பிள்ளைகளின் பள்ளியில் ஆண்டு விழா, அதுவும் இறை வணக்க பாடல் பாட இருவரையும் தான் தேர்வு செய்திருந்தார்கள். மழலை மொழி இனிமையாக இருக்கும் என்பதால், கலாச்சார உடையே தேர்வு செய்ய பட்டு இருக்க… பிள்ளைகளுக்கு பட்டு ஆடைகள் என்று எதுவுமில்லை. இதுவரை விலை உயர்ந்த ஆடைகளை வாங்கியதும் இல்லை. தற்போது வாங்கும் அளவுக்கு பொருளாதார நிலை உயரவும் இல்லை. என்ன செய்யலாம் என்று யோசனை செய்தவள், தன் பெட்டியை திறந்து பார்க்க, அவளின் பரிச சேலை கண்ணில் பட்டது.
மாம்பழ வண்ண மஞ்சளில் தாமரை வண்ண பார்டர் வைத்தது… அன்று அணியும் போது பிளவுஸ் கொஞ்சம் லூசாக இருக்க, பயங்கர கோபம், வருத்தம் சரண்யாக்கு. “நலங்கு வைத்து, போட்டோ எடுக்க வேண்டும். இப்படி லூசாக தைத்து வந்து விட்டார்களே… ரொம்ப பிடித்த கலர், கை தூக்கி அசிங்கமாக தெரியுமா…” என்று முனங்கி கொண்டே சேலை அணிந்து கொண்டாள். கணவன் வீட்டில் இருந்து வரும் முதல் சீர், காலத்துக்கும் நினைக்கும் படி இருக்க வேண்டாமா… தலை நிறைய மல்லிகை பூ வைத்து, கன்னத்தில் மஞ்சளும், நெறியில் குங்குமம் நிறைந்து முகம் பூரிக்க வெற்றியின் அருகில் நின்று போட்டோ எடுத்தது நினைவு வந்தது.
புருசனை தொலைத்து விட்டு சேலையை பத்திர படுத்தி என்ன செய்ய… இனி இதை அணியவும் முடியாது. புருசன் கூட வாழல, பட்டு சேலையை கட்டி மினுக்குறா… இப்படி தான் பேச்சு வரும். சும்மா பெட்டியில் உறங்குவதை உபயோக படுத்தலாம் என்று தோன்ற, அந்த சேலையையே பிள்ளைகளுக்கு ஆண்டு விழா உடையாக தேர்வு செய்து கொண்டாள். பார்க்கவும் நேர்த்தியாக, உயர்ந்த ஆடையாக தெரியும். மஞ்சளில் பாவாடையும், தாமரை வண்ணத்தில் சட்டையும் எடுப்பாக இருந்தது.
சரண்யா தன் பிள்ளைகளையே ஆசையாக பார்த்து இருந்தாள். பிள்ளைகள் பாடி முடித்ததும் மற்றவர்கள் கை தட்ட, தாய்க்கு ஏக பெருமை. சரண்யா பள்ளியில் படிக்கும் போது எதிலும் கலந்து கொள்ள மாட்டாள். அவ்வளவு பயமும், தயக்கமும் நிறைந்தவள். ஆனால், தன் பிள்ளைகள் அவ்வாறு இல்லாமல் தைரியமாக மேடை ஏறி நிற்பதை காண்கையில், அவ்வளவு பெருமை.
“அடியே அகி! இதுக ரெண்டும் என்னை மாதிரி மக்கு இல்லை. பெத்தவ மாதிரி இல்லாம புத்தியோட பிழைக்கட்டும்…”
“அதெல்லாம் நல்லா வருவாங்க… இந்த வயசிலேயே நல்ல விவரம் ரெண்டும்…” என்று அகிலா சொல்ல.
“ம்ச்… அகி, கண்ணு போடாத…”
தன் பின்னே உறைந்து நிற்கும் ஒருவனை பார்க்காமல், அவர்களுக்குள் பேசி கொண்டார்கள். அவனும் அவர்களை கண்டு கொள்ள வில்லை. அவன் கண் எல்லாம் தன் கிளிகளை மட்டும் தான் பார்த்து நின்றது.
தன் கண் பார்ப்பதை நம்ப முடியாமல், நெஞ்சில் கை வைத்து அழுத்தி நின்று பார்த்தான். நிஜத்தை உணரவே முடியவில்லை. இமை கூட சிமிட்டாமல் தன் பிள்ளைகளையே பார்த்து நின்றான். இரட்டை பிள்ளை, அவன் யோசித்தது கூட இல்லை. சற்று முன்பு கூட ஆணா, பெண்ணா என்று தான் நினைத்தான் தவிர, இரு பிள்ளை என்று யோசிக்க கூட இல்லை. தன்னை எப்படி வெளிப்படுத்த என்றே தெரியவில்லை. சிரிக்கவும் முடியவில்லை, அழுகவும் முடியவில்லை. ஒரு மாதிரி சித்த பிரமை பிடித்த நிலை தான். அடுத்தடுத்து அங்கு நடந்த எதுவும் அவன் கவனத்தில் இல்லை. பிள்ளைகள் முகம் மட்டுமே கண்ணுக்குள் நின்றது.
பிள்ளைகள் அருகில் செல்ல வேண்டும், தொட்டு தூக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இல்லை. தொட்டால் ஒட்டி கொள்ளும் நோய் தன்னிடம் இருப்பதாக ஒரு எண்ணம். அருகில் செல்ல கூட பயம். வெற்றி வேல் என்றால் யார் என்பது நிச்சயம் அவர்களுக்கு தெரியும் தான்… தன் பெயரை சொல்லி பழகும் போதே, தந்தையின் பெயரையும் சேர்த்து தான் சொல்லி பழகி இருக்கிறார்கள். வயிற்றில் ஏந்தி, உயிர் வலி தாங்கி பெற்றவள் அருகில் இருக்க, அவளை விடுத்து தன் பெயரை அல்லவா உடன் சேர்த்து கொண்டிருக்கிறார்கள். எத்தனை பெரிய பாக்கியத்தை எனக்கு தந்து இருக்கிறார்கள். அதுவும், அந்த பிள்ளைகள் கருவில் அழிவதை கை கட்டி வேடிக்கை பார்த்த தந்தைக்கு, கௌரவத்தை அல்லவா அள்ளி கொடுத்து இருக்கிறார்கள். உயிராக, உருவமாக அல்லாமல் தந்தை என்ற உணர்வாக மட்டும் தான் கலந்து கொண்டேன். என் நிழல் கூட அவர்களை தொட்டது இல்லையே… பெற்றவர்களுக்காக, உடன் பிறந்தவர்களுக்காக கடல் கடந்து, நல்ல உறக்கம், உணவு இல்லாமல் பாடு பாட்டேனே… நான் பெற்ற பிள்ளைகளுக்கு என் ஒரு துளி வேர்வை கூட பயன் இல்லை. இனி நான் என் வாழ்வில் எத்தனை முன்னேறியும், ஒன்றும் இல்லாதவன் தான்…
என்னை தந்தையாக்கி கௌரவ படுத்திய பிள்ளைகளுக்கு, அவர்கள் தகப்பன் சிறு துரும்பை கூட அசைத்ததில்லையே… அடுத்து நான் என்ன செய்ய வேண்டும்… இதை செய் என்று மனம் உந்தவே இல்லை. எல்லாம் வெறுமையாக இருந்தது. சரண்யா பிள்ளைகளை தூக்கி முத்தம் கொடுத்தாள். வெறுமையாக பார்த்து நின்றான் வெற்றி. மனைவியை போல் மனதில் எந்த விகல்பமும் இல்லாமல் தன் பிள்ளைகளை ஆசையாக தூக்கி கொள்ள முடியுமா!… மரணம் தொட்டால் கூட பரவாயில்லை. நிகழ்கால வலி நெஞ்சை குத்தியது. சரண்யாக்கு செய்தது விட பெற்ற பிள்ளைகளுக்கு துரோகியாக போனேனே…
நொடி நிற்க வில்லை பேய் துரத்துவது போல் ஓடி வந்து விட்டான். முகம் செத்து வீட்டிற்க்கு வந்தவனையே எல்லோரும் பார்த்து நிக்க, யாரையும் பார்க்காமல் உள்ளே சென்று காதவடைத்து கொண்டான். தன் வீட்டு ஆட்களோ, அபி, சரண்யா என்று யாருமே நெஞ்சில் இல்லை. அவன் பிள்ளைகள் முகம் மட்டுமே நிறைந்து நின்றது. அழுக கூடாது என்று நினைவு வந்த போதும் கண்கள் நீரை பொழிந்தது. வேண்டாம் அழுதால் வலி குறையும் இந்த வலி அவன் காலத்துக்கும் வேண்டும்.
நாளை வார விடுமுறை சரண்யாக்கு. இன்று இரவு முதலே உற்சாகம் தான். அரக்கபரக்க எழுந்து அடித்து பிடித்து ஓடும் நிலை வேண்டாம்… நாளை அசைவம் எடுக்க வேண்டும், பிள்ளைகள் விருப்பம் தான். அவளால் எளிதாக முடிந்த ஒன்று, பிள்ளைகள் மீன், கோழி என்று எது கேட்டாலும் எடுத்து கொடுக்க முடியும். எல்லா நாளும் முடியாது, ஏதாவது ஒரு நாள்… பிள்ளைகள் இருவரும் பெரிய மனிதர்கள் தோரணையில் தாய் தங்களிடம் கேட்ட விசயத்திற்கு குட்டி விவாதம் பண்ணி முடிவு சொல்வார்கள். சரண்யா மடியில் அஜியும், கழுத்தை கட்டி கொண்டு விஜியும் சில கட்ட பேச்சு வார்த்தைக்கு பின் இறால் தேர்வு செய்தார்கள். அது ஒரு வகை மீன் உணவு என்று நேற்று தான் பாட புத்தகத்தில் படித்தார்களாம். அதன் சுவை நன்றாக இருக்கும் என்று வகுப்பாசிரியர் சொல்ல, அதையே உண்ண ஆசை வந்தது.
மறுநாள் இறால் உடன் மீன் வாங்கி வந்தவளை பார்த்த அமுதா,
“சரண்யா… நாளைக்கு நான் அம்மா வீட்டுக்கு போறேன். பிள்ளைகளை நீ தான் பார்த்துக்கணும். ஒரு நாள் தான் வந்துடுவேன். ஏதாவது அவசரம்ன்ன என் வீட்டுகாரர் வீட்டுல தான் இருப்பாங்க… நாளைக்கு வண்டி தண்ணி வரும் ரெண்டு குடம் மட்டும் பிடிச்சு வச்சுடு சரண்யா… இவங்க வந்து தூக்கி வைப்பாங்க…” என்று அமுதா சொல்ல, சரி என்று சொல்லி சென்றாள் சரண்யா. அவள் வர கொஞ்சம் தாமதம் ஆனாலும் பார்த்து கவனித்து கொள்வார். மாலை ஐந்து மணி முதல் இரவு ஒன்பது மணி வரை யார் பார்த்து கொள்வார்கள். இவ்வளவு எல்லாம் யாரும் செய்ய மாட்டார்கள். அவள் கணவன் மட்டும் தான் முரண்…
இரண்டு குடம் தண்ணி முப்பது ரூபாய், குழாய் தண்ணி குடிக்கும் அளவுக்கு சுத்தமில்லை. தன்னோடு, அமுதா அக்காக்கும் சேர்த்து பிடித்து வைத்தவள். கீழ இருந்தே சத்தம் கொடுத்தாள். மேலே இருந்து ஒரு சத்தமும் வராமல் போக, யாரும் இல்லை என்ற எண்ணத்தில் குடத்தை தூக்கி கொண்டு மாடி ஏறினாள். கதவை தள்ள, திறந்து கொண்டது. மெதுவாக உள்ளே சென்று குடத்தை இறக்கி வைத்து நிமிர, பின்னிருந்து அனைத்து கொண்டான் சுகுமார். ஒரு மாதிரி முரட்டு பிடி, பதறி போய் அவனை தள்ள முயல… ம்கூம், ஒரு இஞ்ச் நகர்த்த முடியவில்லை. மனதில் பயமும், அதிகரிக்க தன் பலம் முழுதையும் உபயோகித்து ஒன்றும் நடக்க வில்லை. அவன் பிடி இரும்பு பிடியாக இருந்தது. கண்ணில் நீர் அருவியாய் கொட்ட, மயக்கம் வரும் போல் தோன்றியது. தன்னை அழுத்தி பிடித்தவனின் கை அங்கம் தொட வரும் போதே, தலையை திருப்பி அவன் தோலை வெறி வந்த மாதிரி கடித்து வைத்தாள். வலியில் கையை சுருக்கியவனை, நொடியில் தள்ளி விட்டு வெளியே ஓடி வந்து விட்டாள். தன் வீடு வந்தும் நெஞ்சில் படபடப்பு, பயம் குறைய வில்லை. என்ன தைரியம்… பட்ட பகலில் வேற ஒரு பெண்ணை கட்டி பிடிக்கும் அளவுக்கு, யார் கொடுத்த இடம். சிரித்து கூட பேச மாட்டேனே… அண்ணா என்ற வார்த்தை தாண்டி வேற ஒரு சொல் வராது. எவ்வளவு மதிப்பும், மரியாதையும் வைத்து இருந்தேன். அண்ணன் என்று பேசிய தன்னை போய் எப்படி மனம் வந்தது அவனுக்கு… இள வயது, புருசன் உடன் இல்லை, சொந்தமும் ஆதரவு தரவில்லை, தாம்பத்திய ருசி அறிந்தவள் எளிதாக மடங்கி விடுவாள் என்று நினைத்து தான் எல்லாத்தையும் நடத்தினான்.
ஆனால், பெண்களுக்கே உரிய சுயகட்டுப்பாடு, ஒழுக்கம், வளர்ப்பு முறை, வாழும் முறை என்று அவளின் கோட்பாடு அவனிடம் அடங்கி போக மறுத்தது. இத்தனை வருட தனிமையும், தவிப்பும் கூட ஒரு நொடி அவளை இளக விடவில்லை. மாறாக, அசிங்கத்தை தொட்ட உணர்வும், அருவருப்பும் தான் தோன்றியது. துணை இழந்து தனியாக இருக்கும் பெண்கள் மடங்கி விடுவார்கள் என்ற சுகுமார் கணிப்பு பொய்யாய் போனது. ஒரு ஆண் மகனின் அணைப்பு, அவளுக்கு எந்த கிளர்ச்சியும் உண்டு பண்ண வில்லை. குமட்டி கொண்டு வாந்தி தான் வந்தது. கணவன் என்று வெற்றியின் வாசத்தை, அவன் அருகாமையை மனமார ஏற்று கொண்டவள், எவனோ ஒருவனின் வாசம் குடலை பிரட்டி கொண்டு வந்தது.
இத்தோடு ஐந்து முறை குளித்தும் உடலில் ஏதோ ஒரு அருவருப்பு இருந்து கொண்டே இருந்தது. காலையில் போட்ட நைட்டியை தூக்கி எறிந்து விட்டாள். எப்போது அவன் பலவந்த படுத்த நினைத்தானோ, அப்பவே அவன் துணிந்து விட்டான். இனி ஒதுங்கி செல்வது சரியாகுமா… புரிந்து கொள்ள மாட்டான். முதலில் தன்னை தற்காத்து கொள்ள வேண்டும்.
சுகுமார் வேலைக்கு சென்று விட்டான், இனி இரவு ஒன்பது மணிக்கு தான் வருவான். இன்று இரவு தன்னை பாதுகாத்து கொண்டால் போதும், நாளை அமுதா வந்து விடுவார். இதை வெளியில் சொல்லி தன்னையும் தவறாக நினைத்து வீட்டை காலி செய்ய சொன்னால் எங்கு செல்வது… சேலை முள்ளில் பட்டாலும், முள்ளு சேலையில் பட்டாலும் கிழிவது சேலை தான். பலருக்கு தன் குணம் தெரியும் என்றாலும் சிலர் எப்படியும் தன்னை தப்பாக தான் நினைப்பார்கள். புருசன் இல்லாதவ, மயக்கி இருப்பாள் என்று தான் ஒரு சொல் வரும், இல்லாவிட்டால்… தான் வைத்திருப்பது இரண்டும் பெண் பிள்ளைகள், இத்தொடு விசயம் முடியாதே… மனசு பலதையும் எண்ணி கலங்கியது.
“கடவுளே என்னை ஏன் சுத்தி விட்டு அடிக்கிராய். இந்த அளவு போதும் என்று பாவம் பார்த்தாவது விட்டு விட்டேன். வறுமையில் கூட என் பிள்ளைகளை வைத்து வாழ்ந்து கொள்கிறேன், மானத்தை இழந்து வாழும் நிலைக்கு விட்டு விடாதே…” என்று கண்ணீர் மல்க வேண்டியவள், விரைவில் பிள்ளைகளுக்கு உணவை கொடுத்து உறங்க வைத்தாள். முன் பக்க கதவை பூட்டு வெளியே தெரியும் படி பூட்டி கொண்டு,ஓனர் வீட்டிற்குள் சென்று, பின் கட்டில் ஏதோ வேலை என்று சொல்லி கொண்டவள். பின் பக்க படி வழியாக மேலே வந்து வீட்டிற்குள் அடைந்து கொண்டாள். விளக்கு எல்லாவற்றையும் அனைத்து இருளாக்கி கொண்டு துளி சத்தமில்லாமல் படுத்து கொண்டாள். நேரம் ஒன்பதை நெருங்க, நெருங்க அடி வயிறு கலங்கியது. அனைத்து கடவுளையும் வேண்டிய படி சுவற்றை ஒண்டி கிடந்தாள்.
ஒன்பது மணிக்கு மேல் வீடு வந்த சுகுமாருக்கு கோபம் நெஞ்சை புடைத்தது. தோல்பட்டையில் நல்ல காயம். மிருகம் மாதிரி கடித்து வைத்திருந்தாள். அவளை ஒரு வழி செய்யும் எண்ணத்தில் தான் வீடு வந்தான். சரண்யா வீட்டில் வெளி லைட் கூட எறியாமல் இருக்கவும் யோசனை தான், மெல்ல எட்டி பார்க்க, பூட்டு தொங்கி கொண்டு இருந்தது.
சுவற்றில் ஓங்கி அடித்தான். “சே… தப்பித்து விட்டாள். ஒரு நாள் உனக்கு இருக்கு பூஜை…” என்று முணங்கியவன் உள்ளே சென்று விட்டான்.
அவன் வந்து பார்த்ததை அறியாத சரண்யா, இரவு முழுக்க பொட்டு தூக்கம் இல்லாமல் படுத்து கிடந்தாள். காற்றில் கதவு அசைந்தாலும் உயிர் போனது. இரவு பன்னிரெண்டு மணிக்கு மேல் சுகுமார் போன் பேசும் சத்தம் கேட்டது. மூச்சு கூட சத்தமாக விடவில்லை சரண்யா.
இவள் நேரம் என்று அஜி சிணுங்க, எட்டி போய் வாயை பொத்தினாள். அதில் பிள்ளை அரண்டு போய் விழித்து பார்த்தது. விஜி பாத்ரூம் போக எழுந்து விட்டாள். பள்ளி செல்ல ஆரம்பித்த பின் படுக்கை நனைப்பதை தவிர்க்க பாதி ராத்திரில் பாத்ரூம் கூட்டி சென்று பழக்க படுத்தினாள். விஜி அழுகைக்கு மாற தொடங்க, அவள் வாயையும் பொத்தி அடக்கியவள். சுற்றும், முற்றும் பார்த்தாள். பாத்திரம் கழுவும் இடம் இருந்தது. அதையே பிள்ளைகளை பயன்படுத்த விட்டாள். காலை மூன்று மணி வரை தூக்கம் என்பதே இல்லை. பின்பக்கம் மாடு வளர்க்கிறார்கள், பால் கறக்க மூன்று மணிக்கே ஆள் வந்து விடுவார்கள், ஆள் நடமாட்டம் அறிந்த பின் தான் தூக்கமே வந்தது. ஏதோ ஒரு ஆறுதல் வர, மெல்ல உறங்க ஆரம்பித்தாள்.
சரண்யா எழும் போது மணி ஏழு. அடித்து பிடித்து எழுந்தவள், வேகமாக கீழே ஓடினாள். ஐந்து மணிக்கே வாசல் தெளித்து கோலம் போட வேண்டும். அசதி, உடல் முடியாமல் என்று ஒரு நாள் விட்டாலும், அவ்வளவு பேச்சு பேசுவார் ஓனர் பாட்டி. வேகமாக தண்ணி வாளியோடு வந்து பார்க்க, அங்கே முன்னமே வாசல் தெளித்து கோலம் போட பட்டிருந்தது. அடுத்த ஒரு கவலை, என்ன பேச்சு கேட்க வேண்டி வருமோ…
மாடி ஏறாமல் ஓனர் வீடு நோக்கி சென்றாள். கூடத்தில் தான் அந்த பாட்டி அமர்ந்து இருந்தார்.
“பொம்பளை வெள்ளன எழுந்து வாச தெளிக்க வேணாம். ஆம்பிள்ளை மாதிரி ஏழு மணி வரை தூங்குற… அங்கேயும் போய் இப்படி தான் இருந்தையா… ரெண்டு பொட்டை பிள்ளை பெத்து வச்சு இருக்க, பார்த்து நடந்துக்க. என்னத்த நல்லது சொல்லி தர போற… பொட்டை கோழி கூவி பொழுது விடியாது, நீ தான் ஆடி திரியிற…” என்று பலவாறு அவளை விளாசிய பின் தான் விட்டார்.
கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் மெளனமாக கேட்டு நின்றாள். வேற வழி இல்லை. இந்த மாதிரி பலதும் பார்த்தால் மட்டுமே, தனியாக இந்த சமூகத்தில் வாழ முடியும். பட்டென்று ரோசபடுவதும், விருட்டென்று கோபப் படுவதும் வேலைக்கு ஆகாது. ஒரு பெருமூச்சோடு தன் வீட்டிற்க்கு திரும்ப, உள்ளே நின்று இருந்தான் சுகுமார். வயரிங் வேலை பார்ப்பவன். இவர்கள் வீட்டில் வேலைக்கு என்று வர, எல்லாவற்றையும் கேட்டு விட்டான்.
கீழ குனிந்தது போல நடக்க தொடங்க, “இன்னைக்கு ராத்திரி நீ தப்பிக்க முடியாது…” வேகமாக சொல்லி உள்ளே சென்று விட்டான்.
இன்று திருச்சியில் ஒரு முக்கிய வேலை இருக்க, கிளம்பி கொண்டிருந்தான் வெற்றி. தன் அறை விட்டு வெளி வந்தவன் கண்டது, அவன் அறையோடு ஒட்டிய அறையில் சிலர் நிப்பதை தான். என்னவென்று கேட்க, பெயிண்ட், வேற ஆடம்பரம் கொண்டு அலங்கரிக்க வந்து இருந்தார்கள். வெற்றி உள்ளே சென்று பார்க்க, சக்தி நின்று இருந்தான். அவன் கையில் அவன் மகன் இருந்தான். ஏனோ தூக்க தோன்ற வில்லை. தன் பிள்ளையை தொட்டு உணராத வலி தெரிந்தது. தம்பி, தங்கை பிள்ளைகளை தூக்க ஏதோ ஒரு நெருடல், அமைதியாகி கொண்டான்.
சக்தி தன்.விருப்பத்தை சொல்ல வர, வெற்றி முந்தி கொண்டான். இதுவரை யோசனை இல்லை, அவர் வைத்திருக்கும் புக்கை பார்த்ததும் ஒரு ஆசை வந்தது. மனதின் தன் பிள்ளைகளின் முகம் நிக்க,
இந்த ரூம் முழுக்க பிங்க் பெயிண்ட் அடிங்க… குட்டி மரம், பறவை, டோரா படம் அப்புறம் குட்டி குட்டி அனிமல் போட்டோ எல்லாம் வைங்க. கலர் கலர் லைட் போடுங்க, ரெண்டு காட் கொண்டு வந்து போடுங்க. இலவம் பஞ்சு பெத்தை குட்டியாக இருக்கணும்… பொம்மை வைக்க தனி கப்போர்ட் வைங்க…” என்று அடுக்கி கொண்டே போனான்.
தன் அண்ணனையே ஆச்சர்யமாக பார்த்தான் சக்தி. எதுக்கு இந்த வேலை?… யாருக்கு?… ஒன்றும் புரியாமல் நின்றவன். தன் தாயிடம் சொல்ல மறக்க வில்லை.
இன்று அமுதா ஊர் வர வில்லை. மனதில் பயம் தான், மாலை மங்க தொடங்கியது. கொஞ்சம் திடமாக, தைரியமாக நின்றாள் சரண்யா. உனக்காக… நீ போராடவில்லையேன்றால் உன் பிள்ளைகளுக்கு எவ்வாறு பாதுகாப்பு கொடுப்பாய்… உன் பிள்ளைகள் வளர்ந்தால் இது மாதிரி பலதும் இருக்கு… பலவாறு யோசித்து தன்னை திடப்படுத்தி கொண்டாள்.
எப்பவும் போல பிள்ளைகளை உறங்க வைத்த பின் சிறு மெழுகு வர்த்தி மட்டும் வைத்து கொண்டு உறங்கும் பிள்ளைகள் அருகில் உறங்ககாமல் அமர்ந்திருந்தாள். பத்து மணிக்கு மேல் மழை பிடித்து கொண்டது. நல்ல மழை… இடியும், மின்னலும் படு பயங்கரமாக இருந்தது. மணி பன்னிரண்டு நெருங்க, கரண்ட் போனது.
சரண்யாக்கு இதுவரை இருந்த தைரியம் ஓடி போனது. வெளியே மழை வெளுக்க, காத்தாடி இல்லாமல் பிள்ளைகள் சிணுங்க தொடங்கியது. அவர்களை தட்டி கொடுத்து உறங்க வைக்க முயல, கதவு தட்டும் ஓசை.
அரண்டு போனாள் சரண்யா. மீண்டும் கூர்ந்து கவனிக்க, இந்த முறை பலமாக கதவு தட்ட பட்டது. அரண்டு போய் பிள்ளைகள் உடன் ஒன்றினாள் சரண்யா. கதவை பிடித்து பலமாக ஆட்டியது அப்பட்டமாக தெரிந்தது. மேல் தாழ்ப்பாள் விலக, கையில் அரிவாள் மனையை பிடித்து கொண்டாள் சரண்யா. அவளுக்கு தெரியும் வந்தது சுகுமார் தான்.
“கடவுளை வேண்டி கொண்டாள் என் பிள்ளைகளுக்கு நான் இருக்கணும் அப்பா…”
அப்போது தான் மதுரை மாட்டுத்தாவணி வந்து இறங்கினான் வெற்றி. நல்ல மழை வெளுத்து வாங்க, திருபுவனம் செல்ல முடியாது. அடுத்த பஸ் காலை ஐந்து மணிக்கு தான். டீ குடிக்க அமர்ந்தான்.
வீடு பட்டென்று திறக்க பட, கையில் ஆயுதம் இருந்தும் அரண்டு போய் பின் நகர்ந்தாள் சரண்யா…