் அங்கே வந்து விட்டார்கள்.
இங்கு நின்று இனி வேலை இல்லை அடுத்து என்ன செய்வது என தெரியாமல் கமலா தவத்துக்கொண்டிருந்தார். அதை உணர்ந்து திருமண சாப்பாட்டை பழனிச்சாமி அவரது மகனை அழைத்து மகேஷ் மற்றும் உமா ஜோடிக்கு கொடுத்து அனுப்பி வைத்தார்.
உணவு வந்ததும் கமலா புது ஜோடிக்கு முதலில் உணவை பரிமாறிய பின் மற்ற பிள்ளைகளுக்கும் கொடுத்து அவரும் உண்டு விட்டு அங்கிருந்து பிள்ளைகளை அழைத்துக் கொண்டு அவர்களது வீட்டுக்கு சென்று விட்டார்கள்.
அவர்களுக்கான தனி படுக்கை அறையில் அனைத்து வசதிகளையும் செய்து ஏசியும் போட்டு தயார் படுத்தி வைத்திருந்தான்.
அங்கே உமா இருக்கிறாள் என்பதை சிறிதும் கவனிக்காமல் அவனது அறைக்கு சென்று இலகு உடைக்கு மாறி சற்று நேரத்தில் அவன் உறங்கியும் விட்டான்.
அவள் தான் என்ன செய்வது என்று எதுவும் புரியாமல் இருந்த இடத்திலேயே அமர்ந்திருந்தாள்.
மாலை நேரம் நெருங்கியதும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழித்து எழுந்த மகேஷ் அறையை விட்டு வெளியே வரும்பொழுது அவன் சென்ற போது உமா எவ்வாறு இருந்தாலோ தற்பொழுதும் அப்படியே இருப்பதை பார்த்து கோபம் வந்தாலும் முதல் நாளே கோபத்தை காட்டி அவளுக்கு பயம் காட்ட வேண்டாம் என்று நினைத்து பழனிச்சாமிக்கு கைபேசியில் அழைப்பு விடுத்தான்.
அவரும் மகனும் சேர்ந்து ஓரளவுக்கு திருமண மண்டபத்தில் இருக்கும் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு தற்பொழுதுதான் வீட்டிற்கு வந்தார்கள்.
இதற்கு முன் தங்கை மகன் எனும் நிலை போய் தற்பொழுது மாப்பிள்ளை ஆனதும் மகளின் எதிர்கால வாழ்க்கையை கருதி காலையில் மகேஷ் மண்டபத்தில் நடந்து கொண்டதை பற்றி ஒன்றும் பேசாமல் அழைப்பை ஏற்று அவன் வீட்டிற்கு வருமாறு அழைத்ததும் சரி என்று கூறிவிட்டு குடும்பத்துடன் அங்கே சென்றார்கள்.
அடுத்து அவனது தாய் சித்ராவிற்கு அழைத்து தங்கையையும் குடும்பத்துடன் அழைத்துக் கொண்டு அவர்களது வீட்டுக்கு வருமாறு கூறிவிட்டு அழைப்பை துண்டித்தான் மகேஷ்.
சித்ராவோ மகேஷ் மேல் மலையளவு கோபத்துடன் இருந்தார். . ஆனால் அவருக்கு அதை காட்டிக் கொள்ளும் வழி தான் தெரியாவில்லை. இப்பொழுது அவன் செய்யும் செலவுகள் அனைத்தையும் நிறுத்தி விடுவானோ என்று பயம் வேறு மனதிற்குள் இருந்தது. அந்த பயமே அவனை எதிர்த்து கேள்வி கேட்க விடாமல் தடுத்தது. வேறு வழி இன்றி மகளையும் அழைத்துக் கொண்டு அங்கே வந்து சேர்ந்தார்.
தாய் மற்றும் மாமனார் இருவருக்கும் அழைப்பு விடுத்து இங்கு வரும்படி கூறியதும் உமாவிடம் திரும்பி அவர்கள் வரும் தகவலை கூறிவிட்டு அவனது அறைக்குள் சென்றான்.
அவளது குடும்பம் இங்கு வர இருப்பதை அறிந்து கொண்ட உமா உடனே எழுந்து முகம் கழுவி தலை சீவி அவளும் ஓரளவிற்கு தயாராகி அவர்களின் வரவை எதிர்நோக்கி காத்திருந்தாள்.
சற்று நேரத்தில் முதலில் பழனிச்சாமி குடும்பமே அவர்களின் சொந்த ஆட்டோவில் வந்து இறங்கினார்கள்.
தாய் தந்தை சகோதரர்களின் சத்தம் கேட்டு உமா வாசலுக்கு அவர்களை வரவேற்க வந்தாள்.
அவர்களைத் தொடர்ந்து சற்று நேரத்தில் சித்ராவும் மகள் மற்றும் மாப்பிள்ளை குழந்தைகள் என அழைத்துக் கொண்டு வந்து சேர்ந்தார்.
இரு விட்டாரும் வந்து அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தும் மகேஷ் இன்னும் வெளியே வராமல் இருந்ததால் உமா எழுந்து சென்று அவர்கள் வந்திருப்பதாக கூறி அவனை வெளியே வருமாறு அழைத்து விட்டு வந்தாள்.
அவனும் அவர்களிடம் என்ன பேச வேண்டும் என்பதை தீர்மானித்து வைத்திருந்தபடியால் எழுந்து வெளியே வந்தான்.
அவன் வரவும் கமலா கையில் இருந்த சிறு பையை மகளிடம் கொடுக்கவும் சரியாக இருந்தது.
அதைப் பார்த்து நேரடியாகவே கமலாவிடம் ” என்ன அத்தை அந்த பையில் என்ன இருக்கு. ” என்றான்.
அவனோ சாதாரணமாகத்தான் கேட்டான். ஆனால் காலையில் அவன் நடந்து கொண்டதை பார்த்து அவருக்கு ஏன் என்று தெரியாமலே சற்று பயம் தொற்றிக் கொண்டது.
” அது வந்து மாப்பிள்ளை பெருசா ஒன்னும் இல்லை உமாவின் உடுப்பெல்லாம் அதுக்குள்ள இருக்கு மாப்பிள்ளை. ” என்றார் கமலா.
கமலா கொடுத்ததை உமா கைநீட்டி வாங்கியதும் அவளை முறைத்து பார்த்துவிட்டு ” மாதவி அவர் கொடுத்த பையை அவரிடமே கொடு. ” என்றதும் அவளும் சற்று பாயத்தோடு தாயின் கையில் கொடுத்துவிட்டு அவனையே விழி எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
மகேஷின் மாதவி என்னும் செல்ல அழைப்பை பார்த்து உமாவின் சகோதர வட்டாரம் அதை பற்றி பேசி சிரித்துக் கொண்டிருந்தது.
அனைவரும் கூடியிருந்த அந்த இடத்தில் சற்று நேரம் அமைதி நிலவியும் அவர்களின் சத்தம் அவனுக்கு ஏதோ இடைஞ்சலாக இருக்க அதை கலைக்கும் விதமாக உமாவின் தங்கையை அழைத்தான்.
அவள் அவன் அருகே வந்ததும் ” இது என்னோட கிரெடிட் கார்டு. உங்க அக்காவை ரூமுக்குள்ள அழைச்சிட்டு போய் அவளுக்கு தற்போது என்ன என்ன தேவை என்பதை பில் போட்டு எடுத்துட்டு போய் எல்லாத்தையும் வாங்கிட்டு உங்க வேலை எல்லாம் முடிச்சதும் உங்க அம்மாவுக்கும் எங்க அம்மாவுக்கும் கால் பண்ணி யார் யாருக்கு என்னென்ன சாப்பாடு வேணும்னு ஆர்டர் எடுத்துட்டு எல்லாருக்கும் நைட் சாப்பாடு வாங்கிட்டு வாங்க.” என்று கூறி மனைவியை திரும்பி பார்க்கவும். அவளும் ஒன்று கூறியதைக் கேட்டு அறைக்குள் செல்ல எழுந்து நின்றாள்.
அதன் பின் அவர்களை தடுத்து அவனே பேசினான் ” பட்டு புடவை ஒரு ஐந்து ஒரு அளவுக்கு காஸ்ட்லியானதா பார்த்து வாங்கிடு. முதல் நேராக நகைக்கடைக்கு போய் தோடு காதுமாட்டி மோதிரம்,காப்பு,செயின்,நெக்லஸ், கொலுசு. தாலி போடறதுக்கு தனியா ஐந்து பவுன் செயின் . இது எல்லாம் வாங்கிட்டு. அப்புறமா ஜவுளி கடைக்கு போய் அவளுக்கு தேவையான புடவை சுடிதார் லேட்டஸ்டா இப்ப வந்திருக்கிற உடுப்பு எல்லாத்தையும் வாங்கிட்டு ஹேண்ட் பேக் ஹேர் பின் செருப்பு அந்த பேன்சி ஐட்டம்ஸ் வாங்கிட்டு. சீக்கிரமா வீடு வந்து சேரனும். இந்தா என்னோட கார் சாவி கார் எடுத்துட்டு போயிட்டு சீக்கிரம் வாங்க. ” என்று அவர்களுக்கு ஒரு வேலையை கொடுத்து அவர்களை அனுப்பிவிட்டு அவன் அங்கிருந்த சோபாவில் உமாவின் பக்கத்தில் போய் அமர்ந்தான்.
அவளிடம் என்ன வேண்டும் என கேட்குமாறு கூறிவிட்டு. அதன்பின் தேவையானவற்றை அவனே கூறி அவர்களை அனுப்பியும் வைத்தான்.
” என் பொண்டாட்டிக்கு இன்னும் ரொம்ப பெருசா செய்யணும்னு ஆசையாத்தான் இருக்கு மாமா. ஆனா பாருங்க எங்களுக்கு குழந்தை பிறக்குறதுக்கு முன்ன நான் இந்த வீட்டு வேலை எல்லாத்தையும் செய்து வீட்டை கம்ப்ளீட்டா முடிச்சிடனும். நாளைக்கு எனக்கு பிறக்கப் போற எங்களோட பிள்ளை ஓட்டு வீட்டில இல்லாமல் பங்களாவில் பொறக்கணும். அதனால இப்ப இவ்வளவு நகை மட்டும் தான் என்னால போட முடியும். இப்போதைக்கு தேவையான டிரஸ் மட்டும்தான் எடுக்க சொல்லி இருக்கிறேன். என்னோட பிசினஸ் ஆட்களின் வீட்டில் விருந்து பார்ட்டி எல்லாம் போக வேண்டி இருக்கும். அதுக்கு ஏற்ற மாதிரி உடையெல்லாம் எடுக்கணும். பினான்சியல் கம்பெனியில் போட்டு இருக்கிற என்னோட பணத்தில் இப்போதைக்கு கை வைக்க முடியாது. இது என்னோட சேவிங்ஸ்ல தான் இப்போதைக்கு கை வைக்க முடியும்.” என்று மாமனாரிடமும் அங்கிருந்த அவனது தாய் தங்கை அனைவரையும் பார்த்து கூறிவிட்டு உமாவிடம் திரும்பி ” என்ன மாதவி வீட்டுக்கு வந்திருக்கிற கெஸ்டுக்கு காபி பலகாரம் கொடுக்கணும்னு தெரியாதா?. போ போய் பிரிட்ஜ்ல பால் இருக்கு எல்லாருக்கும் காபி போட்டு கேக் பிஸ்கட் எல்லாம் இருக்கு எடுத்து வெச்சி எடுத்துட்டு வா ” என்று அவளிடம் வேலை வாங்கிவிட்டு இனி நீங்கள் அனைவரும் எங்களுக்கு விருந்தாளிகளே என்று குறிப்பால் சொல்லிவிட்டான்.
மகேஷின் இந்த பேச்சைக் கேட்டு பழனிச்சாமியே வாயடைத்து போய்விட்டார்.
அவன் தீவிரமாக ஒரு முடிவு எடுத்து விட்டான். இனி யார் என்ன கூறியும் அதில் இருந்து மாறப்போவதில்லை என்று அவருக்கு நன்றாக தெரிந்து விட்டது. பேசி பயனில்லை என்று அறிந்து கொண்டு அவர் பேசாமல் மௌனம் காத்தார்.
கமலாவிற்கு தான் துக்கம் தொண்டையை அடைத்தது.
அவர்களின் முதல் பிள்ளை செல்வம். மகளுக்கு கமலா பார்த்து பார்த்து அனைத்தையும் வாங்கி வைத்தார்.
ஒரு சிறு குண்டூசி கூட பிறந்த வீட்டிலிருந்து மகள் எடுத்து வரவில்லை என்பது அவருக்கு பெரிய கவலை ஆகிப் போய்விட்டது.
உமாவிற்கு வாங்கிய அனைத்தையும் அடுத்த மகளுக்கு செய்து அழகு பார்க்கும்படி. இன்று மண்டபத்தில் வைத்து அவன் கூறிவிட்டான். கணவனே வாய் திறந்து எதுவும் பேசாமல் இருந்ததால் அவரும் எதுவும் பேசாமல் அமைதி காத்தார்.
உமா சிறிய தங்கையின் உதவியுடன் அவள் காபியும் அவளின் பின்னே தங்கை கேக் மற்றும் பிஸ்கட் தட்டை எடுத்துக்கொண்டு அங்கே வந்தார்கள்.
அனைவருக்கும் கொடுத்துவிட்டு அவளும் ஒரு காபி காப்பை எடுத்துக் கொண்டு நின்றபடியே குடிக்க ஆரம்பித்தாள்.
அதைப் பார்த்த மகேஷ் ” என்ன மாதவி நின்னுட்ட இப்படி வா இங்க வந்து இப்படி இரு. ” என்று அவனின் அருகே அவள் இருந்த இருக்கைக்கு வரும்படி அழைத்தான். (www.mombrite.com)
மகனின் செயல்கள் அனைத்தையும் பார்த்து சித்ரா மற்றும் நிஷா இருவரின் முகமும் கடுகடுவென இருந்தது.
யாரும் எதுவும் பேச முடியாமல் அவனே பேசிக் கொண்டிருந்தான்.
காபி குடித்து கேக் சாப்பிட விருப்பம் இல்லாமல் இருந்தாலும் மகளின் மனம் நோகும் என்பதால் அதை அவர்கள் எடுத்து கொண்டார்கள்.
அனைவரும் குடித்து வைத்ததும் உமா அதை கழுவி அடுக்கி வைத்து விட்டு வந்தாள்.
வீட்டை முழுதாக கட்டி முடிக்கா விட்டாலும் தேவையான அனைத்து பொருட்களுமே வாங்கி வைத்திருந்தான்.
” இன்னொரு விஷயமும் பேசணும். இந்த குடும்பத்துக்கு நான் மட்டும்தான் ஆம்பள பிள்ளை. அதனால என்னோட அம்மாவை நான் தான் பார்த்துக் கொள்வேன். வீடு இன்னும் முடிக்காததால அம்மாவுக்கு இங்க இருக்க கஷ்டமா இருந்தா அங்க நிஷா கூட போய் இருக்கலாம். கடைசி வரைக்கும் அம்மாவுக்கான அனைத்தையும் நான் தான் பார்ப்பேன். மாமாவும் இத தவறுன்னு சொல்ல மாட்டார். அவரோட தங்கச்சி மட்டும் இல்லாம என்னோட அம்மா என்பதால் இதில் யாருக்கும் எந்தவித பிரச்சனையும் இல்லை என்று நினைக்கிறேன். அப்புறம் மூணு மாசத்துக்கு தேவையான அனைத்து சாமான்களையும் இப்பவே அம்மாவுக்கும் நிஷாக்கும் வாங்கிக் வைத்திருக்கிறேன். உடனே நிஷாவுக்கு எதுவும் செய்யாமலுக்கு இப்போதைக்கு விட்டு விட முடியாது. அதனால இந்த திட்டம். இப்போ வாங்கி வச்சிருக்க பொருட்கள் எல்லாம் முடியறதுக்கு முன்னாடி நிஷா வீட்டுக்காரர் அவருக்குன்னு ஒரு சொந்த வேலையை தேடிக்கணும். இதுக்கு முதல் நான் அவங்க மகன் அவங்க அண்ணன் அவர்களுக்கு எல்லாம் செய்யலாம் அதை யாரும் கேட்க முடியாது. இன்னைல இருந்து உமாவுக்கு நான் கணவன் அதனால மூன்று மாதம் கழித்து இனி நிஷாவுக்கு என்னிடமிருந்து எந்தவிதமான சலுகையும் கிடைக்காது. அப்படியே விட விருப்பம் இல்லாததால் சிறிய அளவிலான முதல் போட்டு தொழில் ஒன்று ஆரம்பிச்சு நிஷா கையில ஒப்படைப்பேன் அதை நல்லா நடத்தி வளர்கிறதும் நஷ்டம் அடைவதும் அவங்களோட திறமையை பொருத்தது. கூடப்பிறந்த அண்ணனா இதையும் நான் செய்தா மாமா தவறா எடுத்துக் கொள்ள மாட்டார். என்று நினைக்கிறேன். அவரும் அவரோட தங்கைக்கு எவ்வளவோ செய்து இருக்கிறார். இதுதான் என்னோட முடிவு இதை சொல்லத்தான் இரண்டு குடும்பத்தையும் நான் அழைத்தேன். இதுல ஏதாவது தவறு இருந்தால் நீங்க சொல்லனுமா?.கேட்கணுமா?. எதுவா இருந்தாலும் சொல்லலாம் கேட்கலாம்.” என்று கூறிவிட்டு பேசிய களைப்பில் சற்று சோபாவில் சாய்ந்து தலைக்கு பின் கை கொடுத்து அமர்ந்து இருந்தான்.
மகளின் விஷயத்தை தவிர மற்ற எதுவும் பழனிச்சாமிக்கு தவறாக தெரியாததால் அவர் அதற்கும் எதுவும் கேட்காமல் அமைதியாக இருந்து விட்டார்.
சித்ராவும் அண்ணனின் முன் நிலையில் எதுவும் கேட்டு வைக்க விரும்பாமல் அமைதியாக இருந்துவிட்டார்.
யாரும் எதுவும் கேட்காமல் இருந்ததால் அவன் கூறியதில் அனைவருக்கும் சம்மதம் என்பதை தெரிந்து கொண்டு வெளியே கடைக்கு சென்றவர்களுக்கு அழைத்து யார் யாருக்கு என்ன உணவு வேண்டும் என்பதை கேட்டு அறிந்து அவர்களிடம் சொல்லிவிட்டு அவர்களுக்காக காத்திருந்தான்.