“மதியம் நான் பேசினேன்.. குழந்தை பிறந்ததைப் பத்தி கூட சொன்னேனே.” என்றார் மருத்துவர்.
“ஓ.. அப்போ குழந்தைப் பிறந்த சந்தோசத்தை ஷேர் பண்ணிக்கத்தான் ஹஸ்பண்டை பார்க்க போயிருப்பாங்களோ, அங்க வச்சிதான் ஆக்ஸிடண்ட் ஆனதுனு ஆன்ட்டி சொன்னாங்களே.” என தானாய் புலம்பினாள் மங்கை.
“குழந்தை பிறந்து இரண்டு மணிநேரமாகியும் இன்னும் ஷர்மியை காணோம்னதும் டென்ஷனா இருக்காங்க.” என ஸரோகேஸியின் நிலையை விளக்கினார் மருத்துவர்.
வாடகைத்தாயாக இருப்பது சொந்தங்களுக்கு தெரியாமலிருக்க, நான்காவது மாதத்திலிருந்து ஸரோகேட் மதர் இங்கேயே தங்கியிருப்பது, இவர்களுக்கான செலவை ஷர்மிளா ஏற்றது, ஸரோகேஸியின் தனிப்பட்ட பணப்பிரச்சனை என அனைத்தும் மங்கைக்கு தெரியும் ஆதலால்.. பலத்த யோசனையில் இருந்தாள் மங்கை.
“அவங்க குழந்தைகளை பார்த்து ஆறுமாசம் ஆனதால இன்னைக்கே வீட்டுக்கு கிளம்பறன்றாங்க.. இப்போ இருக்க சிட்டிவேஷன்ல தேவேஷ்கிட்ட பணத்தை பத்தி பேச முடியாது..
இன்னைக்கே இல்லனாலும் கண்டிப்பா நாளைக்கு பேசிதான் ஆகனும்.. லீகலா குழந்தையை தேவேஷ்கிட்ட ஒப்படைக்கனும்.. ஹாஸ்பிட்டல்ல ரொம்ப நாள் வச்சிட்டிருக்க முடியாது..
ஷர்மிளா உங்க ஃப்ரண்ட்ங்கிற பட்சத்துல, ஷர்மிளா மாமியார், இல்ல அவங்கம்மா, இப்படி நெருங்கின ரிலேசன் யார்கிட்டயாவது இங்கிருக்கும் சூழலை எடுத்து சொல்ல முடியுங்களா?” என்றார் மருத்துவர்.
கற்பகத்தை கண்டதும் கதறியழுத தேவேஷ் கண்முன் நிற்கவே.. வாழ்வின் சரிபாதியை இழந்த நேரம் குழந்தை உட்பட அனைத்திலும் வெறுப்புதான் எஞ்சியிருக்கும்..
அதிலும் இப்படி குழந்தை எனும்போது, இச்சமயம் குழந்தைக்கான முக்கியத்துவம் இருக்காதென அவள் புத்திக்கு எட்டியவரை யோசித்தாள். கூடவே ஷர்மிளாவின் கணவன் சம்மதமில்லாமல் நாம எப்படி பணம் செட்டில் பண்றது? என பலயோசனை வலம் வந்தபோதும்.. “ம்.. நா.. நான் ட்ரை பண்றேன், டாக்டர்.” என்றாள்.
“குட்.. இதுதான் நல்ல ஃப்ரிண்ட்ஸிப்க்கான அடையாளம்.. ” எனப் பாராட்டி, “முடிந்தவரை சீக்கிரம் வந்து குழந்தையை வாங்கிக்க சொல்லுங்க..” என தனது காரியத்தில் கண்ணானார் மருத்துவர்.
ஷர்மிளாவை நான் அழைத்து வந்ததாலும், தற்போது ஷர்மிளா உயிரோடில்லாததால் மருத்துவமணை செலவிற்கும் சேர்த்து சொல்கிறார் எனப்புரிய.. “ஹஸ்ப்பிட்டலுக்கு இன்னும் எவ்வளோ கட்டனும்?” என கேட்டு ஸரோகேஸிக்கான பணத்தையும் கணக்கிட, அத்தொகை தந்தை உயிரோடிருக்கும்போது தன் செலவுக்காக தன் கணக்கில் போட்ட தொகையில் பாதிதான் என நிம்மதியானவள்..
பாவம் செய்து சம்பாதிச்சது பணம், தன் கணக்கிலிருந்து செல்லரித்துப் போவதைவிட , உயிரை பணையம் வைத்து குழந்தை பெற்று கொடுத்த ஸரோகேஸிக்கு போய் சேரட்டும்.. என முடிவெடுத்து.. “நான் இப்போ கார்ட் கொண்டு வரல, வீட்டுக்கு போய் எடுத்துவந்து இன்னைக்கே எல்லாம் செட்டில் செய்துடறேன்..” என்றாள்.
பணம் பற்றி பேசியதும் நழுவுகிறாளோ என நம்பாத பார்வை பார்த்தார் மருத்துவர், அதைப் புரிந்தவளுக்கு தந்தையைப் பற்றி சொல்ல பிடிக்காமல் போகவே.. “என் விருப்பத்துக்குத்தான் நர்ஸ் வேலை பார்க்குறேன்.. மத்தபடி வேலைக்கு போய்தான் ஆகனும்ன்றது இல்ல, நாங்க கொஞ்சம் ரிச் ஃபேமலிதான்.
பணம் கொடுக்குறேன்னு சொல்லிட்டு பின் வாங்கமாட்டேன், கற்பகம் ஆன்ட்டிக்காக கண்டிப்பா செய்வேன்.” என்றவளுக்கு குழந்தை முகம் பார்க்கும் ஆவல்வர.. “குழந்தையை நான் பார்க்கலாமா?” என்றாள்.
இந்த மருத்துவமணையில் குழந்தைபிறந்து வாடகைத்தாய்க்கான பணத்தை கொடுக்காமல் ஏமாற்றிவிட்டார்கள் என ஸரோகேஸி வெளியில் சொன்னால் மருத்துவமணை பெயர் கெடும் என்பதாலும், மருத்துவத்திற்கான பணத்தை வசூல் செய்யாவிடில் டீனிடம் பதில்சொல்ல முடியாதென்றும்,
குழந்தை வேண்டி வந்த ஷர்மிளா எதிர்பாராமல் இறந்திருக்கும் இந்நிலையில் தற்போதைக்கு மங்கையை விட்டால் தனக்குத்தான் பிரச்சனை என யோசித்தவர்.. “ரூல்ஸ்படி பார்த்தா குழந்தையை டோனர்கிட்ட காட்டக்கூடாது.. ஆனா நீங்க ஷர்மிளாவுக்காக விருப்பப்பட்டு டொனேட் செய்ய முன் வந்ததாலயும், அதுக்கு ஷர்மிளாவும் சம்மதிச்சதாலயும் உங்களை குழந்தையை பார்க்க அனுமதிக்கிறேன்.” என பெருந்தன்மையோடு ஒப்புக்கொண்டதை போல் குழந்தையிடம் அழைத்துப்போனார்.
முதல் ஐ.வி.எஃப் தோல்வியடைந்தபோது அவள் முகத்திலிருந்த வேதனை கண்முன் வர, இந்த முறை சக்ஸஸ் ஆகிடுச்சினு எவ்வளோ ஆசையா இருந்திங்கக்கா? கடைசியா குழந்தை முகத்தை கூட பார்க்காம போய்ட்டிங்களே என நினைத்தவளுக்கு கண்ணீர் வெளிக்கிளம்பியது.
ஷர்மிளா உயிரோட இல்லனாலும் குழந்தையை உரிமை கொண்டாட உங்களுக்கு எந்த ரைட்சும் கிடையாது. ஓவம் டொனேட் செய்யும்போதே எல்லாம் லீகலா எழுதிவாங்கியிருக்கு.” என எச்சரித்தார் மருத்துவர்.
“ச்ச..ச்ச.. நான் அப்படி நினைக்கல டாக்டர்.. ஷர்மிக்கா இந்த குழந்தைக்காக எத்தனை மனஉளைச்சலுக்கு ஆளாகியிருக்காங்கனு எனக்குத்தான் தெரியும், அவங்க ஆசைப்பட்ட குழந்தை வந்துடுச்சி, ஆனா அவங்க இல்ல.. அதான் வேதனையாருக்கு..” என கண்ணைத் துடைத்தவள்..
“தீவிரமா எனக்கு அலைன்ஸ் பார்த்திட்டிருக்க இந்தநேரத்துல குழந்தைக்கு உரிமை கொண்டாடினேனா எங்கம்மா என்னை கொன்னே போட்டுருவாங்க.. நான் டொனேட் செய்தது என்னையும் ஷர்மிக்காவுக்கும் தவிர வேற யாருக்கும் தெரியாது.. முக்கியமா எங்கம்மாக்கு தெரிஞ்சது.. அவ்வளோதான்..” என்றாள் பயந்தவளாக.
நிம்மதியடைந்தவராய்.. “சரி வாங்க.” என குழந்தை இருக்கும் அறைக்குள் நுழைய.. “பையனா?” என சந்தோசித்தாள்.
டாக்டர்.. “ஏன் பொண்ணு பிடிக்காதுங்களா?”
“பையனை விட பொண்ணுதான் ரொம்ப பிடிக்கும்.. ஆனா இப்போ ஷர்மிக்கா இல்லாததால பையனா இருந்தா பரவால்லனு கொஞ்சம் முன்ன நினைச்சேன்.. ஏன்னா அம்மா இல்லாம பொண் குழந்தை வளர்த்துறது ஃப்யூச்சர்ல கஷ்டம்.. அதான்.” என்றவள், குழந்தையைப் பார்த்தவாறு.. “சோ க்யூட்..” என்றாள்.
“ம்.. செம க்யூட்தான்.” என பாராட்டிய டாக்டர்.. “சௌமியா.” என நர்ஸை அழைத்து.. “இந்த பேபியோட அப்பா வரதுக்கு ட்டூ த்ரீ டேஸ் ஆகும், அதுவரை நீங்க பார்த்துக்கோங்க, உங்க ஒர்க்கிங் டைம் முடிஞ்சதும் ஈவ்னிங் மலர்கிட்டயும் சொல்லிடுங்க.” என டாக்டர் பணிக்க.. அந்த நர்ஸின் முகம் போன போக்கில் மங்கை அதிர்ந்தாள்.
“கிளம்பலாமா மங்கை?” என மங்கையின் கவனத்தை டாக்டர் கலைக்க, “ம்.. நான் போய்ட்டு பணம் எடுத்துட்டு வந்துடறேன்.” என மங்கை வெளியேற.. “ஜி பே பண்றதுனாலும் ஓ.கே.” என்றார் மருத்துவர்.
“இல்ல அமௌன்ட் வேற அக்கௌண்ட்ல இருக்கு, அதுலயிருந்து ஜி.பே பண்ணமுடியாது. நான் போய்ட்டு பணத்தோட வரேன். ஸரோகேட் மதர்க்கு இன்னைக்கே செட்டில் பண்ணிடலாம்..” என கிளம்பினாள்.
இந்த மருத்துவமணையிலிருந்து வீட்டிற்கு வர ஒரு மணிநேரத்திற்கு மேலாக.. வீட்டிற்கு வந்தவள் அவசரமாக கார்டை தேடி எடுக்க, அவள் வேலை செய்யும் மருத்துவமணையிலிருந்து அழைப்பு வந்தது.
“என்னமா இன்னும் காணோம்?” என்றார் மருத்துவர்.
“காட்.. லீவ் சொல்லாம விட்டுட்டமே.” என தலையில் அடித்துக்கொண்டவள்.. “சாரி சார்.. இன்னைக்கு நான் லீவ், இன்ஃபார்ம் பண்ண மறந்துட்டேன்.” என்றாள் மன்னிப்பாக.
“ஆர்.யு ஓ.கே?” என மருத்துவர் அக்கறையாக கேட்கவும்.. “ஐம் நாட் ஓ.கே சார்.. இன்னும் இரண்டு நாளைக்கு லீவ் வேணும்.” என்றாள் தயக்கத்தோடு.
“மங்கை.. எதாவது ஹெல்ப்?”
“இல்ல சார், அதெல்லாம் வேணாம், நா.. நான் எனக்கு கொஞ்சம்..” என என்ன சொல்வதென தெரியாமல் மங்கை தடுமாற..
பணியில் அவளின் அற்பணிப்பு தெரிந்ததாலும்.. காரணமின்றி விடுப்பு எடுக்கமாட்டாள் என.. “இட்ஸ் ஓ.கே.. ஒகே.. உங்க வேலை முடிச்சிட்டு வாங்க.. டேக் கேர்..” என தேற்றி இணைப்பை துண்டித்தார்.
கார்டை எடுத்தவள் குழந்தையை பார்த்துக்கொள்ள கிளம்புவதால் மீண்டும் ஒருமுறை குளித்து வெளியே வர.. ஷர்மிளாவை இடுகாட்டிற்கு எடுத்து செல்லும் பணிகள் ஆயத்தமாகிக்கொண்டிருப்பது புரிந்தது.
கல் மனமும் கரையும் வகையில் கற்பகத்தின் ஒப்பாரி இவள் வரை கேட்கவே, மங்கைக்கு முனுக்கென கண்ணீர் வெளியேறியது. துக்கத்தில் பங்கெடுக்காமல் இங்கிருந்து பார்ப்பது தவறு எனப்புரிந்தபோதும், குழந்தையை பார்த்துக்கொள்ள செல்வதால் கண்ணீரை துடைத்துக்கொண்டு மருத்துவமணை கிளம்பினாள்.
மருத்துவமணை செல்ல மாலை ஐந்தரை மணியாகிட, இரண்டாம் தளம் வரவே லிஃப்டிலிருந்து வெளியேறவும்.. “மலர், நீ இன்னைக்கு மாட்டினடி.. ஒன் நாட் த்ரீல இருந்த ஸரகேட் மதர்க்கு குழந்தை பிறந்திடுச்சி,
லீகல் பேரண்ட் பர்மிஷன் இல்லாம ஸரோகேட் மதர் ஃபீட் பண்ணக்கூடாது.. ஃபீடிங் பாட்டில்ல சக் பண்ண முடியாம பசிக்கு குட்டி சாத்தான் மாதிரி கத்தியே இருக்கிறான்.. ஆனா குழந்தையை வாங்கிக்க இன்னும் யாரும் வரல, பேரண்ட்ஸ் வரவரைக்கும் நாமதான் பார்த்துக்கனுமாம்.. எத்தனை நாளைக்கு அந்த குழந்தைக்கு ஆயா வேலை பார்க்கனுமோ?” என்றாள் சலித்தவாறு.
“ஏய் குழந்தையை ஏண்டி அப்படி சொல்ற?” என மலர் சாட, நர்ஸை முறைத்தவாறு மருத்தவர் அறைக்கு சென்ற மங்கை.. கதவை தட்ட, அதில் கவனம் கலைந்த நர்ஸ்.. “நான் அப்புறம் பேசறேன்..” என இணைப்பை துண்டித்தவள்..
“ஏங்க.. என்ன நீங்க பாட்டுக்கு கேட்காம கதவை தட்டுறிங்க?” என்றாள் கோபமாக.
“ம்.. யார்கிட்ட கேட்டுட்டு உங்களைப் பார்க்க வரனும்னு டாக்டர்கிட்ட கேட்க்கத்தான்.” என்றாள் முறைப்பாக.
நர்ஸ்.. “ஹலோ.. நான் இங்கதான நின்னுட்டிருந்தேன்?” என்றாள்.
“டியூட்டி டைம்ல யாரோடவே ஃபோன்ல பேசிட்டு நின்னுட்டிருந்திங்க.” என கோபத்தை உள்ளடக்கி சொல்ல.. நர்ஸ் தடுமாற.. மங்கை உள்ளே போனாள்.
“வாங்க மங்கை” என மருத்துவர் வரவேற்க, “ஸரோகேட் மதரை நான் மீட் பண்ணனும்.” என்றாள்.
“அவங்களும் எப்போ வீட்டுக்கு போவோம்னுதான் காத்திட்டிருக்காங்க, வாங்க போலாம்.” என அப்பெண்மணியின் அறைக்கு அழைத்துப்போனார்.
“மங்கை.. அந்த ஷர்மிளாப் பொண்ணு இறந்துடுச்சாமே..” என ஸரோகேஸியின் முகம் பயத்தை பூச..
ஷர்மிளாவின் நினைவில் கண்கலங்கியவள்.. “என்னை நம்பிதான இதுக்கு ஒத்துக்கிட்டிங்க? அவங்க இல்லனாலும் நான் உங்களை ஏமாத்தமாட்டேன்.. உடம்பு பரவால்லையா?” என்றாள் அனுசரனையாக.
“கவலைப்படாதிங்கக்கா.. பணம் அப்புறம் வாங்கி தரேன்னு உங்களை கன்வின்ஸ் பண்ண நான் வரல.. உங்களுக்கு செட்டில் பண்ணத்தான் வந்தேன்..” என அவளிற்கான பணத்தை நீட்டி.. “வாங்கிக்கோங்கக்கா.” என்றாள்.
“நீ.. நீ எதுக்கு மங்கை கொடுக்குற? வேணாம் வேணாம்.. இரண்டொரு நாள் லேட்டானாலும் பரவால்ல..” என அப்பெண் தடுமாறினாள்.
“பொண்டாட்டியை பறிகொடுத்துட்டு இருக்கிறவங்ககிட்ட பணத்தை பத்தி எப்படி பேசமுடியும்? அதேநேரம் உங்க நிலையும் ரொம்ப கஷ்டம்தான? அம்மா எப்போ வீட்டுக்கு வருவாங்கனு உங்க பசங்க உங்களை எதிர்பார்த்திட்டிருப்பாங்க..
எப்படியும் நாளைக்கு, இல்ல நாளன்னைக்கு குழந்தையைப் பத்தி சொல்லித்தான் ஆகனும்? ஷர்மிளாக்கா மாமியார் எனக்கு ரொம்ப க்ளோஸ்.. அவங்ககிட்ட சொல்லி என் பணத்தை வாங்கிப்பேன்.. இப்போ என்கிட்டயிருந்து வாங்கிக்கோங்க.” என்றாள்.
“பணத்தை பெற்றுக்கொண்டவள்.. “குழந்தை பசிக்கு கத்திட்டே இருக்கான்.. நான் பால் கொடுக்கிறேனு சொன்னேன்.. டாக்டர்தான் அவங்க பர்மிஷன் இல்லாம கொடுக்க கூடாதுனுட்டாங்க.” என்றார் பாவமாக.
“ஆமாம்க்கா, அவங்க பர்மிஷன் கொடுக்காம நீங்க ஃபீட் பண்ண கூடாது, அப்படியே கொடுத்தாலும் எத்தனை நாளுக்கு கொடுக்க முடியும்?” என வருந்தியவள்.. “ஃபீடிங் பாட்டில்ல பழக்கிவிடறதுதான் பெட்டர்.. நான் பார்த்துக்குறேன்.. நீங்க கிளம்புங்க..” என்றாள்.
“இதென்ன மங்கை? பேசின பணத்தை விட தொகை அதிகமா இருக்கு? இந்தா.. எண்ணிப்பார்த்து சரியா கொடு..” என அப்பெண் பணத்தை திருப்ப.. “தெரிஞ்சுதான்க்கா கொடுத்தேன்.. உங்களுக்கு இருக்கிற கடனுக்கு மட்டும்தான் ஷர்மிக்காகிட்ட நீங்க பேசினது.
இந்த உடம்பை வச்சிட்டு, எப்படி வேலைக்கு வருவிங்க? எல்லா ஆஃபீஸ்லயும் குழந்தை பிறந்தா குறைஞ்சபட்சம் மூனு மாசமாவது லீவ் கொடுப்பாங்க, நீங்களும் மூனுமாசத்துக்கு வேலைக்கு போகாதிங்க, அதுவரைக்கும் சமாளிக்கத்தான் எக்ட்ஸ்ரா அமௌண்ட் கொடுத்திருக்கேன்.”
“முதல்ல பணத்துக்காகத்தான் இதுக்கு ஒத்துக்கிட்டேன், குழந்தையில்லாதவங்களுக்குத்தான் அதோட வலி தெரியும்.. பணத்துல எங்களுக்கு குறைவச்ச கடவுள் இதுல கருணை காட்டிருக்கார்னு மன நிறைவோடதான் குழந்தையை சுமந்தேன்..
ஆனாலும் எதோ என் போறாத காலம், பணத்தை வேணாம்னு சொல்ற நிலையில நான் இல்ல, அதுக்காக அதிக பணம்லாம் வேணாம்.. நான் பேசின பணம் மட்டும் எனக்கு போதும் மங்கை.” என்றாள் அந்த பெண்.
“நான் கேட்டு, எனக்காக என் ஃபிரண்டுக்கு நீங்க செஞ்ச பெரிய உதவிக்கான என்னோட அன்பளிப்பு.. ஷர்மிளாக்கா உயிரோட இருந்தாலுமே தனிப்பட்ட முறையில உங்களுக்கு எதாவது செய்யனும்னுதான் இருந்தேன்..” என தேற்றி.. “கிளம்புங்கக்கா.. உடம்பை பார்த்துக்கோங்க.” என டாக்டரை பார்க்க..
டாக்டர்.. “நர்ஸ் ஃபைல் கொண்டு வருவாங்க, அதுல கையெழுத்து போட்டுட்டு நீங்க கிளம்பலாம்.” என்று இருவரும் வெளியேறினர்.
இவர்கள் பேசிகொண்டிருந்ததை பார்த்திருந்த நர்ஸிற்கு, இவள் பெரிய இடம்போல, டாக்டர்கிட்ட போட்டு கொடுத்திடுவாளோ என்ற பயம் வர.. இவர்கள் என்ன பேசுகிறார்கள் என அவர்கள் அறியாமல் பின்தொடர்ந்தாள்.
மங்கை.. “ஷர்மிளாக்கா வீட்டுலயிருந்து குழந்தையை வாங்க வரவரைக்கும் குழந்தையை நானே பார்த்துக்கிறேன்.” என்றாள்.