“ உமா நீ எங்கேயும் போகக்கூடாது.. நீ என்னோட பொண்டாட்டி திரும்ப வீட்டுக்குள்ள வா.. என்னை மீறி இனி நீ ஒரு அடி எடுத்து வச்சேன்னு சொன்னா அடுத்து நடக்க போற பிரச்சினைக்கு நான் பொறுப்பில்லை.. பொறுமையா பேசி இதுக்கு ஒரு முடிவுக்கு கொண்டு வருவோம்னு நினைச்சேன் ஆனா நீங்க என்னை பொறுமையா பேசி முடிவெடுக்க விடுற மாதிரி தெரியல.. உன்கிட்ட தான் சொல்றேன் காதுல வில்லையா உள்ள வா.. ” என்றான் மகேஷ்..
“ ஏங்க மாப்பிள்ளை என்னங்க தப்பு பண்ணினார்.. அவங்க மேல தானே தவறு இருக்கு.. அவர்தான் இனி அவங்க இந்த வீட்டுக்குள்ள வர மாட்டாங்கன்னு சொல்லிட்டாரு தானே..! இது நம்ம பொண்ணோட வாழ்க்கையை எடுத்தோம் கவுதோம் என்று முடிவு எடுக்கிறது இல்லைங்க.. நான் சொல்லுறதை கொஞ்சம் கேட்டு புரிந்து நடந்து கொள்ளுங்க ப்ளீஸ்..” என்று எவ்வளவு இறங்கி கெஞ்சி பேச முடியுமோ அவ்வளவு மகளின் வாழ்க்கைக்காக கணவனிடம் கெஞ்சி கேட்டார் கமலா ஆனாலும் பழனிச்சாமி மனம் இறங்கவில்லை..
கமலாவின் கையை தடுத்து விட்டு மகளின் கையை சற்று இறுக்கமாக படித்துக்கொண்டு மகன்களையும் வரும் படி அழைத்து விட்டு வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்..
மகேஷின் பொறுமையும் காற்றில் பறந்தது..
வேகமாக நின்ற இடத்தில் இருந்து வெளியேறி சென்று உமாவின் கையை பிடித்து தரதர என இழுத்துக் கொண்டு உள்ளே வந்தான்..
உள்ளே வந்தவன் அங்கிருந்து சோபாவில் அவளை தள்ளி “ அடிச்சேன் அடிச்சேன்னு கத்துறீங்க தானே..! அதை நீங்க பாக்கலையே இப்ப பார்த்துக்கோங்க.. ” என்று அவர்களுக்கு கூறிவிட்டு அவர்கள் அனைவரும் பார்க்கவே தற்பொழுதும் உமாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்..
“ எவ்வளவு சொன்னேன் டி உன்னிடம் போகாத போகாதன்னு சொல்லி.. நான் ஒரு பைத்தியக்காரன் மாதிரி கத்துறேன் நீ என் பேச்சை காதில் கேட்காம உங்கப்பா கைய புடிச்சிட்டு போற.. அப்ப என்ன மண்ணாங்கட்டிக்கு எனக்கு கல்யாணம் பண்ணி தந்தீங்க.. உங்க பொண்ணை தூசி எதுவும் படாமல் ஷோகேஸ்ல வச்சு உங்க வீட்டில் பூட்டி வச்சிருக்கலாமே..! இந்த இடத்தை விட்டு நான் சொல்லற வரைக்கும் இனி நீ நகரக் கூடாது ஒரு அடி எடுத்து வைக்கவும் கூடாது.. இனி வர்றதை நான் பாத்துக்குறேன்.. ” என்றான்..
“ எனக்கு நீங்க வேணாம்.. உங்களோட நான் வாழ வேண்டாம்.. உங்க பிசினஸுக்கும் உங்க தகுதிக்கும் இந்த மக்கு உங்களுக்கு கொஞ்சமும் பொருத்தமில்லை.. இரவே நீங்க நிஷா என்ன சொன்னான்னு கேட்டீங்க.. அப்பவே நீங்க எவ்ளோ புத்திசாலியா இருந்துக்குறீங்கன்னு நானும் புரிஞ்சுக்கலை.. என்னை விட்டுடுங்க அத்தான் நான் எங்க அப்பா கூட போயிடுறேன்..” என்று கைகூப்பி அவனிடம் கெஞ்சி கேட்டுக் கொண்டாள்..
“ என் பொண்ணு இவ்வளவு சொல்லியும் விடமாட்டேன் என்கிறான். நம்ம இத்தனை பேர் முன்பே அன்னைக்கு அடிச்சதை நீங்க பார்க்கலை இன்னைக்கு பாருங்கன்னு சொல்லி நம்ம கண்ணு முன்னுக்கு இப்ப நம்ம பொண்ணை அடிக்கிறான்… என்ன பாத்துட்டு இருக்குற அடிடா அவனுக்கு.. அவனை நீ ரெண்டு அடி அடி என் பொண்ணை நான் கூட்டிட்டு போறேன்.. ” சென்றார் பழனிச்சாமி..
இவ்வளவு நேரமும் தந்தை மற்றும் மகேஷ் பேசியது அக்காவின் குடும்பத்தில் நடந்த பிரச்சினைகள் என அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த அவர்களது மூத்த மகன் தந்தையின் ‘ அடிடா ‘ என்னும் ஒரு வார்த்தைக்காக காத்திருந்தவன் போன்று வேகமா சென்று மகேஷின் சட்டையை கூத்தாகப்பிடித்து யாரும் எதிர்பாராத நேரத்தில் அவனது கன்னத்தில் ஓங்கி அறைந்து இருந்தான்..
இதை பழனிச்சாமியை தவிர அங்கு யாரும் எதிர்பார்த்து இருக்க வில்லை..
மகேஷ் ஒரு நிமிடம் சற்று நிலை குலைந்து போய்விட்டான்..
“ இப்படித்தானே எங்க அக்காவ ஓங்கி எங்க கண்ணு முன்னுக்கு நீ அடிச்ச.. அதே வலியத்தான் இப்ப நான் உனக்கு தந்து இருக்கிறேன்.. வாங்க பா போகலாம் இவன்கிட்ட என்ன பேச்சு நம்ம அக்காவை அழைச்சிட்டு நம்ம வீட்டுக்கு போகலாம் இனி நடக்கிறது நான் பாத்துக்குறேன்.. ” என்று அவன் கூறிவிட்டு யாரும் எதிர் பாரத நேரத்தில் அவனே உமாவை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டான்..
கமலா நெஞ்சிலேயே அடித்துக் கொண்டு கதறியபடியே மகளின் பின்னே சென்றார்..
இனி மீண்டும் அவனுடன் சேர்த்து வைக்கும் இன்னும் அவர்களுக்கு இல்லை..
நிஷாவையும் நிஷாவின் புருஷனையும் பழனிச்சாமி பிச்சை எடுத்தாவது உண்ண வேண்டும் என்று கூறியதன் பின் அவர்களுக்கு கோவம் வந்தாலும் அவர்கள் மீது தவறு இருப்பதால் இந்த நேரம் கோபத்தை காட்டாமல் சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டு காத்திருந்தார்கள்..
அவன் சொல்லி சொல்லி கேட்காமல் அடித்தும் கேட்காமல் உமா சென்று விட்டதை மகேஷம் சற்றும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை..
சித்ராவின் வீட்டுக்கு செல்லாமல்.. ஆபீஸ் சென்று விட்டு அங்கிருக்கும் கணக்கு வழக்குகளை பார்த்துவிட்டு ஹோட்டலிலேயே உணவை அருந்திவிட்டு இரவு நன்றாக இருட்டியதும் தான் மகேஷ் அவனது வீட்டுக்கு வருவான்..
திருமணம் நடந்த அடுத்த நாளே திருமண வாழ்க்கை முடிந்து விட்டது என ஊர் முழுவதும் இந்த தகவல் பரவி விட்டது..
ரோட்டில் இறங்கி பழனிச்சாமி குடும்பமோ மகேஷோ யாராலும் நடமாட முடியவில்லை.. அதைப் பற்றியே கேள்வி கேட்டு மனதை இன்னும் காயப்படுத்தினார்கள்..
இவ்வாறு காலங்கள் யாருக்கும் காத்திருக்காமல் யாருடைய முகத்திலும் உயிர்ப்பு சந்தோசம் என்று எதுவும் இல்லாமல் ஏனோதானோ என்று வாழ்ந்து ஒரு மாத காலமும் முடிந்து விட்டது..
அன்று ஒரு நாள் பிசினஸ் பார்ட்டி என்று மகேஷ் அங்கே சென்று இருந்த இடத்தில் அவனது வளர்ச்சி மீது பொறாமை கொண்ட ஒருவன் இவன் சரியில்லை அதனால்தான் மனைவியே விட்டுவிட்டு சென்றுவிட்டால் என்று இன்னும் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி அவனை கேலி செய்து மனதை காயப்படுத்தினான்..
தந்தை மது அருந்தியே இறந்தார் என்பதால் எந்த நிலையிலும் அதை தொடுவதில்லை என்று உறுதி கொண்டவன் இந்த காயங்கள் தாக்கங்கள் கேலி சிரிப்புகள் எதையும் தாங்கிக் கொள்ள முடியாமல் முதல் முதலாக அன்று மதுவை நாடினான்..
முதல் நாள் குடிப்பதால் அளவு கணக்கு தெரியாமல் குடித்துவிட்டு நேராக பழனிச்சாமி வீட்டிற்கு சென்று அங்கே தகராறு செய்தான்..
பழனிச்சாமியும் இவன் குடித்துவிட்டு வந்ததை சற்றும் நம்பவில்லை ஏற்றுக்கொள்ளவில்லை..
அவர் பார்த்து வளர்த்த பிள்ளை என்ற பாசம் அவர் மனதில் இருந்தாலும் இவனை இன்னுமும் நம்பினால் தனது மகள் வாழ்க்கை தான் கெட்டுப் போகும் என்ற முடிவை மனதில் உறுதியாக எடுத்து விட்டதால் தன்னோட மகளை அவனுடன் அனுப்பி வாழ வைக்க அவருக்கு எண்ணம் வர மறுத்தது..
அவன் கலாட்டா செய்து குடிபோதையில் சத்தம் போட்டு உமாவின் அறைக்குள் சென்று உமா என்று நினைத்து அவளது தங்கையின் கையை பிடித்து இழுத்து விட்டான்..
அவன் தெரியாமல் தான் பண்ணினான்.. ஆனால் அதுவும் அவர்களுக்கு பெரிய ஒரு குற்றமாகப்பட்டு அப்பொழுதே போலீசிற்கு தகவல் கொடுத்து அங்கே போலீஸ் வர வைத்தார்கள்..
போலீசும் அங்கே வந்து என்னவென்று விசாரித்துவிட்டு மகேஷ் குடித்துவிட்டு கலாட்டா பண்ணியதை அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் கூறியதால் அவனை கைது செய்து ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றார்கள்..
அன்று இரவு முழுவதும் மகேஷ் ஜெயில் கம்பிக்குள் தான் இருந்தான்..
விடிந்ததும் கமலா மூலம் தகவல் கேள்வி பட்டு அவனது நண்பன் வந்து தான் ஜாமினில் அவனை வெளியே எடுத்தான்…
பழனிச்சாமி ஒரு வக்கீலை பிடித்து விவாகரத்துக்கு போட்டார்..
உமா கையெழுத்து போட்ட விவாகரத்து பத்திரம் மகேஷ் வீட்டுக்கு தபால் மூலம் வந்தது..
அவனுக்கு சம்மன் கொடுக்கப்பட்ட அன்று அவன் கோர்ட்டில் ஆஜராகினான்..
இவ்வளவு நடந்தும் அவன் திருமணத்தை பொய்யாக்க விரும்பாமல் அவளோடு தான் வாழ்வேன்.. அவளை பிரியும் எண்ணம் அவனுக்கு இல்லை என்று கூறி..
இவர்களின் தற்காலிக பிரிவுக்கு என்ன காரணம் என்றும் கூறினான்..
குடும்ப நல நீதிபதி பழனிச்சாமியிடம் “ சில விஷயங்கள் குடும்பத்தில் நடப்பது தான்.. பெற்றவர்கள் அனைத்து விஷயத்திலும் தலையிடக்கூடாது என்று கூறி.. சித்ரா மற்றும் நிஷாவை எச்சரிக்கை படித்திவிட்டு ஒரு வருட காலம் வரை இருவரும் சேர்ந்து வாழ வேண்டும்.. அதிலும் ஏதாவது பிரச்சினை வந்தால் அதன்பின் விவாகரத்துக்கு முறையான காரணம் இருந்தால் மட்டும் கொடுக்கப்படும்… மற்றும் பெண் வீட்டு மாப்பிள்ளை வீட்டு குடும்பத்தினர் இருவரும் அவர்களது வீட்டிற்கு செல்ல கூடாது.. அவர்களது குடும்ப பிரச்சனைகளில் இனி தலையிடக்கூடாது. ” என்று கூறினார்..
அதன்பின் இருவருக்கும் கவுன்சிலிங் ஏற்பாடு செய்து கொடுத்தார்..
அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ விரும்பினால் அதை பிரிப்பதற்கு பெற்றவர்கள் யாரும் தலையிடக்கூடாது என்றும் கூறி பழனிச்சாமி சித்ரா மற்றும் நிஷாவிற்கும் சில அறிவுரைகளை வழங்கி அவர்களை அனுப்பி வைத்தார் நீதிபதி..
அதன்பின் அன்றிலிருந்து உமா மீண்டும் மகேஷின் வீட்டிற்கு வந்துவிட்டாள்..
வீட்டுக்கு வந்த பின் மகேஷ் அவளிடம் எந்த வார்த்தையும் பேசாமல் வீட்டுக்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் வாங்கி கொடுத்துவிட்டு ஆபிஸ் செல்வது வீட்டுக்கு வருவது இரவு நேரம் படத்தை பார்ப்பது.. முன்பு போன்று மதியம் வீட்டுக்கு காய்கறி மற்றும் நான் வெஜ் வாங்கி ஆபீஸ் பியூன் மூலம் கொடுத்து அனுப்புவான் ..
வீட்டில் இன்னும் அவள் சமைத்த உணவை உண்ண ஆரம்பிக்கவில்லை..
காலை மதியம் கடையில் உணவு உண்டு விட்டு இரவும் அவனுக்கு உணவை வாங்கி வந்து வீட்டில் வைத்து சாப்பிடுவான்..
கணவன் மனைவி போன்று எந்த ஒரு தொடுகையோ பேச்சோ எதுவும் இல்லாமல் ரூம் மேட் போன்று ஆளுக்கு ஒரு அறையில் தான் இருவரும் தங்கி இருந்தார்கள்..
அவன் இன்றுவரையிலும் முன்பு அடித்ததை தவறு என்று ஒத்துக் கொள்ளாமல் அவள் விட்டு சென்றதையும் அதன் பின் அவன் அடி வாங்கியது போலீசுக்கு சென்றது ஜெயிலில் இருந்தது என அனைத்தையும் மனதில் வைத்து அவள் மீது இன்னும் கோபமாக இருந்தவன் தற்பொழுது வெறுப்பாகவும் மாறிவிட்டது..
யார் முதலில் மன்னிப்பு கேட்பார்கள்?.. யார் பேசுவார்கள்?..
யார் அவர்கள்களின் வாழ்க்கையின் அடுத்த கட்டதிற்கு அடி எடுத்து வைப்பார்கள்?.. தெரியவில்லை..
இல்லையென்றால் ஒரு வருடத்தின் பின்பு விவாகரத்து வாங்கி பிரிந்து விடுவார்களா?.. என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..!