“அடமா? என்ன கண்ணம்மா? அப்படி செய்யலாமா?” மகளிடம் மெல்ல கேட்க
“இந்த குரல் என்ன உங்க பொண்ணுக்கு ஸ்பெஷலா? மைக் வைச்சுக் கேட்டா கூட கேட்காது போல, அவ்வளவு கொழுப்பு இந்த நாலு வயசுல?” என்று கார்த்தியாயினி திட்டிக்கொண்டே இருந்தாள்.
“கண்ணம்மா என்ன பண்ணினா சொல்லிட்டா, நீ சொல்லு கண்ணா? உன் கதையும் கேட்கிறேன்” என்றான் மெத்தையில் நன்றாக உட்கார்ந்துகொண்டு.
“கடையில யானை சிலை இருக்கு, டூ தவுஸண்ட் அது. அதான் வேணும்னு அடம்பிடிக்கிறாங்க”
“இரண்டாயிரத்துக்குப் பொம்மையா?”
“ஆமாங்க, முடியாதுன்னு சொன்னா நீ போன வாரம் பிள்ளையார் பொம்மை வாங்கினியேம்மான்னு கேட்கிறா, பிள்ளையார் பொம்மையா இவளுக்கு. சாமி கும்பிடுறதும் இல்லை, உங்களை மாதிரி இப்பவே பேசுறா”
“ம்ம், கண்ணா வரும்மா சொல்றதும் சரிதானே. நீ அந்த பிள்ளையார் சிலை ஃபைவ் தவுஸண்ட்கு வாங்கினதானே?”
“சாமியும் பொம்மையும் ஒன்னா?”
“உனக்குதான் கண்ணா அது சாமி, எங்களுக்குப் பிள்ளையார் பொம்மை. அது மாதிரி வருவுக்கு யானை பொம்மை இல்லை, புரியுதா?” என்று காளிதாஸன் கேட்க கார்த்தியாயினி முறைத்தாள்.
“வரும்மா, நீங்க கீழ போய் பாட்டி கூட இருங்க. நான் நாளைக்கு யானை வாங்கித்தரேன்” என்றதும் குழந்தை ஓடிவிட,
“கார்த்தி! நம்ம நம்பிக்கையைக் குழந்தை மேல திணிக்கக் கூடாது” என்றான் கண்டிப்பாக.
“ஓஹ், அப்போ நீங்க கடவுள் இல்லைன்னு சொல்ற நம்பிக்கையை மட்டும் திணிக்கலாமா?”
“நான் எப்போ கடவுள் இல்லைன்னு சொல்லிக்கொடுத்தேன்? நம்ம பொண்ணு கடவுளைக் காட்டுனு கேட்கிறா, நீ காட்டினா அவ நம்பிடுவா” என்று காளிதாசன் பேச
“காத்து இருக்குனு காட்ட முடியுமா?” கார்த்தி கோபமாகக் கேட்டாள்.
“கண்ணா, ஏன் இவ்வளவு கோவம் உனக்கு? நம்ம குழந்தை சொல்றதை கேட்டு நடக்கிறதை விட கேட்டு ஆராய்ஞ்சு வளர்றதைதான் நான் விரும்புறேன். கடவுள், காத்து எல்லாமே ஒவ்வொரு வயசுல அவளே தெரிஞ்சிக்கட்டும். எப்பவும் பெத்தவங்க குழந்தை மேல அவங்க மதம், ஜாதின்னு எல்லாத்தையும் திணிச்சிட்டு குழந்தைகளை வளர்க்கிறாங்க. எது தேவைன்னு தேவையான வயசுல அவங்களே தேடிப்பாங்க. வர்த்தினி இஸ் ஒன் ஆஃப் தட் கைண்ட்! கண்டிப்பா நம்ம பொண்ணு நல்லா வளருவா” என்று மனைவியை அருகே இழுத்தான்.
“அச்சு அசலா உங்க மாதிரி இருக்கா அவ”
“ஏன் என்னைப் பிடிக்கலையா?” என்று காளிதாஸன் கிண்டலாகக் கேட்க
“இந்த கேள்விக்கே…” என்று பல்லைக் கடித்தவள்
“உங்களை மாதிரி சில விஷயம் செய்றப்ப ரசிக்கத்தான் தோணுது, ஆனா இப்போதான் எல்கேஜி படிக்கிறா? சாமி கும்பிடுன்னு சொன்னா, யார் சாமினு கேட்கிறா, அவர்தான் நம்மைப் படைச்சார், பார்த்துப்பார்னு சொன்னா? நீயும் அப்பாவும்தானேம்மா என்னைப் பார்த்துக்கிறாங்கறா” என்று மனைவி சொல்ல மகள் குறித்த பெருமிதம் முகத்தில் தெரிந்தது காளிதாஸனுக்கு.
“அப்படியே பெருமையைப் பாரு” என்று அவனின் மீசையை இழுத்தவள்
“இப்படி எல்லாத்துலயும் உங்களை மாதிரி இருந்தா அவளும் நாற்பது வயசுல கல்யாணம் செய்றனு சொல்லிடுவாளோன்னு இப்பவே பயமா இருக்கு எனக்கு” கார்த்தி உண்மையில் பயந்து சொல்ல
“அடிப்பாவி! நம்ம பொண்ணுக்கு நாலு வயசு கூட ஆகல, உன்னை! எப்பவும் பொண்ணை மேரேஜ் மெட்டீரியலா பார்க்கக் கூடாது கார்த்தி. நாற்பது வயசு வரைக்கும் வெயிட் பண்ணனாலதான் எனக்கு இந்த கார்த்தி பொண்ணு கிடைச்சாங்க” என்றான் கார்த்தியின் கன்னத்தைப் பிடித்து.
கார்த்தியின் முகத்தில் தெளிவில்லாமல் இருக்க,
“இப்பவே அதெல்லாம் யோசிக்கக் கூடாது கண்ணா! லைஃப் அது பாட்டுக்கு போகட்டும், நம்ம வர்த்தினி சந்தோஷமா இருப்பா, எல்லாரையும் சந்தோஷமா வைச்சுப்பா” காளிதாஸன் சொல்ல கார்த்தியும் ஆமோதித்தாள்.
அடுத்த நாள் காலை உணவின் போது,
“ப்பா, ஒரு டவுட்! என் ஹேர், அம்மா ஹேர் எல்லாம் ப்ளாக்கா இருக்கு, பாட்டி ஹேர் வைட், உங்களோடது மட்டும் வைட் அண்ட் ப்ளாக்?” மகள் கேட்டுவிட கார்த்திக்குக் கோபம் வந்தது.
“பேசாம இரு வரு” மகளை அதட்டினாள். காளிதாஸனோ
“என் கண்ணம்மாவுக்கு அதெல்லாம் தெரியுதா? அப்பா சின்ன வயசுல ஒழுங்கா சாப்பிடல, அதனால இப்படி பாதி ப்ளாக் அண்ட் வைட் ஆகிடுச்சு. நீ அம்மா கொடுக்கிறதை ஒழுங்கா சாப்பிடலன்னா இப்படி ஆகிடும் வரும்மா” என்று பொறுமையாகச் சொன்னான்.
“அப்போ பாட்டி கொஞ்சம் கூட அவங்க அம்மா கொடுத்தது சாப்பிடலையா? ஆனா நிறைய தாத்தா பாட்டிக்கு அப்படி இருக்கே?” மகள் யோசிக்க கார்த்தி எப்படி சமாளிப்பாய் என்பது போல கணவனைப் பார்த்தாள்.
“அது பாட்டிக்கு வயசாகிடுச்சு, அதான் வைட் ஹேர். அப்பா ஒழுங்கா சாப்பிடல அதான் பாதி வைட் அண்ட் ப்ளாக் கண்ணம்மா”
“ஓஹ், ஓகேப்பா. நான் அம்மா கொடுக்கிறது எல்லாம் சாப்பிடுவேன்” என்றாள் வர்த்தினி சமத்தாக. காளிதாஸன் மனைவியிடம் சிரிப்புடன் கண்ணசைக்க, கார்த்தி மகள் சென்றதும்
“டை அடிச்சிட்டா இந்த கேள்வியே கிடையாது, இன்னும் அஞ்சு வருஷத்துல அவளுக்கே தெரிஞ்சிடும்” என்றாள்.
“ஹே கண்ணா! இதிலென்ன இருக்கு, ஐ அம் ஃபார்ட்டி ஃபைவ். வயசாகுறதை எஞ்சாய் செய்யனும், எல்லாமே லைஃப்ல நடக்கிறதுதானேடா? ஏன் எனக்கு நரைச்சதுல உனக்கு கவலையா?”
“என்னைப் பார்த்து இப்படி தெரியுது? இந்த கவலையெல்லாம் உங்களுக்குத்தான் அஞ்சு வருஷம் முன்னாடியே இருந்தது, எனக்கு நரைச்சாலும் பிரச்சனையில்லனு அப்பவே சொன்னேன்” என்றவள் ஸ்லைடிங் டோர் சாற்றியிருக்கிறதா என்று பார்த்துவிட்டு
“என்னமோ நீங்க என் பின்னாடி சுத்தி காதல் சொன்னவர் மாதிரி சீன் போடுறீங்க? எனக்குக் காளிதாஸ் எப்படி இருந்தாலும் பிடிக்கும்னு உங்களுக்குத் தெரியும்” என்றாள் முறைப்பாக.
“சும்மா விளையாடினேன் கண்ணா! நீ காதல் சொன்னா என்ன? என்னோட காதல் உனக்குத் தெரியாதா?” என்று கேட்க காளிதாஸனின் காதலைத்தானே இத்தனை வருடமாய் அனுபவிக்கிறாள்.
எத்தனைக் கண்டாலும் அந்த காதலில் இன்னும் குறையவுமில்லை, அதில் குறையும் கண்டதில்லை கார்த்தி.
“கண்ணா!” என்ற குரலில் கார்த்தியும் காளிதாஸனும் திரும்பினர்.
“வாங்கம்மா” கார்த்தி சொல்ல சிவகாமி கதவைத் தள்ளியவர்
“கார்த்தி, நான் உதயா ட்ரஸ்ட் வரைக்கும் போயிட்டு வரேன். இன்னிக்கு ஸ்பீச் கொடுக்கனும்” என்றார் மருமகளிடம். இந்த வயதிலும் அவரின் சமூக பணி குறையவில்லை.
“சிவகாமி அழகிரி அவர்களே! உங்க செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகமாகுதே, அப்படியே எங்க கட்சியில உறுப்பினராகிட்டா கட்சி செல்வாக்கு ஜாஸ்தியாகும். வரீங்களா?” என்று அம்மாவை வம்பிழுத்தான் காளிதாஸ்.
“போடா! நீயும் உன் கட்சியும். சிவகாமிக்கு சேவை செய்ய கட்சி ஆட்சி ஒன்னும் தேவையில்லை. வேணும்னா உன் பொண்டாட்டியை சேர்த்துக்க” என்று சிரித்த சிவகாமி
“போய்ட்டு வரேன் கண்ணா” என்றார்.
“முத்துண்ணா கூடத்தானேம்மா?” என்று கேட்டு அம்மாவை வழியனுப்பி வைக்க
“எதுக்கு அங்க வந்து சைட் அடிக்கவா? கட்சிப் பணி வெளியே, காதல் பணி வீட்ல. என்னைத் தவிர அந்த கட்சியில என்ன இருக்கு உனக்குப் பிடிக்க?” காளிதாஸன் சரியாகக் கேட்டான்.
“உங்களைத் தவிர வேறொன்னும் எனக்குப் பிடிக்காது காளிதாசன்” என்று காதில் காதல் சொல்ல சக்ரவர்த்தினியின் சத்தம் கேட்டது.
“உங்க கண்ணம்மா வந்தாச்சு”
சக்ரவர்த்தினியின் பின் ராஜீவ் வந்தான். செல்வரத்னம் இப்போது சிறையில், கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கும் மேலான சிறைவாசம். அது போலான குற்றங்கள், சிவில் கிரிமினல் என்று எல்லா பிரிவிலும். ராஜீவ் தனியாக இருக்கிறான். அக்கா குடும்பம் மட்டுமே அவன் உறவு.
“மாமா, நிஜமா யானை வாங்கப் போறீங்களா?” ராஜீவ் அதிர்ச்சியுடன் கேட்க, காளிதாஸன் மகளின் பேச்சில் வாய்விட்டு சிரித்தான்.
“சும்மா இருங்க, டேய் இவர் குட்டி யானை பொம்மை வாங்கித் தரேன் சொன்னார்டா. அதை சொல்றா”
“ஆமா ராஜிவ், போன வாரம் உங்க அக்காவுக்குப் பிள்ளையார் பொம்மை வாங்கிக்கொடுத்தேனே அப்படி” என்று கண்ணடித்தான்.
“ஹாஹா” என்று ராஜீவ் சிரிக்க
“தாஸ்! இவனுக்கு எந்த பொண்ணு காட்டினாலும் பிடிக்கல சொல்றான். ஒழுங்கா என் பேச்சைக் கேட்க சொல்லுங்க” அக்காவாக தம்பியின் வாழ்க்கையில் அக்கறைக் கொண்டு கார்த்தி பேச
“இந்த விஷயத்துல என்னால எப்படி அட்வைஸ் பண்ண முடியும்? அண்ட் ஹி இஸ் ஜஸ்ட் தர்ட்டி கண்ணா” என்றான் காளிதாஸன்.
“உங்களைப் பேச சொன்னேன்ல, என்னை சொல்லணும்” என்ற கார்த்தியிடம்
“இட் depends! எனக்குக் கார்த்தி மாதிரி வைஃப் கிடைச்சதால ஐ அம் ஹாப்பி, அது மாதிரி இவனும் இருக்கணும்தானே?” என்று கணவன் கேட்க கார்த்தியால் பதில் சொல்லமுடியவில்லை.
“டல்லாகதாக்கா, கொஞ்சம் டைம் கொடு” என்று தம்பியாய் ராஜீவ் பேச
“உனக்காகப் பேசினேன் பாரு, போடா” என்றான் காளிதாஸ்.
“ப்பா, யானைப்பா” மகள் அறைக்குள் நுழைந்து மீண்டும் கேட்க
“ராஜீவ்! ஃபீரின்னா அழைச்சிட்டுப் போறியா?” என்று கேட்க மாமனுடன் கிளம்பி போனாள் சக்ரவர்த்தினி.
கணவன் மனைவி இருவரும் மகளை ராஜீவுடன் அனுப்பிவிட்டு ஹாலுக்கு வர, அலெக்ஸாவில் பாடல் ஓட மேஜை மேல் புத்தகம் அப்படி இருக்க, பென்சில் எல்லாம் கீழே கிடந்தது. அப்பாவின் ப்ளேலிஸ்ட்தான் எப்போதும் அவன் கண்ணம்மா கேட்பது.
‘இளமையின் நினைவுகள் ஆயிரம்
மனதினில் எழுதிய ஓவியம்
இரவே நிலவே எந்தன் ஆலயம்
தலைவன் வருவான் நெஞ்சில் ஊர்வலம்’
“நீங்க பாட்டு கேட்டுட்டே ஃபைல் பார்க்கிற மாதிரி உங்க பொண்ணும் பாருங்க ஹோம் வொர்க் பண்ணீட்டே பாட்டு கேட்கிறத, இதுல அப்படியே எல்லாத்தையும் கலைச்சுப் போடுறது” திட்டிக்கொண்டே பென்சில், புத்தகம் எல்லாம் கார்த்தி எடுத்து வைத்தாள்.
“உன் கூட உட்கார்ந்து பாட்டு கேட்டு வயித்துலயே நம்ம கண்ணம்மா எல்லாத்துக்கும் பழகிட்டா கண்ணா” என்றவன் குழந்தையின் நோட்டை திறந்து
“ஏது? இந்த கோடா அழகா இருக்கு? standing line, sleeping line கு இதெல்லாம் ஓவருங்க”
“ப்ச், குழந்தை செய்றது ரசிக்கனும் கண்ணா” என்றவன் கவனம் அப்போதுதான் பாடலில் நிலைத்தது.
“பாட்டு செமையா இருக்குல கண்ணா” என்று மனைவியை அருகே இழுத்தவன்
“எவ்வளவு வயசானாலும் உன் கூட இருக்கப்ப I feel young கண்ணா” என்றான்.
“அஃப்கோர்ஸ், யூ ஆர்” காதலாக கார்த்தி கணவனை ரசித்து பதில் சொல்ல
“கிரேஸீ” என்றான்.
“ஆல்வேய்ஸ் கிரேஸீ ஆன் யூ” என்று கார்த்தி மீண்டும் சொல்ல காளிதாசனிடம் விரிந்த புன்னகை.
“என் கவிதைடா கண்ணா நீ!” என்று கொஞ்சினான் காளிதாஸன்.
“கார்த்தி எப்பவும் காளிதாஸோட கவிதைதான்!” சொன்னவன் கணவன் நெஞ்சில் சாய்ந்துகொண்டாள்.
இளமையின் நினைவுகள் ஆயிரம்
மனதினில் எழுதிய ஓவியம்!
அலெக்ஸாவில் பாடல் ஒலித்துக்கொண்டே இருந்தது. இன்னும் இன்னும் நிறைய நினைவுகளை ஓவியங்களாய் காளிதாஸன் தீட்டிக்கொண்டே இருப்பான், கார்த்தி ரசித்து இருப்பாள்.