கலாவும், தரணியும் தான் அவளை தேற்ற பார்த்தனர். ஏன் எதற்கு என எந்தவித காரணமும் புரியவில்லை.
இவர்கள் வெளியே காத்திருக்க உள்ளே மனோத்தத்துவ மருத்துவர் மணிமேகலை முன்னால் அமர்ந்திருந்தார் அங்கை.
“அங்கை உங்களை நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்…” என்று சொல்ல,
“வீட்டுக்கா?…” என்றார் அங்கை மெல்லிய குரலில்.
“ஆமா, உங்க வீட்டுக்கு…” என அவர் அருகில் நின்றவளை பார்த்ததும் அங்கையின் முகம் லேசாய் மலர்ந்தது.
மெலிதாய் புன்னகைத்த அங்கை கலக்கம் களைந்து அவளை பார்த்து தலையசைத்தார்.
“உங்க வீடு தான் அது. அன்னைக்கு நடந்ததுக்கு உங்க பையனும், மருமக பொண்ணும் கூட கோவப்படலையே. ரொம்ப கோவத்துல நீங்க பண்ணிட்டீங்கன்னு, உங்களை கோவப்படுத்திட்டோமேன்னு தான் வருத்தப்படறாங்க….” என்றவள்,
“கோவம் எல்லாருக்கும் சகஜம் தான். ஆனா அதை நம்ம கண்ட்ரோல்ல வச்சுக்கனும். கோவமோ, எமோஷனோ நம்மளை கண்ட்ரோல் பண்ண ஆரம்பிச்சா எல்லாமே அவுட்டாஃப் கண்ட்ரோல் தான். அப்பறம் என்னாகும்? ப்ரேக் பிடிக்காத வண்டி மாதிரி மொத்தமும் கொலாப்ஸ். ஆமாவா இல்லையா?…” என்று பாவனையுடன் கேட்க,
“ஹ்ம்ம்…” என தலையசைத்தார் அங்கை.
“இதுவா பதில்? என்ன நாம நினைக்கிறோமோ. அதை சரியோ தப்போ ஓப்பனா சொல்லனும். யாரா இருந்தா என்ன? நமக்குள்ள வர்ற வார்த்தைகளுக்கு நாமளே வடிவம் குடுக்காம இருந்துட்டு என்னை பேச விடலைன்னு யாரையும் சொல்லி என்ன யூஸ்? அதனால ஸ்பீக் அவுட்…” என்றவள்,
“யாராச்சும் பேசாதன்னா யூ ஷட்அப்ன்னு சொல்லிட்டு ஜாவ் ஜாவ். இது புரியுதா?…” என கேட்கவுமே,
“புரியுது…” என்றார் அங்கை மெல்லிய குரலில்.
“உங்க பேரனை பார்த்தேன். உங்களை மாதிரியே சிரிப்பு. உங்களை மாதிரியே கண்ணை இப்படி உருட்டி பார்க்கறான். செம்ம க்யூட்…” என்று சொல்லவும் அங்கையின் முகம் மாறியது.
வேதனையும் வருத்தமுமாய் முகம் சுருங்க அவரை ஆதுரமாய் அணைத்துக்கொண்டவள்,
“இதுக்கு போய் பீல் பண்ணலாமா? அங்க உங்களை வெல்கம் பண்ண உங்க பேரன் வெய்ட் பன்றான். நீங்க பதிலுக்கு சியரப் பண்ணனும். நடந்து முடிஞ்ச எதுவுமே மாறாது. நம்மளுக்கான பாதையை நாம தான் செதுக்கனும். யாரும் வழி விடலைன்னு அடைபட்டு நின்னு என்ன பயன்?…”
“அதனால அங்கை எப்பவும் தனி மனுஷி இல்லை. நமக்கு நாம தான் முதல் உற்ற துணை. புரியுதா?…” என்று சொல்ல சொல்ல அவரின் மனதிற்குள் சிறுநிம்மதி.
ஆனாலும் குடும்பத்தினரை காண முடியாமல் மனம் குன்றியது. இப்போதுமே அவருக்கு கவுன்ஸிலிங் தரப்பட்டதை போவெல்லாம் இல்லாமல் சாதாரணமாகவே பேச்சுக்கள் கொடுத்து அவரின் ஆழமான காயங்களை அறிந்திருந்தனர்.
“ஓகே, நீங்க ரெஸ்ட் எடுங்க. நான் ஈவ்னிங் வந்து பார்க்கறேன்…” என்று மருத்துவர் மணிமேகலை கூற,
“நீ…” என்றார் அங்கை மணிமேகலை அருகில் இருப்பவளை கண்டு.
“நான் கண்டிப்பா வருவேன். இங்க இல்லை. உங்க வீட்டுக்கு. நீங்க கூப்பிடலைன்னாலும் நான் வரலாம்னு இருக்கேன். ஆனா அதுக்குள்ள உடம்பை தேத்தி தெம்பா இருங்க. வந்து பார்க்கறேன்…” என்று அவரை அணைத்து அவள் விடை பெற அங்கையும் தலையசைத்தார்.
மணிமேகலை அவளுடன் வெளியே வந்து தன்னறை நோக்கி செல்லும் பொழுதே,
“வெல்டன் ம்மா. நீ பேசாம சைக்யாட்ரிஸ்ட்க்கு படிச்சிருக்கலாம். எவ்வளோ அழகா அவங்களை ஹேண்டில் பண்ணிட்ட. உண்மையா ரொம்பவே நான் சிரமப்பட்டுட்டேன் தெரியுமா? எத்தனை பேசியும் இவங்க வாய் திறக்கலை. இப்படி ஒரு கேஸ் நான் பார்த்ததும் இல்லை…” என்று சொல்லிக்கொண்டே அறைக்குள் செல்ல,
“வித் ப்ளஷர் டாக்டர். இதுக்கு கண்டிப்பா பீஸ் வேணும். கண்டிப்பா என் ஹாஸ்பிட்டல் இனாகரேஷன்க்கு நீங்க வந்தே தீரனும். நோ எக்ஸ்க்யூஸ்…” என்றவள் அந்த பத்திரிக்கையையும் எடுத்து காண்பித்தாள்.
“கண்டிப்பா. நான் வரலைன்னா விடவா போற நீ. நானில்லாம எப்படி நடக்கும்?…” என்று சொல்லிக்கொண்டே நர்ஸை அழைத்து ப்ரியதர்ஷனை அழைக்கும்படி பணித்தார்.
“அப்போ நானும் கிளம்பறேன்….” என்றவளிடம்,
“இரு இவங்கட்ட பேசிட்டா நானும் கிளம்பிருவேன். கண்டிப்பா வீட்டுக்கு வந்துட்டு போ. இப்ப என்னோட நீ வந்துதான் ஆகனும்…” என்று சொல்ல,
“லாக் பன்றீங்களா டாக்டர் ஜி…” என்று சிரித்தவள்,
“ஓகே நான் என் ஹஸ்க்கு ஒரு கால் பண்ணி சொல்லிட்டு வர்றேன். அங்க வந்து பிக்கப் பண்ணிக்க சொல்லி…” என்று நகர்ந்தாள்.
அவள் செல்லவும் ப்ரியதர்ஷன் அவந்திகாவுடன் உள்ளே வரவும் சரியாய் இருந்தது.
“உக்காருங்க மிஸ்டர் அன்ட் மிஸஸ் ப்ரியதர்ஷன்…” என்று மணிமேகலை சொல்லவும் இருவரும் அமர்ந்தனர்.
“டாக்டர், அம்மா இப்ப எப்படி இருக்காங்க?…” என்று அவன் கேட்க,
“உங்களை பயம் காமிக்க இதை நான் சொல்லலை. அவங்களை நீங்க முழுசா தெரிஞ்சுக்கிட்டா தான் நீங்க எப்படி அவங்களை கையாளன்னு புரிஞ்சுக்க முடியும்…” என்றார் மணிமேகலை.
“எதுவா இருந்தாலும் வெளிப்படையாவே சொல்லுங்க டாக்டர்…” என்ற ப்ரியனின் முகத்தில் வேதனையையும் மிஞ்சும் வலி.
“நான் அன்னைக்கு சொன்னது தான். உங்களோட அம்மா முதல்ல எங்களுக்கு கோ-ஆபரேட் பண்ணவே இல்லை. கொஞ்சம் கொஞ்சமா தான் அவங்களை எங்க கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர முடிஞ்சது…” என்று சொல்ல அவளும் வந்துவிட்டாள்.
“வாம்மா, பேசிட்டியா?…” என்றவர்,
“இவங்க இல்லைன்னா உங்கம்மாவை சமாளிச்சிருக்கவும், அவங்க மனசுல இருக்கறதை தெரிஞ்சுக்கவும் முடியாது. அவங்களோட ஆழ்மனசு ஒத்துழைக்காம எந்த மருந்தாலையும் அவங்களுக்குள்ள இருக்கிற எண்ணங்களை படிக்க முடியாது…” என கூறி,
“இவங்க யாருன்னே சொல்லலை பாருங்க. இவங்க தான் டாக்டர் அஷ்மிதா பிரசாத்…”
“ஹலோ ஸார், ஹாய்…” என அஷ்மிதா சொல்லவும்,
“ஹலோ டாக்டர்…” என்றான் ப்ரியதர்ஷன்.
“இங்க இந்த ஹாஸ்பிட்டல்ல தான் வொர்க் பண்ணிட்டிருந்தாங்க. இப்ப கல்யாணமாகி குறிஞ்சியூர்ன்ற ஊர்ல இருக்காங்க….” என்று அவளை அறிமுகம் செய்து வைத்தார் மணிமேகலை.
“நான் இருக்கனுமா?…” என அஷ்மிதா மணிமேகலையிடம் கேட்க,
“இருந்தா பெட்டரா இருக்கும்….” என்றவர், ப்ரியதர்ஷனிடம் திரும்பினார்.
“உங்கம்மாவோட மனநிலை ரொம்பவே மோசமா பாதிப்படைஞ்சிருக்கு. அதை அவங்க இப்பவும் உணரலை. தன்கிட்ட தப்பு என்னவோ இருக்குன்னு அப்போப்போ தான் அவங்களால புரிஞ்சுக்க முடியுது. ஆனா அதை அவங்க பெரிய விஷயமா எடுத்துக்கலை…” என்றார்.
“டாக்டர், அவங்கக்கிட்ட இந்த சேஞ்ச் எல்லாம் நான் சமீபமா தான் பார்த்தேன். இதுவரை குரலை உயர்த்தி கூட அம்மா பேசினதில்லை…” என்றான் ப்ரியதர்ஷன்.
“இது எல்லாரும் கவனிக்க கூடிய விதமானது இல்லை. அவங்களுக்கு பைத்தியம் இல்லை. மனநிலை பாதிப்பு. ஆனா இன்னும் கொஞ்சம் விட்டிருந்தா நிச்சயம் அந்த லெவல் போயிருப்பாங்க. அதீத மன அழுத்தம், அதை வெளில காமிச்சுக்க அவங்க விரும்பலை…” என்றார் மணிமேகலை.
ப்ரியதர்ஷனும், அவந்திகாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள மணிமேகலை பெருமூச்சுடன் தலையசைத்தார்.
“அவங்க ஒரு வாழ்க்கை வாழ்ந்திருக்காங்க. அந்த வாழ்க்கைக்குள்ள அவங்க திரும்ப போக நினைக்கலை. அந்த வாழ்க்கை அவங்களை மரியாதையா பார்க்கலை. உரிமையா நடத்தலை. மனுஷியா உணர வைக்கலை….” என்று சொல்ல ப்ரியதர்ஷன் அதிர்ந்தான்.
“என் வொய்ப் வளைகாப்பு அப்போ தான்….” என்றவன் அன்று நடந்த விஷயங்களை கூறியவன்,
“எங்க ரெண்டுபெருக்குள்ள கேப். அதை தொடர விடவேண்டாமேன்னு தான் அவந்திகாவுக்கு பார்க்கற கைனகாலஜிஸ்ட்கிட்ட கால் பண்ணி நானே என்னோட அழைச்சுட்டு போக விசாரிச்சேன். அவங்க தாராளமா கூட்டிட்டு போகலாம்ன்னு சொன்னதோட, ஏற்கனவே அம்மாக்கிட்ட சொன்னேன்னு சொன்னது, அம்மா இதை வேண்டமன்னு அவாய்ட் பண்ண பார்த்ததுன்னு நான் வேற விதமா நினைச்சேன். ஜஸ்ட் இது மாமியார், மருமகள் யூஸ்வல் திங்க் அப்படின்னு…”
“ஆனா அதோட எக்ஸ்ட்ரீம் அவந்திகாவுக்கே தெரியாம அவளை சிக்காக்கி வச்சிருக்காகன்னு தெரிஞ்சதும் என்னால அங்க விட்டுட்டு இருக்க முடியலை. அம்மாவையும் சேர்த்து தான் கூப்பிட்டேன். எதுவானாலும் என்னோடவே இருக்கட்டும்ன்னு…”
“அந்த வீட்டை விட்டு வரமுடியாதுன்னு பிடிவாதம். சிலநேரம் சட்டுன்னு பேச ஆரம்பிச்சாங்க. அது அவந்திகாவை கூட்டிட்டு வந்த கோபத்துலன்னு நினைச்சேன். அப்படியெல்லாம் அம்மா யாரையுமே பேசினதில்லை. என்னோட அக்காவையும், அக்கா வீட்டுக்காரரையும் கூட பேசினாங்க…” என்றான்.
அதன்பின் நடந்தவற்றை எல்லாம் அவர்களிடம் கூறியவன் பார்வை அவந்திகாவையும் தொட்டது.
அவளுக்கு இது எதுவும் தெரிந்திருக்கவில்லை. அவன் பகிர்ந்திருக்கவும் இல்லை. கண்ணெல்லாம் நீர் நிரம்பிவிட்டது.
“எங்க துவா மாதிரி பார்க்கறாங்க இவங்க…” என்று மணிமேகலையிடம் அஷ்மிதா கூற,
“துவா? ஓஹ் மிஸ்டர் அதிரூபன் மிஸஸ் துவாரகா…” என அவரும் புன்னகைத்துக்கொள்ள அந்த சிறிய சம்பாஷனை மாற்றம் ப்ரியன், அவந்திகாவை ஆற்றுப்படுத்தியது.
“அவந்திகா, உங்க மாதர்-இன்-லாக்கு வந்திருக்கறது நோய் கிடையாது. ஜஸ்ட் மெண்டல் டிப்ரெஷன். இவ்வளோ பயம் வேண்டாம். நம்மோட ஏமாற்றங்கள் தரும் உணர்வோட உச்சநிலை. சரியாகிடும்ன்னு நம்பலாம்…” என்று அவளை தைரியமூட்டியவள்,
“நீங்க உங்க மிஸஸ் டெலிவரி டைம்ல கண்கூடா பார்த்திருந்தும் ஏன் அவங்களை அப்பவே கவுன்ஸிலிங் தர அழைச்சுட்டு வரலை?…” என்றாள் ப்ரியனிடம் அஷ்மிதா.
“அவங்களுக்கே தெரியாம ரெண்டு தடவை ட்ரை பண்ணிட்டேன். ஆனா முடியலை. வெளில போறோம்னு சொல்லி அழைச்சும் வரலை. அவந்திகாவுக்கு ஹாஸ்பிட்டல் போறப்போ அவங்க ஹெல்த் செக்கப்க்குன்னு சொல்லி அழைச்சிட்டு போனப்போவும் வந்துட்டாங்க. என்னால…” என்றவனின் முகம் இயலாமையில் கசங்கியது.
“அதுமட்டுமில்லை, எங்களோட இருந்த அந்த மூணுமாசமும் ஆரம்பத்துல சிரமம்ன்னாலும் அப்பறம் அவங்க தூக்கம் நார்மலாக ஆரம்பிச்சது. அவங்களை எங்களுக்குள்ள தான் பார்த்துக்கிட்டோம். அவங்களுக்கு தேவையான அனுசரணையான அன்பை குடுத்தோம்…” என்று ப்ரியன் சொல்ல அஷ்மிதா முகத்தில் புன்னகை.
“உங்க அம்மாவுக்கு என்ன தேவைன்னு தெரியுமா?…” என்று கேட்க ப்ரியதர்ஷன் யோசனையுடன் பார்த்தான்.
“புரியலை…” என்றான் ப்ரியதர்ஷன்.
“அவங்களுக்கு சுதந்திரம் வேணும். கட்டுப்பாடில்லாம தன்னை காயப்படுத்தாத மனுஷங்க வேணும். அவங்களை கண்ட்ரோல் பண்ணாம அவங்க அதிகாரம் செலுத்த ஆள் வேணும். அதே நேரம் அவங்களை யாரும் குறையா தவற பார்த்திடாம இருக்கற சூழல் வேணும்…” என்றவள்,
“ஒரு கூட்டமா, விசேஷமோ எதுவோ ஒன்னு. அந்த இடத்துல தான் தனியா இருக்க கூடாதுன்ற ஒரு நினைப்பு அவங்களுக்குள்ள இருக்கு. எல்லாமே தன் பார்வையில செய்யிறதுல அவங்களோட பழைய காயம் ஆறுதுன்னு அவங்க நம்பறாங்க…”
“தான் செய்யறது தப்புன்னு தெரியுது. ஆனா அதை தவிர்க்க அவங்களால முடியலை. அந்தமாதிரி சூழ்நிலைகள் அவங்களுக்கு பலமான மனஅழுத்தத்தை தருது. அதையும் வெளிப்படுத்தாம, வெளில சொன்னா தன்னை இன்னும் தனியாக்கிருவாங்களோன்னு பயப்படறாங்க…”