அவனும் அதற்கு எந்த பதிலும் கூறாமல் இருந்துவிட்டான்..
செல்லம்மாவும் உமாவும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது செல்லம்மா உமாவை அன்று என்ன சமைத்தாய் என்று கேட்டாள்..
அப்பொழுது நேரம் போகிறது இன்னும் சமைக்கவில்லையா என்று செல்லமாக கேட்ட போது உமா சொன்னாள் மகேஷ் வந்து தான் காய்கறி வாங்கி தர வேண்டும் அதன் பின் தான் சமைக்க வேண்டும் என்று..
வேலைக்கு செல்லும் ஆண்களுக்கு வேலை அதிகம் இருக்கும் அதை எல்லாம் பெண்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்..
உன் கையில் இருக்கும் பணத்தில் நீ வாங்கிக் கொள்ள வேண்டியதுதானே என்று கேட்டாள்..
அதற்கு உமா சொன்னாள் செல்லம்மாவிடம் தனக்கு கணவன் பணம் தருவதில்லை என்று..
அதைக் கேட்ட செல்லம்மா என்ன இது என்ற காரணம் கேட்டதால் அனைத்து பொருட்களும் மகேஷ் வாங்கி தருவதால் அவளுக்கு பணம் தேவையில்லை என்று கூறினாள்..
பெண்களுக்கு கட்டாயம் கையில் சொற்ப பணமாவது எப்பொழுதும் இருக்க வேண்டும் அவசரத்திற்கு இல்லையென்றால் கஷ்டப்படுவோம் என்று செல்லம்மாக கூறினாள்..
இன்று மகேஷ் வீட்டுக்கு வந்ததும் அவளுக்கு பணம் தேவை என்று கேட்கும்படி செல்லம்மா உமாவிடம் கூறினாள்..
செல்லம்மா தீங்கு சொல்லிக் கொடுக்கவில்லை நல்லதைத்தான் உமாவிற்கு சொல்லிக் கொடுத்தாள்..
எவ்வாறு கேட்பது என்று தயங்கியே இரண்டு மூன்று நாட்களை கழித்து விட்டாள்..
பணம் அவளது கையில் இல்லை என்று அவள் வருத்தப்படும் நாளும் வந்தது..
போன மாதம் அவளுக்கு பீரியட் வரவில்லை.. அதனால் ஒருவேளை குழந்தை உண்டாகி இருக்கிறதோ என்று அவள் சந்தேகப்பட்டாள் உமா..
குறைந்தது 50 நாளாவது ஆகட்டும் பரிசோதித்து பார்க்கலாம் என்று காத்திருந்தாள்..
ஆனால் இன்று அவளுக்கு பீரியட் வந்து அது குழந்தை இல்லை என்று தெரிய வந்தது..
தாயின் வீட்டில் இருக்கும் போது அங்கே விஸ்பர் எப்பொழுதும் அதிகமாகவே இருக்கும் அதை எடுத்து பாவித்து கொண்டாள்..
இங்கே வந்ததும் மகேஷுக்கு விபத்து ஏற்பட்டதும் அவன் கடைக்குச் செல்ல முடியாததால் அவனது பிஏ விடம் தான் பில் போட்டு தேவையான பொருட்களை எழுதி கொடுத்து பணமும் கொடுத்தாள்..
அந்நிய ஆணிடம் பில்லில் எழுதிக் கொடுப்பதாக இருந்தாலும் அதில் விஸ்பர் எழுதுவதற்கு தயங்கி அவள் எழுதிக் கொடுக்கவில்லை..
அதனால் இப்பொழுது அவளிடம் விஸ்பர் வீட்டில் இல்லை..
என்ன செய்வது என்று தவித்து போய் நின்றாள்..
வயிற்று வலி ஒரு பக்கம் உயிரை எடுத்தது..
உடனடியாக மகேஷுக்கு அழைப்பு விடுத்தாள்.. அவன் அறையில் கைபேசியை வைத்துவிட்டு வெளியே வேலையாக வந்ததால் அழைப்பை ஏற்கவில்லை..
தாயிடம் கேட்டால் இதைக்கூட மகேஷ் அவளுக்கு வாங்கி கொடுக்கவில்லை. என்று அவர்கள் தவறாக நினைப்பார்கள் என்று கேட்கவில்லை..
மகேஷ் காய்கறி வாங்கி கொண்டு வருவதற்கு இன்னும் நேரம் இருந்தது..
வயிற்று வலி மற்றும் சோர்வினால் அப்படியே படுத்து உறங்கி விட்டாள்..
மீண்டும் எழுந்த போது அவளது ஆடையில் கறை பட்டு ஆடை பழுதாகிவிட்டது..
இன்றைய நாள் அவளது நிலை நினைத்து அவளுக்கு கண்ணீர் நிற்காமல் வழிந்தது..
படுக்கையை விட்டு எழுந்து உடையை மாற்றி விட்டு வருவது வரட்டும் என்று நினைத்து தாயின் கைபேசிக்கு அழைப்பு விடுத்தாள்..
அந்த பக்கம் கமலா எடுத்ததும் அவளது நிலையை கூறி உடனடியாக விஸ்பர் வாங்கி வருமாறு கூறினாள்..
கமலாவும் உடனடியாக வாங்கி வந்து மகளை அழைத்து அவளது வாசலில் வைத்து கொடுத்தார்..
விஸ்பர் மற்றும் மாத்திரையை வாங்கிக் கொண்டு உமா உள்ளே சென்று சுத்தப்படுத்திவிட்டு வந்து தாயை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டு மகேஷிடம் அவள் கேட்கவில்லை அதனால் தற்பொழுது இல்லை என்பதை கூறி அவனை தவறாக நினைக்க வேண்டாம் என்றும் கூறி வேறு யாருக்கும் கூற வேண்டாம் என்றும் கூறினாள்..
கமலா சரி என்று தலையாடிவிட்டு மகளின் தலையை தடவி நெற்றியில் முத்தம் பதித்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார்..
வீட்டில் இருந்த பாலை சூடு பண்ணி குடித்து பிஸ்கட்டை உண்டு விட்டு மாத்திரையை போட்டு விட்டு அவளும் சோர்வினால் படுத்து உறங்கி விட்டாள்..
அப்பொழுதுதான் அறைக்கு வந்து கைபேசியை எடுத்துப் பார்த்த மகேஷ் தொடர்ந்து உமாவிடம் இருந்து அழைப்பு வந்திருப்பதை பார்த்து அவளுக்கு மீண்டும் அழைத்தான்..
அவள் அழைக்கும்போது அவன் வேலையாக இருந்தால் இப்பொழுது அவன் அழைக்கும்போது அவள் எடுக்கவில்லை..
என்னவோ ஏதோ என்று அவன் வேகமாக வீட்டுக்கு வந்தான்..
அவனிடமும் ஒரு கீ இருந்தது அதை வைத்து கதவை திறந்து அவர்களது அறைக்குள் சென்று பார்த்த போது உமா படுத்திருந்தாள்..
நெற்றியும் கழுத்தையும் தொட்டு பார்த்தான் காய்ச்சல் இல்லை.. ஆனால் ஏன் படுத்து இருக்கிறாள் என்று தெரியவில்லை..
சற்று அவளை உலுக்கி என்னவென்று கேட்டான்..
அவளும் பீரியட் வந்திருப்பதாகவும் வயிறு வலிப்பதாகவும் சோடா வாங்கி தருமாறும் கேட்டாள்.. சோடா கொஞ்சம் குடித்தால் வயிற்று வலி மட்டுப்படும் என்று கூறினாள்..
உடனே சென்று மகேஷ் அதை வாங்கி வந்து கொடுத்தான்..
அவளுக்கு முடியவில்லை என்பதை உணர்ந்து மதியமும் இரவும் இன்று கடையில் உணவு எடுத்துக் கொள்ளலாம் அவளை ஓய்வெடுக்கும் படி கூறினான்..
சொன்னது போன்றே சற்று நேரத்தில் வெளியே சென்று பிரியாணியும் அவளுக்கு அதற்கான மாத்திரையும் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தான்..
எழுந்து அவளால் முடிந்தளவு பிரியாணி உண்டு விட்டு அந்த மாத்திரையும் போட்டு விட்டு மீண்டும் படுத்து விட்டாள்..
மகேஷ் ஆபீஸ் சென்று விட்டு மாலையில் வரும் போது சூடாக வடை வாங்கிக் கொண்டு வந்தான்..
அவனே வந்து இருவருக்கும் டீ கலந்து அவளை எழுப்பி டியும் சூடாக வடையும் கொடுத்து உண்ணும் படி கூறினான்..
இதுதான் சந்தர்ப்பம் என்று அவன் தந்ததை சாப்பிட்டு விட்டு அவனிடம் கேட்டாள்..
“ அத்தான் ஏன் நீங்க என் கையில பணம் தருவது இல்லை..” என்றாள்..
“ பணம் தரக்கூடாதுன்னு இல்லை உமா.. அது ஒருத்தர் தேவையான செலவு செய்து பணத்தை சேமித்து வச்சா மட்டும் தான் இந்த வீட்டை சீக்கிரமாக கட்டி முடிக்க முடியும்.. நம்ம சந்தோஷமா வாழ்க்கையை ஆரம்பிக்க முடியும்..நான் சொன்னால் நீ கோவிக்க கூடாது.. உங்க வீட்டில ஆட்கள் அதிகம் உங்க அம்மா நாலஞ்சு கறி வகைகள் சமைச்சு தான் எல்லாருக்கும் சாப்பாடு கொடுப்பாங்க.. அதை நீ இங்கேயும் கடைபிடிக்கிற இது தவறு தானே.. இங்க நம்ம ரெண்டு பேரும் தான் ஆனா நான் டெய்லி வாங்கிட்டு வரும் காய் கறியை அன்னைக்கே நீ சமைச்சிடுற.. நம்ம ரெண்டு பேருக்கு ரெண்டு கறி வகை சமைச்சா மட்டும் போதும்.. நாலஞ்சு கறி வகை நமக்கு வீண் செலவு.. இனி அதைக் குறைத்துக் கொள்ளலாமே.. நாம் நான் முன்னவே உன்கிட்ட சொல்லி இருப்பேன்.. ஆனா சாப்பிடுற விஷயத்துல நான் கணக்கு பண்றேன் என்று நீயும் உங்க வீட்டு ஆட்களோ என்னை தவறாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று விட்டுவிட்டேன்.. சரி இன்னைக்கு நான் உனக்கு பணம் தரேன்.. அதை நீ சரியா கணக்கு வைத்து எனக்கு முடிச்சு காட்டு அதுக்கு பிறகு நான் உனக்கு திரும்ப பணம் தரேன்.. ” கூறி அவனது பர்சில் இருந்து 5000 ரூபாய் பணத்தை எடுத்துக் கொடுத்தான்..
அதை வாங்கி கொண்ட உமா இன்று நடந்ததையும் செல்லம்மா பணம் கேட்கும் படி கூறியதையும் கூறினாள்..
அவன் மீது தான் தவறு இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டு தாயிடம் வாங்கியதைப் பற்றி எதுவும் கேட்காமல் அவளிடம் மன்னிப்பு கேட்டான்..
நாட்கள் யாருக்கும் காத்திருக்காமல் மேலும் மூன்று மாதங்கள் கடந்தது..
அப்பொழுது உமா கருவுற்றிருந்தாள்..
அதை கேட்ட மகேஷ் மகிழ்ச்சி அடைந்தான்.. உடனடியாக வீட்டு வேலையை குழந்தை பிறப்பதற்கு முன் செய்து முடிக்க வேண்டும் என்று அவனது பெயரில் ஒரு சிறிய லோன் ஒன்றை அவனாகவே எடுத்து வீட்டு வேலையை ஆரம்பித்து விட்டான்..
மாதம் அவனுக்கு என்று அவன் எடுக்கும் சம்பளத்தில் இந்த லோனுக்கான பிடிப்பை அவன் கட்டி விடுவான்..
பழனிச்சாமி கமலா தம்பதியினருக்கு மகிழ்ச்சிக்கு அளவே இல்லை..
சோழனும் தந்தையாகப் போகிறான் மகளும் தாயாகப் போகிறாள் என்று மகிழ்ச்சி பழனிச்சாமிக்கு அளவற்றிருந்தது..
தினமும் கமலா குடும்பத்தினர் அனைவரும் வந்து அவளை பார்த்து விட்டு சென்றார்கள்..
அன்று கோர்ட்டுக்கு வீட்டை விட்டு வெளியே வந்தவள் அதன்பின் தாய் வீட்டிற்கு செல்லவில்லை உமா..
மேலும் நாட்கள் செல்லச் செல்ல உமா விற்கும் செல்லமாவுக்கும் பிரசவம் நெருங்க நெருங்க பயம் ஏற்பட்டுவிட்டது..
தினமும் இரண்டு முறை அல்லது மூன்று முறை என்று கைபேசியில் பேசி கொள்வார்கள்..
இதுவரை இருவரும் ஒருவரை ஒருவர் நேரில் பார்த்ததில்லை, ஆனால் ஒருவகை பாசபிணைப்பு இருவரிடமும் இருந்தது..
சரியான நேரத்தில் செல்லம்மா அழகான ஆண் குழந்தை ஒன்றை சுகப்பிரசவத்தில் பெற்றெடுத்தாள்..
பாட்டி சொல்லிக் கொடுக்க சொல்லிக் கொடுக்க செல்லம்மாவை குளிக்க வைப்பது குழந்தையை பராமரிப்பது பால் கொடுப்பது தலை பிடிப்பது மூக்குப்பிடிப்பது என்று அனைத்தையும் பக்குவமாக செய்தாள்..
இப்பொழுது அவனது உதவி தேவை என்பதால் சோழன் அதிக நேரம் வெளியே இருக்காமல் நேரத்தோடு வீட்டுக்கு வர பழகி இருந்தான்..
கைக்குழந்தை வைத்து செல்லம்மா கஷ்டப்படும் பொழுது சோழன் அனைத்து விதத்திலும் அவளுக்கு உதவியாக இருந்தான்..
செல்லம்மாவின் குழந்தைக்கு ஆறு மாதம் ஆகும் பொழுது உமாவும் ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள்..
ஒருவர் போல் ஒருவர் பேசி வைத்து குழந்தை இருவரையும் நன்றாகவே அன்பாக வளர்த்தார்கள்..
செல்லம்மாவின் குழந்தைக்கு ஒரு வயது முடிந்து சில நாட்களில் பாட்டி தூக்கத்திலேயே இறந்துவிட்டார்..
பாட்டியின் இறப்பை கேட்ட கமலா இப்பொழுதாவது தன்னை அழைத்துச் செல்லுமாறு கூறி குடும்பத்தோடு அங்கே வந்து சேர்ந்தார் ..
பழனிச்சாமியும் வள்ளியை பார்ப்பதற்காக காத்திருந்தார்.. அதனால் எந்த மறுப்பும் சொல்லாமல் உடனே அழைத்து வந்து விட்டார்..
சோழனும் ஓரளவுக்கு குளியலறையோடு சேர்த்து இன்னும் இரண்டு அறைகள் என்று வீட்டை பெரிதாக கட்டி இருந்தான்..
அதனால் கமலா குடும்பத்தினருக்கு வசதி பற்றா குறை இல்லை..
ஒரு வயது குழந்தையோடு இருந்தாலும் செல்லம்மா வந்த உறவினரை பார்த்து பார்த்து கவனித்தாள்..
உமாவும் மகேஷை அழைத்துக் கொண்டு வந்திருந்தபடியால் பழைய நட்பை மகேஷும் சோழனும் புதுப்பித்துக் கொண்டார்கள்..
செல்லம்மாவும் உமாவும் நேரில் பார்த்துக் கொண்டு அண்ணி அண்ணி என்று இருவரும் சந்தோஷமாக பேசி சிரித்து அவர்களது உறவை மேலும் வளர்த்துக் கொண்டார்கள்..
இருவரது குணமும் ஒத்து போனதால் இருவருக்கும் நட்பு, அன்பு என ஆழமாக இருந்தது..
குழந்தை செல்லம்மாக்கு உருவாகிய அன்று உமா பேசியதுதான்.. இப்பொழுதும் உமா சொன்னால் இப்பொழுது இருவரும் ஆண் குழந்தைகள் பெற்றுக்கொண்டோம் அடுத்த இருவரும் பெண் குழந்தைகள் பெற்றுக் கொண்டால் இருவருக்கும் மாற்றுத் திருமணம் செய்து வைப்போம் என்று.
பெண் கொடுத்து பெண் எடுப்போம் என்று உமா அவளது விருப்பத்தை அங்கே கூறவும் சோழனும் ஒரு நல்ல நிலையில் இருப்பதால் மகேஷுக்கு மறுக்க தோன்றவில்லை..
அவனும் சம்மதித்து இருந்தான்..
சோழன் தான் நாம் ஆசைப்பட்டால் சரி வராது இருவருக்கும் பெண் குழந்தைகள் பிறக்க வேண்டும் அதுவரை காத்திருங்கள் என்று கூறினான்..
அவன் கூறியது சரி என்றாலும் உமா மற்றும் செல்லம்மா இருவருக்கும் இடையில் சண்டை ஏற்பட்டு விட்டது..
உமா கூறினாள் எனக்கு பெண் குழந்தை பிறக்காவிட்டாலும் செல்லமாக்கு பிறந்தால் மகனுக்கு கட்டித் தர வேண்டும் என்றும் அதேபோல் செல்லமாக கூறினாள்..
எனக்கும் இரண்டாவது பெண் குழந்தை பிறக்காமல் ஆண் குழந்தை பிறந்தாலும் உமாவின் பெண் குழந்தை தனது மகனுக்கு தான் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று கூறினாள்..
இவர்களது செல்ல வாக்குவாதத்தை பார்த்து பழனிச்சாமி கமலா இருவரும் சிரித்துக் கொண்டார்கள்..
உறவினர்கள் ஒன்று சேர்ந்ததால் அது துக்க வீடு என்று இல்லாமல் கலகலப்பாகவே இருந்தது..
யாரை பார்த்து மனநலம் பாதிக்கப்பட்டாரோ வள்ளி இன்று அதே பழனிச்சாமியை குடும்பத்தோடு சந்தோஷமாக பார்த்ததும் பேரனின் சிரிப்பு சந்தோஷம் என அதை செல்லம்மா அடிக்கடி காட்டவும் அவர் தன் மன கூட்டில் இருந்து தனக்கு கொஞ்சம் கொஞ்சமாக விடுதலை கொடுத்து அவரது தாயின் இறப்பில் அவரது துக்கங்களையும் போட்டு கொளுத்தி விட்டு தெளிந்த நீரோடையாக இருந்தார் வள்ளி..
தன்னை வேண்டாம் என்று ஒதுக்கி விட்டு சென்ற கணவனையும் அவனது சூழ்ச்சியையும் நினைத்து பைத்தியம் மாதிரி இருந்து கொண்டு தனது வாழ்க்கையை கெடுத்து மகனது வாழ்க்கையையும் கெடுத்து விட்டதை உணர்ந்து மிகவும் வருந்தினார்..
பழனிச்சாமி பார்த்தும் யார் என்று தெரியாதது போல் கடந்து விட்டார் வள்ளி..
வள்ளி ஓரளவுக்கு சரியாகி விட்டார் என்று முன்பே செல்லம்மா கூறி இருந்தால் இப்பொழுது கமலா அக்காவுடன் வந்து பேசிக் கொண்டிருந்த பொழுது இன்னும் அக்கா பழையதை நினைத்து தன்னுடன் முகம் கொடுத்துப் பேசாமல் இருக்கிறார் என்பதை தெரிந்து கொண்டார் கமலா..
காலம் தான் அனைத்தையும் மாற்றும் மருந்தாகும்..
பாட்டிக்கு காரியம் முடித்து இரண்டு மூன்று நாட்கள் அங்கே இருந்து விட்டு கமலா தம்பதி மற்றும் உமாவும் தம்பத்தியும் சென்றார்கள்..
மீண்டும் அவர்களது அன்றாட வாழ்க்கை ஓட்டம் ஆரம்பித்தது..
ஐந்து வருடம் கழித்து..
இறைவன் உமா மற்றும் செல்லம்மாவை ஆசீர்வதிப்பார் போல் அவர்கள் ஆசைப்பட்டது போன்று இருவருக்கும் முன்பு போன்று அடுத்தடுத்து பெண் குழந்தைகள் பிறந்தது..
இருவருக்கும் பெண் குழந்தை பிறந்ததும் அவர்கள் முன்பு எடுத்த தீர்மானம் இப்பொழுது உறுதியாகிவிட்டது..
இரண்டு பெண்களுக்கும் 21 வயது நிறைவடைந்ததும் பெண் கொடுத்து பெண் எடுத்து திருமணம் முடிக்க வேண்டும் என்பது உறுதி செய்யப்பட்டது..
அதன் படி இரண்டு தாய்மார்களும் அவர்களது பிள்ளைகளுக்கு நல்லது கெட்டது அனைத்தையும் சொல்லிக் கொடுத்து பக்குவமாக அவர்களது விருப்பத்தின்படி படிக்க வைத்து வளர்த்து ஆளாக்கினார்கள்..
பேச்சியின் குடும்பத்தில் தெய்வாவும் ராதாவும் அடுத்தடுத்து இறந்து விட்டார்கள்..
நிர்மலுக்கு அந்த சொத்தை அவர்கள் இறுதிவரை எழுதிக் கொடுக்கவே இல்லை..
ராஜனின் அக்கா நிர்மலை ஏமாற்றாமல் சொன்னது போன்று மகளை நிர்மலுக்கு திருமணம் செய்து கொடுத்தார்..
நிர்மல் தச்சு தொழிலில் ஓரளவு அவனை முன்னேற்றி இருந்தான்..
அவர்கள் நினைத்ததை ஒரு நேரத்தில் நிறைவேற்றலாம் ஆனால் இறைவன் அதை சரியான முறையில் நிறைவேற்ற வேண்டுமே..
திருமணம் செய்து மனைவிக்கு குழந்தை உண்டாகி நிர்மலுக்கு குழந்தையும் இறந்து பிறந்தது..
அவன் செல்லம்மாவுக்கு செய்த கொடுமைக்கு கடவுள் ஏதோ ஒரு வழியில் அவனுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று நினைத்தார் போல்..
ஒரு குழந்தையை கொடுத்து அதையும் அவன் போன்று வளர்த்து விடுவானோ என்று நினைத்து கொடுத்துவிட்டு எடுத்துக்கொண்டார்..
நிர்மலின் பேரில் சொத்தை எழுதுவதற்கு அவன் முயற்சி செய்தபோது அவனது அக்கா மார் இருவரின் கையெழுத்தும் வேண்டும் அவர்கள் எதிர்காலத்தில் பிரச்சினை செய்ய மாட்டார்கள் என்பது உறுதியாக தெரிந்தால் மட்டுமே சொத்து அவனது பேரில் எழுதப்படும் என்று வக்கில் கூறியிருந்தார்..
அதனால் நிர்மலும் அவனது அத்தையும் அங்கே மதி மற்றும் புகழ் வீட்டிற்கு சென்றார்கள்..
ஏனோ மதிக்கும் இன்னும் குழந்தை கிடைக்கவில்லை.. அதனால் புகழ் வீட்டில் சம்பளம் இல்லாத வேலைக்காரியாகவே மாறிவிட்டாள்..
புகழ் எவ்வளவோ தாயிடம் எடுத்துக் கூறியும் அந்த தாய் அதைக் கேட்காமல் வேலை செய்வது பிரச்சனையாக இருந்தால் அவளை விவாகரத்து செய்துவிட்டு குழந்தை பெற்று கொள்ளக்கூடிய ஒரு பெண்ணை அவனுக்கு திருமணம் செய்து வைத்து விடுவதாக கூறினார்..
மதி மேல் புகழ் உண்மையான அன்பு வைத்திருந்ததால் அவள் வேலை செய்தாலும் பரவாயில்லை அவனோடு அவள் இருந்தால் போதும் என்று நினைத்து வீட்டில் அவன் இருக்கும்பொழுது அவளுக்கு அனைத்திலும் உதவியாக இருப்பவன் வேலைக்கு சென்று விட்டு வந்ததும் அவளுக்கு கால் அமுக்கி இரவில் அவளுக்கு ஆதரவாக இருப்பான்..
இவர்களின் வரவை எதிர்பாராத மதியின் மாமியார் அவர்கள் வந்ததற்கான காரணம் கேட்டதும் அவர்களும் சொத்து பிரச்சினையை பற்றி சொன்னதும் அவருக்கு மதியின் சொத்து என்பது பிரச்சனை அல்ல ஆனால் மதியின் பெயரில் அந்த சொத்து இருக்க வேண்டும் அது அவர்களது குடும்ப கௌரவம் என்று கூறினார்..
ஒன்றும் இல்லாமல் மருமகள் எடுத்தார் என்பதை யாரும் பேசி விடக்கூடாது என்று கூறினார்..
ஆனால் லதாவோ அதற்கு சம்மதிக்கவில்லை.. அவர்கள் பேசி திருமணம் செய்யவில்லை.. திருமணம் செய்தால் அதனால் சொத்து தருவதாக கூறி திருமணம் செய்யவில்லை.. இனி தர முடியாது என்றும் கூறினார்..
ஆனால் புகழின் தந்தை மனைவியிடம் ஒரு வீட்டிற்க்காக சண்டை பிடிக்க வேண்டாம் அதை அவர்களே எடுத்துக் கொள்ளட்டும் என்று ஒரேடியாக கூறிவிட்டார்..
அப்பொழுது வேலை விட்டு வந்த புகழ் அதற்கு சம்மதிக்கவில்லை..
அவனும் இங்கே வந்த பின் சில நாட்கள் கழித்து அங்கே சென்று விசாரித்து அறிந்து கொண்டான்.. அவர்கள் செல்லமாவை கொடுமைப்படுத்தியதும் அதனால் அவள் வீட்டை விட்டு சென்றதையும் ராதா மற்றும் தெய்வாவின் மூலம் தெரிந்து கொண்டான்..
அவனும் இந்த விஷயத்தில் தாய்க்கு ஆதரவாக என்று பேச்சிப் பாட்டி மதிக்கு கொடுத்ததை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது என்று கூறினான்..
அவர்களிடம் அதைத்தான் கூறினான் சொத்து அவர்களுக்கு முக்கியமில்லை மதிக்கான அங்கீகாரம் அவர்களுக்கு முக்கியம் என்று கூறினான்…
காலங்கள் யாருக்கும் காத்திராமல் சென்றது வயிற்று வலி என்று மருத்துவமனை சென்ற போது புகழின் தாய்க்கு கிட்னி ஃபெயிலியர் என்று தெரிந்ததால் அவருக்கு அனைத்து விஷயத்திலும் மதி உதவியாக இருந்ததை பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக மாமியாரின் மனதில் பதிந்து அவளை நன்றாக அவரும் பார்த்துக் கொண்டார்..
வீட்டு விஷயத்தில் மதியின் குடும்பம் கைவிட்டதை உணர்ந்து.. அடுத்து செல்லம்மா எங்கே என்று தேடி கண்டுபிடிப்பது தருமாறு முன்பே ஒரு டிடெக்டிவ்விடம் செல்லம்மாவின் புகைப்படத்தை கொடுத்து தேடி கொடுக்கும்படி கூறியிருந்தார்..
அப்பொழுதுதான் சோழன் விளையாட்டு துறை அமைச்சராக பதவி ஏற்ற பொழுது அவனது குடும்பத்தை ஊரின் முன்பு அறிமுகப்படுத்தினான்..
தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்த பொழுதுதான் லதா மற்றும் நிர்மல் பார்த்துக் தெரிந்து கொண்டார்கள்..
இத்தனை வருடங்களில் கழித்து செல்லமாவின் உறவினர் என்று கூறி அவர்கள் வீட்டுக்கு வந்த போது செல்லம்மா வள்ளி சோழன் என மூவரும் அவர்கள் இருவரையும் நன்றாகவே கவனித்தார்கள்..
அவர்கள் எதற்க்காக வந்திருக்கிறார்கள் என்பதை லதா கூறியதும் சோழன் இதில் செல்லம்மா மட்டும்தான் முடிவெடுக்க வேண்டும் என்று கூறிவிட்டான்..
செல்லம்மாவிற்கு பழைய நினைவுகள் எதுவும் தேவையில்லை.. ராதா பாட்டி தெய்வா சித்தப்பாவின் இறப்பை கூட அவர்கள் அவளுக்கு தெரியப்படுத்தவில்லை.. என்ற கோபமும் சேர்ந்து சோழனிடம் தனியாக அழைத்து அனைத்தையும் கூறி இதற்கான முடிவை அவனை எடுக்கும்படி கூறினாள்..
சோழன் அனைத்தையும் யோசித்து விட்டு அது அவனுக்கு இருக்கும் வசதிக்கு அந்த வீடு அவனுக்கு பெரிய விஷயம் இல்லை என்பதால் செல்லம்மாவிடம் நன்கு கேட்டுவிட்டு அந்த வீட்டை நிர்மலின் பேருக்கு எழுதிக் கொடுப்பதாக கூறினான்..
எப்பொழுது வந்து கையெழுத்து போட்டு தர வேண்டும் என்று லதாவிலும் கேட்டு அன்று அவர்கள் அங்கு வருவதாக கூறினான் சோழன்..
வந்த காரியம் இங்காவது வெற்றியாக முடிந்தது என்று லதா சந்தோஷமாக செல்லமாவிடமும் சில வார்த்தைகள் பேசிவிட்டு வெளியேறி சென்றுவிட்டார். ஆனால் நிர்மல் செல்லம்மாவிடம் எவ்வாறு பேசுவது என்ற குற்ற உணர்வில் பேசாமல் இருந்துவிட்டான்..
சோழன் சொன்னது போன்று குழந்தைகள் மனைவி சகிதமாக செல்லம்மாவின் ஊருக்கு சென்று அவளது பெயரில் இருந்த வீட்டை நிர்மலுக்கு மாற்றி கொடுத்துவிட்டு ஊரையும் சுற்றி பார்த்துவிட்டு வந்தார்கள்..
கடவுள் இப்பொழுது தான் மதியின் வாழ்க்கையில் கண் திறந்தாரோ என்னவோ மதி நீண்ட வருடங்களுக்கு பின் கருவுற்றிருந்தாள்..
கிட்னி வருத்தமாக இருந்தாலும் மருமகள் தற்பொழுது குழந்தை உண்டாகிதை அறிந்து அனைத்தும் அன்பாகவே பார்த்து பார்த்து புகழின் தாய் செய்து கொடுத்தார்…