குடும்பம் என்பது உறவுகள் பேருக்கும் எண்ணிக்கைக்கும் இருப்பது குடும்பம் இல்லை.
பழனிச்சாமி கமலா இருவரும் காதல் திருமணம் செய்து ஓர் அழகான குடும்பத்தை உருவாக்கினார்கள்.
இவர்களுக்கு மூன்று பெண்கள் இரண்டு ஆண்கள் என ஐந்து குழந்தைகள்.
இவர்களின் வீட்டில் என்றுமே கலகலப்பு சிரிப்பு சத்தம் இவற்றிற்கு பஞ்சமே இல்லை.
அதேபோன்று இவர்களது பிள்ளைகளுக்கு கஷ்டம் என்பது தெரியாமல் வளர்த்தார்கள்.
தாயும் தகப்பனும் பிள்ளைகளின் மனம் நோகாமல் அவர்களுக்கு கிடைக்க வேண்டியது அனைத்தையும் பருவத்திற்கு ஏற்றவாறு செய்து கொடுத்து அவர்களோடு சேர்ந்து தாங்களும் மகிழ்ந்தார்கள் என்றால்.
பிள்ளைகள் அனைவரும் தாய் தகப்பனுக்கு எந்தவித கஷ்டத்தையும் கொடுக்காமல் தாய்க்கு அனைத்திலும் உதவியாகவும் தந்தையோடு பேசி சிரித்து விளையாடி என மகிழ்ச்சியாகவே அவர்களது காலம் பிள்ளைகள் வளர்ந்த பின்னும் இருந்தது.
குடும்பம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று பலரின் கற்பனைகளுக்கு இவர்களது குடும்பமே உதாரணம்.
திரைப்படம் பார்த்தாலும் அதைப்பற்றி அலசி ஆராய்ந்து தாய், தந்தை பிள்ளைகள் என கதைத்து பேசி சிரிப்பது.
காலை இரவு என இரண்டு வேளை உணவுகளையும் அவ்வீட்டில் இருக்கும் அனைவரும் சேர்ந்து உண்பது.
வீட்டிற்கு வருபவர்களை அன்பாக வரவேற்று அவர்களுடன் பேசி சிரித்து அவர்களை நல்ல முறையில் உபசரித்து அனுப்புவது.
வெளியிடங்களில் பள்ளியில் என அவர்கள் செல்லும் இடத்தில் எல்லாம் அனைவரையும் மதித்து மரியாதை செய்து அன்பாக பழகுவது. என்று அனைத்து விதமான நல்ல பழக்கவழக்கங்களையும் சொல்லிக் கொடுத்து வளர்த்துள்ளார்கள்..
கமலா எப்பொழுதுமே பிள்ளைகளுக்கு உணவு மற்றும் சிற்றுண்டி என அனைத்தும் அவரது கையாலேயே ஆரோக்கியமாக சோம்பேறித்தனம் இன்றி அவர்கள் கேட்பதை செய்து கொடுப்பார்.
வீட்டு வேலைகளோடு ஐந்து பிள்ளைகளையும் நல்ல முறையில் வளர்த்து கணவனுக்கும் பொருளாதார ரீதியிலும் பங்கு எடுப்பதற்காக தையல் கலையையும் பயின்று அதன் மூலம் ஆடைகள் வடிவமைத்து தைத்து விற்பனை செய்து என சராசரி அருமையான குடும்பப் பெண்ணாக இருந்தார் கமலா.
பழனிச்சாமி கமலா இருவரையும் பற்றி முக்கியமான ஒரு விடயம்.
இவர்களின் பிள்ளைகள் ஐந்தில் இவர்கள் பெற்ற பிள்ளைகள் மூவர்.
இரண்டாவது ஆண் பிள்ளை இவர்கள் தத்தெடுத்த பிள்ளை. ஐந்தாவது பெண் பிள்ளை கமலாவின் தம்பியின் மகள்.
கமலாவின் தம்பி விபத்தில் இறந்ததும் அவரின் மனைவி வேறு திருமணம் செய்ததால் தம்பியின் மகளை யாரை நம்பியும் விடுவதற்கு விரும்பாமல் அவர்களின் பிள்ளையாக தத்தெடுத்துள்ளார்கள்.
இந்த ஐந்து பிள்ளைகளுக்கும் இடையில் எப்பொழுதுமே சண்டை சச்சரவு கருத்து வேறுபாடு என்பது நிகழ்ந்ததே இல்லை.
அவர்கள் பெற்ற பிள்ளைகளுக்கு சாதாரண வீடும் தத்தெடுத்த பிள்ளைகளுக்கு அடுக்கு மாடி வீடு என நான்கு வீடுகளையும் கட்டி வைத்துள்ளார்கள்.
இவர்கள் தற்பொழுது இருப்பது இரண்டாவது மகனுக்கு கட்டிய வீட்டில்.
உமா தேவிக்கும் மூன்றாவது பெண்ணுக்கும் நான்காவது மகனுக்கும் கட்டிய மூன்று வீட்டையும் வாடகைக்கு கொடுத்துவிட்டு அதில் வரும் வருமானத்தை வங்கி கணக்கில் ஒன்று படுத்தி வைத்து அடுக்குமாடி வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம் போட்டு உள்ளார்கள்.
இக்குடும்பத்தின் ஸ்ரீதேவியான உமாதேவி தான் அவர்களின் மூத்த மகளும் நமது கதையின் நாயகியும்.
பெண் பிள்ளைக்கு தாய் வீட்டைத் தவிர உலகத்தில் சொர்க்கம் என்பதே இல்லை.
அருமை பெருமையாக பிள்ளையைப் பெற்று வளர்த்து பழனிச்சாமியின் சொந்த தங்கை மகனுக்கு ஊரை அழைத்து வெகு விமர்சையாக திருமணம் செய்து வைக்க இருக்கிறார்கள்.
இந்த திருமணத்தோடு அக்குடும்பத்தின் நிரந்தர சந்தோசம் கலகலப்பு சிரிப்பு என அனைத்தும் பறிபோய்விடும் என்று அவர்களிடம் யார் கூறுவது.
உமாதேவி பிளஸ் டூ வரைக்கும் படித்து காலேஜ் கண்டினியூ பண்ணுவதற்கு
பிளஸ் டூ வில் புள்ளிகள் குறைவாக எடுத்ததால் படிப்பை மேலும் தொடராமல் தாயோடு அனைத்திலும் உதவியாக இருந்தாள்.
காலையில் எழுந்து தாயோடு சமையலறையில் உதவிகள் செய்துவிட்டு. வீட்டு வேலைகள் முடித்துவிட்டு. தாயோடு இணைந்து தையலிலும் சிறு உதவிகள் செய்து கொண்டு அப்படியே அவளும் தையலை கற்றுக்கொண்டாள்.
தாய் தந்தை சகோதரர்கள் மட்டுமே உமாதேவிக்கு உலகம்.
தனித்து எந்த வித வேலையையும் வீட்டை விட்டு வெளியே சென்று செய்வதற்குரிய தைரியம் அவளுக்கு பெரும்பாலும் குறைவு.
அதனால் பழனிச்சாமி அவளை எவ்வித வேலைக்கும் வெளியே அனுப்பாமல் அவரே அவரது தொழிலோடு சேர்த்து வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கி போடுவது என அனைத்தையும் செய்து வைத்துவிடுவார்.
அவசர தேவைக்கும் கூட வீட்டு பெண்கள் யாரும் கடைக்கு செல்ல பழனிச்சாமி விரும்புவதில்லை.
அதனால் பெண்களை அடக்கி வைக்கிறார் என்பது அர்த்தமில்லை.
விடுமுறை நாட்கள் பள்ளி விடுமுறை நாட்கள் என அனைத்து விடுமுறை நாட்களும் வீட்டில் திருவிழா கொண்டாட்டம்தான்.
பார்க் பீச் சினிமா மற்றும் வெள்ளிக்கிழமை விசேஷ தினங்களில் கோயில் எதற்கும் அவ் வீட்டு பெண்களுக்கோ வீட்டு குழந்தைகளுக்கோ எவ்வித தடையும் இல்லை.
வழமையாக அனைவரும் செய்யும் ஓர்
தவறை பழனிச்சாமி கமலா தம்பதியினர்களும் உமாதேவியின் சிறுவயதிலேயே செய்து விட்டார்கள்.
உமாதேவிக்கு ஐந்து வயது இருக்கும் பொழுது பழனிச்சாமியின் தங்கை சித்ராவின் மகனை உமாதேவிக்கு திருமணம் செய்து வைப்பதாக இரண்டு குடும்பமும் பேசி வைத்திருந்தது.
அந்த பேச்சு வார்த்தையின் காரணமாக சித்ராவிற்கு மிகவும் மகிழ்ச்சி.
அவரது அண்ணன் அவருக்கு எவ்வளவு சீர் செய்து திருமணம் செய்து வைத்தாரோ..! அதைவிட ஒரு படி அதிகமாகவே அவரது மகளுக்கு அனைத்து சீரையும் செய்து விமர்சையாக திருமணம் செய்து வைப்பார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
உமாதேவியின் அமைதியையும் அன்பான குணத்தையும் பார்த்து அவரும் மகனும் காலத்திற்கும் ஒற்றுமையாகவும் சந்தோசமாகவும் இருக்கலாம் என்று நினைத்தார்.
ஆனால் அவர்களின் நினைப்பை பொய்யாக்குவதற்கென்றே சித்ராவின் மகள் நிஷா இருக்கிறாள் என்பதை அவர் மறந்து விட்டார்.
அவர்களின் அன்றைய பேச்சு வார்த்தையை தற்பொழுது நிறைவேற்றும் காலம் வந்துவிட்டது.
சித்ராவின் மகனுக்கு முப்பது வயதாகி விட்டது.
உமாதேவிக்கு இருப்பத்திரண்டு வயதாகிவிட்டது.
பழனிச்சாமிக்கு வயது ஐம்பதுக்கு மேல் தாண்டி விட்டதால் இன்னும் அவருக்கு பிள்ளைகள் இருப்பதாலும் உமாதேவிக்கு பதினெட்டு வயதிலேயே திருமணம் செய்து வைக்க நினைத்தார்கள்.
ஆனால் சித்ராவின் மகனோ இன்னும் தொழிலில் ஒரு நிலைக்கு வராமல் இருப்பதாலும் அவர்களுக்கு என்று ஒரு அழகிய வீடு கட்ட நினைத்து இருப்பதாகவும் கூறி ஐந்து வருடம் திருமணத்தை தள்ளி வைக்குமாறு கேட்டுக் கொண்டான்.
ஆனால் மகளுக்கு பதினெட்டு வயது ஆகிவிட்டதால் நான்கு வருடம் மட்டுமே அவகாசம் தருவேன் என்றும் அதற்குள் அவனது அனைத்தையும் முடித்துக் கொள்ளுமாறும் பழனிச்சாமி இறுதியாக பேச்சுவார்த்தை முடித்துக் கொண்டார்.
இதோ அவர்களின் பேச்சு வார்த்தையின் படி உமாதேவிக்கு இருப்பத்திரண்டு வயது நடந்து மூன்று மாதங்கள் கடந்து விட்டது.
துரித கதியில் மகளின் திருமணத்தை முடிக்க வேண்டும் என்பதில் பழனிச்சாமி கமலா தம்பதியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள்.
உமாதேவியிடமும் திருமணத்திற்கு சம்மதம் கேட்ட பொழுது தாய், தந்தை தம்பிகள் தங்கைகள் இருக்கிறார்கள் அதுவும் அதே சொந்த ஊரில் சொந்த அத்தானை திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்ற நம்பிக்கையில் திருமணத்துக்கு சம்மதம் என்று தலையாட்டி விட்டாள்.
சித்ராவின் மகன் வீடு கட்டி குறையில் இருக்கிறது என்று கூறியும் பழனிச்சாமியோ உமாதேவிக்கு என்று அவர்கள் கொடுக்கும் வீட்டில் இவர்களை இருக்குமாறு கூறிவிட்டார்.
சித்ராவிற்கு சீதனமாக பழனிச்சாமி கொடுத்த வீட்டை தான் சித்ரா அவரது மகளுக்கு கொடுத்து திருமணம் செய்து வைத்தார்.
திருமணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பு. இன்று மாலை நேரம் பழனிச்சாமி கமலா தம்பதியினரின் பிள்ளைகள் என அனைவரும் அவர்களது வீட்டு முற்றத்தில் இருக்கும் வேப்ப மரத்தின் கீழ் அவர்கள் அமைத்திருக்கும் ஓய்வு குடில் அதாவது வைக்கோலால் மேயப்பட்டு சிறிய மேசை அதைச் சுற்றி கதிரை என போடப்பட்டிருந்தது.
மாலை நேரங்களில் குடும்ப உறுப்பினர்கள் ஏழு பேரும் கதைத்து பேசி சிரித்து மகிழ்ந்து தேநீர் அருந்துவதற்கு என அமைத்த குடில் தான் அது.
அவர்களது சந்தோசம் சிரிப்போடு சேர்ந்து வேப்பம் மரமும் குளுமையான காற்றை வீசி சந்தோஷப்பட்டு கொள்ளும்.
இது அவர்களின் வாழ்க்கையில் தினமும் நடக்கும் ஒன்றாகும்.
அதேபோன்று அன்றும் அழகிய மாலை நேரத்தில் அந்த ஓய்வு குடிலில் பழனிச்சாமி நான்கு பிள்ளைகள் என ஒன்று கூடி இருந்தார்கள்.
கமலா சுடச்சுட தட்டில் பிள்ளைகளுக்கு ஏற்றவாறு பால் காபி டீ கணவருக்கு பிளாக் டீ என தயாரித்து தட்டில் வைத்து எடுத்து வந்தார். அவரைத் தொடர்ந்து உமாதேவி அனைவருக்கும் சுடச்சுட கமலா தயாரித்த வடையை எடுத்து வந்தாள்.
அதை அங்கிருந்த மேஜையில் வைத்து விட்டு யாருக்கு எது வேண்டும் என அனைத்தையும் பார்த்து கவனித்து கையில் கொடுத்ததும் கமலாவும் உமாதேவியும் அவர்களுக்கு என்று இருந்ததை எடுத்துக் கொண்டு அங்கிருந்த கதிரையில் இருந்தார்கள்.
அனைவரும் சூடு ஆறுவதற்கு முன் வடையை சாப்பிட்டு அவர்களுக்கான பானத்தை குடித்ததும் பழனிச்சாமி பேச்சை ஆரம்பித்தார்.
” உமா குட்டி உங்ககிட்ட அப்பா என்ன கேட்க்க போறேன்னு உனக்கு நல்லாவே தெரியும். நாலு வருஷத்துக்கு முன்னாடியே உன்கிட்ட நான் இந்த திருமணத்துக்கு சம்மதமான்னு கேட்டு தான் முடிவெடுத்து நம்மளும் அவர்களுக்கு நாலு வருஷம் அவகாசம் கொடுத்தோம்.”
” இப்பவும் ஒன்னும் கை மீறி போகல அப்பா திரும்பவும் உன்கிட்ட கேட்க்குறேன். உனக்கு அத்தானை கல்யாணம் பண்ணிக்க மனப்பூர்வ சம்மதமா?. நாலு வருஷ இடைவெளியில் ஏதாவது உனக்குள்ள சிறு மாற்றம் தயக்கம் இருந்தாலும் பயமில்லாமல் நீ சொல்லலாம். உன்னோட சம்மதம் தான் எங்களுக்கு ரொம்ப முக்கியம். இந்த மாப்பிள்ளையை உனக்கு பார்த்ததே நீ எங்க கண் முன்னாடி சந்தோசமா இதே ஊர்ல வாழ்றதை திருப்தியா சந்தோசமா நாங்க பார்க்குறதுக்கு தான் குட்டி.” என்றார் பழனிச்சாமி.
உமா இருந்த கதிரையிலிருந்து எழுந்து தந்தைக்கு அருகில் வந்து அமர்ந்து பழனிச்சாமியின் கையைப் பிடித்துக் கொண்டு ” எனக்கு மனப்பூர்வமான சம்மதம் பா. நீங்க எதை பத்தியும் கவலைப்படாமல் கல்யாணத்திற்கு உரிய வேலையை நீங்க தாராளமா பார்க்கலாம். ப்பா நீங்க அம்மா தம்பிங்க தங்கச்சிங்க எல்லாருமே என் கூட இருப்பீங்க. நான் என்ன தெரியாத வீட்டுக்கு தூரத்துக்கா போக போறேன் நல்லா தெரிஞ்சு போய் பழகின அத்தை வீட்டுக்கு தானே கல்யாணம் முடிச்சு போக போறேன். எனக்கு எந்தவித தயக்கமும் பயமும் இல்லை நீங்க அடுத்து ஆக வேண்டிய வேலையை பாருங்க பா. ” என்று கூறி பழனிச்சாமியின் மனதில் இருந்த சிறு உறுத்தலையும் இல்லாமல் ஆக்கி தந்தைக்கு தற்பொழுது மன ஆறுதலை கொடுத்தால் உமாதேவி.
இவர்கள் ஓர் கணக்கு போட்டு வைத்தால் தெய்வம் இவர்களுக்கு மேல் ஒரு கணக்கு போடும் என்பதை மனிதர்கள் யாரும் உணர்வதே இல்லை.
பழனிச்சாமியோ சொந்த தங்கை. தங்கை மகன் பார்த்து பழகிய வட்டத்துக்குள் மகளைத் திருமணம் செய்து கொடுக்கிறோம். எவ்வித பிக்கல் புடுங்கலும் இல்லாமல் காலத்துக்கும் மகள் நன்றாக சந்தோஷமாக வாழ்வாள் என்ற நம்பிக்கையில் திருமணத்திற்கான ஏற்பாட்டை ஆரம்பித்தார்.
ஆனால் இந்த திருமணத்தின் பின் மகள் எவ்வாறு வாழப் போகிறாள் என்பதை இப்பொழுது அவர் அறிந்திருக்க முடியுமானால் இந்த கனமே திருமணத்தை நிறுத்தி இருப்பார்.
உமா திருமணத்திற்கு சம்மதம் சொன்னதும் பெற்றவர்கள் முகத்தில் அவ்வளவு சந்தோஷத்தையும் பூரிப்பையும் பார்த்து பிள்ளைகளும் மகிழ்ந்து உமாவை பேசி சிரித்து நக்கல் செய்து கொண்டிருந்தார்கள்.
சற்று நேரம் சென்றதும் பழனிச்சாமி இரவு உணவை கடையிலிருந்து வாங்கி வருவதாக கூறிவிட்டு வெளியே சென்று விட்டார்.
அதன் பின் உமாவை தவிர நான்கு பிள்ளைகளும் ஓர் அறையில் படிப்பதற்காக சென்று விட்டார்கள். உமாவும் கமலாவும் வரவேற்பறையில் இருந்த தொலைக்காட்சியில் நாடகம் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
நேரம் இரவு எட்டு மணி ஆனதும் பழனிச்சாமி அனைவருக்கும் கொத்து பரோட்டா வாங்கி வந்தார். அதை கமலா பகிர்ந்து அனைவரும் கொடுத்தார். பிள்ளைகள் உண்டதும் நாளைய தினமே நிச்சயதார்த்தம் மற்றும் திருமணத்திற்கான நாள் பார்ப்பதற்கு சித்ராவிடமும் கலந்து பேச வேண்டும் என்ற முடிவை எடுத்துவிட்டு தம்பதியினர் இருவரும் கண்ணுறங்கினார்கள்.