“எங்க பிறந்தநாள், என் புருசனோட பிறந்தநாள், குழந்தைகள் பிறந்த நாள்னு எல்லா நாளையும் நியாபகம் வச்சி ஒரு வருஷம் கூட மிஸ்பண்ணாம விஷ்பண்ற ஷர்மியைப் பத்தி எங்களுக்கு தெரியாதா?” என முறைத்தாள் கார்த்திகா.
“அதுமட்டுமா கார்த்திக்கா? நாம கூட வருஷத்துக்கு நாலஞ்சுமுறை அம்மா வீடுனு இங்க வந்தா இரண்டு நாளாவது தங்கிட்டு போறோம், ஆனா அண்ணி.. அண்ணாவை விட்டு ஒருநாளும் அம்மா வீடுன்னு போய் தங்கியிருக்காங்களா? நல்லநாள் பண்டிகைன்னா கூட போய்ட்டு அண்ணாவோடவே வந்துடறாங்க..
இதுவரைக்கும் நம்மளையும் சரி, நமக்கு செய்யிறதையும் சரி ஒருநாளும் மறுத்து பேசினதில்ல, எல்லாம் போக ஒவ்வொரு வீட்டு மருமகளுங்க மாதிரி அம்மாவை கவனிக்காம இருந்தா நம்மளால நிம்மதியா இருக்க முடியுமா? அண்ணி நல்லவங்களா இருக்கவும்தான அம்மா பத்தின கவலையில்லாம நாம இருக்கோம்.?
இப்படிபட்டவங்க இப்ப ஒன்னே ஒன்னுக்காக, அதுவும் நியாயமான ஒன்னுக்காக ஏங்கி தவிக்கும்போது, எனக்கென்னனு எப்படி இருக்கிறது?” என தேவாவிடம் பேச பயந்து கார்தியிடம் வருந்தினாள் அபிராமி.
கார்த்திகா.. “உனக்கேன் தேவா ஸரோகேஸி முறை பிடிக்கல? அதுபத்தின விபரம் தெரிஞ்ச உனக்கு நான் விளக்கனும்னு இல்ல.. ஷர்மிக்காக கொஞ்சம் மனமிறங்கேன்..” என்றாள் வேண்டுதலாக.
“எத்தனை கொடுத்தாலும் பெத்த கடன் தீருமா கார்த்தி? யாராவது சின்னதா உதவினாலே நம்மளால காலம் வரை மறக்க முடியாது.. அப்படியிருக்க ஸரோகேஸி முறைன்னாலும் என் வாரிசை பெத்துதர லேடிசை என்னால எப்படி மறக்க முடியும்? நிச்சயம் முடியாது.
பொதுவா இந்த ஸரோகேஸி முறைக்கு பணத்துக்காகத்தான லேடிஸ் ஒத்துக்கிறாங்க.? அப்போ அவங்க மிடில்கிளாஸ், இல்ல அதைவிட கீழ உள்ளவங்களாத்தான இருப்பாங்க? அப்படிபட்டவங்களுக்கு வெறும் பணத்தை கொடுத்துட்டு என்னால விலக முடியாது.
குழந்தையை பார்க்கும்போதெல்லாம் அவங்க முகம் தன்போல என் கண்முன்ன வரும்.. நாளபின்ன அவங்க குடும்பத்துல எதாவது ஃபைனான்ஸ் ப்ராப்லம்னு தெரிய வந்தா கண்டிப்பா பார்த்துட்டு சும்மா இருக்கமாட்டேன்.
நிச்சயம் ஷர்மிக்கு நிகரா யாரும் எனக்குள்ள நுழைய முடியாது, ஆனா உங்களுக்கு ஒன்னுனா எப்படி என்னால சும்மா இருக்க முடியாதோ, அதேபோல என் குழந்தையை பெத்து கொடுக்கிறவங்களுக்கும் என் மூச்சு உள்ளவரை என்னால முடிஞ்சதை செய்யனும்னு தோணும்..
ஆரம்பத்துல ஷர்மிக்கு இது பெருசா தெரியாது, நாள் போக அவளால தாங்க முடியாது, நான் சொல்றது பணம் கொடுக்கிறதைப் பத்தியில்ல, அது அவ சேவிங்சுல இருந்தும் கூட கொடுப்பா,
எங்க குழந்தையை பெத்துகொடுக்கிற வாடகைத்தாய் மேல நான் காட்டுற பாசத்தை அவளால நிச்சயம் தாங்க முடியாது.. என் விசயத்துல ஷர்மி அவ்வளோ பொஸ்ஸிவ்.. ஆனாலும் அவளால தாங்க முடியாதுன்றதுக்காக ஒருத்தரோட உயிரை பனையம் வச்சி உதவியை வாங்கிட்டு அம்போனு விட என்னாலயும் முடியாது.
எந்த குழந்தைக்காக இத்தனை போராட்டமோ? அந்த குழந்தையாலயே பிரச்சனை வரும். அவளை பார்த்த முதல் நாள்லயிருந்து, குழந்தை விசயம் தவிர, வேற எதுக்கும் எங்களுக்குள்ள கருத்து வேறுபாடே வந்ததில்ல.. அதுக்கு காரணம் என்மேல அவ வச்சிருக்க லவ்..
என் மனசு கஷ்டப்பட்டா அவளால தாங்கவே முடியாது. நேத்துகூட அத்தனை அழுது ஆர்பாட்டம் செய்தவ, நான் வந்து சாப்பிடுன்னதும் உடனே சமாதனம் ஆகிட்டா..
அவளுக்கு குழந்தை மேல ஆசைன்றதை விட, அவளோட தேவ்க்கு வாரிசில்லாம ஆகிடக்கூடாதுன்றதுதான் அவளோட வேதனையே.. எனக்கு வாரிசு வேணாம்னு பொறுமையா எடுத்து சொன்னா முதல்ல ஒத்துக்கலன்னாலும் போகப்போக புரிஞ்சிப்பா.. நீங்க யாரும் இந்த விசயத்துல தலையிடாதிங்க.” என்றான் கட்டளையாக.
“தேவ்..” என கலங்கியவளாய் அவளறையிலிருந்து வெளியே வர.. “நல்லாயிருக்கியா ஷர்மி?” என கார்த்திகா கேட்க, “நல்லாயிருக்கிங்களாண்ணி?” என அபிராமியும் கேட்க.. “ம்..ம்..” என இருவரிடமும் கடமைக்காக தலையசைத்தவள்..
“உங்களை எனக்கு தெரியாதா தேவ்.? நான் அப்படி நினைப்பனா? நீங்க என்னதான் ஒருத்தர் மேல பாசத்தை காட்டினாலும், என் தேவ் மனசுல என் இடத்தை யாராலும் நிரப்ப முடியாதுனு எனக்கு தெரியாதா?
இதனாலதான் ஸரோகேஸிக்கு நீங்க ஒத்துக்கலயா? நம்ம குழந்தையை சுமக்குறவங்களுக்கு நீங்க என்னன்னாலும் செய்ங்க தேவ்.. எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல, ஆனா இப்படி குழந்தை வேணாம்னு மட்டும் சொல்லிடாதிங்க ப்ளீஸ்.. எனக்கு இதைவிட்டா வேற ஆப்ஷன் இல்ல..
எனக்கு நம்ம குழந்தையை கொஞ்சனும்.. நல்லபடியா வளர்க்கனும்.. இப்படி இன்னும் நிறைய நிறைய ஆசையிருக்கு..” என யாசித்தாள் கண்ணீரோடு.
மனைவியின் வேதனை தாளமுடியாமல்.. அதேநேரம் அவளின் கோரிக்கையை ஏற்கவும் முடியாமலும்.. “ஷர்மி..” என தலையில் கைவைத்தான் வேதனையோடு.
குழந்தையின்மை எத்தனை வேதனையை கொடுத்தபோதும், தற்போதைய கணவன் வேதனை தாளமுடியாமல்.. “சரி தேவ்.. நீங்க வருந்தாதிங்க.. இதுக்கு மேல இந்த விசயத்துல உங்களை கம்ப்பல் பண்ணமாட்டேன்.” என தேவேஷை தேற்றி..
“பேசிட்டிருங்க.. நான் சமைக்கபோறேன்.” என கிச்சனுள் நுழைந்தாள் ஷர்மிளா.
நேற்று குழந்தைக்காக அத்தனை ஆர்பாட்டம் செய்தவள், சற்று முன்கூட எத்தனை கெஞ்சினாள்.. ஆனால் மகன் ஸ்திரமாய் சொல்லவும் யோசியாமல் பொசுக்குனு விட்டுகொடுத்திட்டாளே என பெரிதாய் வியந்தார் கற்பகம்.
“தேவ் சொன்னது சரியாதான்மா போச்சி, தேவ்க்காக என்னன்னாலும் ஷர்மி செய்வா போல..” என பெருமையாய் சொல்லி கிச்சனுள் வந்த கார்த்திகா… “என்ன சமையல் இன்னைக்கு? நானும் ஹெல்ப் பண்றேன்.” என்கவும்.. “சமையல் நான் பார்த்துக்கிறேன்.. இனி குழந்தை விசயம் அவர்கிட்ட பேசாதிங்க, அந்த ஹெல்ப் மட்டும் போதும்.” என்றாள் கார்த்திகாவின் முகம் பாராமல்.
கார்த்திகா.. “ஷர்மி.. இப்படி முறைக்கு தேவா ஒத்துக்காததுக்கு காரணம் இப்பதான தெரிய வந்திருக்கு? மெல்ல பேசி புரிய வைக்கலாம்.” என்றாள் நம்பிக்கையாக.
ஷர்மி.. “இல்லங்க வேணாம்..” என ஏமாற்றத்தோடு சொன்னவள்.. “தேவ் வேதனையடையறதை என்னால சகிக்க முடியல.. குழந்தையை விட எனக்கு தேவ்தான் முக்கியம்.” என்றாள்.
பிறகு அனைவரும் சாப்பிட்டு முடிக்க.. இங்கிருந்தால் குழந்தைப்பற்றிய பேச்சுதான் தொடரும் என.. “தேவ் இன்னைக்கு வெளில கூட்டிட்டு போறிங்களா?” என்றாள் ஆர்வமாக.
பிறகுதான் அபிராமியின் வயிற்றை ஆசையாய் பார்த்தாள் ஷர்மிளா. மனைவியின் பார்வையறிந்து.. “சும்மா ஒரு பேச்சுக்குத்தான் உங்களை கூப்பிட்டேன், நானும் என் பொண்டாட்டியும் மட்டும்தான் போறதா ப்ளான்.” என்றான் சிரிப்போடு.
அபிராமி.. “ஹான்..” என விழிவிரிக்க.. “அம்மாவோட பேசிட்டிருங்க, இங்க பக்கத்துல கோவில்க்குதான் போறோம், எனக்கு கம்பெனிக்கு போயாகனும்.. இன்னைக்கு முக்கியமான ஒர்க் இருக்கு.. அதனால ஒரு ஒன் ஹார்ல வந்துடறோம்.” என இருவரும் கிளம்பினர்.
கோவிலில் தனிமையில் எதாவது பேசுவாள் என தேவேஷ் எதிர்பார்க்க.. குழந்தைப் பற்றி ஏதும் பேசவில்லை ஷர்மிளா. பிறகு வீட்டிற்கு வரவும்.. அனைவரிடமும் சொல்லி தேவேஷ் கம்பெனிக்கு கிளம்பினான்.
மதியம் வரை பேசியிருந்த கார்த்திகாவும், அபிராமியும் வந்த வேலை தோல்வியில் முடிந்ததால் சோர்ந்த முகத்தோடுதான் கிளம்பினர்.
அதன்பிறகு இரண்டு மாதம் கடந்திருக்க.. குழந்தைப்பற்றிய பேச்சே எடுக்கவில்லை ஷர்மிளா.
அன்று காலை வழக்கமாய் ஏழரை மணிக்கு சமைக்க வரும் ஷர்மிளா இன்று வர எட்டு மணியாகியிருக்க, கற்பகத்தின் பேச்சு வாங்க தயாராய் கிச்சனிற்குள் நுழைய, அங்கே வழக்கத்திற்கு மாறாக கற்பகம் சமைத்துக்கொண்டிருந்தார்.
தான் வந்ததை கவனிக்காத மாமியாரிடம்.. “நீங்க போங்க நான் பார்த்துக்கிறேன்.” என்றாள் சன்னக்குரலில்.
“அவ்வளோதான் ஆச்சு, நீ போய் ரெடியாகு.” என்றார் கற்பகம்.
“நீங்களும் என்னை கஷ்டப்படுத்தனும்னு முடிவு பண்ணியிருக்கிங்களா?” என்றாள் வருத்தத்தோடு.
“நான் என்ன பண்ணினேன்?” என்றார் அதிர்வாக.
“வழக்கமா லேட்டா எழுந்து வந்தா திட்டுவிங்கதான? இன்னைக்கேன் சமைச்சிங்க?” என்றாள் கோபத்தோடு.
மாமியாரின் பொயக்கோபத்தை உணர்ந்தவள்.. “முன்னலாம் சின்ன சின்ன தவறுக்கு கூட திட்டுவிங்க, இப்போ என்னால வம்சம் தழைக்காம போயும், என்னை எதுவும் சொல்லாததோட, உங்க மகன்கிட்ட எனக்கு சப்போர்ட் செய்து பேசினதே எனக்கு கஷ்டமா ஒருமாதிரி ரொம்ப கில்டியாயிருக்கு,
இதுல இப்படி சமைச்சி என்னை கஷ்டப்படுத்தாதிங்க. எப்பவும்போல என்மேல எதாவது தப்பு இருந்தா திட்டுங்க, நீங்க நீங்களா இருங்க, அப்போதான் என்னால கொஞ்சமாவது நிம்மதியா இருக்க முடியும்.” என வேதனையாக கண்கலங்கினாள்.
தனதறை வாயிலில் நின்று இவர்கள் பேசியதை கேட்டுக்கொண்டிருந்த தேவேஷ்.. “ஏய்.. ஷர்மி..” எனப்பதறி மனைவியை நோக்கி வர..
“பொம்பளை பிள்ளைங்க காலைல சூரியன் வரும்முன்ன எழுந்து முறைவாசல் செய்யனும். உனக்கு அந்த பழக்கமேயில்ல, ஆரம்பத்துல அதுக்கு திட்டினேன்..
தேவையில்லாத ஆடம்பர செலவு செய்யறது பிடிக்காதபோது, இப்படி அநாவசியமா செலவு செய்யிறாளேனு ஆதங்கத்துல அப்பப்ப எதாவது சொல்லுவேன்.. மத்தபடி எப்பப்பார்த்தாலும் உன்னை திட்டிட்டே இருக்கனும்னு எனக்கென்ன வேண்டுதலா?
என் மகளுங்க்கிட்ட எப்படி நடந்துப்பனோ அதேமாதிரிதான் உன்கிட்டயும் நடந்துக்கிறேன். கர்பப்பை பிரச்சனை உன்னால வந்த்தில்லன்னும்போது குழந்தை விசயத்துல உன்னை எதுக்கு திட்டப்போறேன்? இப்படி குறை என் பொண்ணுக்கு இருந்தாலோ, இல்ல என் பையனுக்கு இருந்தலோ அவங்கள திட்டுவேனா? இல்ல ஆறுதலா இருப்பனா?
நான் எப்பவும்போல நானாத்தான் இருக்கேன். நீதான் கண்டதையும் யோசிச்சிட்டு, இந்த குடும்பத்துக்கு உழைக்கிறதுக்காகவே பிறந்தவ மாதிரி ஆபீசுலயும் வீட்டுலயும் உழைச்சி உழைச்சி ஓடா தேய்ஞ்சிட்டிருக்க..” என்றார் ஆத்திரத்தோடு. கடந்த இரண்டு மாதத்தில் ஷர்மிளா நன்றாக இளைத்திருக்க தாளமாட்டாமல் கத்திவிட்டார்.
தற்போதும் மாமியார் தன் குறையை பெரிதாய் எடுக்காதது ஷர்மிளாவிற்கு எதோ போலாக கண்ணீரோடு கிச்சனிலிருந்து வெளியேற எத்தணிக்க.. “ஷர்மி..” என இடைவளைத்து நிறுத்தினான் தேவேஷ்.
“விடுங்க தேவ். எனக்கு டைமாகுது, ரெடியாகனும்.” என்றாள் தலைகுனிந்தவாறு.
“இன்னைக்கு ஆஃபீஸ் போக வேணாம்.” என்றான்.
“இல்ல, இன்னைக்கு முக்கியமான வேலையிருக்கு, நான் போயே ஆகனும். விடுங்க.” என்றாள்.
“வேலையே போனாலும் பரவால்ல, இன்னைக்கு கம்பெனிக்கு போக வேணாம்..” என்றான் திடமாக.
ஷர்மிளா அதிர்வாக பார்க்கவும்.. “இங்க வா..” என அழைத்து வந்து சோபாவில் அமரவைத்தவன்.. “எதோ நம்ம வாரிசை வளர்த்தனும், எனக்கு குழந்தையில்லாம ஆகிடக்கூடாதுனு யோசிக்கிறன்னு மட்டும்தான் நினைச்சேன்.. இப்படி உன்னால வம்சம் தழைக்கில அதுஇதுன்னு இவ்வளோ எமோஷனலா யோசிச்சி உன்னை வருத்திட்டிருக்கனு நான் நினைக்கவேயில்ல..
காலம்பூரா உன்னை இப்படி என்னால பார்க்க முடியாது. எனக்கு ஸரோகேஸி முறை ஓ.கே. அதுக்கான ப்ரொஸ்யூஜர் என்ன்னு இன்னைக்கே பார்க்க ஆரம்பிக்கலாம்.” என்றான்.
“உன்கிட்ட என்னால பொய் சொல்ல முடியாது.. இப்பவும் இப்படி குழந்தையில எனக்கு விருப்பமில்லதான். உனக்காக மட்டும்தான்..
இப்பவே இப்படி ஆகிட்ட, இதுக்கு மேலயும் என் விருப்பம் பார்த்து உன்னை இழந்திடுவனோன்னு எனக்கு பயமாயிருக்கு. உன் இஷ்டப்படி குழந்தை பெத்துக்கலாம்..” என்றான் உள்ளார்ந்து.
“தேவ்.. தேங்க்ஸ் தேவ்.. தேங்க்யூ சோ மச்.” என அணைத்தாள் காதலாக.