சோழனை பகைத்துக் கொள்ள விரும்பாமல் எங்கே போய் விடப் போகிறான்.. அடுத்தடுத்து பார்த்துக் கொள்ளலாம் என்று தொழிலை பற்றி பேச ஆரம்பித்தான் மாணிக்கம்..
“ சோழா இன்னைக்கு உனக்கு வந்து இருக்கிற வேலை அந்த எதிர்க்கட்சி தலைவர் சண்முகத்தை நீ போட்டு தள்ளனும். ” என்றான்.
“ எப்படி ஐயா அந்த கிழவன்.” என்று சோழன் ஆரம்பித்த பேச்சை கையை நீட்டி தடுத்து விட்டு.
“ அந்தக் கிழவன் கந்தசாமியை போட்டு தள்ளி எரிச்ச மாதிரி இல்லை இது.. இதை கொஞ்சம் வித்தியாசமா பண்ணனும்.. எப்படி என்றால். ” என்று என்னென்ன செய்ய வேண்டும் என அனைத்தையும் விளக்கமாகவும் தெளிவாகவும் சோழன் கதிர் இருவருக்கும் கூறி முடித்துவிட்டு. போட்டோவை சோழனின் கையில் கொடுத்தான்.
அந்த போட்டோவை வாங்கி பார்த்து விட்டு சட்டை பையில் வைத்துவிட்டு எழுந்து நின்றான் சோழன்.
“ இந்த சண்முகத்தை நான் சொன்ன மாதிரி முடிச்சிட்டா நீ எதிர்பார்க்காத அளவுக்கு ஒரு லட்ச ரூபா பணம் நான் உனக்கு தரேன்.. எல்லா வேலைக்கும் ஐம்பதாயிரம் தான் தருவேன். இது கொஞ்சம் பெரிய இடம் விசேஷமா வேற சம்பவம் பண்ணனும் என்பதால் இந்த ஒரு லட்சம்.. ” என்று கூறி இருவரையும் அங்கிருந்து அனுப்பிவிட்டு ஆளுங்கட்சி தலைவருக்கு அழைத்து விஷயத்தை கூறினான் மாணிக்கம்..
என்னதான் எதிர்க்கட்சியின் முக்கிய உறுப்பினராக கந்தசாமி இருந்தாலும் அவரை பெரும்பாலான மக்களுக்கு தெரிந்திருக்கவில்லை..
எதிர்க்கட்சித் தலைவர் சண்முகம் அப்படி இல்லை.
கட்சியின் முக்கிய உறுப்பினர் மற்றும் தலைவர். அவரை சம்பவம் பண்ணுவது அவ்வளவு இலகுவான விஷயம் இல்லை..
சரியான நேரம் காலம் பார்த்து சரியான திட்டபடியே களத்தில் இறங்க வேண்டும்..
கொஞ்சம் ஏதாவது மிஸ்டேக் நடந்தால் சோழனின் எதிர்கால வாழ்க்கையை ஜெயிலுக்குள் தான் கழியும்..
அவரை கொலை செய்யாமல் கந்தசாமியிடம் ஒப்படைப்பான் அது வேறு விஷயம்..
ஆனால் சோழனின் திட்டம் எதுவென்று மாணிக்கம் அறியவில்லை.. அதனால் சண்முகத்தை கொலை செய்யும் பொழுது சோழன் மாட்டி விட்டால் அவரின் அடிமை கை விட்டு போய்விடுவானோ என்னும் பாயத்தால் அழகாக திட்டம் தீட்டி கொடுத்தான்..
வழமை போன்று பகல் நேரங்களில் வீட்டை காலி பண்ணுவது கடைகளை காலி பண்ணுவது போன்ற சில்லறை வேலைகளை முடித்துவிட்டு. சண்முகத்தின் கொலைக்கு இரவில்தான் நேரம் குறித்து இருந்தான்..
அடுத்து அடுத்து இரு முக்கிய உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் இறந்து போனால் கேள்வி வந்து நிறைய பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்பதை மாணிக்கம் சற்றும் உணர்ந்திருக்கவில்லை..
ஆளும் கட்சியினர் சொல்லுகிறார்கள் லட்சம் லட்சமாக பணம் வருகிறது அதனால் வரும் பிரச்சினைகளை அவர்கள் சமாளித்துக் கொள்வார்கள் என்னும் எண்ணத்தில் அவனும் களத்தில் இறங்கி விட்டான்..
கந்தசாமியின் இறப்பை பற்றி போலீஸ் தனி படை அமைத்து பேசுவது தொடர்பான விஷயங்களை ஆளும் கட்சி அமைச்சர் தடுத்து நிறுத்தினான்.
இந்த ஒரு கொலை முயற்சியால் மாணிக்கம் மற்றும் ஆளும் கட்சியினர் அனைவரும் கூண்டோடு ஜெயிலுக்குள் போவதை பற்றி அறியாமல் அதற்கான தீவிரமான வேலைகளில் ஈடுபட்டிருந்தார்கள்..
கந்தசாமியின் ஒரே திட்டம்.. தலைவர் சண்முகமும் இறந்ததாக மக்களை நம்ப வைத்து விட்டு அதற்கான ஆதாரத்தை திரட்டி தேர்தலின் கடைசி நேரத்தில் ஆதாரத்தை வெளியிட்டு அவர்களும் சாகவில்லை. உயிரோடுதான் இருக்கிறார்கள்.. என்பதை மக்களுக்கு தெரிவித்து விட்டால் பின் மக்கள் நல்லாட்சி விரும்பினால் அவர்களை தேர்ந்தெடுப்பார்கள் என்பதே அவரின் நம்பிக்கையான முடிவாகும்..
அதைத்தான் அவர் சோழனிடமும் கூறி அவர் திட்டப்படியே செய்யச் சொன்னார்..
நேரம் யாருக்கும் காத்திராமல் சண்முகத்திற்கு குறிக்கப்பட்ட நேரமும் வந்தது..
அன்று அவனுக்கு முதலிரவு நடக்க இருப்பதால் அதற்கு முன்பு இரவு உணவு உண்ணும் நேரத்தில் நேரம் குறித்தான்..
சண்முகம் அவரின் குடும்பத்தோடு இரவில் வீட்டுக்கு வெளியே இருந்த முற்றத்தில் பௌர்ணமியான இன்று நிலாச்சோறு உண்பதற்கு ஏற்பாடு செய்திருந்தார்..
நாள் முழுவதும் மாதங்கள் முழுவதும் மக்களுக்காக உழைக்கும் அவர் சில நேரங்களில் முக்கியமான நிகழ்வுகளில் கலந்து குடும்பத்தின் சந்தோஷத்தையும் மதித்து நடந்து கொள்வர்..
அவரின் தாய் தந்தை மனைவி இரண்டு பிள்ளைகள் அவரின் தம்பி அவரின் குடும்பம் என்று ஒரு கூட்டு குடும்பமாகவே அந்த பங்களாவில் வாழ்ந்து வருகிறார்கள்..
அனைவரும் பௌர்ணமி தினம் அன்று முழு நிலவின் வெளிச்சத்தில் குடும்பத்தோடு கூடியிருந்து மகிழ்ந்து பிடி சோறு உண்பது அவர்களின் நீண்ட நாள் பழக்கம்..
அதை மாணிக்கம் ஏற்கனவே அறிந்திருந்தான்..
அதனால் குடும்பத்தினர் அனைவரும் உண்டு முடித்து உள்ளே சென்றதும் அவர் தனியாக இருக்கும் நேரம் பார்த்து அவர் பின் சென்று பாலித்தீன் பையை அவரின் தலை வழியாக முகத்தில் போட்டு இருக்க பிடித்து அவரை மூச்சை நிறுத்தி கொலை செய்யும் படி கூறி இருந்தான்..
அவரையும் கொலை செய்து விட்டு தடயம் இல்லாமல் எரிக்கும் படி கூறியிருந்தான்..
கொலை செய்துவிட்டு அந்த நம்பரை எரித்தால் மட்டுமே எவ்வாறு கொலை செய்ய ஏற்பட்டார்?.. அவரின் உடலில் இருக்கும் கொலை செய்தவனின் கைரேகைகள் முதற்கொண்டு எதுவும் இலகுவில் கண்டுபிடிக்க முடியாது..
அதனால் மாணிக்கம் பெரும்பாலும் கொலை செய்தவர்களை ஏரிக்கும்படி சோழனிடம் கூறிவிட்டான்..
அது கந்தசாமி மற்றும் சண்முகத்தின் விஷயத்தில் சோழனுக்கு சாதகமாக அமைந்துவிட்டது..
இன்றும் கதிர் யாரும் வருகிறார்களா என்று பார்க்கும் அவனின் உத்தியோகத்தை சிறப்பாகவே செய்தான்..
குடும்பத்தினர் அனைவரும் உள்ளே சென்ற பின் உண்ட உணவு செரிப்பதற்காக தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தார்..
கதிரின் மேல் ஒரு கண் வைத்தபடி அப்பொழுது அவரின் அருகே வந்த சோழன்.
“ ஐயா.! என்றான்.
அவரை அழைக்கும் சத்தம் கேட்டு வேலையாலோ என்று திரும்பிய சண்முகத்தின் எதிரே சோழன் நின்றதை பார்த்து யார் எவர் என்று தெரியாமல் பயந்துவிட்டார்..
பயந்தவர் ஏதோ ஆபத்து என்று உணர்ந்து முதலில் சத்தம் போட வாய் திறக்கும் பொழுது.
சோழன் அவரின் காதில் போனை வைத்து கந்தசாமியிடம் பேசும் படி கூறினான்..
சண்முகத்திற்கு இன்று இருக்கும் காவலாளிகள் வீட்டுக்குள் குடும்பத்தோடு இருக்கும் பொழுது அருகில் நிற்க மாட்டார்கள்..
அடுத்து கேமராவில் பதியாமல் எவ்வாறு சண்முகத்தின் செல்ல வேண்டும் என்பதை சரியாக கந்தசாமி முன்பே கூறியிருந்தார்..
அதன்படி எதிலும் சிக்காமல் சோழன் வந்து சேர்ந்தான்..
“ பயப்படாதீங்க ஐயா.. நான் உங்களை எதுவும் பண்ண மாட்டேன்.. பேசுங்க சாமி ஐயா தான் பேசுறார்..” என்றான்.
அவருக்கு எதுவும் புரியவில்லை ஆனால் சாமி என்னும் பெயரைக் கேட்டு ஒருவேளை கந்தசாமியாக இருக்குமோ என்று நப்பாசையில் தான் பேச ஆரம்பித்தார்..
அப்பொழுதும் சிறு பயம் இருந்தது அவர்தான் நேற்று இறந்து விட்டாரே..! இவன் யார் என்று தெரியாமல் இவனை எவ்வாறு நம்புவது என்று பயத்துடனே தான் போனை வாங்கி காதில் வைத்தார்..
“ ஹலோ சண்முகம் நான்தான் கந்தசாமி பேசுறேன்.. எனக்கு ஒன்றுமில்லை.. நான் உயிரோடு நல்லாத்தான் இருக்கேன்.. நமக்கு இப்ப அதிக நேரம் இல்லை.. அந்த தம்பியை நம்பு. தம்பி பேர் சோழன்.. அவர் நம்ம ஆளு தான்.. நீ கொஞ்சம். தம்பி சொல்லுற இடத்துல போய் இரு.. விளக்கமா இப்ப பேச நேரம் இல்லை.. அவரே எல்லாம் பண்ணிட்டு உன்னை என்கிட்ட அழைச்சிட்டு வருவாரு.. சரி நான் வைக்கிறேன்..” என்று கூறி கந்தசாமி அழைப்பை துண்டித்ததும்..
இப்பொழுது தான் சண்முகத்திற்கு போன உயிர் திரும்பி வந்தது போன்று அப்படி ஒரு நிம்மதியாக அமைதியாக இருந்தது மனது..
சாமியின் இறப்பு அவருக்கு பாரிய ஒரு இழப்பாக இருந்தது..
அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தாயை பிரிந்த குழந்தை போன்று தவித்திருந்தார்..
கந்தசாமி போன்று வேறு யாரும் பேசி அவரை ஏமாற்றவும் முடியாது.. ஏனெனில் கந்தசாமியின் குரல் அவருக்கு அவ்வளவு அத்துப்படி..
சண்முகம் சாதாரண கடை நிலை தொண்டராகவே அந்த கட்சியில் சேர்ந்தார். பல வருடங்களுக்கு முன்பு..
அவரின் தீவிர அயராத உழைப்பை பார்த்து. அவரின் நேர்மையான குணம் உண்மையான கட்சி மேல் இருந்த பற்றை பார்த்து.. அடிப்படை பதவிகளில் இருந்து இப்பொழுது கட்சி தலைவராகவும் ஆட்சியில் இருந்தால் முதலமைச்சராகவும் இருப்பதற்கு முழு முதல் காரணம் கந்தசாமி மட்டுமே.. அதனால் அவர் சொல்லை வேதமாக கடைப்பிடிப்பார் சண்முகம்..
அதனால் வேறு எந்த மறு பேச்சும் பேசாமல் சண்முகம் சோழன் சொன்னபடி அவன் சொன்ன இடத்திற்கு வேகமாக அங்கிருந்து சென்று விட்டார்..
இதை அறியாத கதிர் இன்னும் காவல் காத்தபடி இருந்தான்..
பின் வாசல் வழியாக அவன் முன்பே ஏற்பாடு செய்திருந்த அன்று இறந்த சண்முகத்தின் வயது மற்றும் எடையை உடைய ஓர் அனாதை ஆண் பிணத்தை முகத்தில் மாணிக்கம் சொன்னது போன்று பாலித்தீன் கவரை போட்டு நன்றாக இறுக்கமாக கட்டிய பின் பெட்ரோலை ஊற்றி அந்த இடத்திலேயே கொளுத்தி விட்டான்..
அவர்களின் நீண்ட நாள் பழக்கமான அனைவரும் ஒன்று கூடி அன்றைய நாளை சிறப்பித்து உணவு உண்ணும் பழக்கத்தை சந்தோஷமாக முடித்துவிட்டு குழந்தைகளும் பெரியவர்களும் வீட்டிற்குள் சென்ற சிறிது நேரத்தில் வெளியே தீ பற்றி எரிவதை கண்டதும் அனைவரும் பயந்து வெளியே வந்தார்கள்..
அவர்களின் வருகைக்காக காத்திருந்த சோழனும் அவர்கள் வாசலுக்கு வருந்ததுமே அங்கிருந்து ஓட்டமாக ஓடி வெளியே சென்று தப்பித்து விட்டான்…
கந்தசாமிக்கு செய்தது போன்று அவர் துடித்து இறப்பது போன்று அங்கொன்றும் இங்கொன்றுமாக அவரின் செருப்பு வாட்ச் போன்ற பொருட்களை சிதறவிட்டு அவர்தான் இறந்தார் என்பதற்கு ஆதாரத்தை அங்கே விட்டுச் சென்று விட்டான்..
அன்றய நாள் ஆரம்பித்து சந்தோஷமாக முடியாமல் இப்படி ஒரு இழப்பை அந்த குடும்பம் சற்றும் எதிர்பார்க்காமல் துவண்டு போய் விட்டது.. உடனடியாக அவரின் தம்பியே போலீஸ் மற்றும் அம்பிலன்ஸ்க்கு தகவல் அனுப்பினார்..
சற்று நேரத்தில் போலீஸ் மற்றும் பத்திரிகை மற்றும் டீவி நிருபர்கள் அவர்களை தொடர்ந்து ஆம்புலன்ஸ் என அனைத்தும் அங்கே துரித கதியில் கூடிவிட்டது..
எதிர் கட்சியின் தலைவர் சண்முகம் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்..
எனும் தகவல் பத்திரிகை மற்றும் டிவி நியூஸ்களில் காட்டு தீயாக பரவியது..
எரித்துவிட்டு கதரின் அருகே வந்து அவனையும் அழைத்துக் கொண்டு மாணிக்கம் அவர்களுக்கு கொடுத்த பைக்கில் தொலைதூரத்திற்கு வந்துவிட்டான் சோழன்..
மாணிக்கத்திடம் போய் நடந்தவற்றை கூறிவிட்டு பணத்தை வாங்கிக்கொண்டு சோழன் வீட்டுக்கு சென்றான்..
சோழன் வீட்டுக்கு சென்றதை கதிர் அவனை பின் தொடர்ந்து சென்று உறுதிப்படுத்தி மாணிக்கத்திடம் கூறி விட்டு அவனும் அவனது வீட்டிற்கு சென்றான்..
வீட்டுக்கு வந்து கதவை தட்டவும் செல்லம்மா கதவை திறந்தாள்..
அன்று தான் திருமணம் முடித்து முதலலிரவு நடக்க இருப்பதால் முதல் முதலாக இரவில் குடிக்காமல் நிதானமாக வீட்டிற்கு வந்து சேர்ந்தான் சோழன்..
காலையில் அவளது கையால் உணவை உண்டு விட்டு வீட்டை விட்டு வெளியேறியவன் இந்த இரவு நேரத்தில் தான் வருகிறான்..
தினமும் அவன் இவ்வாறு தான் செய்வான் என்பதை அன்றய அவனது நடவடிக்கையிலேயே செல்லம்மா தெரிந்து கொண்டாள்..
அவன் உள்ளே வந்ததும் மீண்டும் கதவை அடைத்து விட்டு எதுவும் பேசாமல் அவன் உணவு உண்பதற்காக உணவை எடுத்து வைக்க சமையல் அறைக்கு சென்றாள்…
சற்று நேரத்தில் அவனும் குளித்துவிட்டு அவள் கொடுத்த உணவை உண்டு விட்டு..
இந்த கலவரத்திலும் கிளுகிளுப்பாக முதல் முதலில் நடக்கும் முதலிரவை சிறப்பாக நடத்துவதற்கு மாலை நேரத்தில் கடையில் ஆடர் கொடுத்திருந்த பூ மற்றும் பழங்கள் ஸ்வீட் அனைத்தையும் அவன் வரும்போது வாங்கிவந்தான்.. தற்போது அதை எடுத்துக்கொண்டு அவனது அறைக்குள் சென்றான்..
தைரியமாக ஒரு கொலையை செய்து விட்டு இங்கே முதலிரவிற்கு தயாராகினான் சோழன்..
கொலைகாரன் என்று செல்லம்மா அவனை நினைத்து விட்டாள்..