எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அறவழி போராட்டத்தை பார்த்து பிரதமரே குற்றவாளி யாரென்று கூடிய சீக்கிரம் கண்டுபிடிக்கும்படி தமிழக அரசுக்கும் தமிழக போலீசிற்கும் உத்தரவிட்டிருந்தார்கள்..
நாட்டு பிரதமரே தலையிட்டதால் ஆளும் கட்சியினரால் எதுவும் சூழ்ச்சி செய்ய முடியவில்லை.. அவர்கள் மாட்டினால் இந்த எலக்ஷனில் அவர்கள் வெற்றி பெறுவது கஷ்டம் என்று உணர்ந்து ஆளுங்கட்சி உறுப்பினர் மாணிக்கத்திடம் விசயத்தை சொல்லிவிட்டார்..
தீவிரமான விசாரணையில் இறுதியாக மாணிக்கத்தின் பேரும் சோழன் மற்றும் கதிரின் பெயரும் வெளியாகியது..
விஷயம் கேள்விப்பட்ட மாணிக்கம் தப்பி சென்று விட்டான்.. கதிரின் கைப்பேசி நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால் அவனுக்கு தொடர்பு கொண்டு பேச முடியவில்லை… இனி அவன் போலீசில் மாட்டினாலும் சரி தப்பித்தாலும் சரி என்று மாணிக்கம் நினைத்து விட்டு விட்டான்..
சோழன் தான் கொலையாளி அதற்கு கையால் தான் கதிர் என்று கேள்விப்பட்டு முதலில் சோழனை பிடிப்பதற்காக காலையில் நேரத்தோடு போலீஸ் தான் சோழனின் வீட்டு கதவை தட்டி அவர்களது அன்றைய நாளை ஆரம்பித்து வைத்தது..
நேற்று முழுவதும் காய்ச்சலினால் நன்கு உறங்கியதால் கதவு தட்டிய சத்தத்தில் உடனடியாக செல்லம்மா விழித்துக் கொண்டாள்..
நீண்ட நேரமாக கதவை தட்டும் சத்தம் கேட்டதால் பயந்துவிட்டாள்..
சோழன் இன்னும் எழுந்து கொள்ளவில்லை..
சோர்வு களைப்பும் சேர்ந்து அவளை எழுந்து கொள்ள விடவில்லை.. இருந்தாலும் கதவு தொடர்ந்து தட்டுவதால் யார் என்று பார்க்க போட்டிருந்த நைட்டுக்கு மேல் ஒரு ஷாலை எடுத்துப் போட்டுக் கொண்டு வெளியே வந்து கதவை திறந்தாள்..
நான்கு ஐந்து பேர் போலீஸ் சீருடையில் இருந்தார்கள்.. வந்திருப்பது போலீசார் என்பதை அறிந்து கொண்டவள் என்னவென்று விசாரிக்கும் முன்பே வீட்டிற்குள் சென்று விட்டார்கள்..
அவள் சற்று ஒதுங்கி நிற்கவும் கடகடவென்று மூன்று பேர் உள்ளே சென்று அவர்களது அறை எதுவென்று அவளிடம் கேட்டு தெரிந்து கொண்டு உள்ளே சென்று உறங்கிக் கொண்டிருந்த சோழனை அப்படியே அவனது கன்னத்தில் ஓங்கி அடித்து அவனது தூக்கத்தை கலைத்து எழ வைத்தார்கள்..
போலீஸ் கன்னத்தில் அடித்த அடியில் வேகமாக கண் திறந்தவன் யார் அடிப்பது அவனை என்று பார்த்ததும் எதிரில் போலீசை பார்த்து என்னவென்று சற்று உணரும் முன்பே அவனது கையில் விளங்கும் மாட்டி அவன் எழுந்து நிற்கும் முன்பே அவனை இழுத்துச் சென்று விட்டார்கள்..
கட்டிருந்த லுங்கியுடன் மட்டுமே அவனது வீட்டில் இருந்து வேனில் ஏற்றிவிட்டு எந்த தகவலும் செல்லமாவிடம் கூறாமல் அக்கம் பக்கத்தில் ஆட்கள் வேடிக்கை பார்க்கவே அழைத்துக் கொண்டு நேராக கதிரியின் வீட்டிற்கு சென்றார்கள்..
சோழனை விட மோசமான ஒரு நிலையில் கதிரை கைது செய்து இருவரையும் ஸ்டேசனுக்கு அழைத்து சென்றார்கள்..
தொடர்ந்து செய்துவரும் கட்டப்பஞ்சாயத்து கொலை போன்ற குற்றங்களுக்கு மாணிக்கம் தான் காரணம் என்று போலீசுக்கு தெரிந்தாலும் ஆளுங்கட்சியின் உதவியோடு அவன் செய்வதால் அதை அவர்களால் தட்டிக் கேட்க முடியவில்லை..
இதுவரை காலமும் அவர்களுக்கு தண்ணீர் காட்டி மேல் இடத்திலிருந்து அவர்களை திட்டு வாங்க வைத்து மேலும் அவர்களுக்கு பிரஷர் கொடுக்க வைத்த சோழன் மற்றும் கதிர் மாணிக்கம் இன்னும் இருக்கும் அவனது கையாட்கள் அனைவரையும் கூண்டோடு அள்ளிச் சென்று யாருக்கும் தெரியாமல் அழித்து விடும் எண்ணம்தான் அந்த போலீஸ் அதிகாரிக்கு..
ஆனால் அதை செய்யும் அதிகாரம் அவரது கையில் இல்லை என்பதால் தொக்காக மாட்டிய சோழன் மற்றும் கதிர் இருவரையும் விசாரணை என்னும் பெயரில் அழைத்துச் சென்று அடித்து நொறுக்கி விட்டார்கள்..
உடனடியாக தொலைக்காட்சியில் இந்த செய்தி ஒளிபரப்பாகியது .. அதை சண்முகமும் கந்தசாமியும் பார்க்க நேர்ந்தது.
கந்தசாமிக்கு சற்று குற்ற உணர்வாக இருந்தது..
அவனின் நல்ல மனதே இவர்கள் இருவரும் உயிரோடு இருப்பதை காட்டிக் கொடுத்தது..
வேறு எவரேனும் அந்த இடத்தில் இருந்திருந்தால் இந்நேரம் இவர்கள் இருந்த தடம் தெரியாமல் போய் இருப்பார்கள் இருவரும்..
அவர்களுக்கு உதவி செய்து உயிரை காப்பாற்றி விட்டு அவன் தற்பொழுது ஜெயிலில் கஷ்டப்படுவதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை..
அவர்கள் இருவரும் இறந்து விட்டார்கள் என்று தான் இந்த அறவழிப் போராட்டமும் இந்தக் கைது நடவடிக்கையும் நடைபெற்றது..
அவர்கள் இதை மாணிக்கத்திற்கு தான் வலை விரித்தார்கள் அவன் சிக்கினால் அவர்களிடம் இருக்கும் ஆதரவத்தை காட்டி தற்போது அவனை உள்ளே தள்ளி விட்டால் ஆளும் கட்சியினருக்கு ஒரு பயம் ஏற்படும்.. எப்பொழுது தங்களை மாணிக்கம் மாட்டிவிடுவானோ என்று ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கும் தேர்தல் வரைக்கும்..
ஆளும் கட்சியினரின் பயம் எதிர்க்கட்சியினருக்கு சாதகமாக அமைந்துவிடும்..
அவர்கள் பயத்தில் செய்வது அனைத்தையும் தவறுதலாகவோ இல்லை தவறாகவோ செய்து மாட்டிக் கொள்வார்கள்..
அனைவரையும் தேர்தலில் இருந்தும் அமைச்சர் பதவியில் இன்னும் விலக்கி உள்ளே செல்வதற்கு போதிய அளவு ஆதாரத்தை திரட்டி கொள்ளலாம்.. இவர்களது நல்லாட்சியை அமைக்கலாம்.. என்று இவர்களது திட்டம் இப்பொழுது சோழனின் மேல் விழுந்தது தான் சண்முகத்திற்கும் கந்தசாமிக்கும் கவலையாக இருந்தது..
கந்தசாமி அந்த நம்பிக்கையான உறுப்பினருக்கு அலைபேசியில் அழைப்பு விடுத்து “ ஹலோ.. நாங்க ரெண்டு பேரும் இறந்துட்டோம்னு சொல்லி தான் சோழனை அரெஸ்ட் பண்ணி இருக்காங்க.. அதனால நம்ம கட்சி இதுல தலையிட முடியாது.. நம்ம வக்கீல் மூலம் வேற ஒரு வக்கீல் வச்சி நம்பிக்கையா வாதாடி சோழனை உடனடியா வெளிய எடுக்கணும்.. இதுக்கு ஏற்பாடு பண்ணுங்க நமக்கு நன்மை செய்த அவன் ஒரு நாள் கூட ஜெயில்ல கஷ்டப்படக்கூடாது.. ” என்று கூறி அலைபேசியை வைத்தார்..
சோழனை மட்டும் வெளியே எடுக்கும் செயற்பாடு வெற்றிகரமாக அன்றே முடிந்தது..
சோழன் தான் அவர்களை கொன்றான் என்பவருக்கு எந்த வித ஆதாரமும் இல்லை அதுவே அவனை வெளியே வர வைக்க போதுமானதாக இருந்தது..
அந்த வக்கீல் கதிரை வெளியை எடுக்க முயற்சி செய்யவில்லை..
கதிருக்கு சந்தேகம் வந்துவிட்டது சோழனை யார் வக்கீல் பிடித்து சோழனை வெளியே எடுத்தார்கள் என்று..
ஒருவேளை சோழனிடம் மாணிக்கம் டபுள் கேம் ஆடுவது போல் தன்னிடமும் ஆடுகிறானோ சோழனை அவனே எடுத்து விட்டு தன்னை நிற்கதியாக விட்டுவிட்டானோ..! என்று பலவாறாக யோசிக்க ஆரம்பித்தான் கதிர்..
சோழனுக்கு செல்லம்மா மீது கோவமாக வந்தது..
அவர்களை தடுத்து நிறுத்திவிட்டு அவள் வந்து விஷயத்தை கூறி எழுப்பியிருந்தால் அவன் எழுந்திருப்பான்.. அவர்கள் படுக்கை அறைக்கு வரும் வரை இவள் என்ன செய்து கொண்டிருந்தாள் என்பதே கோவத்திற்கு காரணம்..
சோழனுக்கு போலீஸ் லத்தியால் அடித்து பல இடங்களில் ஊமை காயமும் வீக்கமும் என நடக்க முடியாமல் சிரமப்பட்டு தான் நடந்து வீட்டிற்கு வந்தான்..
அவர்களது கட்சி ஆட்சிக்கு வந்ததும் அவன் பதவிக்கு வந்ததும் முதலாவதாக இந்த இன்ஸ்பெக்டருக்கு அவன் யார் என்று காட்ட வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான்..
ஐந்து நாட்களாக சோழன் எங்கும் செல்லாமல் அந்த வீட்டிற்குள்ளேயே இருந்து அவளது கவனிப்பில் நன்றாக உண்டு உறங்கி காயத்தை ஆற்றிக்கொண்டான்..
அவனால் நன்றாக நடக்க முடியும் என்று தெரிந்த பின் தான் அன்று இரவு அவர்களை சந்திக்க சாமி இருக்கும் வீட்டிற்கு சென்றான்..
நடந்தவற்றை அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினான்..
இப்பொழுது வரை மாணிக்கம் எங்கு சென்று தப்பித்து மறைந்திருக்கிறான் என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை..
மாணிக்கம் மாட்டிக் கொள்ளவில்லை என்பதை அறிந்து அளுங்கட்சியினர் சற்று தைரியமாக எலெக்ஷன் வேளையில் ஈடுபட்டார்கள்..
நாட்கள் யாருக்காகவும் காத்திருக்காமல் இதோ விடிந்தால் எலெக்சன் என்னும் நிலையில் வந்து நின்றது..
மாணிக்கம் இல்லை அதனால் அவன் வேலை என்று எங்கும் செல்லாமல் அதிக நேரத்தை வீட்டிலேயே கழித்தான் சோழன்..
வீட்டில் இருந்தால் நன்றாக செல்லம்மாவுடன் பேசி சமையலுக்கு அவளுக்கு சிறு சிறு உதவிகள் செய்து கொடுத்து பாட்டி முழித்திருக்கும் நேரம் பாட்டியுடன் பேசுவது தாயைப் பார்த்துக் கொள்வது என்று அவனது நாட்கள் கழிந்தது..
எப்படி இருந்தாலும் மாணிக்கம் எங்கே இருக்கிறான் என்பது ஆளும் கட்சியினருக்கு தெரியும்..
அதை அறிந்த கந்தசாமி மாணிக்கத்தின் வீட்டில் பேசுவதை உன்னிப்பாக முத்துவை அறிந்து கொள்ள சொன்னார்..
எலக்சனுக்கான பிரச்சாரங்கள் அனைத்தும் முடிந்து எலக்சன் நாளும் விடிந்தது..
நேரம் சரியாக காலை 05 00 மணி சோழனின் கைபேசியில் இருந்த மாணிக்கத்தின் குற்றங்களுக்கான ஆதாரத்தோடு சண்முகம் மற்றும் கந்தசாமியை வைத்து அன்று இரவு சோழன் எடுத்த வாக்க மூலம் வீடியோக்கள் என அனைத்தையும் அவர்களுக்கு நம்பகமான டீவி சேனலுக்கு அனுப்பி வைத்தார்கள்..
சண்முகம் இறந்து விட்டதினால் முன்பே எதிர்க்கட்சியின் வேறு ஒருவர் முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்திருந்தார்கள்..
இந்த காணொளிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி அன்றைய நாளை பரபரப்பாக ஆரம்பித்து வைத்தது..
சண்முகம் மற்றும் கந்தசாமி இருவரும் வெளியேறியதும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர்களுக்கான கேள்விகள் தொடங்கப்பட்டது..
அனைத்திற்கும் ஒரே பதிலாக எலக்சன் முடிந்ததும் இதைப் பற்றி பேசலாம் என்று சண்முகம் உறுதியாக கூறிவிட்டார்..
முதலமைச்சர் மற்றும் ஆளுங்கட்சி அமைச்சர்கள் உறுப்பினர்கள் என அனைவரும் பேசியதற்கான ஆதாரங்கள் அவர்கள் சந்தித்துக் கொண்டதற்கான ஆதாரங்கள்..
கந்தசாமியின் கொலைக்கு அடுத்து சோழன் மாணிக்கத்தின் வீட்டில் இருக்கும் வரை அவனை எடுத்த வீடியோக்கள்..
என இன்னும் பல ஆதாரங்கள் ஒரே நேரத்தில் வெளியாகியது..
08. 30 மணி அளவில் தேர்தல் நடைபெற இருப்பதால்..
முதலமைச்சர் தவிர மற்றவர்கள் அனைவரும் உடனடியாக கைது செய்யப்பட்டார்கள்..
தேர்தல் ஆணையத்தினால் அவருக்கு எலக்சன் முடியும் வரை மட்டுமே பிணை கொடுக்கப்பட்டது..
தேர்தலும் வெற்றிகரமாக ஆரம்பித்து எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் நன்றாகவே நடந்து முடிந்தது..
ஐந்து நாட்கள் கழித்து முடிவுகள் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது