” ஏய் பொண்ணு உன்னோட கொஞ்சம் தனியா பேசணும். இப்படி கொஞ்சம் உள்ள வாயேன்.” என்றான் சோழன்.
அவள் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தாள்.
இரவு குடித்துவிட்டு வந்தாலும் கண்ணியமாகவே அவளிடம் நடந்த படியால் அந்த சிறு நம்பிக்கையில் இரண்டு பெண்கள் இருக்கிறார்கள் அவர்களை மீறி அவன் எதுவும் அவளை செய்து விட மாட்டான். என்று நினைத்து அவள் மீண்டும் போக்கிடம் இன்றி இங்கேயே வந்தாள்.
ஆனால் தற்பொழுது அவள் வந்ததும் உடனே அவனும் வந்து தனியாக பேச வேண்டும் என்று அழைத்ததும் பயந்தே விட்டாள்.
அவனை பார்த்தால் திடகாத்திரமாக 10 பேரை ஒரே நேரத்தில் அடித்து துவைப்பவன் போன்று இருந்தான்.
இவ்ளோ அவனது மூச்சு காத்து பட்டாலே பறக்கும் நிலையில் இருந்தாள்.
பயத்தில் சற்று திக்கி கொண்டு ” ஏ ஏ என்னால் எங்கேயும் வ வ வர முடியாது. எதுவா இருந்தாலும் இ இங்கேயே சொல்லுங்க.” என்று அங்கு பாட்டியும் அவனது தாயும் இருக்கும் நம்பிக்கையில் அவனிடம் எதிர்த்து பேசி விட்டாள்.
அவனும் ‘ சூழ்நிலை புரியாமல் ச் சே இவளா வந்தாலே இவளுக்கு முத்தம் கொடுக்கும் மூடில் நான் இல்ல. தனிய கடத்திட்டு போய் வேற கற்பழித்துவிடுவாங்களாம். என்ன கொடுமையான காலம் இது. பொண்ணுங்க நல்லா இருக்குற ஆம்பளையும் நம்ப மாட்டாளுக.’ என்று மனதில் அவளை திட்டி தாளித்துவிட்டு.
கோபத்தை காட்டினால் வேலையாகாது என்று உணர்ந்து. ” இங்க பாருமா நான் உன்னை எதுவும் கடிச்சு திண்க மாட்டேன். கதவ திறந்து வச்சு அந்த பக்கத்தில் இருக்கிற ரூமுக்குள்ள போய் உன்னோட கொஞ்சம் சில விஷயங்கள் பேசி முடிவெடுக்கணும். அத பேச மட்டும் தான் நீ பயப்படாம வா. எனக்கு இப்ப இருக்கிற சூழ்நிலை காரணமா வெளியே எங்கேயும் உன்னை அழைச்சிட்டு போய் பேச முடியாது வா ” என்று கூறியும் அவள் நகராமல் இருந்ததை பார்த்து அவளின் கையைப் பிடித்து அந்த ரூமுக்குள் அழைத்து சென்று கட்டிலில் அமர வைத்தான்.
முதல் முதலில் அந்நிய ஆடவன் ஒருவன் கையைப் பிடித்த அதிர்ச்சியில் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அதட்டி சத்தமாகவும் பேச முடியாது. அப்படி பேசினால் பாட்டியோ தாயோ முழித்துக் கொள்வார்கள். அவர்களின் ஆழ்ந்த அமைதியான தூக்கம் கெட விரும்பாமல்.
கல்யாணம் பண்ணிக்கொள்ள போகிறோம் என்ற தைரியத்தில் எதை பற்றியும் யோசிக்காமல் அவளின் தோளை பிடித்து சற்று அவளுக்கு தள்ளி இருந்து அவனை பார்க்கும்படி செய்தான்.
” இங்க பாரும்மா நான் உன்னை எதுவும் செய்ய மாட்டேன். முதல் நீ பயப்படாமல் ஆறுதலா அமைதியா இரு. இந்தா இந்த தண்ணியை முதல் குடி.” என்று அங்கிருந்து கிளாஸில் இருந்த தண்ணீரை எடுத்து அவளுக்கு குடிக்க கொடுத்ததும் அவள் அதை வாங்கி குடித்துவிட்டு கப்பை கீழே வைத்துவிட்டு அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
இருவரையும் பார்த்தால் திருமணம் முடித்து பகலிலேயே முதல் இரவுக்கு தயாராகும் தம்பதியர்கள் போன்று இருந்தார்கள்.
” இங்க பாரு மா பொண்ணு. எனக்கு சுத்தி வளச்சி பேச தெரியாது. நீ யாரு? எங்க இருந்து வந்திருக்க? இந்தக் கேள்வி எதுவுமே எனக்கு தேவையில்லை. உன்னை பார்த்தால் வீட்டை விட்டு வெளியே வந்த பொண்ணு மாதிரி தெரியுது. நீ திருமணம் ஆகாதவ தானே..! இல்ல திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருக்கா? உனக்கு. ” என்று கேட்டான்.
இந்த காலத்தில் திருமணம் முடித்த பின் சில பெண்கள் நவநாகரிகம் என்று தாலியை அணியாமல் இருப்பதால் நாகரிகம் கருதி அவள் திருமணம் ஆனவளா ஆகாதவளா இல்லை வேறு யாருக்கும் நிச்சயம் ஆன பெண்ணா? என்று தெரிந்து கொள்வதற்காகவே இந்த கேள்வியை கேட்டான்.
திருமணமான பெண் என்றால் இந்த பேச்சை எடுக்காமல் அவளை அவளது கணவருடன் சேர்த்து வைக்கவே முடிவெடுத்து இருந்தான்.
திருமணம் ஆகாமல் நிச்சயிக்கப்பட்டிருந்தால் அது அவனுக்கு ஒரு பெரிய விஷயமே இல்லை. மண மேடைக்கு பெண் ஏறியும் பல திருமணங்கள் நடக்காமல் தடை படுவதால் இந்த காலத்தில் நிச்சயமாவது என்பதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை. அதனால் பேசும் முன்பு அவளை பற்றி இந்த ஒரு விடயத்தை மட்டும் தெரிந்து கொண்டு பேச வேண்டும் என்று நினைத்து இந்த கேள்வியை கேட்டான்.
அவளும் ஏன் அப்படி கேட்கிறான் என்று தெரியாமல் அவன் மேல் இருந்த பயம் சற்றும் குறையாமல் இருப்பதால்
” கா கா கல்யாணம் இன்னும் ஆகவில்லை. ” என்றாள்.
அவனுக்கு வேண்டிய பதில் கிடைத்ததும் அவனது முகம் பிரகாசமாகியது. நீ உன் பிறந்த வீட்டை விட்டு வந்திருப்பது பார்த்தா உனக்கு ஏதோ பிரச்சனை என்று புரியுது. இப்ப உன்னால எனக்கு ஒரு காரியம் ஆகணும். உனக்கும் ஒரு நல்ல பாதுகாப்பான இடம் வேணும் தானே..! அதனால ஏன் ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக் கொள்ளக்கூடாது. எனக்கு என் வேலை முடிஞ்ச மாதிரி ஆச்சு. உனக்கு இங்க தங்குறதுக்கும் ஓர் இடம் கிடைச்ச மாதிரியும் ஆச்சு. இதுவரைக்கும் என் மனசுல எந்த பொண்ணை பற்றியும் ஒரு சின்ன சலனம் கூட இருந்ததில்லை. இந்த காதலுக்கும் எனக்கும் ஏணி வச்சாலும் எட்டாது. நம்ம வீட்டுல எங்க அம்மாவும் பாட்டியும் இருக்காங்க. அவங்களுக்கு செய்ய வேண்டியதை செஞ்சிட்டு நீ சந்தோஷமா சமைச்சு சாப்பிட்டுட்டு என்னோட மனைவி என்னும் அங்கீகாரத்தோட பாதுகாப்பாக இந்த வீட்டில் இருக்கலாம். உனக்கு தேவையான செலவுகளையும் நானே பார்த்துப்பேன். என்னை பற்றி நீ பயப்பட வேண்டாம். நீ எப்ப விருப்பப்படுறியோ அப்ப உன்னை பத்தி நீ யாரு என்ன என்று தகவலை சொல்லு. இப்ப முதல் உன்னோட பேர் என்னன்னு மட்டும் சொல்லு. அப்புறமா யோசிச்சு இன்னைக்கு சாயந்திரம் நல்ல முடிவா சொல்லு. நீ யோசிச்சு நல்ல முடிவா சொன்னா எந்த சேதாரமும் இல்லாமல் இந்த கல்யாணம் நடக்கும். அப்படி மாறாக தவறான முடிவு எடுத்து திரும்பவும் இந்த வீட்டை விட்டு நீ வெளியேறினால் எங்க இருந்தாலும் கண்டுபிடிச்சு வந்து உன்னை தூக்கிட்டு போய் நான் கல்யாணம் பண்ணுவேன். இனி நீ தான் என்னோட பொண்டாட்டி. அதுல எந்த மாற்றமும் இல்லை. அதனால இனி மனசை போட்டு குழப்பி தவறான முடிவுகள் எடுக்காமல். யோசிச்சு சேதாரம் இல்லாமல் நல்ல முடிவா எடு. நீ சம்மதித்தாலும் சமாதிக்காவிட்டாலும் நாளைக்கு காலைல நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடக்கும். அந்த கல்யாண நேரத்தை அழகா சந்தோஷமா அமைத்துக் கொள்வதும் அடாவடியா அமைத்துக் கொள்வதும் உன் கையில தான் இருக்கு. எனக்கு அதுக்கான ஏற்பாடு பார்க்க வேண்டி இருக்கு. உனக்கு துணிமணி எனக்கு துணிமணி அப்புறம் தாலி மாலை எல்லாம் வாங்கணும். எனக்கு நிறைய வேலை இருக்கு நீ ஆறுதலா நல்லா யோசிச்சு முடிவெடுத்து அப்போ உன்னோட பேரையும் எனக்கு சொல்லு. நான் இப்ப கொஞ்சம் வெளிய போறேன். தப்பி எங்கேயும் போக நினைக்காதே. நீ எங்க போனாலும் அடுத்த நிமிஷம் நான் அங்க இருப்பேன். என்பதை மனசுல வச்சிட்டு நல்ல முடிவா எடு.. இப்ப எனக்கு இருந்து சாவகாசமா பேச நேரமில்லை. வேலை எல்லாம் இருக்கு.. சமைத்து வெச்சிருக்கேன். நீயும் சாப்பிட்டுட்டு அம்மா பாட்டி எழுந்தா அவங்களுக்கும் சாப்பாடு கொடுத்துடு. நீ ஏன் திரும்ப இங்க வந்தேன்னு எனக்கு தெரியாது. அவங்களை பார்த்த பின்பாவது நீ இங்க இருந்து போகணுமா என்று முடிவை எடு. வரட்டா..!” என்று அவளது கன்னத்தில் தட்டி விட்டு மீண்டும் அந்த சிறுமியை அழைத்து அவளையும் சேர்த்து பார்த்துக் கொள்ளும்படியும் கூறி அந்த கைபேசியை அந்த சிறுமியிடம் கொடுத்து விட்டு அவனது கிரெடிட் கார்டு எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டான் சோழன்.
அவன் சென்ற பின்னும் செல்லம்மா அவன் இருக்க வைத்த அந்த இடத்தை விட்டு சற்றும் அசையவில்லை.
அந்த சிறுமி நிலாவோ அவன் சென்றதும் வீட்டை அவன் சொன்னது போன்றே பூட்டிவிட்டு சாவியை எடுத்து ஒளித்து வைத்து விட்டாள்.
அவன் வந்து கைபேசியில் அழைப்பு விடுத்து கதவை திறக்க சொன்னால் மட்டுமே திறக்க வேண்டும் என்பது அவனது கட்டளை.
பிறந்த வீட்டில் இருந்து வெளியேறி விட்டாள்..
ஒரு தடவை இந்த வீட்டில் இருந்தும் வெளியேறி இருக்கிறாள்.
சற்றும் அவள் மீது அவனுக்கு நம்பிக்கை வரவில்லை.
அவனுக்கு தான் இனியாவது திருந்தி நல்லவனாக நல்லது செய்து அவனை தவறாக பயன்படுத்திய மாணிக்கத்தை அளித்து நல்ல ஒரு நிலைக்கு வர வேண்டும். என்று நினைத்து சாமி சொன்னதற்காக இவளை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தான்.
அவள் ஒரு பெண் அவளுக்கும் மனது என்று ஒன்று இருக்கிறது. என்று எதைப் பற்றியும் யோசிக்காமல் அவளை திருமணம் செய்தால் அவனுக்கு அனைத்தும் வெற்றியாக முடியும் என்ற ஒரே காரணத்திற்காகவே இந்த திருமண ஏற்பாட்டை ஆரம்பித்தான்.
அவளுக்கு அவன் கொடுக்கப் போகும் மன வலிகளை மீண்டும் ஒரு காலத்தில் காலம் அவனுக்கு கொடுக்கும் பொழுது அவளைப் பற்றி உணர்ந்து கொள்வானோ விடை அறியா கேள்வி இது.
செல்லம்மாவோ மீண்டும் ஏன் இந்த வீட்டிற்கு வந்தோம் என்று மனதில் கேள்வி கேட்டு அழுது தவித்துக் கொண்டிருந்தாள்.
இறைவன் அவளுக்கு பாவம் பார்த்து கொடுத்த ஒரு வாய்ப்பை அவள் தவறவிட்டதால் இனி அவளது வாழ்க்கை காலத்தின் போக்கிலேயே காலம் விதித்த படி நடக்கும்.
பேச்சியின் இறப்புக்கு பின் அவள் இதுவரை பார்த்து அறியாத அவளது குடும்பத்தின் மற்றொரு பக்கத்தை பார்த்து மிகவும் மனம் வருந்தி பல கொடுமைகளை அனுபவித்து விட்டு இனி அவளால் முடியாது என்னும் கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறி வந்தாள் பாவை.
அன்று மாலை கோவிலுக்கு போவதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறியவள் கால் போன போக்கில் நடந்து வரும் பொழுது அவளுக்கு எதிரே வந்த பேருந்தை கை போட்டு நிறுத்தி அதில் ஏறினாள். அன்று அந்த பேருந்து வந்து நின்ற ஊரே இந்த பசுஞ்சோலை ஆகும்.
பேருந்தில் இருந்து இறங்கி மீண்டும் நடக்க ஆரம்பித்தவள் இவர்களது வீட்டை கடக்கும் பொழுது தான் சோழனின் தாயின் சத்தம் அவளது காதை சென்றடைந்தது.
சோழன் அவர்களுக்கு வேலைக்கு நியமித்த பெண் வீட்டில் இருந்து தொடர்ந்து அழைப்பு வந்ததால் இனி இந்த வேலை வேண்டாம் என்ற முடிவை எடுத்துவிட்டு அவள் அங்கிருந்து சென்று விட்டாள்.
அவள் சென்ற பின்பு பாட்டி தூக்க மாத்திரையின் உதவியால் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுவிட்டார்.
சோழனின் தாய் வள்ளி எப்பொழுதும் படுக்கையிலேயே இருப்பதால் மதியம் உண்ட உணவு செரிமானம் அடையாமல் உவ்வாமை ஏற்பட்டதால் வயிற்று வலியால் துடித்து தான் கத்தினார்.
ஏதோ வித்தியாசமாக சத்தம் வருவதை உணர்ந்து யாருக்கோ ஏதோ பிரச்சனை என்று நினைத்துதான் அந்த நேரத்தில் அவள் அந்த வீட்டில் கால் வைத்தாள்.
ஆனால் தற்போது கொடுமை கொடுமை என்று கோவிலுக்கு சென்றால் அங்கு அனைத்தையும் விட பெரிய கொடுமை தலைவிரித்து ஆடும் என்பது செல்லம்மாவிலேயே உண்மையானது.