இரண்டாவது குழந்தை உருவாகிய காலத்தில் இருந்தே கணவனின் முகத்தை பார்க்காமல் பேச்சி மிகவும் வாடி வதங்கி இருந்தார்.
குழந்தை பிறந்து எட்டே நாட்களில் கணவனின் மரணச் செய்தி பேச்சியின் தலையில் இடியாக இறங்கியது.
தொண்டை குளிவரை துக்கம் இருந்தும் மற்றவர்கள் போன்று பிள்ளையால் தான் கணவர் இறந்தார் என்று பிள்ளையை வெறுத்து ஒதுக்காமல்.
இரண்டாவது பிள்ளைக்கு மூத்த பிள்ளையை துணை வைத்துவிட்டு பச்சை உடம்புடன் பேச்சியும் ராதாவும் பேச்சியின் தந்தையும் சுடுகாட்டுக்கு சென்றார்கள்.
இரண்டாவது மனைவி என்று குறைவாக நடத்தாமல் வாழ்ந்த இரண்டரை வருட காலமும் ஆதர்ச தம்பதிகளாகவே வாழ்ந்தார்கள்.
ஆட்களின் உதவியுடன் சுடுகாட்டில் இருந்து ஆறுமுகத்தின் சடலத்தை எடுத்து வந்து அவருக்கு செய்ய வேண்டியதை சரியான முறையில் அனைத்து இறுதி சடங்குகளையும் செய்து மரியாதையாக அடக்கம் செய்தார்கள்.
ஆறுமுகத்தின் இறுதி சடங்கிற்கு அவரது முதல் மனைவி மற்றும் பிள்ளைகளும் வந்திருந்தார்கள்.
கணவன் இறந்த துக்கம் முதல் மனைவியின் முகத்தில் சிறிதளவும் இல்லை.
சிறுது சிறிதாக ஆறுமுகத்தின் பிரிவிலிருந்து பேச்சி அவரது குழந்தைகளைப் பார்த்து ஆறுதல் அடைந்து கொண்டார்.
ஆறுமுகம் இறந்து அவரின் ஒரு வருடத்தின் பின்பு தான் அவரின் இறப்பிற்கு முதல் மனைவி தான் காரணம் என்று தெரிய வந்தது.
தன்னை விட்டு பிரிந்ததால் ஆறுமுகத்தின் வாழ்க்கையை அழிக்க வேண்டும். என்ற திட்டத்தோடு பேச்சியும் அவரும் பிரிந்து அவர் மீண்டும் தன்னிடம் வர வேண்டும். அல்லது இவ்வுலகை விட்டு செல்ல வேண்டும். என்று நினைத்து மாந்திரீக வழியில் முயற்சி செய்து வசியம் செய்தும் அவர் மீண்டும் தன்னிடம் வரவில்லை என்று ஆறு மாதத்திற்குள் அறிந்தபின் குடும்பத்தை விட்டு பிரித்து பைத்தியம் என்னும் பட்டம் கட்டி பேச்சியையும் பிரிய வேண்டும் என்று நினைத்து அதி உச்ச மாந்திரீக வேலையை செய்தார்.
அவர் நினைத்தது போன்று ஆறுமுகம் பித்து நிலை அடைந்து பைத்தியம் அதிகமாகி சுடுகாடிலேயே நாட்களை
கழித்தார்.
அவருக்கு அவரைப் பற்றியும் அவர் வாழ்ந்த நாட்களை பற்றியும் சிறிது சிறிதாக மறந்துவிட்டார். அதனால் அவரை பற்றி யார் என்ன என்று சொல்ல வேண்டும் என்று எதுவும் தெரியாமல் உணவு, நீர்,உறக்கம் எதுவும் இல்லாமல் ஆளே தோற்றமும் அடையாளமும் மாறி இருந்தபடியால் அங்கு இருந்த வெட்டியானுக்கும் அவர் யார் என்று தெரியாமல் யாரோ பைத்தியம் என்று நினைத்து அதை ஊருக்குள் சொல்லாமல் விட்டுவிட்டார்.
பேச்சியின் தந்தையும் ஆறுமுகத்தை தொழில் ரீதியான இடங்களில் வேறு ஊர்களில் தேடினாரே தவிர இப்படி இருக்கும் என்று சிறிதும் எண்ணி பார்க்காததால் அவரும் இவ்வழியில் தேட முயற்சி செய்யவில்லை.
இதோ ஆறுமுகத்தின் காலம் முடிந்ததும் பேச்சி அவரது இரண்டு ஆண் குழந்தைகளுடனே அவரது காலத்தை கழிக்க முடிவு செய்து. அவர்களுக்கு என்று இருந்த சிறிய சொற்ப நிலத்தில் பயிர்கள் செய்து அவரது வாழ்க்கையை பிள்ளைகளுக்காக வாழ ஆரம்பித்தார்.
இருப்பத்தியொரு வயதிலேயே இரண்டரை வருட இல்லற வாழ்க்கையின் மூலம் கணவனின் அழகான நினைவுகளை மனதில் சுமந்து கொண்டு பிள்ளைகளுக்காக பிள்ளைகளுக்கு நல்லது சொல்லிக் கொடுத்து நல்ல முறையில் வளர்த்து ஆளாக்க வேண்டும் என்று வைராக்கியத்தோடு வாழ ஆரம்பித்தார் பேச்சி.
பேச்சியின் தங்கை ராதாவும் திருமண வயது அடைந்தும் வரும் மாப்பிள்ளைகள் அனைவரையும் தட்டி கழித்து இறுதியில் பத்து வருடங்கள் சென்றதும் திருமணமே வேண்டாம் எனும் முடிவுக்கு வந்துவிட்டார்.
பேச்சியின் தந்தை பேச்சி ராதா பேச்சின் குழந்தைகள் என அவர்களது காலம் கழிந்தது.
பத்து வயதில் பேச்சின் கஷ்டத்தை பார்த்து பேச்சியின் முதல் மகன் ராஜன் படிப்பை அத்தோடு நிறுத்திவிட்டு தாய்க்கு துணையாக அவர்களது வயலிலேயே சிறு சிறு வேலைகளை செய்து அவரின் தாத்தாவிடம் அடம் பிடித்து அவருக்கு என ஒரு ஜோடி வண்டில் மாடு வாங்கி அவர்களது நிலத்தை அந்த வயதிலேயே அவரே யாருடைய உதவியும் இன்றி அவருக்கு தெரிந்த அளவில் நிலத்தை உழவி பதப்படுத்தி. நெல் விதைத்து பயிர் செய்து மூன்றே மாதத்தில் பருவ காலத்தில் நெல்லை அறுவடை செய்து வீட்டிற்கு அரிசி எடுத்து வந்தார்.
அப்பொழுது மகனின் தீவிரமான இந்த வேலையை பார்த்த பேச்சி மகிழ்ந்து போய் மகனுக்கு அனைத்து விதத்திலும் உதவியாக இருந்தார்.
குறைபாடுள்ள இரண்டாவது மகனையும் கவனித்துக் கொண்டு அவர்களின் ஜீவனத்தையும் பார்த்து வாழ்ந்தர்கள். இப்படியே மேலும் காலங்கள் நகர்ந்து கொண்டே இருந்தது.
ராஜனுக்கு இருப்பத்தியொரு வயதில் பேச்சியின் தந்தை வழியில் இருக்கும் அழகு என்னும் பெண்ணை திருமணம் செய்து வைத்தார்.
அந்த வருடமே ஓர் அழகான பெண் குழந்தை பிறந்தது அவர்களுக்கு.
பேச்சிக்கு பெண் குழந்தை இல்லை என்பதால் பேத்தியை தனது மகளாகவே வளர்க்க ஆரம்பித்தார்.
திருமணம் முடிந்து குழந்தை பிறந்ததும் அழகின் குணங்கள் சிறிய அளவில் மாறுபட ஆரம்பித்தது.
பேச்சியும் அவரின் தங்கையும் சிறு பெண் என பொருத்து போய் வந்தார்கள்.
இருந்தும் பிள்ளை கணவன் மீதும் சிறிதும் அக்கறை இல்லாமல் அவர் அவரின் தேவைகள் என பார்த்து வந்தார் அழகு.
ராஜனும் அழகிடம் இருக்கும் சிறு சிறு தவறுகள் பிழைகளை அனுசரித்து பொருத்து அவரிடம் வாழ்ந்து வந்தார்.
அவர்களுக்குள் எவ்வித சண்டையும் இல்லாமலேயே அவர்களின் நாட்கள் கழிந்தது.
பேச்சியோ அந்தப் பெண் குழந்தையை வளர்க்கும் முழு பொறுப்பையும் அவரே ஏற்றுக் கொண்டார்.
பெண் குழந்தை இல்லை என்ற கவலையையும் போக்கிக் கொண்டு குழந்தையை மருமகளிடம் கொடுத்து அவர் அதை கவனிக்காமல் குழந்தை வீணாக போவதற்கு மகனின் மகளை தனது குழந்தையாகவே பாவித்து அவரே வளர்த்து வந்தார்.
குழந்தையும் பேச்சியை அம்மா என்று அழைத்து அவருடன் நன்றாகவே ஒட்டிக்கொண்டது.
மீண்டும் நான்கு வருடம் கழித்து ராஜன் அழகு தம்பதியினருக்கு அழகான ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தையின் முகத்தில் தெய்வீக கலை இருப்பதாக ஊர் மக்களே கூறுவார்கள்.
அடுத்த நான்கு வருடத்திற்குள் பெண் ஒன்று ஆண் ஒன்று என அவர்களுக்கு மீண்டும் இரண்டு குழந்தைகள் பிறந்தது.
நான்காவது ஆண் குழந்தைக்கு ஒரு வயதாகிய அடுத்த நாள் அவர்களின் இரண்டாவது ஆண் குழந்தைக்கு விஷப் பாம்பு கடித்து இறந்துவிட்டது.
பேச்சியும் ராஜனின் முதல் பெண்ணும் எவ்வளவு நெருக்கமோ. அந்த அளவிற்கு பேச்சியின் தந்தையும் ராஜனின் இரண்டாவது ஆண் குழந்தையும் நெருக்கம். அதற்கு அடுத்த வருடமே பேரன் இறந்த சோகத்தில் பேச்சியின் தந்தையும் இறந்துவிட்டார்.
இவர்களின் குடும்பத்திற்கு பேச்சியின் தங்கை ராதாவும் அவரால் முடிந்தளவு பொருளாதார ரீதியில் அவர்களுக்கு உதவி செய்து கொண்டு அவர்களுடனே இருந்துவிட்டார்.
குடும்பத்தில் கணவனோடு மாமியாருடனும் சண்டை பிடித்து விட்டு தாயின் வீட்டிற்கு சென்று சில மாதங்கள் இருந்து விட்டு வருவது அழகிற்கு வழமையாகி விட்டது.
இவ்வாறு அவர்களின் நாட்கள் மேலும் பத்து வருடங்கள் கழிந்தது.
தந்தைக்கு நடந்த அதே அவலம் ராஜனுக்கும் தொழில் நண்பரால் ஏற்பட்டது.
ராஜனின் அசுர தொழில் வளர்ச்சியை பார்த்து அவரின் நண்பனே அவருக்கு தொழில் முடங்கி கஷ்ட ஜீவனம் ஏற்பட வேண்டும் என்று அவரும் மாந்திரீக வழியில் முயற்சி செய்து ராஜனுக்கு நோயை கொடுத்து அவரை படுத்த படுக்கையாக்கிவிட்டார்.
ஆறு மாத காலத்தின் பின். நோயின் தாக்கத்தால் பேச்சியின் மூத்த மகன் ராஜன் இறந்துவிட்டார்.
கணவன், பேரன்,தந்தை, என ஒவ்வொருவராக இழந்து அதிலிருந்து சிறிது சிறிதாக தன்னை மீட்டு வந்த பேச்சி ஒரே அடியாக அவரின் மகனை இழந்ததும் மிகவும் ஒடிந்து விட்டார்.
எவ்வித கெட்ட பழக்கமும் இல்லாத ஓர் ஆணுக்கு நாற்பது வயது எல்லாம். இறக்கும் வயதா? என்று ஊர் மக்களின் பரிதாப பேச்சு எல்லாம் குடும்பத்தை மேலும் துன்பத்துக்கு ஆளாக்கியது. ராஜனின் மகனுக்கு தந்தைக்கு பத்து வயதிலேயே கொள்ளி வைப்பது என்பது மிகவும் கொடுமையான ஒன்றாகும்.
அதுவும் அந்த வீட்டு ஆண் பிள்ளைக்கு நடந்து விட்டது.
இந்த குடும்பத்திற்கு முன்னோர்களின் சாபம் என ஒன்று இருபது யாரும் அறியாத ஒரு விஷயம். இந்த சாபம் பற்றி பேச்சிக்கு கூட தெரியாமல் போனதுதான் பரிதாபம்.
வழி வழியாக இந்த குடும்பத்தில் பிறக்கும் முதல் ஆண்மகன் இறப்பது இக் குடும்பத்தின் சாபமாகும்.
மகனும் இறந்து சிறிது காலத்தில் கோவில் பூசாரியிடம் கேட்டபோது அவர் இந்த சாபத்தை பற்றி கூறினார்.
முதல் மகன் முதல் பேரன் என அவர் அறிந்தே இரண்டு உயிர் போய்விட்டது.
இனி வரும் சந்ததியினருக்காவது அவ்வாறு எதுவும் நடக்க கூடாது என்று நினைத்து கோவில் கோயிலாக பூசாரிகள் சொன்ன பரிகாரங்களை செய்ய ஆரம்பித்தார்.
ஆறுமுகத்தின் அண்ணன் பிள்ளைகள் பேச்சியின் அக்கா அவரின் பிள்ளை தங்கை என அனைவரும் அவர்களுக்கு துணையாக இருந்தார்கள்.
சொந்தம் என்று இருந்தாலே நன்மையும் பேசுவார்கள் அவர்களின் குறைகளையும் பேசுவார்கள்.
இப்படியே அவர்களின் காலம் ராஜனின் இறப்பிற்கு பின்னும் காலத்தின் ஓட்டத்தின் படி நகர்ந்தது.
ராஜன் இறந்து சில வருடங்களில் அழகு வேறு திருமணம் செய்து சென்று விட்டார்.
தந்தை இல்லை தாய் இருந்தும் இல்லாத நிலை. பேச்சியின் வளர்ப்பு அவரின் கஷ்டம் என அனைத்தையும் பார்த்து வளர்ந்த குழந்தைகள் ராதாவையும் எவ்வித தொல்லையும் செய்யாமல் முடிந்த உதவியை அவர்களின் தொழிலுக்கு செய்து கொடுத்துவிட்டு பாடசாலை சென்று அவர்களது கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டு என அவர்களின் காலத்தை கழித்தார்கள்.
ஏனைய குழந்தைகள் போன்று அவர்களுக்கும் பள்ளியால் அழைத்துப் போகும் சுற்றுலாக்களில் கலந்து கொள்ள விருப்பம் இருக்கும். ஆனால் பாட்டிக்கு கஷ்டத்தை கொடுக்க கூடாது என நினைத்து பேச்சியிடம் மூவரும் பேசிவைத்து கூறாமலே விட்டுவிடுவார்கள்.
பிள்ளைகளின் சிறு சிறு ஏக்கங்கள் என எதுவும் அவர்கள் வீட்டில் காட்டாமல் அனைத்தையும் அவர்களுக்குள்ளே வைத்து புதைத்து விட்டு அதெல்லாம் அவர்கள் பெரிய ஆளாகி உழைத்து அவர்களின் உழைப்பில் சந்தோஷமாக உண்டு உடுத்தி சுற்றுலா சென்று வாழலாம் என தங்களை தாங்களே அமைதிப்படுத்தி கொண்டார்கள்.
மூத்த பெண் குழந்தை பிளஸ் டூ படித்ததும் படிப்பை நிறுத்திவிட்டது.
காலேஜ் படிக்க தகுதி இருந்தும் பாட்டியின் கஷ்டத்தை பார்த்து வேலைக்கு சென்று பாட்டியின் கஷ்டத்தை சிறிது குறைத்து குடும்பத்தை வழி நடத்த உதவி செய்தாள் மதி.
ராதாவும் பேச்சியும் கடைகளுக்கு உணவு வகைகள் செய்து கொடுக்கும் தொழிலை செய்து வந்தார்கள்.
அருகே பக்கத்து ஊரிலிருந்த சூப்பர் மார்க்கெட்க்கு கணக்காளராக மதிவதனி சென்று வந்தாள்.
மதிக்கு இருப்பத்தி இரண்டு வயதாகியதும் அவளுக்கு திருமணம் செய்து வைக்க பேச்சி முடிவெடுத்தார்.
பேச்சி சிறிது சிறிதாக உழைத்து வீட்டு தேவைகளையும் கவனித்துக் கொண்டு இரண்டு பெண்களுக்கும் அவரால் முடிந்த அளவு ஐந்து பவுன் நகையை சேர்த்து வைத்தார்.
மதிக்கு அவர்கள் இருக்கும் வீடும். நமது அடுத்த நாயகியான செல்லம்மாவுக்கு வேறு வீடும். பேரன் நிர்மலுக்கு ராஜனின் தொழில் உபகரணங்கள் ராஜன் மற்றும் பேச்சியின் தந்தையின் குடும்ப தொழிலான தச்சு பட்டறை வைப்பதற்கு நிலம் என அனைத்தையும் மூன்று பிள்ளைகளுக்கும் பாகுபாடு இன்றியே வைத்திருந்தார்.
ஆனால் இந்த சொத்துக்களை அவர் யாருக்கும் எழுதிவைக்காமல் வார்த்தையால் சொல்லியதோடு நிறுத்திவிட்டார். எழுதி வைக்காமல் போனதே பெரும் ஒரு தவறாகிப் போனது.
ஆனாலும் பேச்சிக்கு எழுதி வைக்க கூடாது என்ற நினைப்பு இல்லை. செல்லம்மா பிளஸ் டூ படித்துக்கொண்டு இருந்தாள். நிர்மல் பிளஸ் வன் படித்துக் கொண்டிருந்தான். படிக்கும் பிள்ளைகளுக்கு தற்பொழுதே சொத்தை காட்டி பாகுபாட்டை ஏற்படுத்த விரும்பாமல் அவர்கள் படித்து முடித்ததும் அவர்களுக்கானதை கொடுக்கலாம் என இருந்து விட்டார்.
சொத்தை பிரதானமாக பிள்ளைகளுக்கு திணிக்காமல் அன்பு, பண்புகளை சொல்லிக்கொடுத்து வளர்த்தார்.
அவரின் வளர்ப்பை பொய்யாக்காமல் மூன்று பிள்ளைகளும் அப்படித்தான் வளர்ந்தார்கள்.
மதியின் திருமண பேச்சை பேச்சி எடுத்ததும் வேலைக்கு என சென்ற இடத்தில் அவளுடன் இணைந்து வேலை செய்யும் புகழ் என்பவனை காதலிபதாக பேச்சியிடம் கூறினாள்.
இவர்களின் காதலை புகழின் வீட்டில் ஏற்றுக்கொள்ளவில்லை. மதியை உண்மையாக விரும்பியதால் புகழ் வீட்டை விட்டு வெளியேறி பேச்சியின் சம்மதத்தோடு கோவிலில் எளிமையாக திருமணம் செய்து கொண்டார்கள்.
இவர்களுக்கு திருமணம் முடிந்து இரண்டு வருடத்தில் ஒரு நாள் மதிய வேளையில் அனைவரும் உணவு உண்டு விட்டு சிறிது நேரம் ஓய்வாக இருக்கும் நேரத்தில் தூக்கத்திலேயே பேச்சியின் வாழ்க்கை காலம் முடிந்தது. அவரின் சேவை இவ்வுலகில் போதும் என நினைத்த இறைவன் பேச்சியின் உயிரை பறித்து அவருக்கு நிரந்தர ஓய்வை கொடுத்து விட்டார்.