மனவலி மற்றும் உடல் வலியால் எப்பொழுது அசந்து செல்லம்மா உறங்கினால் என்று தெரியவில்லை..
ஆனால் அவள் எழுந்து கொள்ளும் பொழுது அவள் அருகே சோழன் படுத்திருந்தான்..
முன்பு போல் சமையல் வேலை அவனது பொறுப்பு இல்லை என்பதால் சோழன் பொறுமையாக எழுந்து கொள்ளலாம்.. என்றும் இரவும் சண்முகம் வேலையாக வெளியே சென்றது முதல் நாள் திருமணத்திற்காக அலைந்தது என்று ஒழுங்கான உறக்கமின்மை காரணமாக நன்றாகவே இப்போது உறங்கினான்..
இரண்டு நாளைக்கு முன்பு அவள் இவ்வளவு கஷ்டப்படுவாள் என்று அவள் சற்றும் எதிர்பார்த்து இருக்க வில்லை..
தாம்பத்தியம் என்பது இருவரும் மனதாலும் உடலாலும் இணைந்தால் தான் அது புனிதமான தாம்பத்தியம்..
ஆனால் இங்கு இருவரது மனமும் ஒன்றிணையாமல் உடலளவில் கூட செல்லமாவின் ஒத்துழைப்பு இல்லாமல் தான் அரங்கேறியது..
ஆனால் சோழன் அது எதையும் புரிந்து கொள்ளும் நிலையில் இல்லாமல் காரியமே கண்ணாக அவனது தேவையை வேலையை முடித்துக் கொண்டான்..
ஆனால் அதனால் கஷ்டப்பட்டது என்னவோ செல்லம்மா மட்டும் தான்..
உடல் வலி உயிர் கொள்ள அதை தாங்கும் சக்தி மனதில் இல்லாமல் மனம் வலிமை இழந்து துவண்டு போய் இருந்தாள்..
என்னதான் கஷ்டங்கள் இருந்தாலும் பெண்களுக்கு என்று இருக்கும் சில கடமை உணர்ச்சிகள் அவர்களை ஓடிக்கொண்டு இருக்க வைக்கிறது இவ்வுலகில்..
இந்த திருமணத்திற்கு முன்பு வரை எந்த ஒட்டு உறவும் இல்லாமல் இருந்த இரு உயிர் ஜீவன்கள் தற்போது இருந்து அவளை நம்பி இருப்பதால் அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தும் மற்றும் வீட்டு வேலை செய்ய வேண்டும் என்பதாலும் வலிகள் அனைத்தையும் பொறுத்துக் கொண்டு எழுந்து சென்று காலை கடன் முடித்து குளித்து விட்டு வந்து பூஜை அறையில் விளக்கேற்றிவிட்டு இன்றும் காலை சமையலை முடித்துக் கொண்டாள்..
ஒன்பது மணிக்கு மாணிக்கத்தின் வீட்டிற்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்பதால் 8 மணி அளவில் அவனுக்கு மட்டுமே கேட்கக்கூடிய சத்தத்தில் அலாரம் வைத்திருந்தான் சோழன்..
அது அதன் நேரத்துக்கு வேலையை ஆரம்பித்ததும் உடனடியாக எழுந்து அதை நிறுத்திவிட்டு முகம் கழுவி சமையலறை அருகே சென்றான்..
இதற்கு முன்பு அனைவருக்கும் சேர்த்து அவனுக்கு தெரிந்த அளவில் ஒரே உணவை அவன் சமைத்து வைப்பான்..
ஆனால் இவள் வந்த பின் பாட்டி மற்றும் வள்ளி இருவருக்கும் அவர்களது உடல் நிலைக்கு ஏற்றவாறு இலகுவான உணவும் அவனுக்கும் அவளுக்கும் வேறு செரிமானம் ஆகக்கூடிய உணவும் என இரண்டு உணவு வகைகளை சமைத்து வைப்பாள்..
செல்லம்மாவை பொறுத்த வரையில். வேலைகள் என்பது அவளுக்கு எப்பொழுதுமே கடினமாக தெரிவதில்லை..
நேரத்தோடு அவர்களுக்கான உணவை முதலில் செய்து முடித்தவள் இவர்கள் எழுப்புவதற்கு தாமதமாகும் என்பதால் அவனுக்கு உணவை கொடுத்து அனுப்பி விட்டு பொறுமையாக பாட்டிக்கும் வள்ளிக்கும் இடியாப்பம் செய்து கொள்ளலாம் என்று அதற்கான மாவை பிசைந்து வைத்தாள்..
அப்பொழுதுதான் சமையலறைக்கு அருகே வந்த சோழன் “ செல்லா ஒரு கடுங் காபி. போட்டு தோட்டத்துக்கு எடுத்துட்டு வா.. ” என்று வேலையை ஏவி விட்டு சிகரெட் பிடிப்பதற்காக அங்கே சென்றான்..
அவளும் அவன் சொன்னது போன்று காபி போட்டு எடுத்துக் கொண்டு அங்கே சென்றாள்..
அவன் கேட்டதுமே வேகமாக தான் காபி எடுத்துக் கொண்டு சென்றாள்.. ஆனால் அவளின் அந்த வேகமே அவனுக்கு தாமதமாக தெரிந்தது..
“ காபி கேட்டு எவ்வளவு நேரம்.. நானும் ஒரு முழு சிகரெட் இழுத்து முடிச்சிட்டேன்.. வீட்ல இருக்கிற நீ ஆடி அசைந்து ஒரு வேலை செய்யலாம்… அது உனக்கு பெரிய விஷயம் இல்லை.. இங்க உனக்கு எந்த தொல்லையும் இல்லை.. காலைல மாணிக்கத்து கிட்ட ஒன்பது மணிக்கு வேலைக்கு போற எனக்கு செய்ய வேண்டியது எல்லாம் நேரத்துக்கு கரெக்ட்டா செஞ்சு முடிச்சிடனும்… தா காபியை குடிக்கிற வரைக்கும் இப்படி பக்கத்துல இரு.. ” என்று கூறி விட்டு அவளது கையில் இருந்த காபியை வாங்கி குடித்துக்கொண்டே தோளோடு சேர்த்து அவளை அணைத்துக் கொண்டு கைகள் பல சில்மிஷ வேலைகளில் ஈடுபட்டு இருந்தது..
கணவனாகவே இருந்தாலும் இந்த வெட்ட வெளியில் இப்படி தொடுகைகளை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை நெளிந்து கொண்டிருந்தாள்..
“ ஏய் சும்மாதான் இருடி கொஞ்ச நேரம்.. பாம்பு மாதிரி நெளிஞ்சுகிட்டு இருக்க.. இன்னும் கொஞ்ச காலத்துக்கு எனக்கு இப்படி உன்னோட இருந்து சாவகாசமா பேசுறதுக்கு நேரமே இருக்காது.. தேர்தலுக்கு நாள் நெருங்கிட்டே இருக்கு.. தேர்தல் ரிசல்ட் வரும் வரைக்கும் தான் நான் மாணிக்கத்து கிட்ட வேலை செய்வேன்.. அதுக்கு இடையில மாணிக்கத்தை பற்றிய அனைத்து குற்றங்களுக்கான ஆதாரங்களையும் திரட்டிடுவேன்.. ஆதாரத்தை கொடுக்க வேண்டிய இடத்தில் கொடுத்து அவனுக்கான தண்டனை வாங்கி கொடுத்து. என்னால் முடிந்த ஒரு நன்மையை செய்வேன்..”
“ நானும் யோக்கியன் இல்ல.. நானும் கொலைகள், கட்ட பஞ்சாயத்து செய்து மாணிக்கதின் அனைத்து விஷயத்திலும் எனக்கும் சம்பந்தம் இருக்கு.. ஆனா அதெல்லாம் நான் மனசு வந்து மனசுல வஞ்சம் மற்றும் பேராசை வச்சு செய்ததில்லை.. 15 வயசுல வேலை தேடி போனேன்னு வீட்டு வேலை தோட்ட வேலை எடுபிடி வேலைன்னு எல்லா வேலையும் வாங்கினான்.. அப்புறம் எனக்கு 25 வயசு ஆகவும் என்னோட உடல் கட்டையும் முரட்டு தோற்றதையும் பார்த்து வேலையை எனக்கு மாத்தி தந்துட்டான்.. அவன் கிட்ட வேலைக்கு போவதும் புதை குளிக்குள்ள நாமளே போய் விழுறதும் ஒன்னு தான்.. புத்தி பிடிபட்டு இதெல்லாம் தவறு என்று மனசுக்கு பட்டாலும் அதிலிருந்து வெளியே வர முடியாத சூழல்.. நான் வெளிய வந்தா என்னை போடுறதுக்கு இன்னொருத்தனை அனுப்புவான்.. என் இடத்துக்கு இன்னொருத்தன் வருவான்.. அதுக்கு சந்தர்ப்பம் வரும் வரைக்கும் நம்மளே இருக்கலாம் என்று காத்திருந்தேன்.. இதோ இப்ப ரெண்டு நல்ல மனுஷங்களை காப்பாத்தி நான் செய்த தவறுக்கான பாதி பிராயசித்தம் தேடிக்கிட்டேன்.. இனி அவங்க மூலமா எனக்குன்னு ஒரு புது அடையாளத்தை தேடிக்கிட்டு என்னோட தொகுதி மக்களுக்கு என்னால் என்ன செய்ய முடியுமோ அவ்வளவு நன்மைகளையும் செஞ்சு ஒரு புது சோழனா பிறப்பெடுக்க போறேன்.. என்னடி செல்லா சிலை ஆகிட்டியா என்ன?. நான் பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன்.. நீ எந்த பிரதிபலிப்பு இல்லாமல் இருக்க.. ” என்றான்..
அவனது கைகள் தாளம் போடுவதை நிறுத்தி அவளது முகத்தை நிமிர்த்தி பார்த்தான்.. அப்பொழுதுதான் அந்த சிலைக்கு உயிர் வந்தது போன்று யோசிக்கும் அளவுக்கு கனவுலகில் இருந்து வெளி வந்தாள் செல்லம்மா..
அவன் பேசியவற்றில் இவளுக்கு எது காதில் விழுந்தது இல்லை என்று இருவருக்குமே தெரியவில்லை..
“ ஒன்னும் இல்லங்க நீங்க சொல்லுங்க நான் கேட்டுட்டு தான் இருக்கேன்.. ” என்றாள்..
“ நான் மாணிக்கத்தை நல்லா நம்பினேன்.. ஆனா அவன் என்னை ரொம்ப ஏமாத்தி கழுத்தறுத்துட்டான்.. நீ வந்த அன்னைக்கு காலைல தான் எனக்கு மாணிக்கம் என்றால் யார்?… மாணிக்கத்தின் உண்மையான முகம் என்னன்னு தெரிய வந்துச்சு.. கொலை மற்றும் கட்ட பஞ்சாயத்து பண்றவன்.. ஆள் கடத்தல் பண்ணுறவன் அவன். அவனெல்லாம் நல்லவன் நேர்மையாக இருப்பான் என்று நம்பினது என்னோட தவறுதான்.. அந்த தவறுக்காக தான் என்னோட 15 வருஷ வாழ்க்கையும் நான் வீணாக்கிட்டேன்.. ஆனா இப்ப நான் நம்புற ரெண்டு பேரும் அப்படிப்பட்டவங்க இல்லை.. அவங்க ஆட்சிக்கு வந்தால் இந்த நாட்டு மக்களே நல்லா சந்தோஷமா எல்லா வளமும் பெற்று இருப்பாங்க.. இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.. சண்முகம் ஐயா தான் அடுத்த முதலமைச்சர்.. அதனால இன்னும் ஐந்து வருஷத்துல நான் அமைச்சராகிடுவேன்.. கட்சியிலையும் சரி தொகுதியிலும் சரி ஏகப்பட்ட வேலைகள் இருக்கும்.. சாவகாசமா வந்து பேசி சிரிச்சு சந்தோசமா என்னால இருக்கறதுக்கு எனக்கு நேரம் கிடைக்காது.. நான் வீட்டுக்கு வரும்போது நீ என்னை பார்த்துக் கொள்ள வேண்டியது தான்.. நேர நேரத்துக்கு வீட்டு செலவுக்கு உனக்கு அம்மாக்கு பாட்டிக்கு எல்லாததுக்கும் தேவையான அளவுக்கு பணம் உன் கைக்கு தந்துடுவேன்.. என்னன்னா எப்ப தேவையோ எல்லாத்தையும் பார்த்து நீ வாங்கிக்கோ.. எங்க போறதா இருந்தாலும் நிலாவத் துணைக்கு அழைச்சிட்டு போ.. நீ இந்த ஊருக்கு புதுசு.. நான் கட்சியில் சேர்ந்து எனக்கு ஒரு பதவி கிடைத்தால் என் மேல உள்ள விரோதத்தில் உன்னை யாரும் எதுவும் பண்ண வாய்ப்பு இருக்கு.. அதனால எப்பயுமே கொஞ்சம் கவனமாக இருந்துக்கோ..! ” என்று கூறி அவளது கன்னத்தைக் கிள்ளிவிட்டு எழுந்து சென்றான் ..
அவளும் எழுந்து அவன் பின்னே சென்றாள்..
இருவரும் ஜோடியாகவே வீட்டுக்குள் சென்றதும் “ செல்லா சாப்பாடு எடுத்து வை குளிச்சிட்டு வரேன்.. ” என்று குளிப்பதற்காக தடுத்து வைத்திருந்த இடத்துக்கு சென்றான்..
பத்து நிமிடம் கழித்து குளித்துவிட்டு வந்து சாப்பிடும் இடத்தில் இருக்கவும் அதை உணர்ந்து கொண்டு அவனுக்கு காலை உணவை எடுத்து வைத்தாள்.. அவனும் பசியும் உணவின் ருசியும் சேர்ந்து எத்தனை இட்லிகள் உண்டான் என்பது அவனுக்கோ செல்லம்மாக்கோ கணக்கு இல்லை..
அவன் உண்ணும் வேகத்தை பார்த்து அவளும் அவன் தட்டில் முடியும் முன்பே வைத்து விடுவாள்..
ஒரு கட்டத்திற்கு மேல் தான் உணவு சற்று போதும் என்று தோணவும் நிமிர்ந்து பார்த்தான். அங்கிருந்த உணவு பாத்திரத்தில் இட்லிகள் இல்லை..
“ ஏய் செல்லா என்ன நீ நான் சாப்பிட சாப்பிட வச்சுட்டு இருக்க உனக்கு இருக்கா என்ன?…” என்றான்..
சாப்பிட்ட தட்டில் கையை கழுவி விட்டு அவளது புடவை முந்தானையில் கையை துடைத்துவிட்டு அவளது கையில் கையை வைத்துக்கொண்டு “ நீண்ட காலத்துக்கு பிறகு ஒரு பொண்ணோட கையில சமைச்சு சாப்பிடுறேன்..அம்மா இப்படி ஆனதுக்கு பிறகு எங்க பாட்டியோட சமையல் சாப்பிட்டாலும் ஆனா அதுல ருசியும் எந்த ஒரு உணர்வும் அந்த சாப்பாட்டுல எனக்கு கிடைத்ததில்லை.. அம்மா கையில சாப்பிடுவதற்கு பிறகு இப்ப திருப்தியா சந்தோசமா சாப்பிடுறேன்.. மனசு நிறைஞ்சிருக்கு அதுக்கு உனக்கு தான் நன்றி சொல்லணும்.. வார்த்தையால சொல்ல எனக்கு பிடிக்கலை.. ” என்று கூறிவிட்டு அவளது பிடித்து இருந்த கையை வைத்து அவளை எழுப்பி அறைக்கு அழைத்து சென்றான்..
“ ஏண்டி செல்லா நான் நேத்து இரவே சொன்னன் தானே..! நீ இப்படியே அமைதியா இருந்தா என்னை விட்டு மனசுளவில் ரொம்ப தூரம் போயிடுவ உன்னோட கையில தான் இருக்கு.. ஆனால் நீ அதற்கான எந்த ஒரு முயற்சியும் செய்ற மாதிரி தெரியலை .. சரி விடு அது ஒரு நாளில் எந்த ஒரு மாற்றமும் வந்துராது.. போக போக எல்லாம் நல்லதாகவே நடக்கும் என்று நம்புவோம்.. அம்மாவையும் பாட்டியும் பார்த்துக்கோ நீயும் கவனமா இரு.. ” என்று கூறி அவனுக்கு உடைய எடுத்து தருமாறு கேட்டு அதை எடு இதை எடு என்று அறையிலேயே வைத்து பம்பரமாக சுழற்றி அவளை வேலை வாங்கி வெளியே கதிரின் குரல் கேட்கவும் தான் வேகமாக அவள் இதழில் இதழ் பதித்து விட்டு கையால் போய் வருவதாக சைகை கூறிவிட்டு வெளியே சென்றான்..
சோழன் குடும்பத்தையும் எந்த ஒரு மேல் பூச்சியும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் நினைக்கிறான்.. அதேபோன்று அவன் செய்த பிழைகளுக்கான பிராயச்சிதம் தேடி நன்மைகள் செய்வதற்கும் அவனது புது வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கும் காத்திருக்கிறான்..
சாமி அவர்களது கட்சியில் நம்பகமான ஒருத்தருக்கு அழைத்து அவர்கள் இருவரும் உயிரோடு இருப்பதையும் அவர்கள் சந்தர்ப்பத்திற்காக பார்த்துக் கொண்டிருப்பதை கூறியவுடன் அவரும் அந்த கட்சியில் ஓர் உண்மையான தொண்டர் என்பதால் அனைவரையும் நல்வழிப்படுத்தி அமைதியாக அறவழிப் போராட்டம் நடத்துமாறு கூறினார்..
எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் எதிர் கட்சியின் இரு பிரமுகர்களின் இறப்பிற்காக நீதி நியாயம் கேட்டு அமைதி போராட்டம் ஆரம்பித்தது..
அனைத்து பத்திரிகை மற்றும் டிவி நியூஸ்களிலும் இதுவே தலைப்பு செய்தியாகவும் அட்டைப்படமாகவும் இன்றைய நாள் ஆரம்பித்தது..
இதை தெரிந்து கொண்ட மாணிக்கமும் போலீஸ் எப்படியும் மோப்பம் பிடித்து அவனை கண்டுபிடித்து விடுவார்களோ என்று பயந்து இன்றைய நாள் எந்த வித வேலைகளையும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்து அப்பொழுதுதான் வீட்டுக்கு வந்த கதிர் மற்றும் சோழனை இன்றைக்கு விடுமுறை என்று கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்தான்..
இந்த செய்தியும் இந்த கேசும் ஓரளவுக்கு முடிவுக்கு வரும் வரை ஆளும் கட்சி மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும் வரை எந்த ஒரு பெரிய வேலையும் ஆர்டர் பிடிப்பதில்லை என்று முடிவு எடுத்திருந்தான்..
கதிரோடு நேராக வீட்டுக்கு வந்த சோழன். “ என்னடா மச்சான் திடீர்னு இன்னைக்கு லீவ் கொடுத்துட்டாரு ஐயா என்ன செய்றதா இருக்க?..
“ எனக்கு என்னடா நான் அப்படியே என் அத்தை பொண்ணோட ஜாலியா டூயட் பாடிட்டு இன்றைய நாளை சந்தோஷமா கொண்டாடுவேன்.. எனக்கும் அவளுக்கும் ஒரே சண்டை வருது அவளுக்காக நான் நேரம் ஒதுக்குறதே இல்லைன்னு.. இன்னும் பத்து நாளில் அவளுக்கு பிறந்தநாள் வருது அப்படியே அவளை இன்னைக்கு பஜாருக்கு அழைச்சிட்டு போய் அவளுக்கு தேவையானதெல்லாம் வாங்கி கொடுத்து படம் பார்த்துட்டு ஜாலியா இன்றைய நாள் கழிக்க வேண்டியது தான்.. ” என்றான் கதிர்..