சென்னையிலிருந்து கிளம்பிய இரு குடும்பங்களும் ஒன்றன் பின் ஒன்றாக வந்து சேர்ந்தனர் திருச்சிக்கு.
“எங்க வராங்கன்னு கேட்டுட்டே வா ராகவ். அப்போ தான் ஒண்ணா போக முடியும்…” என்றார் முகிலரசன்.
“அவங்க வரும்போது வரட்டுமே ப்பா. நாம போவோம். எவ்வளோ நேரம் நிக்கிறது?…” என ராகவ் சொல்ல,
“இல்லப்பா, அது நல்லா இருக்காது. என்ன இருந்தாலும் நாளைக்கு ஒரு பேச்சாகிரும்….” என்றார் கலா. அதற்குள் நளனே அழைத்துவிட்டான் ராகவ்விற்கு.
“அண்ணா தான்…” என்று அழைப்பை எடுத்தவன்,
“எங்க வந்திட்டிருக்கீங்க ண்ணா?…” என கேட்க நளன் சொல்லியதும் தாங்கள் சென்றுகொண்டிருக்கும் பகுதியை குறிப்பிட்டு,
“எங்களைவிட முப்பது கிலோமீட்டர் நீங்க பின்னாடி வர்றீங்களே?…” என்றான் ராகவ்.
“டேய் அதுக்கென்ன? நீ போய்ட்டே இரு. எங்களுக்காக வெய்ட் பண்ண வேண்டாம். பின்னாடியே வந்திருவோம். அதை சொல்ல தான் கால் பண்ணேன்…” என்றான் நளன்.
“அப்பா சேர்ந்து போகலாம்ன்னு சொன்னாங்க…” ராகவ் சொல்ல,
“ம்ஹூம், அது சரிவராது. இங்க அப்பப்ப நிப்பாட்டி தான் வந்துட்டிருக்கோம்….” என்ற நளன் குரலை தழைத்துக்கொண்டு,
“அத்தைக்கு சுகர் இருக்கே. அப்பப்ப நிப்பாட்டவேண்டியதா இருக்கு. நாங்க பார்த்துக்கறோம்டா. நீங்க முன்னாடி போங்க. ரீச்சானதும் கூப்பிடு…” என்று சொல்லி வைத்துவிட்டான்.
“நளன் அண்ணா தான். நம்மளை வெய்ட் பண்ண வேண்டாம்ன்னு சொன்னாங்க…” என்றதும்,
“ஹ்ம்ம். அப்போ சரி…” என்றார் முகிலரசன்.
இப்படியாக திருச்சிக்கு அவர்கள் முன்பே வந்து சேர, அடுத்த இரண்டுமணி நேரம் கழித்து தான் அங்கையும், அமலாவும் நளனுடன் வருவார்கள் என்றிருந்தது.
கலாவிற்கு குழந்தையை கையைவிட்டு படுக்கவைக்க மனதில்லை. பார்த்து பார்த்து ரசித்து மகிழ்ந்தார்.
“அப்படியே உன் வீட்டுக்காரர் தான்…” என்று மயக்கம் தெளிந்து அமர்ந்திருந்த அவந்திகாவிடம் சொல்ல,
“இப்பவே தெரியுதா ம்மா?…” என்று கேட்டவளும் அத்தனை ஆசையுடன் பிள்ளையை விழிகளால் வருடினாள்.
“எங்க அவங்க? இன்னும் வரலையா?…” என்று கணவனையும் தேட,
“இப்ப தான் வீட்டுக்கு போய் ட்ரெஸ் மாத்திட்டு வர்றேன்னு கிளம்பினாங்க. வந்திருவாங்க அவந்தி. உன்கிட்ட சொல்லிட்டு தான போனாங்க…” என ராகவ் சொல்ல,
“எத்தனைபேர் இருந்தாலும் வீட்டுக்காரரை தான தேடும். அவந்திம்மாக்கும் அப்படித்தான்…” என்று சொல்லிய சாமந்தி சிரிப்புடன் அவர்களுக்கு வாங்கிவந்த டீயை கப்பில் ஊற்றிக்கொண்டிருந்தார்.
“நல்லவேளையா நீங்க கூட இருந்தீங்க சாமந்தி அக்கா. ரொம்பவே தேங்க்ஸ்…” தரணி அவருக்கு நன்றி கூற,
“அட என்னங்கம்மா, இதுக்கெல்லாம் போய் நன்றி சொல்லிக்கிட்டு…” என்று சொல்லியவர்,
“புள்ளைக்கு பிஸ்கட்டும் வாங்கிட்டு வந்தேன். இதை குடுங்க. பசிக்கும்ல….” என நிலவனுக்கு எடுத்து நீட்ட,
“இதுக்கும் தேங்க்ஸ். நான் கொண்டு வந்திருக்கேன் தான். இருந்தாலும் என்ன தேவை இருக்குமோன்னு தெரிஞ்சு வாங்கிட்டு வந்தீங்களே. அதுக்காக. நீங்க ஸ்வீட் அக்கா…” என்றாள் தரணி சிரிப்புடன்.
“அட மறுக்காவுமா?…” என்று சிரித்தவர் கலாவை பார்த்தார்.
“குழந்தைக்கு சுத்தி போடனும் தரணி. நம்ம கண்ணே பட்டுடும். எவ்வளவு அழகா இருக்கான் பாரேன்…” என்று சொல்ல,
மருத்துவமனையின் வெளியே கீழே ராகவ் நிலவனுக்கு விளையாட்டு காண்பித்தபடி நடந்துகொண்டிருக்க அவர்களிடம் சென்றான் ப்ரியதர்ஷன்.
“ராகவ்…” என்றதுமே முகிலரசன் பார்த்துவிட்டார்.
“வந்துட்டீங்களா மாப்பிள்ளை…” என்று கேட்க,
“மாமா இது வீட்டு கீ. கார் பார்க்கிங்ல இருக்கு. நீங்க வேணுமா வீட்டுக்கு போய் கூட ரெஸ்ட் எடுத்துட்டு வாங்களேன்…” என்றான்.
“இல்ல பரவாயில்லை மாப்பிள்ளை…” என்று முகிலரசன் மறுக்க,
“எப்படியும் ஏழுமணிக்கு மேல அட்டண்டர் தவிர இங்க வேற யாரையும் அலோவ் பண்ணமாட்டாங்க. போய்ட்டு நாளைக்கு மார்னிங் வாங்க…” என்றான் அவரிடம்.
“எதுக்கும் நான் கலாகிட்ட கேட்டுக்கறேன் மாப்பிள்ளை…” என்று சொல்லவும் ப்ரியதர்ஷன் முகத்தில் புன்னகை.
“சரி வாங்க…” என்று தலையசைத்து அவன் முன்னே நடக்க,
“இப்ப சிரிச்சாரா என்ன? நீ பார்த்தியா ராகவா?…” என்றார் முகிலரசன்.
“அப்படித்தான் தெரிஞ்சது. ஆனா தெரியலையே ப்பா…” என்றபடி இருவரும் அவனுடன் நடந்தனர்.
ப்ரியதர்ஷனை பார்த்ததுமே ராகவ்வின் கால்களை கட்டிக்கொண்ட நிலவன் அவனை பார்க்கவே முடியாதென்பதை போல திரும்பிக்கொண்டான்.
அதனையும் கவனித்தபடி உள்ளே சென்ற ப்ரியதர்ஷனை பார்த்ததும் கலாவும், தரணியும் எழுந்துகொள்ள சாமந்தியும் பார்த்தார்.
“உட்காருங்க…” என்று சொல்லிவிட்டு ப்ரியன் அவந்திகாவை பார்க்க அவள் அயர்ந்த உறக்கத்தில் இருந்தாள்.
அவளருகில் ஒருபக்கத்தில் மகன் அவளின் கைகளுக்குள் உறங்கிக்கொண்டிருக்க தன்னைப்போலொரு புன்னகை ப்ரியதர்ஷன் முகத்தினில் பரவியது.
கலா, தரணி இருப்பதை எல்லாம் அவன் கருத்தில் கொள்ளவில்லை. தன் இடையில் இரு கைகளையும் வைத்து நின்றவன் இருவரையும் இதழ் விரிந்த புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தான்.
அவன் அப்படி பார்ப்பதும், ரசிப்பதும் தான் மற்றவர்களின் பார்வைக்கு கவிதையானது.
“தரணி, இப்படி வச்ச கண்ணு எடுக்காம பார்க்க கூடாதே. எப்படி சொல்லுவேன். இவர் ஆடாம அசையாம இப்படி பார்க்காரே. மனசுக்கு என்னவோ மாதிரி இருக்கு…” என்றார் கலா.
அவனின் பார்வை தான் தகப்பனாகிவிட்ட சந்தோஷத்தையும் தாண்டிய ஒரு உணர்வை காண்பித்திருக்க அவரால் அது என்னவென்று உணரமுடியவில்லை.
“விடுங்கத்தை, பார்த்தா என்ன? அவர் கண்ணு தானே? பட்டுட்டு போகட்டும். இங்க தான இருக்க போறா அவந்தி….” என்று சொல்ல,
“பார்த்தியா இதை நான் யோசிக்கவே இல்லை. எப்படியும் மூணுமாசம் ஆகிடும் போலையே…” என்றார் பெருமூச்சுடன்.
“ஆனா ஆகிட்டு போகுது. நீங்க என்ன வருஷமெல்லாம இருந்து பக்குவம் பார்க்க போறீங்க? இருங்க பேசாம…” என்று சொல்லிக்கொண்டிருக்க சாமந்தி வெளியேறிவிட்டார்.
“வாங்க நாமளும் வெளில நிப்போம். அண்ணா இங்க இருக்கட்டும்…” என்றாள் தரணி.
சரி என்று கலாவும் அவளுடன் வெளியே வர முகிலரசனும், ராகவ்வும் நிலவனின் இரு கையையும் ஆளுக்கொன்றாய் பிடித்துக்கொண்டு நடந்து வந்தனர்.
“நானும் வேணும்னா ஒத்தாசைக்கு இங்க இருக்கட்டுங்களா?…” என்று சாமந்தியும் இடையில் வர அவரை பார்த்தவர்களுக்கு நெகிழ்ச்சியாய் இருந்தது.
“அலைச்சலை எல்லாம் பாக்காதீங்கம்மா. இங்கிட்டும், அங்கிட்டும் சாப்பாடு கொண்டுட்டு வர போக எல்லாம் நான் பாத்துக்கறேன். கடைகண்ணிக்கு போக, என்னென்ன வேணுமோ எல்லாம் கூட இருந்து நான் செய்யறேன் ம்மா…” என்றார் சாமந்தி.
“உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை சாமந்தி. ரொம்ப ரொம்ப சந்தோஷம்…” என்ற கலா,
“கண்டிப்பா நீங்க தான் எங்களுக்கு உதவியா இருக்கனும்…” என்றார் மனதார.
“இதுக்கெல்லாம் போய்க்கிட்டு நன்றி சொல்லுவாங்களா?…” என சாமந்தி புன்னகையுடன் சொல்லி ஓரமாய் நின்றுகொண்டார்.
“சரி, அப்போ இப்ப கிளம்புவோமா? கார் கீ, வீட்டு கீ எல்லாம் மாப்பிள்ளை குடுத்திருக்கார்…” என முகிலரசன் சொல்ல,