“கண்ணா, சீக்கிரம் ரெடியாகு” என்று கார்த்தியை அவசரப்படுத்தினான் காளிதாஸ்.
“தூங்கவிடாம காலங்காத்தால எழுப்பிட்டு, சீக்கிரம்னு ஆர்டர் வேறயா?” முணுமுணுத்தாலும் டாப்ஸீன் மீது ஸ்டோலை சுற்றிப்போட்டுத் தயாரானாள். ஜீன்ஸ், டாப்ஸ். அதற்கு மேல் ஸ்டோல் என்று இருந்த மனைவியின் தோற்றத்தை ரசித்தவன்
“ஏதோ குறையுதே..” என்று சொன்னவன் வெளீர் ஊதா நிறத்தில் இருந்த தொப்பியை அவள் தலையில் வைத்து
“பெர்ஃபெக்ட்! இளவரசி மாதிரி இருக்க” என்றான்.
“எங்க வாங்குனீங்க?” என்று தொப்பியை சரிசெய்தபடி கேட்க
“நேத்து வரும்போது நீ தூங்கினப்ப வாங்கினேன், மது பாப்பாவுக்கு ஒன்னு வாங்கினேன். அப்படியே என் பாப்பாவுக்கும்” என்றவன் கார்த்தியை அணைத்துப் பிடித்து
“உனக்கு ஒரு அழகான இடம் காட்டனும், கூட்டமில்லாம இருந்தாதான் அதை ரசிக்க நல்லா இருக்கும். அதான் அவசரப்படுறேன்” என்றான். மணி ஏழு தான் ஆனது.
“ஒன்னு சொல்லவா? எந்தவொரு இடமும் அழகா இருக்க காரணம் கூட இருக்கவங்கதான். அப்படி இருக்கும்போது உங்ககூட வந்தா எப்பவும் நான் ரசிப்பேன்” என்றாள் கார்த்தி உணர்ந்து.
“கிரேஸி கேர்ள்!” என்றவன் அவள் கைப்பிடித்து அந்த கவிகை மாடம் விட்டு வெளியே அழைத்துவந்தான். கார்த்திக்கு அந்த ஊரின் மென்மையான குளிரும், அந்த காலை நேர சில்லென்ற பனியும், பருவமழைக்காலமென்பதால் காற்றில் நிலவிய குளிர்ச்சியும் அவ்வளவு பிடித்தது. காளிதாஸனின் கையோடு தன் கை கோர்த்தவள்
“செல்ஃபி எடுப்போம்” என்று அவனோடு வழியெங்கும் படம் பிடித்தாள்.
இருபக்கமும் மலை, நடுவே நதி. பச்சை, பசுமை எங்கும்! அவ்வளவு மரங்கள் நதியின் கரையில். வானும் நீலம், நதியும் அப்படியொரு தூய்மையான நீர். மலைகளின் நடுவே இளம் செந்தூர நிறத்தில் சூரியன் மெல்ல தெரிந்தது. கடினமான பாறைகளின் மீது பாய்ந்தோடியது கசோலின் பார்வதி நதி.
இயற்கையின் ஜாலம் எங்கெங்கிலும்!
இவர்கள் போன போது இரண்டு பேர் மட்டுமே நதியின் கரையில் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தனர். கார்த்திக்கு அந்த இடத்தைப் பார்க்கவும் அவ்வளவு பிடித்தது. நீரின் ஓசை மட்டுமே நதியின் சங்கீதமாய்.
“இதான் பார்வதி ரிவர். கசோலை இந்தியாவோட (amsterdam) சொல்லுவாங்க. இங்க பார்க்க நிறைய இடம் கிடையாது கண்ணா, ஆனா பார்க்கிற இடமெல்லாம் அழகுதான்” என்றான் நதிக்கரையில் நடந்தபடி.
“என்ன கார்த்தி மேடம்? பிடிச்சிருக்கா ஹனிமூன்?” என்று காளிதாஸன் சிரிப்புடன் கேட்க
“ரொம்ப பிடிச்சிருக்குங்க, நான் எதிர்ப்பார்க்கவே இல்லை. லவ்லி!” என்றாள்.
“உனக்குப் பிடிச்சதுல எனக்கும் சந்தோஷம்டா. தண்ணீயில கை வைக்கிறியா, பனிப்பாறை உருகி அதுல வர நதி. கொஞ்சம் ஜில்லுனு இருக்கும். ஃபீல் இட்” என்றான்.
அந்த நதிக்கரையில் இருந்த பாறையில் அமர்ந்தபடி புகைப்படங்கள் எடுத்த கார்த்தி அதனை இன்ஸ்டாகிராம் என்ற சமூக வலைதளத்தில் பதிவேற்றினாள்.
“ஒரு போட்டோ எத்தனை தடவ எடுப்ப கார்த்தி, கொஞ்சம் நடந்துட்டு ரூம் போய் சாப்பிடலாம்” என்று காளிதாஸன் மனைவியைப் பார்க்க,
“இந்த உலகத்துல ஈசியான விஷயம் என்ன தெரியுமா கண்ணா?” என்று காளிதாஸன் மனைவியை அருகே அழைத்து கேட்க
“நீங்களே சொல்லிடுங்க” என்று அவன் கையோடு கைகோர்த்தாள்.
“சந்தோஷமா இருக்கறது, அதே நேரம் கஷ்டமான விஷயம் அதுவும் சந்தோஷமா இருக்கிறதுதான்” என்று சொன்ன கணவனை விழிகளை உருட்டிப் பார்த்தவள்
“தெளிவா குழப்புறது இதானா பாஸ்?” என்று கேட்டாள்.
“இல்லை! சந்தோஷமா இருக்கிறது ரொம்ப ஈசி, அடுத்தவங்களை விட சந்தோஷமா இருக்கணும் நினைக்கிறதுதான் தப்பு. கஷ்டமும் கூட, நம்ம சந்தோஷம் எதுன்னு நம்மதான் முடிவு செய்யனும். நம்ம திருப்திக்கு மெமரீஸ்க்கு போட்டோ எடுக்கிறோம், அதை ஏன்மா சோசியல் மீடியாவுல போடனும்? ” என்று கேட்க, கார்த்தி அவனை யோசனையாகப் பார்க்க, உடனே
“தட்ஸ் மை ஓபினியன் கண்ணா! உனக்கு அது விருப்பம்னா போட்டுக்கோ” என்றாள் அவளின் எண்ணங்களுக்கும் மதிப்பளித்து.
“நீங்க இதை பெருசா எடுக்க மாட்டீங்கன்றதால சொல்றேன்ங்க. நம்ம மேரேஜ் முடிஞ்சப்போ என் ப்ரண்ட்ஸ்லாம் ஏன் இப்படின்ற மாதிரி ரொம்ப பேசினாங்க. என்ன ஆச்சுன்னு என்னோட நியாயம் கேட்கக் கூட இல்லை. அதான், பாருங்க என் ஹஸ்பண்ட் எவ்வளவு ரொமாண்டிக், ரசனைக்காரர்னு காட்டனுமேன்னு…” என்று கார்த்தி இழுக்க, காளிதாஸன் சிரித்தான்.
“அப்போ அடுத்தவங்களுக்காகத்தான்..” என்று அவன் கேட்க
“இந்த இடம் தெரியாதவங்களும் தெரிஞ்சிக்கட்டுமேனு ஒரு பொது சேவைதான்” என்றாள் குறும்புப் பார்வையுடன்.
“கண்ணா! நான் எப்படினு உனக்கு மட்டும் தெரிஞ்சா போதும்மா. மத்தவங்களுக்குத் தெரியவே வேண்டாம், எப்படி இருந்தாலும் குறை சொல்றவங்க இருப்பாங்க. நீ நிஜமா சந்தோசமா இருக்கியா அதை சொல்லு?” என்றதும் கார்த்தி முறைத்தாள்.
“என்ன கேள்வி இது? சந்தோஷமா தெரியலையா என்னைப் பார்த்தா?” என்றாள் சிடுசிடுப்பாக.
“சரி சரி கோவப்படாத, வா உன் ஆசைக்காக ஒரு செல்ஃபி எடுத்து உன் ப்ரண்ட்ஸை வெறுப்பேத்தலாம்” என்றான் சிரிப்புடன். அவள் தோள் மீது கைப்போட்டு கார்த்தியின் போனை உயர்த்திப் பிடிக்க
“வேண்டாம், வேண்டாம்! இவ்வளவு அழகான ப்ளேஸ் எல்லாம் ஒருத்தியும் போனதில்ல, இந்தியாவுல இப்படி இருக்குன்னு கூட தெரியாது. அதுவும் நம்ம ரூம், தட்ஸ் ஆவ்சம். அதெல்லாம் பார்த்தா பொறாமைப்படுவாங்க. கண்ணுபடும்” என்றவள்
“இன்ஸ்டாவுல வேண்டாம். நார்மல் கேம்ல பிக் எடுப்போம்” என்று கார்த்தி சொல்ல, காளிதாஸனுக்கு அடக்கமுடியாத சிரிப்பு. கஷ்டப்பட்டு சத்தம் குறைத்தான்.
“என்னவெல்லாம் யோசிக்கிற நீ?” என்று தொப்பியோடு அவளின் தலையைப் பிடித்தான்.
“அச்சோ என் கேப்” என்று கார்த்தி சிணுங்க,
“யூ லுக் கிரேட்!” என்றான் அதனை சரியாய் வைத்து.
“எனக்கும் உன்னோட பிக் போன்ல வைக்க ஆசைதான் டா. பட் தேவையில்லாத பிரச்சனை வரும். இப்போ நிறைய விஷயம் நம்ம போன்லயே வைச்சிடுறோம். அது காணாம போகும்போது உயிரே போற அளவு ஃபீல் பண்றோம். அதனால நான் என் போன் தொலைஞ்சிபோனா கூட கவலைப்படக் கூடாதளவுதான் டேட்டா வைச்சிருப்பேன். ஒன்லி நம்பர்ஸ், வேற முக்கியமானது ஒன்னுமில்லை. கேமிராவுல எடுத்து ஆல்பம் போடுறதுதான் நல்லது, தொட்டுப் பார்த்து ஃபீல் பண்ணலாம், பெர்சனல் போட்டோ எதுவும் போன்ல வைக்காத கண்ணா எப்பவும்” என்றவன்
“சாரி, ரொம்ப அட்வைஸ் பண்றேன்” என்றான்.
“இல்லை, இல்லை. நீங்க சொல்றதும் சரிதான்” என்று உடனே ஒத்துக்கொண்டாள் கார்த்தி. அவன் சொல்வதிலும் அர்த்தம் இருக்கிறதே, புகைப்படங்கள் நினைவின் சின்னங்கள். அதற்கு அவன் மறுப்பு சொல்லவில்லையே, அதனை எல்லாம் பொதுவெளியில் போடாதே என்றுதானே சொல்கிறான். அவன் அரசியலில் இருக்கிறான், பப்ளிக் ஃபிகர்! அதனால் எல்லாம் யோசித்து நடக்க வேண்டும் என்று முடிவு செய்தாள் கார்த்தியாயினி. அவள் யோசனையில் இருக்க,
“ஹே கண்ணா! எல்லாத்துக்கும் சரி சொல்லாத, டக்குனு பேச்சு முடிஞ்சு போகுது பாரு. பதில் பேசணும் அப்போதானே பேச்சு வளரும்…” என்றான் ரசனையாக.
“ஓஹோ!!” என்றவளுக்கு கணவனின் மீதான காதல் நாளும் பெருகிக்கொண்டே போனது, என்றுமே இந்த உணர்வு தீராது என்று மனம் சொன்னது.
“அப்படியெல்லாம் கார்த்தி ஈசியா ஒத்துக்கமாட்டா யார் சொன்னாலும், ஆனா நீங்க சொன்னா சரியா இருக்கும்னு எனக்குத் தெரியும். தப்பா இருந்தாலும் நீங்க சொன்னா நான் கேட்பேன். இதுக்கு ஒன்னும் அட்வைஸ் பண்ணக்கூடாது” என்றதும் சிரித்துவிட்டான்.
“ஓகே கண்ணா, டைம் ஆச்சு. வா சாப்பிடலாம்” என்று கார்த்தியை அங்கிருக்கும் கஃபே ஒன்றுக்கு அழைத்துப்போனான்.
“எனக்குப் பிடிக்கும்னு எப்படி தெரியும்? நான் சொன்னதே இல்லையே?” என்று கார்த்தி யோசிக்க, அவனிடம் கள்ளச்சிரிப்பு.
“ஸார் ஏதோ திருட்டுத்தனம் பண்ணிருக்கார் தெரியுது. என்னனு சொல்லுங்க” என்று அவனை செல்லமாய் மிரட்டினாள் கார்த்தி. உண்மையை சொல்ல வேண்டுமானால் வெகு மாதங்களுக்குப் பிறகு அவ்வளவு மகிழ்ச்சி, அளவீடா ஒரு ஆனந்தம் அவளுக்கு. பேரின்பத்தில் திளைத்திருக்க, முகத்திலே அந்த சந்தோஷம் மின்னியது.
“இன்ஸ்டால உன் ப்ரோஃபைல் பார்த்தேன். உன் போட்டோ விட இதான் அதிகம் இருந்தது” என்றதும்
“ப்ராடு நீங்க! என்னை ஸ்டாக் பண்ணியிருக்கீங்களா?” என்று கேட்டாள்.
“வைஃபை ஃபாலோ பண்ணினா ஸ்டாக் பண்றதா கண்ணா? ஹனிமூன் ப்ளான் பண்ணும்போதே கொஞ்சம் வொர்க் பண்ணீனேன், உன்னைக் கேட்டாலே நீ என்ன வேணும் சொல்லுவதான். ஆனாலும் நானே உனக்காக செஞ்சா நீ சந்தோஷப்படுவதானே? அதான் இந்த வேலையெல்லாம் செஞ்சேன்மா” என்று சொன்ன காளிதாஸனைக் காதலாகப் பார்த்தவள்
“ஒன்னும் செய்யலயா? வாட்? கண்ணா! என்ன பேசுற நீ? நிஜமா சொல்றேன் உன்னோடு யார் இருந்திருந்தாலும் கண்டிப்பா அவங்க சந்தோஷமா இருந்திருப்பாங்க. ஆனா என் கூட இருக்கிறது கஷ்டம், என்னால என்னை மாத்திக்கவும் முடியாது, பட் நீ என்னை இந்தளவு ரசிக்கிற, என்னையும் எல்லாத்தையும் ரசிக்கவைக்கிற. யூ ஆர் ஸ்பெஷல் எல்லா வகையிலும். கல்யாணம் செய்ய எனக்கு இன்ட்ரஸ்ட் இல்லை, அரசியல் ஆர்வம் எல்லாம் தாண்டி யார்கிட்டவும் இப்படி ஒரு ஃபீல் வந்ததே இல்லை. சொல்லப்போனா ஒவ்வொரு நாளும் இந்த ஃபீல் அதிகமாகுது. உன்னோட என் நாட்கள் ரொம்ப அழகானதுடா” என்றான் உணர்ந்து.
அன்று முழுவதும் வெளியே சுற்றினர் காளிதாஸும் கார்த்தியும். சுற்றிப்பார்க்க அவன் சொன்னது போல் பெரிதான இடங்கள் இல்லையென்றாலும் ஊரின் இதமான வானிலைக்கும் கார்த்தி இருந்த காதல் நிலைக்கும் கணவனின் அருகாமையில் மகிழ்வுடனிருந்தாள்.
மாலை போல் அவர்கள் இருந்த dome வர, அந்த இடத்தில் இருந்து பார்த்தால் மலை நன்றாகவே தெரிந்தது. வெளிச்சத்திற்காக நிறைய மஞ்சள் விளக்குகள் ஒளிர்ந்திருக்க ரம்யமாக இருந்தது அவ்விடம். மெல்ல பனிபுகை .
அந்த மாடத்தின் மேற்கூரை வழியே பார்த்தால் வானம் தெரியும். வேண்டாம் என்றால் அதற்கென இருக்கும் ஸ்கீரினை இழுத்துவிடலாம். இருவருமே தலையணையில் சாய்ந்தபடி உட்கார்ந்து வானத்தை வேடிக்கைப் பார்த்தனர்.
“என்னாச்சு என் கவிதைக்கு? அமைதியாவே இருக்காங்க” என்று அவள் கன்னத்தைப் பிடிக்க, அவன் தோளில் சாய்ந்தவள்
“உங்களை முதல் தடவ பார்த்த பின்னாடி உங்களை சந்திச்சிருக்கவே கூடாது நினைச்சேன். ரொம்ப கஷ்டமா இருந்தது அந்த நாட்களைக் கடக்க, எதுவுமே தெரியலன்னா கூட நிம்மதியா இருந்திருக்கலாம்னு நினைச்சிருக்கேன். அப்புறம்தான் அதெல்லாம் தப்புன்னு புரிஞ்சது, வாழ்க்கைன்ற எவ்வளவு உண்மையா வாழ்றோம்ன்றதுலதான் இருக்கு. ஏன் வாழனும் நினைச்சிட்டு இருந்த எனக்கு வாழ அர்த்தம் கொடுத்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்” என்றபடி அவனை இறுக்கியணைத்துக்கொண்டாள் கார்த்தி.
அவளை ஆதுரமாக அணைத்த காளிதாஸன் “உன்னைக் கஷ்டப்படுத்துற எதையும் நினைக்காத கண்ணா” என்றான்.
“இல்லை! அதை தாண்டி இன்னிக்கு இப்படி சந்தோஷமா நான் ஒரு லைஃப் லீட் செய்வேன் நினைக்கவே இல்லைங்க. அதான்” என்றாள் கார்த்தி உணர்வுப்பூர்வமாக.
“நாட் அட் ஆல்!” என்று மனைவியை மடியில் அமர்த்திக்கொண்டவன்
“காதலித்துக் கெட்டுப் போன்னு ஒரு கவிதை நா.முத்துக்குமாரோடது. அதுல சில லைன்ஸ் வரும், என் லைஃப்ல என்னைக்குமே வராது நினைச்ச விஷயம் அதெல்லாம்” என்றவன் அந்த கவிதையை வாசித்துக் காட்டினான்.
“ஆனா உன்னால நிறைய அதுல நிறைவேறிடுச்சு” என்று அவள் காலை மெல்ல பிடித்தவன்
“மேகமென கலை
மோகம் வளர்த்து மித
மதி கெட்டு மாய்
கவிதைகள் கிறுக்கு
கால்கொலுசில் இசை உணர்
தாடி வளர்த்து தவி
எடை குறைந்து சிதை”
என்று காளிதாஸன் கவிதைப் படித்தான்.
அவன் கவிதைப் படிப்பது ஒன்றும் புதிதல்ல! வீட்டில் இருக்கும்போது அவளிடம் கவிதைப் படித்திருக்கிறான், அவளையே கவிதையாய்ப் படித்திருக்கிறான். ஆனால் இந்த அனுபவம் புதிது! குளிருக்கு இதமாய் இருந்த அறை, மேலே வான்! அதில் வீண்மீன்! காளிதாஸன் மடியில் கார்த்தி, காதருகில் கணவனின் குரலில் காதலாய் ஒரு கவிதை!
வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியும் விரக்தியில் வாழ்ந்த காலம் போய் இன்று அத்தனை ரசித்து நொடிகள் நீளாதோ, நாட்கள் நீளாதோ என்று வாழவைத்தான் காளிதாஸன்.
“உளறல் வரும் குடி
ஊர் எதிர்த்தால் உதை
ஆராய்ந்து அழிந்து போ
மெல்ல செத்து மீண்டு வா
திகட்ட, திகட்ட காதலி..” என்றவனின் இதழ்கள் காதோரம் உரசின. காதல் கவிதை, காதலாய் கவிதை என்று கார்த்தியை உணரச்செய்தான் காளிதாஸன்.
கோதையினால் உண்டான மயக்கம் தான்! மையல் மையம் கொள்ள, இடையின் இடைவெளிகளில் இசை மீட்டினான் காளிதாஸன்.
“திகட்ட திகட்ட காதலின்னு சொன்னாரே அதை நோட் பண்ணு கண்ணா, வாழ்க்கையில நிறைய அனுபவம் இருக்கணும் நினைக்கிறவன் நான். உயிர்ப்போடு புதுசா ஒவ்வொரு நாளும் பார்த்து வாழனும் ஆசை எனக்கு, இந்த லைன் படிச்சப்போ திகட்டினா காதல் எப்படி இனிக்கும் தோணீச்சு, சிலதை எல்லாம் அனுபவிக்கனும் போல உணர…இல்லையா?” என்றவனின் முத்தங்களில் மூழ்கினாள் மனைவி. அதன்பின் முத்தங்களின் சத்தங்கள் மட்டுமே அறையெங்கிலும்.!!
அங்கிருந்த நான்கு நாட்களும் கார்த்திக்கு வாழ்வில் என்றுமே மறக்க முடியாது.
******************************
ஊருக்கு வந்து ஒருவாரம் ஆகிவிட்டது. பதவியேற்பு விழா முடிந்த பின் காளிதாஸனை வேலைகள் இழுத்துக்கொண்டன. மந்திரி பதவி இல்லையென்றாலும் நிறைய குழுக்களில் உறுப்பினராகவும், தலைவராகவும் நியமிக்கப்பட்டான். கார்த்தி இப்போது வீட்டில் இருப்பதில்லை, முடிந்தவரையில் அவளும் தன்னை வேலைகளில் ஈடுபடுத்திக்கொண்டாள்.
அவர்களின் அலுவலகம் அவள் பொறுப்பு. கூடவே சிவகாமி அம்மாவுடன் இணைந்து பொதுப்பணிகளிலும் ஈடுபட்டாள். முன்பும் இப்படி செய்வாள், ஆனால் பணமாக மட்டும் இருக்கும். இருக்கிறது கொடுக்கிறோம் என்ற பண்போடு செய்தவள் இப்போது மிகவும் ஆத்மார்த்தமாய் செய்தாள். சமூகத்தில் அவல நிலையில் இருக்கும் பெண்களுக்குத் தன்னால் முடிந்த உதவிகள் நிறைய செய்தாள்.
காளிதாஸன் சட்டசபை கூடுவதால் சென்னையிலே இருப்பான்.
கார்த்திக்குக் கணவனுடன் நிறைய நேரம் இருக்க வேண்டும் என்ற ஆவல் உண்டு. என்றாவது கோபம் வந்து கத்தினாலும் காளிதாஸன் அவளை உணர்ந்து பொறுமையாகவே பேச்சை வாங்கிக்கொள்வான். அன்றும் அப்படியே.
“திட்டுறேனே, பதில் பேசுறீங்கள நீங்க? தனியா கத்துறேன் தானே?” என்று கத்தினாள்.
“திட்டிட்டா உன் மனசு ரிலாக்ஸ் ஆகிடும் கார்த்தி, இல்லைனா இரண்டு வார்த்தை வெளியே வரும், திட்டாத வார்த்தையெல்லாம் சேர்ந்து உன்னை இன்னும் டென்ஷன் செய்யும்டா” என்றவன் மீது தலையணையை விட்டு எறிந்தாள்.
“அப்போ உங்க மனசு என் திட்டை கண்டுக்கவே இல்லை” என்று சொல்லி வயிற்றைப் பிடித்துக்கொண்டு சுருண்டுவிட்டாள். ப்ரீயட்ஸ் சமயத்தில் அவளுக்கு வலி அதிகமிருக்கும். அம்மாவை தேடும் மனம். ரோஷக்காரி காட்டிகொள்ள மாட்டாள். அம்மா வீட்டோடு இருக்கும் ஒரே உறவு ராஜீவ் மட்டுமே.
அவளை மெல்ல அணைத்த காளிதாஸ்
“ரெஸ்ட் எடுடா, பாட்டு போடவா?” என்று கேட்க, முறைத்தபடி அவன் நெஞ்சில் ஒட்டிக்கொண்டாள்.
“அலெக்ஸா! ஸ்விட்ச் ஆன் டீவி” என்று சொல்லி அதில் பாட்டு சேனலில் வைக்க சொல்ல, கார்த்தியும் டீவியைப் பார்த்தாள்.
‘அழகாகச் சிரித்தது
அந்த நிலவு
அதுதான் இதுவோ
அனலாகக் கொதித்தது
இந்த மனது
இதுதான் வயதோ
மழைக்காலத்தில்
நிழல் மேகங்கள்
மலையோரத்தில்
சிறு தூறல்கள்’ என்று ஜெயச்சந்திரனின் கம்பீரக் குரலில் காதல் வழிந்தது.