அத்தை மதியத்துக்கு என்ன சமைக்கலாம் என்று காவியா கேட்க,
“இப்படி கொஞ்ச நாழி உக்காரு மா.. ஒரு பதினோரு மணிக்கு செய்ய ஆரம்பிக்கலாம்…” என்று கூறிவிட்டு தன் யோசனையை தொடர,
“என்னத்தை பலமான யோசனை..”
“ஆமாம் காவியா.. உங்க மாமா ஒரு டாக்டர் பொண்ணு ஜாதகம் ஒன்னு வச்சிட்டு சுத்திட்டு இருந்தார்.. என்ன ஆச்சுன்னு தெரில… ஒரு வேல பொருந்தலையோ என்னமோ, அதை பத்தி பேச்சையே காணும்.. இல்லனா அடுத்த குண்டு எப்போ வெடிக்கும் பாத்துட்டு இருக்கனும்..”
“நல்ல விஷயம் தானே அத்தை.. நந்தாக்கு தான் டாக்டர் பொண்ணு வேணாம் சொன்னாங்களே..”
“ஆமா தான்.. இவன் வேற என்னைக்கும் இல்லாத திருநாளா போன் பண்ணி நாலு நாள் லீவு எனக்கு, வீட்டுக்கு வரேன் அப்படினு சொல்லறான்.. இவன் எதுக்கு இப்படி வரேன்னு சொன்னான்னு வேறத் தெரியல..”
“அத்தை.. நந்தா தம்பி, அங்க வீடு எடுத்து தங்க ஆரம்பிச்சதுல இருந்து, இங்க வரவே இல்லல.. ஒரு வருஷம் இருக்கும் எப்படியும் இங்க வந்து.. வரட்டுமே த்தை..”
“அங்க வீடு எடுத்து தங்குறேன் சொன்னதுக்கு, உங்க மாமா என்ன குதி குதிச்சாரு தெரியுமுள்ள உனக்கு…” என்று பேச,
அப்பொழுது அண்ணி என்று அழைத்துக்கொண்டே உள்ளே வந்தார், புவனேஸ்வரி. வீரபாண்டியனின் முதல் தங்கை.
“வாங்க அத்தாச்சி.. எப்படி இருக்கீங்க?.. வீட்ல அண்ணா, கார்த்தி எல்லாம் நல்லாருக்காங்களா?.. “
“வாங்க அம்மா.. இந்தாங்க தண்ணி குடிங்க..” என்று வரவேற்றாள் காவியா.
புவனேஸ்வரி,” வரேன் அண்ணி.. குடு காவியா என்று தண்ணியை வாங்கிக்கொண்டே, எல்லாரும் எப்படி இருக்கீங்க..” என்று நலம் விசாரித்தார்.
“எல்லாரும் நல்லாருக்கோம் அத்தாச்சி.. என்ன நீங்க மட்டும் வந்திருக்கீங்க.. அண்ணா வரலையா?.. கார்த்தி எப்போ அடுத்து ஊருக்கு வரான்னு சொன்னான்” என்று கேட்க,
அவங்களுக்கு வயல்ல வேலை அண்ணி.. அதான் நானே வந்துட்டேன்.. கார்த்திக்கு இப்போ லீவு இல்லயாம்.. அடுத்த மாசம் இருந்தா வரேன்னு சொல்லிருக்கான்.. உங்களுக்கு தான் தெரியுமே அண்ணி, இவங்க அப்பாக்கு தான் ஒரே பையன், நம்மளோட இருக்காம, இப்படி பக்கத்துல எங்கயும் வேலை செய்யாம வெளி ஊருல போயிட்டு வேலைக்கு போறான்னு கொஞ்சம் வருத்தம். வேற ஏதும் இல்ல அண்ணி.
“இப்போ தான அம்மா, வேலைக்கு சேர்ந்திருக்காங்க கார்த்தி.. இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு ட்ரான்ஸ்பர் கேட்டு பாக்கலாம்.. ஐ . டீ வேலைல கொஞ்ச சீக்கிரமா கிடைக்கும்” என்று காவியா சொன்னாள்.
“இவனும் அது தான் சொல்லறான்.. கொஞ்ச நாள் கழிச்சு கேக்குறேன்னு.. எப்போன்னு தெரில..”
“விடுங்க அத்தாச்சி.. சீக்கரம் கிடைக்கும்..”
“அண்ணன் மதிய சாப்பாட்டுக்கு வருவாங்களா அண்ணி.. என்ன சமையல்?..”
“ஒரு ரெண்டு மணி கணக்கா வருவாங்க.. இனிமேல் தான் செய்ய ஆரம்பிக்கணும் அத்தாச்சி.. சும்மா பேசிட்டே உக்காந்துட்டோம்…”
“சரி வாங்க… அப்படியே பேசிட்டே செய்யலாம்… உங்க அண்ணன்க்கு நான் மதியத்துக்கு செஞ்சி வச்சிட்டு, சொல்லிட்டு வந்துட்டேன்.”
“ஏன் அத்தாச்சி இங்க வர சொல்லிருக்கலாம்ல…”
“வெயில்ல அங்க இருந்து வரணும் அண்ணி… இன்னொரு நாள் பாத்துக்கலாம்…”
“நீங்க சொல்றதும் சரி தான் அத்தாச்சி… காவியா என்ன வேடிக்கை பாத்துட்டே நிக்குற… வெங்காயத்தை எடுத்து வா.. பேசிட்டே உரிப்போம்.. “
“நந்தாக்கு ஏதும் வரன் வந்துச்சா அண்ணி… அண்ணன் ஏதும் சொன்னாங்களா…”
“எங்க அத்தாச்சி.. உங்க அண்ணன் தான அப்படியே சொல்லிட்டு தான் செய்வாங்க.. நான் சொல்றது தான் நிப்பாங்க..எல்லாத்துக்கும் ஜாதகம், ஜோசியம் பாத்துட்டு தான் செயல்படுத்துவாங்க… இவன் அதுக்கு எதிர்த்து நிப்பான்…”
“அதே தான் அத்தாச்சி.. இவனுக்கு கல்யாணம் பண்றதுக்குள்ள என்ன ஆகப்போதுனு தெரில.. இதுல உங்க தங்கச்சி வேற என்னவோ, நான் சொல்லித்தான் அவங்க பொண்ண, உங்க அண்ணன் வேணாம் சொல்லிட்டாருனு என்கிட்ட பேசுறது இல்ல.. முன்னவே எனக்கும் அவங்களுக்கும் உங்க அளவுக்கு ஒத்துப்போகாது.. இதுல இப்படி வேற.. உங்க அண்ணனுக்கு வேற, அவங்க வீட்டுக்கு வர்றது இல்லனு வருத்தம்.. என்னத்த நான் சொல்றதுன்னு தெரில..”
“விடுங்க அத்தாச்சி.. எல்லாம் சரியாய் போகும்.. அவளுக்கு ரெண்டு பொண்ணுல ஒரு பொண்ணையாவது நந்தாக்கு கொடுக்கணும்னு ஆசை.. அதுனால அப்படி பேசுறா..”
“அதுக்கு நான் என்ன அத்தாச்சி பண்றது… அவன் பண்ணிக்க முடியாதுன்னு சொல்லிட்டான்… என் பையன்னுக்கு தானே நான் பாக்க முடியும்…”
“அதுவும் சரிதான் அண்ணி… உனக்கு பொண்ணு இல்ல… அதுனால உனக்கு நான் சொல்றது புரியாதுனு என்கிட்டே கூட சண்டை போட்டா… என்ன பண்றது விடுங்க..”
“அப்படினு இல்ல அத்தாச்சி.. உங்க அண்ணா, பெரியவளுக்கும் இவனுக்கும் ஜாதகம் பாத்து, அதுவும் ரெண்டு பேருக்கும் ஒத்துபோகல.. சரின்னு விட வேண்டியதுதானே.. முதல் பொண்ணுக்கு தான ஒத்து வரல, ரெண்டாவது பொண்ணோட ஜாதகத்தை எடுத்து வந்து பாக்க சொல்லறாங்க.. அதுக்கு உங்க அண்ணனும் அவங்க விருப்பத்துக்கு பாக்குறாங்க.. என் பையனுக்கு தான கல்யாணம் பண்ணப்போறாங்க.. நீங்களே சொல்லுங்க அத்தாச்சி.. இது சரியா?..”
“சரி வாங்க அண்ணி.. குழம்பு தாளிங்க..அண்ணன் வந்துட போறாங்க.. நம்ப பொறுமையா பேசலாம்.. காவியா எல்லாம் எடுத்துக் குடும்மா..”
“சரி ம்மா…”
“அத்தை நீங்க பேசுங்க.. நான் செய்யிறேன்..”
“நான் தாளிச்சிட்டு போறேன்… நீ பாத்துக்கோ… இந்த வெண்டைக்காய் பொரியல் பண்ணிடு..”
“சரித்தை…”
“இந்தா காவியா… அடுப்பை பாத்துக்கோ நீ…”
“வாங்க அத்தாச்சி… டீ குடிச்சிட்டே பேசலாம்…”
“சரி அண்ணி…”
“சொல்லுங்க அத்தாச்சி.. என் பையன பாத்தா இவங்களுக்கு எப்படி இருக்குனு தெரில.. அவன் வாழ்க்கையை போட்டு ஆளாளுக்கு பந்தாடுறாங்க.. இளையவ இப்போதான் காலேஜ் போகவே போறா.. அவளுக்கும் இவனுக்கும் பதினோரு வயசுக்கு மேல வித்தியாசம்.. இந்த காலத்துல இப்படிலாம் கல்யாணம் பண்றங்களா யாராச்சும்.. உங்க தங்கச்சி முதல்ல, இவளுக்கு கல்யாணம் பண்ணிவைனு நிக்குறாங்க.. உங்க அண்ணனும் இவன்ட, தங்கச்சி சொல்லுதுனு கேக்குறாங்க.. இதனால இவன் அவங்க அப்பா கூட சண்டை போட்டு, அங்கேயே ஒரு வீடு எடுத்து தங்கிட்டான். அவன் அங்க வீடு எடுத்து தங்குனதுக்கு அந்த பேச்சி அவனை.. என்ன தான் நான் பண்றதுனே தெரில..”
“வாஸ்த்தவம் தான் அண்ணி நீங்க சொல்றது..”
அந்த சண்டையில இருந்து அவன் இங்க வரவே இல்லை.. இப்ப தான் கொஞ்சம் உங்க அண்ணன் அடங்கி, வேற இடத்துல பொண்ணு பாக்க ஆரம்பிச்சார்.. அதுக்கும் உங்க தங்கச்சி வந்து என்னைய பேசிட்டு போச்சு.. அதுவும் இப்போ இந்த மனுஷன் டாக்டர் பொண்ணு தான் பாக்குவேன்னு நிக்கறாரு.. இவன் வேணாம்னு சொல்லறான்.. என்னமோ போங்க.. அவன் வாழ்க்கைய இவரு என்ன பண்ண போறாரோ..
அட அண்ணி எதுக்கு இப்படிலாம் பேசுறீங்க.. எல்லாம் நல்லதா நடக்கும்.. அண்ணி.. உங்க அண்ணா சொந்தத்துல இருந்து ஒரு வரன் வந்திருக்கு.. கும்பகோணத்துள்ள ஒரு கல்யாணத்துக்கு போயிருந்தோம்.. அப்போ அங்க பேசிட்டு இருந்தாங்க.. நந்தாக்கு நல்லா பொருத்தமா இருக்கும்னு நினைச்சி போட்டோ, ஜாதகம் வாங்கிட்டு வந்தேன்.. அண்ணா என்ன சொல்வாங்கனு தெரியாது. இருந்தாலும் உங்க கிட்ட ஒரு வார்த்தை சொல்லி வைக்கலாம்னு தான் இன்னைக்கு வந்தேன்..
“அப்படியா அத்தாச்சி.. பொண்ணு என்ன பண்ணுறா? டாக்டர் இல்லைல?..”
இல்லை அண்ணி.. வாத்தியார் வேல பாக்குது போல.. இருங்க காமிக்குறேன்,.. இவரு தங்கச்சி பொண்ணு தான் போட்டோ போன்ல ஏத்திக் குடுத்தா.. காவியா இங்க வந்து இந்த போன்ல அதை எடுத்து அண்ணிக்கு காமியேன்.. நம்ப செண்பகம் (புவனாவின் நாத்தனார்) தான் அவங்ககிட்ட பேசுனா அண்ணி.. இவருகிட்ட அண்ணா போட்டோ, ஜாதகம் குடுத்து வச்சதுனால, அவங்ககிட்ட அப்படியே குடுத்துட்டு வந்தோம்.
“இதோ வரேன் ம்மா..”
“எந்த ஊரு அத்தாச்சி..”
“பொண்ணு கோயம்பத்தூர்ல வேலை பாக்குது போல.. அவங்க சொந்த ஊரு மாயவரம் பக்கத்துல அண்ணி.. பொண்ணுகிட்ட பேசிட்டு சொல்றேன் சொன்னாங்க அவங்க வீட்டுல..”
“அவ பொண்ணுக்கும் பார்த்து குடுக்குறேன்னு சொல்ல வேண்டியது தான்..”
“உங்க அண்ணா வந்துட்டாங்க போல.. வண்டி சத்தம் கேக்குது.. வாங்க முன்னறைக்கு போலாம்..”
“போலாம் வாங்க..”
“வா மா.. எப்போ வந்த?.. மாப்புள வரல..?”
“கொஞ்சம் முன்னத் தான் ண்ணா.. அவங்களுக்கு வயல்ல வேலை .. நான் மட்டும் தான் வந்தேன்..”
“தம்பி எப்படி இருக்கான்.. ஒழுங்கா போனெல்லாம் பேசுறான்ல.. எப்போ வரானாம் ஊருக்கு?..”
“நல்லா இருக்கான் ண்ணா.. அடுத்த மாசம் லீவு இருந்தா வரப் பாக்குறேன் சொன்னான்..”
“நீ என்னடி பேசுறத வேடிக்க பாத்துட்டு நிக்குற.. போ போய் சாப்பாடு எடுத்து வை.. மனுஷன் பசியோட வருவான்னு தெரிய வேணாம்.. எல்லாம் சொல்லித் தொலையனும் உனக்கு..”
“இதோப் போறேங்க.. நீங்க கை அலம்பிட்டு வாங்க..” என்று முன்னே சென்றார்.
“அம்மாடி.. சின்னவன் வந்ததும், அவனைக் கொண்டி விடச் சொல்லு.. எனக்கு வேலைக் கிடக்கு.. நான் அப்பறம் வீட்டுக்கு வரேன்..”
“சரிங்க அண்ணா..”
அவர் சென்ற பிறகு, ” என்னைக்கு வேலை இல்லாம உங்க அண்ணாக்கு இருந்திருக்கு.. இன்னைக்கு இல்லாம இருக்குறதுக்கு…” என்றார் நொடிப்பாக. பின்பு, வாங்க அத்தாச்சி சப்புடலாம்.
“அண்ணன் வேலையைப் பத்தி தான் உங்களுக்கு தெரியுமே அண்ணி..”
“அதுசரி.. நான் ஏதும் சொல்லல வாங்க..”
“சரி வாங்க..சாப்பிடலாம்..”
பின்பு முன் மாலை வேளையில், “அண்ணி.. நான் கிளம்புறேன்.. சாயிந்தரம் டீ வைக்கணும் அவருக்கு.. மணி நாலாகப் போது.. சின்னவன் வர நேரமாகும் போல..”
“அத்தாச்சி இருங்க.. இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவான்..”
“அப்போ இருங்க, நான் அவருக்கு சொல்லுறேன்..”
சிறிது நேரம் கழித்து, “ம்மா…ஆஆ” என்று கூவிக் கொண்டே உள்ள நுழைய,
புவனேஸ்வரியை பார்த்து விட்டு, “ஹாய் பூனை அத்தை… எங்க இந்த பக்கம்?…” என்று விசாரிக்க,
அதற்குள் “சுரேஷ், என்ன பேச்சு இது.. ஒழுங்கா பேசு…” என்று கோமதி இடையீட,
“அத்தையே ஒன்னும் சொல்லல.. நீங்க போங்கம்மா..”
“விடுங்க அண்ணி.. அவன் அப்படித்தான் தெரியுமே எனக்கு.. ஏதும் சொல்லாதீங்க அவனை,,”
சுரேஷ், அவன் அம்மாவிற்கு பழிப்பு காமிக்க…
அதற்க்கு அவனை முறைத்து வைத்தார்.. நீங்க எதுவும் சொல்ல மாட்டீங்க அத்தாச்சி.. இவன் உங்க தங்கச்சீட்டையும் இப்படி தான் பேசுவான்.. அவங்க அப்படியே இவன் அப்பாகிட்ட சொல்லிட்டு போயிருவாங்க.. அவரு அதுக்கும் என்னையத் தான் பேசுவாரு.. என்ன புள்ளைய வளத்துருக்கனு.. அதுக்கு தான் சொன்னேன்.
“என்ன டா சின்னவனே, அவள்ட இனிமே அப்படி பேசாதே..”
“ஓகே.. கூல் பூனை அத்தை..”
“டேய்.. இப்போ தானே சொன்னேன்” என்று பல்லைக்கடிக்க,
“சின்ன வயசுலேருந்து இப்படி தான கூப்பிடுறேன், அப்பறம் என்ன ம்மா..”
“இப்போ நாலு கழுத வயசாகிட்டு.. ஒழுங்கா கூப்பிடு டா எரும..”
“சரி போதும் என்னைய திட்டுனது.. எங்க என் அண்ணி, அவங்க தான் எனக்கு பேசுவாங்க..”
“அவ இப்போதான் ரூம்க்கு போனா.. நீ அப்படியே அத்தையை அவங்க வீட்டுல விட்டுட்டு வந்துடு..”
“ஏன் அத்தை.. வீட்டுக்கு அதுக்குள்ளயே கிளம்புற?..”
“மாமா அங்க இருக்காங்க டா.. காலைல வந்தேன் நான்..”
“புருஷன விட்டுட்டு இருக்க முடியல.. சரி வாங்க போலாம்..”
“ஆமா டா..வா போலாம்.. சரிங்க அண்ணி.. நான் அப்பறம் வரேன்.. காவியாட்ட சொல்லிடுங்க.. அண்ணன் வந்தா இவன் கூட தான் போனேனு சொல்லிடுங்க.. இல்லைனா உங்கள ஏதாவது சொல்லப்போறாங்க..”
“ஓஹ்.. விருமாண்டி முன்னவே ஆர்டர் போட்டுட்டு தான் போயிருக்கார் போல..”
“டேய்.. எங்க அண்ணன் டா அவரு..”
“ம்க்கும்.. பெரிய நொண்ணன் தான்.. எப்ப பாரு முறுக்கு மீசையை வச்சிக்கிட்டு எல்லாரையும் உருட்ட வேண்டியது தான் அவரோட வேலை..”
அவனைப் போக விடாமல் பிடித்துக்கொண்டு, நீ கல்யாணம் ஆகிட்டுனு வந்து சொன்னாலும் சொல்லுவ.. அந்த பொண்ணை பத்தி தெரிஞ்சிச்சா.. எப்படி கண்டுபிடிச்ச?.. முதல்ல சொல்லு.. அப்பறம் போலாம்..”
“வேற எப்படி வண்டி நம்பரை வச்சி தான்… போதுமா டீடெயில்ஸ்..?”
என்னடா….ஆ! எனக்கு நெஞ்சு வலி வர வச்சிடாதடா.. பொண்ணு ஓகே சொல்லிடுச்சா?..”
“அதுக்குள்ள எனக்கு வயசாகிடும்.. அதுனால கல்யாணம் பண்ணிட்டு லவ் சொல்லிக்கலாம்..”
“இதுலாம் ரொம்ப ஓவர் ஸ்பீட் ஆஹ் இருக்கே… முடியல டா என்னால..”
“சரி… அப்போ நீயே அப்படியே போயிட்டு ஒரு பெட்ல படுத்துக்கோ.. நான் கிளம்புறேன்.. “
” டேய் டேய்.. நில்லுடா.. உங்க வீட்ல முடியாது சொல்லிட்டாங்கனா..”
“எல்லாம் பிளான் போட்டாச்சு.. அதனால நீ ரொம்ப கேள்வி கேக்காத.. நீங்க உங்க வேலைய பாருங்க.. நான் கிளம்புறேன்..”
“வெயிட் வெயிட்.. கடைசியா ஒரு கேள்வி.. அந்த பொண்ணுக்கு ஓகே இல்லனா என்ன பண்ணுவ..”
“அவனை மேல இருந்து கீழே பார்த்தவாறே, கொஞ்ச நேரத்துக்கு முன்ன சொன்னாலே, அதை உண்மை ஆக்கிடுவேன்..”
“என்ன சொன்னேன்..” என்று யோசிக்க,
“அதான் அந்த நெஞ்சு வலி..” என்று இவன் கூற,
“கிரதகா.. நீ எல்லாம் மனுசனாடா.. பதில் சொல்லு டா..”
“என் காதல் மேல நம்பிக்கை இருக்கு டா.. அது அவளையும் என்னுடன் வந்து சேர்க்கும்.. உனக்குலாம் புரியாது அங்கிள்.. போயிட்டு காவி வேஷ்டி கட்டிக்கோ.. அது தான் உனக்கு சேரும்..”
“நான்… நான்… அங்கிள் ஆஹ் உனக்கு.. உன்னோட ஒரு வருஷம் தான் டா மூத்தவன்..”
“முப்பது வயசுக்கு மேல போனா நீங்க அங்கிள் தான் அங்கிள்.. உங்கிட்ட வெட்டியா பேச எனக்கு நேரம் இல்லை.. ஐயம் சாரி.. என்னோட டியூட்டியை உங்கள ஷேர் பண்ணிக்க டீன் சொல்லிட்டாரு.. பாத்துக்கோங்க.. வரட்டா…ஆஆ”
“உனக்கு மட்டும் நீ கேக்காமயே லீவு கொடுப்பாரு டா அந்த டீன்னு..”
“அவர்கிட்ட இதை சொல்லிடுறேன்…” என்று கூறி வெளியேறினான்.
இரவு மணி பதினொன்று, பேருந்தில் தன் இருக்கையில் அமர்ந்துக் கொண்டு, தன்னவளுடைய போட்டோவை பார்த்து, “வேண்டிக்கோ எனக்கும் சேர்த்து.. சீக்கரம் நீ என்கிட்ட வரணும்னு.. விரைவில் சந்திப்போம்…” என்று கூறிவிட்டு போனை அணைத்துவிட்டு கண்ணை மூடி உறங்க ஆரம்பித்தான்.
அரவிந்த் சொன்னது போல், இங்கே அவந்தி டாக்டர் மாப்பிளையெல்லாம் வேண்டாம் என்று, நந்தாவின் தலையில் இடியை இறக்கினாள்.