தேவேஷின் முதுகை தடவிக்கொடுத்த தீபக், நான் ஸ்லோ பண்ணி காட்டியிருக்கேன், எல்லாம் வித்தின் செகன்ட்ஸ்ல நடந்திருக்கு..” என வருந்தினான்.
நான் வேண்டாம்னு உயிரை விட்டுட்டியா? என்னோடு வாழ பிடிக்காமல் போக நினைச்சிட்டியா? என நினைக்க சித்தம் கலங்கியது தேவேஷிற்கு.
மீண்டும் மீண்டும் பார்த்தான் அவ்வீடியோவை. தன்னை பார்க்கத்தான் ஆசையாய் அலங்கரித்து வந்திருக்கிறாள்.. நிமிடநேரத்தில்தான் தற்கொலைக்கு முடிவெடுத்திருக்கிறாள்.
உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவிற்கு என்ன நடந்தது? எதுவாகினும் என்னை நினைத்திருந்தால் இப்படி துணிந்திருப்பாளா? என நினைக்க தேவாவால் தாளமுடியவில்லை.
“சாவியை கொடு தீபக்.” என தேவா கேட்க, அவனின் குரலிலேயே வேதனை உணர்ந்தவன்.. “நான் கொண்டு வந்து விடறேன்..” என அவனின் பைக்கில் அமர்ந்தான் தீபக்.
மறுக்கத்தோன்றாமல் அவன் பின்னமர்ந்தான் தேவேஷ். இவர்களை பின்தொடர்ந்தான் சுதீப். மூன்றரை மணிபோல் வீட்டிற்கு வந்தனர். “இனியாவது உன் மகனுக்காக வாழப்பாருடா.” என கிளம்ப்பார்த்தனர்.
“தீபக்.. அந்த வீடியோவை எனக்கு அனுப்பு.” என்றான்.
“வேணாம் தேவா.. நாங்க இதை உனக்கு காட்ட நினைச்ச காரணமே.. உன்னோட வாழப்பிடிக்காம உயிரை விட்டவங்களை நினைச்சி வேதனையடறதை விட, உனக்காகவே உயிரோடிருக்க உன் அம்மாக்காகவும், உன் மகனுக்காகவும், உன்னை மாத்திக்கிறது எத்தனை அவசியம்னு உனக்கு புரிய வைக்கத்தான்..
இப்போ உனக்கு புரிஞ்சிடுச்சி.. இனி அதெதுக்கு? நானே இதை டெலீட் பண்ணப்போறேன்..” என தன் மொபைலை எடுக்க.. “டெலீட் பண்ணாத..” என தேவா சொல்ல, சொல்ல டெலீட் செய்திருந்தான் தீபக்.
தேவா முறைக்கவே.. “என்னை மன்னிச்சிடுடா, உனக்கு உண்மையை புரிய வைக்கனும்னுதான் இதை காட்டினேன்.. இதையே பார்த்து பார்த்து வேதனையடறதுக்கு இல்ல.. எத்தனை முறை பார்த்தாலும் அவங்க தற்கொலை செய்துகிட்டது விபத்தா மாறாது.
உள்ள போ.. உன் மகனும் உங்கம்மாவும் உனக்காக இருக்காங்க, ப்ராஜ்க்ட் விசயத்தை உங்கம்மாகிட்ட சொல்லு.. நீ சாதிச்சிருக்கிறது சாதாரண விசயம் இல்ல, உன் திறமை உங்கம்மாக்கு தெரிஞ்சா ரொம்ப சந்தோசப்படுவாங்க.. அவங்களை சந்தோசப்படுத்து. குழந்தையோட நேரத்தை செலவிடு. நாங்க இன்னொருநாளுக்கு உன் மகனைப் பார்க்க வரோம்..” என சுதீப்போடு கிளம்பினான் தீபக்.
மாடியில் உலர்ந்த துணிகளை எடுக்க வந்த மங்கை.. இப்படி வாசலிலெல்லாம் நிற்கவே மாட்டாங்க.. என்ன உலக அதிசயம்? அதுவும் ஃப்ர்ண்ட்சோட வந்திருக்காங்க.. இந்த நேரத்துல..” என தேவேஷை அதிசயமாய் பார்த்தாள்.
நண்பர்கள் சென்றதும் வீட்டினுள் செல்லாமல் மொட்டை மாடிக்கு போன தேவேஷின் முகத்தை ஊன்றி கவனிக்க.. கோபமா வேதனையா என பிரித்தரியாவண்ணம் அவனின் முகம் இருந்தது.
நாம ஏன் இவங்களை கவனிக்கனும்? என மனம் எடுத்துரைத்தாலும், ஒருவேளை இன்னைக்கு ஷர்மிளாக்கா பிறந்தநாளா இருக்குமோ? அதான் ரொம்ப டிஸ்டர்பா இருக்காங்களோ? இப்படி நேரத்துல தனிமை கஷ்டம்தானே? என தேவேஷ் மேல் பரிதாபம் வந்திட, கற்பகத்திற்கு அழைத்தாள்.
கற்பகம்.. “என்ன மங்கை இந்த நேரத்துல? மணி நாலாகப்போகுது… நீ ஆஸ்பத்திரிக்கு போகல?” என்றார்.
“தேவாவா?” என அதிசயித்தவர்.. “இரு நான் பார்க்கிறேன்.” என்க.. “ஆன்ட்டி.. ஏற்கனவே உங்க மகனுக்கு என்னை பிடிக்காது, இப்ப ரொம்ப டிஸ்டர்பா இருக்காங்க.. நான்தான் சொன்னேனு சொல்லிடாதிங்க.. பைக் சத்தம் கேட்டு நீங்களா வந்த மாதிரி சொல்லிக்கோங்க..” என இணைப்பை துண்டித்தாள் மங்கை.
என் ஜாடையில் குழந்தை வேணும் என பைத்தியமாய் அலைந்தவளின் ஆசைக்கிணங்க என்னை போலவே மகன் பிறந்திருக்க, குழந்தையை பார்ப்பதற்கும், அவனோடு வாழ்வதற்கும், கதியற்று போய்ட்டாளே என வேதனையடையும் போதெல்லாம் விதியை நினைத்து நொந்து கொள்வான் தேவேஷ்.
ஷர்மிளா தற்கொலை செய்வாள் என கற்பனையிலும் நினைத்திராத தேவேஷிற்கு.. ஏற்க முடியாமல் போனாலும் அதுதான் உண்மை என இன்று புரிந்திருக்க.. அவளின் தற்கொலையே கண்முன் நின்றது.
“என்னை விட்டுட்டு போக எப்படிடீ மனசு வந்துச்சி?” என மாடித்திட்டை ஓங்கி குத்தினான் தேவேஷ்.
சுட்டெரிக்கும் வெயில் தாக்கத்தால் தேவாவின் உடல் வியர்வையில் நனைந்திருக்க, ஷர்மிளாவின் தற்கொலையால் கண்கள் கண்ணீரில் நனைந்து சிவந்திருந்தது.
இக்கோலத்தில் மகனைப் பார்த்த கற்பகம்.. “தேவா..” எனப்பதறி மகனின் கைப்பிடித்தார். “ம்மா..” என உடைந்து அன்னையை கட்டிக்கொண்டான் தேவேஷ்.
“என்ன தேவா இந்த நேரத்துல?” என கற்பகம் தடுமாற.. “ஷர்மி என்னை ஏமாத்திட்டாம்மா.. ஏமாத்திட்டா..” என்றான் கோபத்தோடு.
மகனைப் பிடித்து உலுக்கியவர்.. “என்னடா சொல்ற?” என்றார் புரியாமல்.
அச்சோ இவனை எப்படிதான் தேற்றுவேன் என தவித்த கற்பகம்.. “தேவா..” என கமறி.. “ஷர்மிளா உன்னை மட்டுமா ஏமாத்திட்டு போயிருக்கா? என்னையும், உன் மகனையும் சேர்த்துதாண்டா விட்டுட்டு போயிட்டா..
எங்க இரண்டு பேருக்கும் உன்னை விட்டா யாருடா இருக்கா? எங்களுக்காக அவளை மறக்ககூடாதா?” என்றார் யாசகமாக.
“ஆமாம்மா.. எல்லாரையும்தான் ஏமாத்திட்டு போயிட்டா.. இனி அவளை மறக்கனும்.. என் மகனுக்காக மறக்கனும், உனக்காக மறக்கனும்..” என்றான் திடமாக.
இவனின் திடம் கற்பகத்திற்கு பயத்தை வரவழைக்க, தேவாக்கும் ஷர்மிளாக்கும் இன்னைக்கு எதாவது விஷேச நாளா இருக்குமோ என நினைத்து.. மகனை தனியே விடக்கூடாது என.. “ஷர்மிளாவை மறக்க நீ கஷ்டப்படனும்னு இல்ல தேவா.. கீழ வந்து உன் மகனைப் பாரு.. இப்போதான் தூங்கி எழுந்தான்.
அவன் பண்ற சேட்டையெல்லாம் பார்த்தாலே உனக்கு ஷர்மிளா நியாபகமே வராது. அவனுக்காக வாழனும்னு ஆசை வரும். வா.. வா..” என தேவேஷை முன்னே போகப் பணித்து பின்னோடு மகனைத் தொடர்ந்தார்.
எதிர் வீட்டிலிருந்து மங்கை பார்த்திருக்க, மங்கைக்கு கண்களால் நன்றி சொல்லி வீட்டினுள் நுழைந்தார் கற்பகம்.
இப்படி காதல் கணவனோடு வாழ கொடுத்து வைக்காமல் போய்ட்டிங்களேக்கா என ஷர்மியை நினைத்து கலங்கியவள், இத்தனை மாதங்களாகியும் மனைவியை நினைத்து கலங்கித் தவிக்கும் தேவேஷை உயர்வாய் நினைத்தாள்.
*** *** ****
உள்ளே வந்ததும் “சாப்பிட்டியா தேவா?” என்றார். அன்னையின் கேள்வியெல்லாம் கவனத்தில் இல்லை.. மாறாக, விரும்பியே என்னை விட்டு போக நினைச்சியா? உன்னை உயிரா நினைச்சதை தவிர வேற என்ன பண்ணினேன்.. எனக்கு எதுக்கு இப்படியொரு தண்டனை கொடுத்த? என பல கேள்விகள் ஆத்திரமாய் கிளம்ப இறுக்கமாய் அமர்ந்திருந்தான்.
தேவாவின் கோபத்தை வேதனை என நினைத்த கற்பகம்.. “தேவா சாப்பிட வா.” என உரக்க குரல் கொடுத்தார்.
அன்னையின் குரலில் கவனம் கலைந்தவன்.. “சாப்பிட்டுதான்மா வந்தேன், நீ சாப்பிடு.” என தனதறைக்குள் சென்றான்.
தன்னை காண ஆசையாய் அலங்கரித்துதான் வந்திருக்கிறாள். தீபக் சொல்வது போல சடர்னாகத்தான் தற்கொலை முடிவு எடுத்திருக்கிறாள். தற்கொலை செய்யும் அளவிற்கு அவளை எது அழுத்தியிருக்கும்? என யோசிக்க..
போனில் அவளோடு கடைசியாய் பேசியது யாராக இருக்கும்? குழந்தையை வைத்தேது ப்ளாக்மெயில் செய்ய நினைத்தார்களா? தீபக், சுதீப்பிற்கு கூட ஸரோகேஸி முறையில் குழந்தை என்றுதான் தெரியுமே தவிர, வேறொரு பெண்ணின் சினைமுட்டை தானத்தால் வந்த குழந்தை என தன் குடும்பம் தவிர்த்து வேறுயாருக்கும் தெரியாதே..
என மனம் பலவாறு யோசிக்க.. ஷர்மிளாவின் மொபைலை எடுத்து ஆராய்ந்தவனுக்கு, இறப்பதற்கு முன் மருத்துவமணையிலிருந்து அழைப்பு வந்திருப்பது புரிய, அதே எண்ணிற்கு தனது மொபைலிலிருந்து அழைப்பு விடுக்க, மருத்துவர் அழைப்பை ஏற்றார்.
தன்னை நியாபகப்படுத்தியவன்.. ஷர்மிளா கடைசியாக என்ன பேசினாள்? என விசாரித்தான். மருத்துவரும் சொல்ல, ஷர்மிளாவின் கடைசி நேர முகபாவனைகளை கண்முன் கொண்டு வந்தவனுக்கு அனைத்தும் விளங்கியது. மனமும் ரணமானது.