கோவில் திண்டில் மங்கையும் அறிவுக்கரசும் அமர்ந்திருந்தனர். இத்திருமணம் எப்படி சாத்தியமானதென கற்பகத்திற்கு இன்னும் விளங்கவில்லை. எப்படியாகினும் மங்கை மருமகளானதில் அத்தனை சந்தோசம்தான்..
ஆனால் தாலி கட்டியதும் மகன் கிளம்பியிருக்க, மங்கையின் நிலையறிந்து தவித்துப்போனார் கற்பகம். தவமணிக்கு தெரிந்தால் என்ன சொல்வாரோ என்ற கவலையிருந்தாலும், தவமணியை மங்கை சமாளிப்பாள் என்ற நம்பிக்கையும் இருக்க மங்கையையே பார்த்திருந்தார்.
அறிவின் மடியிருந்து குழந்தை இறங்க முயற்சிக்கவே.. “உன் மருமகன் ஒரு வாரமா தானா நிக்குறான் அறிவு.. இறக்கிவிடு விழமாட்டான்.” என்றபடி அருகே வந்தார் கற்பகம்.
“ஸ்வீட்ஹார்ட் பேரு சஞ்ஜெய்யா? இறங்கனுமா?” என மெல்ல இறக்கிவிட திட்டின் சுவற்றைப் பிடித்தவாறு நடைபயின்றான் சஞ்ஜெய்.
“பார்த்துக்கோங்க ஆன்ட்டி.” என கற்பகத்திடம் சொல்லி அன்னைக்கு அழைத்தான் அறிவுக்கரசு.
“அறிவு..” என தடுமாறினாள் மங்கை.
“எப்படியானாலும் அம்மாகிட்ட சொல்லிதான ஆகனும்?” என்க.. தவமணி அழைப்பை ஏற்று.. “அறிவு.. அந்த தம்பிகிட்ட பேசிட்டியா? கல்யாணத்துக்கு ஒத்திருக்கமாட்டாரே.. இப்போவாவது உன் தங்கைக்கு புத்தி வந்ததா?” என படபடவென பொறிந்தார் தவமணி.
தாய் நாடு வந்ததும் அன்னைக்கு அழைத்து தங்கை வீட்டில் இருப்பதாக சொல்ல, நீ வந்ததுக்கப்புறம்தான் முகூர்த்தப்பட்டு வாங்குவேனு இங்க ஆரா உனக்காக காத்திட்டிருக்கா, உன் தங்கையை கூட்டிட்டு சீக்கிரம் வீடு வந்து சேரு.” என கட்டளையிட்டார் தவமணி.
தேவாவை பார்த்து பேசிவிட்டு, ஒரு மாதத்திற்கு மருத்துவமணைக்கு லீவ் போட சொல்லி, மங்கையையும் என்னோடவே கூட்டிட்டே வரேன் என அன்னையிடம் சொல்லியிருந்தான் அறிவு.
தற்போது என்ன சொல்வதென சில நொடி தடுமாறியவன்.. “ம்மா.. தேவாக்கும் மங்கைக்கும் கல்யாணம் ஆகிடுச்சி.” என்றான் சன்னக்குரலில்.
“என்னடா சொல்ற?” என கத்தினார் தவமணி.
“ம்மா.. டென்ஷன் ஆகாத.. இப்போ கொஞ்சம் நேரம் முன்னதான் கல்யாணம் ஆனது.. நானே இதை எதிர்பார்க்கல.” என நடந்ததை பொறுமையாக விளக்கினான் அன்னைக்கு.
கற்பகம்.. “ஓ.. அறிவைப் பார்க்கத்தான் காலைல கிளம்பினானா? இப்படித்தான் கல்யாணம் நடந்ததா? எல்லாம் நல்லதுக்கே.. என அருகிலிருந்த துர்க்கையம்மனை மீண்டுமொரு முறை நன்றியோடு வணங்கி.. தவமணி என்ன சொல்வாரோ என அறிவையே பார்த்திருந்தார்.
“ம்மா.. தாலி கட்டும் ஒரு நொடி முன்ன கூட இந்த கல்யாணத்துல உறுதியா இருக்கியானு மங்கைகிட்ட கேட்டுட்டுத்தான் கட்டினார்.
குழந்தையைப் பத்தி கவலைப்படாதனு நான் எவ்வளோ சொல்லியும், தேவாவோட கல்யாணத்துல இத்தனை உறுதியா மங்கை இருக்கும்போது என்னை என்னம்மா செய்ய சொல்ற?
மங்கைகிட்ட தேவா கேட்கும்போது, நான் தடுத்திருந்தா நிச்சயம் தேவா தாலி கட்டியிருக்க மாட்டார்..
“இன்னும் இருபது நாள்ல உனக்கு கல்யாணம், நாலு மாசம் முன்ன கல்யாணமாகம வந்தவ, இப்படி திடீர்னு தாலியோட வந்தா சம்மந்தி வீட்டுல என்னடா நினைப்பாங்க? அதுவும் இரண்டாந்தாரமா?” என்றார் வேதனையோடு.
இப்படி கல்யாணம் அறிவிற்கும் வருத்தம்தான்.. ஆனால் அன்னையிடம் காட்டிக்கொண்டால் இன்னும் வருந்துவார் என்பதால்.. “அடுத்தவங்க என்ன நினைப்பாங்கனெல்லாம் யோசிச்சா நம்ம வாழ்க்கையை நாம வாழ முடியாது. இரண்டாந்தாரம்னாலும் மங்கைக்கு தேவாவைதான் பிடிச்சிருக்கு..”
“அவ தேவாவை பிடிச்சி கல்யாணம் செய்துக்கலடா, குழந்தைக்காக இப்படி முட்டாள்தனமா முடிவெடுத்திருக்கா, நல்லது செய்யனும்னாலும் எதெது செய்யனும்னு ஒரு வரைமுறை வேணாமா? எனக்கே தெரியாம இப்படி எக் டொனேட் செய்து வாழ்க்கையையே..” எனும்போதே.. “ம்மா..” என இடைபுகுந்தான் அறிவு.
மகள் வாழ்க்கை நாசமாகிடுச்சி என சொல்ல வந்தவர்.. அறிவின் கத்தலில்.. வன்சொல்லை முழுங்கியவராய்.. “என்ன பாவம் செய்தேனோ? என் பொண்ணு கல்யாணம் இப்படியா நடக்கனும்?” என அழுதார் தவமணி.
“சரி நான் வைக்கிறேன்..” என்க.. “டேய்.. வைக்காத, நான் கிளம்பி வரேன்..” என்றார்.
“அம்மா வரதுக்கு சாயங்காலம் ஆகிடும்ல? இப்போ நம்ம வீட்டுக்கு போய் சாமி கும்பிட்டதும் உடனே கிளம்பிடலாம்.. உங்களோட நானும் வரேன்.” என்றார் வேண்டுதலாக.
ஹம்.. இனி எப்படியாகினும் இவர்கள்தான் மங்கையின் புதுபந்தம். இவர் ஆதரவும் இல்லையேல் தங்கையின் நிலை மிக மோசமாகிடும் என நினைத்து.. “சரிங்க ஆன்ட்டி, ஆனா உடனே கிளம்பனும்.” என்று அறிவு சம்மதிக்க.. அனைவரும் கிளம்பினர்.
முக்கால் மணிநேரப் பயணத்திற்கு பிறகு வீட்டிற்கு வந்தனர். கதவைத் திறந்ததும்.. “இரு மங்கை, நான் போய் ஆரத்தி எடுத்துட்டு வரேன்.” என சந்தோசத்தோடு உள்ளே போனார் கற்பகம்.
ஆரத்தி எடுத்த கற்பகத்திற்கு, முதன்முதலாய் புகுந்த வீட்டினுள் வரும் மருமகள் தனியே வருவது நினைத்து கண்ணீர் குளம் கட்டியது. “உள்ள வா மங்கை.” என குரல் கமறினாலும், இன்முகத்தோடு வரவேற்றார்.
அறிவும் மங்கையும் உள்ளே வர, முதலில் தண்ணீர் கொண்டு வந்தவர்.. “நாக்கெல்லாம் எப்படி வரண்டு கிடக்கு பாரு, தண்ணி குடி.” என அக்கறையாய் நீட்டினார் மருமகளிடம்.
மங்கை தண்ணீர் பருகவும்.. “ம்மா.. ண்ணி..” என சஞ்ஜெய் கற்பகத்திடம் கேட்க.. “அம்மாதான் சொல்வானா ஆன்ட்டி?” என்றான் அறிவு.
குழந்தைக்கு தண்ணீர் பருக வைத்துக்கொண்டே.. “ஆமாம்ப்பா.. நான் சொல்லிகொடுக்கல, தேவா என்னை கூப்பிடறதைப் பார்த்து இவனும் அம்மானுதான் கூப்பிடுவான்.. இனி மங்கை வந்தாச்சில்ல? என்னை ஆயானு கூப்பிட சொல்லி பழக்கப்படுத்திக்கிறேன்..” என்றார் பெருத்த நிம்மதியோடு.
“ஆன்ட்டி.. குழந்தைக்கு நீங்கதான எல்லாமும் பார்க்குறிங்க.. அவனுக்க பிடிச்சமாதிரியே கூப்பிடட்டும்.” என்றான் அறிவு.
மங்கையிடம்.. “இவ்வளோ சீக்கிரம் தேவா உன்னை கட்டிப்பானு நான் நினைச்சே பார்க்கல மங்கை, உனக்கு தண்டனை கொடுக்கிறதா நினைச்சி கல்யாணம் செய்திருக்கான்.. ஆனா அவன் வாங்கிய வரமே நீதானு ஒருநாள் புரிஞ்சிப்பான்.
தேவா கெட்டவன் கிடையாது, ஷர்மியை மறக்க முடியாம தவிச்சிட்டிருக்கான்.. கோபத்துல எதாவது சொன்னானா நீயும் பதிலுக்கு பேசு, திட்டு, என்னவோ செய்.. ஆனா என் மகனை விட்டு போக மட்டும் நினைச்சிடாத மங்கை..” என்றார் யாசகமாக.
தேவா எத்தனை மறுத்தும் பிடிவாதமாய் திருமணம் கேட்டதே நான்தான், எதிர்பாராத திருமணம் என்றாலும் தான் நினைத்ததுதானே நடந்திருக்கிறது என நிம்மதி கொள்வதற்கு மாறாக, ஏனோ மங்கை மனம் கணத்திருந்தது.
இச்சமயம் கற்பகத்தின் பேச்சு சற்றே தெம்பை கொடுக்கவும்.. “என் மகனுக்காக உங்க மகனை விட்டு எப்பவும் போக மாட்டேன் ஆன்ட்டி.” என்றாள் திடமாக.
“மங்கை..” என ஆரத் தழுவி சந்தோசித்தார்.
கோவிலில் அறிவு அவன் அன்னையிடம் பேசியதையும், தற்போது மங்கை கற்பகத்திடம் கொடுத்த வாக்கையும் நினைத்துப் பார்க்க, இப்பெண்ணின் கழுத்தில் நண்பன் எப்படி தாலி கட்டினான் என தற்போதுதான் நிகிலிற்கு புரியவும்..
“மனைவி இறந்த துக்கத்தோடு, இப்படியான குழந்தை பிரச்சனையும் இருக்க, எதையும் காட்டிக்கொள்ளாமல் எத்தனை மனஉளைச்சலில் இருந்திருக்கிறான்.? என நண்பனுக்காக வருந்தியவன்..
ஷர்மிளாவை நினைத்து மனதை பெரிதாய் உழட்டிக்கொள்வான் என்பதால் அருகிலிருந்து நண்பனைத் தேற்றுவதற்காக.. “ம்மா நான் கிளம்பறேன். டைம் ஆகுது.” என்றான் நிகில்.
“அடடே.. சித்த இருப்பா, மருமக வந்ததுல உன்னை மறந்துட்டேன், உன்னாலதான் என் மகன் கல்யாணத்தை பார்க்க முடிஞ்சது, ஒரு வாய் இனிப்பு சாப்பிட்டு போவ..” என்று கிச்சனுள் சென்று அவசரமாக கேசரியை கிண்டி எடுத்து வந்தார்.
“இனிப்பு செய்யிறாப்பில வீட்டுல எதுவும் பொருள் இல்ல, ரவைதான் இருந்தது, அவசரத்துக்கு சாப்பிடு தம்பி, இன்னொருநாள் விருந்து வைக்கிறேன்.” என அறிவிற்கும் நிகிலிற்கும் கேசரியை கொடுத்தவர்.. “வந்து விளக்கேத்து மங்கை.” என விளக்கேற்ற வைத்து, மருமகளிற்கு பால்பழம் கொடுத்தார்.
கேசரி சாப்பிட்டதும் நிகில் மங்கையிடம்.. “உன் நம்பர் சொல்லுமா.” என்க.. மங்கை விழிக்கவும்.. “நானும் தேவாவும் ஒரே கம்பெனியிலதான் ஒர்க் பண்றோம், தேவாவை கல்யாணம் செய்து எனக்கு தங்கைனு ஆகிட்ட, அப்போ கல்யாண கிஃப்ட் கொடுக்கனும்தான.?” என நிகில் உரிமையோடு கேட்கவும், மங்கை எண்ணை சொன்னாள்.
திருமண வைபவ புகைப்படத்தை மங்கைக்கு அனுப்பி.. “தேவாக்கு பிடிக்காதவரை அவனோட இருக்கிறது ரொம்ப கஷ்டம்தான், ஆனா அவன் மனசுல இடம்பிடிச்சிட்டா அவனை மாதிரி ஒரு நல்லவனை நீ எங்கையும் பார்க்க முடியாதுமா..” என பெருமையாக எடுத்துரைத்து..
“குழந்தைக்காக பெரிய ரிஸ்க் எடுத்திருக்க, உன் நல்ல மனசுக்கே கண்டிப்பா உன் வாழ்க்கை நல்லா இருக்கும்.” என மங்கைக்கு வாழ்த்து சொல்லி, நண்பனை சமாதனம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைக்க கிளம்பினான்.
என்னதான் தேவா மீது கோபம் இருந்தாலும், அவன் கோபத்திற்கான முழுகாரணம் தங்கைதான் என புத்திக்கு தெரிந்ததுதான்..
ஆனாலும் இப்படியான திருமணத்தை நடத்திக்கொண்ட தேவாமீது, நேசமிகு தங்கையின் அண்ணனாக அறிவுக்கு தாளமுடியாத வருத்தம் மனம்முழுவதும் ஆட்கொண்டிருக்க, இச்சமயம் தேவாவை எதிர் கொள்ளப்பிடிக்கவில்லை.
அவன் வருவதற்குள் கிளம்பிடலாம் என எண்ணி..“ஆன்ட்டி, இன்னைக்கு காலைலதான் இந்தியா வந்தேன், ரொம்ப டையர்டா இருக்கு, நாங்க கிளம்பறோம்.” என்றான் அறிவு.
கற்பகம் மங்கையின் முகம் பார்க்க, இங்கிருக்கும் எண்ணம் முகத்தில் தென்படவில்லையென்றதும்.. இப்படி கல்யாணத்தை நிச்சயம் தவமணியால் ஏற்றுக்கொள்ள முடியாமல் கோபத்தை மகள் மீது காண்பிப்பார்..
நீ நினைக்கும் அளவிற்கு என் மகன் மோசமில்லை என தவமணிக்கு எடுத்துரைக்க வேண்டும் என்று, அறிவிடம்.. “சரி கண்ணு, நானும் வரேன்..” என தனதறைப் புகுந்தவர் ஐந்தே நிமிடத்தில் குழந்தைக்கு தேவையான உடமைகளோடு வந்தார்.
தற்போதுதான் அண்ணனின் திருமணம் நியாபகத்திற்கு வர, அவனின் இனிமையான சூழலை கெடுத்துவிட்டோமே என.. “சாரி அறிவு..” என்றாள் மிகுந்த வேதனையோடு.
“ஹே.. எதுக்கு சாரி?” என மங்கையின் கையை ஆதரவாய் பிடித்தவன்.. “ஆமாம் ஆரா, அம்மா சொன்னது எல்லாம் உண்மைதான்.. ஆனா அம்மா கவலை படுற அளவுக்கு தேவா மோசம் கிடையாது, அதோட இங்க ஆன்ட்டி மங்கைக்கு பக்கபலமா இருக்காங்க. நீ கவலைப்படாத.” என்றான்.
“போட்டோ அனுப்புங்க.” என ஆராதனா சொல்ல, மங்கை மொபைலிலிருந்து அனுப்பி வைத்தான். ஆராதனா “ஹே.. அண்ணா ஹேண்ட்ஸமா இருக்காங்க, இரண்டாவது கல்யாணம்னதும் ரொம்ப வயசானவரோனு பயந்துட்டேன்.” என்றாள்.
அறிவு.. “ஹ..ஹா.. நல்லகாலம் அப்படியேதும் இல்லை, எங்கம்மாக்கு மருமக, மருமகன் இரண்டு பேருமே அழகானவங்களா வாய்ச்சிட்டாங்க..” என இயல்புக்கு வந்தான் அறிவு.
ஆராதனா.. “ம்.. எங்கத்தை மகன், மகளுக்கு மட்டும் என்ன குறைச்சலாம்?” என்றாள் சிறு பிணக்கோடும் வெக்கத்தோடும்.
“ஹா..ஹா.. உங்கத்தையோட மகன் செம ஹேண்ட்ஸம்தான்.. ஆனா மகதான் நார்மல் உயரத்தை விட கொஞ்சம் கம்மி.. அதுவும் தேவா பக்கத்துல நிக்கும்போது அவர் நெஞ்சுக்குத்தான் இருக்கா.” என தங்கையை கிண்டல் செய்தான் சிரிப்போடு.
“ஆத்தீ.. அறிவில்லாமலா என் மகன் லட்ச கணக்குல சம்பளம் வாங்குறான்?” என பொய்யாய் முறைத்தார் மருமகளை.
“ஏய் ஆரா.. நான் அப்புறம் பேசுறேன்..” என இணைப்பை துண்டித்தவன்.. “அதான? முட்டாளுக்கா இவ்வளோ சம்பளம் தருவாங்க?” என்றான் இலகுவாக.
மங்கை முறைக்க.. “நீ ஆசைப்பட்ட வாழ்க்கைதான கிடைச்சிருக்கு? இனி அதை எப்படி சரி செய்யனும்னு யோசிக்கிறதை விட்டுட்டு, இப்படி உர்ருனு இருந்தா எல்லாம் சரியாகிடுமா?