பழனிச்சாமி கமலா தம்பதியினர் மகளின் திருமணத்திற்கு இன்னும் ஒரு மாதமே இருப்பதால் அனைத்து வேலைகளும் அவர்களே செய்ய வேண்டும் என்பதாலும் காலில் இறக்கை கட்டிக் கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.
எந்த பிரச்சனையும் இல்லாமல் பெண் பார்க்கும் படலம் நல்லபடியாக முடிந்தபடியால். பெண்ணின் திருமணம் எந்த தடையும் இன்றி நல்ல முறையில் நடந்திட வேண்டும் என்று கமலா கோவிலுக்கு விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்துவதாக வேண்டுதல் வைத்திருக்கிறார்.
வீட்டின் முதல் திருமணம் விமர்சையாக செய்ய வேண்டும் என்பதால் முறைப்படி அனைத்து சடங்குகளும் செய்து திருமணம் செய்ய வேண்டும் என்று நினைத்துள்ளார்கள்.
பிரபல்யமான கடையில் வீட்டிற்கு திருமணத்திற்கான புடவை ஏனைய உடைகள் அனைத்தையும் வரவழைத்து மகளுக்கு. மற்றவர்களுக்கு மாப்பிள்ளைக்கு என அனைத்தையும் தரமானதாக தெரிவு செய்து வைத்துக் கொண்டார்கள்.
நல்ல நாள் பார்த்து தாலிக்கு பொன் உருக்கினார்கள்.
பத்திரிக்கை அடிப்பது. திருமணத்திற்கான அனைத்து வேலைகளையும் தீவிரமாக செய்வது. உணவு ஆர்டர் கொடுப்பது மண்டபம் முன்பதிவு பண்ணுவது என அனைத்திற்கும் பழனிச்சாமி தீவிரமாக ஓடிக்கொண்டிருந்தார்.
பிள்ளைகள் தாய்க்கு அனைத்து விதத்திலும் உதவியாக இருந்தார்கள்.
வீட்டை கழுவி துப்புரவு செய்து அலங்கரிப்பது. வர்ணம் தீட்டுவது. அனைத்தையும் அவர்கள் செய்து கொண்டிருக்க நாட்கள் மிகவும் வேகமாக சென்றது.
திருமணத்திற்கு இன்னும் பத்து நாட்களே இருக்கும் நிலையில் பழனிச்சாமி கமலா தம்பதியினர் சொந்தங்கள் நட்பு வட்டத்தினர் தொழில்துறை நண்பர்கள் என அனைவருக்கும் பத்திரிக்கை வைக்க ஆரம்பித்தார்கள்.
*************
இங்கு மகேஷோ அவனது அலுவலகத்திற்கு வந்து அவனது அறைக்குள் யாரையும் அனுமதிக்காமல் மிகவும் கோபத்தோடு இருந்தான்.
ஏன் கோபத்தோடு இருக்கிறான். என்று எதுவும் தெரியாமல் அவனது பிஏ யாரையும் அறைக்குள் அனுமதிக்காமல் கதவை சாத்திவிட்டு அவனும் வெளியே வந்தான்.
இருக்கையில் இருந்தவன் அவனது கோபத்தை யார் மீது காட்டுவது என்று தெரியாமல் தலையில் கை வைத்தபடி யோசித்துக் கொண்டிருந்தான் மகேஷ்.
சிறிது நேரம் பொறுத்து பார்த்தவன் இது முடியாது என தெரிந்ததும் அவனது பிஏ வை உள்ளே அழைத்தான்.
அவனும் வந்ததும். ரெண்டு காபி எடுத்து வருமாறு கூறி அனுப்பினான்.
சிறிது நேரத்தில் அவனது பி ஏ இரண்டு காப்பியுடன் உள்ளே வந்ததும்
மகேஷ் ஒன்று எடுத்துக் கொண்டு மற்றொன்றை எதிர் இருக்கையில் இருந்து அருந்துமாறு அவனது பி ஏ விடம் கூறினான்.
மகேஷ் சொன்னது போன்று அவனும் கையில் காபியை எடுத்து எதிர் இருக்கையில் இருந்ததும். மகேஷ் அவனது சோகத்தை பொழிய ஆரம்பித்து விட்டான்.
” டேய்.! மச்சான்.என் சோக கதையை கேளு தாய்க்குலமே..! என்ற மாதிரி என் சோக கதைய கேளு மச்சான் கேளு. வரதட்சணை வாங்குவதெல்லாம் எவ்வளவு பெரிய ஒரு குற்றம். நானே எத்தனை பேர் தன் பொண்ணுக்கு வரதட்சணை கொடுக்கிறதுக்கு கடன் கேட்டு வந்தவர்களுக்கு வரதட்சணை கொடுக்குறது தவறு. அதுக்கெல்லாம் நீங்க கடன் வாங்க தேவையில்லை. அதனால் கடன் தர முடியாதுனு சொல்லி அனுப்பி இருக்கேன்.”
” ஆனா இந்த மாமா பண்ணுற வேலையை பாருடா?. நான் போடுற ஜட்டியில இருந்து எனக்கு பிறக்கப் போற குழந்தைக்கு டைப்பர் வரைக்கும் வாங்கி வச்சிருக்கேன்னு பீத்துறான். அந்தாள் மூச்சு விடாமுலுக்கு அவர் வாங்கி வைத்திருக்கிறதை எல்லாம் சொல்லும்போது எனக்கு சிரிப்பு வந்துருச்சு மச்சான். அப்போ சிரிச்சா அசிங்கமா போய்டுமேனு ரொம்பவே சிரிப்பை கட்டுப்படுத்திக்கிட்டேன். அந்த ஆளு தன் பொண்ணை எனக்கு விக்கிறாரா? இல்ல என்னை விலைக்கு வாங்குறாரா? என்றே எனக்கு தெரிய மாட்டேங்குது மச்சான். ஆனா பாரு மச்சான் இவங்களுக்கு ரொம்ப பெரிய சிறப்பான ஒரு சம்பவத்தை நானும் நடத்தி காட்டலன்னு வை என் பேரு மகேஸ்வரனே இல்லடா மச்சான். மகளுக்கு சீர்வரிசை யா கொடுக்குறீங்க சீர்வரிசை இதுக்கு உங்களுக்கெல்லாம் பெரிய ஆப்பு இருக்கு. வெயிட் அண்ட் சீ மாமனாரே.! ” என்று வாங்கி கொடுத்த ஒரு காபியும் உருப்படியாக குடிக்க விடாமல் அவனது ஆருயிர் நண்பனும் பிஏவும் ஆன ராஜேஷிடம் தனது சோகத்தை பொழிந்து தள்ளினான் மகேஸ்வரன்.
நண்பனின் கதையை கேட்டு அவனுக்கு சில ஆறுதல் வார்த்தைகள் கூறிவிட்டு அவனும் வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டான் ராஜேஷ்.
அவன் வேலை பார்க்காமல் அங்கே இருந்தால் இன்னும் சற்று நேரத்தில் நண்பன் முதலாளியாக மாறி அவனை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவான். என்பது ராஜேஷ் க்கு நன்றாக தெரியும்.
காலம் ஒன்றை பழனிச்சாமி கமலா தம்பதியினர் ஒன்றை மகேஸ்வரன் ஒன்றை என ஆளுக்கு ஒன்றாக நினைத்துக் கொண்டு திருமண நாளுக்காக காத்துக் கொண்டிருந்தார்கள்.
கல்யாண குஷியில் பத்து நாட்கள் வேகமாக சென்றதே தெரியாமல் அடுத்த நாள் விடிந்தால் திருமணம் என்னும் நிலையில் இருந்தது.
பழனிச்சாமி கமலா தம்பதியினர் அன்று மதியத்தோடு மண்டபத்திற்கு கிளம்பி விட்டார்கள்.
சித்ரா மற்றும் நிஷா அவளது குடும்பம் மாப்பிள்ளை வீட்டு கெத்தை விட்டுக் கொடுக்காமல். நிச்சயதார்த்தத்திற்கு அரை மணி நேரத்திற்கு முன்புதான் மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார்கள்.
மாலை நேரத்தில் நிச்சயதார்த்தத்திற்கு என குறிக்கப்பட்ட நல்ல நேரம் நெருங்கியதும் நிச்சயதார்த்த பத்திரிகை வாசித்து அனைவரிடமும் சம்மதம் கேட்டு பொண்ணு மாப்பிள்ளைக்கு நலங்கு வைத்தார்கள்.
உமா ஓர கண்ணால் மகேஷை பார்த்துக் கொண்டிருந்தாள்.
மகேஷுக்கு உமாவை பிடிக்கும் அந்த நிலை மட்டும்தான். மாமன் மகள் முறை பொண்ணு. காதல் என்னும் நினைப்பு எல்லாம் அவனிடம் இல்லை. அவனுக்கு குடும்ப பொறுப்பு அதிகமானதால் காதலிக்க நேரமும் இல்லை. அவள் பார்த்ததை அவன் பார்த்தும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் நலங்கு வைப்பதில் கவனமாக இருந்தான்.
அனைவரும் எதிர்பார்த்தபடி நலங்கும் சிறப்பாக முடிந்தது. இனி பொண்ணும் மாப்பிள்ளையும் ஒருவரை ஒருவர் திருமணத்திற்கு முன் பார்த்துக்கொள்ள கூடாது என்பதால் அவர்கள் இருவரையும் அவர்களுக்கென இருந்த அறைக்கு அனுப்பி வைத்துவிட்டு. ஏனைய வேலைகளை பார்க்க ஆரம்பித்தார்கள்.
ஒரு பக்கம் திருமணத்துக்கான சமையல் வேலைகள் ஒரு பக்கம் தாம்பூலப் பை போடுதல் சொந்தங்கள் அவர்களின் குழந்தைகள் என திருமண மண்டபத்திற்குரிய அனைத்து கலையோடும் கலகலப்பாகவே இருந்தது.
உமாவை அவளது தங்கைகள் தோழிகள் அனைவரும் கிண்டல் செய்து கொண்டு இருந்தார்கள். அவர்களை அடக்கி அமைதிப்படுத்தி உறங்க வைத்துவிட்டு கமலா சமையலறைக்கு சென்றார். அங்கு நடப்பதை சரி பார்ப்பதற்கு.
பெண்ணை பெற்றவர்கள் அனைவருக்கும் பழனிச்சாமி கமலா தம்பதியினரின் மனநிலையைப் போன்றே இருக்கும்.
பெண்ணை பெற்று வளர்ப்பது கூட அவர்களுக்கு பெரிய விஷயமாக தெரிவதில்லை. அப் பெண்ணை நல்லபடியாக திருமணம் செய்து கொடுத்து அவள் நல்லபடியாக வாழ்வதை பார்ப்பதே அவர்களுக்கு வாழ்நாள் சந்தோசமாகும்.
அண்ணன் மகள் அண்ணன் குடும்பம் என்று எவ்வித சலுகைகளும் கொடுக்காமல் சித்ரா நிஷாவின் கதையைக் கேட்டு அனைத்து விஷயத்திலும் மாமியாராகவும் சம்மந்தியாகவும் மட்டுமே நடந்து கொண்டார்.
ஆனால் அவளது பெண் நிசாவிற்கு திருமணம் நடப்பதற்கு இதே அண்ணன் தான் அனைத்திலும் உதவியாக இருந்தார் என்பதை வசதியாக மறந்துவிட்டார்.
திருமணம் நடைபெற ஓர் இரவு மட்டுமே நேரம் இருப்பதால் அவரவர்கள் அவரவர் வேலைகளை செய்து கொண்டு இருந்தார்கள்.