பாட்டியிடம் இருந்த தாயின் திருமண புகைப்படத்தை பார்த்து தான் சோழனுக்கு தந்தை யார் என்று தெரியும்..
அப்படி பார்த்ததும் அவனுக்கு அவர் தான் தந்தை என்று அறிந்து கொண்டு “அப்பா கிடைச்சிட்டாங்க தானே அம்மா. இனி நம்ம அப்பாவோட சந்தோஷமா வாழலாம் எனக்கும் அப்பா இருக்காங்க…” என்று சந்தோசமாக வள்ளியிடம் கூறினான் சோழன்..
சோழனுக்கு விவரம் தெரிந்த சிறு வயதில் அப்பா காணாமல் போய்விட்டார்.. என்று தான் பாட்டி கூறி இருந்தார்.. இப்போது அவரை பார்த்ததும் அப்பா இருக்காங்க.. என்று சந்தோஷமாக இருந்த அந்த சிறு நெஞ்சில் தாயும் தந்தையும் பேசிக் கொண்டதை கேட்டு அதனை தொடர்ந்து தந்தையின் வார்த்தைகளும் பேச்சுக்களும் கேட்டவன் அவர் பேசுவது தவறு என்று அந்த வயதிற்கு புரிந்த மட்டில் தாயை அங்கிருந்து அழைத்துக் கொண்டு உடனே சென்று விட்டான்..
அப்பொழுது அவர்களுக்கு உமாவும் பிறந்து முத்த மகனையும் தத்து எடுத்துக் கொண்டார்கள்..
அதனால் சோழனிடம் அங்கிருந்து புறப்பட்டதுமே வள்ளி சத்தியம் பெற்றுக் கொண்டார்.. பழனிச்சாமியை அங்கே கமலா விட்டில் பார்த்ததையும் அவர் அங்கே கமலாவை திருமணம் செய்திருப்பதையும் பாட்டிடமும் வேறு யாரிடமும் இனி கூறக்கூடாது.. தந்தையையும் இனி அடியோடு மறந்து விட வேண்டும்.. அவருடன் எந்த உறவும் வைத்துக்கொள்ளக்கூடாது.. அது சித்திக்கும் உமாவுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சிறு வயதில் சோழனுக்கு புரியும் படியே வள்ளி எடுத்துக் கூறினார்..
அவன் புத்திசாலி பிள்ளை என்பதால் உடனே புரிந்துகொண்டு தன் தாயின் கையில் சத்தியம் செய்துவிட்டு அன்றில் இருந்து பழனிச்சாமி என்பவனை முதல் முதலில் எதிரியாகவும் விரோதியாகவும் மனதில் பதித்துக் கொண்டான்..
பழனிச்சாமி திருமணமானவர் அதுவும் அவரது அக்காவையே திருமணம் செய்து கைவிட்டு விட்டு வந்தவர்.. என்பதை பற்றி எந்த ஒரு தகவலும் இதுவரை காலமுமே கமலாவுக்கு தெரியவில்லை..
உண்மை தெரிந்த பழனிச்சாமி வள்ளி சோழன் மூவரும் அதை மறைத்து விட்டார்கள்..
அவரால் தனது தாயும் தானும் படும் கஷ்டம் போதும் இந்த உதவாத உண்மை தெரிந்து சித்தியின் குடும்பமும் கஷ்டப்படப்பட்டு அவரை பிரிந்து சித்தி வாழ வேண்டாம்.. அவருடைய குடும்பத்தோடும் பிள்ளைகளோடு சந்தோஷமாக வாழட்டும் என்று சோழனும் நினைத்ததால் இதை கமலாவிடம் தெரியப்படுத்த விரும்பவில்லை..
உண்மை அவர்கள் மூவரோடும் மறைந்து விட்டது..
பழனிச்சாமி வள்ளியின் பசஞ்சோலை ஊருக்கு தலைமை மேஸ்திரியாக வேலைக்கு வந்து இருந்தார்..
அங்கே சித்தாளாக சென்று இருந்த வள்ளிக்கும் அவருக்கும் பழக்கம் ஏற்படுத்தான் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்..
அங்கிருந்து அவர் அவர்களை விட்டு வந்தது எதுவுமே ஏன் சித்ராவுக்கும் கூட இதுவரையும் தெரியாது..
வள்ளி அங்கே வந்திருக்கும்போது தான் கமலாவின் அக்கா வள்ளி என்பதை அறிந்து கொண்ட பழனிச்சாமி கமலா பல தடவை கேட்டும் அந்த ஊருக்கு அவர்களை அழைத்துச் செல்ல விரும்பவில்லை..
கோவிலூருக்கு கமலா வேலைக்கு சென்று இருந்தார்.. அப்பொழுது அவர்களை விட்டு பிரிந்து வந்து பழனிச்சாமி அந்த ஊரில் தான் வேலை செய்து கொண்டு இருந்தார்..
அந்த ஊர் தான் பழனிச்சாமியின் சொந்த ஊர் அவருக்கு தங்கை எல்லாம் இருப்பதை அறிந்த கமலா சொந்த ஊரில் வசிக்கிறார். சொந்த வீடு இருக்கிறது. வேறு எந்த கெட்ட பழக்கமும் இல்லை.. என்பதை அறிந்து கொண்டு பழனிச்சாமி தானாக வந்து திருமணம் செய்து கொள்ள கேட்டதும் மறுப்பு கூறாமல் ஒத்துக் கொண்டார் கமலா..
அதனால் கணவனும் அவரது ஊரிலேயே அவரது அக்காவை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டு வந்திருப்பார் என்பதை கமலா சற்றும் அறிந்திருக்க வாய்ப்பில்லை..
அந்த பிரச்சனைக்கு பின் அவர்களை விட்டு பிரிந்தவன்தான் சோழன்.. அதன் பிறகு இன்று தான் தந்தையும் மகனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள்..
பழனிச்சாமிக்கு சோழனை பார்த்ததும் ஏனோ ஒரு இனம் புரியாத ஒரு தவிப்பு மனதில் தோன்றியது..
பழனிச்சாமி ஒரு குடும்பத்தை உரு தெரியாமல் அழிக்க நினைத்தார் அதனால் இன்றுவரையில அவர்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்..
அப்படி வலியையும் சொல்லையும் கைவிட்டு வந்தவர் இங்கே இரண்டு பிள்ளைகளை தத்தெடுத்து தங்கைக்கு நல்ல விதமாக திருமணம் செய்து கொடுத்து நல்லது செய்து என்ன பயன்..
ஏன் அவர்களை விட்டு விட்டு வந்தார் என்று இன்றுவரையிலும் அவருக்கும் சரியான காரணம் தெரியவில்லை..
வள்ளிக்கு தெரிந்த காரணம் அவர் கூறியது இதுதான் “ உன்னிடம் அதிகம் காசு பணம் இல்லை.. கேட்ட சீர்வரிசை தர முடியவில்லை.. நீ எனக்கு வேண்டாம்..” என்று வள்ளியிடம் கூறிவிட்டு தான் பிரிந்து அந்த ஊரில் இருந்து சென்றார்..
வள்ளியுடன் நன்றாக வாழ்ந்திருந்தால் இந்த வயதில் அவருக்கு சோழன் ஒரு நல்ல மகனாக இருந்திருப்பான்..
அவன் வாழ்க்கையும் இவ்வாறு அடிதடி வெட்டு குத்து என்று திசை மாறி சென்றிருக்காது..
நன்றாக வளர்ந்து உடல் கட்டோடு இருக்கும் தனது மகனை யாரோ போன்று பார்க்கும் அவல நிலையை நினைத்து பழனிச்சாமி அன்று தவித்து போனார்..
வள்ளி உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பது கூட அவருக்கு தெரியாது.. ஆனால் அதை தெரிந்து கொள்ள சோழனிடம் கேட்கவும் அவருக்கு பிடிக்கவில்லை..
வள்ளி மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்று கமலாவின் மூலமாக தெரிந்து கொண்டவர் அதன் பின் அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள முடியவில்லை..
சோழனிடம் அவருக்கு பேச துடித்தது ஆனால் அவனது கண்ணிலும் முகத்திலும் தெரிந்த வெறுப்பை பார்த்தே அவன் தன்னை வெறுக்கிறான் என்பதை உணர்ந்து கொண்டு மேலும் பேசி இந்த சூழ்நிலையை சிக்கலாக்க விரும்பாமல் தவித்து நின்றார்..
எங்கே கமலாவுக்கு தெரியாமல் அங்கே சென்று வந்தால் எவ்வாரேனும் தெரிந்து அவர் விட்டுவிட்டு சென்று விடுவாளோ என்று பாய்ந்து தான் சோழனையும் கூட அவர் இதுவரையும் பார்க்க நினைத்ததில்லை..
அவருக்கு சோழனை பிடிக்காது என்று இல்லை.. என்ன குழந்தை என்று தெரியாமலே வயிற்றில் குழந்தை இருந்த நேரம்தான் அவர் வள்ளியை விட்டு வந்து விட்டார்..
அங்கே கமலாவை பார்க்க வந்த பொழுது தான் அவருக்கு ஆண் குழந்தை இருப்பதே தெரிய வந்தது..
ஆனாலும் அவர் சூழ்நிலையால் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்தார்..
எங்கே வள்ளி உண்மையைச் சொல்லி விடுவாரோ என்று பயந்து தான் வள்ளியின் மேல் தவறான எண்ணத்தை உருவாக்கி கமலாவை அவரை வீட்டை விட்டு அனுப்ப வேண்டும் என்று நினைத்துதான் பழியாக கணவனை இழந்த உனது அக்கா என்னை தவறான உறவிற்கு அழைக்கிறார் இனி அவள் இந்த வீட்டில் இருந்தால் தான் இருக்க மாட்டேன் என்று கூறினார்..
கமலாவிற்கு வள்ளி இவ்வாறு செய்திருப்பாள் என்று சத்தியமாக நம்ப முடியவில்லை.. ஆனால் ஏதோ கணவன் தவறாக புரிந்து கொண்டான் என்பதால் இன்னும் அக்கா இங்கு இருந்தால் வேறு ஏதும் பிரச்சினை வரும் என்பதை உணர்ந்துதான் கமலாவும் உடனடியாக அவர்களை ஊருக்கு செல்லுமாறு கூறினார்..
இது எதுவும் சோழனின் பாட்டிக்கு தெரியாது..
கமலாவை திருமணம் முடித்திருப்பது வள்ளியின் கணவன் என்று அவருக்கு தெரிந்திருந்தால் உடனடியாக அங்கே வந்து பிரச்சினை செய்து அந்த குடும்பத்தையும் அவர் பிரித்து அனைத்தையும் கெடுத்து இருந்திருப்பார்..
இது அவருக்கு தெரியாததால் தான் அவர் கமலாவுடன் நன்றாக பேசிக்கொண்டு இருந்தார்..
பழனிச்சாமி மகனின் முகத்தை பார்த்து கொண்டு பழைய நினைவில் இருந்தவரை மருத்துவரின் அழைப்பு கலைத்தது. ” ஹலோ சார் என்ன கேள்வி கேக்குறீங்க?.. அப்படி ஏதாவது முக்கியமானதா இருந்தா நான் ஏன் உங்ககிட்ட மறைக்க போறேன்.. எதுவா இருந்தாலும் அவர் கண் முழிச்சதுக்கு பிறகு தான் எங்களால் தீர்மானமா சொல்ல முடியும்.. ” என்று கூறிவிட்டு அவர் வெளி நோயாளிகளை பார்க்க சென்று விட்டார்..
சோழனுக்கு பழனிச்சாமியின் துரோகத்தால் பழனிச்சாமி மட்டுமே படிக்காமல் இருந்தது.. ஆனால் இது எதையும் தெரியாத கமலா மற்றும் அவரது பிள்ளைகளை எப்பொழுதும் அவன் வெறுத்ததில்லை..
அவனுக்கு உமா என்றால் அவ்வளவு பிரியம்..
ஒற்றைப் பிள்ளையாக சகோதரர்கள் இல்லாமல் பிறந்தவனுக்கு அவர்களோடு அங்கு இருந்த கொஞ்ச நாட்களிலேயே விளையாடி பழகி அவ்வளவு விருப்பம் அவர்கள் மேல்..
அதுவும் உடனேயே கலைந்து விட்டது..
யாருக்குமே தெரியாது என்பதால் தான் பழனிச்சாமியை உங்க அப்பா என்று உமாவிடம் அழைத்திருந்தான்..
பெற்ற தந்தையை அப்பா என்று அழைக்க முடியாத கொடுமை அவனுக்கு மட்டுமே நடந்தது..
டாக்டர் அறையை விட்டு சென்றதும் அவர்களும் ஒருவர் பின் ஒருவராக அவசர சிகிச்சை பிரிவுக்கு சென்றார்கள்..
பழனிச்சாமியால் தங்கள் வாழ்க்கையில் தான் பிரச்சனை இவர்களாவது சந்தோஷமாக வாழட்டும் என்று அவர்கள் பிரிந்து இருந்தார்கள்.. ஆனால் அவரால்தான் இன்று உமாவின் வாழ்க்கையிலும் ஏதோ பிரச்சனை என்பதை உமாவின் பேச்சில் தெரிந்து கொண்டான் சோழன்..
பட்டும் படாமலும் செல்லம்மாவின் மூலம் இதை தெரிந்து கொண்டவன் பெரிதாக எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை..
நாளைக்கு பதவி பிரமாணம் முடித்ததும் இங்கே வந்து உமாவின் வீட்டில் தங்கி இந்த பிரச்சினையை தீர்த்து விட்டு மீண்டும் ஊருக்கு செல்ல வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான்..
செல்லம்மாவை இங்கே அழைத்து வர விருப்பம் தான் அவனுக்கு.. ஆனால் அழைத்து வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டது..
மெதுவாக மகேஷின் கைகள் அந்த மருத்துவ உபகரணங்களையும் மீறி அசைந்ததை பார்த்த தாதிப்பெண் உடனடியாக மருத்துவரை அழைத்து கூறினாள்..
அந்த நேரத்தில் மருத்துவர்கள் அங்கே சூழ்ந்து அவனை கொஞ்சம் பரிசோதித்து விட்டு காயங்கள் மட்டுமே கொஞ்சம் பெரிது வேறு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை காயங்கள் ஆற இன்னும் இரண்டு மாதங்கள் ஆகும் என்று கூறிவிட்டு இரண்டு நாட்கள் அங்கே தங்கி இருந்து விட்டு செல்லுமாறு கூறி சென்றார்கள்..
ஸ்கேன் பண்ணி பார்த்ததும் தலையில் கட்டியோ வேறு எந்த பிரச்சனையோ எதுவும் இல்லை என்பதை கேட்டவுடன் தான் உமாவிற்கு நிம்மதியாக இருந்தது..
நாள் முழுவதும் யாரும் எங்கும் செல்லாமல் அங்கேயே உமாவிற்கு துணையாகவும் மகேஷிற்கு என்ன ஆனது என்று தெரிந்து கொள்ளவும் தவிப்பாக காத்திருந்தார்கள்..
இப்பொழுது தான் அவனுக்கு பெரிதாக ஒன்றும் இல்லை என்று தெரிந்ததும் கமலா மகளுடன் இருப்பதாகவும் மகனையும் பழனிச்சாமியை வீட்டிற்கு சென்று விட்டு வருமாறும் கூறினார்..
அவர்களும் அவர்களுக்கான காலை உணவை கடையில் வாங்கிக் கொடுத்துவிட்டு அங்கிருக்கும் பிள்ளைகளுக்கும் வாங்கிக் கொண்டு சென்று விட்டார்கள்..
இதுவரை காலமும் மறந்திருந்த உறவான சோழனை இன்று பார்த்ததிலிருந்து பழனிச்சாமிக்கு மனதே சரியில்லை..
சோழனும் அவனது பதவி பிரமாணத்திற்கு நேரம் ஆவதை உணர்ந்து உடனடியாக இதோ வருவதாக கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டான்..
யாரை வேண்டாம் என்று அவர் ஒதுக்கி விட்டு வேறொரு குடும்பத்தை தேடி வந்தாரோ அவரின் கண் முன்னே இன்று ஒரு பெரிய பதவியில் அவன் இருக்கப் போவதை உணர்ந்து அவனுக்கு பெருமையாகவும் அதே நேரம் தாயை நினைத்தால் அவர் மீது கொலை வெறியும் ஏற்பட்டது..
மேலும் இரண்டு நாட்கள் கழித்து பழனிச்சாமி குடும்பம் மருத்துவமனைக்கு வீட்டிற்கும் அழைந்து திரிந்து இதோ ஓரளவுக்கு அவனை கை தாங்கலாக நடக்க முடியும் என்று அறிந்ததும் அவனை மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அழைத்து வந்தார்கள்..
செல்லம்மாவிடம் அழைத்து விஷயத்தை கூறிவிட்டு சோழனே அனைத்தையும் பார்த்து மகேஷுக்கு செய்தான்..
இரண்டு நாட்கள் இருந்து அவர்களுக்கு அவனால் முடிந்த சிறிய அளவில் உதவிகளை செய்து விட்டு அவனும் பதவி காரணமாக ஊருக்கு சென்று விட்டான்..
மகேஷ் காலையில் கண்விழித்ததில் இருந்து பல் தீட்ட பிரஸ் கொடுப்பதில் இருந்து உடை உடுத்தி விடுவது உணவு ஊட்டுவது என அனைத்து உமாவே யாரின் உதவியும் இல்லாமல் தனியே செய்ததால் அவர்களுக்கு இடையில் இருந்த சிறிய ஊடல் மற்றும் இடைவெளியும் சிறிது சிறிதாக மறைய ஆரம்பித்தது..
சோழன் மகேஷின் வீட்டில் இருந்த வரையும் மருத்துவமனையில் இருந்து வந்த பின்பும் கூட பழனிச்சாமியை பார்க்கவில்லை.. அவருக்கும் மகனுடன் பேசும் ஆசை இருந்தாலும் அதனால் எதுவும் பிரச்சினை வந்துவிடுமோ என்று பயந்தே பேசாமல் இருந்து விட்டார்..
விட்ட உறவு விட்டதாக இருக்கட்டும் அதற்காக இருக்கும் உறவை முறித்துக் கொள்ள அவர் விரும்பவில்லை.
கணவன் அவர் மீது அவதூறு பழி போட்டும் தங்கையை அவர் திருமணம் செய்ததையும் அறிந்து கொண்டதும் சிறிது சிறிதாக அவருக்குள் ஒடுங்கி ஒடுங்கி யாரிடமும் இதை கூறவும் முடியாமல் தவித்து மனதில் போட்டு அழுத்தி வைத்ததால் வள்ளிக்கு மனநலம் பாதிக்கப்பட்டது..
மகேஷ் அவனாக உழைத்து கையில் பணம் பார்க்க ஆரம்பித்ததில் இருந்து பல இடங்களுக்கு தாயை அழைத்து காட்டிவிட்டான்..
மருத்துவர்கள் அனைவரும் உடல் நோய்க்கு மருந்து செய்து ஆப்ரேஷன் செய்து இது போன்ற செயல்கள் மூலம் குணப்படுத்தலாம் ஆனால் மன நோய்க்கு அவர்களாக தான் கொஞ்சம் கொஞ்சமாக குணமடைய வேண்டும்.. குணமடையும் வரை மனநலம் பாதிக்கப்பட்ட காப்பகத்தில் வள்ளியை சேர்க்குமாறு கூறினார்கள்..
அதில் சோழனுக்கு சற்றும் விருப்பம் இல்லாததால் தான் அவன் தாயை அங்கே சேர்க்காமல் வீட்டிலேயே வைத்து பார்த்துக் கொள்கிறான்..
வள்ளியின் தாய் நன்றாக இருக்கும் காலம் வரை அவரை பார்த்துக்கொண்டார். அவருக்கும் வயோதிகத்தால் முடியாமல் போன பின்பு தான் அவன் வேலைக்கு என்று ஆள் தேடி வைத்துக் கொண்டது..
இதோ பழனிச்சாமி என்னும் ஒரு மனிதன் செய்த பிழையால் சோழனின் வாழ்க்கையும் திசை மாறி சென்று விட்டது.. வள்ளியின் வாழ்க்கையும் அஸ்தமனம் ஆகிவிட்டது..
பழனிச்சாமியை உயர்வாக நினைத்திருக்கும் மகேஷுக்கு கூட இது தெரிய வாய்ப்பில்லை..
மகேஷுக்கு விபத்து என்று அறிந்த சித்ரா மருத்துவமனைக்கு நிஷாவுடன் வந்து பார்த்ததோடு சரி..
மீண்டும் மருத்துவமனைக்கோ அல்லது அவர்கள் வீட்டுக்கோ வந்து பார்க்கவில்லை..
மகளை இவ்வாறு கடன் படமும் கஷ்டப்படவும் வைத்த அவனுக்கு இது தேவைதான் என்று சித்ரா நினைத்துக் கொண்டார்..
இன்னும் நிஷா கணவனைத் திருத்தி அவனது உழைப்பில் சந்தோஷமாக வாழ நினைக்காமல் இன்னும் அண்ணனின் உழைப்பை சுரண்ட நினைப்பது மட்டும் சித்ராவிற்கு எந்த காலத்திலும் தவறாக படப்போவதில்லை..
என்னதான் நடந்தாலும் பெண் குழந்தை பெண் குழந்தை என்று தான் சில தாய்மார் இருப்பார்களே தவிர எவ்வளவுதான் செய்தாலும் ஆண் குழந்தைகளை திருமணத்தின் பின் அவர்கள் மதிப்பதே இல்லை..
ஆண்மகன் திருமணம் செய்துவிட்டு மனைவியின் பேச்சைக் கேட்டு அவர்களை ஒதுக்கி விடுவான்.. கடைசி காலம் வரை கணவனுக்கே தெரியாமல் மகள்தான் அவர்களது கடைசி காலத்தில் ஒரு வாய் உணவேனும் கொடுத்து பார்த்துக் கொள்வாள்.. என்ற கூற்று பெற்றவர்களின் மனதில் அதிகமாக பதிந்து விட்டது..
அந்த குடும்பத்தையே தந்தையின் இறப்பிற்கு பின் இருந்த தாங்கும் மகேஷிற்கு சற்றும் அவர் பாசமோ மரியாதையோ காட்டுவதில்லை சித்ரா..
மகேஷ் பணம் கொடுத்து வந்த வரைக்கும் அனைத்தையும் மனதில் வைத்திருந்தாலும் அவனது முகத்திற்கு நேராக எதையும் பேச முடியாது என்பதால் தரும் பணத்தை வாங்கி விட்டு சிரித்து சிரித்து பேசுவார்..
சித்ராவிற்கு பெற்ற மகன் அடிபட்டு இருந்தும் அவருக்கு கவலையோ வருத்தமோ எதுவும் இல்லை..
கணவனை உழைக்க அனுப்பாமல் யாரிடம் கடன் கேட்டு அன்றைய நாளை போக்காட்டலாம் என்று இருக்கும் சோம்பேறியான மகள் நிஷாவிற்கு தான் அவரது முழு ஆதரவும்..
உமா மற்றும் மகேஷ் ஜோடிக்கு இடையில் அவர்களது ஊடல் பெரும் அளவில் குறைந்து இருந்தது..
உமாவின் முகத்தை பார்த்து மகேஷ் ஓரிரு வார்த்தைகள் பேச ஆரம்பித்திருந்தான்..
அவள் சமைத்த உணவை வேண்டாம் என்று விட்டு கடையில் உண்டவன் இன்று அவள் ஊட்டும் உணவை தான் ரசித்து ருசித்து உண்டான்..
பினான்சியல் அலுவலக கணக்கு வழக்குகளை அவனது பிஏ மூலம் வீட்டிற்கு வரவழைத்து பார்த்துக் கொண்டான்..
பழனிச்சாமியும் கமலாவும் மகேஷை பற்றி உமாவிடம் கேட்டு தெரிந்து கொள்வார்கள்..
மருத்துவமனையில் வைத்து மகள் கதறி அழுது அவள் மனதில் இருப்பதை கூறியப்போது அதை தெரிந்து கொண்ட பழனிசாமியால் மகேஷ் மகளுக்கு அடித்ததை மன்னிக்க முடிந்தது..
கோர்ட் உத்தரவுபடி மகேஷ் வீட்டிற்கு அவர்கள் சென்று அவனைப் பார்க்க அவருக்கு தயக்கமாக இருந்தது..
அவர்களது தயக்கமும் உடைந்து குடும்பமே ஒன்று சேரும் காலமும் வரும்..
உமா மகேஷ் ஜோடியின் வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக மலர ஆரம்பித்தது..