உமா மகேஷ் ஜோடிக்கு வாழ்க்கையில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் தாமரை இலை தண்ணீர் போன்று அவர்களது வாழ்க்கை சென்றது..
அவள் தனியே சமைத்து அவள் உண்டு விட்டு வீட்டில் இருக்கும் வேலைகள் செய்து என அவள் நாட்கள் கழிந்தது..
மகேஷ் காலையில் ஆபீஸ் சென்று விட்டு மாலையில் வந்தான் என்றால் அவனது அறைக்குள் லேப்டாப் வைத்து படம் பார்த்து கேம் விளையாடி என்று அவனது பொழுது கழிந்தது..
கோர்ட்டில் சொன்னது போன்று உமாவின் குடும்பம் அவளைத் பார்ப்பதற்கு வீட்டிற்கு வருவதில்லை..
உமாவின் கைபேசிக்கு அழைப்பு விடுத்து கோவில் அல்லது அவர்களது வீட்டிற்கு சற்று அருகில் இருக்கும் பார்க்கில் இது போன்ற பொதுவான இடங்களில் மாலை நேரங்களில் சந்தித்து பேசிக்கொள்வார்கள்..
இது மகேஷுக்கு தெரிந்தும் அவன் தெரியாதது போல் கடந்து விடுவான்..
அவனும் அவர்களை வீட்டுக்கு வருமாறு அழைக்கவில்லை.. இவர்களும் வீட்டிற்கு செல்ல நினைக்கவில்லை..
அவர்களது மகளை கண்ணார பார்த்தால் போதும்..
அன்று நடந்த பிரச்சனைக்கு பின் அங்கிருந்த அவனது அனைத்து பொருட்களையும் எடுத்துக் கொண்டு வந்து அவனது வீட்டில் வைத்ததும் போலீஸ் கேஸ் மற்றும் கோர்ட் என்று சென்றதும் மூன்று மாதங்கள் கழித்து இன்றுவரையிலும் சித்ராவின் வீட்டுக்கு அவன் செல்லவில்லை..
மூன்று மாதம் என்று வாங்கிக் கொடுத்த பொருட்களும் முடிந்து இப்பொழுது என்ன செய்வது என்று தெரியாமல் அனைவரும் தவித்துக் கொண்டிருந்தார்கள்..
மகனும் கைவிட்டு விட்டான்.. அண்ணனிடமும் பிரச்சினை ஆகிவிட்டது.. சித்ராவிற்கு இனி யாரிடம் சென்று கடன் கேட்பது என்று கூட தெரியவில்லை..
இவ்வளவு குடும்பத்தில் பிரச்சினை இருந்தும் இன்னமும் நிஷாவின் கணவன் வேலைக்கு செல்லும் எண்ணம் இல்லாமல் தான் ஊர் சுற்றி திரிந்தான்..
இப்படி நாட்கள் மேலும் ஐந்து நாள் சென்றதும்..
ஆபீஸ் முடிந்து மாலையில் மகேஷ் வீட்டிற்கு வரும் பொழுது இரண்டு வருடங்களுக்கு முன்பு பக்கத்து ஊரைச் சேர்ந்த ஒருவன் வந்து அனைத்து ஆவணங்களையும் காட்டி தொழில் செய்வதாக கூறி ஐந்து லட்சம் பணம் கடனாக பெற்றிருந்தான்..
தொடர்ந்து ஆறு மாதங்களாக சரியான நேரத்திற்கு வட்டி வந்து கொண்டு இருந்தது..
அதன்பின் இந்த ஒன்றரை வருடங்களும் வட்டியும் இல்லை அசலும் இல்லை அவனும் பல தடவை அவன் தொழிலுக்கு என்று கொடுத்த ஆவணத்தை சரிபார்த்துவிட்டு அந்த இடத்திற்கு சென்று பார்த்தான்.. ஆனால் அங்கு அவர்கள் இல்லை அந்த தொழிற்சாலையை வேறு ஒருவருக்கு விற்பனை செய்துவிட்டு அவன் சென்று விட்டதாக கூறியிருந்தார்கள்..
ஒரு வழியாக இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் அவன் இருக்கும் சரியான இடம் தெரிந்து அங்கே மகேஷும் அவனுக்கென்று இருக்கும் கையாட்களும் சேர்ந்து அவன் இருக்கும் இடம் சென்று பணம் கேட்டு அவன் தர முடியாது என்று தர்க்கம் செய்யவும் அவனுக்கும் மகேஷின் ஆட்களுக்கும் கைகலப்பாகி போலீஸ் கேஸ் ஆகிவிட்டது.. அதனால் அவன் கொடுத்த ஆவணங்கள் அனைத்தும் மகேஷிடம் இருந்து அதை வாங்கி சரி பார்த்து விட்டு களவாக அதை விற்பனை செய்ததை அறிந்து கொண்டு சட்ட பூர்வமாக இவன் மேல் தான் பிழை இருப்பதை உணர்ந்து இவனை கைது செய்து விட்டார்கள்..
அவனுக்கு இதுவே தொழிலாக இருந்தபடியால் அவன் எதற்கும் பயப்படாமல் இரண்டு நாட்களுக்கு முன்பு தான் ஜாமினில் வந்தான்..
மகேஷ் மேல் தீவிரமான கோவத்திலும் பலி வெறியிலும் இருந்தவன் இன்று மகேஷ் செல்லும் நேரம் சரியாக தெரிந்ததும் அவனது கையால் மூலம் லாரியால் மகேஷ் போகும் காரை விட்டு ஏத்துமாறு கூறி பணம் கொடுத்திருந்தான்..
அவனும் பணம் வாங்கி விட்டு மகேஷின் காரை சரியாக பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தான்..
அவனுக்கு ஜாமீன் வழங்கி இன்னும் இரண்டு மாதத்தில் சரியாக 5 லட்சமும் பணமும் அதற்கான நியாயமான வட்டியையும் கொடுக்குமாறு கூறியே வெளியே அனுப்பி இருந்தார்கள்..
இதுவரை காலமும் அவன் பல சூழ்ச்சிகள் செய்திருக்கிறான்.. ஆனால் யாருக்கும் அவன் பணம் மீண்டும் கொடுத்ததில்லை..
இவனைப் பார்த்தால் சாதரமாக விடுபவன் போல் இல்லை என்று மகேஷை பற்றி நன்கு அறிந்து கொண்டு அவன் உயிரோடு இருந்தால் இந்த பணம் கட்டாயம் கொடுக்க வேண்டும் என்பதால் அந்த ஐந்து லட்சம் ரூபாய் பணத்துக்கு பதிலாக அவன் உயிரையே எடுப்பதற்க்கு முடிவு செய்திருந்தான்..
அந்த லாரி இன்னும் சற்று நேரத்தில் மகேஷின் காரை இடிக்கும் தூரத்தில் வந்து கொண்டிருந்தது. லாரி ஒன்று ஏதோ கட்டுப்பாடு இல்லாமல் வருவதை பார்த்த மகேஷ் சற்று ஓரம் கட்டுவதற்காக முயன்ற போது வேகமாக வந்த லாரியும் அவனை அடித்து தள்ளிவிட்டு அந்த இடத்தை விட்டு சென்றது..
ஸ்டேரிங்கில் தலை அடிபட்டு மூக்கு தலை என்று இரத்தம் வழிந்து ஓடிக் கொண்டிருந்தது..
இருவருக்கும் பேச்சு கதைகள் இல்லை என்பதால் இவளும் அவனை எதிர்பார்த்து அவன் வருவதற்கு நேரம் போனால் கைபேசியில் அழைக்கும் எந்த ஒரு பழக்கமும் அவளுக்கும் இல்லை.. அவனுக்கும் தாமதமானால் வீட்டிற்கு வர தாமதமாகும் என்று கூறுவதும் இல்லை..
அதனால் இந்த விபத்து உமாவுக்கு தெரிய வாய்ப்பில்லை..
அந்த நேரம் அந்த வழியாக காரில் வந்த சோழன் எதிரே கார் ஒன்று விபத்தில் மாட்டிருப்பது பார்த்து உடனடியாக இறங்கி யார் எவர் என்று பார்த்து அவனை கார் கண்ணாடியை உடைத்து தூக்கி அவனது காரில் போட்டுக்கொண்டு ஊரில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றான்..
அவனது துரித செயல்பாட்டினால் உடனடியாக மகேஷை மருத்துவமனையில் சேர்க்க முடிந்தது..
விபத்து ஏற்பட்டதனால் அவனது கைபேசியும் செயலிழந்து இருந்தபடியால் அவன் யார் யாருக்கு அழைத்து கூற வேண்டும் என்றும் தெரியாமல் மருத்துவமனையில் பணத்தையும் கட்டி கூடவே இருந்து அனைத்தையும் பார்த்துக் கொண்டான் சோழன்..
சோழனுக்கு இவன் தங்கை உமாவின் கணவன் தான் என்பது தெரியாமல் போய்விட்டது..
சிறுவயதில் ஒரு முறை சோழன் மகேஷை பார்த்திருக்கிறான். அதன் பிறகு சோழன் அந்த ஊருக்கு சென்றதில்லை.. அதனால் மகேஷை யார் என்று தெரியாமல் போய்விட்டது..
இந்த ஊர் வழியாக தான் அவன் கட்சியின் தலைமை இடத்திற்கு செல்ல வேண்டும்..
நாளை அவனுக்கான எம்எல்ஏ பதவியின் பதவி பிரமாணம் செய்யும் விழா அதில் கலந்து கொள்வதற்கு தான் சோழன் இன்று அங்கே வந்திருந்தான்..
அப்பொழுதுதான் இந்த விபத்தில் மகேசை பார்த்து அவன் மருத்துவமனையில் சேர்த்து விட்டு காத்திருந்தான்..
சிறிது நேரத்திற்கு பின் தான் போலீசுக்கு மருத்துவமனை மூலம் இந்த விபத்தை பற்றி தெரிந்து அவர்களும் மருத்துவமனையில் வந்து சேர்ந்தார்கள்..
மகேஷை பார்த்துவிட்டு அவனுக்கு ட்ரீட்மென்ட் நடக்கும் டாக்டரிடமும் பேசி அவன் கண் முழித்ததும் மீண்டும் அறிவிக்கும் படி கூறி சென்றார்கள்..
யார் என்று தெரியாமல் எவ்வளவு நேரம் தான் அவனை மருத்துவமனையில் வைத்திருப்பது என்று நினைத்து விட்டு யோசித்தான்.. அப்பொழுதுதான் அவனுக்கு உமாவின் ஞாபகம் வந்தது.. அவள் இந்த ஊர் தான் என்று.. அவளுக்கு திருமணம் முடிந்தது அதன் பின்னால் வந்த பிரச்சினைகள் அனைத்தையும் செல்லம்மா தான் அவனிடம் கூறியிருந்தாள்..
ஆனாலும் அவனுக்கு நேரமின்மை காரணமாக உமாவிடம் இதுவரை அவன் பேசியதில்லை..
மகேஷின் பர்ஸ் சோழனின் கையில் இருந்தது அதில் இருந்த ஆதார் அட்டையில் அவனது பெயரை பார்த்து வைத்திருந்தான்..
சிறு வயது ஞாபகங்கள் சோழனுக்கு எப்போதும் கசப்பான ஒன்று.. அதனை அடியோடு மறக்க முயற்சி செய்தான்.. அதனால் மகேஷையும் அடியோடு அவன் மறந்தே போய் விட்டான்..
உடனடியாக காலம் தாழ்த்தாமல் அவனது வீட்டுக்கு அறிவிக்க வேண்டும் என்பதால் செல்லம்மாவிற்கு அழைப்பு விடுத்து உமாவின் நம்பரை பெற்றுக் கொண்டான்..
உமா இந்த ஊர் என்பதால் பெயரை சொன்னால் யார் என்று தெரிய வாய்ப்பிருக்கிறது என்று உணர்ந்து அவளிடம் கூறுவதற்காக அவன் கைபேசியில் இருந்து அழைத்து விட்டான்..
மகேஷ் செல்லம்மாவிற்கு அழைத்துவிட்டு வைத்ததும் அவள் உடனடியாக உமாவிற்கு அழைத்து சோழன் அவளது நம்பரை வாங்கியதாக கூறியிருந்தாள்..
செல்லம்மா செய்தது சரியான வேலை.. ஏனென்றால் உமாவின் கைப்பேசி எண்கள் யாருக்கும் பெரிதாக தெரியவில்லை..
அவளது வீட்டிற்கும் அவள் நெருங்கிய தோழிகளுக்கும் மகேஷுக்கும் மட்டுமே தெரியும்..
திடீரென்று சோழன் புது எண்ணில் இருந்து அழைப்பு விடுத்தால் அவள் கட்டாயம் எடுக்க மாட்டாள். யார் என்று தெரியாமல் பயந்து விடுவாள்..
அதனால் இந்த முறை வந்த அழைப்பு சோழனது என்பதை நன்கு உணர்ந்து கொண்டு அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்..
“ உமா நல்லா இருக்கியாடா?.. ” என்றான்..
“ நான் நல்லாத்தான் இருக்கேன்.. ஆனா உனக்கு தான் எங்க நினைப்பே மறந்து போச்சு.. இப்படி ஒரு தங்கச்சி இருக்கிறதே உனக்கு நினைவில்லை.. எனக்கு கல்யாணம் ஆகி மூணு மாசம் ஆயிடுச்சு.. அது அண்ணிக்கு தெரியும் ஆனால் உனக்கு தெரியுமா?..தெரியாதா?. அது எனக்கு தெரியாது.. சின்ன வயசுல பெரியம்மாக்கும் அப்பாக்கும் நடந்த ஒரு சின்ன பிரச்சனைக்கு பிறகு இன்னும் ஒரு வார்த்தை கூடி கால் எடுத்து நீ என்னோட பேசினதில்லை.. இப்ப மட்டும் தான் உனக்கு என் ஞாபகம் வந்திருக்கு. போ அண்ணா.. ” என்று அவன் இதுவரை பேசியது இல்லை என்ற கோபம் மற்றும் வருத்தம் கலந்து அவனுடன் பேசினாள்..
“ உமா அண்ணா இங்கே ஒரு வேலையா வந்தேன் டா.. உன்னையும் பார்த்துட்டு போவோம் என்று தான் வந்தேன்.. ஒரு சந்தோஷமான விஷயமும் சொல்லிட்டு போவோம் என்று. ஆனா இங்க ஒரு சிக்கலா போயிடுச்சு.. வரும்போது ஒரு கார் ஆக்சிடன்ட் ஆயிருச்சுமா.. அது யாரு என்னன்னு எனக்கு தெரியலை.. இங்கே இருக்கிற ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்கிறேன்.. அவங்களோட மொபைல் போன் ஆக்சிடெண்ட் ஆனதால பழுதா போயிடுச்சு.. அவரோட பர்ஸ்ல இருந்து ஆதார் அட்டையில் தான் அவர பேர் தெரிஞ்சுக்க முடிஞ்சது.. நான் சொன்னா உனக்கு தெரியுமா?.. இல்லை உனக்கு தெரியாட்டி உங்க அப்பாக்கு அங்க இருக்கிற எல்லாரையும் தெரியும்.. அவர் கிட்ட கொஞ்சம் விசாரிச்சு யாரு என்னன்னு தகவல் எனக்கு கொஞ்சம் சொல்ல முடியுமாடா?.. யாரோட உறவுக்காரர் என்று தெரிஞ்சா அவங்களுக்கு தகவல் சொன்னா அவங்க வந்து பாரம் எடுத்த பிறகு நான் உடனே போகணும்.. அவசரமான நிலை நீ அதை புரிஞ்சுகிட்டு அண்ணாக்கு இந்த உதவி செய்.. நான் எல்லா வேலையும் முடிச்சுட்டு உன்னை வந்து பார்த்துட்டு தான் போவேன்.. ” என்று கூறி சற்று அவளை சமாதானப்படுத்தி விட்டு அவளது பதிலுக்காக காத்திருந்தான்..