“என்னாச்சு அப்படியே சைலன்ட் ஆகிட்டீங்க? இதை ஈஸியா எடுத்துக்கனும் மிஸ்டர் மெக். சும்மா சும்மா சூடாகிட்டு…” என சிரித்தவள்,
“ஆனா அந்தம்மாவுக்கு ஒரு நாள் இருக்குது. என்கிட்டே வசமா சிக்கின பின்னாடி என் பக்கமே வராம போகும் பாருங்க…” என சொல்ல இத்தனை விளக்கத்திற்கு பின்னும் அவன் முரண்டுபிடித்து தான் அமர்ந்திருந்தான்.
“நீங்க முன்னாடி கேட்ட சில்லி சிக்கனை இப்போ செஞ்சு தரவா? கொஞ்சம் கூல் ஆவீங்க…” என்று கிண்டல் பேச,
“ஒன்னும் வேண்டாம் போடி…” என்று எழுந்துகொள்ள,
“நீங்க மட்டும் நாளைக்கு நைட் ப்ளைட்ல யு.எஸ் போறதை என்கிட்டே சொல்லவா செஞ்சீங்க?…” என்று அவள் கோபமாய் கேட்க,
“ஆமா, சொல்ல முடியாது. என்ன பண்ணுவ?…” என்று முறைக்க,
“தேவையே இல்லை. இனி நானும் சொல்லலை. நீங்களும் சொல்லவேண்டாம்…” என பாலாவும் கோபமாய் பேச,
“ரொம்ப சந்தோஷம். சொல்லாத….” என்றுவிட்டு வேகமாய் கிளம்பிவிட்டான்.
அவன் சென்று வெகுநேரம் ஆனா பின்பும் பாலா அங்கேயே அமர்ந்திருக்க ஜெய் வெளியே வராததை கண்டு எழுந்து உள்ளே செல்ல நன்றாக உறங்கிக்கொண்டு இருந்தாள் ஜெயஸ்ரீ.
மெதுவாய் கதவை சாற்றிவிட்டு சிதறிக்கிடந்த கார்ட்களை எல்லாம் எடுத்து அடுக்கி வைத்துவிட்டு அவளின் வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.
கோபமாய் கிளம்பிய சூர்யா நேராக சென்றது ஹரிணியின் வீட்டிற்கு தான். உள்ளே வருபவனின் வேகத்தை ஹாலில் இருந்த ஹரிணி பார்த்துவிட பயத்துடன் ஒடி வந்தாள்.
“என்னன்னா என்னாச்சு? கோபமா இருக்கீங்களா?…” என தங்கை கேட்டதும் அவளின் முகத்தை கண்டு கொஞ்சம் நிதானித்தவன்,
“எங்க உன் மாமியாரும், புருஷனும்?…” என கேட்க,
“வாங்க வாங்க…” என அவனை வரவேற்றான் ஹரிணியின் கணவன் வருண்.
“உங்க அம்மா எங்க வருண்? பேசனும்…” என இறுக்கத்துடன் சொல்ல,
“சூர்யா ப்ளீஸ், என்னனு சொல்லுங்க…” என்று கேட்டுக்கொண்டு இருக்கும் பொழுதே அவனின் குடும்பத்தினர் வந்துவிட்டனர்.
“என்னம்மா ஹரிணி, இப்பத்தான வீட்டுல பார்த்தான் உன் அண்ணன். அதுக்குள்ளே உன்னை பார்க்க வந்துட்டானா?…” என நக்கலாய் மாமியார் கேட்க,
“நான் என் தங்கச்சியை எப்போ வேணாலும் பார்ப்பேன். அதுக்கு யார் பர்மிஷனும் தேவை இல்லை…”
“என்னப்பா இது சண்டைக்காரன் மாதிரி பேசற? நான் சாதாரணமாத்தான கேட்டேன்?…” என அவர் பேசிவிட்டு,
“என்னடா வருண்? உன் பொண்டாட்டியோட அண்ணன் பிரச்சனை பண்ண வந்திருக்கற மாதிரி தெரியுதே. இதுக்குத்தான் இறங்கி போக கூடாதுன்றது. உன் பேச்சை கேட்டு, உனக்காக வந்ததுக்கு இது தேவைதான்…” என்று அவர் பேச,
“இங்க பாருங்க, உங்களை யாரும் இறங்கி வர சொல்லலை. நாங்க இவ்வளவு தூரம் தணிஞ்சு போனது என் தங்கச்சிக்காக மட்டும் தான். அதுக்காக என் பொண்டாட்டி என் வீட்டுல இருக்க கூடாதுன்னு நீங்க எப்படி சொல்லலாம்?…” என கேட்க வருண் அதிர்ச்சியுடன் பார்த்தான்.
“என்னம்மா சொல்றார் சூர்யா? அப்படி நீங்க சொன்னீங்களா?…” என கேட்க மகனிடம் குட்டு வெளிப்பட்டுவிட்டதை கண்டு பொங்கிவிட்டார் அவனின் அம்மா.
“அப்படி எல்லாம் சொல்லவே இல்லையே. நாங்க ஏன் சொல்ல போறோம்? இவர் சொல்றதை நம்பாத வருண்…” என்று ஒரே போடாக போட ஹரிணி அழுதுகொண்டே நின்றாள்.
“நீ சொல்லு ஹரிணி, நிஜமாவா?…” என வருண் கேட்க,
“நீங்க சொல்லாம தான் பாலா இன்னைக்கு எங்க வீட்டுல இல்லையா? எங்கம்மாட்ட நீங்க பேசினதை என் காதால கேட்டேனே? மிரட்டறீங்க? அங்கயே கேட்டிருப்பேன். விஷயம் தெரிஞ்சுட்டு பேசுவோம்னு தான் அமைதியா இருந்தேன்….” என்று சூர்யா காய,
“என்னம்மா பண்ணிவச்சிருக்கீங்க? பாலா சூர்யாவோட வொய்ப். அந்த வீட்டோட மருமக. அவங்க இல்லன்னதும் நான் கூட வேற என்னவோன்னு நினைச்சேன். நீங்க காரணமா இருப்பீங்கன்னு நினைக்கலை…” வருண் சொல்ல,
“நம்பாத வருண். நான் சொல்லவே இல்லை. அவளுக்கு ஒண்ணா சேர்ந்து இருக்க புடிக்கலையோ என்னவோ. மதிக்காம வீட்டுல விசேசம் இருக்கேன்னு அதுல கலந்துக்காம அவ எங்க போனாளோ? அதுக்கு என்னை காரணம் சொல்றாங்க. நீயும் நம்பறியே…” என்று அவர் ஒருமூச்சு கண்ணீர் விட,
“ஹரிணி, நீ சொல்லு. எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்குது. உண்மையை சொல்லு. உனக்கு தெரியுமா?…” என வருண் கேட்க ஹரனி பயத்துடன் மாமியாரை பார்க்க அவர் கண்களை உருட்டினார்.
அத்தனை பயம் காட்டியிருந்தார் ஹரிணிக்கு. தாய் வீட்டு சொந்தங்களே இல்லாமல் செய்துவிடுவேன் என்னும் அளவில் பேசியிருக்க, போதாததற்கு அவர்கள் தான் முக்கியமென்றால் வருணை விட்டு போய்விடு என்றும் பேசியிருக்க பயந்துதான் போனாள் அவள்.
மாமியாரின் தந்திரங்களை இந்த சில நாட்களிலேயே கண்கூடாக பார்த்துக்கொண்டு இருக்கிறாளே. அத்தனை பயம்.
“சொல்லு ஹரிணி, என்னை பார்த்து பேசு…” என வருண் கேட்க,
“அவளை ஏன் போர்ஸ் பன்றீங்க? நானே கேட்டேன்னு சொல்றேனே. இப்போ இது விஷயம் இல்லை. உங்க வீட்டுல நடந்ததை நான் போன பின்னால நீங்க பேசிக்கோங்க…” என்ற சூர்யா,
“இங்க பாருங்க, இந்த தடவை நடந்தது இனி ஒவ்வொரு தடவையும் நடக்கும்னு நினைச்சுடாதீங்க. பாலா எங்க வீட்டு பொண்ணு. என்னோட வொய்ப். ஹரிணிக்கும், வருணுக்கும் எது செய்யறதா இருந்தாலும் அண்ணின்ற இடத்துல இருந்து அவ தான் செய்வா…”
“செய்ய வைப்பேன். இல்லை, நாங்க அனுமதிக்க முடியாதுன்னு நீங்க சொல்ல முடியாது. எந்த தங்கச்சிக்கு செய்ய கூடாதுன்னு நீங்க சொல்ல முடியாது. அது என்னோட உரிமை. அவளுக்கு ஒண்ணுன்னா நாங்க வருவோம். எல்லாமே செய்வோம்…”
“அதே மாதிரி எங்க குடும்பத்துக்குள்ள நுழைஞ்சு நீங்க அதிகாரம் பண்ணாதீங்க. ஹரிணி மாமியார், மாமனார்ன்னு உங்களுக்கான மரியாதை எப்பவும் உண்டு. இந்த வீட்டுல எங்களுக்கு எந்த எல்லையோ, அதே தான் உங்களுக்கு எங்க வீட்டுல. புரிஞ்சு நடந்துக்கோங்க…” என்றவன்,
“கிளம்பறேன் ஹரிணி. எதுவானாலும் எனக்கு ஒரு கால் பண்ணு…” என்றதும் முகத்தை மூடிக்கொண்டு ஹரிணி அழ இதுவரை அவளை தன் தோளில் கூட சாய்த்திடாதவனுக்கு கண்கள் கலங்கியது.
அவளின் உச்சந்தலையில் கை வைத்து அழுத்தியவன் தன்னுணர்வுகளை கட்டுப்படுத்த முயன்றான்.
“அழாத ஹரிணி, அண்ணன் இருக்கேன்ல…” என்று லேசாய் வருடியதும் அவனின் தோளை கட்டிக்கொண்டாள் தங்கை.
அவர்களை பார்த்தபடி இருந்த வருணுக்கு அத்தனை வருத்தமாய் இருந்தது. எல்லாம் தன்னுடைய வீட்டினரால் வந்த பிரச்சனை என்பது கொஞ்சம் குறுகித்தான் நின்றான்.
“இது ரெண்டு பொண்ணுங்க வாழ்க்கை வருண். ஹரிணி எனக்கு எத்தனை முக்கியமோ பாலா அதைவிட. உங்களுக்கும் இப்போ கல்யாணம் ஆகிடுச்சு. ஒரு புருஷனா உங்க மனைவியோட உணர்வுகள் உங்களுக்கு எத்தனை முக்கியம்னு நான் சொல்லவேண்டியதில்லை. புரிஞ்சுப்பீங்கன்னு நம்பறேன்…” என்றவன்,
“அழாம இருக்கனும். நான் கிளம்பறேன் ஹரிணி…” என்று அவளின் முகத்தை நிமிர்த்தி கண்ணீரை துடைத்தவன்,
“எந்த நேரத்துலையும் போல்டா இருக்கனும். உனக்கு என்கிட்டே பேசவோ, சொல்லவோ தயக்கமா இருந்தா கொஞ்சமும் யோசிக்காம பாலாவை கான்டேக்ட் பண்ணு. அதுல உன் ஹஸ்பன்ட்க்கு எந்த அப்ஜெக்ஷனும் இருக்காதுன்னு நம்பறேன்…” என்று வருணை பார்க்க,
“யா அப்கோர்ஸ் என்றான் அவனும் லேசாய் புன்னகைத்து.
“ஹ்ம்ம்…” என்றவன் வருநின் கையை பிடித்துக்கொண்டு,
“புரிஞ்சுக்கிட்டதுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் வருண்…” என சூர்யா சொல்ல அவனை அணைத்துக்கொண்ட வருண்,
“கண்டிப்பா, ஏனா நாம தான் ஹஸ்பன்ட்ஸ் ஆச்சே. ஆனாலும் உங்க வெடிங் அன்னைக்கு நான் பார்த்த சூர்யா கனவோ?…” என கலாய்க்க,
“அப்போ பேச்சிலர் சூர்யவர்த்தன். இப்ப முழு இஸ்திரி சூர்யவர்த்தன். வருண் மாதிரி…” என்று சிரிக்க இருவரின் பிணைப்பை கண்டு வருணின் அம்மா முறைத்துக்கொண்டு நின்றார்.
“ஹரிணியை பத்தி நீங்க கவலை பட வேண்டாம். நான் இருக்கேன்ல. பார்த்துக்கறேன். அதே மாதிரி எங்கம்மாவும் இனி பாலா விஷயத்துல தலையிடமாட்டாங்க…” என்றவன்,
“எனக்கு இது தெரிஞ்சிருந்தா நான் இதை அனுமதிச்சிருக்க மாட்டேன். ஹரிணி என்கிட்டே சொல்லவே இல்லை. பிலீவ் மீ…” என,
“பொண்டாட்டிங்க ஆல்வேஸ் பொண்டாட்டிங்க. புருஷங்க தான் மாட்டிக்கிட்டு முழிக்கனும்…” என்று கவுன்ட்டர் கொடுக்க அதை அவர்களறியாமல் நெகிழ்ச்சியுடன் பார்த்திருந்த ஹரிணி நிழல்படமாக தனது மொபைலில் பதிவுசெய்துகொண்டாள் ஆனந்த கண்ணீருடன்.
“ஓகே, இந்த வீக்கென்ட் நானும், ஹரிணியும் உங்க வீட்டுக்கு வரோம். பாலாவை இருக்க சொல்லுங்க. அவங்க என்னோட சிஸ்டர் மாதிரிலாம் இல்லை. எனக்கு தங்கச்சி தானே? இனி என் தங்கச்சிக்கும் என் சப்போர்ட் கண்டிப்பா வேணும்…” என வருண் சொல்ல,
“யா சூயர்…” என்றவன்,
“ஆனா நாளைக்கு நைட் நான் யு.எஸ் கிளம்பறேன். ஒரு முக்கியமான ப்ராஜெக்ட். போயே ஆகனும். வர டென் டேய்ஸ் ஆகலாம்…” என சொல்ல,
“ஓகே, வரவுமே மீட் பண்ணலாம்…”
“வெறும் மீட் இல்லை. எங்களோட தங்கறது மாதிரி வரனும். எங்கையாவது ட்ரிப் போக ப்ளான் பண்ணலாம்…” என சூர்யாவும் சொல்ல,
“ஓகே, அந்த ப்ளான் என்னோடது. நான் பிக்ஸ் பன்றேன் எங்க போறதுன்னு…” என வருண் அந்த பொறுப்பை வேண்டி எடுத்துக்கொள்ள அவர்களுக்கு தெரியவில்லை அத்தனையும் உடய போகிறதென்று.
சூர்யா கிளம்பியதும் வருண் வைத்து வாங்கிவிட்டான் அவனின் பெற்றோரை. ஹரிணிக்கும் கடிதல். எதுவானாலும் சொல்லவேண்டும் என்று.
தன்னை கேட்காமல் இனி ஹரிணி வீட்டில் எதுவும் பேசக்கூடாது என்று சொல்லிவிட ஹரிணியை முறைத்தபடி தான் அப்போதும் இருந்தார் அவளின் மாமியார்.
ஆனாலும் மகனின் மேல் இருந்த பயம் மருமகளை எதுவும் சொல்லவிடவில்லை அப்போதைக்கு.
அடுத்து நேராக பேக்டரிக்கு சென்றவன் வெற்றியிடம் தான் சொல்லும் முன் தன்னுடைய அபிஷியல் ட்ரிப்பை பற்றி ஏன் பாலாவிடம் சொன்னாய் என்று காய்ந்துவிட்டு தான் வீடு வந்து சேர்ந்தான்.
“பாலாவை கூட்டிட்டு வரலையா சூர்யா?…” என அவன் வந்ததும் அர்ச்சனா கேட்க,
“அவ வெற்றி வீட்டுல இருக்கட்டும். நான் ஊர்ல இருந்து வந்த பின்னால வந்தா போதும்…” என்று சொல்ல,
“என்ன இது? ஏன் அவ அங்க இருக்கனும்?…”
“எதுக்கு? நான் இங்க இருக்கும் போதே அவளை ஒரு விசேசத்துல கலந்துக்க விடலை. நான் இல்லைன்னா?…” என்று கேட்டவன் அர்ச்சனாவின் கலங்கிய முகத்தை கண்டு பாதியில் பேச்சை நிறுத்தியவன்,
“ம்மா, ப்ளீஸ். நான் கிளம்பறேன். ஒன்னொண்ணுக்கும் பேசி பேசி டெய்லி எதாச்சும் பிரஷர் தான் கூடுது. நான் பேசறது உங்களை ஹர்ட் பண்ணிடுது. நான் போய் பேக் பன்றேன். பாலா அங்க இருந்தா நான் இன்னும் கொஞ்சம் ரிலாக்ஸா இருப்பேன்…” என்றவன் கோபாலசுவாமி பூஜையறை வாசலில் நிற்பதை கண்டுவிட்டு அமைதியாய் மாடியேறிவிட்டான்.
“அர்ச்சு, அவனை விடு. இப்ப எதுவும் பேச வேண்டாம். அவன் போய்ட்டு வரவும் பேசிப்போம். கிளம்பும்போது எந்த சச்சரவும் வேண்டாம். போற வேலை நல்லவிதமா முடியட்டும்…” என்று சொல்லவிட அர்ச்சனா விட்டுவிட்டார்.
மாடிக்கு வந்தவன் தனக்கு தேவையான உடைகளை எடுத்து அடுக்க வெற்றி அழைத்தான் அவனுக்கு.
“சூர்யா பாலா இங்க இருக்கா. நான் கூட்டிட்டு வரட்டுமா?…” என கேட்க,