நிலா – 14
மாலை வீடு வந்து சேர்ந்ததும் குளிப்பதற்காக பாலாவின் அறைக்குள் சென்றவன் அங்கே சில உடைகளை எடுத்து பேக்கில் மடித்து வைத்துக்கொண்டிருப்பதை கண்டான்.
“என்ன பண்ணிட்டு இருக்க?…” என கேட்டதும் தான் இவன் வந்ததையே கவனித்தாள் அவள்.
“ட்ரெஸ் எல்லாம் எடுத்து வச்சிட்டு இருக்கேன்…”
“ப்ச், அது தெரியுது. இப்ப ஏன்னு கேட்டேன்…”
“அர்ச்சனா ஆன்ட்டி கால் பண்ணிருந்தாங்கலாம் அம்மாவுக்கு. நாளைக்கு நம்மளை அங்க வர சொல்லி. அதான் அம்மா ட்ரெஸ் எல்லாம் பேக் பண்ண சொன்னாங்க. அதான் எடுத்து வச்சுட்டு இருக்கேன். இனி தான் புக்ஸ் எல்லாம் எடுத்து வைக்கனும்…” என்று சொல்ல சூர்யா அப்படியே நின்றான்.
“என்னாச்சு?…” என பாலா கேட்க,
“நத்திங். நீ எடுத்து வை…” என்றவன்,
“அம்மா உனக்கு கால் பண்ணினாங்களா?…” என கேட்க,
“இல்லையே. அம்மாட்ட தான் பேசினாங்க போல…” என்றாள் சாதாரணமாக.
“ஓஹ்…” என்றவன்,
“மோகனாக்கா எங்க?…” என,
“அம்மாவும், ஜெய்யும் கோவிலுக்கு போயிருக்காங்க. அப்பா தெரிஞ்சவரை பார்த்துட்டு வரேன்னு கிளம்பிருக்காங்க. நான் மட்டும் தான் இருக்கேன்…” என்றவள்,
“பக், புக்ஸை எதுல பேக் பண்ணன்னு தெரியலை…” என்று நின்றாள்.
அதுவரை அவள் பேசியதை கேட்டுக்கொண்டே இருந்தவன் தலையை தட்டியபடி நின்றவளை கவனித்தான்.
“உனக்கு எப்போ இந்த பீரியட் முடியும்?…” என்று பளிச்சென்று கேட்க,
“ஆங்…” என்றாள் திடுக்கிட்டு.
“ப்ச், நான் கேட்டது புரிஞ்சது தானே?…”
“ஹ்ம்ம், ஆமா…”
“ஹ்ம்ம், தென் ஆன்ஸ்ர் மீ…” என்றான் வேகமாய்.
“இன்னும் ரெண்டு நாள் ஆகும்…” என புத்தகங்களை பார்த்துக்கொண்டே சொல்ல,
“ஓகே. நான் குளிச்சுட்டு வரேன். ஒரு காபி வேணும்…” என்று சொல்லிவிட்டு அவன் செல்ல,
“வெற்றி மாமா வரலையா?…” என கேட்கவும் தனக்கு உடையை எடுத்துக்கொண்டிருந்தவன்,
“வருவான். ஒரு வேலை இருக்குன்னு போயிருக்கான்…” என்று சொல்லிவிட்டு பாத்ரூமினுள் நுழைந்துகொள்ள பாலாவும் காபி போட சென்றாள்.
போனவள் அங்கேயே நிற்க காபி பவுடர் எங்கிருக்கிறது என தெரியாமல் முழித்தபடி இருந்தவள் ஒவ்வொன்றாய் திறந்து பார்த்துக்கொண்டு இருந்தாள்.
குளித்துவிட்டு வந்தவன் அறையில் பாலா இல்லாததை கண்டு வெளியே தேட கிட்சனில் உருட்டும் சத்தத்தில் அங்கே சென்றான்.
“என்ன பண்ணிட்டிருக்க?…” என கேட்க,
“பார்த்தா தெரியலையா தேடிட்டு இருக்கேன்…” என்றாள் அவனை திம்பி பார்க்காமல் கர்மசிரத்தையாக.
“அதான் என்னன்னு கேட்டேன்…” என்று சுவற்றில் சாய்ந்து நின்றபடி கேட்க,
“காபி கேட்டீங்க தானே? பில்ட்டர்ல இறக்கி வைக்கலை. அதான் பவுடரை தேடறேன். அந்த பாக்ஸும் காலியா இருக்குது. பாக்கெட் வாங்கி எங்க வச்சாங்களோ?…” என கீழே உள்ள டப்பாக்களை எல்லாம் உருட்டினாள்.
“பேசாம டீ போடேன்…” என்றவனை பார்த்து,
“சூர்?…” என கேட்க,
“நீ தேடறதுக்குள்ள டின்னர் டைம் வந்திரும். அதுக்கு டீயே போடு…” என்றவன்,
“போட தெரியும் தானே? இல்லை அதையும் தேடனுமா?…” என்று நக்கலாய் கேட்க,
“அதெல்லாம் தெரியும்…” என அவள் சொல்ல,
“ஓஹ் வேற என்னல்லாம் தெரியும்?…” என்று கேட்டுக்கொண்டே அவள் கீழே இறக்கி வைத்திருந்த பொருட்களை எல்லாம நகர்த்திவிட்டு வழக்கமாய் தான் அந்த மேடையில் அமரும் இடத்தில் அமர்ந்துகொண்டான்.
“என்ன தெரியும்ன்னா? கொஞ்சம் கொஞ்சம் தெரியும். தனியா இருந்தா எனக்கு அவசரத்துக்கு என்ன செஞ்சு சாப்பிட முடியுமோ அதெல்லாம் தான்…”
பேசிக்கொண்டே டீயை வைத்தவள் சின்ன குத்துக்கல்லில் இஞ்சி, ஏலக்காய், துளி பட்டை, ஒரு கிராம்பு எல்லாம் போட்டு நுணுக்க ஆரம்பித்தாள்.
“ஹ்ம்ம், அவசரமா என்ன சமைப்ப? சொல்லேன் நானும் தெரிஞ்சுக்கறேன்….” என்றான் தெரிந்துகொள்ளும் ஆவலில்.
இவன் ஏன் இதை எல்லாம் கேட்கிறான் என்ற நினைப்பு இருந்தாலும் பதில் கூறாமல் இருக்க தோன்றவில்லை.
“குக்கர்ல சாதம் வைக்க தெரியும். ரசம், உருளை வறுவல் செய்வேன். வேற எதாச்சும் தோணிச்சுன்னா அப்பப்போ யூட்யூப் பார்த்து ட்ரை பண்ணுவேன். மோஸ்ட்லி நல்லாவே வந்திரும். ஹ்ம்ம் சிம்பிளா சில்லி சிக்கன் கூட நல்லா செய்வேன்….” என்றதும் சூர்யா ஒருவித நமுட்டு சிரிப்புடன் அவளை பார்த்தான்.
“நம்பாத மாதிரியே இருக்குது உங்க சிரிப்பு. இதுக்குத்தான் சொல்ல வேண்டாம்னு நினைச்சேன்…” என்று சொல்லியவள் அவனுக்கு கொதித்து வந்த டீயை வடித்து சர்க்கரையை அளவாய் போட்டு ஆற்றி குடுத்தவள் தனக்கும் எடுத்துக்கொண்டாள்.
நுரை பொங்க சூடு பறக்க கையில் இருக்கும் டீயில் இருந்து வந்த மனம் அவனின் மன சோர்வை எல்லாம் கலைய செய்ய சுவை பார்த்தவன்,
“ஹ்ம்ம், நாட் பேட். நீ கூட சின்ன குக்கர் தான்…” என்று பாராட்ட,
“என்னது குக்கரா?…” என்றாள் வேகமாய்.
“குக்கிங்கை தான் அப்படி சொன்னேன். அப்பப்ப ப்ரஷர் குக்கரும் கூட…” என்று கேலி பேச,
“டீ போட்டதே தப்பு போல…” என்று அங்கிருந்து செல்ல போக,
“ப்ச், இரு பாலா. குடிச்சுட்டு போகலாம்…” என்று நிறுத்தினான் அவளை.
நிறைய பேசவேண்டும் என்று இருவருக்குமே தோன்றினாலும் ஏதோ ஒரு கட்டத்தில் வார்த்தைகள் இன்றி மௌனமாக நின்றனர்.
“டீ நல்லா இருக்கா?…” என்றாள் அவளாகவே.
“ஹ்ம்ம். சொன்னேனே…” என்றான் அவனும் மென்னகையுடன்.
முதன்முதலில் தன் கையால் அவனுக்கு செய்திருக்கும் ஒரு விஷயம். பாலாவிற்கு அவனின் மனதை அறிய அத்தனை ஆசையாய் இருந்தது.
அவளறியாமல் அவனை தொடர துவங்கினாள். முதல்நாள் இருந்த குழப்பம் எதுவும் இல்லாமல் நேர்மறையாக சிந்திக்க ஆரம்பித்தாள். தெளிவு தான்.
“ப்ரெஷா பீல் ஆகுது பாலா. கொஞ்சம் டென்ஷன். இப்போ இந்த டீ குடிக்கவும் பெட்டர்…” என்றவன் அவளின் மலர்ந்த முகத்தை கண்டு,
“அப்படியே அந்த சில்லி சிக்கனும் ஒரு நாள் செஞ்சு குடு. சாப்ட்டு பார்த்துட்டு சொல்றேன்…” என்று சொல்ல வேகமாய் தலையசைத்தவள் அதன் பின்னர் தான் அவன் அசைவம் உண்ணமாட்டான் என்றே ஞாபகத்திற்கு வர முகம் சுருங்கி போனது.
“கிண்டல் பன்றீங்க…” என்று பாதி குடித்த டீயை அப்படியே வைத்துவிட்டு வேகமாய் அங்கிருந்து வெளியேற சமையல் மேடையில் அமர்ந்திருந்தவன் குதித்து இறங்கி அவள் வைத்த டீயை எடுத்துக்கொண்டு பின்னே சென்றான்.
“ஒரு வார்த்தை பேசிட கூடாதா உனக்கு? முதல்ல டீயை குடி…” என்று அவளிடம் நீட்ட,
“இனிமே நான் நான்-வெஜ் சாப்பிட கூடாதா?…” என்றாள் அமைதியாக.
“அப்போ நான் கேலி பண்ணினேன்னு நீ வரலை. உன்னால சாப்பிட முடியாதோன்னு தான் வந்திருக்க. நான் கூட என்னாலன்னு நினைச்சுட்டேன்…” என்றவன்,
“என்ன கோபமா இருந்தாலும் எனக்கு சாப்பாட்டுல கோபத்தை கட்டினா சுத்தமா பிடிக்காது பாலா. தேவைக்கு வாங்கி சாப்பிடனும். வேஸ்ட் பண்ண கூடாது…” என சொல்ல அவன் தந்த டீயை ஒரே மூச்சில் குடித்தவள்,
“போதுமா?…” என்றுவிட்டு தம்ளரை அவனின் கையில் வைத்தவள் தன் அறைக்குள் போக போக,
“ஏய் நில்லு, நீ குடிச்சது என்னோட டீயை…”என்றான் சூர்யா வேகமாய்.
அவனின் கையில் இருந்த தம்ளர்கள் இரண்டும் ஒன்றுபோல இருக்க வேகமாய் வாங்கியதில் தான் குடித்தது எதுவென்று கவனிக்காமல் வாங்கிவிட்டதில் அசடு வழிந்தது. ஆனாலும் அவனின் முன்னே காண்பித்து கொள்வதா என்பதை போல,
“சோ வாட்? தப்பில்லை…” என்று சொல்லிவிட்டு,
“அந்த டீயை நீங்க குடிங்க. அதுவும் சேம் டீ தான்…” என சொல்லியவள் உள்ளே சென்றுவிட,
“என்ன சொன்னாலும் நம்பறா. ஆனா கவுன்ட்டர் குடுக்க மட்டும் மறக்கமாட்டேன்றா…” என்று சிரித்தபடி தன் டீயை குடித்துவிட்டு உள்ளே சென்றான்.
“நானும் ஹெல்ப் பண்ணவா?…” என கேட்க,
“ஹ்ம்ம், எஸ். இந்த புக்ஸ் எல்லாம் இப்போதைக்கு எடுத்துக்கலாம். மத்ததை நெக்ஸ்ட் வீக் பார்த்துக்கலாம்…” என்று ஒரு செட்டை பிரித்து வைத்தவள் தனது நோட்ஸ் அனைத்தையும் தனியே எடுத்து வைத்தாள்.
“எடுக்கனும்னா எல்லாத்தையும் எடு. வீக்லி ஒன்ஸ் இதுக்குன்னு வந்திட்டு இருப்பியா நீ?…” என்று சொல்லிவிட்டு அங்கே அலமாரியில் இருந்த புத்தகங்கள் அத்தனையையும் எடுத்து கீழே வைக்க,
“இல்லை இருக்கட்டும். அது எல்லாம் வேண்டாம்…” என பாலா தடுக்க,
“நீ பிரிச்சு வைக்கிறதை மட்டும் பாரு. நான் எடுத்து வைக்கறேன்…” என்று சொல்லி வம்படியாய் அவளை நகர்த்திவிட்டு எடுத்து வைக்க அதன் மூலையில் எதுவோ சுருண்டு கிடந்தது.
எடுத்து பார்த்தவனுக்கு மங்கலாய் ஏதோ நினைவு. அதை முழுதாய் பிரித்து பார்த்ததும் தான் ஞாபகம் வர சட்டென பாலாவை பார்த்தான். அவன் அதை எடுத்ததுமே புத்தகங்களிடம் பார்வையை திருப்பிக்கொண்டவள் அவன் பார்ப்பதை உணர்ந்து திரும்பவே இல்லை.
“பாலா…” என்று அழைக்க,
“சொல்லுங்க…” என்றாள் நிமிர்ந்தும் பாராமல்.
“இந்த பாலை இன்னுமா வச்சிருக்க?…” என்றான் ஆச்சர்யம் மிகுந்த குரலில்.
“எந்த பால்?…” என தெரியாததை போல பார்த்தவள்,
“ஓஹ், இதுவா? ஆமா. ஏன்?…”
“ப்ச், பாலா, பதில் சொல்லு. இதை ஏன் இன்னும் வச்சிருக்க?…” என்று அவளின் முன்னால் அமர்ந்து கேட்க அதற்கு மேலும் சாதாரணமாக காட்டிக்கொள்ள முடியவில்லை. அவனின் கையில் இருந்து அதனை வாங்கியவள்,
“இந்த பால் நான் ரொம்ப குட்டியா இருக்கும் போது என்னோட தாத்தா இறக்கறதுக்கு முன்னாடி கடைசியா வாங்கி தந்தது. எனக்கு ரொம்ப இஷ்டம். ரொம்ப பத்திரமா வச்சிருந்தேன். ஏர் போனாலும் அப்பப்போ அப்பா பில் பண்ணி குடுத்துட்டே இருப்பார். கிழிஞ்சிடுச்சா. அதான் கீழே போடவும் மனசில்லை…”
அவள் சொல்லியதை கேட்டவனுக்கு மனது அத்தனை சங்கடமாய் போனது. வருத்தம் மேலிட அவளை ஏறிட்டவன்,
“நான்…” என பேச வர,
“அட விடுங்க. இப்போ என்ன? இப்பவும் இந்த பால் என்னோடவே தானே இருக்குது…” என்று சிரித்தவள் அதை எடுத்து தனது பேக்கில் வைத்துக்கொண்டாள்.
“பாலா…” என அழைத்தபடி மோகனாவின் சத்தம் கேட்க,
“அம்மா வந்துட்டாங்க…” என்று சொல்லி எழுந்து சென்றாள்.
அதன் பின்னர் இரவு உணவை முடித்துக்கொண்டு மறுநாள் கிளம்பவேண்டும் என்பதை மோகனாவே சூர்யாவிடம் சொன்னார்.
“அம்மா காலையில போன் பண்ணிருந்தாங்க சூர்யா…”
“ஓஹ் மார்னிங்கேவா?…” என்றவனின் குரலில் இருந்த பேதத்தை அங்கிருந்தவர்களில் வெற்றியை தவிர யாரும் கண்டுகொள்ளவில்லை.