“நீ வரன்னு சொல்லியிருந்தா அவளே லீவ் போட்டிருப்பா.. நல்லா சர்ப்ரைஸ் கொடுத்த போ.. இனி ஃபோனை சைலன்ட்ல போட்டு வச்சிடுவா..” என சலித்தவர்..
“எதிர் வீட்டு கற்பகம்மாகிட்ட சாவி கொடுத்து வச்சிருக்கேன். நீ என் மகன்தானு போன் செய்து சொல்றேன்.. நீ போய் சாவி வாங்கிக்கோ மதியம் மங்கை வரவரைக்கும் ரெஸ்ட் எடு..” என்றார் தவமணி.
அறிவு.. “சரிம்மா..” என்க.. “நானும் கிளம்பி வரேன்..” என்றார்.
“நாளைக்கு வரேனு சொல்வ.. உன் தங்கையோட சேர்ந்து ஊர் சுத்த ஆரம்பிச்சிடுவ.. உன்ன பார்த்து எத்தனை வருஷமாகிடுச்சி, நாளைக்கு வரைக்கும் என்னால தாங்க முடியாது.. தாத்தா பாட்டி இப்போ பரவால்லையா இருக்காங்க.. நான் கிளம்பறேன்.. சாயங்காலம் போல வந்திடுவேன். நாளைக்கு நாம எல்லாருமா சேர்ந்து இங்க வந்துக்கலாம்.”
“சரி மங்கை வேலை செய்யிற ஹாஸ்பிட்டல் எங்க இருக்கு?” என விசாரித்து.. “சரிம்மா நான் வைக்கிறேன்.” என இணைப்பை துண்டித்தவன் கற்பகத்திடம் சாவி வாங்க கீழிறங்கினான்.
அறிவு காலிங் பெல்லை அழுத்த.. தேவேஷ் சாப்பிட்டு கொண்டிருக்க.. குழந்தையை அப்பொழுதுதான் குளிக்க வைத்த கற்பகம் அவனிற்கு துவட்டிவிட்டபடி கதவைத் திறந்தார்.
“தவறா நினைக்காதப்பா.. மங்கை ஒருமுறை உன்ன போட்டாவுல காட்டுச்சி, ஆனா உன் முகம் அவ்வளவா நியாபகத்துக்கு வரல..
தவமணிகிட்ட ஒத்த வார்த்தை கேட்டுட்டு கொடுக்கிறேன்..” என்று டைனிங் டேபிளில் இருந்த போனை எடுக்க.. “ம்மா.. நீ குழந்தைக்கு குளிக்க வச்சட்டிருக்கும்போது அவங்க போன் செய்தாங்க..” என்றான் தேவேஷ்.
“ஓ..” என்றவர் “இருந்தாலும் ஒரு முறை கேட்டுக்கலாம் தேவா.” என்க.. தவமணியே அழைத்தார்.
“தவமணி எப்படி இருக்க?” என்றார் கற்பகம்.
“நல்லா இருக்கேன்ங்க.. என் மகன் வருவான்.. சாவி கொடுங்க..” என்றார்.
பிறகுதான் “உள்ள வாப்பா.” என அறிவுக்கரசை வரவேற்றவர்.. “அண்ணன் வரும்போது கூட இந்த மங்கை ஆஸ்பத்திரிக்கு போயிடுச்சா.?” என்றார் தவமணியிடம்.
“இவன் சர்ப்ரைஸா வரன்னுட்டு சொல்லாம கொள்ளாம வந்துட்டானுங்க.. அறிவு வந்திருக்கிறது இன்னும் மங்கைக்கு தெரியாது.” என்றார்.
“சரி தவமணி.. நான் பிள்ளைக்கு சாப்பிட கொடுத்து, சாவி கொடுத்தனுப்பறேன்.. பாவம் களைச்சிருப்பான்.” என இணைப்பை துண்டித்து.. “உன்னப்பத்தி மங்கை நிறைய சொல்லியிருக்கா..”என பெருமை பாராட்டி..
“இருப்பா காபி போடறேன்.. குடிச்சிட்டு போவ.” என அறிவுக்கரசிடம் அனுமதி கேட்காமல் உரிமையாய் தகவல் கொடுத்து கிச்சன் செல்லப்போக.. “ம்மா.. ங்க..” என அறிவிடம் பேசினான் குழந்தை.
“ஸோ ஸ்வீட்.” என குழந்தையை ரசித்தவன்.. “ஆன்ட்டி நான் டீ காஃபி எதுவும் குடிக்கமாட்டேன்.. சாவி மட்டும் கொடுங்க..” என்றான் கனிவாக.
சிரித்த முகத்தோடு அறிவிடம் பேசிய மகனை ஆச்சர்யத்தோடு தேவா பார்த்திருக்க.. “நீங்கதான் குழந்தையோட டேட் டா.. குழந்தை அப்படியே உங்க ரிசம்பலன்ஸ்..” என பாராட்டினான்.
சட்டென யாரிடமும் பழகிடாத தேவா.. குழந்தையைப் பற்றி சொன்னதும் பெருமையடைந்தவனாய்.. “ஹம்..” என மகிழ்வோடு ஒப்புக்கொண்டான்.
தண்ணீரோடு வந்த கற்பகம் அறிவுக்கு கொடுத்து, “டிபன் சாப்பிடலாம், உக்காருப்பா.” என்க.. “ஹ்ஹா..” என அறிவைப்பார்த்து குழந்தை இம்முறை பலமாய் சிரித்து, அறிவு நின்றிருக்கும் திசைநோக்கி தன் உடலை சாய்த்தான்.
அறிவு.. “ஹேய்..” என மீண்டும் குழந்தையை ரசித்தவன்.. “அச்சோ என்கிட்ட வரனுமா நீங்க..? நீங்க ஃப்ரஸ்ஸா இருக்கிங்க.. மாமா அழுக்குடா.. டே அன்ட் நைட் டிராவல் செய்திட்டு வந்திருக்கேன்.” என்றான் கொஞ்சலாக.
குழந்தை மீண்டும் சிரிக்க.. “குளிச்சிட்டு என் தங்கை வேலை செய்யிற ஹாஸ்பிட்டலுக்கு போய் அவளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு நினைச்சேன்.. இவன் என்னை விடமாட்டான் போலயே.. ஆன்ட்டி சாவி கொடுங்க, ஒரு குளியல் போட்டு வரேன். இன்னைக்கு மங்கை வரவரைக்கும் இவனோடதான்..” என்றான் அறிவுக்கரசு.
“தாராளமா வாங்க தம்பி.. நான் டிபன் செய்து வைக்கிறேன்.” என இன்முகமாக சாவியைக் கொடுத்தார் கற்பகம்.
“நீங்க சொன்னதே போதும் ஆன்ட்டி.. எனக்காக செய்யாதிங்க..” என தன்மையாக மறுத்து.. “பைய் ஸ்வீட் ஹார்ட்.. மாமா குளிச்சிட்டு வரேன்.” என கற்பகத்திடம் அன்போடும், தேவாவிடமும் தோழமையோடும் தலையசைத்து கிளம்பினான்.
அறிவு சென்றதும் குழந்தை ஒரு நொடி சிரிப்பை தொலைத்த குழந்தை பிறகு கற்பகம் முகம் பார்த்து இயல்பாக.. இதை கவனித்திருந்த தேவா.. “அந்த அங்கிளை ஃபர்ஸ்ட் டைம் பார்த்ததும் உனக்கு அவ்வளோ பிடிச்சிருக்காடா?
தினமும் என்னை பார்க்கிறதான? என்கிட்ட வரமாட்டியா? என்னை பிடிக்கலயா?” என குழந்தையிடம் ஏக்கமாக பேச.. “ங்கா..” என தேவாவிடம் தாவினான் குழந்தை.
“ஒத்த வார்த்தை பேசினதும் உங்கப்பன் பக்கம் சாய்ஞ்சிட்டியாடா?” என அதட்டியவாறு குழந்தையை தேவாவிடம் கொடுக்க.. முதல்முறை பேசியதும் தன்னிடம் வருவான் என சற்றும் எதிர்பாராத தேவேஷ்.. மகனை வாங்கி கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான் நெகிழ்வோடு.
குழந்தை முகம் சுழிக்க.. “இவ்வளோ தாடி வச்சட்டு முத்தம் கொடுத்தா குழந்தைக்கு வலிக்காதா? அதான் முகத்தை சுழிக்கிறான்.. மகனுக்கு முத்தம் கொடுக்கனும்னா முதல்ல தாடியை எடு..” என மகனிற்கு கட்டளையிட்டார் கற்பகம்.
தேவேஷ்.. “அச்சோ அப்படியா குட்டி? வலிக்குதா?” என பாவமாய் கேட்க.. “ங்க..” என பதில்கொடுத்தான் அவனின் பாஷையில்.
அப்பா மகன் சம்பாஷனையை ரசித்தவாறு குழந்தைக்கு இட்லி எடுத்து வந்தவர்.. “கொடு தேவா ஊட்டனும்.” என குழந்தையை வாங்க, ஷர்மிளா இறந்ததிலிருந்து வாரம் ஒருமுறை டிரிம் மட்டுமே செய்து வந்தவன் இன்று க்ளீன் ஷேவ் செய்யும் பணியிலறங்கினான்.
குழந்தை சாப்பிடாமல் போக்கு காட்டுவதை பார்த்தபடி பத்து நிமிடத்தில் ஷேவ் செய்து வந்தவன்.. “ம்மா இங்க கொடு நான் தூக்கிக்கிறேன், நீ ஊட்டு..” என குழந்தையை வாங்க.. கற்பகம் சிறு இட்லி துண்டை குழந்தையின் வாயில் வைக்கவும், அதை தனது எச்சிலோடு சேர்த்து கூழாக்கியவன்.. “ப்ரூ..” என வண்டிஓட்ட, தேவாவின் முகமெல்லாம் அபிசேகம் ஆனது இட்லி.
“அடேய்.. என்னடா பண்ற?” என செல்லமாய் திட்ட, “மொதல்லாம் நாலு வாய் சாப்பிட்டுட்டு வண்டி ஓட்டுவான்.. இப்பலாம் ஒரு வாய் சாப்பிடி வைக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுது.. வாயில வச்சதும் இப்படித்தான் வண்டி ஓட்டறான்..” என கற்பகம் சலிக்க.. “ம்மா இவனுக்கு இந்த டேஸ்ட் பிடிக்கலயோ என்னவோ?” என்றான்.
“குழந்தைக்கு காரசட்னியாடா கொடுக்க முடியும்? இட்லில கொஞ்சமா நெய் தடவி உங்களுக்கு சின்னவயசுல கொடுத்த மாதிரிதாண்டா இவனுக்கும் கொடுக்குறேன்.. சாப்பிட்டாதான?” என்றார்.
கதவு திறந்திருக்க.. “ஆன்ட்டி..” என குரல்கொடுத்தான் அறிவுக்கரசு.
“வாப்பா..” என கற்பகம் அழைக்க.. “ஹாய் ஸ்வீட் ஹார்ட்.. இந்தாங்க..” என சிறிய டெடியையும், ஒரு கவர் சாக்லேட்டையும் நீட்ட.. “ங்கா..” என டெடியை வாங்க முயன்றான் குழந்தை.
அறிவுக்கரசின் பரிசு தேவாவிற்கு பிடிக்கவில்லை என்பது அவனின் முகத்திலேயே தெரிய.. தடுமாறிய கற்பகம்.. “எதுக்குப்பா இதெல்லாம்?” என சங்கடப்பட, “இது மங்கைக்காக வாங்கி வந்தேன் ஆன்ட்டி.
ஃபர்ஸ்ட்டைம் என்னை பார்த்தும் என்கிட்ட பேசி சிரிச்சி என்னை ரொம்ப இம்ப்ரஸ் பண்ணிட்டான், அதனால தங்கைக்கு வாங்கினதை இந்த தங்கத்துக்கு கொண்டு வந்துட்டேன்.” என்றான் நிறைந்த அன்போடு.
பிறகு தேவாவைப் பார்த்தவன்.. “டாடி முகத்தை என்ன செய்து வச்சிருக்கிங்க?” என சிரிப்போடு கேட்க.. “எது கொடுத்தாலும் சாப்பிடமாட்டுக்கிறான் தம்பி, இவனுக்கு ஊட்டுறது பெரிய சவாலா இருக்கு.” என்றார்.
“இதென்ன ஆன்ட்டி வெறும் இட்லி போல.” என கேட்க.. “வெறும் இட்லி இல்லப்பா, அதுல நெய் விட்டு பருப்புதண்ணி தொட்டுட்டுதான் ஊட்டுறேன்..” என்க..
“என் தங்கை இப்படித்தான் குழந்தையில பண்ணுவா.. ஒருநாள் எங்கப்பா தட்டுலயிருந்து காரசட்டினியை எடுத்து வாயில வச்சிக்கிட்டா, குழந்தைக்கு காருமேன்னு அம்மா தண்ணி கொடுத்தாங்க.. தண்ணியை வேணாம்னுட்டு காரசட்னிதான் வேணும்னு பிடிவாதம் செய்து, அதுலதான் சாப்பிட்டா..
அப்போதான் அவளுக்கு சப்புனு சாப்பிட பிடிக்கல, காரம்தான் பிடிக்குதுனு எங்கம்மாக்கு தெரியவந்தது. எனக்கு காரமே ஆகாது, மங்கை நல்லா காரம் சாப்பிடுவா.. ஒவ்வொரு குழந்தைங்க ஒவ்வொரு மாதிரி.. நீங்க எதுக்கும் கொஞ்சம் காரம் ட்ரை பண்ணி பாருங்க.” என்றான் யோசனையாக.
“எப்படியோ இவன் சாப்பிட்டானா அதுபோதும், இதோ ஊட்டி பார்க்குறேன்..” என தேவாவிற்கும் தனக்காகவும் செய்த தக்காளி சட்னியில் சிறிது போட்டு அதை தொட்டு ஊட்டவே “ங்க..” என சிரித்தபடி இட்லியை விழுங்கினான் குழந்தை.
“ஆ..” வென கற்பகம் வியக்க.. “ப்ராப்லம் சால்வ்டு..” என சந்தோசித்தவன்.. “இனி இதையே கன்ட்டினியூ பண்ணிக்கோங்க ஆன்ட்டி, நான் என் தங்கையை பார்க்க போறேன்.” என கிளம்பினான் அறிவுக்கரசு.
அறிவுகரசின் ஆலோசனையில் குழந்தை சாப்பிட்டதில் சந்தோசமடைந்தாலும்.. அவன் மகனிற்கு கொடுத்த பரிசு பொருள்கள் பிடிக்காமல் போகவே.. “என்னம்மா இதெல்லாம்?” என்றான் டெடி பொம்மையை காட்டி.
“இந்த தம்பி ஃபாரின்லயிருக்கான், ரொம்ப வருசம் கழிச்சி இன்னைக்குத்தான் வந்தானாம், இன்னும் ஒருவாரமோ பத்து நாளோதான் இங்கயிருப்பான், குழந்தைக்குனு கொடுக்குறதை எப்படி முகத்துல அடிச்ச மாதிரி வேணாம் சொல்லறது?
மங்கைக்கோ, இல்ல இந்த தம்பிக்கோ கல்யாணம் வச்சா, இதெல்லாம் சேர்த்து மொய் வச்சிடலாம் விடு.” என சமாதனப்படுத்தினார் கற்பகம்.
குழந்தையோடு மேலும் சற்றுநேரம் செலவழித்து கம்பெனி கிளம்பினான் தேவேஷ்.
** *** ****
“எக்ஸ் க்யூஸ் மி.. ஒரு டோக்கன் கிடைக்குங்களா?” என அறிவு கேட்க.. “இல்லைங்க, இனி ஈவ்னிங்தான் கிடைக்கும்.” என பதிலளித்தவாறு மங்கை தன் வேலையில் கவனமாக..
“ஆனா எனக்கு இப்போவே பார்க்கனுங்களே..” என தங்கை முன்வந்த அறிவு, அவளின் உயரத்திற்கு குனிந்து மங்கை முகம் பார்க்க.. “அறிவு..” என தன் கண்களை அகல விரித்து அண்ணனை கட்டிக்கொண்டாள் மங்கை.
அடுத்த பேஷன்ட்டை அனுப்பவேண்டி டாக்டர் பெல்லை அழுத்த.. “அச்சோ.. நான் என்ன பண்ணுவேன்?” என புலம்பியவள்.. “முன்னாடியே சொல்றதுக்கென்னடா? சர்ப்ரைஸ் கொடுக்க நினைச்சியாக்கும்?” என மங்கை முறைக்க..
“இப்படி திடீர்ன்னு..” என மங்கை சங்கடப்பட, உள்ளே போனவன் டாக்டரிடம் தன்னை அறிமுகப்படுத்தி.. மங்கையை அழைத்து செல்வதாக சொல்லவும்.. மங்கையின் பூரித்த முகத்திலேயே அண்ணன் மீதுள்ள பாசமறிந்து மருத்துவர் விடுமுறை கொடுக்கவும்.. “உன் தொல்லை தாங்க முடியாம டாக்டரே வீட்டுக்கு கிளம்ப சொல்றார்.. உனக்கென்ன? வா..” என தங்கை தலைமீது செல்லமாய் கொட்டி தங்கையை அழைத்து வந்தான்.