அவனும் தச்சு பட்டறை ஆரம்பிப்பதற்கான அவர்களது இடத்தில் அனைத்து வேலைகளையும் செய்ய ஆரம்பித்து விட்டான்.
நாட்கள் யாருக்கும் காத்திருக்காமல் வேகமாக சென்று மேலும் ஆறு மாதம் முடிவடைந்துவிட்டது.
செல்லம்மாவை அந்த வீடே கதி என்னும் நிலைக்கு ஆளாக்கி விட்டான் நிர்மல்.
மதியும் செல்லம்மாகவும் இருக்கும்போது வீட்டு வேலைகள் அனைத்தையும் இருவரும் பிரித்து செய்வார்கள்.
இப்பொழுது பேச்சியின் இறப்பிற்கு பின் வயது முதிர்வினால் ராதா மனதளவிலும் உடலளவிலும் மிகவும் சோர்ந்து விட்டார்.
அவரை எந்த வேலையும் சொல்லாமல் அனைத்து வேலைகளும் தனியாகவே செல்லம்மா செய்து சமையலையும் முடித்துவிட்டு அந்த வீட்டு வேலை செய்வதற்காக பிறப்பெடுத்தவள் போல் ஆகிவிட்டாள்.
அதோ இதோ என்று செல்லம்மாவின் தலையில் இடிவிழும் அந்த நாளும் வந்தது.
லதாவின் தோழியின் மகன். முப்பத்தி ஐந்து வயது. திருமணம் செய்து இரண்டு பெண் குழந்தைகள் மனைவி விபத்தில் இறந்துவிட்டாள். மூன்று வருடங்கள் ஆன பின் தோழிக்கும் 55 வயது கடந்ததால் குழந்தைகளையும் பார்த்துக் கொண்டு வீட்டு வேலைகளையும் செய்வதற்கு அவரால் முடியவில்லை என்பதால் அவனை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார்.
லதாவின் தோழி இதை ஒரு முறை லதாவிடம் கோவிலில் வைத்து மன வருத்தமாக கூறினார். பெண்ணும் இரண்டாம் தரமாக இருந்தாலும் பரவாயில்லை. எந்த விதமான சீதனமும் தேவையில்லை. கல்யாணம் முடித்து கட்டிய சேலையுடன் வந்தால் போதும் என்று பெண் தேடினார்கள்.
இதை தெரிந்துகொண்ட லதா செல்லம்மாவை அவனுக்கு கட்டி வைக்க முடிவெடுத்தாள்.
இதை நிர்மலிடம் கூறி வீட்டில் பேசி செல்லம்மாவை திருமணத்திற்கு சம்மதிக்க வைக்குமாறு கேட்டுக் கொண்டாள்.
அன்று ஒரு நாள் மாலை நேரம் சீக்கிரமாக வேலையை முடித்துக் கொண்டு நிர்மல் வீட்டுக்கு வந்தான்.
அவன் வந்த போது மூவரும் வீட்டில் தான் இருந்தார்கள்.
அவன் வந்தது அறிந்து செல்லம்மா மாலை நேரம் அவனுக்கு காபி எடுத்துக் கொண்டு வந்து அவனிடம் கொடுத்துவிட்டு அவளது அறைக்குள் சென்று விட்டாள்.
போனவளை தடுத்தான் “நில்லு செல்லம்மா உன் கல்யாணத்தை பத்தி தான் பேசணும்.” என்றான்.
“ இல்லை தம்பி நான் தெரியாமத்தான் கேட்கிறேன் நீ பெரிய ஆளா எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிற அளவுக்கு. இப்பதான் எனக்கு 19 வயசு இன்னும் ரெண்டு வருஷம் போனதும் நான் கல்யாணம் பண்ணிக்கொள்வேன். இப்ப எனக்கு கல்யாணத்துக்கு எந்த அவசரமும் இல்லை. இப்பவே சொல்லிட்டேன். என் கல்யாண பேச்சை யாரும் எடுக்க வேணாம். முதல் நீ எனக்கு தம்பி தான் அதை மறந்து பெரிய ஆள் மாதிரி என்னை அதிகாரம் பண்ணுற வேலை வச்சிக்காத சரியா ” என்று கூறிவிட்டு அவள் சென்றாள்.
அவளின் இந்த பேச்சை சற்றும் நிர்மல் எதிர்பார்க்கவில்லை.
கோவத்தில் பட்டென்று அவளது அறை கதவை திறந்து கொண்டு அறைக்குள்ளே சென்றான்.
“ இங்க பாரு செல்லம்மா நீ பணக்காரியோ அல்லது அழகு சுந்தரியோ இல்லை. மாப்பிள்ளை வந்து நான் நீ ன்னு போட்டி போட்டுட்டு வரிசையில் வந்து நிற்க்க. நமக்கு நல்லது எடுத்து செய்யறதுக்கு பெரியவங்களும் அம்மா அப்பாவும் யாருமில்லை. பாட்டியும் சித்தப்பாவும் நமக்கு கல்யாணம் செய்து வைக்கும் நிலைமையில் இல்லை. அத்தை உனக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்து இருக்காங்க சீதனம் எதுவும் தேவையில்லையாம் கல்யாணம் மட்டும் பண்ணிக்கிட்டா போதும். நீ யோசித்து எனக்கு நாளைக்கு பதில் சொல்லு.” என்று கூறிவிட்டு அவரது அறையை விட்டு வெளியேறி ராதா தெய்வா இருவரும் இருக்கும் இடம் சென்றான்.
“ பாட்டி சித்தப்பா இரண்டு பேரும் நான் சொல்வதை கவனமாக கேளுங்க. அத்தை செல்லம்மாக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்து இருக்காங்க. மாப்பிள்ளைக்கு செல்லம்மா ரெண்டாம் தாரம்தான்.. செல்லம்மாவை சீதனம் ஏதும் இல்லாமல் கல்யாணம் கட்டி நல்லபடியா பார்த்துக் கொள்வார்கள். மற்றது அத்தை என்னிடம் நிறைய விஷயம் சொன்னாங்க. இன்னும் மூணு வருஷம் கழிச்சு எனக்கும் கோபிக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு சொல்லி இருக்காங்க. அதனால மதிக்கும் செல்லம்மாவுக்கும் நான் எந்தவிதமான சொத்தும் கொடுக்க போறதில்லை. மதி அவளோட நகையை எடுத்துட்டு போயிட்டா. அதே மாதிரி செல்லம்மாக்கு இருக்கும் ஐந்து சவரன் நகை மட்டும் கொடுத்து கல்யாணம் பண்ணி வைக்க போறோம். நானும் அத்தையும் எடுத்த முடிவு இது. இந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை. இதை எதிர்த்து அவளுக்கு ஆதரவா நீங்க இருந்தீங்கன்னா. இங்கிருந்து அனாதை இல்லங்களுக்கு போயிருங்க. உங்க கடைசி காலத்துல உங்களுக்கு நான் தான் கொல்லி போடணும். என்னை விட்டால் வேறு யாரும் இல்லை. அதை மனசுல வச்சுட்டு முடிவெடுங்க. செல்லம்மாவுக்கும் அவனுக்கும் கல்யாணம் நடந்தே ஆகணும். ” என்று சற்றும் மனசாட்சி இல்லாமல் தாயிக்கு தாயாக தந்தைக்கு தந்தையாக உயிராக வளர்த்தவர்களை அனாதை இல்லத்திற்கு அனுப்பி விடுவேன் என்ற கல்நெஞ்சமாக பேசி விட்டு என்றான்..
அனைத்தையும் உயிரோடு இருந்து பார்க்காமல் பேச்சி இறந்ததே மேல்.
நிர்மல் அடுத்த நாள் செல்லம்மாவிடம் கேட்ட போது அப்பொழுதும் அவள் முடியாது என்று கூறவும். “ ஏய் இங்க பாருடி எனக்கும் பொறுமை ஒரு அளவுக்கு தான் இருக்கு. அக்கானு பார்க்க மாட்டேன் அடிச்சு சாவடிச்சிடுவேன். நீ உன் புருஷன் கிட்ட போய் சொகுசவால நான் கஷ்டப்படணுமா?. அவன் தான் எந்த சீதனமும் வேணாம் நான் கட்டிக்கிறேன்னு முன் வந்திருக்கிறான். இரண்டாம் தாரமா இருந்தாலும் அவன் உன்னை நல்லபடியா பார்த்துக் கொள்வான். உனக்கு அங்க ரெண்டு பெண் குழந்தைகளும் கிடைப்பாங்க. உனக்கு சீரும் சிறப்புமாக கல்யாணம் பண்ணி வைக்க எனக்கிட்ட போதிய அளவு பணம் இப்ப இல்லை. இன்னும் பத்து நாள்ல கோவில்ல ரொம்ப சிம்பிளா கல்யாணம் இருக்கு. மாப்பிள்ளை வீட்டிலயும் இரண்டாம் தாரம் தானே கோவிலில் வைத்து சிம்பிளா கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்லிட்டாங்க. அதுவே ஃபைனல் ஆகிட்டு. அத்தைகிட்ட பத்தாயிரம் ரூபா பணம் கொடுத்திருக்கிறேன் உனக்கு புடவை தேவையான மற்ற பொருள் எல்லாம் அத்தையும் கோபியும் வாங்கி தருவாங்க. எதைப் பற்றியும் யோசிக்காமல் கல்யாணத்துக்கு தயாராகு. ” என்று கூறிவிட்டு என்ன நினைத்தானோ அவளது அறையில் இருக்கும் பீரோவை திறந்து அங்கிருந்த அவளின் 5 சவரன் நகையையும் எடுத்துக்கொண்டு அவளை பார்த்து “ இது இப்போதைக்கு என்கிட்ட இருக்கட்டும். கல்யாணம் முடிச்சு அவன் தாலி உன் கழுத்துல கட்டினதும் நகையை அப்ப தருவேன். ” என்று கூறிவிட்டு நகையை எடுத்துக் கொண்டு சென்று விட்டான்.
அன்றிலிருந்து செல்லம்மா முள்ளின் மேல் இருப்பது போன்று தவித்துக் கொண்டிருந்தாள்.
வழமை போன்று பகலெல்லாம் வேலை செய்வாள். இரவில் அடித்துப் போட்டது போன்று தூங்கி விடுவாள்.
இந்த திருமண பேச்சு ஆரம்பித்ததில் இருந்து இரவில் எப்படி தூங்குகிறாள் என்று அவளுக்கே தெரியாத புதிராக இருந்தது.
மனதெல்லாம் மிகவும் கவலையாகவும் பாரமாகவும் இருக்கும் அவளுக்கு எப்படி தூக்கம் வந்தது என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
இதை எவ்வாறு தெரிந்து கொள்வது என்று நினைத்து அங்கிருப்பவர்களுக்கு தூங்குவதற்கு முன் அவள் தான் பால் காச்சி கொடுப்பாள்.
கொடுத்துவிட்டு அவளின் பாலையும் அவள் குடித்துவிட்டு அனைத்து வேலைகளை முடித்துக் கொண்டு தூங்கச் செல்வாள்.
ஆனால் தற்பொழுது இந்த வேலைகள் எதுவும் செய்ய முடியாமல் பால் குடித்ததும் தூக்கம் கண்ணை சொக்கவும் வேலைகளை அப்படியே வைத்து விட்டு போய் படுத்து விடுவாள்.
திருமணத்திற்கு இரண்டு நாள் முன் அன்று இரவு என்ன நடக்கிறது என்று கவனிப்பதற்காக அன்றும் ராதா பாட்டி தெய்வா இருவருக்கும் பால் கொடுத்துவிட்டு. நிர்மல் அறைக்கு பால் எடுத்துச் சென்றாள். அவன் பாலை வாங்கி மேசையில் வைத்து விட்டு. வேலையாக இருந்தான்.
அவள் பாலை சூடு ஆறுவதற்காக சமையல் கட்டில் வைத்து விட்டு பாத்ரூம் சென்று விட்டாள்.
அவள் அன்றும் வெளியே சென்றதைப் பார்த்துவிட்டு எழுந்து வந்த நிர்மல் அவளது பாலில் தூக்க மாத்திரை கலந்து விட்டு சத்தமில்லாமல் அறைக்குள் சென்று விட்டான்.
இதை ஜன்னல் வழியாக பார்த்த செல்லம்மா திகைத்து விட்டாள்.
உள்ளே வந்து கதவை அடைத்து விட்டு பாலை எடுத்துக்கொண்டு அவளது அறைக்குள் செல்லும் வரை கதவின் ஓரம் நின்று நிர்மல் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனது கைபேசியை எடுத்து “ அத்தை இன்னைக்கும் செல்லம்மாக்கு சந்தேகம் வரலை. பாலை எடுத்துட்டு அறைக்கு போய்விட்டாள். அவளை தினமும் காவலுக்கு ஆள் வைத்து கட்டி போட்டு பார்த்துக் கொள்ள முடியாது. பாட்டி சித்தப்பாவும் சம்மதிக்கவே மாட்டாங்க. அப்புறம் அது நமக்கு தொல்லையா வந்து சேரும். பகல் நேரங்களில் பெருசா ஓடி போக முயற்சி செய்ய மாட்டாள். கல்யாணம் பிடிக்கலைன்னு சொல்லி இரவில் ஓடிப் போக கூடாதுன்னு தான் பாலில் ரெண்டு தூக்க மத்திரை போட்டு கொடுக்க சொன்னிங்க. அந்த பாலை குடிச்சிட்டு அசந்து தூங்கி நல்லா விடிஞ்சதுக்கு பிறகு தாமதமா தானே எழுந்துகொள்வாள். நீங்க சொன்ன ஐடியா இவ்வளவு நாளும் நல்லா வேலை செய்யுது சரி நாளைக்கு அவளுக்கு பால் கொடுத்து தூங்க வச்சுட்டா அடுத்த நாள் காலையில கல்யாணம் பண்ணி கொடுத்து அவளையும் தள்ளி விட்டுட்டா நம்ம நிம்மதியா இருக்கலாம்.. ” என்று லதா விடம் பேசி விட்டு கைப்பேசியை வைத்தான்.
இதைக் கேட்ட செல்லம்மா அவள் தம்பியா இது என்று நம்ப முடியாமல் அதிர்ந்து போய் இருந்தாள்.
ஒரு நிமிடம் அவளது கண்முன்னே அவர்களின் சிறு வயது அனைத்தும் ஞாபகம் வந்தது. கஷ்டத்திலும் எவ்வளவு அன்பாக ஆதரவாக விட்டுக் கொடுத்து சந்தோஷமாக சிறு வயதை கொண்டாடி வாழ்ந்தார்கள். அவளுக்கோ மதிக்கோ சிறு காய்ச்சல் தலைவலி என்றால் நிர்மல் அழுது புலம்பி தவித்து விடுவான். ஆனால் அப்படிப்பட்ட தம்பி இன்று மனசாட்சியை ஒரு பெண்ணிற்காகவும் பணத்துக்காவும் அடகு வைத்துவிட்டு அக்காவுக்கு வில்லனாக மாறிவிட்டான்.
இவ்வளவு தெரிந்த பின்னும் அந்தப் பாலை இன்றும் குடிப்பாளா என்ன?. அறை ஜன்னலை திறந்து பாலை வெளியே கொட்டி விட்டு. அசந்து தூங்குவது போன்று கண்ணை இருக்க மூடிக் கொண்டாள்.
அக்காவாக இருந்தாலும் ஒரு பெண்ணின் அறையை இரவில் திறக்கிறோமே என்ற எந்த உறுத்தலும் இல்லாமல் ஒரு மணி நேரம் கழித்து அறை கதவை திறந்து எட்டி பார்த்தான். சீராக மூச்சு விட்டு செல்லம்மா அயர்ந்து தூங்குவதுபோன்று கண்முடி படுத்து இருந்தாள்.
அதைப் பார்த்தவன் செல்லம்மா உறங்கி விட்டாள் என்பதை உறுதிப்படுத்தி விட்டு அவனது அறைக்கு சென்று அவனும் உறங்கி விட்டான்.
அடுத்த நாள் காலையில் எழுந்து வழமையாக செல்லம்மா செய்யும் வேலைகளை அவள் செய்யவும் யாருக்கும் எவ்வித சந்தேகமும் வரவில்லை.
இதுதான் வாழ்க்கை என்று செல்லம்மா ஏற்றுக்கொண்டு விட்டாள் என்று நினைத்து விட்டார்கள்.
ராதா செல்லம்மாவை தூக்கி வளர்த்தவர். அதனால் அவருக்கும் தெய்வாவுக்கும் இந்த திருமணத்தில் துளியும் விருப்பமில்லை.
அவர்களின் நிலை அப்படி. வேறு போக்கிடமும் இல்லாதால் நிர்மலையும் எதிர்த்துக் கொள்ள முடியாது.
நிர்மல் வீட்டில் இல்லாத மாலை நேரம் பார்த்து இன்னும் சற்று நேரத்தில் லதாவும் அவரது குடும்பமும் இங்கே வர இருப்பதால். அதற்கு முன்பாக செல்லம்மாவை அழைத்து அவரிடமும் தெய்வாவிடமும் இருந்த சொற்ப பணத்தை அவளின் கையில் கொடுத்து இங்கிருந்து சென்று விடுமாறு கூறினார்கள்.
அவளுக்கு அவர்களை நினைத்து கவலையாக இருந்தது அவர்களை தனியே அவனிடம் விட்டுச் செல்வது விருப்பமில்லை.
என்ன செய்வது என்று அவள் கேட்கவும் “ அவனுக்கு இந்த சொத்து அனைத்தும் தேவை. அதனால் எங்கள் இருவரின் கையெழுத்தும் தேவை. பேச்சி அக்காவின் இடத்திலிருந்து இந்த வீட்டின் பெரியவர்கள் நாங்க தான் அவனுக்கு அந்த சொத்தை எழுதிக் கொடுக்க முடியும். அதனாலும் ஊரில் அவர்களைப் பார்ப்பதாக அவன் கூறிய அந்த வார்த்தைக்காகவும் கட்டாயம் எங்களை எதுவும் செய்யாமல் பார்த்துக் கொள்வான்.. அதனால் எங்களை பற்றி கவலைப்படாமல் நீ இங்கிருந்து சென்று விடு.. ” என்று ராதா அவளிடம் கூறினார்.
அவளும் அவர்களின் பேச்சை கேட்டு இருவரிடமும் ஆசிர்வாதம் வாங்கிவிட்டு கோயிலுக்கு செல்வதாக கூறிவிட்டு எதையும் எடுத்துக் கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேறி விட்டாள்.
லதா குடும்பத்துடன் தூரத்தில் வருவதை பார்த்தவள் அவர்கள் இவளை பார்க்கும் முன்பு பின்வாசல் வழியாக வெளியேறி விட்டாள்.
இதனால்தான் அவள் வீட்டை விட்டு வெளியேறி அங்கிருந்து வந்தவள் இங்கு சோழனிடம் மாட்டிக் கொண்டாள்.
அவளின் கடந்த காலத்தை நினைத்துக் கொண்டிருந்தவள் நேரம் போனது தெரியாமல் அப்படியே கற்சிலை போன்று அமர்ந்திருந்தாள்.
சோழன் சொன்ன நேரம் அதிகாலை ரெண்டு மணியும் ஆகிவிட்டது.
கைபேசியில் அலாரம் அடிக்கவும் முதல் சத்தத்திலேயே சோழன் கைபேசியை எடுத்து சத்தத்தை நிறுத்தி விட்டு எழுந்து செல்லம்மாவின் அறை கதவை தட்டினான்.
பத்து நிமிடமாக செல்லம்மாவின் அறை கதவை ஓங்கி தட்டவும் தான் அவள் சிந்தனையில் இருந்து கலைந்து எழுந்து வந்து கதவை திறந்தாள்.
“ ஏண்டி உனக்கு கொஞ்சமும் அறிவே இல்லையா?. வயசானவங்க படுத்து அசந்து உறங்குறாங்க. அவங்களை எழுப்ப வேண்டாம் என்று தான் நானே அலாரம் சத்தத்தை உடனே நிறுத்திட்டேன். எவ்வளவு நேரமா கதவை தட்டுறேன். கொஞ்சமும் பொறுப்பில்லாமல் எப்படி இன்னைக்கு திருமணம் என்று நான் சொல்லியும் உன்னால தூங்க முடியுது. சரி விடு நீயெல்லாம் என்ன பொண்ணோ எனக்கு தெரியலை. நமக்கு அதிக நேரம் இல்லை. இன்னும் அரை மணி நேரத்துல நீ தயாராகி வரணும்.. ” என்று கூறி விட்டு அவனும் குளித்து தயராக கிளம்பினான்.
அவர்கள் முடிவெடுத்தது போன்று இருவரும் தயாராகி அவன் நேற்று அவனுக்கு என முதல் முதலில் புதிதாக வாங்கிய பைக்கில் இருவரும் அந்த கோயிலை நோக்கி சென்றார்கள்.
அரை மணி நேரத்தில் பயணம் முடிவடைந்தது.
சோழனுக்கு சொன்னது போன்றே சாமி அனைத்தையும் தயார் செய்து வைத்து அங்கே காத்திருந்தார்.
தாயும் பாட்டியும் இருந்தும் அவர்களை அழைத்து வர முடியாததால் இருவரும் யாரும் இல்லாமல் கந்தசாமி மந்திரங்கள் ஓத கோவிலில் அமைதியான முறையில் இருவருக்கும் இனிதே பிரம்ம முகூர்த்த நேரத்தில் திருமணம் நடந்து முடிந்தது.
அதன் பின் சாமி கேட்டபடி அவனுக்கும் அவருக்கும் அவன் வாங்கிய கைபேசியை அவரிடம் கொடுத்து விட்டு. அவரிடம் ஆசீர்வாதம் வாங்கி கோவிலிலும் இறைவனை வணங்கி விட்டு. நன்கு வடிவதற்கு முன்பே மூவரும் அங்கிருந்து புறப்பட்டு விட்டார்கள்..
இதோ செல்லம்மாவுக்கு யார் என்று முன்பின் அறியாத சோழனோடு திருமணமும் நடந்து முடிந்து விட்டது.
இதுவே பேச்சி இருந்திருந்தால் செல்லமாக்கு இந்நிலை ஏற்பட்டு இருக்காது.
மதியும் மாமியாரின் மிரட்டலுக்கு பயந்து அங்கே சென்று மிகவும் துன்ப பட்டிருக்க மாட்டாள்.
தாய் தந்தை பிள்ளைகள் என்று முழுமை இல்லாத குடும்பமாக இருந்தாலும் தங்கை மகன் பேரப்பிள்ளைகள் என அனைவரையும் அவரே தூணாக நின்று கட்டி காப்பாற்றி வந்தார் அந்த குடும்பத்தை.
அவரின் மறைவிற்குப் பின் மதி ஒரு இடத்தில் செல்லம்மா ஓரிடத்தில் என்று பிரிந்தும் இங்கு வீட்டில் இருந்தாலும் சந்தோசம் நிம்மதியை இழந்து ராதாவும் தெய்வாவும் உயிர் உடலை விட்டு பிரியும் வரை வாழ்ந்தாக வேண்டும் எனும் கட்டாயத்தில் வாழ்கிறார்கள்.
குடும்பத்தில் பல உறவுகள் இருந்தாலும் அதில் ஒரு உறவே அந்த குடும்பத்தை தாங்கி நிற்கும்.
அப்படி தாங்கி நின்ற பேச்சியின் இறப்பிற்கு பின் அந்த குடும்பம் சிதைந்து விட்டது.
இதோ சோழன் செல்லம்மாவை திருமணம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்து விட்டான்.
இனி செல்லம்மாவின் வாழ்க்கை அவள் எதிர்பாராத திருப்பங்களுடன் செல்லும்.