எப்படியும் நமக்கு குழந்தை பாக்கியம் இல்ல, ஷர்மிளாகிட்ட பொறுமையா சொல்லி புரிய வச்சி, குழந்தைகளை வளர்த்தலாம்னு ரொம்ப ஆசைப்பட்டேன்.
மூனு மாசம் கழிச்சி குழந்தைகளுக்கு ஹாலிடே வரவும் ஷர்மிளாகிட்ட மெல்ல விசயத்தை சொல்ல நினைச்சப்போதான், சஞ்ஜெய் விசயத்தை சொன்னா.
இந்தளவுக்கு ஷர்மி போவானு நான் நினைச்சே பார்க்கல, இனி குழந்தைகள் விசயத்தை சொன்னா தேவையில்லாத பிரச்சனை பண்ணுவா, இப்போதைக்கு கார்டியனாவே இருந்துப்போம், கொஞ்ச வருசம் கழிச்சி சொல்லிக்கலாம்னு முடிவெடுத்தேன்.
அடுத்து அவ இறப்பு, குழந்தை வருகைனு என் நாட்கள் ரொம்ப டென்ஷனாவே போச்சு, சஞ்சுகுட்டி ஒருத்தனை பராமரிக்கவே அம்மா ரொம்ப கஷ்டப்பட்டாங்க, இந்த நிலையில அம்மாவால அவங்களையும் சேர்த்து பார்த்துக்க முடியாதுனு ஹாஸ்டல்லையே விட்டுட்டேன்.
அன்னைக்கு உன்கிட்ட இந்த விசயத்தைதான் சொல்ல நினைச்சேன். நீ டியூட்டிக்கு கிளம்பிட்ட, இப்போ நம்ம குழந்தை விசயம் கேட்டதும், இதை உன்கிட்ட சொல்லியே ஆகனும்னு தோணுச்சு.” என்றான் பரிதவிப்பாக.
“நான் தேவமங்கையேதான்.” என கணவனை பேரன்போடு கட்டிக்கொண்டாள் மங்கை.
“மங்கை.. மங்கை..” என தேவேஷ் சந்தோஷிக்க.. அவளின் அப்பா பற்றிய விசயங்களை சுருங்க சொன்னவள்.. “பாவம்னா சும்மானு நினைச்சிடாதிங்க, இன்னாரோட மகள்னு சொல்லவே அசிங்கப்படுற அளவுக்கு கொடுமையானவரா இருந்திருக்கார்.
நீங்க குழந்தை எடுத்த வளர்த்துறது எனக்கு எவ்வளோ நிம்மதியை கொடுக்குது தெரியுங்களா? உண்மையா இதை உங்ககிட்டயிருந்து நான் எதிர்பார்க்கவே இல்ல.. ரொம்ப பெருமையா இருக்குங்க.” என பெருமையடைந்தவள்..
“இனி குழந்தைகளுக்கு ஹாலிடேஸ் வந்தா நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடலாம். அவங்க தேவையை நிறைவேத்துறது மட்டும் இல்ல, தவறு செய்தா கண்டிக்கவும் நாம இருக்கோம்னு உணர வைக்கனும், அப்போதான் நல்லபடியா வளருவாங்க. ஒரு விசயத்தை கையிலெடுத்தா சிறப்பா செய்ய முடியலனாலும், குறைந்தபட்சம் சரியாவாவது செய்யனும்.” என்றாள் பொறுப்பாக.
ஷர்மிளாவாக இருந்திருந்தால் பணம் செலவாவதைப் பற்றி கவலைப்படமாட்டாள், ஆனால் என்கிட்ட சொல்லாம எப்படி செய்யலாம் என சண்டையிடுவாள்.. முக்கியமாக வீட்டிற்கு அழைத்துவர சம்மதிக்கவேமாட்டாள், ஆனால் மங்கை அவர்களின் தேவை மட்டுமல்ல, நல்லது கெட்டது எடுத்துரைக்கும் பொறுப்பையும் சேர்த்தே எடுத்துரைக்க, பெரு மகிழ்ச்சியடைந்தான் தேவேஷ்.
“எல்லா விசயத்துலயும் என் நினைப்பை பொய்யாக்கிடற.. குழந்தை விசயத்தை நீ இவ்வளோ ஈஸியா எடுத்துப்பனு நினைச்சே பார்க்கல, உன்கிட்ட சிறைபட்டதுல ரொம்ப பெருமையா இருக்கு.. என்னை எங்கையும் விட்டுடாத.. இப்படியே உனக்குள்ளவே வச்சுக்கோ..” என்றான் உள்ளார்ந்து.
சின்ன சின்ன விசயத்துக்கெல்லாம் குழந்தையாட்டம் சரண்டர் ஆகிடுவான் என காதலாய் பார்த்தவள்.. “ம்.. சரி சரி, பிணாத்த ஆரம்பிக்காதிங்க, வயித்தை கிள்ளுது, சாப்பிட வாங்க.” என வெளியே அழைத்து வந்தாள்.
“உனக்கு என்ன வேணும்?” என்றான் ஆசையாக.
“இப்போ லஞ்சம் கொடுக்குற அளவுக்கு நான் என்ன செய்துட்டேன்?” என முறைக்க.. “இது லஞ்சமா?” என தானும் முறைத்து.. “இது காதல்.” என்றான் காதலாக.
“நல்ல புரிதலுக்கு பேர்தான் காதல். என்னை புரிஞ்சிருந்தா குழந்தைங்க விசயம் சொல்லும்போது அப்படி தவிச்சிருப்பிங்களா? முதல்ல என்னை புரிஞ்சிக்க ட்ரை பண்ணுங்க, அதுக்கப்புறம் நான் கேட்காமலே எனக்கு என்ன வேணும்னு தெரியும்.” என்றாள் முறைப்பாக.
தேவஷ் பாவமாய் பார்க்க.. “அவ்வளோ டஃப் சிலபஸா நானு.” என சிரித்தவள்.. “சரி.. சரி.. முதல்ல சாப்பிடுங்க, கொஞ்சம் கொஞ்சமா நானே புரிய வைக்கிறேன்.” என பரிமாறினாள்.
அடுத்து வந்த நாட்கள் வண்ண மயமானது தேவேஷிற்கு. எதாவது கஷ்டமா இருக்கா? சாப்பிடி முடியுதா? என கேட்டுக்கொண்டே இருப்பான் தேவேஷ்.
மங்கைக்கு வாமிட் வருவதுபோலிருக்கும், ஆனால் வராது. அவ்வப்போது சோர்வாய் உணர்வாள். ஆனால் மருத்துவமணையில் தன்னை விட பெரிய அவஸ்த்தைக்குள்ளாகும் கர்பினிகளை நினைத்து தன்னை திடமாக்கிக்கொள்வாள் மங்கை.
சென்னையில் பிரபல மருத்துவரிடம் செல்ல தேவேஷ் பரிந்துரைக்க.. “அப்போ நாங்கெல்லாம் சரியா பார்க்கமாட்டமா? எங்க ஹாஸ்பிட்டல்ல ஒர்க் பண்ற டாக்டருக்கு இருபது வருசம் எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு. ஆயிரக்கணக்கான டெலிவரி பார்த்துருக்காங்க.” என்றாள் கோபமாக.
“சரி.. சரி.. அங்கையே பார்க்கலாம்.” என வழக்கம்போல் சரணடைந்தவன்.. ஒவ்வொரு செக்கப்பின் போதும் கூடவே இருப்பான்.
உடை, அலங்காரத்தில் ஷர்மிளாபோல் எதுவும் செய்துகொள்வதில்லை மங்கை. கர்பமானதிலிருந்து காரில் பயணிப்பதால் வீட்டிலிருந்தே சீருடையில் கிளம்பிடுவாள். இரவில் வீட்டிலிருக்கும்போது நைட்டி அணிவாள்.
குளிப்பது, முகம் கழுவுவது, நெற்றிக்கிடுவதோடு அவளின் ஒப்பனை முடிந்துவிடும். வகையாய் உண்பாள். ஆனால் கர்பமானதிலிருந்து அதையும் தவிர்த்திருந்தாள்.
பழகுவதற்கு மட்டுமல்ல, அவளின் வாழ்வு முறையும் மிக மிக எளிதானது, யாருக்கும் தவறிழைக்காமல் நேர்மையாக இருப்பதில்தான் மங்கையின் சந்தோசம் அடங்கியிருக்கிறதென எனப்புரிந்திருந்தான் தேவேஷ்.
நெருங்கிய சொந்தங்கள், நண்பர்கள் என தேவேஷிற்கு மொத்தமே இருபது பேர்கூட இருக்கமாட்டார்கள்.
ஆனால் மங்கைக்கு மருத்துவமணையில் பணிபுரிபவர்கள் அத்தனை பேரும் பரிச்சயம் ஆதலால்.. தன் வளர்ப்பு குழந்தைகளோடு வளைகாப்பை வெகு விமரிசையாக செய்தான் தேவேஷ்.
குழந்தை பிறந்தபின்னே ஆராதனா அமெரிக்கா சென்றிருக்க, வளைகாப்பிற்கு அண்ணன் வருவான் எதிர்பார்க்காத மங்கைக்கு அறிவு வந்தது பெரும் சந்தோசத்தை கொடுத்தது.
“நான் வரலைனா வளைகாப்பே வைக்கமாட்டேன்னு உன் புருசன் உடான்ஸ் விட்டார்.” என அறிவு மங்கையிடம் புகார் வாசிக்க.. கணவனை பெருமையாய் பார்த்தவள்.. “இப்போதான் உருப்படியா ஒரு கிஃப்ட் கொடுத்திருக்கிங்க.” என்றாள் மகிழ்வோடு.
வளைகாப்பு முடிந்ததும், தவமணி மகளை தன்வீட்டிற்கு அழைக்க.. கணவனை பிரிந்து தன்னால் இருக்க முடியாதென.. “வேற வேலைனா லீவ் போடலாம், ஹாஸ்பிட்டல்ன்றதால வேலைக்கு போறதுதான் சேஃப், இங்கையே செக்கப் செய்ததால பிரசவமும் இங்கையே பார்த்துக்கலாம்.” என்று அன்னைக்கு மறுப்பு கூறி தேவாவின் மனதை குளிர்வித்தாள் மங்கை.
தவமணி சென்றபின்னே மெடிக்கல் லீவ் போட சொன்னான் தேவா.. பத்தாவது மாசம் பிறக்கவும் லீவ் போட்டுக்கிறேன்.. இடையில முடியலனாலும் லீவ் போட்டுக்குறேன்.” என்று பணிக்கு செல்ல ஆரம்பித்தாள் மங்கை.
ஆனால் ஒன்பதாம் மாதம் இறுதியிலேயே வயிற்றுவலி வரவே.. மருத்துவமணையிலிருந்து தேவஷிற்கு அழைத்தாள். “ஆன்ட்டிக்கு சொல்லாதிங்க, சஞ்சுவை தூக்கிட்டு இங்க வந்து அவங்களால சமாளிக்க முடியாது, நீங்க மட்டும் வாங்க.” என்றிருந்தாள்.
அடித்து பிடித்து மருத்துவமணை வந்தவன்.. மங்கையின் சிவந்த முகம் கண்டு.. “ரொம்ப வலிக்குதா?” என்றான் தவிப்பாக.
“ம்.. குளுகுளுனு இருக்கு..” என்றாள் கண்ணீரோடும் சிரிப்போடும். அரசு மருத்துவமணையில் பிரசவத்தின் போது மருத்துவர், செவிலியர் தவிர யாரும் உள்ளிருக்க கூடாது என்ற விதிவிலக்கிருக்க.. வலி உச்சத்தை தொடவே.. “டாக்டர் இவர் என்ன கேட்டாலும் உள்ள விடாதிங்க.” என வலியுறுத்தி குழந்தை ஈன்றெடுக்க வார்டினுள் போனாள்.
இரண்டு மணிநேர போராட்டத்திற்கு பிறகு தேவமங்கைக்கு தேவதை பிறந்திருந்தாள். மங்கையை உரித்து பிறந்திருக்கும் மகளை கையிலேந்திய தருணம் மகனிடம் தவற விட்ட சந்தோசத்தை மகளிடம் அனுபவித்தான் கண்ணீரோடு.
பிறகு நிகிலிடம் சந்தோசத்தை பகிர்ந்து, வீட்டுக்கு போய் அம்மாவையும் சஞ்ஜெயும் கூட்டிட்டு வாடா.” என்றான்.
கற்பகமும் குழந்தையும் வர.. “அப்பா.. நான் அண்ணா..” என குதூகலித்தான் சஞ்ஜெய். “ம்ம்.. சஞ்சு குட்டி அண்ணா ஆகிட்ட.” என்றான் பெருமையாக.
அடுத்தநாள் குழந்தையை காணவந்த கார்த்தியும் அபிராமியும்.. “உன்னை போலவே உன் மகளும் முன்னறிவிப்பில்லாம திடீர்னு வந்திட்டா.” என கோபித்தனர் சந்தோசத்தோடு.
வீட்டிற்கு அழைத்து வந்த பின்னே.. “இப்போவாவது என்னை கவனிக்க விடுவியா?” என்றான் முறைப்பாக.
“பின்ன? உங்களை யார் விட்டா?” என்றாள் அதிகாரமாக.
தாய் தந்தை தனியா இருப்பார்கள் என மகளை தன்னோடு அழைத்து செல்ல தவமணி கேட்க, “கல்யாணம் ஆனதிலிருந்து இப்போதான் என்னோட முழுநேரமும் இருக்கா. மங்கையில்லாம என்னால இருக்க முடியாது.” என இம்முறை மனைவியை அனுப்ப தேவேஷ் மறுப்பு தெரிவித்தான்.
மருமகன் இப்படி சொல்லும்போது வேறு என்ன செய்ய? அங்கு தாய் தந்தையை கவனிக்க ஆள் ஏற்பாடு செய்து, இங்கு பத்து நாள், அங்கு இரண்டு நாள் என இரண்டு மாதம் வரை அல்லாடினார் தவமணி.
நாட்கள் அழகாக நகர்ந்தது தேவேஷிற்கு. குழந்தைக்கு பதினோரம் மாதம் வர.. தன் குலதெய்வ கோவிலில் காதணி விழா வைத்திருந்தான் தேவேஷ்.
விழாவிற்கு வந்த அறிவு.. “தாய் மாமன் இல்லாத காதுகுத்தானு தேவா ஒரே பிடிவாதம்.. இதெல்லாம் ஆகறதில்ல, அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் டிராவல் செய்தே ஒரு வழியாகிடுவேன் போலயே.” என இன்பமாய் சலித்தவன்..
“ஆராக்கும் அமெரிக்கா வாழ்க்கை சலிச்சிடுச்சாம். ஒரு திருவிழா இல்ல, அக்கம் பக்கம் விசேஷம் இல்ல, இதெல்லாம் ஒரு ஊரானு கேக்குறா.. குழந்தை அங்க வளர்ந்தா உறவுகளோட ஒட்டமாட்டானு இந்தியால வேலை பார்க்க சொல்லியிருக்கா.” என்று சந்தோச செய்தியை சொன்னான் அறிவு.
“ம்.. நான் சொன்னா கேப்பியா? சொல்றவங்க சொன்னா கேப்ப.” என மங்கை கிண்டலடித்தாள் சந்தோசத்தோடு.
** ** **
மேலும் நான்கு வருடம் கழித்து.. தேவா வீட்டில் மீண்டுமொரு குட்டி விஷேசம்.. சுபாவின் ருதுமங்கள நீராட்டு விழா.
தவமணியின் தாய் தந்தையர் தவறியிருக்க, அறிவு, ஆராதனா தவமணி அனைவரும் கடந்த இரண்டு வருடமாக பெங்களூரில் வசிக்கின்றனர். பெங்களூரில் சொந்தமாக தொழில் தொடங்கியிருந்தான் அறிவு.
சுபாவிற்கு தாய்மாமன் சீரோடு, அறிவு குடும்பத்தோடு வந்திருந்தான். இச்செயலால் அபிராமி கார்த்திகா கற்பகம் மனதில் பெரும் இடம் வகித்தான் அறிவு.
அறிவு.. “எப்பவோ ஒருமுறை செய்யிறது பெருமையில்லைங்க, குழந்தைங்க சூழல் தெரிஞ்சு மொத்த பொறுப்பையும் ஏத்துக்கிட்ட தேவாதான் சூப்பர்.” என பாராட்டினான் தங்கை கணவனை.
பதினொரு நாட்களாக சுபாவிற்கு, மருத்துவ ரீதியாகவும், உணவிலும், பழக்க வழக்கம் சொல்லிக்கொடுக்கும் பாங்கிலும், மங்கையிடம் இன்னும் இன்னும் சிறைபட்டான் தேவேஷ்.
விழா முடிந்து அன்றிரவு தனிமையில்.. “தாலி கட்டும்போது ஆறு மாசம் இல்ல ஒரு வருசத்துக்குள்ள என்னோட வாழப்பிடிக்காம ஓடிடுவனு நினைச்சேன். இப்படி உன் பின்னாடி சுத்த வைப்பனு நினைக்கவேயில்ல.” என்றான் காதலாக.
“ஓஹோ.. இப்படிவேற நினைப்பிருந்துச்சா உங்களுக்கு.” என தலையணையால் அடித்த மங்கையை வளைத்து அணைத்தவன்.. வழக்கம்போல் மனைவி நெற்றியில் அழுந்த முத்தம் பதித்தான் காதலாக.
தத்தி தத்தி நடைபயிலும் மகளின் கொலுசொலியில் இருவரும் விலக.. “ப்பா.. பப்பாக்கு..” என்றாள் தன் நெற்றி தொட்டு.
“ஹே.. பார்த்துட்டா போல. சஞ்சு தூங்கிட்டிருக்கானு தாழ் போடல, இனி பாப்பாகிட்டயும் கேர்ஃபுலா இருக்கனும்.” என சிரிப்போடு மகளை அணைத்து முத்தமிட்டான் தேவேஷ்.