அவன் பாட்டுக்கு நேற்று வந்தவளை இன்று திருமணம் செய்துவிட்டு பேச வேண்டும் என்று கூறி சில வார்த்தைகளை பேசி விட்டு உணவும் உண்டு வேலை இருப்பதாக கூறி வெளியே கிளம்பி விட்டான்..
இப்பொழுது பாட்டி விழித்ததும் அவள் கழுத்தில் இருக்கும் தாலியை பார்த்து என்னை ஏது என்று கேள்வி கேட்டால் அவள் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் குழம்பிப் போயிருந்தாள்..
அவளின் எண்ணம் சரி என்பது போல் சற்று நேரத்தில் பாட்டியும் கண்வழித்துவிட்டார்..
அவர் எழுந்ததை பார்த்த செல்லம்மா அவருக்கு உதவி செய்து தூக்கி சமையலறையை ஒட்டியிருந்த ஓலையால் தடுக்கப்பட்ட குளியல் அறைக்குள் அழைத்து சென்று அவர் முகம் கழுவுவதற்கு அனைத்துக்கும் உதவி செய்து மீண்டும் அழைத்து வந்து கட்டிலில் அமர வைத்தாள்..
அதன்பின் சமையலறைக்கு சென்று பால் சுட வைத்து பாலில் அவருக்கான சத்துமாவை போட்டு கலக்கி கொண்டு வந்து அவரிடம் கொடுத்து குடிக்க வைத்தாள்..
அதை வாங்கியவர் அவளை நிமிர்ந்து பார்த்து “ எங்கம்மா சோழன்.. ” என்றார்..
“ பாட்டி அவர் வெளியில வேலை இருக்குன்னு போயிட்டார்.. ” என்றாள்..
“ என் ராசாத்தி எம்புட்டு அழகா இருக்க.
எப்ப ஆத்தா கல்யாணம் நடந்துச்சு?..
இந்தக் கிழவி கண்ணால உங்க கல்யாணத்தை பார்க்க முடியாம போயிடுச்சு.. இப்பதான் ஆத்தா எனக்கு மனசுக்கு அப்படி ஒரு சந்தோசமும் அமைதியும் நிம்மதியும் வந்து இருக்கு.. எங்க என் காலத்துக்கு பிறகு என் பொண்ணும் பேரனும் தனித்துவிடுவார்களோ..! என்று ரொம்ப பயந்துட்டேன்.. இப்பவே எனக்கு ஏதாவது ஆனாலும் சந்தோசமா இந்த உயிரை விட்டுடுவேன்.. அம்புட்டு மனசு நிறைஞ்சு கிடக்கு.. நேத்து உன்னை பார்த்ததுமே எனக்கு மனசுக்கு பட்ட விஷயத்தை இன்றைக்கு என் பேரன் உண்மையாக்கிவிட்டான்.. நீங்க ரெண்டு பேரும் காலத்துக்கும் புள்ள குட்டி பெத்து ரொம்ப சந்தோஷமா இருக்கணும் ஆத்தா.. ” என்று பேரனின் வாழ்க்கை செழித்த சந்தோசத்தில் மனம் நிறைந்து ஆசீர்வதித்தார்..
“ எப்படி பாட்டி எனக்கு அவரோட தான் கல்யாணம் ஆனது என்று நீங்க சொல்லுறீங்க?. ” என்றாள் சந்தேகத்தோடு
இவ்வளவு நேரம் அவள் தவித்த தவிப்பு என்ன தாலி கட்டியதும் அவன் சென்று விட்டான்.. இதை எவ்வாறு அவர்களிடம் சொல்வது அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா?. என்று பலதையும் மனதில் போட்டு குழப்பிக் கொண்டிருந்தவர்களுக்கு அவரே அதை தெரிந்து கொண்டு ஆசீர்வதித்து சந்தோஷப்படுவதை பார்த்ததும் அவளால் கேட்காமல் இருக்க முடியவில்லை..
“ என்ன கேள்வி ஆத்தா இது? இதை தெரிந்து கொள்வதற்கு பட்டப்படிப்பா படிக்கணும்.. என் பேரன் உன் கழுத்துல போட்டு இருக்கிறது எங்க பரம்பரை தாலி.. அது மட்டும் இல்லை. நேத்து இங்க வந்த பொண்ணு நீ.. இன்னைக்கு தாலி கட்டி கல்யாணம் ஆகி இங்கே உரிமையோடு இருக்கிறன்னா அதுக்கு என் பேரனை தவிர வேற யாருக்கும் தைரியம் இல்லை.. ” என்று கூறி அவர்களிருவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது வள்ளியிடம் அசைவு தெரிந்தது..
அதன்பின் அவளுக்கு அடுத்த வேலை வந்ததும் வள்ளிக்கும் செய்ய வேண்டியது எல்லாம் செய்துவிட்டு அவரின் அனைத்தையும் சுத்தம் செய்து முகம் துடைத்து அவரை அழைத்து சென்று குளிக்க வைத்து அதன் பின் அவருக்கு உடை உடுத்தி என அனைத்தையும் செய்து இருவருக்கும் உணவு கொடுத்தாள்..
அவள் தாய் தந்தை மற்றும் சகோதரர்கள் என்று இளம் வயதினரை விட பேச்சி ராதா பேச்சின் அக்கா என வயோதிபர்களுடன் பழகியது அவர்களை பார்த்துக்கொண்டதற்கு பின் பெரியவர்கள் என்றால் அவள் மனதிற்கு அப்படி ஒரு மரியாதையும் மதிப்பும் நெருக்கமும் எப்பொழுதும் இருக்கும்..
புதிதாக கல்யாணம் செய்து கழுத்தில் கட்டப்பட்ட தாலியும் நெற்றி வகிட்டில் வைத்த குங்குமமும் அவள் முகத்திற்கு அவ்வளவு அழகை சேர்த்தது..
உரிய இடத்திற்கு வந்து விட்டதாக அவளுக்கு எடுத்து கூறியது..
அந்த புது அழகும் சேர்ந்து மனம் கோணாமல் முகத்தில் சிரிப்போடு அவர்களுக்கு செய்ய வேண்டியதை செய்து அவர்களுக்கு பார்த்து பார்த்து உணவை கொடுத்து அவர்கள் உணவு உண்டு முடித்ததும் அவர்களுக்கு காலையில் கொடுக்க வேண்டிய மருந்துகளையும் இருவருக்கும் கொடுத்து விட்டு இருவரையும் வீட்டை விட்டு வெளியே தோட்டத்திற்கு அழைத்து சென்றாள்..
சுத்தமான காற்று முகத்தில் அடித்து பறவைகளின் சத்தம் பூக்களின் வாசம் என இயற்கையோடு அவர்களை ஒன்ற வைத்தாள்..
வள்ளியை பூக்கள் தோட்டத்துக்கு நடுவில் இருக்கையில் இருக்க வைத்து சற்று தள்ளி பாட்டியும் செல்லம்மாவும் வள்ளியை கண் பார்வையில் வைத்து பேசிக் கொண்டு இருந்தார்கள்..
“ உனக்கு இந்த குடும்பத்தை பற்றி எவ்வளவு தெரியும் என்னென்ன தெரியும் என்று எதுவும் எனக்கு தெரியாது அத்தா? ” என்று கூறி சுருக்கமாக சோழன் சொன்னதை இவர் அனைத்தையும் விரிவாகவே எடுத்துச் சொன்னார்..
அதன் பின் அவளைப் பற்றியும் கேட்டு தெரிந்து கொண்டார்..
அவளும் அவரை பிடித்துப் போனதால் எந்தவித ஒளிவு மறைவும் இல்லாமல் பேச்சியை பற்றி அவர்கள் குடும்பத்தை பற்றி தான் ஏன் எவ்வாறு?.. இங்கு வந்தாள் என்பது உட்பட அனைத்தையும் ஒன்று விடாமல் கூறி முடித்தாள்..
அதைக் கேட்ட பாட்டி மனது ரொம்பவும் பாரமாக உணர்ந்தார்..
எல்லா இடங்களிலும் உறவுகள் இருப்பார்கள் எல்லாரும் எல்லாரையும் போன்று சொத்திற்காகவும் சுகத்திற்காகவும் சகோதர்களை கெடுத்து வாழ்வதும் இல்லை..
சகோதரர்களுக்காக அனைத்தையும் விட்டுக் கொடுத்து ஏன் அவர்களின் வாழ்க்கையை விட்டுக் கொடுத்து வாழ்பவர்களும் இருக்கிறார்கள்..
அனைத்திலுமே ஒரு நல்லது இருந்தால் ஒரு கெட்டதும் இருக்கும்..
அது போன்று தான் செல்லம்மாவின் வாழ்க்கையில் நடந்திருப்பதையும் உணர்ந்து கொண்டார்..
அவளைப் பற்றி அனைத்தையும் கூறி முடித்ததும் “ பாட்டி உங்களுக்கு தங்கச்சியும் தங்கச்சி மகளும் இருக்காங்கன்னு சொன்னீங்களே அவங்க எங்க இருக்காங்க?…” என்று கேட்டாள்..
இவர்களுக்கு சொந்தம் மற்றும் உறவு என்று அவர்கள் இருந்தும் ஏன் இவர்கள் இவ்வளவு கஷ்டப்படும் பொழுது ஒருமுறை கூட வரவில்லை அவர்கள் யார் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் கேட்டாள்..
“ அதை ஏன் மா கேட்கிற?.. என் தங்கச்சி பொண்ணு பேர் கமலா.. 25 வருஷத்துக்கு முன்ன கோவிலூர் என்னும் ஊருக்கு வேலைக்கு போவதாக கூறி விட்டு போனவள் தான் அதன் பின்பு இங்கே வரவே இல்லை..
அவள் வேலைக்கு சென்று அங்க ஏதோ பிரச்சினையில் மாட்டிக் கொண்டாள் என்று தெரிந்ததுமே அவளைப் பற்றி யோசித்து உடம்பு முடியாமல் அவள் போன அடுத்த வருஷமே தங்கச்சி இறந்துட்டா.. இந்த செய்தி கேட்டு தாய் இறப்புக்கு வந்துட்டு போன கமலா தான்.. அதுக்கு பிறகு இத்தனை வருஷம் ஆகியும் இன்னமும் இந்த ஊருக்கு வரலை.. அப்புறம் இடையே அந்த போன் வசதி எல்லாம் வந்ததும் போன் பண்ணி பேசிக்கிறதோட சரி.. யாரோ ஒருத்தரை விரும்பி கல்யாணம் பண்ணி ஐந்து பிள்ளைகள் இருக்காம்.. என்று பேசும் போது சொல்லி இருக்கிறாள்.. அப்புறம் அவளோட வாழ்க்கையை பார்த்துட்டு அங்க இருந்துட்டா.. நாங்க இங்க இப்படியே இருந்துட்டோம்.. இப்ப கமலாவுக்கு அழைத்து தரேன் நீ பேசு.. சோழனுக்கு கல்யாணம் நடந்த விஷயம் கேட்டா அவ ரொம்ப சந்தோஷப்படுவா.. ” என்று கூறி அவருக்கென்று அங்கு இருக்கும் கைபேசியில் கமலாவின் நம்பரை தேடி அழைத்து அவரும் ஒரு இரண்டு வார்த்தை பேசி கமலாவின் சுகத்தை அறிந்து கொண்டு செல்லம்மாவின் கையில் கைபேசியை கொடுத்தார்..
அந்த பக்கம் கமலா “ ஹலோ.” என்றதும்.
வள்ளிக்கு தங்கை என்றால் அவளுக்கு அத்தை என்று உறவு முறையை சரியாக புரிந்து கொண்டு “ ஹலோ அத்தை நான் செல்லம்மா பேசுறேன்.. பாட்டி சொல்லி இருப்பாங்களே..! ” என்றாள்..
“ ஆமா செல்லம்மா சித்தி எல்லா விஷயத்தையும் என்கிட்ட சொன்னாங்க இப்பதான்.. ரொம்ப சந்தோசமா இருக்கேன்.. எங்க சித்தியையும் அக்காவையும் சோழனையும் பார்க்க முடியாமலுக்கு போயிடுமோனு எனக்கு அடிக்கடி அவங்களை பத்தி எனக்கு கவலை இருந்துகிட்டே இருக்கும்.. அவங்களை வந்து ஒரு தடவை பார்க்க முடியாத என்னோட சூழ்நிலை அப்படி.. அதோட நேத்துதான் என் மூத்த பொண்ணு உமாவுக்கும் கல்யாணம் நடந்தது.. கட்டாயம் நாங்க ஒரு முறை எல்லாரும் வந்து உங்க எல்லாரையும் பார்த்துட்டு வருவோம்.. அதே மாதிரி நீயும் சோழனும் கூடிய சீக்கிரமே இங்க வரணும்.. சோழன் வந்ததும் எனக்கு கால் பண்ணு.. நான் சொல்றேன் உன்னை இங்க அழைச்சிட்டு வந்து எங்க மருமகளை எல்லாருக்கும் காட்ட சொல்லி.. எங்க குடும்பத்தோட முதல் மருமகள் நீ உனக்கு நான் சொல்ல வேண்டியது இல்லை உன்னோட குணம் எப்படின்னு ஒரு அளவுக்கு சித்தி எனக்கு சொன்னாங்க.. சித்தியும் அக்காவையும் அப்புறம் உன் புருஷன் சோழனையும் இனி நீதான் நல்லபடியா பார்த்துக் கொள்ளணும்.. அவங்க உன்னோட பொறுப்பு.. நீ எல்லாத்தையும் பக்குவமா புரிஞ்சுகிட்டு சோழனோட சந்தோசமா வாழணும்.. கூடிய சீக்கிரம் அடுத்த மூன்று மாதத்திலயே நல்ல செய்தி சொல்லத்தான் நீ எனக்கு அழைத்து பேசணும்.. ” என்று மனதார கமலாவும் அவர்களை வாழ்த்தி ஆசிர்வதித்து விட்டு மீண்டும் பாட்டியிடம் சில விஷயங்களை பற்றி பேசிக்கொண்டு இருக்கும் போது தான்.. பழனிச்சாமி அவருக்கு அழைப்பு விடுத்தார்..
சிறிது நேரம் பாட்டியும் செல்லம்மாவும் இன்னும் சில விஷயங்களை பற்றி பேசிக்கொண்டு இருந்து விட்டு அவளுக்கு மதிய உணவு சமைப்பதற்கு நேரம் ஆவதை உணர்ந்து அவர்களின் இருவரையும் அழைத்து உள்ளே கொண்டு வந்து கட்டிலில் இருக்க வைத்து டிவியை போட்டு பாட்டிக்கு பிடித்த பழைய பாடல்களை பார்க்கும் படி வைத்துவிட்டு அன்றைய சமையலுக்கான ஏற்பாடு செய்ய ஆரம்பித்தாள்..
சிறிய அளவிலான சமையலறை சொற்ப அளவிலான பாத்திரங்கள் என்பதால்..
பாத்திரங்கள் மற்றும் சமையல் பொருட்கள் என்று எதையும் தேடி எடுத்து கஷ்டப்படும் தேவை அவளுக்கு இல்லாமல் அனைத்தையும் இலகுவில் கண்டுபிடித்து இந்த வீட்டில் முதல் நாளாக அதுவும் மருமகளாக சமைப்பதனால் பாயாசம் செய்து இனிப்போடு அவளது சமையலை ஆரம்பித்தாள்..