சித்ரா அண்ணன் மகள் மருமகளாக வந்தால் எந்த பிரச்சினையும் இல்லாமல் அமைதியாக அவர்களது வாழ்க்கை செல்லும் என்று நினைத்தார்.
ஆனால் அண்ணன் தங்கை மற்றும் மகள் என்று வரும் பொழுது தற்பொழுது அவர் பெற்ற மகள் பக்கமே நிற்பார் என்பதை மறந்து விட்டார்.
சித்ராவைப் போன்று இல்லாமல் மகேஷ் தாய்மாமன் பழனிச்சாமி தற்பொழுது மாமனாராக மாறி மகளுக்காக அவனிடம் எவ்வித கேள்வியும் கேட்க கூடாது என்று தான் இறுதியாக சிந்தித்து ஒரு முடிவை எடுத்தான்.
அவன் நினைத்தபடி அதை செயலாற்றியும் விட்டான்.
ஆனால் அதன் விபரீதம் எவ்வாறு முடியும் என்பதை அவன் சற்றும் சிந்தித்துப் பார்க்கவில்லை.
வேலை வேலை என்று ஓடுபவன் தாய் தங்கை இருவரின் குண நலன்களை அறியாததே அவன் செய்த பெரும் தவறாகும்.
இதோ அதன் பலனாக சித்ரா மகனது வாழ்க்கை என்றும் பார்க்காமல் மருமகளின் பேச்சை கேட்டு மகளுக்கு மகன் தீங்கு இழைத்து விட்டான். என்று நினைத்து அவர்களின் வாழ்க்கையில் விளையாட ஆரம்பித்து விட்டார்கள்.
இத்தனை வருடங்களாக மகன் மகளுக்கு செய்தது போதாது மகள் இன்னும் சோம்பறியான ஊதாரியான கணவனுடன் அண்ணனின் உழைப்பை சுரண்டிய வாழ வேண்டும் என்று அந்த அன்பான தாய் நினைக்கிறாள்.
அது அவருக்கு நியாயமாகப்பட்டது. இனி அவன் தன்னுடைய குடும்பத்தை பார்க்க வேண்டும் என்று எடுத்த முடிவு தவறாகப்பட்டது.
அதன் விளைவாக கமலா சித்ராவிடம் செய்யச் சொன்ன அந்த முதல் ராத்திரி விஷயத்தை நிஷாவை அழைத்து சித்ரா கூறியிருந்தார்.
பழனிச்சாமி தங்கையை கூர்ந்து கவனித்த படியால் அடுத்த நாள் அவளை அழைத்துப் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தார்.
ஆனால் அவர் பேசி ஒரு முடிவுக்கு வரும் முன்பே தங்கை தாய் எனும் ஸ்தானத்தை தாண்டி மாமியாராக அவதாரம் எடுத்து விட்டார் சித்ரா.
தாயின் அருகில் நின்ற நிஷா சற்று நேரம் கணவன் அழைத்ததால் வெளியே சென்று விட்டு மீண்டும் தாய் அழைக்க பக்கத்தில் வந்தாள்.
” என்னம்மா வா இனி நம்ம வீட்டுக்கு போவோம். நமக்கு தான் இனி இங்க எந்த வேலையும் பயனும் இல்லையே. அவன் வாங்கி வைத்திருக்கிற பொருள் எல்லாம் மூணு மாசம் பாவிச்சிட்டு இனி இந்த உதவாக்கரையை நான் கலயாணம் கட்டின பாவத்துக்கு நான் ரோட்ல இருந்து பிச்சை தான் எடுக்க வேணும். ” என்று அழுவது போன்று பாவனை செய்து கொண்டு கூறினாள்.
” ஏண்டி நீ கண்ண கசக்குற உன்னை பெத்த தாய் நான் என்ன செத்தா போயிட்டேன்?.. இப்ப நான் சொல்ல போறது போய் அப்படியே உன் அண்ணிகாரி கிட்ட போய் சொல்லு. மகேஷை எப்படி நம்ம கைல வச்சிருக்கணும்னு எனக்கு தெரியும். மூணு மாசம் வரைக்கும் டைம் கொடுக்க அவன் யாரு?. கொஞ்சம் பணம் சம்பாதிச்சு ஒரு பெரிய நிலைக்கு வந்தா அவர் பெரிய ஆளா? அவனுக்கு இவ்வளவு இருந்தா நான் அவனை பெத்த தாய் எனக்கு எவ்வளவு இருக்கும். அவன் இன்னும் புரிஞ்சுக்கலை என்னை பற்றி. நான் பெத்த மகளுக்கு அப்புறம் தான் என் அண்ணன் மகளா இருந்தாலும் இல்ல என் மகனா இருந்தாலும். காதை கிட்ட கொண்டு வா. நான் சொல்வதை அப்படியே போய் அச்சரம் பிசகாமல் உமா கிட்ட சொல்லிட்டு வா நம்ம கிளம்பலாம்.. ” என்று மகனின் வாழ்க்கையை கெடுக்க நல்ல தாயாக மகளிடம் திட்டம் தட்டி கொடுத்தார் சித்ரா.
அவளும் தாய் சொன்னதைக் கேட்டு சிரித்தபடி தலையாட்டி விட்டு அங்கிருந்து சென்று சமையலறையில் அனைத்தையும் ஒதுங்க வைத்துக் கொண்டிருந்த உமாவை அழைத்து கொண்டு தோட்டத்திற்கு சென்றாள்.
இருவரும் தோட்டத்துக்கு வந்ததும் உமாவே பேச்சை ஆரம்பித்தாள்.
” என்ன அண்ணி?. அவர் பால் கேட்டார். சூட ஆறும் முன்ன கொடுக்கணும். நீங்க கூட்டிட்டு வந்துட்டீங்க.” என்று கேட்டாள் உமா. அவளுக்கு மகேஷை பார்த்து சற்று பயமாக இருந்தது. குடும்பத்திற்கு முன்பே அவளை அதட்டி வேலை வாங்குவது. அத்தை மாமா என்றும் பாராமல் அவள் குடும்பத்தை படாய் படுத்துவது என்றிருப்பவன் அவர்கள் எல்லாம் சென்ற பிறகு அவளை எவ்வாறு நடத்துவான் என்பதை பற்றி சிறு பயம் ஏற்பட்டது பேதைக்கு. அவள் பயம் அவளுக்கு ஆனால் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் நிஷா தாய் கொடுத்த வேலையை செய்து முடிப்பதற்காகவே அவளை தடுத்து வைத்திருந்தாள்.
” நீ எனக்கு வயசுல சின்னவளா இருந்தாலும் இப்ப என் அண்ணனை கல்யாணம் கட்டினதால எனக்கு அண்ணி ஆகிட்ட. அதனால் இனி அண்ணின்னு கூப்பிடாம முதல் மாதிரி உமான்னு கூப்பிட்டா உங்களுக்கு மரியாதை இல்லாம போய் நீங்க என்ன எல்லாமோ செய்ய ஆரம்பிப்பீங்க. ” என்று என்னவெல்லாம் என்பதை சற்று அழுத்தி கூறினாள்.
” ஐயோ அண்ணி என் அவசரம் உங்களுக்கு புரியுது இல்ல. ப்ளீஸ் சொல்ல வந்ததை கொஞ்சம் சீக்கிரம் சொல்லுங்க. ” என்றாள் உமா.
” ச் இரு உமா எனக்கு உன்னை மறித்து வைத்து உன் அழகை ரசிக்க ஆசை இல்லை. நானும் ஒரு பொண்ணு நீயும் ஒரு பொண்ணு என்னதான் இருந்தாலும் எப்படி ஆரம்பிக்கிறது என்று தெரியாமல் யோசிச்சிட்டு இருக்கேன். கொஞ்சம் பொறுமையா இரு. எனக்கு நேரம் போகுது வீட்டுக்கு போறதுக்கு. எப்படியும் சொல்லித்தான் ஆகணும். அதனால குறுக்க பேசாமல் நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு.” என்றாள் நிஷா.
உமாவும் என்ன வரப் போகுதோ என்னும் யோசனையோடு நிஷா முகத்தை பார்த்திருந்தாள்.
” அத்தை உன்கிட்ட ஒரு விஷயம் சொல்ல சொல்லி எங்க அம்மா கிட்ட சொன்னாங்க எங்க அம்மா அதை உன்கிட்ட சொல்றதுக்கு கூச்சப்பட்டு என்கிட்ட சொல்ல சொன்னாங்க. நமக்கு இடையில் கொஞ்சம் வயது வித்தியாசம் இருந்தாலும் இளம் வயது தானே. இன்னைக்கு உங்களுக்கு முதலிரவு நடக்குறதுக்கு நேரம் சரி இல்லையாம். உங்க ரெண்டு பேர் பலன் படி முதலிரவு நடக்கிறதுக்கு சரியான நாள் குறிக்கிறதுக்கு இன்னும் கொஞ்சம் மாதங்கள் போகணுமாம். உங்க பலன் படி எப்ப நாள் என்பதை ஐயர் உங்க அம்மா கிட்ட சொல்லுவாராம். அப்பத்தான் உங்களுக்கு முதலிரவு நடக்கணுமாம். என்னதான் என் அண்ணனா இருந்தாலும் அவன் கொஞ்சம் எதுக்கும் அவசர புத்தி உள்ளவன். எடுத்த காரியத்தை முடிக்கணும் என்று நினைப்பவன். இன்னைக்கு கல்யாணம் நடக்கும் இன்னைக்கு அவ முதலிரவு நடக்கும் என்று எதிர்பார்த்து இருப்பான். இது அவனுக்கு பெரிய ஏமாற்றமா இருக்கும். நீதான் கொஞ்சம் ஏதாவது பக்குவமா எடுத்துச் சொல்லி நல்ல நாள் குறிக்கும் வரை இதை தள்ளி போடணும். நாள் காலம் கிழமை இதெல்லாம் போய் அவன் கிட்ட சொன்னா அவன் நம்ப மாட்டான். அவனுக்கு அதெல்லாம் நம்பிக்கை இல்லை. அவன் கஷ்ட பட்டு உண்மையா உழைத்து முன்னுக்கு வந்தவன். அதனால் கால நேரம் இது மேல் எல்லாம் அவனுக்கு நம்பிக்கை இல்லை. வேற ஏதாவது காரணம் சொல்லி நீ தான் உங்க அம்மா நாள் குறித்து தரும் வரை தடுத்து வைக்கணும். இதுக்கெல்லாம் கட்டாயம் நல்ல நாள் நேரம் பார்க்கணும். அப்படி பார்த்து வாழ்க்கை ஆரம்பிக்கிறது நல்ல நாளா இருந்தா தான் நம்ம சந்ததி பெருகும். அவங்க ஆரோக்கியமா சந்தோஷமா இருப்பாங்க. இதுக்கு மேலயும் நாள் கிழமை பற்றி நான் உனக்கு சொல்லணும் என்பது இல்லை உனக்கு எல்லாமே தெரியும். உங்க அம்மா சும்மா காரணம் இல்லாம இதெல்லாம் சொல்ல மாட்டாங்க. புத்தி உள்ள புள்ளையா பொழச்சி நடந்துக்கோ. இதை தான் பெரியவங்க சொல்ல சங்கட பட்டாங்க நான் சொல்லிட்டேன். இனி நீயாவது உன் புருஷனாவது எப்படியாவது அவனை சமாளிச்சு நடந்துக்கோ. சரி வா எங்க புது பொண்டாட்டியை காணோம் என்று எங்க அண்ணன் தேடி வரப்போறான்.. ” என்று கூறிவிட்டு தாயையும் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டாள்.
போகும் வழியில் சித்ரா கேட்டதும் ” நீ சொன்னதை விட எக்ஸ்ட்ரா ஐந்து பிட்டு சேர்த்து போட்டு நல்லா அவளை குழம்பி வச்சிட்டு வந்து இருக்கேன் மா. நீ கவலை படாத இனி நடக்காப்போறதை நாம வேடிக்கை பார்ப்போம்.. உங்க அம்மா சொன்னாங்கனு சொன்னேன். பாரு அப்புறம் அவ மறு பேச்சு பேசாம அமைதியா சரினு தலை ஆட்டிட்டா. இனி இதனால் அவங்க இரண்டு பேருக்கும் இடையில் தினமும் பிரச்சினை வரும். என் அண்ணன பத்தி எனக்கு நல்லாவே தெரியும். உமா எதாவது சின்னதா வாயை திறந்து அவனுக்கு எதிர்த்து பேசினாலே அவளுக்கு அடி கன்ஃபார்ம். அப்படி இருக்கும்போது இதால பிரச்சனை வந்து அது நமக்கு சாதகமாக முடிஞ்சா நமக்கு ரொம்ப சந்தோஷம். இனி நம்ம நினைச்ச காரியம் நடக்கும் நீ யோசிக்க வேண்டாம். அவள் என்ன காரணத்தை வேண்டுமானாலும் சொல்லி அவனை சமாளிச்சு வைத்து கொள்ளட்டும். நம்ம கடமையை சிறப்பாக செய்து அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டோம் இனி அவங்க பாடு.” என்று சிரித்து பேசிக்கொண்டே அவர்களது வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள்.
நிஷாவின் கணவன் தனித்தொழில் செய்ய வேண்டும் எனும் பேச்சு முடிந்ததும் கடுகடு என்று நிஷாவை கூப்பிட்டு பயங்கரமாக திட்டி விட்டு உணவு வந்ததும் அவனுக்கு பிடித்த பீட்சா வரவழைத்திருந்ததால் அதை உண்டு விட்டு அங்கிருந்து வெளியேறி விட்டான்.
உமா அவர்களை அனுப்பிவிட்டு கேட் மற்றும் கதவை பூட்டிவிட்டு சமையல் அறைக்கு செல்லவும் பெட்ரூமில் இருந்து மகேஷ் மாதவி என்று அழைக்கவும் சரியாக இருந்தது.
‘அச்சோ அத்தான் கூப்பிட்டாரு. சூடு பண்ணின பால் ஆறிப்போயிருக்கும். திரும்ப சூடு பண்ணி பால் எடுத்துட்டு போறதுக்கு நேரம் போனா திட்டு விழும்.´ என்று யோசித்தபடி ஒரு நிமிடம் நின்றவள் மீண்டும் “மாதவி ” என்று அவனது சத்தம் கேட்கவும் அங்கிருந்து அவரகளது அரைக்கு சென்றாள் உமா.
அவளோ அவனிடம் இதை எவ்வாறு சொல்வது என்று தயங்கியபடி நின்றாள்.
அதைப் பார்த்த மகேஷ் “ என்ன மாதவி ஏதோ என்கிட்ட சொல்லணும்னு நினைக்கிற. எப்படி சொல்றதுன்னு தெரியாம உனக்குள்ள தவிக்கிற. என் தங்கச்சி அப்படி உன்கிட்ட என்னதான் சொல்லிட்டு போனா. நானே கேட்டுட்டேன் என்னன்னு சொல்லு. ” என்றான் மகேஷ்.
“ அண்ணி உங்களை நல்லா பார்த்துக்க சொன்னாங்க அத்தான். உங்ககிட்ட சண்டை போட வேண்டாமாம் ரெண்டு பேரையும் சந்தோசமா இருக்க சொன்னாங்க. அப்புறம் நீங்க கோவப்பட்டாலும் என்ன பொறுமையா அனுசரிச்சு போக சொன்னாங்க. வேற ஒன்னும் இல்லை அத்தான் ” என்றாள் உமா.
“ ஹா ஹா ஹா ” என்று வயிற்றை படித்துக் கொண்டு உமா சொல்லிய கதையைக் கேட்டு சிரித்தான் மகேஷ்.
“ பேஸ் பேஸ் உனக்கும் பொய் சொல்ல வருமா மாதவி?. பொய் களவு இந்த மாதிரி பழக்கம் எல்லாம் அத்தை உனக்கு சொல்லிக் கொடுத்திருக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன். என் தங்கச்சி அப்படி சொன்னான்னு சொன்ன பாத்தியா எனக்கு சிரிப்பு தாங்க முடியல. உண்மை என்னன்னு நீ இப்ப சொல்லாட்டியும் எனக்கா தெரிய வரும்போது அன்னைக்கு உனக்கு இருக்கு கச்சேரி. சரி டைம் ஆயிடுச்சு. பாதம் போட்டு பால் சுண்ட காய்ச்சி எடுத்துட்டு வர சொன்னேன் எங்க. ” என்று கோபத்துடன் கேட்டான்.
அவனுக்கு வீட்டிலும் சரி ஆபீஸ்லயும் சரி சொன்ன வேலையை உடனே செய்து முடிக்க வேண்டும். இல்லை என்றால் அவர்கள் யார் எவர் என்று பார்க்காமல் செந்தமிழில் திட்டு விழும்.
இன்று முதல் நாள் புது மனைவி ஆரம்பத்திலேயே அவனைப் பார்த்து பயந்து போய் இருக்கிறாள் என்பதை உணர்ந்து அமைதியாக பாலை எடுத்து வரும் படி கூறினான்.
அவன் சொன்னதும் விட்டால் போதும் என்று வேக வேகமாக அங்கிருந்த சமையல் அறைக்கு சென்று மீண்டும் அதே பாலை சூடு பண்ணி எடுத்து வந்து அவனிடம் கொடுத்தாள்.
சூடு ரொம்ப அதிகம் இருந்ததால் அதை அருகே இருந்த மேசையில் வைத்துவிட்டு அவளது கையை பற்றி அவனுக்கு அருகே அமர வைத்தான்.
என்ன சொல்லி இன்றைய நாளை கடத்துவது என்று சிந்தித்துக் கொண்டிருந்த அவளுக்கு ஓர் அரிய வாய்ப்பு கிடைத்தது.
அவனே கேட்டான். “ மாதவி இந்த மாதம் உனக்கு பீரியட் வந்திடுச்சா? ஏன் கேக்குறேன்னு சொன்னால் கல்யாணத்துக்கு அது எல்லாம் பொண்ணு கிட்ட விசாரிச்சு தான் நாள் குறிப்பாங்க. ஒன்னு கல்யாண பொண்ணு கோவிலுக்கு வரணும் கோவில் வைத்து கல்யாணம் நடக்கணும் இந்த ஒரு காரணம். அடுத்து கல்யாணம் முடிஞ்சு ஃபர்ஸ்ட் நைட் நடக்கும்போது பொண்ணுக்கு பீரியட் முடிஞ்சு எத்தனையோ நாள் கடந்தால் கணவன் மனைவி முதல் தாம்பத்திய உறவு வைத்ததும் குழந்தை உண்டாயிடும். எனக்கு இந்த கலர் கலர் பலூன் போட்டு எல்லாம் உறவு வைத்துக்கொள்ள விரும்பமில்லை. அதை முழுத அனுபவிக்கணும். ஏன் இதெல்லாம் கேட்கிறேன். என்று நீ நினைக்கலாம். நமக்கு ஒரு வருஷத்துக்கு குழந்தை வேண்டாம் மாதவி. உங்க அப்பாகிட்ட நான் ஆல்ரெடி ஐந்து வருஷம் டைம் கேட்டேன். ஆனா அவர் நாலு வருஷம் தான் டைம் தந்தார். நானும் சரி நாலு வருஷம் முடிய கல்யாணம் பண்ணிட்டு நான் கேட்ட ஐந்து வருஷம் முடிய இருக்கிற அந்த ஒரு வருஷத்துக்குள்ள வீட்டு வேலையை முழுவதும் முடிச்சிடலாம் என்று நம்பி தான் கல்யாணத்துக்கு சம்மதித்தேன். இப்ப கல்யாணம் கட்டிட்டு ஒரு வருஷம் வரை உன்னோடு தாம்பத்தியம் வைத்துக் கொள்ளாமல் அழகு பொண்டாட்டியை வீட்டில் வைத்துக்கொள்ளும் அளவுக்கு எல்லாம் நான் நல்லவன் இல்லை மாதவி. அதுவே இந்த மாதம் உனக்கு பீரியட் வந்து ரொம்ப நாள் ஆயிடுச்சுன்னு சொன்னா நம்ம இப்ப ஒன்னு சேரும் பொழுது உடனே குழந்தை உண்டாகிடாது. டாக்டர் ஃப்ரெண்ட் ஒருத்தன்கிட்ட கேட்டு நான் தெரிஞ்சுகிட்டேன். குழந்தை வராமல் தடுக்க மருத்துவ ரீதியா ஊசி, மாத்திரை இப்படி நிறைய வழிகள் இருக்கு. அதை இப்ப பாவித்து நாளைக்கு அதுவே ஏதாவது பிரச்சனையாகி நமக்கு குழந்தை உண்டாகாமல் போகவும் வாய்ப்பு இருக்கு. அதை நினைத்து கொஞ்சம் பயம் மனதில் இருக்கு. அதுதான் இயற்கை வழியிலேயே ஏதாவது முயற்சி செய்வோம் என்று உன்னிடம் கேட்டேன். ” என்று அவளிடம் கேட்டபடி அவள் கூறும் பதிலை எதிர்பார்த்து காத்திருந்தான்.
” அத்தான் நானே உங்ககிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியாம தவிச்சிட்டு இருந்தேன். எனக்கு இன்னைக்கு இப்பதான் அத்தான் பீரியட் வந்துடுச்சு.. அது பண்ண முடியாது.” என்று ஒருவாறு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கிடைத்த சந்தர்ப்பத்தில் கூறி முடித்து விட்டாள்.
“ என்ன மாதவி சொல்லுற?. இது எப்படி சாத்தியமாகும். அத்தை இந்த விஷயத்துல எல்லாம் ரொம்ப கவனமா இருப்பாங்களே. உனக்கு இந்த மாதம் பீரியட் வராமல் எப்படி அத்தை கல்யாணத்துக்கு நாள் குறிச்சாங்க. ஏய் மாதவி உண்மையைச் சொல்லு பயத்துல பொய் சொல்றியா என்ன?.” என்றான்.
“ இல்ல அத்தான் உண்மைதான். சில மாதங்களில் எனக்கு முந்தி பிந்தி வரும். இப்ப கல்யாண டென்ஷனால் லேட் ஆயிடுச்சு. இது அம்மாவுக்கும் தெரியும். இன்னைக்கு ரொம்ப நேரம் நின்றது தானே. அதனால இப்ப மாலை நேரத்துல வந்துட்டு. ” என்று திருமண பண்ணி வாழ்க்கையின் ஆரம்ப நாள் அன்றே பொய் மேல் பொய் கூறினாள் உமா.
உமா இவ்வளவு பொய் சொல்வது மட்டும் கமலாவுக்கு தெரிந்தால் தோலை உரித்து விடுவார்.
“ எனக்கு எதோ சரியா படல. வீட்ல அம்மா சமைத்து தரது சாப்பிட்டுட்டு அப்பா உழைப்பில் சொகுசா வாழும் உனக்கு எல்லாம் என்ன டென்ஷன் இருக்க போகுதோ எனக்கு தெரியாது. இந்த பால் எடுத்துக் கொண்டு போய் வெளில இருக்க நாய்க்கு ஊத்திட்டு. வந்து சாவகாசமா இந்த புது கட்டில் மெத்தையில படுத்து உறங்கு. நான் வெளிய சோபால படுத்துகிறேன்.. பார்ப்போம் எத்தனை நாளைக்கு என்று.” என்ன நினைத்து இப்படி கூறிவிட்டு சென்றானோ தெரியவில்லை.
அது உமாவுக்கும் புரியாமல் அவளும் “ அப்பாடா இன்னைக்கு தப்பிச்சாச்சு. அம்மா நாள் குறித்து தரும் வரைக்கும் எப்படி நான் இதை சமாளிக்க போறேன்னு தெரியல இன்னைக்கு ஒரு நாளைக்கே உடம்பு நடுங்குது.. கடவுளே கூடிய சீக்கிரம் இதிலிருந்து நீதான் என்னை காப்பாத்தணும். ” என்று இறைவனிடம் ஓர் அவசர வேண்டுதலை வைத்துவிட்டு அவன் வாங்கி தந்த உடையில் இருந்த புது நைட்டியை எடுத்து கொண்டு குளியல் அறைக்கு சென்று குளித்துவிட்டு வந்து படுத்து உறங்கி விட்டாள்.
சித்ரா அண்ணன் மற்றும் மகனிடம் உதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக அன்பான தங்கை நாத்தனார் அம்மாவாகவே இதுவரை காலமும் இருந்து வந்தார். இந்த திருமணத்தில் தான் நிசாவின் போதனையால் புதிதாக இப்படி மாமியாராக மாறியதால் அதை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் நிஷாவின் குணம் சிலவற்றை உமா மற்றும் கமலா பழனிச்சாமி என அனைவரும் அறிந்திருந்தார்கள்.
நிஷா வந்து இன்று இதை கூறுகிறாள் என்றால் அதில் ஏதோ இருக்கிறது என்று இந்த முட்டாள் உமா புரிந்து கொள்ளாமல் பொய் மேல் பொய் கூறி முதல் நாளே அவனது கோபத்திற்கு ஆளாகி விட்டாள்.
இறைவன் கொடுத்த அறிவு மற்றும் புத்தியை வைத்து அவளை சுற்றி பின்னப்படும் சூழ்ச்சி வலையை பற்றி அவள் உணர்ந்து கொள்ளாமல் மடந்தையாக இருந்ததால் இறைவனும் அவளது வேண்டுதலுக்கு செவி சாய்க்காமல் விட்டுவிட்டார்.
மகேஷ்க்கோ மனம் சற்றும் ஆறவில்லை. அவன் தனியாக உழைக்க ஆரம்பித்து இப்பொழுது நடத்தப்படும் பினான்சியல் பிசினஸ் வரை தோல்வி என்பதை கண்டறியாதவன். அதுவும் திருமணம் ஆன அன்றே குடும்ப வாழ்க்கையில் முதல் தோல்வியை அறிந்து தோல்வி என்றால் இப்படித்தான் இருக்கும் என்பதை தெளிவாக புரிந்து கொண்டான்.
ஒரு பெண் அவளுக்கு பீரியட் என்று கூறும் பொழுது நான் நம்பவில்லை அதை பார்க்க வேண்டும் என்று கேட்கவா முடியும்.
இவ்வாறு அவன் தோல்வியை சந்திப்பதற்கு யார் காரணம் என்று தெரியாமல் யார் மீது கோபப்படுவது என்று தெரியாமல் சோபாவில் படுத்து கண்களை மூடிக்கொண்டான்.