‘இவனை பத்தி தான் தெரியுமே?’ என நினைத்தவளும் இவன் என்னதான் சொல்லி வருகிறான் என பார்ப்போமென்று வாயை திறந்தாள் இல்லை.
“பொண்ணு கொஞ்சம் ஓகே தான். ஆனாலும் பெரியமனசு பண்ணி சரின்னு சொல்றேன்…” என வழக்கம் போல அவளை வம்பிழுக்க,
“உங்க பெரியமனசு இங்க தேவையில்லை ஸார்…” என ஸ்ருதியும் விடுவதாய் இல்லை.
“தேவைப்பட்டவங்க எர்காணவே எடுத்துட்டாங்களே? குடுத்தத திரும்ப வாங்கற ஐடியா எனக்கு எப்பவும் இருந்ததில்லை…” என சரிக்கு சரி பேச ஸ்ருதி நமுட்டு சிரிப்புடன் சுபஷ்வினியை பார்த்தாள்.
“பெர்பாமென்ஸ் பத்தலை சிங்கரே. இன்னும் கொஞ்சம் ம்ம்ம்…” என நெடுஞ்செழியன் ஸ்ருதியிடம் சொல்ல,
“போதும் போதும்…” என்று ஸ்ருதியும் சிரிக்க,
“எங்க அந்த லத்தி?…” என்றாள் சுபஷ்வினி இருவரையும் பார்த்து இடுப்பில் கை வைத்தபடி.