“பாலாவுக்கு என்ன?…” என்றார் சற்று மிதப்பாய்.
“பாலாவுக்கு என்னவா? பாலா யார்?…” என்றான் நேராக.
“பாலா பாலாதான்…”
“இந்த வீட்டுக்கு பாலா யார்ப்பா?..”
“இதென்ன கேள்வி? பாலா உன்னோட வொய்ப்…”
“அப்போ பாலா இன்னும் இந்த வீட்டு மருமகளா அவ உங்களுக்கு இப்போ வரைக்கும் தெரியலை. பாலான்றீங்க. என் பொண்டாட்டின்றீங்க. உங்க மகனோட உயிருக்கு கவசமா தான் அவளை நினைக்கறீங்க. அவ்வளவு தான். இல்லை…”
“எனக்கு என் பையன் உயிர் முக்கியமா பட்டுச்சு. அதை தாண்டி தான் எதுவும்…”
“பையன் உயிர். அப்போ மோகனாக்காவுக்கு பாலா முக்கியம் தானே? அதை நீங்க நினைக்கவே இல்லை. ஆட்டி வைச்சீங்க அன்னைக்கு யாரையும் யோசிக்கவிடாம எப்படி ஆட்டிவச்சீங்க?…” என ஆக்ரோஷமாய் கேட்டவன்,
“அவங்களுக்கு எவ்வளவு கனவு இருந்திருக்கும்? அவங்க பொண்ணுக்கு எப்படி மாப்பிள்ளை பார்க்கனும், எப்படி கல்யாணம் செஞ்சு வைக்கனும். அந்த கல்யாணத்த எவ்வளவு சிறப்பா செய்யனும்னு பொண்ணை பெத்தவங்களா அவங்களுக்கு எத்தனை கனவுகள் இருந்திருக்கும்? அத்தனையும் உங்க சுயநலத்துக்காக கொன்னுட்டீங்க இல்ல…”
“உங்க மேல எத்தனை மரியாதை வச்சிருந்தேன். மொத்தமா நொறுக்கிட்டீங்க. உங்க தொழிலுக்கு துரோகம் பண்ணிட்டீங்க. இப்படி ஒரு காரணம் இருக்கும்னு நான் மட்டுமில்லை யாருமே நினைச்சு பார்க்கலையே. பாலா மேல, வெற்றி குடும்பத்து மேல ஒரு அபிப்ராயத்தால தான் இந்த கல்யாணம் நடந்துச்சுன்னு நான் நம்பிட்டு இருந்தேன்…”
“ஏன் மோகனாக்காவுமே அதத்தான் நினைச்சிருந்திருப்பாங்க. இத்தனை பெரிய மனுஷன் சொந்தங்களை விட்டுட்டு நம்ம பொண்ணை கேட்கராறேன்னு உங்களை பெருமிதமா நினைச்சிருப்பாங்க. ஆனா அவங்க பொண்ணை குடுத்ததுக்கு காரணம் நான். என் மேல உள்ள நம்பிக்கை…”
“இப்ப அவங்களுக்கு இந்த விஷயம் தெரிஞ்சா என்னையும் என்ன நினைப்பாங்க? இத்தனை மட்டமா என்னோட உயிரை காப்பாத்திக்கறதுக்காக தான் பாலாவை யூஸ் பண்ணிக்கிட்டேன்னு நினைச்சுட மாட்டாங்களா?…”
“அவங்களுக்கு மட்டுமா நம்பிக்கை துரோகம் பண்ணினீங்க? உங்க சொந்த தங்கச்சி. அவங்க பொண்ணுக்கு அவங்களுக்கு தெரியாமலே கல்யாணம் பண்ணி அனுப்பி வச்சிருந்திருக்கீங்க. கேட்டா இதுவும் உங்க ஜாதக தர்மம்னு சொல்லுவீங்களா?…”
“அடுத்தவங்க வாழ்க்கையை முடிவு பண்ண நீங்க யாரு? என்னை பெத்தீங்க என்னவோ செய்ங்க. இருக்கற வரைக்கு இருக்கேன். விதி முடிஞ்சா போறேன். அந்த விதியை மாத்திருவீங்களா நீங்க? இப்ப என்னோட ஜாதகத்தோட தாக்கம் தான் பாலாவுக்கு ஏற்பட்ட அந்த ஆக்சிட்டேன்ட்டா இருக்குமோன்னு பயமா இருக்குதேப்பா?…” என்றவனை அதிர்ச்சியுடன் அவர் பார்க்க,
“நானும் உங்க புள்ளை தானே? கட்டத்தை கணிக்க தெரியாட்டிலும் ஜாதங்கங்களோட எதிர்வினைகள் எப்படி இருக்கும்னு ஓரளவு தெரியும் தானே? அது கூட தெரியலைன்னா எப்படி? உங்களோட அதிர்ந்த முகமே சொல்லுதே நான் சொன்னது கரெக்ட்ன்னு. எல்லாமே உங்களுக்கு முதல்லையே தெரிஞ்சிருக்கும். தெரிஞ்சும் ஏன் இப்படி செஞ்சீங்க?…” என அவன் கேட்க,
“பாலா தான் உனக்கு மனைவின்னு விதிக்கப்பட்டது சூர்யா. நீங்க ரெண்டு பேர் தான் இணையனும்னு கட்டங்களே சொல்லுது. உனக்கான நான் தேடிட்டு இருந்த ஜாதகத்துக்கான பொண்ணு பாலாதான்னதும் நான் உடனே கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டேன்…” என கோபாலசுவாமி சொல்ல பல்லை கடித்து கையை மடக்கியபடி கோபத்தை கட்டுப்படுத்த முயன்றான் சூர்யா.
“அப்போ ஒரு ஜாதகம் தான் எங்களோட வாழ்க்கையை தீர்மானிக்குதாப்பா? எங்க அடுத்து நான் எடுக்க போற முடிவு என்னன்னு உங்க ஜாதகத்துல சொல்லுச்சான்னு சோழி போட்டு பாருங்களேன்…”
“ஆமா, இந்த ஜாதகம் தான் நீங்க ரெண்டு பேரும் தான் புருஷன் பொண்டாட்டின்னு தீர்மானிச்சது. இப்ப அது நடக்கவும் செஞ்சது…”
“இதை ஜாதகம்னு சொல்லாதீங்க. உங்களோட கிரிமினல் திட்டம். திட்டம் போடு மொத்தமா எத்தனை குடும்பத்தை ஏமாத்தியிருக்கீங்க. இது பாலாவுக்கு தெரிஞ்சா அவளால தாங்க முடியுமா?…” என்றவன்,
“ம்மா, இதுக்கு மேல இந்த வீட்டுல நானும், பாலாவும் இருக்க மாட்டோம். ஜாதகம், கட்டம்னு சொல்லி இன்னும் என்னவேணாலும் இவர் செய்வார். ஏன், நாளைக்கே கட்டத்துல இருக்குது, சோழி சொல்லுச்சுன்னு பாலாவை பிரிய சொல்ல கூட இவர் இரக்கமே இல்லாம பண்ணுவார்…”
“சூர்யா அப்பா எல்லாம் உன் நல்லதுக்காக தான் பண்ணினார். பாலாவுக்கு ஒன்னும் ஆகாதுப்பா. நான் ஏற்கனவே அவர்க்கிட்ட பேசிட்டேன்…” என அர்ச்சனா சொல்ல சூர்யா இன்னும் அதிர்ந்து போனான்.
“அப்போ உங்களுக்கும் இந்த விஷயம் முன்னாடியே தெரியுமா? சொல்லுங்கம்மா…” என தாயை பிடித்து உலுக்க அவர் அழுவதை தவிர வேறெதுவும் செய்யமுடியாமல் மகனின் ருத்ரதாண்டவத்தில் அரண்டு நின்றார்.
“ஓஹ், அப்போ எல்லாம் சேர்ந்து தான் முடிவு பண்ணியிருக்கீங்க, அப்படித்தானே? இன்னும் யாரெல்லாம் இதுல சம்பந்தப்பட்டிருக்கீங்க? சொல்லுங்க. ஒவ்வொருத்தம் முகமா வெளிவரதை தாங்கற அளவுக்கு எனக்கு சக்தி இல்லைம்மா…” என சோர்ந்து அந்த இருக்கையில் அமர்ந்தவன் கலங்கி போய் இருந்தான்.
“சூர்யா…” என அவனின் தலையில் கை வைத்தவரின் கையை தட்டிவிட்டவன்,
“உங்க ரெண்டு பேருக்கும் ஒன்னு சொல்லிக்கறேன். ஜாதகம், ஜோஸியம், கண்டம்னு சொல்லிட்டு பாலாவை என்கிட்டே இருந்து பிரிக்கனும்னு மட்டும் நினைச்சு பார்க்காதீங்க. இனி அவளுக்கு சின்னதா ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்தாலும் ஒருத்தரையும் சும்மா விடமாட்டேன்….” என மிரட்டலாய் சொல்லி,
“இனி வாழ்வோ சாவோ அவ ஒருத்தி தான் எனக்கு. அவளோட தான் எதுவா இருந்தாலும். என்னால என்னோட ஜாதக பலனால அவளுக்கு ஏதாவது ஒண்ணுன்னா உங்களுக்கு நானும் இல்லை. அவ்வளவுதான் சொல்லுவேன். இனி எங்களை தேடி வராதீங்க…” என கிளம்ப போக,
“சூர்யா அம்மா சொல்றதை கேளுப்பா…” என அர்ச்சனா அவரின் பின்னால் போக,
“இனி கேட்க எதுவும் இல்லை. இதுக்கே அந்த குடும்பத்துக்கு நான் என்ன பதில் சொல்ல போறேன்னு தெரியலை. இது தெரிஞ்சா உயிரை விட்டுட மாட்டாங்களா? இப்படி செஞ்சுட்டீங்களே? இதை எந்த காலத்துலையும் நான் மன்னிக்கமாட்டேன்…” என திரும்ப,
“சூர்யா பாலா…” என்று அர்ச்சனா கேட்க கோபாலசுவாமியிடத்தில் அசைவே இல்லை.
“நல்லவேளை அவ இங்க இல்லை. இதெல்லாம் தாங்கிக்கற அளவுக்கு அவ. அவ முகத்துல நான் எப்படிம்மா முழிப்பேன்? பாவம்மா, சின்ன பொண்ணு. என்னால் தாங்க முடியலம்மா…” என அவரின் கையை பிடித்துக்கொண்டு இருந்தவன்,
“அட்லீஸ்ட், பாலாக்கிட்ட மட்டுமாவது பொறுமையா இதை எடுத்து சொல்லனும். சொல்லலைன்னாலும் பரவாயில்ல, இனி அவளை நான் பார்த்துப்பேன். தயவு செஞ்சு உங்க புருஷன் இதுவரைக்கும் செஞ்ச நன்மையே போதும். திரும்ப ஜாதகத்தை தூக்கிட்டு வர சொல்லாதீங்க…”
“சூர்யா பாலா…” என்று கை பிடித்து நிறுத்தியவர் காண்பித்த திசையில் பார்க்க அங்கே அதிர்ந்த முகத்தோடு நின்றிருந்தாள் அவள்.
“பாலா…” என்றவனின் அழைப்பு அவளை எட்டினாலும் பிரம்மை பிடித்ததை போல நின்றிருந்த கோலம் வாள் கொண்டு அறுத்தது அவனை.
அங்கே மனைவியை நிச்சயமாய் அவன் எதிர்பார்க்கவில்லை. இங்கே வருவதை பற்றி அவனிடம் அவள் எதுவும் சொல்லியிருக்கவில்லை.
அவனின் திட்டமிட்ட வரவும், அவளின் எத்தேர்ச்சையான வரவும் எதிர்பாராமல் நிகழ்ந்திருக்க அங்கேயும் அவர்களின் விதி தான் முன்னின்றது.