அறிவுக்கரசு, ஆராதனா, மங்கை மூவரும் காலை பதினொரு மணிக்கெல்லாம் சென்னை வந்திருந்தனர். இன்றே கணவன் வீடு சென்றால் மீண்டும் கட்டில் சண்டை வரும், அதோடு நாளை ஷர்மிளாவின் நினைவுநாள் என்பதால் தன்னைப் பார்த்தால் இன்னும் வேதனையடைவான் ஆகையால் நாளை செல்லலாம்..
நாளையும் மகனுக்கு கேக் வெட்டியதும் கிளம்பி இங்கே வந்திடலாம், அறிவு அமெரிக்கா செல்லும் வரை இங்கேயே இருக்கலாம், அண்ணன் அண்ணி தனிமையையும் கெடுக்காமல் வேலைக்கு சென்றிடலாம் என முடிவெடுத்தாள்.
மதியத்திற்கு தவமணி சமைத்துக் கொடுத்திருக்க, “மங்கை.. சஞ்ஜெய்க்கு டிரஸ், டாய்ஸ்லாம் வாங்க போகனும்.. அப்படியே உனக்கு தேவையானதையும் இன்னைக்கே பர்ச்சேஸ் பண்ணிடலாம்.” என்றான் அறிவு.
“எனக்கென்ன வாங்கபோற? சஞ்ஜெய்க்கு மட்டும் வாங்கினா போதும்.” என மறுத்தாள்.
“அங்க போனதுக்கப்புறம் உன் டிரெஸ்செல்லாம் எங்க வச்சிப்ப? பீரோ, டிரஸ்ஸிங்டேபிள் இப்படி உனக்கு தேவையானதைதான் சொல்றேன்.”
“இங்க இருக்கிறதே எல்லாம் புதுசுதான் அறிவு.. இதையே எடுத்துட்டு போய்க்கிறேன்.” என்றாள்.
“இங்க டாக்டர்கிட்ட நாளைக்கு போய்ட்டுதான் எனக்கு கல்யாணம் ஆன விசயத்தை சொல்லி, வேலையை விட்டு நிற்க போறதையும் சொல்லனும். டாக்டர் ரொம்ப நல்லடைப், இப்படி சடர்னா வெளில வரதுக்கு எனக்கே கஷ்டமா இருக்கு..
“அதனால?” என அறிவு முறைக்க.. “கோபப்படாத அறிவு.. எம்.ஆர்.பி. எக்ஸாம் ரிசல்ட்ஸ் இன்னும் பத்து பதினைஞ்சு நாள்ல வரப்போகுது.. நல்ல ரிசல்ட்டா வந்தா ஜாப் எங்க கிடைக்குதோ அங்கதான் இருந்தாகனும்..
“எப்படியும் வேலையை விட்டுதான் ஆகனும்.. அதை நாளைக்கே விட்டுடு, கவர்மண்ட் ஜாப் கிடைக்கும்போது பார்த்துக்கலாம், அதுவரை உன் புருசன் வீட்டுலதான் இருக்கனும். இங்க தனியா இருக்கக்கூடாது.” என்றான் மிரட்டலாக.
“அறிவு.. நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளேன்..” என கெஞ்சலாய் சொன்னவள்.. “தேவா ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருக்கார், நாளைக்கு ஷர்மிளாக்கா நினைவுநாள்.. இந்தநேரம் புதுப்பொண்டாட்டியா அங்க போறதுல எனக்கு விருப்பம் இல்லங்கிறதோட அசிங்கமாவும் இருக்கு..
கட்டில் பீரோ வாங்குறதெல்லாம் இப்போதைக்கு வேணாம்.. தேவைப்படும்போது ஆராகிட்ட சொல்றேன், ஆராவும் அம்மாவும் வந்து வாங்கி கொடுக்கட்டும்..” என பொறுமையாய் எடுத்துரைத்தாள்.
மங்கை சொல்வது அவள் வரையில் சரிதான் என்றாலும்.. “கல்யாணமான பொண்ணுக்கு எதுவுமே செய்யாம எப்படி மங்கை?” என அறிவு ஆதங்கப்பட, “எதாவது வாங்கி கொடுத்தேதான் ஆகனும்னா.. கட்டில் பீரோ வேணாம், கார் வாங்கி கொடு.” என்றாள் சலுகையாக.
தேவேஷிடம் கார் இல்லையென திருமணத்தன்றே தெரிந்திருக்க, உண்மையில் காரும்தான் வாங்கிக்கொடுக்கலாம் என நினைத்திருந்தான் அறிவு.. தந்தை இறந்த பின்னே உணவைத் தவிர்த்து மற்ற அனைத்திலும் ஆடம்பரத்தை தவிர்த்த தங்கை, இப்பொழுது காரை ஏற்பாளா என அறிவு நினைத்திருக்க, மங்கையே தானாக விரும்பிக் கேட்கவும்.. “உண்மையாவா?” என்றான் ஆச்சர்யமாக.
“ஆமாம் உண்மையாதான் கேட்குறேன்.. தேவாகிட்ட இருந்த காரை ஷர்மிளாக்காவோட தம்பிக்கு கொடுத்துட்டார். சஞ்ஜெய்க்கு அடிக்கடி ஜுரம் வரும்.. தேவா இருந்தா பைக்ல கூட்டிட்டு போய்டுவார், அவர் கம்பெனிக்கு போய்ட்டா ஆன்ட்டி டேக்சிக்காக வெய்ட் பண்ணிட்டிருப்பாங்க..
கார் இருந்தா தேவாவை எதிர்பார்க்காம எங்கனாலும் நானும் ஆன்ட்டியும் போய்க்குவோம். நான் வேலைக்கு போய்ட்டாலும் யாராவது டிரைவர் ஏற்பாடு செய்துக்கலாம்.” என்றாள்.
“ம்..” என தன்னிரு புருவம் உயர்த்தி தங்கையை மெச்சுதலாய் பார்த்தவன்.. “என்ன கார் வேணும்? இன்னைக்கே புக் பண்ணிடலாம்.” என்றான் மகிழ்வோடு.
“அநியாயத்துக்கு பெரிய மனுசி ஆகிட்ட..” என சிலாகித்தவன்.. “சரி கிளம்பலாம், இப்போ கிளம்பினாதான் ஸ்வீட்ஹார்ட் பர்ச்சேஸ் முடிச்சிட்டு கார் பார்க்க டைம் சரியா இருக்கும்.” என்க..
“நான் போய் முகம் கழுவிட்டு வரேன்.” என மங்கை பாத்ரூமிற்குள் போக.. “நான் கொஞ்சநேரம் ரெஸ்ட் எடுக்கறேன்.. நீங்க போய்ட்டு வரிங்களா?” என ஆரா தயக்கத்தோடு கேட்க..
நேற்றிரவும் நள்ளிரவு வரை தூங்காததாலும், காலை ஆறு மணிக்கெல்லாம் எழுந்ததாலும் மனைவி விழிகள் சிவந்திருக்க.. “டையர்டா இருந்தா ரெஸ்ட் எடு.. ஆனா நைட் டையர்டா இருக்குனு சொல்லக்கூடாது.” என கள்ளச்சிரிப்போடு கிசுகிசுத்தான்.
ஆராதனா நாணிக்குனிய.. “உனக்கென்ன வேணும்?” என மனைவி தாடை தொட்டு நிமிர்த்த.. “ரெஸ்ட்தான் வேணும்.” என ஆராதனா முறைக்க.. “அது நான் அமெரிக்கா கிளம்பினதுக்கப்புறம்தான் கிடைக்கும். அதுவும் இரணடுமூனு மாசத்துக்குத்தான்.. அடுத்தமுறை வரும்போது என்னோட கூட்டிட்டு போய்டுவேன்.” என்றான் கண்ணிமைத்து.
“நான் இப்போவே வரேனுதான் சொன்னேன்.. நீங்கதான் கூட்டிட்டு போக மாட்றிங்க.” என இவள் கணவன்மீது குறைபட..
“ஆரா.. என் ஒர்க் அப்படி, இந்த முறை அமெரிக்கா போனா அங்கையே இருக்கப்போறதில்ல, அதர் கன்ட்ரீஸ்ல எங்க பிரான்ச் இருக்கு, இயர்லி ஒன்ஸ் இப்படி சுத்தற மாதிரி வரும். அதுக்கப்புறம் பத்து மாசம் பக்கம் அமெரிக்காவுலதான் இருப்பேன். ம்ஹும்.. இருப்பேன் இல்ல, இருப்போம்.” என தேற்றினான் மனைவியை.
முகம் கழுவி வெளியே வந்த மங்கை.. “நீங்க போய் ரெடியாகுங்க ஆரா..” என்க.. “ஆராக்கு டையர்டா இருக்காம் மங்கை, அவ ரெஸ்ட் எடுக்கட்டும், நாம போய் வரலாம்.” என்றான் அறிவு.
அண்ணியைப் புரிந்தவளாய்.. “ஓஹ் சரி.. லன்ச் சாப்பிட்டு தூங்குங்க ஆரா..” என்று அண்ணனோடு கிளம்பிய மங்கை மாலை ஐந்து மணிபோல் வந்தனர்.
ஆறுமணிபோல்.. “அறிவு.. எதாவது படத்துக்கு போய்வாங்களேன்.” என மங்கை சொல்ல, “நைட் டின்னருக்கு என் ஃப்ரண்ட் கூப்பிட்டிருக்கான்.. அவன் வீடு தாம்பரம், இங்கயிருந்து போய் சேரவே ஒன்ஹார் ஆகும்.. அதனால இப்போ கொஞ்ச நேரம் ரெஸ்ட்.” என படுத்துறங்கியவன்.. இரவு எட்டு மணிபோல் மனைவியோடு கிளம்பினான்.
கிளம்பிய அரை மணிநேரத்தில் அறிவிடமிருந்து அழைப்பு வர.. “என்னாச்சு அறிவு?” என மங்கை பதற.. “ஹே.. ஒன்னுமில்ல, நைட் ஃப்ரண்ட் வீட்லதான் தங்கபோறேன்.. காலேஜ் டேஸ்ல பார்த்தது, திரும்ப எப்ப பார்ப்போம்னு ரொம்ப ரிக்வஸ்ட் பண்றான், மறுக்க முடியல.. எங்களுக்காக காத்திருக்காம தூங்கு.” என்றான்.
இப்படி யார் வீட்டிலும் அறிவு தங்கமாட்டான் என்றுணர்ந்த மங்கைக்கு புன்னகை வர.. “சரி.” என இணைப்பை துண்டித்தாள் மகிழ்வோடு. மங்கை நினைத்தது மிகச்சரியே.. அறிவும் எந்த நண்பன் வீட்டிற்கும் செல்லவில்லை, மனைவியோடான தனிமைக்காக ஹோட்டலில் அறையெடுத்திருந்தான்.
*** **** **** ******
காலை ஆறு மணிக்கெல்லாம் குளித்து தயாராகியிருந்தாள் மங்கை. ஆனால் அங்கு தேவேஷ் மனைவியின் இறந்தநாளை நினைப்பானா? மகனின் பிறந்தநாளை நினைப்பானா? என்ற தவிப்பிருக்க, எட்டு மணிபோல் கிளம்பலாமா? இல்லை தேவேஷ் கம்பெனி சென்றபின்னே கிளம்பலாமா என்ற யோசனையோடு அமர்ந்திருந்தாள் மங்கை.
ஏழு மணிபோல் அறிவும் ஆராதனாவும் வர.. மங்கை.. “நான் டிபன் செய்யறேன், நீங்க ரெடியாகுங்க.” என கிச்சனுள் நுழைந்தாள்.
குளித்து தயாராகி சாப்பிட அமர்ந்தவன்.. “முகம் ஏன் டல்லடிக்குது?” என அறிவு அக்கறையாய் விசாரிக்க.. தன் தயக்கத்தை தெரிவித்தாள் மங்கை.
“ரெண்டு நாள் முன்ன ஆன்ட்டி போன் செய்தப்போ சஞ்ஜெய் பர்த்டேக்கு வரேனு சொல்லியிருந்ததான? ஆன்ட்டி தேவேஷ்கிட்ட சொல்லியிருப்பாங்க, இன்னைக்கு நீ வருவனு தேவேஷ்க்கு தெரியும்.. தாலி கட்டும்போது எல்லாம் யோசிச்சுதான கட்டியிருப்பார்.? அதனால ரொம்ப ஒர்ரி பண்ணிக்காத.” என தேற்றி சாப்பிடலானான்.
அனைவரும் சாப்பிட்டு முடிக்க, “கிளம்பலாம் மங்கை.” என குழந்தைக்கு வாங்கிய உடை, பரிசுப்பொருள்கள் அனைத்தும் காருக்கு எடுத்து போனான்.
கற்பகம் அழைப்பு வர.. “ஆன்ட்டி..” என்றாள் தவிப்பாக.
பொண்டாட்டி நினைப்புல இருப்பானேனு வாக்குவாதம் பண்ணாம சாமி கும்பிட்டு வந்தேன். வீட்டுக்கு வந்ததும் ரூம்க்குள்ளயிருந்து கேக்கு, புதுத்துணி எல்லாம் எடுத்து வந்தான்.
சஞ்சுக்குட்டிக்கு புது டிரெஸ் போடலாமானு குழந்தைகிட்ட நல்லபடியா சிரிச்சி பேசவும் கொஞ்சம் நிம்மதியானுச்சி. புதுத்துணி பார்த்ததும் அப்பா குளிச்சினு குழந்தையே சொன்னான்.
கோவிலுக்கு போய்ட்டு வந்து எப்படி குளிக்க வைக்கிறதுனு அப்படியே போட்டு விட சொன்னேன். இந்நேரத்துல குளிச்சா டாக்டர் ஊசி போடுவாங்கனு குழந்தைக்கு துணி மாத்தி கேக் வெட்டி, பாட்டெல்லாம் பாடினான். விதவிதமா போட்டா எடுத்தான்.
குழந்தைக்காகவாவது மனசு மாறினானேனு குலசாமிக்கு ஆயிரம் நன்றி சொல்லிட்டு காபி வைக்கலாம்னு கிச்சனுக்கு போய் காபி வைக்கிறதுக்குள்ள, எனக்கு வெளில போகனும். முக்கியமான வேலையிருக்கு, வர சாயங்காலம் ஆகிடும்னு கிளம்பினான்.
காபியாவது குடிச்சிட்டு போடான்னேன்.. பைக்கை நிறுத்தி, கேக் சாப்பிட்டேன்ல? காபி வேணாம்னு கிளம்பிட்டான். அவன் கோபமா சொல்லியிருந்தாலாவது பரவாயில்ல மங்கை, சிரிச்சிட்டே சொல்லிட்டு போனான். அதுதான் எனக்கு பயமாயிருக்கு.” என்றார் அதீத கவலையோடு.
“கம்பெனியில எதாவது முக்கியமான வேலையா இருக்கும். கவலைப்படாதிங்க ஆன்ட்டி. இன்னும் ஒரு மணிநேரத்துல வந்திடறேன்.” என தேற்றி இணைப்பை துண்டித்து, விசயத்தை அண்ணனிடம் பகிர்ந்தாள்.
கற்பகம் போனில் பேசிக்கொண்டிருக்க, வீட்டிற்கு வந்த மூவரும் வாசற்படியிலேயே நின்றனர்.. எதோ நிழலாடுவதுபோல் கற்பகத்திற்கு தோன்ற, பிறகுதான் வாசலைப் பார்த்து, ஆரவாரத்தோடு எழுந்தவர்.. “வா.. வா மங்கை, வாங்க தம்பி, வா கண்ணு..” என வரவேற்று.. “ஷர்மிளாவோட அம்மாகிட்ட பேசிட்டிருந்தேன்.. உக்காருங்க தம்பி..” என்ற கற்பகம்..
மங்கை முகம் தவிப்பிற்குள்ளாக.. “எல்லாத்தையும் பேஸ் பண்ணித்தான ஆகனும்? பேசு மங்கை.” என ஊக்கினான் அறிவு.
மொபைலை வாங்கியவள்.. “ஹலோ..” என்க.. “உங்க கல்யாணம் எந்த நிலையில நடந்ததுனும், எப்படி நடந்ததுனும் இப்போதான் சம்மந்தி சொன்னாங்க.. என் மகளுக்காக எத்தனை பெரிய உதவி செய்திருக்க?” என பாராட்டி.. “அவளுக்குத்தான் குடுத்து வைக்காம போச்சு.” என்றார் கமறிய குரலில்.
மங்கையும் வேதனைக்குள்ளாக.. “ஷர்மியும் தேவாவும் கல்யாணம் செய்துட்டு வந்ததும், கஷ்டப்பட்டு படிக்க வச்சா, சொந்த வீடுகூட இல்லாதவனை கட்டிட்டு வந்து நிக்கிறியேனு ரொம்ப திட்டினேன்..
கோபமா ஷர்மியை கூட்டிட்டு போனார், கோபத்துல என்கிட்ட பேசாம விட்டாரே தவிர, மத்தபடி ஷர்மி சம்பாத்தியத்துலதான் என் மகன் படிச்சான், என் மகன் வேலைக்கு போற வரைக்கும் சம்பளத்துல பாதிக்கு மேல என்கிட்டதான் கொடுத்திட்டிருந்தா, அவ பணம் கொடுக்கலைனா எங்க நிலைமை ரொம்ப மோசமாகியிருக்கும்.
நானா பார்த்திருந்தனா கூட இப்படியொரு மாப்பிள்ளை கிடைச்சிருக்கமாட்டார்னு போகப்போகத்தான் புரிஞ்சது. ஆனாலும் நான் ஆரம்பத்துல பேசிய வார்த்தைகள் அவரை ரொம்ப காயப்படுத்திடுச்சி.. ஷர்மி சாகும் வரைக்கும் என்னோட பேசினதேயில்ல..
இதெல்லாம் எதுக்கு சொல்றேன்னா, இப்போ உன்மேல கோபமா இருந்தாலும் போகப்போக தேவா உன்னைப் புரிஞ்சிப்பார். ஆனா அவர் கோபத்தை காட்டுறாரேனு நீயும் வார்த்தையை விட்டுடாத, அதை மட்டும் என்னைக்கும் மறக்கமாட்டார்.” என்றார் அறிவுரையாக.
இவரின் மகள் இடத்தில் தற்போது நாமிருக்கோம் என்ற கோபம் சிறிதும் இல்லாததோடு, மருமகன் நன்றாக இருக்கவேண்டும் என நினைக்கிறார்களே என வியப்பாய் நினைத்திருந்தாள் மங்கை.
“சரிம்மா, நான் வைக்கிறேன்.” என இணைப்பு துண்டிக்கப்பட, கற்பகம்.. “ஷர்மி இருக்கும்போதே வருஷத்துக்கு ஒருமுறை கூட வரமாட்டாங்க மங்கை. ஷர்மிக்கு திதி கொடுக்க போறாங்களாம், அதுக்கு அழைக்கதான் போன் செய்தாங்க..
தேவாக்கு கல்யாணம் ஆன விசயத்தை சொன்னேன். உண்மையா என்ன நினைப்பாங்களோனு தயக்கத்தோடதான் சொன்னேன்..
ஆனா நினைச்ச மாதிரி இல்லாம, “ஷர்மி நினைப்புல எங்கடா தனி மரமாவே இருந்துடுவாரோனு கவலையா இருந்தது. இப்போதான் மனசுக்கு நிம்மதியாயிருக்குனு சொன்னாங்க.” என்றார் சந்தோசத்தோடு.