“அப்போ தினமும் நான்வெஜ் சாப்பிடுறியா?” என்றான் முறைப்பாக.
“ஒரே ஒரு வேளைக்குதான? காலைலயும் நைட்டும் வெஜ்தான் சாப்பிடறேன்.” என்றாள் கொஞ்சலாக.
“வீட்டுல செய்யிறதுனா பரவால்ல மங்கை, கடைலல்லாம் தினமும் நான்வெஜ் சாப்பிடாத.” என அதட்டினான்.
“தினமும்லாம் கிடைக்காது, ஹாஸ்பிட்டல்ல கூட்டம் இருக்கும் போதெல்லாம் வர லேட்டாகிடும், அன்னைக்கெல்லாம் நான்வெஜ் தீர்ந்திடும்..” என்றாள் சோகமாக.
“நாக்கை மட்டும் அடக்கிடாத.” என செல்லமாய் தலையில் குட்டினான். பேசிக்கொண்டே வீட்டிற்கு வந்திருந்தனர்.
வீட்டை திறக்கவும், அங்கே பரப்பியிருந்த பைகளைப் பார்த்து.. “ஹே.. என்ன இத்தனை பேக்?” என்றாள் வியப்பாக.
“அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம். முதல்ல என் வயித்துக்கு எதாவது பண்ணு.” என்றான்.
“இரு வந்திடறேன்.” என அறைக்குள் சென்று உடைமாற்றி வந்தவள்.. “பத்து நிமிஷத்துல சட்னி அரைச்சிடறேன்.” என கிச்சனுக்கு செல்ல.. “அம்மா தாயே.. காரம் கம்மியா போடு.” என அறிவும் பின்னோடே வந்தான்.
நிறைய பெரிய வெங்காயம் நறுக்கவும்.. மங்கையின் கைப் பக்குவத்தில் முதன்முதலாய் ருசிக்கும் ஆவலில்.. “என்ன சட்னி அரைக்கிற? எதுக்கு இவ்வளோ வெங்காயம்?” என்றான் ஆவலாக.
“கிச்சன் பக்கம்லாம் நீ வர ஆளே இல்லையே.” என்றவள்.. “அம்மா வரதுக்குள்ள என்ன பேசனும்னு முதல்ல சொல்லு.” என்றாள்.
எப்படி ஆரம்பிப்பதென தடுமாறியவன்.. “அதை சொல்லி நீ சமையல்ல சொதப்பிட்டினா?” என்றான்.
“ம்.. ரொம்ப விபரமாகிட்ட..” என பாராட்டியவன்.. “கம்பல்லாம் கிடையாது, உனக்கு பிடிச்சிருந்தா மட்டும் ஓ.கே சொல்லு.. சரியா?” என்றான்.
நறுக்கிய பச்சை மிளகாய் வெங்கயத்தோடு மாவில் இரண்டு முட்டையை உடைத்து ஊற்றி, பனியாரம் வார்த்தபடி.. “எங்கையே எவனையோ பிடிச்சிட்டனு புரியுது.. யார் அந்த அப்பாவினு சொல்லு..” என்றாள் சிரிப்போடு.
“ஹா..ஹா.. உன்னை கட்டிக்கிறவன் அப்பாவியாதான் இருக்கனும்னு நீயே முடிவு பண்ணிட்டியா?” என சிரித்தவன், “கண்மூடித்தனமா ஒருத்தர் மேல அன்பு வைக்கிறவன்லாம் அப்பாவினா, நிகிலும் அப்பாவித்தான் மங்கை.. என்னோட காலேஜ் டேஸ்ல நிகிலைப் பத்தி நிறைய முறை சொல்லியிருக்கேன், உனக்கு நியாபகம் இருக்கா?” என்றான்.
“ம்ஹும்..” என உதட்டை பிதுக்க.. “மங்கை.. மங்கை..” என உரக்க குரல் கொடுத்தபடி உள்ளே வந்தார் கற்பகம்.
“ஆன்ட்டி.. வாங்க வாங்க..” என்றாள் கிச்சனிலிருந்தபடியே.
“உங்கண்ணன் வந்திருக்க நேரம் பார்த்து உன்னை தொல்லை செய்ய வரமாதிரி ஆகிடுச்சி..” என சொல்லிக்கொண்டே கிச்சன் வந்தார் கற்பகம்.
அறிவைப் பார்த்த குழந்தை.. “ங்க..” என சிரிக்க.. “ஹே ஸ்வீட் ஹார்ட்.. மாமாவ பார்க்க வந்திங்களா?” என்க.. குழந்தை அறிவிடம் சாய.. “வாங்க.. வாங்க..” என வாங்கிக்கொண்ட அண்ணனையும் குழந்தையையும் அதிர்வாய் பார்த்திருந்தாள் மங்கை.
“என்ன மங்கை அப்படி பார்க்குற?” என அறிவு மங்கை கவனத்தை கலைக்க.. “ஒ.. ஒன்னுமில்ல அறிவு.. இவன் இன்னைக்குத்தான் முதல்முறையா இங்க வரான். ஆனா உன்கிட்ட ஒட்டிக்கிட்டான்.” என்றாள் ஆச்சர்யமாக.
“ஓஹ்.. உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன்..” என சாவி வாங்க போகும்போது நடந்ததை விளக்கியவன்.. “ஒன்னு தெரியுமா மங்கை, இவனும் உன்னைப் போல நிறைய காரம் சாப்பிடுவான் போல.” என மறுமுறை சென்றபோது நடந்ததையும் விளக்கினான்.
பெரிதாய் வியந்தவளுக்கு இவன் தேவேஷ் குழந்தை, இவனுக்கும் நமக்கும் எவ்வித சம்மதமும் இல்லையென திடமாய் நினைத்திருந்தது சற்றே ஆட்டம் காண ஆரம்பிக்க.. “அப்.. அப்படியா ஆன்ட்டி?” என்றாள் கற்பகத்திடம்.
“ஆமாம் மங்கை.. எப்பவும் கால் இட்லிகூட சாப்பிட மாட்டான், இன்னைக்கு ஒரு இட்லி சாப்பிட்டான்னா பாரேன்..” என்றார் பெருமையாக.
எல்லார்கிட்டயும் சட்டுனு ஒட்டிக்கிறது, டேஸ்டா சாப்பிடறதுனு குணத்துல என்னைப் போலவாடா நீ என நினைக்க.. சுமக்கவில்லையென்றபோதும் தாய்மையுணர்வு தனபோல் பெருக்கெடுத்தது..
அண்ணனிற்கு சந்தேகம் வந்திடக்கூடாதென குழந்தையிடமிருந்து பார்வையை திருப்பி அடுப்பில் கவனம் செலுத்தினாள்.
பனியாரம் வெந்திருக்க.. அதை எடுத்து தட்டில் போட்டு.. “சாப்பிடு அறிவு..” என அண்ணனிற்கு கொடுத்தவள் குழந்தையை பாராமல் மீண்டும் பனியாரம் ஊற்ற ஆரம்பித்தாள்.
“ஏன் மங்கை ஒரு மாதிரியிருக்க? என் பேரனை தூக்கிட்டு வந்தது உனக்கு பிடிக்கலயா?” என வருந்தினார் கற்பகம்.
“அப்புறம் ஏன் வெறும் பனியாரத்தை கொடுத்திருக்க?” என்க.. “அச்சோ சட்னி போட மறந்துட்டேன்.” என சட்னி போட்டாள்.
தங்கைக்குள் எதோ தடுமாற்றம் என அறிவுக்கு புரிய.. “மங்கை அப்படிலாம் நினைக்கமாட்டாங்க ஆன்ட்டி.” என சமாதனம் செய்தான்.
“மங்கை நினைக்கமாட்டானு எனக்கும் தெரியும் தம்பி.. ஆனா..” என குழந்தை பிறந்தபோது மங்கை செய்த உதவிகளை சொல்லி.. “தேவையில்லாம ஒருத்தரை கஷ்டப்படுத்துறது என் மகனுக்கு பிடிக்காது, அதனால இப்படி உதவிலாம் இனி செய்யாதனு சொல்ல சொன்னான்.
என் மகன் குணம் தெரியாம மங்கையேது பழையபடி பழகி, அது என் மகனுக்கு பிடிக்கலன்னா சுள்ளுனு பேசிருவானு, தேவா சொன்னதை என் பொண்ணு மங்கைகிட்ட சொல்லிட்டா,
அப்போயிருந்து மங்கை எங்க வீட்டு பக்கம் வரதில்ல, மங்கை வீட்டுக்கு வர நேரம் இவன் தூங்கிட்டிருப்பான், அதனால என்னாலயும் அடிக்கடி வரமுடியறதில்ல..
எதிர் வீட்டுலதான் இருக்கோம்.. இவன் பிறந்தப்ப பார்த்ததுக்கப்புறம் என் பேரனை இன்னைக்குத்தான் மங்கை பார்க்குறானா பாரேன்.” என்றார்.
“உங்க மகனைப் பத்தி இப்படி சொல்றிங்க? ஆனா பார்த்தா அப்படி தெரியலையே.. காலைல நான் வந்தப்போ கூட இயல்பாதான இருந்தார்.” என்றான் வியப்பாக.
“அதான் தம்பி எனக்கே ஆச்சர்யமா இருந்தது.. யாரோடவும் சட்டுனு ஒட்டமாட்டான், தவமணி வீட்டுக்கு வந்தா கூட முகத்தை திருப்பிட்டு போய்டுவான்.. உன்னைதான் எதுவும் சொல்லல.” என வியந்தார்.
அன்னை வருவதற்குள், தான் தங்கையிடம் பேசவேண்டியிருப்பதால், தேவாவின் பேச்சை தவிர்த்து.. “சாப்பிடுங்க ஆன்ட்டி..” என்றான்.
“இல்ல தம்பி நீங்க சாப்பிடுங்க.. நான் மங்கைகிட்ட அவசரமா கொஞ்சம் விளக்கம் கேட்கனும்.” என்றவர்.. “மங்கை.. என் மகன் எதோ வேலை நல்லா பண்ணிட்டானாம், அதனால வேலை விசயமா அவனை அமெரிக்கா போக சொல்லியிருக்காங்களாம், இவன் என்னையும் பேரனையும் கூட்டிட்டு போயே ஆகனும்னு ஒரே பிடிவாதம்..
ஏரோபிளேன்ல வர எனக்கு பயமாயிருக்கு, நான் வரமாட்டேன், தேசம் விட்டு தேசம்போய் குழந்தைக்கு உடம்புக்கு முடியாம ஆகிடும், நாங்க வரல, நீ போய் வான்னா..
தனியா போனா ஷர்மிளா நியாபகம் வரும், என்னால நிம்மதியா போய் வர முடியாது, உனக்கும் சேர்த்து டிக்கட்டும் போட்டுட்டேன், நீயும் என் மகனும் வந்தேதான் ஆகனும்னான்.
இப்படி சொன்னதுக்கப்புறம் எனக்கு குழப்பமாகிடுச்சி, என் மகளுக்கு போன் போட்டு கேட்டா.. இப்படி சான்ஸை மிஸ் பண்றியே.. லூசாம்மா நீன்னு என்னை திட்டுறாளுங்க..
அமெரிக்கா போய்ட்டு, அங்க குழந்தையோட ஃபோட்டா எடுத்து, அதை இவன் பெரியவனானதுக்கப்புறம் காட்டினா, ஆறு மாசக் குழந்தையிலயே அமெரிக்கா போயிருக்கேனு எவ்வளோ சந்தோசப்படுவான்..
எங்கம்மா அமெரிக்காலாம் போயிருக்காங்கனு நாங்களும் சந்தோசப்படுவோம்.. அதோட தேவாக்கு இந்த நேரம் இப்படி மாற்றம் கண்டிப்பா தேவை.. இப்படியாவது ஷர்மிளாவை மறந்து அவனுக்குனு எதையாவது யோசிக்கும் எண்ணம் வரும். எல்லாத்தையும் கெடுத்துடாத, நீ தேவாவோட போய்ட்டுவான்னு கார்த்திகா திட்டுறா..
என் மகன் சந்தோசத்துக்காக நானும் அமெரிக்கா வரன்னு சொல்லிட்டேன்.. இன்னைக்கு நைட் கிளம்பனுமாம்.. குழந்தைக்கு நடுவில காய்ச்சல் ஏது வந்தா என்ன பண்றது? அவசரத்துக்கு எந்தெந்த மாத்திரை எடுத்துட்டு போகனும்னு உன்கிட்ட கேட்டுக்க வந்தேன்.. கொஞ்சம் சொல்லிக்கொடேன்.. நீ சொன்னாதான் எனக்கு விளங்குது..” என மாத்திரை டப்பாவை நீட்டினார்.
“ம்.. ஆன்ட்டி..” என வாங்கியவள்.. தன்னிடமிருந்த காலியாய் இருந்த சிறு டப்பாக்களில் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, என தனித்தனியாய் போட்டுக்கொடுத்தவள்.. “அமெரிக்கா போகப்போறிங்க.. என்ஜாய் ஆன்ட்டி..” என்றாள்.
“என் சந்தோசம் இருக்கட்டும். உன் முகம் ஏன் வாட்டமாயிருக்கு மங்கை..” என்றார்.
“இல்.. இல்லையே ஆன்ட்டி.. நான் நல்லாத்தான இருக்கேன்.” என்றாள் வரவழைத்த புன்னகையோடு.
“அச்சோ அதெல்லாம் இல்ல ஆன்ட்டி.. எனக்கேன் கல்யாணம் பிடிக்காம போகப்போகுது? என் மனசுக்கு பிடிச்சிடுச்ச பையனை பார்த்தா உடனே ஓ.கே சொல்லிடுவேன்..” என்றாள்.
“ம்.. அப்படிபோடு..” என சந்தோசித்தவர்.. “எப்படி பையனை உனக்கு பிடிக்கும்னு உங்கண்ணன்கிட்ட சொல்லிடு.. சுலபமா வேலை முடியும்..” என்றார்.
ஷர்மிளாக்காவை மறந்து அவனுக்கான வாழ்வைபத்தி யோசிக்கிறதுனா, இன்னொரு கல்யாணம் செய்துக்கிறதா என நினைக்க.. கற்பகத்திடமிருந்து பார்வையை திருப்பினாள். அங்கே அவளின் மகன் அவனின் மாமனிடம் பனியாரத்தை ருசித்து சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.
“அறிவு.. இன்னைக்கு நைட் ட்ராவல் பண்ணப்போறாங்க.. பனியாரத்துல நிறைய எண்ணை போட்டுருக்கேன்.. மாவுல முட்டைவேற கலந்திருக்கேன், குழந்தைக்கு ஒத்துக்காது.. ஊட்டாத.” என்றாள் பதட்டமாக.