ஷர்மிளா அழுகையின் காரணம் கற்பகத்திற்கு தெரியாமல் போகவே.. “எதுக்கு இப்படி அழறா? குழந்தை இவளைபோல இருந்தா என்னவாகிடும்? எல்லா பொண்ணுங்களுக்கும் புருசன்னா உயிர்தான்.. அதுக்காக இப்படியா? தேவா போலதான் குழந்தை வேணும்னு அடம்பிடிச்சா அவனென்ன பிரம்மாவா? அதெல்லாம் கடவுள் கையிலயில்ல இருக்கு.” என கார்த்தியிடம் பொறுமினார்.
கார்த்திகா.. “ம்மா…” என ஷர்மியின் அழுகைக்கான காரணம் சொல்ல.. “அட கிரகமே.. இப்படிலாம் கூடவா தானம் பண்ண ஆளிருக்காங்க?” என வியந்து.. “அதுக்குத்தான் தேவா இப்படி குழந்தை வேணாம்னானா? இவளைப் பத்தி தெரிஞ்சிதான் வேணாம்னு சொல்லியிருக்கான், புருசன்கிட்ட கூட கேட்காம எல்லாமும் இவளே முடிவு பண்ணிட்டு இப்போ அழுது என்ன பிரியோஜனம்?” என கோபம் வர..
ஷர்மியிடம் சென்றவர்.. “இதபாரு ஷர்மிளா.. உன் புருசுனை போலத்தான் குழந்தையிருக்கனும்னு நானும் கூட அந்த ஆண்டவனை வேண்டிக்கிறேன்.. ஆனா ஒருவேளை குழந்தை வேறமாதிரி இருந்தாலும் அதை ஏத்துக்க பழகிக்க.. இல்ல உனக்குத்தான் சிரமம்.” என கண்டித்து..
“குழந்தை எப்படியிருந்தாலும் அது நம்ம குழந்தைன்னு எடுத்து சொல்றதை விட்டுட்டு நீ என்னடா சும்மா அவளுக்கு குறுட்டு தைரியம் கொடுத்திட்டிருக்க?” என மகனையும் திட்டினார்.
ஷர்மிளாவின் அழுகை இன்னும் அதிகமாக, “ம்மா.. நான் பார்த்துக்கிறேன், அபி குழந்தை அழ ஆரம்பிக்கும் முன்ன நீ போய் கார்த்தி, அபியை சாப்பிட வை.” என அதட்டினான்.
இவ அழுத அழுகைல குழந்தைக்கு பால்குடுக்குற புள்ளைக்கு பசிக்கும்னு கூட யோசிக்காம விட்டுட்டனே என தன்னைதானே நொந்து, அதை எடுத்துரைத்த மகனை மெச்சினாலும்.. “என்னை திட்டறதுனா மட்டும் உனக்கு அல்வா சாப்பிடற மாதிரி.” என முனுமுனுத்து சமையலறை சென்றார்.
அபிராமியின் குழந்தை அழவும்.. “இரு தேவ் வரேன்.” என கார்த்திகாவும் செல்ல, தனிமை கிடைத்ததும்.. “தேவ்.. சாரி தேவ், எல்லாரையும் ரொம்ப கஷ்டப்படுத்துறேன்.. நான் நினைக்கிறது எவ்வளோ பெரிய முட்டாள்தனம்னு எனக்கும் தெரியுதுதான்.. ஆனாலும் ரொம்ப பயமாயிருக்கு.” என்றாள் வேதனையாக.
அன்னை சொல்வதுபோல் குறுட்டு தைரியம் சொல்ல வேணாம் என நினைத்து.. “ஷர்மி.. நம்மளோட குழந்தையா இருந்தாலும் அது நம்ம ஜாடைலதான் இருக்கும்னு சொல்லமுடியாது, உங்கம்மா வழிலயோ, இல்ல எங்கப்பா வழிலனு குழந்தை யார் ஜாடைல வேணா பிறக்கும்..
இப்போ குழந்தைக்கு அஞ்சாவது மாசம், இந்நேரம் முழு உருவமும் வந்திருக்கும், குழந்தை” டோனரோட ஜாடையில் என சொல்ல வந்தவன்… “யார் ஜாடையில பிறந்தாலும் அதை நாம ஏத்துகிட்டுதான் ஆகனும்..” என பொறுமையாய் எடுத்துரைத்தபோதும், சரி என்ற பதிலில்லை ஷர்மியிடம்.
மாறாக.. “ஏன் தேவ் எனக்கு இப்படியொரு குறையை கடவுள் கொடுத்தார்?” என வெம்பி தலைகுனிந்தாள்.
ஆறுதலளித்தால் இன்னும் தன்னிரக்கமாய் நினைப்பாள் என.. “எல்லாருக்கும் எதாவது ஒரு குறையிருக்கும்.. நம்மளை சேர்ந்தவங்க அதை எப்படி எடுத்துக்கிறாங்கன்றதுதான் முக்கியம். உனக்கு குறையிருக்குறதா நம்ம வீட்டுல யாரும் நினைக்கில. இனி இப்படி யோசிக்காத.” என்றான் கட்டளையாக.
சரி என்பதாய் தலையசைத்தவள்.. “நான்தான் ஜெனட்டிக் அம்மா இல்லையே, அப்போ குழந்தை உங்க்கிட்ட, உங்கம்மா, அக்கா தங்கைகிட்ட மட்டும்தான் ஒட்டுமா? என்கிட்ட ஒட்டாதா?” என்றாள் ஏக்கமாக.
“அது நம்ம குழந்தை ஷர்மி.. நாமதான் ஒவ்வொன்னா சொல்லிகொடுக்கனும், நாம என்ன செய்யிறமோ அதை அப்படியே குழந்தைங்க பிரதிபலிக்கும்.. நம்ம பழக்கம்தான் குழந்தைக்கு வரும், அதேபோலத்தான் பாசமும், அன்பும்.. நீ எந்தளவுக்கு குழந்தைமேல அன்பா இருக்கியோ அதைவிட அதிகமா குழந்தை உன்மேல அன்பா இருக்கும்..” என குழந்தைக்குபோல் பொறுமையாய் சொன்னான்.
“தேவ்..” என அணைத்துக்கொண்டாள் ஆதரவாக.
குழந்தையைப் பற்றி இந்தளவிற்கு யோசித்ததே தேவாவிற்கு நிம்மதியாய் இருக்க, இன்றைக்கு இதுபோதும், இன்னும் இங்கேயே இருந்தால் வேறு ஆரம்பிப்பாள் என.. “சரி வா.. கார்த்தி அபிகிட்ட இன்னும் பேசவேயில்ல, கார்த்தி கூட பரவால்ல, இந்த அபி குட்டிசாத்தான் அண்ணா அண்ணி சரியாவே பேசலன்னு மனசுக்குள்ள ஏங்குவா..” என வெளியே அழைத்து வந்தான்.
இருவரும் வெளியே வர, “அபி எங்க?” என்றான்.
“உள்ள தூங்க வச்சிட்டிருக்கா.” என கார்த்திகா சொல்ல, தேவேஷ் அங்கே செல்ல எத்தனிக்கவும், “தேவ்.. ஃபீட் பண்ணிட்டிருப்பா..” என்றதும்.. “ஓ.. குட்டி அப்போதான் தூங்குவாரா?” என அங்கிருந்த சோபாவில் அமர.. தான் குழந்தை பெற்றிருந்தால் இதெல்லாம் தேவ்விற்கு தெரிந்திருக்கும் என்ற எண்ணம் வர, மனம் தன்போல் சுணங்கவே, சமையலில் கவனம் செலுத்த மாமியாரிடம் போனாள்.
வெகு நாட்களுக்கு பிறகு தேவேஷ் இயல்போடு அபியிடம் வம்பளக்கவும், அடுத்த நாளே கிளம்ப நினைத்து வந்த கார்த்தியும் அபியும் இரண்டு நாட்கள் தங்கியிருந்து மன நிம்மதியோடு கிளம்பினார்கள்.
தேவேஷ்.. “ம்ம்.. எனக்கு நிறைய ஒர்க் இருக்கே.” என வருந்த.. “ஓஹ் தேவ்.. இதென்ன சின்ன பிள்ளையாட்டம்.? கிளம்புங்க, கிளம்புங்க.” என கணவனை குளியலறை தள்ள முற்பட, “உங்கம்மா வீட்டுக்கு போய் வந்தே நாலுமாசம் பக்கம் ஆகுது, நீ டிஸ்டர்பா இருக்கேனு விட்டா, இப்படி ஒரேடியா மறந்தேவா போவ? ஆறு மாசமாச்சுடி..” என்றான் ஏக்கமாக.
“தேவ்.. சாரி சாரி தேவ்..” என இவள் தவிக்க, “ம்.. ஈவ்னிங் சீக்கிரம் வந்துடறேன்.. மதியமே நல்லா தூங்கி எழுந்துக்கோ..” என கண்ணிமைத்து குளிக்க போனான்.
தேவேஷ் கம்பெனி கிளம்பியதும் மங்கைக்கு அழைத்தாள் ஷர்மிளா. மங்கை எடுக்காமல் போகவே மீண்டும் மீண்டுமென நான்கைந்து முறை அழைக்கவே.. “அக்கா நான் கொஞ்சம் பிஸியா இருக்கேன், ஃப்ரீ ஆகிட்டு நானே கால் பண்றேன்.” என இணைப்பை துண்டித்தாள் மங்கை.
மதியம் ஒரு மணிபோல் மங்கை அழைக்கவே.. “சாரி மங்கை, உன் ஒர்க் டைம் தெரியாம டிஸ்டர்ப் பண்ணிட்டேன்.” என்றாள்.
“பரவால்லக்கா, இனி கால் பண்ணனும்னா மதியம் இரண்டுலயிருந்து மூனுக்குள்ள பண்ணுங்க, தினமும் அந்த டைம் நான் ஃப்ரீதான்.” என்றாள்.
இணைப்பை துண்டித்து கிளம்பி வெளியே வர.. “லீவுன்னுதான சொன்ன?” என்றார் கற்பகம்.
“கோவில் போய் ரொம்ப மாசம் ஆகிடுச்சி, இங்க பக்கத்துல போய்ட்டு வரேன், உங்களுக்கு இது தூங்குற டைம்தான? தூங்குங்க, நான் என் சாவியை எடுத்துட்டு போறேன்.” என வெளியேறினாள்.
மங்கை வீடு இவர்கள் வீட்டிற்கு நேரெதில் வீடு என்பதால் வெளியே சென்ற ஷர்மி மாமியார் பார்க்கிறார்களா என திரும்பிப்பார்க்க.. இரண்டு நாட்களாக மகள்கள் இருந்ததில் தூக்கம் கெட்டதால் கற்பகம் படுக்கப் போனார்.
ஷப்பா என மூச்சிழுத்து மங்கையின் வீட்டிற்கு போனாள் ஷர்மிளா.
“வாங்க வாங்கக்கா..” என இன்முகமாக வரவேற்றவள்.. “மதியத்துக்கு எப்பவும் நான் சமைக்கிறதில்ல, அங்க ஹாஸ்பிட்டல் பக்கத்துல இருக்க மெஸ்ல வாங்கிப்பேன்.. கை வச்ச சாதத்தை எப்படி கொடுக்க?” என்றாள் சங்கடமாக.
“எச்சு படாத சாதம்னாலும் நான் சாப்பிடமாட்டேன்.. அப்புறம் எங்க வீட்டுல எனக்கானது வேஸ்ட் ஆகிடும்.. அதுகூட பரவால்ல, என் மாமி ஏன் சாப்பிடலனு துளைச்சி எடுத்து, அதுபத்தாம என் ஹஸ்க்கு போட்டு கொடுத்துடுவாங்க..” என சிரித்தவள்.. “சும்மா பேசிட்டிருக்கலாம்னுதான் வந்தேன், உனக்கு திரும்ப எப்ப டியூட்டிக்கு போகனும்?” என்றாள்.
“நாலு மணிக்கு ஹாஸ்பிட்டல்ல இருந்தா போதும்.” என்றாள்.
“ஹம்.” என மங்கையையே இமைக்காமல் பார்த்தவள்.. “நீ ரொம்ப அழகா இருக்க.” என்றாள்.
“ஹா..ஹா.. உங்களவுக்கு நான் அழகில்லனு எனக்கு தெரியும்.. ஆனாலும் உங்க காம்ப்ளிமண்ட்க்கு தேங்க்ஸ்.” என சாப்பிட்டு முடித்தவள்.. “ஒரு நிமிஷம்.” என அனைத்தையும் உள்ளே வைத்து வந்தவள்.. நிச்சயம் விசயமில்லாம வந்திருக்க மாட்டாங்க என நினைத்து.. “என்கிட்ட எதாவது பேசனுமாக்கா..” என்றாள்.
ஷர்மி.. “ம்.. எனக்கு ஹெல்ப் பண்ணனும்னு உனக்கு எப்படி தோணுச்சு? நான் உன்கிட்ட பேசினதுகூட இல்ல..” என்றாள்.
“வேலைக்கு போனாலும் சமைச்சி வச்சட்டுதான் போவா, என் பொண்ணுங்களோட ரொம்ப இணக்கமா இருப்பா, என் மகன் அக்கா தங்கைகளுக்கு எவ்வளோ செலவு செய்தாலும் கணக்கு பார்க்கமாட்டா, அப்படியிப்படின்னு ஆன்ட்டி உங்களை எப்பவும் புகழ்ந்துட்டேதான் இருப்பாங்க..
உங்களுக்கு யுட்ரஸ் ப்ராப்லம் இருந்தும், அதை குறையா நினைக்காம மாமியாரே மருமகளை பாராட்டுறாங்கனா அப்போ நீங்க எந்தளவுக்கு நல்லவங்களா இருப்பிங்கனு நானும் நினைச்சிருக்கேன்,
இவள் குணம் கொண்டு குழந்தை பிறந்தாலும் தேவ்க்கு பிடிக்கும் என மனதினுள் நினைத்தவளுக்கு மங்கையைப் பற்றியும் அவளின் அன்னையைப் பற்றியும் முன்பே தெரியும் ஆதலால், இம்முறை மங்கையின் குடும்பத்தில் மற்றவர்களைப் பற்றித்தான் விசாரிக்க வந்தாள். ஆனால் தற்போது எப்படி கேட்க என்று சங்கடம் வர அமைதிகாக்கவும்..”என்னக்கா யோசனை?” என்றாள் மங்கை.
“உ.. உங்க ஃபேமலில இன்னும் யாரெல்லாம் இருக்காங்க?” என்றாள் தயக்கத்தோடு.
“அப்பா இறந்துட்டார், அம்மா அவங்கம்மாப்பாவை பார்த்துக்கிறதுக்காக ஊர்ல இருக்குறது உங்களுக்கு ஆல்ரெடி தெரியும்.. எனக்கு ஒரு அண்ணன் இருக்கான், பேரு அறிவுக்கரசு, யு.எஸ்ல இருக்கான்..
முக்கியமான விசயம்.. எங்கம்மா எனக்கும் அறிவுக்கும் தீவிரமா அலைன்ஸ் பார்த்துட்டிருக்காங்க, யாருக்கு முதல்ல ஃபிக்ஸ் ஆகுதோ அவங்களுக்கு கூடிய சீக்கிரம் டும்..டும்..டும்.. அப்புறம் நீங்க நினைச்ச நேரமெல்லாம் என்னை ஈசியா பார்த்திட முடியாது..“ என்றாள் சிரிப்போடு.
“உன் அழகான மனசுக்கு நிச்சயம் பெஸ்ட் பர்சன் கிடைப்பாங்க..” என வாழ்த்தி, அவளின் அண்ணனைப் பற்றி விசாரிக்க, அவளிடம் இருந்த அறிவுக்கரசு போட்டோவைக் காட்டி நிறைந்த பாசத்தோடு தன் அண்ணன் பெருமைகளை விளக்கினாள்.
“இதுல எங்க உங்கப்பாவை காணோம்.?” என ஷர்மிளா கேட்டதும், மங்கையின் முகம் வாடிட, “ஹே..சாரி சாரி, உங்கப்பா பத்தி கேட்டு உன்னை கஷ்டப்படுத்திட்டேன்..” என வருந்த..
“எங்கப்பா பத்தி கேட்டதுனால எனக்கு கஷ்டம் இல்லக்கா, எங்கப்பாவலதான் எனக்கு கஷ்டமே..” என தன் தந்தையைப் பற்றி சுருக்கமாக சொல்லி, “அதனாலதான் நானும் எங்கண்ணனும் சொந்த ஊர்ல இல்லாம ஆளுக்கொருபுறம் இருக்கோம்..” என்றாள் வேதனையாக.
“அச்சோ அவங்கப்பா இத்தனை மோசமானவரா? அப்போ அவரோட குணம் கூட தேவ் குழந்தைக்கு வர வாய்ப்பிருக்கா? என யோசிக்க, தன் தந்தையால் தான் படும் வேதனை நினைத்து வருந்துகிறாள் என நினைத்த மங்கை.. “நீங்க ஃபீல் பண்ணாதிங்கக்கா, கவலையும், வலியும் இல்லாத மனிதர்கள் இருக்காங்களா என்ன?” என ஷர்மியை தேற்றினாள்.
“சரி நான் கிளம்பறேன், மாமியார் தேடுவாங்க..” என கிளம்பினாள். வீட்டிற்கு வந்தவளிற்கு மங்கையின் அப்பா நடத்தையை நினைக்க மனம் பதறியது.. ஜீண்கள் பற்றி நிறைய மொபைலில் ஆராய.. அத்தகவல்கள் ஷர்மிளாவின் மனதை மேலும் வழுவிலக்க வைத்தது.
ஐந்து மணிபோல் தேவேஷ் வரவும்.. “தேவ்.” என்க.. எதையோ நினைத்து கலங்கியிருக்கிறாள் என்று அவளின் முகமே காட்டிக்கொடுக்க.. மனைவியை காண ஆசையாய் வந்த தேவேஷின் முகமும் இயல்பை தொலைத்தது.
“உன் பொண்டாட்டி மதியம் சாப்பிடல, அவளை இனி லீவ் போட அனுமதிக்காத, ரூம்க்குள்ள உக்காந்துட்டு செல்போனே கதியா கிடக்குறா.” என நொடித்துவிட்டு போனார் கற்பகம்.
இன்னும் எதையோ மறைக்கிறாள் எனப்புரிந்த தேவேஷின் முகம் இறுகவே.. “தேவ்.. சாரி.” என குரல் கமற..
“தயவு செய்து அழ ஆரம்பிக்காத.” என அதட்டி.. “நல்ல அப்பாம்மா வயித்துல பிறக்குற குழந்தை நல்லவங்களாவே இருக்குறதும் இல்ல, அயோக்கியனுக்கு பிறந்த குழந்தை அயோக்கியனா வளரதும் இல்ல.. குழந்தையோட குணம் நம்ம வளர்ப்புல இருக்கு..
சில விசயங்களுக்கு சஸ்பன்ஸ்தான் அழகு. அதனால குழந்தை விசயத்தை ரொம்ப ஆராயாம, இன்னும் நாலுமாசத்துல நம்ம கைக்கு வரப்போகிற சந்தோசத்தை எப்படி அனுபவிக்கிறதுனு யோசி.” என்றான் பொறுமையாக.
“ம்..” என தலையசைத்தாள். நாம் பேசியதில் திருப்தியடையவில்லை என்பது அவள் முகத்தில் தெரிய சலிப்பாய் உணர்ந்தான் தேவேஷ்.