அதுதானே சோழனுக்கும் வேண்டும்.. கதிர் ஊருக்குள் இருந்தால் சோழன் எங்கே செல்கிறான் என்று அவனை பின் தொடர்ந்து மோப்பம் பிடிப்பது தானே கதிரின் வேலை..
அதனால் சுதந்திரமாக அவனால் செயல்பட முடியாது என்பதால் தான் அவன் என்ன செய்யப் போகிறான் என்று போட்டு வாங்கினான்..
இன்னும் எத்தனை மணிக்கு அவர்கள் போகிறார்கள் என்பதும் அவனுக்கு தெரிய வேண்டி இருந்தது.. ஆனால் அதை கேட்டால் ஒரு வேலை கதிருக்கு சந்தேகம் வந்துவிடும் என்று நினைத்து அந்த கேள்வியை கேட்காமல் அவனும் வீட்டிற்கு சென்றான்..
சோழனுக்கு திருமணமான விஷயம் கதிருக்கு தெரியாது என்பதால் சென்று விட்டான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு நேராக பக்கத்து தெருவில் இருந்த பூக்கார அம்மாவிடம் சென்று நெருக்கமாக கொடுத்த மல்லிகை பூவை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தான்..
அவனை அனுப்பியதும் வீட்டில் இருந்த அனைத்து வேலைகளையும் செய்துவிட்டு பாத்திரங்களையும் கழுவி வைத்துவிட்டு வெளியே வர பாட்டி எழுந்து அமர முயற்சி செய்து கொண்டிருந்தார்..
வேகமாக அவரது அருகே வந்து எழுந்து இருக்க உதவி செய்துவிட்டு.. அவருக்கு தலையணை வைத்து சாய்வாக அமர வைத்ததும் அவருக்கும் வள்ளிக்கும் காபியை கலந்து எடுத்து வந்தாள்..
காபி எடுத்து வரும்போது வள்ளியும் எழுந்து விட்டார்..
வீட்டு வாசல் அருகே வந்த சோழன் முன் கதவு சாத்தி இருந்ததால் பின் கதவு வழியாக உள்ளே சென்று நிலை வாசல் படியில் நின்று மனைவியின் வேலையை பார்த்துக் ரசித்து கொண்டிருந்தான்..
எந்த ஒரு முக சுழிப்பும் இல்லாமல் முகத்தில் அன்பும் கனிவும் கலந்து அவர்களுக்கு செய்ய வேண்டியதனைத்தையும் செய்து கொண்டு இருந்ததை பொறுமையாக நிதானமாக அவனும் நின்று ரசித்து கொண்டு இருந்தான்..
இந்த அன்பை தான் அவளிடம் அவனும் எதிர்பார்த்தான்..
இவர்களுடன் இலகுவாக ஒன்ற முடிந்த அவளால் அவனுடன் அவ்வளவு இலகுவாக ஒன்ற முடியவில்லை.. அதை அவனும் புரிந்து கொள்ளவில்லை..
அவர்களுக்கு அவள் காட்டும் அன்பும் அவனுக்கு அவள் காட்ட இருக்கும் அன்பும் வேறு என்பதை அவன் பிரித்து அறியாமல் அவன் அவளை எதிர்பார்க்கும் காலங்களில் இருவருக்கும் பிரிவு ஏற்பட போகிறது..
வித்தியாசமான உணர்வு தோன்ற எதேர்ச்சியாக நிமிர்ந்து பார்த்தாள் செல்லம்மா..
தற்பொழுது அரை மணி நேரத்திற்கு முன்பு தான் வேலைக்கு என்று வெளியே சென்ற கணவன் மீண்டும் வந்து நிற்பதை பார்த்து ஒரு நிமிடம் மனதில் பயம் வந்தாலும் அவன்தான் என்பதை முழுதாக உணர்ந்து கொண்டு தான் பயத்தை விளக்கி என்னவென்று கேட்டாள்..
“ என்னங்க எதையும் மறந்துட்டு போய்ட்டீங்களா?.. என்னன்னு சொல்லுங்க எடுத்துட்டு வரேன்.. இப்படியா சொல்லாம வந்து வாசல் படியில் இருப்பீங்க யாரோன்னு பயந்துட்டேன்..” என்றாள் செல்லம்மா.
அவள் பயந்து விட்டாள் என்பதை முகத்திலேயே அவன் கண்டு கொண்டான் அவளது பதட்டமும் கதை பேசும் விழிகளையும் வைத்தே தெரிந்து கொண்டான்..
“ என்னடி உன்னை விழுங்கிடவா போறேன்.. ஏன் இந்த பயம்?..” என்றான் அவளுக்கு சற்று அருகே வந்து மெதுவான குரலில்..
சோழனின் வரவை உணர்ந்த பாட்டி
“ இப்படி வா ராசா.. உன்னை கண்ணாரக் கண்டு எத்தனை நாள் ஆயிடுச்சு.. நாங்க உறங்கினதுக்கு பிறகு நீ வாற காலைல நாங்க எழுந்ததுக்கு முதல் போயிடுற. ஏன் ராசா இந்த பாட்டிக்கு கூட சொல்லக்கூடாது நீ கல்யாணம் பண்ணிக்கிட்டதை.. கல்யாணத்தை கண் குளிர பார்க்காமல் பண்ணிட்டியே..! ஆனாலும் ராசாத்தி மாதிரி ஸ்ரீதேவியா இருக்கா எங்க வீட்டு மருமக.. குணத்துல சொக்க தங்கம்.. புள்ள பொறந்த வீட்டுல ரொம்ப கஷ்டப்பட்டுடு ராசா.. நீ தான் ராணி மாதிரி வச்சு பார்த்துக்கணும்.. என்னையும் உங்க அம்மாவையும் பாரு நாங்க பட்டா கஷ்டத்தை உன் பொண்டாட்டி படக்கூடாதுன்னு உன் மனசுல நீ ஆழமா இந்த பாட்டி சொல்றதை நீ பதித்து வைத்துக்கொள்.. ” என்று சொல்லி அவனை அருகில் அழைத்து மனதார கண்களால் அவனது முகத்தை பார்த்து கைகளால் முகத்தை தடவி உச்சி முகர்ந்து கொண்டார்..
செல்லம்மா அவனது தோளை சுரண்டி காலில் விழுமாறு கூறினாள்..
அதை உணர்ந்து கொண்டு இருவரும் ஒன்று சேர்ந்தது போன்று பாட்டின் காலில் விழுந்து ஆசீர்வாதத்தை பெற்றுக் கொண்டார்கள்..
அதன் பின் அவளை அறைக்கு அழைத்து அவளுக்கு வாங்கிய பூவை கொடுத்தான்..
அதைப் பார்த்து ஏனோ தாலி மேஜிக் போன்று அவளது முகத்திலும் சிரிப்பு வந்தது..
முகத்தில் மெல்லிய சிரிப்போடு தான் அதை வாங்கி தலையில் சூடிக்கொண்டாள்..
“ நான் எதையும் மறந்துட்டு போகலடி.. இன்னைக்கி லீவ்.. காலையில தான் நேரம் இருக்குமோ தெரியலன்னு பேசுனேன் ஆனா இன்றைக்கு முழு நேரமும் உன்னோட மட்டும்தான்..”
என்று கூறிவிட்டு அறைக்குள் அவளது வருகைக்காக காத்திருந்தான்..
அவளும் வெளியே சென்று இருவருக்கும் செய்ய வேண்டியது அனைத்தையும் செய்து விட்டு மதிய சமையல் செய்வதற்கு அவனிடம் வந்து நின்றாள்..
“ ஏங்க மதியத்துக்கு கறி வாங்கிதாங்க..” என்றாள்..
“ ஆமாண்டி செல்லா வீட்டு சாப்பாடு உடம்புக்கு நல்லது.. நல்லா சாப்பிட்டு கொஞ்சம் தெம்பு ஏத்திக்கணும்.. இன்னைக்கு நீ சமைக்க வேணாம்.. நமக்கு கடையில பிரியாணி வாங்கிக்கலாம்.. அம்மாவும் பாட்டியும் எழுந்து கொண்டால்.. அவங்களுக்கு உடனே கஞ்சி சமைச்சிடலாம்.. அவங்களுக்கு இப்ப மருந்து கொடுத்துட்டியா?.. இன்னும் எவ்வளவு நேரத்தில் தூங்குவாங்க?..” என்றான்..
“ ஏங்க அவங்களுக்கு மருந்து இன்னும் கொடுக்கலங்க.. அவங்களை கொஞ்ச நேரம் காத்தாட வெளியில் உட்கார வைத்துவிட்டு தான் சமைக்க கொஞ்ச நேரம் முதல் அவங்களை உள்ள அழைச்சுட்டு வந்து மருந்து கொடுத்து தூங்க வச்சிட்டு நான் சமையல் வேலையை பார்ப்பேன்.. படுக்கையில் இருக்கிறவங்க சாப்பிட்டு மருந்து குடிச்சுட்டு படுக்கிறது அவங்க உடல் நலத்திற்கு சரியில்லங்க.. ” என்றாள்..
அவனது தாய் மற்றும் பாட்டி தான் இருந்தாலும் இந்த நேரம் அவனுக்கு உடனே கோபம் வந்துவிட்டது..
“ அந்த ஈர வெங்காயம் எல்லாம் எனக்கும் தெரியும்.. இன்றைக்கு மட்டும் தான் எனக்கு ஏதோ அதிசயமா லீவு கிடைச்சிருக்கு.. ஒழுங்கா நான் சொல்றத மட்டும் செய்.. போய் அவங்களுக்கு மருந்து கொடுத்து அவங்களை உறங்க வச்சிட்டு
சீக்கிரமா வா.. ” என்று கூறி அவளை அனுப்பி வைத்தான்..
அவனுக்கு அவனது கவலை..
நேத்துதான் முதலிரவு நடந்தது.. அதுவும் முதல் அனுபவம் என்பதால் அவனால் தொடர்ந்து அவளது உடல் சோர்வையும் மீறி அடுத்தடுத்து அவளோடு கலக்க அவனுக்கு விருப்பமில்லை..
தத்தித்தத்தி குழந்தை நடை பழகுவது போன்று தான் அவனும் முதலில் தாம்பத்திய பாடத்தை சிரமப்பட்டு கற்றுக் கொண்டான்..
அவனுக்கு அதைப் பற்றி பெரிதாக அறிவு இல்லாததால் எங்கே அவளுக்கு அதை உணர்த்துவது..
ஆனால் இன்று கிடைத்த நேரத்தை வீணாக்காமல் அவனும் பழகி அவளுக்கும் அதை சொல்லிக் கொடுக்க விரும்பினான்..
அவன் அரைவேக்காடு என்றால் இவளோ அதில் தத்தி..
முதுமை காரணமாக அவர்களுக்கு கொடுக்கும் மாத்திரையின் வீரியத்தால் இருவரும் சற்று நேரத்திலேயே மீண்டும் உறங்கி விட்டார்கள்..
வள்ளியோ இதெல்லாம் புரியும் மனநிலையில் அவர் இல்லை என்பதால் பாட்டி அவர்களுக்கு இடைஞ்சலாக இருக்க விரும்பாமல் அதை புரிந்து கொண்டு உறங்கிவிட்டார்..
அவன் சொன்னது போன்று அவளும் அடி எடுத்து அறைக்குள் வைத்த கணம்
இரு கைகளிலும் அவளை தூக்கி கொண்டு மஞ்சத்தை தேடிச் சென்றான்..
பகல் என்பதால் அவளுக்கு கூச்சம்.. உயிர் போகும் நிலையில் அவள் அதை தடுக்க முயற்சி செய்தாள்..
ஆனால் அவனுக்கு பகல் இரவு அனைத்தும் ஒன்று போல்..
ஒத்துழைக்காத காரணத்தால் இந்த முறையும் கட்டாயப்படுத்தி அவளுடன் இணைந்தான்..
அவளும் சரிக்கு சரி ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே அது சரியான தாம்பத்தியமாகும்..
ஒருவருக்கொருவர் கொடுத்து பெற்றுக் கொள்ள முடியும்..
ஆனால் இங்கே இந்த முறையும் அவள் கொடுக்காமல் அவனிடம் இருந்து பெற்றுக் கொண்டதையும் உணராமல் இருந்தாள்..
அவள் சோர்ந்து இருக்கிறாள் என்பதை உணர்ந்து கொண்டு முதல் கூடல் முடிந்ததும் அவளை விட்டு விலகி அவனும் சற்று நேரத்தில் உறங்கி விட்டான்..
எழ முயன்றவளை தடுத்து ஆளை அணைத்துக் கொண்டே உறங்கினான்..
அவளும் உடல் வலியாலும் மனவலியாலும் சோர்ந்து போய் உறங்கி விட்டாள்..
அவர்கள் ஊரில் அடுத்த தெருவில் இருந்த கோயிலில் மதிய பூசைக்கான மணி ஒலிக்கவும் அந்த மணி சத்தத்தில் தான் சோழன் முதலில் கண்விழித்தான்..
கண் விழித்தவன் அருகே வெப்ப காற்று மாதிரி அனலாக அடிக்கவும் சற்று அருகே நெருங்கி அவளை தொட்டுப் பார்த்தான்..
செல்லம்மாவிற்கு மனவலி மற்றும் உடல் வலி அதிர்ச்சிகள் என எதையும் ஏற்றுக் கொள்ள முடியாமல் அனைத்தும் சேர்ந்து அவளை பாடாகப்படுத்தி இதோ காய்ச்சலில் போட்டு விட்டது..
அவள் உடல் சூட்டை அவனது கையை சற்று நேரம் ஏற்றுக் கொள்ளவில்லை அவ்வாறு அனலாக கொதித்தது..
எழுந்து சென்று அவளுக்கு நைட்டி ஒன்றை அணிவித்து விட்டு குளிர் நீரில் ஒரு துணியை நனைத்து அவளது நெற்றி முகம் கழுத்து என அனைத்தையும் துடைத்து விட்டு அவனுக்கு தெரிந்த அளவில் அவனது உடல் சூட்டை சற்று குறைக்க முயன்றான்..
படிப்படியாக குளிர் நீரில் அவளது முகம் மற்றும் கை கால்களை துடைக்க காய்ச்சல் சூடு கொஞ்சமாக குறைந்தது..
பெண்கள் மூவருக்கும் சேர்த்து எழுந்து சென்று கஞ்சி வைத்து விட்டு அவனுக்கு சிம்பிளாக ரசம் சாதம் செய்து அப்பளமும் பொரித்துக்கொண்டன்..
அப்பொழுது தான் அவனுக்கு மேஸ்திரியிடம் இருந்து அழைப்பு வந்தது..
தற்பொழுது கல் மற்றும் சீமந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு இருப்பதாகவும் இன்னும் இரண்டு மூன்று நாட்கள் ஆனால் பொருட்களை ஒன்றுபடுத்திக் கொண்டு வந்து வீட்டில் குளியலறை கட்டிக் கொடுக்க முடியும் என்றும் கூறினான்..
சோழனும் என்ன நிதானத்தில் இருந்தானோ தெரியாது சரி என்று கூறி அழைப்பை துண்டித்து விட்டான்..
வேறு நேரமாக இருந்தால் சோழன் அவனை பாடாக படுத்திருப்பான்..
ஓரளவுக்கு அவளுக்கு காய்ச்சல் குறைந்ததும் எழுந்து அவன் கொடுத்த உணவை உண்டு விட்டு மருந்தையும் உண்டு விட்டு மீண்டும் களைப்பில் உறங்கி விட்டாள்..
இப்பொழுது தோட்டத்திற்கு வந்து சாமிக்கு அழைப்பு விடுத்து அடுத்த கட்டம் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டு தெரிந்து கொண்டான்..
இவ்வாறே எந்த மாற்றமும் இல்லாமல் அன்றய நாள் அவளுக்கு காய்ச்சலோடும் அவனுக்கு என்ன உணர்வென்று உணர முடியாத ஒரு நிலையோடும் கடந்தது..
விடிந்தால் நாளை காலை அவனே எதிர்பாராத ஒரு இடி ஒன்று அவனது தலையில் விழ இருப்பது தெரியாமல் அயர்ந்து உறங்கினான் சோழன்..