பூ – 4
அங்கிருந்த இரண்டு நாட்களும் ஷ்ரவனுக்கு தண்ணிக்காட்டிக்கொண்டே இருந்தாள் வாசமல்லி.
வந்த மறுநாளே வாசமல்லி சொல்லியபடி அய்யனாருக்கு வேண்டுதலை நிறைவேற்றி இருந்தாள்.
அத்தனை தேங்காயையும் யாரையும் உடைக்க விடாமல் தன் கையாலே உடைத்து போட ஷ்ரவன் மிரண்டு தான் நின்றான் அவளின் அன்பில்.
அதன் பின்பும் ‘கிளம்பு’ என்றால் இதோ அதோ என்று போக்குக்காட்ட பொறுமை இழந்து போனான் அவன்.
சங்கரிடமும் சொல்லி பார்த்தான். ஊருக்கு கிளம்ப வேண்டும் என்று. அவனும் சரி என்று சொல்ல வாசமல்லியும் கிளம்ப ஆயத்தமானாள்.
வீட்டிற்கு வந்து மதிய உணவை முடித்துக்கொண்டு கிளம்புவோம் என்றதற்கும் சரி என்றவள் அதன் பின்னர் கண்ணிலேயே படவில்லை.
மாலை கவிழ இன்னும் சிறிது நேரமே இருக்க இனி அவளை எதிர்பார்க்க கூடாதென தானே அனைத்தையும் பேக் செய்து முடித்தவன் அனைத்தையும் காரில் கொண்டு சென்று வைத்துவிட்டு வர,
“என்ன ஷ்ரவன் நீயே எல்லாம் பண்ணிட்டியா?…” என்று வந்தாள் அபர்னிதா. அவளை முறைத்துவிட்டு,
“உன் நாத்தனார் வராளா இல்லையான்னு பைனலா கேளு. நான் கிளம்பிட்டே இருக்கேன். தாலி கட்டிட்டோமேன்னு கூட்டிட்டு போக நினைச்சா ரொம்பத்தான் பன்றா. எல்லாரும் என்னை என்னன்னு நினைச்சீங்க. பொம்மையா நான்?…” என்று அவளிடம் எகிற,
“ஷ்ரவா என்ன பேச்சு இது? மல்லியை விட்டுட்டு இருந்துடுவியா நீ?…”
“பார்ரா? ஏன் இருக்க முடியாதா? இப்ப இந்த கொஞ்சம் நாலா தானே அவளை எனக்கு தெரியும். அதுக்கு முன்னாடி யாரோ தானே? இப்பவும் அப்படியே இருக்கனும்னா…” என சொல்லிக்கொண்டிருக்க,
“அத்தான் கிளம்பிட்டோமா?…” என்று வேகமாய் வந்து சேர்ந்தாள் வாசமல்லி.
மூச்சு வாங்க வந்து நின்றவள் கையில் வைத்திருந்த பூஜை பையையும், அவளின் நனைந்திருந்த உடையையும் பார்த்தவன் மற்றதெல்லாம் மறந்து,
“வாசு ஏன் இப்படி நனைஞ்சு போய் இருக்க?…” என கேட்க அவனின் பின்னால் இருந்த அபர்னிதாவை பார்த்த வாசமல்லி,
“அது வந்து அத்தான்…” என்று ஆரம்பித்து தொண்டையை செருமிக்கொண்டு.
“வேண்டுதல் அத்தான். அங்கப்ரதத்சனம் பன்றதா வேண்டிருந்தேன்…” என சொல்ல ஷ்ரவனின் முறைப்பில்,
“தரையில ரோலிங். அதான் அங்கப்ரதட்சனம். பிரசாதம். விபூதி, குங்குமம்…” என்று நீட்டியவள் பின் அவளே எடுத்து அவனின் நெற்றியில் வைத்துவிட்டு ஊதிவிட கண்மூடி நின்றான் ஷ்ரவன்.
சற்றுமுன் அபர்னிதாவிடம் அத்தனை கோபப்பட்டவன் வாசமல்லியின் அருகாமையில் அதனை செய்யமுடியாமல் நிற்க,
“ஷ்ரவா கிளம்பனும்னு சொன்ன? போகலையா?…” என்றாள் அபர்னிதா அவனை சீண்டும் விதமாய்.
“மதினி அதெப்பிடி என்னைய விட்டுட்டு அத்தான் போவாங்க. மீ கூட அத்தானோட கோயிங்…” என்றவள்,
“நான் போய் இதை சாமி ரூம்ல வச்சுட்டு வரேன் அத்தான் போவோம்…” என்றவளின் கை பிடித்து நிறுத்தியவன்,
“ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வா…” என்று சொல்ல வேகமாய் தலையாட்டியபடி துள்ளிக்குதித்துக்கொண்டு சென்றாள் வாசமல்லி.
“வேண்டுதல் உனக்காக தான். உன்னை கல்யாணம் பண்ணிட்ட சந்தோஷத்துல சாமிக்கு நன்றி சொல்லிட்டு வந்திருக்கா…”
“ப்ச், நீ சும்மா இரு அபி…” என்று காரில் சாய்ந்து நிற்க,
“உண்மையை ஒத்துக்கோ ஷ்ரவா. கல்யாணம் நடந்த விதம் வேணும்னா உனக்கு பிடிக்காம இருக்கலாம். ஆனா மல்லியை பிடிக்காம இல்லையே. அதுக்கு சாட்சி இதோ இப்போ கூட அவ வர வரைக்கும் அத்தனை எகிறிட்டு இருந்து இப்போ அவளை பார்த்ததும் புடவையை மாத்திட்டு வான்னு சொல்ற…”
“இதெல்லாம் உனக்கு அப்படி தோணுதா? ஓகே உன் லைனுக்கே வரேன். கல்யாணம் எனக்கு பிடிக்கலை தான். ஆனா தாலின்னு ஒன்னு கட்டி அவளை என் மனைவியா ஊரறிய ஏத்துக்கிட்ட பின்னாடி அவளோட ரெஸ்பான்ஸிபிலிட்டி மொத்தமும் எனக்கானது தானே? அதுதான்…”
“இல்லையே அதுக்கும் மேல நீ அவளை தாங்கற. எனக்கு தெரியுதே…”
“பின்ன? ஜம்பமா ஊருக்கு முன்ன தாலியை பொண்டாட்டியை பார்த்துக்க துப்பில்லைன்னு சொல்லிற கூடாது பாரு. அதான் அவளை பார்த்துட்டு இருக்கேன்…” என்றவன் வாசமல்லி அங்குமிங்குமாய் வீட்டிற்குள் சுற்றுவதை பார்த்தபடி நின்றான்.
“இதை தான் உனக்கு அவளை பிடிக்கும்னு சொன்னேன்…”
“அதை நீ முடிவு பண்ணாத அபி. முதல்ல இப்படி பேசறதை நிறுத்து. அவளுக்கு அது பிடிக்கும், இது பிடிக்கும்ன்னு சொல்லிக்குடுக்கறதை நிறுத்து. தப்பு பன்ற நீ. அதை நினைச்சு அவ பன்றதெல்லாம். வேண்டாம். விடு…” என்றான் அவளிடம்.
“இது உன்னையே நீ ஏமாத்திக்கறது. ஒத்துக்க உன்னோட ஈகோ இடம் கொடுக்கலை. இந்த ஈகோவால அவளோட மனசை காயப்படுத்தாம இரு. கஷ்டம்னா என்னன்னே தெரியாம வளர்ந்த பொண்ணு. அழுதது கூட கிடையாது…”
“அப்ப எப்படி என்கிட்டே கண்ணீருல கரைஞ்சே உருகிட்டு இருக்கான்னு பீலா விட்டீங்க?…” என்று கேட்க திணறி போனாள் அபர்னிதா.
“நல்லா திருதிருன்னு முழி. இது ஒண்ணுதான் தெரியும். நீ இதை பன்றதுக்கு உன் புருஷனை மாத்த ட்ரை பண்ணேன்…” என சொல்லிவிட்டு வீட்டிற்குள் செல்ல அங்கே அவன் பார்த்த காட்சியில் வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு சத்தமின்றி நின்றான்.
“அங்க போயி நேராநேரத்துக்கு சாப்பிடுடா. சமத்த இரு. மாப்பிள்ளைய பத்திரமா பார்த்துக்கோ. அம்மாக்கிட்ட போன்ல சொல்லிடு…” என்று சித்ரா கண்ணீரோ கண்ணீர் சொரிந்துகொண்டு இருக்க தனது புடவை தலைப்பால் அதை துடைத்துவிட்டுக்கொண்டே சிரித்தபடி இருந்தாள் வாசமல்லி.
“இந்தா இருக்கற ஊட்டி. சர்ர்ருன்னு மலை ஏறினா என்னை பாத்துடலாம். நான் எங்க போக போறேன்? அத்தானோட தான. அவங்க பத்தரமா பார்த்துப்பாங்கம்மா. அழாம இருங்களேன்…” என சிரித்துக்கொண்டே சொல்ல பத்மநாபன் அதற்கு மேல் குலுங்கிக்கொண்டு இருந்தார்.
சற்று தள்ளி சங்கர் நிற்க அவனோ இது எப்போ முடியும் என்பதை போல பார்த்தபடி இருந்தவன்,
“பொட்டப்புள்ள அவளே அவ்வளவு தைரியமா சிரிச்ச முகமா இருக்கா. இப்ப என்ன ஆச்சுன்னு இந்த அழுகை அழறீங்க?…” என்று அவன் சத்தம் போட,
“அதானே அண்ணனே சொல்லிடுச்சு. சும்மா இருங்களேன். நான் அங்க போய் நல்லா இருப்பேன். என்னைய நினச்சு அழுதுட்டே இருக்க கூடாது. எங்க சிரிங்க. இங்க பாருங்க நான் எப்படி சிரிக்கறேன்னு…” என்று சமாதனம் சொல்லியவளின் முகத்தில் சிறு கலக்கமும் இல்லை.
“அத்தான் என்னை பார்த்துப்பாங்கம்மா…” என சொல்லி சொல்லி அவள் பேச ஷ்ரவனுக்கு அங்கே நிற்கவே சிரமமாய் இருந்தது. அப்போதும் பெற்றோர்கள் அழுகையை குறைக்காமல் இருக்க,
“இப்படி அழுதழுதுதான் என்னை அனுப்பி வைப்பீங்களோ? அங்க போயி எனக்கு ஒரு நிம்மதியா இருக்குமா? என்னம்மா இது?…” என்று அவள் சொல்லவும் படக்கென்று அழுகையை நிறுத்தியவர்கள் உடனே அவளை பூஜை அறைக்கு அழைத்து சென்று விபூதி பூசி ஆசிர்வதிக்க வேகமாய் ஷ்ரவனும் சென்று அவர்களின் காலில் விழுந்து எழுந்தான்.
அதுவரை பார்வையாளனாய் நின்று பார்த்துக்கொண்டிருந்தவன் அதற்கு மேலும் ஒதுங்கி இருக்க முடியாது சென்று ஆசீர்வாதம் வாங்கிக்கொள்ள பெற்றோர்களுக்கு நிறைந்து போனது மனது.
“நீங்க முன்னாடியே கிளம்புங்க. நாளைக்கு சங்கரோட சீர்வரிசைகளோட நாங்க வரோம்…” என சித்ரா சொல்ல,
“அதெல்லாம் எதுக்கு?…” என்றவனை இடைமறித்தவள்,
“ம்மா, துட்டுப்பான குடுக்க மறந்துடாத. அதுலதான் பொங்கல் வைக்கனும். அங்க போனது பால் காய்ச்ச ஒரு பானை கேட்டிருந்தேன்ல. அத வாங்கிட்டியா?…” என வாசமல்லி வரிசைப்படுத்த ஷ்ரவன் கடுப்புடன் பார்த்தான்.
“இப்ப எதுக்கு இத்தனையையும் கேட்டுட்டு நிக்கற நீ?…” என கேட்க,
“சமையல் அத்தான். சமையல் வைக்கனும்ல சாப்பிடறதுக்கு…” என அவனுக்கு விளக்கம் சொல்ல அவளை முறைத்தவன்,
“அதெல்லாம் வேண்டாம் அத்தை. சும்மா பாத்திரபண்டங்களை தூக்கி சுமந்துட்டு இருக்க முடியாது. ட்ரெஸ் மட்டும் போதும். மத்த எல்லாமே ஊட்டில இருக்குது…”
“இல்ல தம்பி ஒரு முறை…”
“வேண்டாம்னு சொன்னாவிடுங்களேன் அத்தை…” என்றவன் சங்கரை பார்க்க,
“அம்மா இப்ப ஒன்னும் பேச வேண்டாம். அவங்க கிளம்பட்டும்…” என சங்கரும் சொல்ல,
“சரி இந்த பலகாரப்பெட்டியாவது…”
“நாளைக்கு நாங்க போறப்போ கொண்டு போவோம். அவங்களை ப்ரீயா விடுங்க…” என்ற அவனின் பேச்சிற்கு அடுத்து மறுபேச்சு உண்டா?
“சரிம்மா கிளம்பு, உனக்கு உடுப்பு எல்லாம் எடுத்து வச்சிருக்கேன். அத எடுத்து கார்ல வச்சுக்கலாம்…” என்று வரிசையாய் ஆறு பெட்டிகள் வர ஆடிப்போனான் ஷ்ரவன்.
“வாசு ஊட்டில கடை எதுவும் திறக்க போறியா என்ன?…” என்று மனைவியை கடிய,
“கொஞ்சோண்டு சேல தான் அத்தான். ரொம்ப எல்லாம் இல்ல…”
“இது உனக்கு கொஞ்சமா? ஏற்கனவே கல்யாணத்தன்னைக்கு உன் பெட்டின்னு மூணு வந்து இறங்குச்சே ரூம்ல. அது எந்த கணக்குல சேர்த்தி?…”
“நல்லநேரம் போய்ருச்சுன்னா நாளைக்கு தான் அனுப்புவாங்க நம்மளை. நாளைக்கும் வெள்ளிக்கிழமை வேற…” என அவனிடம் சொல்ல,
“முதல்ல போய் கார்ல ஏறு…” என சொல்லியவன் திரும்ப அதற்குள் ஷ்ரவன் வாசமல்லியுடன் கிளம்புவது அக்கம்பக்கத்தினருக்கு தெரிந்து வழியனுப்ப வந்துவிட்டனர்.
மொதுமொதுவென மேலே விழுவதை போல வந்தவர்களை பார்த்தவன் திணறி நிற்க அத்தனை போரையும் ஒற்றை ஆளாய் சமாளித்தாள் வாசமல்லி.
“இன்னைக்கு இங்க டேரா போட்ட விட்டுட்டு போய்ட்டே இருப்பேன்…” என மனைவியின் காதில் கிசுகிசுத்துவிட்டு நகர்ந்து நிற்க,
“அதெப்படி உங்கள போக விடுவேன் அத்தான்? ஐ கம். யு எஸ் கோ. ஐ நோ கம். யூ நோ நோ கோ…” என அள்ளி தெளிக்க அவளின் அலப்பறையில் வெறுப்பானான்.
“இந்த பேச்சுக்கே உன்னை விட்டுட்டு போறேனா இல்லையான்னு பாரு…” என வேண்டுமென்றே அவளை வெறுப்பேற்ற அப்படியே சிரிப்பு மறைந்து அவனின் முகத்தை பார்த்தவளின் முகம் அவனை நொடியில் வதைத்தது.
“என்னாச்சு வாசு?…” என்றவனுக்கு பதில் சொல்லாமல் உடனே முகத்தை சிரிப்புடன் மாற்றியவள அனைவரிடமும் சொல்லிக்கொண்டு அவனோடு காரில் ஏற அவளின் மௌனம் ஏதோ ஒரு வகையில் அவனை ஆட்டிப்படைத்தது.
முதன் முதலில் தனது பேச்சிற்கு அவளின் முகவாட்டம். இத்தனை நாள் ஒரு முக சுழிப்பும் இன்றி தனது கோபம், முறைப்பு, கடுப்பு என அத்தனையும் அசால்ட்டாய் தாங்கிக்கொண்டவள் இப்போது மௌனமாகிவிட என்னவோ போலானது அவனுக்கு.
“வாசு…” என ஊருக்கு வெளியே ஓரிடத்தில் காரை நிறுத்தி கேட்க,
“ஒண்ணுமில்ல அத்தான், சும்மா விட்டுட்டு போறேன் போறேன்னு சொல்றீங்கல்ல. அதான் ஊட்டிக்கு போகனும்னா எம்புட்டு நேரமாகும்னு யோசிச்சுட்டு இருக்கேன்?…”
“எதுக்கு?…”
“அதான் விட்டுட்டு போறதுலையே உத்தேசமா இருக்கீங்களே. அதான் தனியா போய் வர பழகிக்கனும்னு தான். எப்படி போய் எப்படி வரனும்னு யோசிச்சுட்டு இருந்தேன்…” என்றவளை சட்டென உணர்வுகளின் உந்துதலில் பாய்ந்து அவன் கட்டிக்கொள்ள அவனின் செயலில் லேசாய் வெட்கம் பூக்க,
“அத்தான்…” என சிணுங்கியவளின் குழைவில் அவளை விட்டு நகர்ந்தவன்,
“ஆட்டிவைக்கிற. சரியான இம்சைடி நீ. விடவும் முடியலை. தொடவும் முடியலை…” என சொல்லி ஸ்ட்ரியரிங்கை வலதுகையாய் ஒரு தட்டு தட்டி தான் கேசத்தை கோதிக்கொண்டவன்,
“விட்டுட்டு போறேன்னு அத்தனைதடவை சொல்றேன். கோவமே வரலையா?…” என்று அவளை பார்த்து கேட்க,
“போனா எங்க போவீங்க? உங்க ஊருக்குத்தான? எனக்குத்தான் தெரியுமே. பின்னாடியே வந்துரமாட்டேன்…” என்றவள் கண்கள் லேசாய் கலங்கிவிட அதை அவனுக்கு காண்பிக்காமல் முகத்தை ஜன்னல் பக்கம் திருப்பிக்கொண்டாள்.
“தாலி கட்டுறதுக்கு முன்னாடியே உங்கள விடமுடியாதுன்னவ நானு. தாலி கட்டி இப்ப பொண்டாட்டின்னு இருக்கையில விட்டுடுவேனா? இதெல்லாம் ஒண்ணுமில்லை அத்தான்…” என சாமர்த்தியமாய் பேசுவதை போல பேச அவளின் எதிர்பார்ப்பில்லாத அன்பு அவனை என்னவோ செய்தது.
அவளின் பேச்சை உள்வாங்கிக்கொண்டே இடதுகையை நீட்டி அவளின் கன்னத்தைபற்றி தன் பக்கம் திருப்பினான். அவளின் முகம் சிவந்து அழுகையை அடக்கியபடி இருப்பதை கண்டுகொண்டவன்,
“அழவே மாட்டேன்னு சொன்ன? இப்ப என்ன அழுகை?…”
“நானா? இல்லையே…” என்று அவள் சமாளிக்க,
“வாசு…” என்றவனின் கையை எடுத்துவிட்டவள்,
“ரோட்டுல வச்சு நாலு பேரு பாத்தா மரியாதையே போய்டும். வண்டிய கெளப்புங்க அத்தான்…” என அவள் படபடத்து சொல்லியதும் சிரிப்போடு காரை கிளப்பிக்கொண்டு சென்றான்.
ஷ்ரவனின் மனது அவனுக்கே விந்தையாக இருந்தது. பிடித்தும் பிடிக்காத நிலை. ஆனால் பிடிக்கவில்லை என்றாலும் அவளை விட்டு இருக்கமுடியுமென்று அவனுக்கு தோன்றவில்லை.
வாசமல்லியின் அருகாமையை பெரிதும் விரும்பினான் என்பதை விட அது ஒரு புது வகையான உணர்வாக இருந்தது. அவளின் பேச்சுக்கள் அவனின் இறுக்கங்களை குறைக்கும் போல இருந்தது. ஆனால் அதை வெளிப்படையாக ஒத்துக்கொள்ளத்தான் அவனின் மனம் தடுத்தது.
ஆண்மகனாக விருப்பமில்லாமல் தன் தலையில் ஒரு பெண்ணை கட்டிவைத்துவிட்டார்களே என்ற ஈகோவும், தனக்கு பிடிக்குதா இல்லையா என்றே தெரிந்துகொள்ளாமல் பிடிவாதமாய் நின்று தன்னை திருமணம் செய்துகொண்டதால் உண்டான கோபமும் அவனை எரிச்சல் மூட்டியிருந்தது உண்மை.
எத்தனை கோபமும், எரிச்சலும், எல்லாவற்றிற்கும் மேல் ஈகோவும் இருந்தாலும் வாசமல்லியை விட்டு தள்ளி இருக்க விரும்பவில்லை அவன். அவளின் பேச்சும், சிரிப்பும் மனதில் பெரும் மாற்றத்தை உண்டாக்கி இருந்தது.
ஆனாலும் அவளை தன்னிஷ்டத்திற்கு ஆட்டிவைக்க நினைத்து முயல கடைசியில் அவள் இஷ்டத்திற்கு தான் அவன் வளைந்துகொண்டு போனான். அதில் சற்று இன்பமும் கூட அவனுக்கு.
கோவை சென்று இரண்டு நாட்கள் கழித்து ஊட்டிக்கு கிளம்ப ஆயத்தமாக ஆயிரத்தெட்டு கேள்விகள் கேட்டு உயிரை வாங்கினாள் அவன் மனைவி.
ஊட்டிக்கு கிளம்ப அனைத்து பயணப்பொதிகளுடன் தயாராய் இருந்தாள் வாசமல்லி.
அவள் எடுத்து வைத்திருந்த பொருட்களை எல்லாம் பார்த்து தலைசுற்றி நின்றான் ஷ்ரவன்.
“நான் ரெடி அத்தான். போகலாம்…” என தலை நிறைய பூவோடு அவள் வந்து நிற்க,
“என்ன வாசு இது?…” என்று கேட்டான் கை நீட்டி தனக்கு முன்னால் இருந்த பொருளை பார்த்து.
“பித்தளை அண்டா அத்தான். இதுல வெந்நீர் போடுவாங்க….” என விளக்கம் தர,
“மண்ணாங்கட்டி, இதுல ஊட்டிக்கே போட்டு குடுக்க போறியா நீ?…” என கடுப்படித்தவன்,
“கிளம்பறபோ என்னை டென்ஷன் பண்ணாத வாசு. எடுத்து வச்சுட்டு ட்ரெஸ் மட்டும் எடுத்துட்டு வா…”
“இதெல்லாம் எங்கம்மா எனக்கு குடுத்துவிட்டது. நான் புழங்காம போனா அது வருத்தப்படாது. ஒண்ணுக்குமத்தவகணக்கா என்னை வீசின கையும், வெறுங்கையுமா வர சொல்லுறீங்களா? ஊருக்காரவனுங்க ஒருத்தனும் மதிக்கமாட்டானுங்க…”
“ஏய்…” என்று பல்லை கடித்தவன்,
“நீ இதெல்லாம் எடுத்துட்டு வரலைன்னா எவனும் போராட்டத்துல குதிச்சிடமாட்டானுங்க. நீ கொண்டுவந்தியா இல்லையான்னு பார்க்க அங்க எவனும் இல்லை. சொன்னா புரிஞ்சுக்கோ…” என்று சொல்ல,
“கொஞ்சமாவது…”
“ப்ச், அங்க எல்லாமே இருக்கு வாசு. உனக்கு வேணும்னா அங்க வாங்கி தரேன். போதுமா? கிளம்பு…”
“அப்ப சரி…” என்று மண்டையை ஆட்டிக்கொண்டே அவள் உடைகள் வைத்திருந்த பெட்டியை மட்டும் சற்று முன்னால் தள்ளி வைக்க,
“இதை நான் சொல்லனும் வாசு…” என சிரித்தான் கணவன்.
“நீங்க சொன்னாலும், நான் சொன்னலும் ஒண்ணுதான அத்தான்…” என்று தோள் குலுக்கியவள் மாமனார் மாமியாரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினாள்.
சங்கரும் அபர்னிதாவும் கூட அவர்களை வழியனுப்ப வந்திருக்க வாசமல்லியை தனியே அழைத்து சென்றாள் அபர்னிதா.
“அபி…” என இங்கிருந்தே ஷ்ரவன் முறைக்க,
“நீங்க சொல்லுங்க மதினி…” என வாசு அபியை பேச சொல்ல இவனோ மிரட்டலாய் பார்த்தான்.
“அத்தான், அவங்க எனக்கு நல்லதுதான் செய்வாங்க. நீங்க சும்மா இருங்க…” என்று ஷ்ரவனை பார்த்து சொல்லியவள்,
“நீங்க சொல்லுங்க மதினி. நீங்க என்ன சொன்னாலும் கேட்பேன். சொல்லுங்க…” என்று அவள் கேட்டதும் அபியும் அவளுக்கு சொல்ல வெகு சிரத்தையாக கேட்டுக்கொண்டாள்.
ஷ்ரவனுக்கு சுத்தமாய் அபர்னிதா செயல் பிடிக்கவில்லை. வாசமல்லியை அபர்னிதா அவளின் பேச்சை கேட்கும் விதமாய் மாற்றியிருக்க,
“நீ அவளை தப்ப கைட் பண்ணிட்டிருக்க அபி. அது அவளை பெரிய ஸ்ட்ரெஸ்ல கொண்டு போய் விடும். நீ என்ன நினைச்சு இதெல்லாம் பன்ற? எத்தனை முயற்சி பண்ணினாலும் வாசுவால எனக்கு பிடிச்ச மாதிரி மாற முடியாது…”
“அதுக்குதான் அவளுக்கு ட்ரெய்னிங் குடுக்கறேன்…”
“அவ மிஷின் இல்லை. நீ ப்ரோக்ராம் பண்ணி வைக்கறதுக்கு. திரும்ப இதை பண்ணாத. எனக்கு எரிச்சல் வந்திரும்…”
“எனக்கு அவ லைஃபும் முக்கியம் ஷ்ரவா…”
“அவ லைஃப்க்கு எந்த கெடுதலும் வராது. நீ ஓவரா திங்க் பன்ற. நல்லஹுன்னு நினைச்சு நீ பன்றது எங்களுக்குள்ள பிரச்சனையை தான கொண்டுவர போகுது…”
“அப்போ உங்க லைஃப்ல எனக்கு அக்கறை இல்லையா? அவளுக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் ஷ்ரவா. உன்னை இம்ப்ரெஸ் பண்ணனும்னு அவ ட்ரை பன்றது தப்பா? இதுல உனக்கு பிடிச்சு கல்யாணம் பண்ணிருந்தா கூட பரவாயில்லை…” என்றவளை ஆயாசத்துடன் பார்த்தான்,
“அபி நான் சொல்றது உனக்கு தான் புரியலை. இங்க பிடிக்குது பிடிக்கலைன்றதுக்கே வரலை. என்னை இம்ப்ரெஸ் பண்ணனும்னு நினைச்சு ஒவ்வொன்னும் யோசிச்சு அவ பேசறது உனக்கு எப்படியோ? ஆனா அவளுக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும்?…” என்றவன்,
“இங்க்லீஷ் பேசறது தான் எனக்கு புடிக்கும்னு யார் சொன்னா? அதை மாத்திக்க அவ முயற்சி பன்றப்போ எனக்கு புரியலைன்னு தெரியவும் அவ முகம் மாறுது. கல்யாணம் பன்ற வரைக்கும் அவ என்னை என்னோட விருப்பத்தை யோசிக்கலை. ஆனா இப்ப நான் என்ன நினைப்பேன்னு ரொம்ப அதிகமா யோசிக்கிறா…”
“எனக்கும் இந்த சூழ்நிலை பிடிக்கலை தான். அதுக்குன்னு அதை அப்படியே காட்ட முடியாம நான் எவ்வளவு தவிக்கிறேன். என்னோட இயல்பை உடைக்கிற மாதிரி இருக்குன்னு வரும் போது அப்படி ஒரு எரிச்சல் வருது. இது வாசுவுக்கும் பொருந்தும்…”
“நீ தான் வேற மாதிரி திங்க் பன்ற ஷ்ரவா. வாசு உனக்கேத்த மாதிரி மாறனும்னு அவளே ஆசைப்படறா. அதான் ஆர்வமா கேட்கறா…”
“ஆனா அனான் ஆசைப்படலை. அவங்க வீட்டுல இருந்த நாட்கள்ல எனக்கு அவளோட இயல்பென்னன்னு தெரிஞ்சு போச்சு. பிறப்பிலையே இருக்கறது. கண்டிப்பா மாத்திக்கனும்னு நினைக்கும் போது ரொம்ப கஷ்டம்…”
“அதெல்லாம் நீயா நினைக்கிறதுடா…”
“அப்போ ஏன் உன்னால சங்கர் அத்தானை மாத்த முடியலை. இல்லை அவருக்காக மாற முடியலை. பிடிச்சு தான நீயும் கல்யாணம் செஞ்ச? நீ மாறிருக்கவேண்டியது தானே?…”
“அது வேற ஷ்ரவா. நாங்க ரெண்டு பேருமே படிச்சிருக்கோம்…”
“வாசு படிக்கலைன்னு இப்பதான் தெரியுதா அபி?…”
“டேய் நீ என்ன எக்ஸ்ட்ரீம்க்கு திங்க் பன்ற? அப்படிலாம் ஒன்னும் இல்லை. புதுசா கல்யாணம் ஆனா எல்லாம் பொண்ணுங்களும் புருஷனை இம்ப்ரஸ் பண்ணனும்னு நினைக்கிறது யூஸ்வல் தான்டா…”
“இல்லை. எனக்கு அப்படி தெரியலை. இதுக்கு மேல உன்கிட்ட பேச முடியாது. நான் கிளம்பறேன்…” என்றவன் மற்றவர்களிடமும் விடைபெற்று தனது ஜீப்பில் ஏறினான்.
“கார் அத்தான்?…” என வாசு கேட்க,
“அங்க இதுதான் எனக்கு வசதி…” என்று சொல்லிவிட்டு கிளப்பியவன் பயணம் மனைவியுடன் ஆரம்பமானது.
ஷ்ரவன் எத்தனை சொல்லியும் அதில் என்ன இருக்கிறதென புரிந்துகொள்ளாத அபர்னிதாவும் அதை யோசிக்கவில்லை. யோசிக்க வேண்டியவன் இனி தன்னோடு தானே இருக்க போகிறாள் என்று நினைத்துக்கொண்டான்.
நினைப்பதும், நினைத்ததும் நினைவில் மட்டுமே.