ஒரு மணி நேரத்தில் சமையலை முடித்ததும் மதிய நேரம் நெருங்கியதால் அவர்களுக்கும் உணவை கொடுத்துவிட்டு அவளும் சாப்பிட்டு விட்டு சற்று நேரம் அவர்களையும் உறங்க வைத்துவிட்டு அவளது ரூமில் சென்று அவளும் உறங்கினாள்..
மாலை நேரத்தில் எழுந்ததும் மீண்டும் அவர்களை தோட்டத்திற்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு காபி கொடுத்துவிட்டு சிறிது நேரம் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்து விட்டு இரவு நெருங்கவும் சோழனின் வருகைக்காக காத்திருந்தாள்..
இவ்வாறு தான் அவளின் வாழ்க்கை அந்த வீட்டில் முதல் நாள் கழிந்தது..
சோழனும் அன்று நிதானமாக வந்ததால் உணவு உண்டு முடித்து அவன் ஆர்டர் செய்து வாங்கி வந்த அனைத்தையும் அவர்களது அறைக்கு எடுத்து சென்று ஒழுங்கு படுத்தி வைத்து கட்டிலில் மல்லிகை பூக்களை தூவி விட்டு அவளின் வருகைக்காக காத்திருந்தான்..
மாலை நேரம் பாட்டியும் சிலவற்றை மறைமுகமாக கூறியிருந்ததால் சற்று நேரத்தில் அவன் அவளுக்கு வாங்கிக் கொடுத்த இன்னும் ஒரு அழகான புடவையை உடுத்திக் கொண்டு நிறைய பூ வைத்து கையில் பால் செம்புடன் அவர்களது அறைக்குள் சென்றாள்..
அவனும் அவளைப் பார்த்து சிரித்துவிட்டு அருகே அமருமாறு கூறினான்..
அந்த அறையின் பேன் காற்றையும் மீறி அவள் முகத்தில் அத்தி பூத்தது போன்று பூத்திருந்த வியர்வை துளிகள். முகத்தில் பதட்டம் என அனைத்தையும் பார்த்து சற்று நேரம் பேசிக்கொண்டு இருக்கலாம் என்று நினைத்து அவன் தான் பேச ஆரம்பித்தான்..
“ ஏன் செல்லாக்குட்டி உன் முகம் இப்படி வியர்த்து வடியுது.. அவ்வளவு பயமா என்ன?.. சரி உன்னை பற்றி சொல்லு நான் தெரிஞ்சுக்கிறேன்..” என்றான்..
அவன் அமைதியாக பேசியதால் சற்று நேரம் தயக்கத்தை விட்டு அவள் பேச ஆரம்பித்ததும் அவளது கையை எடுத்து அவனது கைக்குள் பொத்தி வைத்துக் கொண்டான்..
அவளும் ஏதோ புராண கதை போன்று பாட்டியிடம் கூறியது அனைத்தையும் அவனிடமும் எதுவும் மறைக்காமல் கூறினாள்..
அவள் பேசியதையும் கேட்டுக் கொண்டிருந்தவன் அவளது பேச்சின் இடையில் முகத்தில் தெரிந்த நவரச உணர்வுகளில் இவன் அவனது சுயம் மறந்து அவளில் ஆழ்ந்து போய் விட்டான்..
அனைத்தையும் கூறி முடித்த பின்பும் அவன் அந்த கனவு உலகத்தில் இருந்து வெளிவராமல் அவள் முகத்தை பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்து அவன் கைக்குள் இருந்து அவளது கையை எடுப்பதற்காக அசைத்தாள்..
அந்த அசைவில் தான் கனவுலகத்தில் இருந்து நிகழ்வுக்கு வந்தான் சோழன்..
“ இங்க பாரு புள்ள.. உன்னை அப்படி பார்த்துப்பேன். இப்படி பாத்துப்பேன் கையில வச்சு தாங்கிப்பேன் இப்படி எல்லாம் சொல்ல மாட்டேன்.. நீ சொந்தங்கள் இருந்து அனாதை மாதிரி இருந்த.. நான் சொந்தங்கள் இல்லாமல் இப்படி இருக்கேன்.. உன் கதையை கேட்டா எனக்கு கவலையும் உன்னை பார்த்து பாவமாக இருக்கும்.. என் கதையை கேட்டா உனக்கு கவலையும் என்னை பார்த்து பாவமாகவும் இருக்கும்.. அந்த பாவத்துக்கு எல்லாம் அப்பாற்பட்டது தான் வாழ்க்கை..”
“ இதுதான் முதல் கல்யாணம் எனக்கு. முதல் குடும்ப வாழ்க்கை ஆரம்பம் அதனால.. அடிதடி வெட்டு குத்து மாதிரி ரொம்ப ஈஸியா என்னால உன்னோட பொருந்தி குடும்ப வாழ்க்கை வாழ முடியுமா என்று எனக்கு தெரியல.. சாமி சொன்னதுக்காகத்தான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன் அதே மாதிரி.. உன்னை கல்யாணம் பண்ணி நமக்கு பிறக்க போற குழந்தை மூலமா நான் பெரிய ஒரு வளர்ச்சி அடைவேன்னு அவர் சொன்னார்.. அதனால யாருன்னே தெரியாத உன்னை கல்யாணம் பண்ணி இப்ப ரெண்டு பேரும் சேர்ந்து வாழ ஆரம்பிப்போம்.. என்னோட பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து நான் ஒரு நல்ல நிலைமைக்கு வரும் வரைக்கும் நீ என்கிட்ட இருந்து எதையும் எதிர்பார்க்க கூடாது.. ஏன் இப்ப கூட ஒரு கொலை நடந்தது என்று சொல்லி ஊரெல்லாம் செய்தி பரவுது அதுக்கு காரணமும் நான் தான்.. உனக்கு இப்பவே நான் அதைசெய்வேன் இதை வாங்கி தருவேன். என்று எந்த ஒரு வாக்கும் கொடுத்து உன் மனசுல நான் ஆசையை வளர்க்க விரும்பலை.. அதனால நம்ம வாழ்க்கையை இன்னைக்கு அவர் குறித்து கொடுத்த நல்ல நேரத்தில ஆரம்பிப்போம்.. வாழ்க்கை போற போக்குல என்னோட அரசியல் புது வாழ்க்கைக்கு இடையில் உன்னையும் கவனிக்க முயற்சி செய்கிறேன்.. உன் வாழ்க்கை சந்தோசமா மாறும் என்று நீ நம்பிக்கை வைத்து முயற்சி செய்.. உன் செயல்கள் மூலமா அன்பை காட்டி என் அன்பையும் நீ பெற முயற்சி செய்.. அப்புறம் நான் எதுவும் செய்தா என் மேல் உள்ள கோவத்தை அம்மாகிட்டயோ பாடிக்கிட்டியோ காட்டக் கூடாது.. இது வரைக்கும் உனக்கும் எனக்கும் கல்யாணம் நடந்த விஷயம் வெளியே யாருக்கும் தெரியாது.. பாட்டி இப்போ கண்டுபிடித்து இருக்கும்னு எனக்கு தெரியும்.. யாருக்கும் தெரியாத மாதிரி நீயும் கட்டிக்கோ.. என்னோட நிலைமை எல்லாம் சரி வந்து நான் அரசியலுக்குள்ள ஈடுபட்டதும் நீ என் பொஞ்சாதின்னு ஊருக்கே மைக் போட்டு சொல்லுவேன்.. அப்ப தெரிஞ்சுகிட்டா போதும் எல்லாரும்.. அவ்வளவுதான் நான் பேச வேண்டியது எல்லாம் பேசிட்டேன் இனி செயல் மட்டும்தான்.. ” என்று கூறி மனதால் நெருங்காமல் உடலால் அவளை கட்டாயப்படுத்தியே அன்று அவர்களது முதல் தாம்பத்திய வாழ்க்கை ஆரம்பித்தது..
சாமி சொன்னார் குழந்தை பிறக்க வேண்டும் என்றார் என்பதை மீறி அந்த புது உடல் சுகத்திற்கு அவன் சற்று அவனை தொலைக்க ஆரம்பித்தான்..
அவர்களது கூடல் முடிந்ததும்.. அவளது கண்ணில் இருந்து கண்ணீர் அருவியாக பெருகியது…
யாரோ ஒருவர் சொன்னார் அதனால் நான் உன்னோடு —க்கிறேன்.. என்று கூறி தாசிக்கும் அவளுக்கும் வித்தியாசம் இல்லை என்பது போன்று பேசிவிட்டு அவனது தேவையை முடித்துக் கொண்டு வெளியேறி அந்த நேரத்தில் அவனுக்கு இருக்கும் கடமையை செய்வதற்காக வீட்டை விட்டு சென்று விட்டான்..
வந்தவன் நேராக சண்முகம் இருந்த இடத்திற்கு சென்று அங்கிருந்து பாதுகாப்பாக யாருக்கும் சந்தேகம் வராமல் அவரை கந்தசாமி இருக்கும் வீட்டிற்கு அழைத்து சென்றான்..
சாமி இருப்பது வேறு யாருடைய வீடும் அல்ல மாணிக்கத்தின் வீட்டில் சமையல் வேலை செய்யும் முத்துவின் வீடு..
முத்துவை சிறுவயதில் இருந்து கந்தசாமி தான் வளர்த்தார்..
அவரின் மேல் உள்ள பாசம் மற்றும் மதிப்பின் காரணமாகத்தான் அவர் சொன்னார் என்று உயிர் போனாலும் பரவாயில்லை என்று மாணிக்கத்திடம் வேலைக்கு சென்றான் முத்து..
அவன்தான் அங்கிருந்து மாணிக்கம் பேசுவது அனைத்தையும் அவருக்கு தெரியப்படுத்துவான்..
ஆனால் கந்தசாமியை கொலை செய்ய மாணிக்கம் திட்டமிட்டிருந்த நேரம் அவன் அங்கு இல்லாமல் இருந்து விட்டான்..
அதனால் அவனுக்கு தெரியாமல் போனது..
மீண்டும் மாணிக்கம் வீட்டுக்கு அவன் வந்த பொழுது கந்தசாமியின் இறப்பை பற்றி செய்தியிலும் அவர்களும் பேசிக் கொண்டிருந்ததை கேட்டு அவன் ரொம்பவே பயந்து அழுது புலபினான்..
அவரின் நிலைமை தாங்க முடியாமல் அழுது கொண்டு அவனது வீட்டிற்கு வந்த பொழுது அங்கே கந்தசாமியை கண்டதும் அவனால் என்னவென்று உணர்வது என்று தெரியாமல் அவரிடம் என்ன நடந்தது என்று கேட்டு தெரிந்து கொண்டான்..
முத்து யாரும் இல்லாதவன் என்பதால் மாணிக்கம் அவனைப் பற்றி அதிகம் கண்காணிக்கவில்லை..
கந்தசாமிக்கு வசதியாக போக முத்துவின் வீட்டிலேயே அவர் தாங்கிக் கொண்டார்..
அவன் தான் ஆளும் கட்சியினர் மாணிக்கதிடம் சண்முகத்தின் கொலை பற்றி அவர்கள் பேசும் பொழுது அதைக் கேட்டுக் கொண்டு வந்து அன்று இரவே கந்தசாமியிடம் கூறிவிட்டான்..
அதை தெரிந்து கொண்டால் தான் அந்த வேலை சோழனுக்கு வரும் என்பதையும் தெரிந்து கொண்டு அவனுக்கு அழைத்து இன்று காலையில் பேசி சண்முகத்தை இங்கே அழைத்து வருமாறு கூறியிருந்தார்..
அவர் கூறியது போன்று சண்முகத்தை காப்பாற்றி இதோ கந்தசாமியிடம் அழைத்துக் கொண்டு வந்து விட்டுவிட்டான் சோழன்..
அவன் அதிக நேரம் அங்கே இருக்க முடியாது என்பதால் அவனைப் பற்றி அனைத்தையும் சுருக்கமாக கந்தசாமி அவரிடம் கூறி விட்டு அவரும் எவ்வாறு இங்கே வந்தார்.. என்பதையும் கூறிவிட்டு கொஞ்ச நாளைக்கு சண்முகம் வெளியே செல்லாமல் இங்கே இருக்கட்டும். அனைவருக்கும் முன்பு அவர் இறந்ததாகவே இருக்கட்டும் என்று கந்தசாமி உறுதியாக கூறிவிட்டார்..
அன்றிலிருந்து இன்று வரை சண்முகம் கந்தசாமியின் வார்த்தைக்கு மறுவார்த்தை பேசியதும் இல்லை அதை மீறியதும் இல்லை..
ஏன் எதற்கு என்று காரணம் கேட்காமலே சரி என்று சம்மதம் தெரிவித்தார்..
ஊர் முழுவதும் சண்முகத்தின் மரணத்தை பற்றியும் கந்தசாமியின் மரணத்தை பற்றியும் பேசிக்கொண்டிருந்தார்கள்..
இனிமேலும் இதை சும்மா விட முடியாது என்று கட்சி தொண்டர்கள் கொந்தளித்து விட்டார்கள்..
கந்தசாமியின் பேச்சை கேட்டு அனைவரும் கட்டுப்பட்டு இருந்தவர்கள் இப்பொழுது அவர்களே இல்லை என்னும் போது யாருக்காக பொறுக்க வேண்டும் என்பதால் இந்த கோபம் வெளிபட்டது அவர்களிடமிருந்து..
தேர்தலுக்கும் இன்னும் கொஞ்ச காலமே இருப்பதால் அவர்களை அமைதியாக இருக்கும்படியும் அவர்கள் வெளிப்படும் வரை அவர்களை வழிநடத்தும் படியும் அடுத்த முக்கியமான ஒருவரை கைபேசியில் கந்தசாமியும் சண்முகமும் அழைத்து உயிரோடு இருப்பதாகவும் தேர்தலுக்கு முதல் நாள் மக்களுக்கு தெரியப்படுத்துவதாகவும் கட்சித் தொண்டர்களையும் உறுப்பினர்களையும் அமைதி காக்கும் படியும் கூறினார்கள்..
சோழனும் இன்று காலையில் சட்டை பாக்கெட்டில் கைபேசியை வைத்து மாணிக்கம் பேசியது அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்து கொண்டதை சண்முகத்திடமும் கந்தசாமிடமும் ஒப்படைத்தான்..
தேர்தலுக்கு முதல் நாள் இரவு இந்த வீடியோவை வெளியிட்டு அன்று அவர்கள் உயிரோடு இருப்பதை மக்களுக்கு தெரியப்படுத்த இருப்பதாகவும்.. அதன் பின் மக்கள் நல்லாட்சி விரும்பினால் அவர்களை தேர்ந்தெடுக்கும் முடிவையும் அவர்களுக்கு கொடுப்பதாகவும் இவர்கள் தீர்மானத்திருந்தார்கள்..
பின் சோழன் அங்கிருந்து நேராக யாருக்கும் சந்தேகம் வராதபடி வீட்டிற்கு வந்து விட்டான்..
அவன் சென்ற நேரத்தில் இருந்து அவன் பேசிய வார்த்தைகளை நினைத்து அழுது கொண்டிருந்தவள் சற்று நேரத்திற்கு முன்பு தான் உறங்கினாள்..
இன்னும் பல நாட்கள் அவளுக்கு கண்ணீரிலேயே கழியபோவது தெரியாமல் பேதை பெண்ணவள் இன்றைய நாள் அவனின் வார்த்தை தாக்கத்தை தாங்கிக் கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தாள்..
காலையில் அழகோடும் பூரிப் போடும் இருந்தவள் பூ முகம் தற்பொழுது வாடி வதங்கி போயிருந்தது..
பிறந்த வீட்டிலும் நிம்மதி சந்தோசம் இல்லை.. செல்லமாவிற்கு புகுந்தவீட்டிலும் நிம்மதியும் சந்தோஷமும் இல்லாமல் செல்லம்மா போன்று சில பெண்கள் அல்லல் படுவது இயற்கை விதியோ..! யார் அறிவார்..
காலம் கொடுத்த வாய்ப்பை தவறவிட்டு இப்பொழுது கத்தி கதறி என்ன பயன்..
சோழனிடம் அவள் ஒரு வார்த்தை பேச மாட்டாளா?. என்று அவன் ஏங்கும் காலமும் வரும்..