“யாரை கேக்குற?” என முறைப்பாக கேட்க.. யாரை கேட்கிறேன் என தெரிந்தே கேட்கும் அன்னையிடம்.. “உன் பேரனோட அம்மாவைத்தான் கேட்டேன்.” என்றான் தானும் முறைப்பாக.
“உன் பொண்டாட்டி பத்திய தகவல் வேணும்னா கேளு சொல்றேன். என் பேரனோட அம்மா எப்போ வந்தா உனக்கென்ன?” என்றார் கடுப்பாக.
யப்பா.. செம ஹாட்டா இருப்பாங்க போலஎன நினைத்தாலும்.. “அப்படி சொல்லித்தான அவளை கல்யாணம் செய்துக்க கேட்டா.. அவ கேட்டது தப்பில்ல? அதை நான் சொன்னதுதான் தப்பா?” என பதில் கொடுத்தான் இலகுவாக.
தனக்கும்தானே ஒருமாதிரி மனதை அழுத்துது.. ஆனால்.. என்ற யோசனையோடே சாப்பிட்டு எழுந்தவன்.. “கொஞ்ச நேரம் படுக்கிறேன்ம்மா.” என உள்ளே வந்து மங்கையின் நினைவோடே பெட்டில் சரிந்தான்.
**** **** *****
அடுத்து வந்த நாட்கள் ப்ராஜக்ட் வேலையில் மூழ்கினான் தேவேஷ். மங்கையை பார்க்க செல்ல முடியாத அளவிற்கு வேலைகள் என்றில்லை..
ஆனால் மங்கையைப் பார்த்தால் என்ன பேசுவது? எப்படி அவளின் வாழ்வை சரி செய்வது என்ற தயக்கமும் சேர்ந்து கொள்ள அனுதினமும் அவளை நினைப்பதை தவிர்க்க முடியாமல் தவித்தவன் வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டான். இப்படியாக ஒருமாதம் கடந்திருந்தது.
மங்கை எந்த நேரம் வீட்டிலிருப்பாள் என தெரியாததால், மங்கை வேலைக்கு போன நாளிலிருந்து மதிய உணவை கம்பெனியிலேயே பார்த்துக்கொண்டவன், மகனிற்கு காலையில் லேசான காய்ச்சல் இருந்ததால் இன்று வீடு வந்தான்.
“என்ன தவமணி இப்படி சொல்லிப்புட்ட? என் மருமகளுக்கு என்ன குறைச்சல்? ஷர்மிளா அழகுதான், ஆனா எல்லாமும் பிறவியிலயே வந்ததில்ல, எதோ பார்லருன்னுவாங்களே… அங்க போய் மூஞ்சி கழுவறது, புருவ முடியை புடுங்கறதுனு மாசமாசம் தவறாம பண்ணிக்குவா.
கல்யாணத்துக்கு முன்னாடியும் சரி, இப்போவும் சரி.. இது மாதிரிலாம் மங்கை செய்து ஒருநாளும் நான் பார்த்ததேயில்ல, ஆனாலும் மங்கை முகம் பளிங்காட்டம் பளிச்சினு இருக்கும். என்ன? இடுப்புவரை முடியிருந்தாலும் எப்பவும் கொண்டைதான் போட்டுக்குவா.
ஒரு நாளாவது வயசு புள்ளைக்கு லட்சணமா ஜடை பின்னி பூ வைக்கிறியானு கேட்டா, ஆஸ்பத்திரிக்கு போகும்போது இப்படிதான் போகனும், அதுவே பழகிடுச்சி ஆன்ட்டிம்பா..
முதல்ல இந்த ஆன்ட்டினு கூப்பிடறதை நிறுத்திட்டு, அத்தைன்னு சொல்லுனு எத்தனை நாள் சொல்லிட்டேன். அது தானா வந்தா கூப்பிடறேன். இப்போதைக்கு இப்படித்தான் கூப்பிட வருதுனுவா.
அவளும்தான் எல்லா விசயத்துலயும் பிடிச்ச பிடியிலயே இருக்கா, ஹாஸ்டல்ல தங்க வேணாம், வீட்டுலயிருந்து வேலைக்கு போனு எத்தன முறை சொல்லிட்டேன், கேக்குறாளா?” என கற்பகம் பேசிக்கொண்டேயிருக்க..
மங்கையைப் பற்றி அறியவேண்டி நின்றவனுக்கு, அன்னை அவளை குறை கூறியது பிடிக்காமல் போக.. “சஞ்சுக்கு காய்ச்சல் பரவால்லையாமா? தூங்கறானா?” என்றபடி உள்ளே வந்து தன் இருப்பை உணர்த்தினான் தேவேஷ்.
“வா தேவா.. சாப்பிட வரனு போன் பண்ணியிருக்கலாமில்ல? நான் எனக்கும் பையனுக்கும் மட்டும் செய்து சாப்பிட்டேன். ஒரு பத்து நிமிஷம் இரு, சாப்பாடு வைக்கிறேன்.” என்க.. “சரிங்க, நான் அப்புறம் பேசறேன்.” என இணைப்பை துண்டித்தார் தவமணி.
“எனக்காக வைக்காதம்மா, ப்ரட் இருந்தாகூட போதும்.”
“மதியத்துக்கு பிரட்டு எப்படி காணும்? குழம்புதான் இல்ல, கூட்டும், ரசமும் கொஞ்சம் இருக்கு, அதோட தயிர் போட்டுக்க, சாப்பாடு வேக பத்து நிமிஷம்தான் ஆகும்.” என கிச்சன் சென்று குக்கரில் அரிசி வைத்து வந்தார்.
எவ்வளோ சம்பளம் வாங்குறானு தெரியல, ஆனா மாசமாசம் இங்க பதினைஞ்சாயிரம் கொடுத்துடறா. கொஞ்சம் சாப்பிட்டாலும் வக்கனையாத்தான் சாப்பிடுவா, அங்க அவ தங்கறதுக்கு எவ்வளோ ஆகுதுனு தெரியல.. சாப்பாட்டுல ஏது குறைச்சிக்கிறாளானு கவலையா இருக்கு..” என புலம்ப..
மங்கை அன்னையிடம் பணம் கொடுப்பது தெரியாததால் தற்போது அதிர்வானவன்.. “நீ எதுக்கும்மா அவகிட்ட காசு வாங்குற?” என்றான் கோபமாக.
“ம்.. நான்தான் வாங்குறேன்.” என நொடித்து.. “முதல் மாசம் கொடுக்கும்போதே வேணாம்னேன், பணத்தை வாங்கிக்கலனா வீட்டுக்கே வரமாட்டேன்னா.. அப்பவும் நான் வாங்கிக்கல.
சொன்ன மாதிரியே இரண்டு மாசமா வராம போகவும்தான், நானே போன் செய்து பணத்தை வாங்கிக்கிறேன், குழந்தை உன்ன கேக்குறான், வீட்டுக்கு வான்னு சொன்னேன். அதுக்கப்புறம்தான் வந்தா.” என சிடுசிடுத்தார்.
ஸ்டார்ட்டிங் சேலரி எவ்வளோ கொடுத்துடுவாங்க? மீறிப்போனா இருபது, இல்ல இருபத்தைந்தாயிரம் வாங்குவாளா? அதுல பதினைஞ்சாயிரத்தை இங்க கொடுத்துட்டு செலவுக்கு என்ன செய்வா? என கோபம் வர..
மகனின் முகம் பார்த்தவர், “இதுக்கே கோபம் வந்தா.. அப்போ மங்கை மூனு லட்சத்தை என்கிட்ட திருப்பி கொடுத்தது தெரிஞ்சா என்ன செய்வ?” என்றார்.
“எந்த மூனு லட்சம்?” என தேவா முகம் சுருக்க.. “உன் மகன் பிறந்தப்ப, ஆஸ்பத்திரிக்கு மங்கை கட்டின பணத்தை கார்த்திக்கிட்ட கொடுத்தனுப்பினயில்ல? உனக்கும் மங்கைக்கும் கல்யாணம் முடிஞ்ச அடுத்த நாளே என்கிட்ட பணம் கொடுத்துட்டா.
எதுக்கு இவ்வளோ பணம்? என்கிட்ட எதுக்கு கொடுக்குறனு கேட்டேன். என் மகனுக்காக செய்த செலவுல என் பங்குக்கு மூனுலட்சத்தை வச்சிக்கிறேன். இது உங்க மகன் பங்கு. அது எதுக்கு எனக்கு.. உங்க மகன்கிட்டயே கொடுத்துடுங்கனு கொடுத்தா.”
“ஓ..” என புருவம் உயர்த்தியவன்.. “அவ பணம் கொடுத்ததை ஏன் என்கிட்ட சொல்லலை?” என்றான் கோபமாக.
ஒத்த பொட்டபுள்ளயை பெத்துட்டு இப்படி வாழாம இருக்காளேனு தவமணி புலம்பறா.. தவமணியை நினைச்சா எனக்கும் கஷ்டமாத்தான் இருக்கு. ஆனாலும் பெத்தவ சொன்னாலாவது இங்கையே தங்குவாளானு, உன் மகளும்தான் வீட்டுல தங்காம ஹாஸ்டல்ல இருக்கானு மங்கையை குறை சொல்லிட்டிருந்தேன்.” என்றார்.
“அவளுக்கு போன் போட்டு வர சொல்லு.” என்றான்.
சண்டையேது பிடிப்பானோ என பதறிய போதும்.. எப்படியும் தேவேஷ் அவளை அழைக்கமாட்டான் என்ற நம்பிக்கையோடு.. “உனக்கு வேணும்னா நீயே சொல்லு.” என உள்ளே போனார்.
எதையும் யோசிக்காமல் உடனே மங்கைக்கு அழைத்தான். நான்கைந்து முறை அழைத்தும் மங்கை அழைப்பை ஏற்காமல் போகவே.. வரும் வாரத்தில் மருத்துவமணை சென்று பார்க்கலாம் என நினைத்துக்கொண்டான்.
ஆனால் கம்பெனியில் வேலைகள் நெருக்க, இருபது நாளாகியும் மங்கையை பார்க்க முடியாமல்போனது. கம்பெனியில் தனது இருக்கையில் சாய்ந்து கண்மூடியபடி தேவேஷ் யோசனையில் இருக்க.. “என்ன தேவா? ஒரு மாதிரி இருக்க?” என்றான் நிகில்.
“ப்ச்.. ஒர்க்ல கான்சன்ட்ரேட் பண்ண முடியல.” என சலித்தான் தேவேஷ்.
“இன்னைக்கு அர்ஜன்ட் ஒர்க் ஏதும் இல்ல. வீட்டுக்கு போய் சஞ்சுவோட ஸ்பெண்ட் பண்ணு.அந்த வழுக்கு மண்டையன் நீ கேட்டா பர்மிஷன் கொடுப்பான்.” என்றான்.
“ம்..” என பர்மிஷன் கேட்டு வீட்டிற்கு கிளம்பினான்.
குழந்தை கற்பகம் அறையில் உறங்கிக்கொண்டிருக்க.. கற்பகம் சமையலறையில் இருந்தார். தேவேஷ் உள்ளே வருவது தெரிந்து ஆச்சர்யமானவர், மகன் அறைக்குள் புகுந்ததும் சத்தமின்றி தனதறைக்கு சென்று குழந்தையோடு தூங்குவதுபோல் படுத்துக்கொண்டார்.
ஆராதனா.. “அப்படி பிடிக்காத புருசனோ இருக்கனும்னு என்ன இருக்கு?” என்றாள் கோபமாக.
“அவருக்கு என்னை பிடிக்கலனா என்ன? எனக்கு அவரை பிடிச்சிருக்கே.” என காதலோடு மங்கை சொல்ல.. “மங்கை..” என ஆராதனா சந்தோசமாக.. “ஆமாம் ஆரா.. தேவா என்கிட்டயிருந்து விலக விலக, ஏனோ இன்னும் இன்னும் பிடிக்குது.
எனக்கு அவரை பிடிக்கிறது தெரிஞ்சா மகளுக்கு பிடிச்சிருந்தும், மருமகன் ஏத்துக்கலயேனு அம்மா ரொம்ப வேதனைப் படுவாங்க. அதான் வரவேணாம்னேன்.” என்றாள் வருத்தத்தோடு.
“வெறும் பிடித்தம் வாழ்க்கைக்கு போதுமா?” என ஆராதனா அங்கலாய்க்க.. “எனக்கு போதும் ஆரா..” என உள்ளார்ந்து சொன்னவள்.. “லவ் பண்றவங்க மனசுக்கு எது பிடிக்குதோ அதுக்கு தடைபோடாம இருக்குறதுதான உண்மையான லவ்?
என்னை பார்த்தா இரிட்டேட் ஆகறார். அதான் விலகியிருக்கேன். அதோட என்னைக் கட்டிக்கிட்டதால இப்படி ஆகிடுச்சினு எப்பவும் அவர் வருந்திடக்கூடாது. அப்படி அவர் வருந்திட்டார்ன்னா அப்போதான் என் காதல் தோத்ததா ஆகிடும். எனக்கும் நிம்மதியிருக்காது.
கல்யாணமானப்போ ரோசத்துக்காக அவர்கிட்டயிருந்து விலகியிருந்தேன், காதலிக்க ஆரம்பிச்சதிலயிருந்து அவர் நிம்மதிக்காக விலகியிருக்கேன்.. அவர் நிம்மதியா இருக்கும்வரை என் காதல் ஜெய்ச்சிட்டுதான் இருக்கும். நானும் சந்தோசமா இருப்பேன்.” என நிமிர்வாய் சொல்லி,
“புருசன் நிம்மதியை விட ஒரு நல்ல பொண்டாட்டிக்கு வேற என்ன வேணும்.?” என்றாள் காதலாக.
இரண்டு வருட காதல், ஐந்து வருட திருமண வாழ்க்கை வாழ்ந்தவள் தன் உணர்வையும், காதலையும் புரிந்துகொள்ளாமல், தற்கொலை செய்துகொண்டிருக்க, மங்கையின் புரிதலும், பக்குவமும் தேவேஷை நிலையிழக்கச் செய்ய.. நீர் நிறைந்த பாத்திரத்தில் சிந்தாமல் சிதறாமல் உள் நுழையும் பிம்பம்போல் நுழைந்திருந்தாள் மங்கையர்கரசி.
தற்போதுதான் யாரோ நிற்பதுபோல் தோன்ற சட்டென திரும்பிபார்த்தவள்.. “ஆரா நான் அப்புறம் பேசுறேன்.” என இணைப்பை துண்டித்தாள்.
அவன் நின்ற கோலம் அனைத்தும் கேட்டிருப்பான் எனப்புரிய.. அச்சோ என்றானாலும், எகுறுவானு பார்த்தா, ஃப்ரீஸான மாதிரி நின்னுட்டிருக்கான் என்ற யோசனையோடு வெளியே வர எத்தனிக்க.. அவளின் கைப்பிடித்து நிறுத்தியவன்.. “நான் என்ன பண்ணனும் சொல்லு.” என்றான்.
தேவேஷின் யாசகமான பார்வையும், தன் கையைப் பிடித்திருக்கும் செயலும் மங்கைக்கு ஏதோ போலாக.. “என்ன?” என்றாள் புரியாமல்.
“உன்னை விரும்புற தகுதி எனக்கில்ல.. ஸோ என்னால லவ் யூ சொல்ல முடியாது. ஆனா உன்கிட்ட சிறைபட்டு உன் ஆணைக்கு அடிபணியனும்னு தோணுது. சொல்லு.. நான் என்ன பண்ணனும்.” என்றான் கனிந்த குரலில்.
திகைத்தாலும், வாய்ப்பை நழுவ விடாமல்.. “ஓ.. நீங்க என் அடிமையா?நான் என்ன சொன்னாலும் செய்விங்களா?” என்றாள் சவாலாக.
“ம்..” என முழுமனதாய் ஆமோதிக்க.. அவளின் சிறிய கட்டிலில் அமர்ந்து.. தன் காலில் உள்ள மெட்டியை கழற்றியவள்.. உள்ளடக்கிய சிரிப்போடு தன் காலை உயர்த்திக்காட்டி.. “எனக்கு பாதபூஜை செய்துட்டு, இந்த மெட்டியை போட்டு விடுங்க.” என்றாள் அதிகாரமாக.
மங்கையருகே வந்து மண்டியிட்டு அமர்ந்தவன் அவளின் பாதத்தை தன் கைகளால் ஏந்தி முத்தமிட.. “என்ன பண்றிங்க?” என மங்கை காலை உருவ.. அழுத்தமாய் பிடித்து.. “நீதான பாதபூஜை செய்ய சொன்ன? புருசன் பொண்டாட்டிக்கு இப்படித்தான் பாதபூஜை செய்யனும். உனக்கு தெரியாதா?” என ஒவ்வொரு விரலாக முத்தமிட.. “வி..விடுங்க..” என மங்கை கெஞ்சலில் இறங்க..
அவளின் இன்னொரு கையிலிருந்த மெட்டியை பறித்து அணிவித்து, மீண்டுமொரு முத்தம் அழுத்தமாய் பதித்து மங்கையின் காதலை விரும்பி ஏற்றான் முழுமனதோடு.