“உக்காருங்க..” என ஷர்மியின் சோல்டரை அழுத்தவே, போன் பேசிக்கொண்டிருந்த தவமணியை கண்டதும் ஷர்மிளாவின் கண்ணீர் அதிகரித்தது.
ஸரோகேஸி ட்ரீட்மண்ட்க்கு நிறைய செலவாகுதுனு ஆன்ட்டி சொல்லுவாங்களே, எதாவது ஃபினான்ஸ் பிரச்சனையா இருக்குமோ என யோசித்தவள்.. “அக்கா.. ரிலாக்ஸ்.. என்னாச்சு? எதுக்கு இப்படி அழறிங்க? எதாவது எதுன்னாலும் பார்த்துக்கலாம்.. அழாதிங்க..” என தேற்றி..
“இவங்கதான் என் அம்மா.. ஸரோகேஸி ஆப்ஷனே எங்கம்மா சொல்லவும்தான் மைன்ட்டுக்கு வந்தது, உங்கம்மா வரும்போது சொல்லு, தேங்க் பண்ணனும்னு சொன்னிங்களே.. இதோ உங்க கண்ணுமுன்ன இருக்காங்க..தேங்க் பண்ணுங்க.” என்றாள்.
“அறிவு.. நான் அப்புறம் பேசுறேன்..” என இணைப்பை துண்டிக்கவும்.. “ம்மா.. மெய்மறந்து நடந்து வந்துட்டிருந்தாங்க, கொஞ்சம் விட்டுருந்தா பள்ளத்துல விழுந்துருப்பாங்க, பயங்கர ஸ்ட்ரெஸ்ல இருக்காங்க போல, அங்க ஆன்ட்டிக்கிட்ட சொன்னா அவங்களும் சேர்ந்துட்டு அழுவாங்க, அதான் இங்க கூட்டிட்டு வந்துட்டேன், என்னனு கேளுங்க..” என்றவள்..
“என்னம்மா நீ? படிச்ச பொண்ணு.. இப்படியா அஜாக்கிரதையா இருக்கிறது? பள்ளத்துல விழுந்திருந்தா என்னாகுறது?” என தண்ணீர் கொடுத்தார் தவமணி.
ஷர்மிளா.. “உயிரோட இருந்து என்ன சாதிக்க போறேன்.” என கண்ணீர் விடவும்.. குழந்தை விசயத்தில்தான் எதோ தவறு நடந்துவிட்டது எனப்புரிந்தவராய்.. “என்னாச்சும்மா?” என்றார் ஆதரவாக.
தன் வேதனையை சொல்லக்கூட முடியாமல் ஷர்மிளாவிற்கு துக்கம் அடைக்க.. “ம்மா..” என்ற கமறலோடு நிறுத்தினாள்.
அம்மா என்றழைக்கவும் நெகிழ்ந்த தவமணி.. “இப்படி கலங்குற அளவுக்கு என்ன ஆச்சு?” என்றார் கனிவாக.
“ஸரோகேஸி மூலமா கூட என் தேவ்க்கு என்னால குழந்தை பெத்து கொடுக்க முடியலம்மா..” என கண்ணீர் விட..
“அழாதம்மா.. இந்த காலத்துல எல்லாத்துக்கும் ட்ரீட்மண்ட் வந்துடுச்சி. நீ கலங்குற அளவுக்கு ஒன்னுமில்ல. டாக்டர் என்ன சொன்னாங்க? முதல்ல அதை சொல்லு.” என்றார்.
“என்னோட சினைமுட்டை வளர்ச்சியடையலையாம், கரு உருவாகலைன்னு சொல்லிட்டாங்க..” என தலைகுனிந்தாள்.
“இவ்வளோதான? பார்த்துக்கலாம் விடு.” என தேற்ற.. ஷர்மிளா மீண்டும் கண்ணீர் விடவும்.. “இன்னொருத்தன் குழந்தைக்குதான அம்மாவா உன்னால இருக்க முடியாது? உன் தேவோட குழந்தைக்கு அம்மாவா இருக்க முடியும்ல?” என்றார் யோசனையாக.
“ஓவம் டொனேட் பண்ணவும் டோனர் இருக்காங்கனு இந்த ஆப்ஷனையும் டாக்டர் சொன்னாங்க, எனக்குத்தான்..” என தயங்க..
“இதுல தயங்கறதுக்கு ஒன்னுமேயில்லம்மா, அப்பாம்மா யாருனே தெரியாத குழந்தைக்கு தாயாகறதைவிட உன் தேவேஷ் குழந்தைக்கு தாயாகறது பரவால்லதானே?
உன்னோட சினைமுட்டைல வரவைக்க முடியலன்றது வருத்தம்தான்னாலும் இதை விட்டா வேற ஆப்ஷன் இல்லையே.. டோனரோட படிப்பு, ஹைட் வெய்ட், ஹேர்கலர், ஐ கலர் வரைக்கும் எல்லா டீடெய்லும் நமக்கு கொடுப்பாங்க.. எந்த டோனர்து பெஸ்ட்டோ நாம அதை சூஸ் பண்ணிக்கலாம்.. எல்லாம் நல்லபடியா நடக்கும்.. கவலையை விடு.”
“அது மட்டுமில்லம்மா, எங்களுக்கு பேசியிருந்த ஸரோகேஸி, பணத்துக்காகத்தான் இதுக்கு கமிட் ஆனேன், உங்களுது இல்லனா வேற யாருக்காவது யூஸாகியிருப்பேன், என் கஷ்டம் தீர்ந்திருக்கும்னு அழுது, பேசின பணத்துல பாதியாவது கொடுக்க சொல்லி கேட்டாங்க..
கருவை சுமக்கலன்னாலும் அவங்களுக்கும் நிறைய டெஸ்ட் எடுத்தாங்க, எல்லாம் வீணானதுல மனஉளைச்சலாகிட்டாங்க, காசுக்காக குழந்தை சுமக்குறாங்கனா ஏழ்மையில இருக்கவும்தான்னனு ஷேவிங்செல்லாம் அவங்களுக்கு கொடுத்து செட்டில் பண்ணிட்டேன்..
இனி கருவை சுமக்க வேற ஸரோகேஸி பார்க்கனும்.. அப்படியே கிடைச்சாலும் அதுக்கு பணம் ஏற்பாடு செய்யனும்..” எனும்போதே “நா.. நான் பண்ணவாக்கா?” என்றாள் மங்கை.
“மங்கை..” என தவமணி அதிர்வாக.. “கல்யாணமாகி குழந்தையிருக்கிறவங்கதான் இதுக்கு சூஸ் பண்ணுவாங்க. நீ சொன்னதே பெருமையா இருக்கு..” என மங்கையின் கோரிக்கையை நிராகரித்தாள் ஷர்மிளா.
“நீங்க சொல்றது கமர்ஸியல்க்கா, நான் சொல்றது ஆல்ட்ரூஸ்டிக் முறை.. பணத்துக்காக இல்லாம, சேவை மனப்பான்மையோட நமக்கு தெரிஞ்ச ரத்தபந்தம்.. ஃப்ரண்ட்ஸ் கூட ஸரோகேஸியா இருக்கலாம்.. அதுக்கு குழந்தை பெத்துருக்கனும்னு அவசியமில்ல..” என்றாள்.
“அதுக்கும் இருபத்தி அஞ்சு வயசுக்கு மேல இருக்கனும்.. ஒருவேளை உனக்கு இருபத்தஞ்சு வயசே ஆகியிருந்தாலும் நான் இதுக்கு ஒத்துக்கமாட்டேன், எங்களோட சுயநலத்துக்காக ஒரு கல்யாணமாகத பொண்ணை யூஸ் பண்ணிக்க தேவும் ஒத்துக்கவும்மாட்டார். எனக்கும் பிடிக்கல..” என திடமாய் சொல்லி..
தவமணியிடம்.. “ஓவம் டொனேட் பண்றவங்களோட கலர், ஹைட் வெயிட், படிப்புனு எத்தனை ஐ.டி யை கொடுத்தாலும் அவங்க குணம் என்னனு இது எதுலயும் தெரியாதேம்மா..
வரப்போற குழந்தை என் தேவ் குணத்துக்கு செட்டாகமா ஆகிடுச்சினா ஃப்யூச்சர்ல தேவ்க்கு அதுவே பெரிய டார்ச்சர் ஆகிடும்னு பயமாயிருக்கு..” என பயத்தோடு தவமணி சொன்ன சினைமுட்டை தானத்தையும் நிராகரித்தாள்.
“பணத்துக்காக எத்தனையோ ஏழை பொண்ணுங்களோட வாழ்க்கையில எங்கப்பா விளையாண்டிருக்கார். பணக்கார பசங்க ஆசைப் பேச்சை நம்பி கர்பமான பொண்ணுங்களை, அந்த பசங்களோட அப்பாம்மாகிட்ட பணத்தை வாங்கிட்டு கர்பமா இருக்க நிறைய பொண்ணுங்களை மிரட்டி விலக வச்சிருக்கார்..
சில பொண்ணுங்களுக்கு கட்டாய அபார்ஷனும் செய்திருக்காராம். இந்த விசயம்னு இல்ல, பெரிய இடத்து பசங்க செய்த கிரிமினல் குற்றங்களுக்கு கூட பிழைப்புக்காக சின்ன சின்ன தப்பு செய்யிற பசங்கமேல கேஸ்போட்டு, கொஞ்சநாள் உள்ள இரு, ஒன்னும் குறைஞ்சிடமாட்ட, உன் குடும்பத்துக்கு பணம் கொடுக்கறேன்னு பல பாவங்களை செய்துருக்கார்..
பெத்தவங்க பாவம் பிள்ளைகளுக்குதான வரும்? எனக்கும் எங்கண்ணனுக்கும் எதிர்காலம் என்னத்தை கொடுக்க காத்திருக்கோ.. உங்களுக்கு செய்து புண்ணியம் தேடிக்கறனேக்கா..” என்றாள் கெஞ்சலாக.
“அப்படிலாம் சொல்லாத மங்கை.. உங்கப்பா செய்த பாவத்துக்குத்தான அவரை கொன்னுட்டாங்க, அவர் சம்பாதித்த சொத்தையும் நீங்க அனுபவிக்கலதானே? அதனால அவர் செய்த பாவம் அவரோடவே போச்சு, இனி உங்களுக்கு ஒன்னும் ஆகாது.. உன் குணத்துக்கு எந்த குறையுமில்லாத வாழ்க்கை வாழப்போற..”
“அப்போ நான் நல்ல பொண்ணா? நல்ல குணம் உடையவளா? நான் அழகா இருக்கேனா? என் படிப்பு, ஹைட், வெயிட், ஹேர்கலர், ஐ கலர் எல்லாம் ஓ.கே வா? நான் ஓவம் டொனேட் பண்றேன்க்கா..” என்றாள் ஆர்வமாக.
“என்ன சொல்ற மங்கை?” என ஷர்மிளா பதற.. “நான் குழந்தை பெத்து கொடுத்தாதான உங்க ஹஸ்க்கும் உங்களுக்கும் பிடிக்காது, எக் டொனேட் பண்றதுல பிரச்சனையில்லைல?” என்றாள்.
ஷர்மிளா.. “இல்ல மங்கை, மனசு எதோ நெருடுது, வேணாம்..” என எழுந்தாள்.
முழுதாய் மருத்துவருக்கு படிக்கவில்லையென்றாலும் மூன்று வருடம் படித்தவராக இருந்த போதும் தன் அன்னையின் முகத்தில் திருப்தியின்மையை கண்டவள்.. தற்போது ஷர்மி போகட்டும், தன் அன்னை ஊருக்கு சென்ற பின்னே பேசிக்கொள்ளலாம் என..
“சரிக்கா உங்களுக்கு விருப்பமில்லனா என் சினைமுட்டை வேணாம், எங்க ஹாஸ்பிட்டல்ல எனக்கு நிறையபேர் தெரிஞ்சவங்க இருக்காங்க, அவங்ககிட்ட கேட்டு பார்க்கறேன்.. தைரியமா போங்க.. உங்க ஹஸ்சோட குழந்தையை நீங்க கொஞ்சத்தான் போறிங்க..” என்றாள்.
ஷர்மிளா சென்றிட, “அறிவிருக்கா உனக்கு?” என தவமணி திட்டவும்.. “ம்மா.. சினைமுட்டை தானமும் ரத்த தானம் மாதிரிதான்.. ஓவம் டொனேட் செய்த கொஞ்சநாள்லயே உருவாகிடும்னு நல்லா தெரிஞ்ச நீயே இப்படி பேசலாமா? அந்தக்கா பாவம்மா..” என்றாள் மங்கை.
“நான் அதுக்காக வேணாம்னு நினைக்கல, நீ டொனேட் பண்ணி இவங்க பெத்துக்கிற குழந்தைமேல உனக்கு அட்ராக்ஷன் வந்துடுச்சினா அது உன் ஃப்யூச்சரை பாதிக்கும்.. இப்படி பிரச்சனை வராம இருக்கத்தான், நம்ம சினைமுட்டை யாருக்கு போகுதுனு டொனேட் செய்தவங்களுக்கு தெரியாம செய்யிறாங்க.. முட்டாள்.. முட்டாள்.. இனி இப்படி உளறி வைக்காத..” என்றார் கோபமாக.
“சரி பேசல..” என அப்பேச்சினை முடித்தாள் மங்கை. இரண்டு நாள் தங்கியிருந்து தவமணி சென்றிட, ஷர்மிளாவின் வேதனையே மங்கைக்கு கண்முன் நின்றது.
ஒருவாரம் கடந்திருக்க.. ஷர்மிளா காண முடியாமல் போகவே, கற்பகத்திற்கு அழைத்து ஷர்மிளாவிடம் பேச வேண்டும் என விருப்பம் தெரிவித்தாள்.
“யாரோடவும் பேச மாட்டாம்மா.. ரொம்ப வேதனையில இருக்கா, நானும் என் மகனும் எத்தனை ஆறுதல் சொல்லியும் தேறவேமாட்டுக்குறா.. வேலைக்கு கூட போறதில்ல.” என்றார் கற்பகம்.
“சரி ஆன்ட்டி, நான் மதியம் லன்ச்சுக்கு வரும்போது அவங்களை வந்து பார்க்குறேன். அப்போ உங்க மகன் வேலைக்கு போயிருப்பாங்கதான?” என்றாள்.
கற்பகம்.. “ஆமாம்மா..” என்கவும் இணைப்பை துண்டித்து, சொன்னதுபோல் ஷர்மிளாவை காண மதியம் வந்தாள்.
“ஆன்ட்டி..” என மங்கை அழைக்க, “வாம்மா, வா..” என உள்ளே அழைத்து போனவர்.. “தூங்கறன்னுட்டு கதவை சாத்திக்கிட்டாம்மா. ஆனா முழிச்சிட்டுதான் இருப்பா..” என்றார்.
“அக்கா..” என கதவைத் தட்டினாள் மங்கை.
மங்கையின் வரவை எதிர்பார்க்காத ஷர்மிளா கதவை திறக்கவும்.. “உங்க்கிட்ட கொஞ்சம் பேசனும்க்கா..” என்றாள்.
“ஓவம் டொனேட் பத்தினா வேணாம்.” என்றாள் ஷர்மிளா.
“ஹம்..” என ஷர்மிளாவின் அனுமதியில்லாமலே உள்ளே நுழைந்து அங்கிருந்த சேரில் அமர்ந்தவள்.. “முதல்முறை உங்க வீட்டுக்கு வந்திருக்கேன், ஒரு டீ, காபி கிடையாதுங்களா ஆன்ட்டி?” என்றாள்.
“இதோ..” என கற்பகம் கிச்சனுக்கு செல்ல.. “ஆன்ட்டி வரதுக்குள்ள பேசிடறேன்க்கா..” என்றவள்.. “உங்க குழந்தை நல்லபடியா பிறந்ததுக்கப்புறம் நான் இந்த ஊரை விட்டே போயிடறேன்க்கா..
எங்கம்மா சத்தியமா சொல்றேன்.. குழந்தையை காரணம் காட்டி உங்களுக்கும் உங்க ஹஸ்க்கும் இடையில எப்பவும் வரமாட்டேன்.. உங்களுக்கும் எனக்கும் தவிர ஓவம் டொனேட் பண்ற விசயத்தை எங்கம்மா உட்பட வேற யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்.. என்மேல உள்ள பயத்தை விட்டுட்டு குழந்தை பெத்துக்கிறதைப்பத்தி யோசிங்கக்கா..
இல்லனா, உங்க ஹஸ்க்கு அவர் குழந்தையை பெத்து கொடுக்க முடியலையேன்ற குற்ற உணர்வுல இப்படியே ஒரு ரூம்க்குள்ள அடைஞ்சி கிடப்பிங்க.. உங்களை இப்படி பார்த்துட்டு உங்க குடுமபத்துல சந்தோசமா இருப்பாங்களா யோசிங்க?” என்றாள்.
தன் ரத்தமில்லையென்றாலும், தேவ் குடும்பத்திற்கு வாரிசை உண்டாக்கும் ஆசை ஷர்மிளாவிற்கு மேலோங்க.. “நிஜமா குழந்தைப் பத்தி நினைக்கமாட்டதான?” என்றாள்.
“எங்கம்மா எனக்கு தீவிரமா மாப்பிள்ளை பார்த்திட்டிருக்காங்க, கண்டிப்பா ஒரு வருசத்துக்குள்ள கல்யாணம் செய்து வைக்காம விடமாட்டாங்க, என் கல்யாணத்துக்கப்புறம் உங்க குழந்தையை பார்க்க நான் ஏன் வரப்போறேன்? அப்படியே நான் நினைச்சாலும் எந்த ஹஸ்பண்டாவது இதுக்கு ஒத்துப்பாங்களா?
எல்லாம்போக, எங்கப்பா சேர்த்து வச்ச பாவமே சுமக்க முடியாத அளவுக்கு இருக்கு, பாவத்தை விட துரோகம் ரொம்ப கொடுமை.. இப்போ சம்மதிச்சிட்டு பின்னாடி உங்க குழந்தை வேணும்னு துரோகம்லாம் கண்டிப்பா செய்ய மாட்டேன்.. என்னை நம்புங்க. உங்க மூலமா நல்ல காரியம் செய்யிற வாய்ப்பை கொடுங்க.” என்றாள்.
“அப்போ ஸரோகேஸி..” என ஷர்மிளா யோசிக்க.. “அதுக்கும் நான் ஏற்பாடு செய்துட்டேன், எங்க ஹால்பிட்டல்ல ஒர்க் பண்ற இன்னொரு நர்ஸோட ரிலேட்டிவ்.. ரொம்ப நல்ல டைப்.. அவங்களும் பணத்துக்காகத்தான் சம்மதிச்சாங்க.. ஆனா இப்போ உடனே செட்டில் பண்ணத் தேவையில்ல,
அவங்களுக்கான ஹாஸ்பிட்டல் செலவு மட்டும் பார்த்தா போதும்.. குழந்தை பிறந்த பின்ன மொத்தமா செட்டில் பண்ணிக்கலாம்..” என்றாள்.
ஷர்மிளா.. “நான் பார்க்கனும்.” என்க.. “சரிங்கக்கா.. உங்களுக்கு எப்போ டைம் கிடைக்கும் சொல்லுங்க, கூட்டிட்டு போறேன்.” என்றாள்.
மங்கையை நினைத்து, இத்தனை நல்ல குணமுள்ளவள் குழந்தையின் சுபாவம் நிச்சயம் தேவ்விற்கு பிடிக்காமல் போகாது, அதோடு நம் வளர்ப்பும் இருக்கிறது என்ற நம்பிக்கையோடும் இப்படி குழந்தைக்கு சம்மதம் தெரிவித்தாள் ஷர்மிளா.
முக்கியமாக என் தேவாவின் வம்சம் என்னால் முடியப்போவதில்லை என்ற நினைப்பே பெரும் நிம்மதியை கொடுக்க.. துணிந்து முடிவெடுத்தாள்.