“என்ன கேட்கல? அப்படி என்ன கேட்காம இருந்தேனாம்? சொன்னாத்தான தெரியும்?…”
“ஏன் உனக்கு தெரியாதா? உன்கிட்ட எத்தனை தடவை சொல்லியிருக்கேன் தனியா எங்கயும் போக வேண்டாம்ன்னு. அன்னைக்கு ரோடு ரோடா நாயா அலைஞ்சது நான் தானே?…” என கோபத்துடன் அவன் சொல்ல,
“எங்க? என்னிக்கு?…” என்றாள் புரியாமல்.
“சுத்தம். ஒன்னும் கேட்க வேண்டாம் போ…”
“சொல்லுங்க அத்தான். கேட்கறேன்ல…”
“உன்னை யார் கடைக்கு தனியா போய்ட்டு வர சொன்னா? கடைக்கு சாமான் வாங்க போறேன்னு நாலு வரில ஒரு மெசேஜ். என்னன்னு பார்த்து வீட்டுக்கு வீடு பூட்டியிருக்கு. அங்கங்க மலைக்கு நிலச்சரிவு. என்னபாடு பட்டுட்டேன் தெரியுமா?…” என்று சொல்ல,
“சத்தியமா இப்படி ஆவும்ன்னு தெரியாதுத்தான். வந்துறலாம்னு தான் போனேன். அதுக்குள்ளே மழையும் அதிகமாகி. இனி இப்படி பண்ணவே மாட்டேன்…”
“எத்தனை தடவ இதையே சொல்லுவ? ஒன்னும் தேவை இல்லை. என்னை டென்ஷன் பண்ணாத…” என்று கோபத்துடன் அவன் எழுந்து செல்ல மாலை வரை அவனுடன் தாஜா செய்துகொண்டே வந்தவளை பார்க்க சிரிப்பு வந்தாலும் முகத்தை இறுக்கமாகவே வைத்துக்கொண்டான்.
“இப்ப ஊருக்கு வருவீங்களா மாட்டீங்களா? அத சொல்லுங்க. நமக்கு கல்யாணம் ஆகி மொத திருவிழா. எம்புட்டு ஆசையா இருந்தேன்…” என்று மூக்கை உறிஞ்ச,
“கண்ணீரே வரலை. நடிக்காத வாசு…” என்றான் கிண்டலுடன்.
“வராட்டி போவுது. ஆனா எனக்கு மனசு பிசையுது. அதான் சொல்லிட்டேனே. இனி தனியா எங்கயும் போவ மாட்டேன்னு…” என,
“நீ தாராளமா போய்க்கோ. போகமாட்டேன்னு செய்யமாட்டேன்னு தான் எல்லாம் பண்ணி வைப்ப என் டென்ஷனை ஏத்தறதுக்குன்னே. உன்கிட்ட பேசறதே வேஸ்ட்…” என்று சொல்லிவிட்டு சென்று படுத்துவிட அதற்கு மேல் கெஞ்ச அவளுக்கு மனதில்லை.
“போங்க. ஒன்னும் சொல்ல வேண்டாம் போங்க…” என்றவள் பின்னோடு வந்து தானும் படுத்துக்கொள்ள தன்னால் முடிந்தமட்டும் அவனின் தூக்கத்தை கெடுக்க பார்த்தாள்.
“பேசாம தூங்கு, இல்லன்னா எந்திச்சு ஸ்டேஷனுக்கு போய்டுவேன்…” என்ற மிரட்டலில் அசையாமல் படுத்துக்கொள்ள ரொம்ப செய்கிறோமோ என்று மனதிற்குள் நினைத்தவன் இதுதான் சரி என்றும் தேற்றிக்கொண்டான்.
மறுநாள் காலை உணவு அமைதியாகவே கழிய வாசு எதுவாவது பேசுவாள் என்று பார்க்க சுத்தமாக வாயே திறக்கவில்லை அவள்.
‘மௌனவிரதாமோ? பார்ப்போம்’ என சிரித்துக்கொண்டவன் கிளம்பும் முன்,
“எங்க வேணா போய்க்கோ. போறதுக்கு முன்னாடி என்கிட்டே இங்க போறேன்னு போன்ல சொல்லிட்டு. இந்த மெசேஜ் எல்லாம் பண்ணிட்டிருந்த அவ்வளோ தான்…” என்றுவிட்டே அவன் கிளம்ப ரோஷமாய் சென்று பெட்டியில் துணிகளை எடுத்து அடுக்க ஆரம்பித்தாள் வாசமல்லி.
இதற்கிடையில் வீட்டையும் சுத்தம் செய்து மதியத்திற்கு சமைத்துவைத்துவிட்டு எல்லாம் டேபிளில் எடுத்து அடுக்கியவள் குளிக்கத்துவிட்டு வந்தாள்.
“இதுக்கு மேல மனுசி இருப்பாளா? அம்புட்டுக்கா நான் போயிட்டேன். தனியா போவாமல. போய்த்தான் பாக்கறேன். வான்னாலும் வரமாட்டேன். கிடந்து பொலம்பட்டும்…”
அவள் தான் வாய்விட்டு புலம்பியபடி எடுத்து வைத்து உடை மாற்றி என தயாரானவள் அவனுக்கு அழைக்கவா வேண்டாமா என்று யோசித்து சரி பேசித்தான் பார்ப்போம் என்று அவனுக்கு போனை போட்டாள்.
அப்போதுதான் ஸ்டேஷன் சென்று இருந்தவன் அவளின் அழைப்பை பார்த்ததும் எழுந்து வெளியே வந்து நின்றான்.
“என்ன?…” என,
“என்ன என்ன? பேரு கூட மறந்து போச்சோ? இருக்கட்டும். அப்படியே இருக்கட்டும்…” என்று இவள் பேச,
“இதை கேட்க தான் கால் பண்ணுனியா நீ?…”
“வேணா சாமி. என்னோட பேசி நேரத்த வீணாக்க வேணா. போயி துப்பாக்கில எத்தன குண்டுன்னு எண்ணுங்க…”
“ப்ச், உனக்கு என்னதான் பிரச்சனை வாசு? சம்பந்தம் இல்லாம பேசிட்டு இருக்க…”
“என்னோட பேசினாலே பிரச்சனை தான். அதான் போகலாம்ன்னு…”
“என்ன போகலாம்ன்னு?…”
“உங்கட்ட சொல்லிட்டு ஊருக்கு போகலாம்ன்னு இருக்கேன். நீங்க தான சொல்ல சொன்னீங்க. அதான் சொல்லிட்டே போறேன்…” என்றாள் வீராப்பாய்.
அவளின் பேச்சில் வாய்வரை வந்த சிரிப்பை அடக்கியவன் ‘தமாசு, தமாசு’ என நினைத்தபடி,
“எப்படி போவ?…”
“போறேன். ஊருக்குள்ள பஸ்ஸா இல்ல? அதுல போவேன்…”
“நீ? பஸ்ல…” இப்போது உண்மைக்கும் கோபம் வந்துவிட,
“ஏன்? நான் போவேன். கிளம்பறேன். சொல்லிட்டு போக சொன்னீங்க, சொல்லிட்டேன்…” என்று வீம்புக்கு அவனுடன் மல்லுக்கு நின்றாள்.
“சரி கிளம்பு…” என்றுவிட்டான்.
“என்ன?…” என்றாள் இப்போது வாசமல்லி.
“என்ன என்ன? அதான் கிளம்பறேன்னு சொல்லிட்ட தானே? கிளம்புன்னு சொன்னேன்…” என்று சொல்லி போனை வைத்துவிட கையில் இருந்த மொபைலில் தெரிந்த ஷ்ரவனின் உருவத்தையே வெறிக்க வெறிக்க பார்த்தவள்,
“போறேன்னா உடனே சரின்னுட்டாங்க. எப்ப எப்பன்னு இருந்திருப்பாங்களோ?…” என்று கடுகடுவென கருவி அவனை அத்தனை திட்டு திட்டிக்கொண்டு இருந்தாள்.
எப்படியும் போயிருக்கமாட்டாள் என்று தெரிந்தவன் வேலைகள் எல்லாம் முடித்துக்கொண்டு இரண்டு நாள் விடுமுறை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்துசேர அவன் நினைத்ததை போலவே வாசமல்லி பின்பக்கம் இருந்தாள்.
பெட்டி எல்லாம் தயாராக இருக்க பார்த்ததும் பக்கென்று ஆனது. கொஞ்சம் விட்டால் கிளம்பியிருப்பாளோ? என்ற யோசனையுடன் அதனை திறந்து பார்க்க அவனுக்குமான உடைகளை எடுத்துவைத்தபடி தான் கிளம்பியிருந்தாள் வாசமல்லி.
“இதுக்குத்தான்டி உன்னை தனியா விடமுடியல…” என்று குதூகலத்துடன் பின்பக்கம் வந்து பார்க்க அழகுவிடம் வாயடித்துக்கொண்டு இருந்தாள் அவள்.
“ஒருபக்கம் மனசு கேட்க மாட்டிக்குதேக்கா. அப்பவே போயிருப்பேன். ஊர்ல இருந்து நீங்க வரவும் பேசிட்டே இருந்துட்டேனா. இப்ப கிளம்பனும். அத்தான் வரதுக்குள்ள நான் ஊருக்கு போய் காமிக்கல. என்னவோ இவரோட போனாதான் ஊருக்குள்ள வழி தெரியுன்ற மாதிரி…”
இப்படி புலம்பியபடி திரும்ப அங்கே ஷ்ரவன் இவளை பார்த்து முறைத்துக்கொண்டே நின்றிருந்தான்.
“தம்பி வந்திருச்சு, நான் கிளம்பறேன் கண்ணு…” என்று ஓடிவிட்டார் அழகு.
“வாய் குறையாதா வாசு உனக்கு? எவ்வளவு பேசற…” என்று அவளின் அருகில் வந்து இதழ்களை பிடித்து இழுத்து வலிக்க சுண்டியவன்,
“வா சாப்பிடலாம்…” என்றதும் முன்னே நடந்தாள்.
அவனுக்கு வைத்துவிட்டு சாப்பிட்டு முடித்ததும் அதை எல்லாம் சுத்தம் செய்தவள் கையை துடைத்துவிட்டு ஒரு ஸ்வெட்டரை எடுத்து போட்டுக்கொண்டு பெட்டியை தூக்கினாள்.
“நான் கிளம்பறேன்…” என்று நிற்க,
“இப்போவா?…”
“ஆமா, அப்பவே போயிருந்திருப்பேன். அழகு அக்கா வந்துட்டாங்க. அதான் பேசிட்டு கிளம்ப நேரமாச்சு…”
“ஓஹ்,
“எப்போ வரதா மேடம் ப்ளான் பண்ணியிருக்கீங்க?…”
“அது தெரியலை…” என்று அவனின் பார்வையை வைத்தே வாசலுக்கருகே சென்று முன்னெச்சரிகையாக சென்று நின்றுகொண்டாள்.
“அப்போ திரும்பி வரனும்னா நான் உன்கிட்ட கேட்கனும். உன்னை கூப்பிடனும். இல்ல…”
“நான் ஒன்னும் அப்படி சொல்லலை. கிளம்பறேன்…”
“சரி போ. பை…” என,
“ஹ்ம்ம், சரி…” என முனங்கிக்கொண்டு திரும்ப,
“அநியாயம் பன்ற வாசு…” என்றான் அவளை கண்டு சிரித்தபடி.
“நான் ஊருக்கு போறது அநியாயமா?…”
“சரி வா, நானும் வரேன். ஆனா கொஞ்சம் டைம் குடு…”
“ஒன்னும் வேண்டாம். நானே போய்ப்பேன்…”
“ப்ச், சொல்றேன்ல. வாசல்ல நின்னுட்டு. உள்ள வா வாசு…”
“மாட்டேன். அவ்வளவு பேசறீங்க…”
“சரி, பேசலை. உள்ள வா. எவனாச்சும் பார்த்தா என்ன நினைப்பான்? வா சேர்ந்தே போவோம். புரிஞ்சுக்கடி….” என்றான் குழைவான குரலில்.
“எல்லாம் புரிஞ்சு போச்சு. அதான் நிக்கறேன். இல்லன்னா இன்னைக்கு கிளம்பின மாதிரித்தான்….” என்றாள் அவனின் கள்ளத்தனத்தை கண்டுகொண்டவளாய்.
“சொல்லிட்டே இருக்கேன்…” என்றவன் கணநேர பொழுதில் அவளை உள்ளிழுத்து கதவை சாற்றிவிட்டு கைகளில் தூக்கிக்கொண்டான்.
“நல்லா வெய்ட் போட்டுட்ட கொஞ்சம் நாளா? அதான் கொலஸ்ட்ரால் கூடிருச்சு…” என்று கட்டிலில் இறக்கியவன் அவள் இறங்கி ஓடும் முன்னர் சிறைபிடித்திருந்தான்.
“என்கிட்டையே ஆட்டம் காட்டுற நீ. உன்னை சும்மா விட்டா நான் என்னாகறது?…” என்று அவளின் மூக்கை பிடித்து ஆட்டியவன்,
“ஏன் சொல்றேன்னு புரியவே மாட்டியா ஆர்வம்?…”
“புரிஞ்சு நானும் தப்புன்னு சொல்லியும், இத்தன நாளா பேசுனீங்களா நீங்க? எனக்கு எப்படி இருந்திருக்கும்?…”
“எப்படி இருந்துச்சு? கஷ்டமா இருந்துச்சா? அந்த கொஞ்சம் நேரத்துல எனக்கும் இதைவிட கஷ்டமா இருந்துச்சு. அதை பேசலாம்ன்னா வெந்நீர்ன்ற, குளிருது, கட்டகாப்பின்ற. கோவம் வருமா வராதா?…”
“ம்ம்ம்ம்…”
“என்ன ம்ம்ம்? முனங்கற…” என்றவனின் கைகளை தடுத்தவள், அவனின் முகத்தையும் நிமிர்த்தி,
“கோவிலுக்கு போகனும்த்தான்…” என்று சின்ன குரலில் சொல்ல,
“கோவிலுக்கு போகனும்னா இதெல்லாம் கூடாதுன்னு இருக்கா என்ன? கொஞ்சம் நேரம் பேசாம இரு…”
“அத்தான்…”
“ஹ்ம்ம், இதை மட்டும் வேணா சொல்லிக்கோ. வெரைட்டி அத்தான்ஸ்…” என்றவனின் சில்மிஷ பேச்சில் முகம் சிவந்தவள்,
“ஜன்னல் திரைய இழுத்து விடுங்கத்தான் ப்ளீஸ்…”
“எதுக்கு? நான் நகர்ந்ததும் எந்திச்சு வாசலுக்கு ஓடறதுக்கா?…”
“என்னை பார்த்தா வாசல்ல போய் நிக்கற மாதிரியா இருக்குது? லூசு அத்தான்…” என்று அவனின் தலையில் லேசாய் குட்ட சிரித்தபடி ஸ்க்ரீனை இழுத்துவிட்டு அறையை இருட்டாக்கினான்.
“இப்போ ஓகே தானே? இன்னும் எதாச்சும்?…”
“ஊருக்கு எப்ப போக?…”
“சந்தைக்கு போகவும், காசுக்குடு மாடுலேஷன்ல அப்படியே இருக்குடி…” என்று குலுங்கி சிரிக்க,
“ப்ச், இன்னைக்கே சங்கரண்ணே ஆதவ் கூட வராங்க. எல்லாரும் வந்துருவாங்க…”
“ஹ்ம்ம் தெரியும்…”
“நாமளும் போவோம். நைட்ல மொளப்பாரி ஊர்வலம் எல்லாம் நடக்கும். பாக்கவே அம்சமா இருக்கும்…” என்று அவள் வாய் ஓயாமல் பேசிக்கொண்டே இருந்தவள்,
“அத்தான் பாருங்க என்னை…”
“இரு ஸ்க்ரீனை எடுத்துடறேன்…” என்று எழ போக எங்கே செய்துவிடுவானோ என்று அவனை இழுக்க அவளின் மேலேயே விழுந்தான்.
“போகாதன்னா சரிங்க போறேன். எதுக்குடி புடிச்சு இழுக்கற?…” என்று மீசையால் அவளை உரச,
“ப்ச், அத்தான், சங்கரண்ணா வராங்க. நான் இந்தாட்டமாச்சும் எதாச்சும் நல்லசேதி கிடைக்குமான்னு யோசிக்கறேன்…”
“ரொம்ப யோசிக்காத. நம்மளையும் கொஞ்சம் யோசிடி. கல்யாணம் ஆகி எட்டு மாசம் ஆச்சு. இன்னும் நாமளும் நல்ல செய்தி சொல்லலை…”
“எல்லாம் உங்களால. ஒருவருஷம் போவட்டும்ன்னு சொன்னது நீங்க தான. என்னைய பேசறேங்க. அத்த கேட்கட்டும். நானே சொல்லிடறேன் இந்தவாட்டி…” என்று அவனை மிரட்ட,
“செஞ்சாலும் செய்வ. இப்ப என்ன? இந்த தடவை கண்டிப்பா நல்லது நடக்கும். அதுக்கு நான் ஒரு ப்ளான் வச்சிருக்கேன்…”
“எனக்கு சொல்லலை…”
“இப்ப சொல்ல முடியாது. இப்ப சொல்லவே முடியாது. ஒன்னே ஒன்னு மட்டும் சொல்றேன். இன்னைக்கு ஈவ்னிங் நாம கிளம்பிருவோம். லீவ் எல்லாம் போட்டுட்டு தான் வந்திருக்கேன்…”
“இதையும் சொல்லலை நீங்க…”
“ப்ச், அதான் இப்ப சொல்லிட்டேன்ல. முதல்ல நீ என்னை பாரு…” என்றவன் அவளை வாயடைக்க முயன்றாலும் வாசு பேச்சை நிறுத்தவே இல்லை.
அவன் பேசாதிருந்த அந்த நாட்களில் என்னவெல்லாம் செய்தான் என்று குறை சொல்லிக்கொண்டே இருக்க அவனோ கேட்டுக்கொண்டே கொஞ்சம் கொஞ்சமாய் அவளின் பேச்சை குறைத்து மௌனமொழியை கற்றுத்தந்தான்.
சாதி மல்லி பூச்சரமே சங்கத்தமிழ் பாச்சரமே
ஆசை என்ன ஆசையடி அவ்வளவு ஆசையடி
எங்கெங்கே முன்னே வந்து கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ