“அவ சொன்னாளா என்னை கொண்டுபோய் புருஷன் வீட்டுல விடுன்னு….”
“சரி நீ கூப்பிடு?…” என வெற்றி சொல்ல,
“அவளா தானே போனா. நான் கூப்பிட மாட்டேன். தானா வரட்டும்…” என்றவனுக்கு என்ன பதில் சொல்வதென புரியாமல் வெற்றி இருக்க,
“இன்னும் என்னடா?…” என்றான் அவன்.
“நான் வேணும்னா இந்த ட்ரிப்க்கு போறேனே சூர்யா…”
“ஒன்னும் தேவை இல்லை. இப்போ ஜெய் பக்கத்துல நீ இருக்கறது தான் ரொம்ப முக்கியம். நான் போய்ட்டு வரேன். பத்து நாள் தானே? அதுக்கு முன்னாடி முடிஞ்சாலும் கிளம்பிடுவேன்…” என்ற சூர்யா,
“வெற்றி, நான் வர வரைக்கும் பாலா அங்கயே இருக்கட்டும். அதுதான் எனக்கும் பீஸ்ஃபுல்லா இருக்கும். அப்போ தான் வீட்டுலையும் சரி, அவளும் சரி சரியா இருப்பாங்க. எனக்கு கண்ணாமூச்சி காட்டினாங்க இல்ல. இது ஒரு ஷாக் ட்ரீட்மென்ட்டா இருக்கட்டும்…” என சொல்ல,
“ஹ்ம்ம், ஓகே. ஓகே டா…” என்ற வெற்றியும் பேசிவிட்டு போனை வைத்துவிட்டான்.
இங்கே ஏற்கனவே பாலாவிடம் வெற்றி பேசியிருக்க அவளோ முடியாதென மறுத்துவிட்டாள்.
“வந்து வரிஞ்சு கட்டி சண்டை போட்டும் போட முடிஞ்சது. வான்னு ஒரு வார்த்தை கூப்பிட தோணலை. நான் போகலை. எப்போ கூப்பிடறாரோ அன்னைக்கு போய்ப்பேன்…” என்றுவிட்டாள்.
இருவரும் அவர்கள் பிடியிலேயே பிடிவாதமாய் இருக்க வெற்றிக்கு தான் தலை சுற்றியது.
மோகனா போன் செய்தபொழுது சூர்யா தான் வரும் வரை இங்கே இருக்கட்டும் என சொல்லிவிட்டதாக வெற்றியே சமாளித்தான்.
பாலாவிற்கு அர்ச்சனா அழைத்து பேச அவள் ஒருவாறு சமாதானம் செய்தாள் அவரிடத்தில். உமா, உத்தம, அஸ்வினி என்று அழைக்க அங்கிருக்கமுடியாமல் நொந்துபோனவள் அன்று இரவே வெற்றியிடம் பேசி தன்னை வீட்டி சென்று கொண்டு விடும் படி கேட்க ஜெயஸ்ரீ விழுந்து விழுந்து சிரித்தாள்.
“ஒரு கல்யாணம் என்னலாம் படுத்துது இந்த வீராப்பு புடிச்ச ஆளுங்களை…” என்று ஸ்டேட்டஸ் வேறு வைக்க ஹரிணியுடன் சேர்ந்து அஸ்வினியும் வாட்ஸாப் க்ரூப்பில் பாலாவை வைத்துக்கொண்டே கும்மியடித்தனர்.
அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் வெற்றி, ஜெயஸ்ரீயுடன் கோவிலுக்கு சென்றுவிட்டு நேராக சூர்யாவின் இல்லம் வந்துவிட்டவள் அவனிடம் எதுவும் பேசவில்லை.
இரவு உணவு அங்கேயே முடித்துக்கொண்டு போகும் படி அர்ச்சனா சொல்லிவிட மறுக்காமல் இருந்தா வெற்றி. அஸ்வினி அவனிடத்தில் முன்பு போல் பலகை முயன்றாலும் வெற்றியிடம் ஒரு ஒதுக்கம் தென்படத்தான் செய்தது. அதை அஸ்வினியும் உணர்ந்தாள்.
இரவு உண்டுவிட்டு கிளம்பிவிட மற்றவர்கள் உறங்க செல்ல அப்போதுதான் தங்கள் அறைக்கே வந்தாள் பாலா.
அவள் வருவதை கண்டும் கண்டுகொள்ளாமல் லேப்ட்டாப்பில் கவனமாக இருந்தான். செய்துகொண்டிருந்தது முக்கியமான வேலை. அதில் மூழ்கி போக சற்று நேரம் அவள் இருப்பதையே மறந்து வேளையில் இருக்க அவன் வேண்டுமென்றே அப்படி இருப்பதாக நினைத்து பாலாவும் பேச முயலவில்லை.
வெகுநேரம் கழித்தே வேலையை முடித்துவிட்டு லேப்டாப்பை மூடிவிட்டு எழுந்தவன் பாலாவை பார்க்க நல்ல உறக்கத்தில் இருந்தாள் அவள்.
“எவன் தலையில என்ன விழுந்தாலும் இவளுக்கு மட்டும் தூக்கத்துக்கு குறைச்சல் இல்லை…” என்ற முணுமுணுப்போடு வந்து மறுபக்கம் படுத்துக்கொள்ள அரை முழுவதும் அவள் சூடியிருந்த மல்லிகையின் மனம் நாசியில் நுழைந்து நுரையீரலில் பரவியது.
‘இன்னைக்கு யாரு இவளை இவ்வளவு பூ வைக்க சொன்னா?’ என்ற கடுப்போடு மயங்கிக்கொண்டிருக்கும் மனதை அதட்டியவன்,
‘நான் தான் ஊரெல்லாம் பொண்டாட்டின்னு சொல்லிட்டு திரியறேன். ஆனா இவ மட்டும் ஸ்டெப் எடுக்கமாட்டா. ஸ்டெடி சூர்யா.’ என நெஞ்சை தட்டிக்கொண்டவன் தலைக்கு இரு கைகளையும் முட்டுகொடுத்து படுக்க லேசாய் கண்களை திறந்து பார்த்தாள் பாலா.
“தூக்கம் வரலைன்னா எழுந்து போய் உட்காரனும். அதை விட்டுட்டு சும்மா அசைஞ்சுட்டே இருந்தா எனக்கு சுத்தமா தூக்கம் வராது…” என சொல்ல,
“நீ இன்னும் தூங்கலையா?…” என கோபமாக கேட்க,
“உங்களால தான். இப்படி உருண்டுட்டே இருக்கீங்க…” என அவளும் பேச,
“எனக்கு கூட உன்னால தான் தூக்கம் வரலை. இந்த பூவை எடுத்து போடு. எனக்கு இந்த ஸ்மெல் செட் ஆகலை…” என்றான் மல்லிகையின் வாசனையை ஆழந்து நுகர்ந்து அனுபவித்தபடி.
“வாட்? நான் ஏன் பூ எடுத்து போடனும்? அதெல்லாம் முடியாது. எத்தனை நாள் வச்சிருந்திருக்கேன். அப்போலாம் சொல்லலை…” என பாலா கேட்க,
“என்னவும் பண்ணு. நாளைக்கு நான் கிளம்பனும். தூக்கம் வருது…” என்று திரும்பிக்கொண்டான்.
“நாலு நாளைக்கு பேசவே கூடாது. அப்போ தான் இவ அடங்குவா…” என சொல்லிக்கொள்ள,
“என்ன ஆனாலும் அவன அபேசாம நானும் பேசமாட்டேன்…” என பாலாவும் சூளுரைத்துக்கொண்டாள்.
மறுநாள் பேக்டரிக்கு காலையிலேயே சென்றுவிட்டு வந்துவிட்டவன் தனது பேக்கிங் எல்லாம் எடுத்து கீழே வந்தான். பாலாவும் வெளியில் செல்வதற்கு தயாராய் வர,
“ம்மா போனை எங்க வச்சேன்னு தெரியலை. பாருங்களேன்…” என்று தேட அர்ச்சனாவும் அஸ்வினியும் ஆளுக்கொரு பக்கமாய் பார்க்க பாலா தனது மொபைலில் இருந்து அவனுக்கு அழைப்பு விடுத்தாள்.
“எப்பவும் கேர்புல்லா வச்சிருப்பியே. இன்னைக்குன்னு எங்க போட்ட?…” என அர்ச்சனா கேட்டுக்கொண்டு இருக்க,
“ப்ச், இருக்கற டென்ஷன்ல கேள்வி வேற கேட்டுட்டு. மத்ததை சரிபண்ணி எடுத்துவச்சாதுல எங்க போனை வச்சேன்னு தெரியலை…” என அவள் சொல்லிக்கொண்டிருக்கும் போதே,
“அடியே அடியே இவளே, அடி யே வாழ்க்க பாழாக்க பொறந்தவளே…” என்ற பாடல் ஒலிக்க எங்கே கேட்கிறதென அனைவருமே பார்க்க பாலா தீயாய் இவனை முறைத்தாள். நாக்கை கடித்துக்கொண்டு அவளின் பார்வையில் அகப்பட்டவனாய் சூர்யா திணறி நின்றான்.
“அரக்கி உன்ன உன்ன உன்ன மறக்க முடி முடியல…” என முழுமையாய் அது பாடி ஓய,
“எங்க பாடுது இந்த பாட்டு?…” என அர்ச்சனா தேட உடனே வீட்டு லேண்ட் லைனில் இருந்து மீண்டும் அழைக்க வேறு ஒரு ரிங் டோன் கேட்டது.
“அஸ்வினி உங்க போன்ல இருந்து உங்க அண்ணன் நம்பருக்கு கூப்பிடுங்க…” என பாலா சொல்லவும் அவளும் அழைக்க மீண்டும் லேண்ட்லைனில் இருந்து போடும் போது ஒலித்த ரிங் டோன் தான் இப்போதும் கேட்க,
“அப்போ எனக்கு மட்டும் தான் இந்த ரிங்ட்டோனா? நான் அரக்கியா?…” என்றவள் கோபமாய் அவனுக்கு மட்டும் கேட்கும் படி பேச,
“கிளம்பும் போதும் சண்டை போடாத பாலா…” என அயர்வாய் சூர்யா சொல்லியவன்,
“போய்ட்டு வரேன்…” என்றுவிட்டு அர்ச்சனாவிடமும், தங்கையிடமும் சொல்லிக்கொண்டு புறப்பட உமா வந்தார்.
“பாலா, ஒரே தலைவலியா இருக்குதும்மா. என்னால இன்னைக்கு உன் கூட வரமுடியாதே…” என சொல்ல,
“என்னாச்சு உமா?…” என்ற அர்ச்சனாவிடம்,
“ஒரு டிஸைன் பொட்டிக்ல குடுத்திருந்தேன் ஆன்ட்டி. அது ரெடி ஆகிடுச்சுன்னு சொன்னாங்க. அதான் அதை பார்க்க உமா ஆன்ட்டி கூட போகலாம்னு இருந்தேன். அப்படியே அந்த மால்ல கொஞ்சம் ஷாப்பிங் பண்ணனும்…” என சொல்லியவள்,
“ஓகே ஆன்ட்டி, நான் வெற்றி மாமாவை வர சொல்லி போய்ட்டு வரேன்…” என்று சொல்ல,
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நான் போற வழி தானே? நானே ட்ராப் பன்றேன். எனக்கு நிறையவே நேரம் இருக்குது. நீ ஷாப்பிங் முடிக்கும் போது வெற்றியை வரவழைச்சுக்கோ. இல்லன்னா நான் போய் இறங்கிட்டு உனக்கு கார் அனுப்பறேன்…” என சொல்ல,
“ஆமா பாலா…” என உமாவும், அர்ச்சனாவும் சொல்ல சூர்யாவை முறைத்தபடி அவனுடன் கிளம்ப சென்றாள் அவள்.
காரில் செல்லும் பொழுது சிறிது நேரம் இருவருமே எதுவும் பேசவில்லை. மால் அருகில் வர இருக்க அதற்கு மேலும் மல்லுக்கு நிற்காமல்,
“பார்த்து பத்திரமா போய்ட்டு வாங்க. சேஃப் ஜர்னி…” என்று பாலா கை நீட்ட அதை பிடித்து பட்டும் படாமலும் குலுக்கியவன்,
“தேங்க்ஸ்…” என்று மட்டும் சொல்ல கடுகடுவென்று வந்தது பாலாவிற்கு.
ட்ரைவரை வைத்துக்கொண்டு வேறெதுவும் பேசாமல் மௌனமாகிவிட மாலின் வாசலில் கார் நின்றதும் அவனை பார்த்துவிட்டு இறங்கிவிட்டாள்.
‘உனக்கு அவ்வளவு பிடிவாதமா?’ என்னும் விதமாய் முறுக்கிக்கொண்டாலும் கண்ணீர் வந்தது அவனின் பிரிவில்.
எத்தனை சண்டையிட்டாலும், வாக்குவாதங்கள் இருந்தாலும் அவனுடனே இருந்து பழகியிருக்க இப்போது அதே சண்டையுடன் பத்து நாட்கள். நினைக்கவே மலைப்பாய் இருந்தது.
“கிளம்பும் போது கூட சிரிச்ச மாதிரி பை சொல்ல முடியுதா? திமிர் அவ்வளவு திமிர்…” என வாய் நிறைய அவனை திட்டிக்கொண்டே தான் உள்ளே சென்றாள் பாலா.
அங்கிருந்து சூர்யா கிளம்பி அரைமணி நேரம் கூட இருக்காது. வெற்றியிடம் இருந்து போன்.
“சூர்யா, பாலா எங்க? அவ போன் சுவிட்ச் ஆஃப்ல இருக்குது. வீட்டுல கேட்டா உன்னை சொன்னாங்க. மால்ல ட்ராப் பண்ணிட்டியா?…” என எடுத்ததும் வெற்றி கேட்க,
“ஆமா, இப்போ என்னடா? பண்ணி அரைமணி நேரமாச்சு. ஏர்போர்ட் போய்ட்டிருக்கேன்…”
“ஓஹ் ஷிட், சூர்யா அந்த மால்ல சிவியர் ஃபயர் ஆக்ஸிடன்ட் ஆகிட்டதா ப்ளாஷ்நியூஸ் போய்ட்டிருக்குதுடா. நான் வரேன்…” என்றவனின் அழைப்பு துண்டிக்கப்பட்டிருக்க அதிர்ந்து போனவன்,
“அண்ணா, உடனே மால்க்கு வண்டியை திருப்புங்க…” என்று இரைந்ததில் அந்த பதட்டத்தை உணர்ந்த ட்ரைவர் நேரத்தை வீணடிக்காமல் வண்டியை திருப்ப மாலில் இருந்து ஒரு கிலோமீட்டருக்கு மேல் எந்த வண்டியையும் அனுமதிக்காமல் போலீஸ் ரவுண்டப் செய்திருக்க காரை விட்டு இறங்கி ஓடினான்.
வீட்டிலிருந்து மாற்றி மாற்றி அழைப்பு வந்துகொண்டே இருக்க எதையும் கண்டுகொள்ளும் நிலையில் இல்லை அவன்.
காவல்துறையினரிடம் பேசி போராடி பார்க்க அதற்குள் உள்ளிருந்த மக்களின் குரல் வெளியே கதறலாக கேட்க சுத்தமாய் உயிரில்லை இவனிடத்தில்.
“பாலா…” என்றவனின் கதறல் காற்றோடு அந்த கூச்சலில் கரைய மக்கள் கூட்டம் வெளியேறி ஓடிக்கொண்டிருக்க அந்த கூட்டத்தில் பாலாவை தேடினான்.
அவளை கண்ணில் காணும் வரை உயிர் கொஞ்சம் கொஞ்சமாய் கருகிக்கொண்டிருக்க தேடல் தேடல் அத்தனை தேடல் விழிகளுக்குள். கண்ணீர் ததும்பி நிற்க துடைத்துவிட்டு தனக்கு முன்னால் பதறி ஓடிக்கொண்டிருந்த உருவங்களில் தன்னுயிரை தேடினான்.
வார இறுதி என்பதால் கூட்டம் அலைமோதிக்கொண்டிருக்க நெரிசலில் சிக்கி சிலர் கீழே விழுந்து அடிபட வேறு செய்தது.
‘ஒருவேளை வெளியேறிவிட்டாளோ?’ என்ற எண்ணமும் எழாமல் இல்லை. ‘உள்ளே இருந்தால்?’ என்ற எண்ணமே அவனை பைத்தியம் பிடிக்க செய்ய மாலின் வாயிலில் தூரத்தில் புள்ளியாய் அதோ அவள். அவனவள்.
“பாலா…” என்ற கத்தலோடு இவன் முன்னே ஓட வேகமாய் வந்து மூச்சிரைக்க இவனை கட்டிக்கொண்டாள் பாலா.
அவள் தானா? தன்னை சேர்ந்துவிடாளா? என்ற நம்பிக்கை இன்மை வேறு வாட்ட அவனின் கைகளும், இதழ்களும் அவள் தான் என சூர்யாவின் மனதிற்கு உணர்த்த போராடிக்கொண்டிருந்தது.
செல்லும் நிமிடங்கள் முத்தத்தில் போரிட்டு நொடிகளை கூட்டிக்கொண்டிருக்க அவனின் அணைப்பில் திணறி துவண்டாள் பாலா. ஆனாலும் அவனை கோர்த்துக்கொண்ட கைகளை மட்டும் அவள் விடவே இல்லை.
“சத்தியமா செத்துட்டேன்டி. உயிரே இல்ல என்கிட்ட…” என்றவனின் இதழ் ஈரங்கள் பாலாவின் கண்ணீரோடு கலந்து அவளின் முகமெங்கும் அச்சாரமிட்டுக்கொண்டிருந்தது.
“நானும், நானும் ரொம்பவே பயந்துட்டேன். பாக்கவே முடியாதோன்னு நினைச்சுட்டேன்…” என்றவளின் நடுக்கத்தை அப்பட்டமாய் உணரமுடிந்தது அவனால்.
“இல்லடா…” என்றவனின் அணைப்பில் தளர்ந்து போக முகத்தில், உடையில் உயிர்பயம். இன்னும் நடுங்கிக்கொண்டிருந்த இதழ்களை ஆற்றுப்படுத்தியபடி அவளுக்கு ஆறுதல் அளித்துக்கொண்டு இருந்தான் சூர்யா.
“முதல்ல போகலாம். இங்க வேண்டாம்…” என்றவன் மாலை நிமிர்ந்து பார்க்க தீ வெகுவாய் கொழுந்துவிட்டு எரிந்து அடுத்தடுத்த தளங்களுக்கும் பரவிக்கொண்டு இருந்தது.
ஜுவாலையின் நாக்குகள் தீண்டவிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பித்த பாலாவை எண்ணி அங்கே அர்ச்சனா உயிரற்ற மனநிலையில் மனம் உருக பிராத்தனையில் இருந்தார்.