“டோனரும் பார்த்துக்க கூடாது மங்கை.” என மருத்துவர் மறுக்க.. “நான்தான் டோனர்னு ஸரோகேஸி முதற்கொண்டு யாருக்கும் தெரியாது.. ஒரு மனிதாபிமானத்துலதான் கேட்குறேன்.. மத்தபடி குழந்தைக்கிட்ட உரிமை கொண்டாடும் எண்ணமெல்லாம் எனக்கில்ல.” என்றாள்.
“இங்க நர்ஸ் பார்த்துப்பாங்க.” என மருத்துவர் மறுக்க.. “நர்ஸ் தொழில் செய்ய நிறைய பொறுமை தொழில் ஈடுபாடு வேணும்.. அதுவும் குழந்தை விசயத்துல அது ரொம்ப முக்கியம்.
இங்க இருக்க நர்ஸ்க்கு இது இரண்டுல ஒன்னுகூட இருக்க மாதிரி எனக்கு தோணல.. அதனால குழந்தை ஹாஸ்பிட்டல்ல இருக்கும்வரை குழந்தையை நானே பார்த்துக்கிறேன்.” என்றாள் அந்த நேரம் அங்கு வந்த நர்ஸை முறைத்தவாறு.
“தேவேஷ் என்ன சிட்டிவேஷன்ல இருந்தலும் எங்க கடமையை நாங்க செய்துதான் ஆகனும், ஷர்மிளா டெத் தவிர்த்து வேற எந்த ரீசனா இருந்திருந்தாலும் குழந்தையை இங்க வச்சிருக்க மாட்டோம்.. நாளைக்கு திரும்பவும் தேவேஷ்க்கு கால்பண்ணி குழந்தை பிறந்திருக்க விசயத்தை சொல்லத்தான் போறேன்.
இன்கேஸ் நாளைக்கும் தேவேஷ் கால் அட்டன் பண்ணலனா அவங்க அட்ரஸ் ஃபைல்ல இருக்கு, நேர்ல போய் சொல்வோம்.. இன்னைக்கு ஒரு நைட் மட்டும்தான் குழந்தை இங்க இருக்கும்.. நாங்க பார்த்துப்போம்.” என மீண்டும் மறுத்தார்.
“ஷர்மிளாக்காவோட க்ளோஸ் ஃப்ரண்ட் நான்.. நான் குழந்தையை பார்த்துக்குறதுனால ஒரு பிரச்சனையும் வராது. ஒரு நைட் தான்னாலும் இங்க இருக்குறவங்களை நம்பி குழந்தையை விட முடியாது.
அதோட நானும் ஒரு நர்ஸ்தான், ஒன்றரை வருசமா” என அவள் வேலை செய்யும் மருத்துவமணை பெயரை சொல்லி, “பீடியாட்ரிஷன்க்கு நர்ஸ்சா ஒர்க் பண்ணதால குழந்தையை பார்த்துக்கிறது எப்படினு எனக்கு தெரியும்.
என்னை அனுமதிச்சிங்கனா குழந்தையோட அப்பா வரவரைக்கும் குழந்தையை பார்த்துகிட்டிருந்துட்டு அமைதியா போய்டுவேன், அதை விட்டுட்டு விரட்டுனிங்கனா, இந்த நர்ஸ் வேலை பார்த்த லட்சணத்தை எம்.டி கிட்ட கம்ப்ளைன் செய்து நடவடிக்கை எடுக்காம போகமாட்டேன்.” என்றாள் மிரட்டலாக.
“என்ன பண்ணாங்க?” என மருத்துவர் அதிர்வாக.. “இங்க மலர்னு இன்னொரு நர்ஸ் வேலை பார்க்குறாங்கள்ல? இந்த நர்ஸ் நம்பர்லயிருந்து அவங்களுக்கு கால் செய்து பேச சொல்லுங்க, இவங்க என்ன பேசினாங்கனு தெரிஞ்சிடும்.” என்றாள் கோபமாக.
“என்ன பேசின?” என நர்ஸை மருத்துவர் முறைக்க.. நர்ஸ் தடுமாற.. “மங்கை.. “குழந்தையை பார்த்துக்க சொன்னபோதே இவங்க முகம் போன போக்கு சரியில்லன்றதாலதான் நானே பார்த்துக்கலாம்னு வந்தேன்.. இங்க வந்ததும் நான் நினைச்சது ரொம்ப சரின்னு நிரூபிச்சிட்டாங்க.” என முறைத்தவள்..
“பிறந்து ஒரு நாள் கூட முடியாத குழந்தைக்கு குட்டிசாத்தான்னு பேர் வச்சாங்க.” என்றாள் அடக்கப்பட்ட ஆத்திரத்துடன்.
நர்ஸ்.. “மேம்… சாரி மேம்.. நான் எதோ..” என கெஞ்ச.. “கெட்டவுட்.” என கத்திய மருத்துவர்.. “சரி இன்னைக்கொரு நாள் பார்த்துக்கோங்க, எப்படினாலும் நாளைக்கு குழந்தை லீகல் பேரண்ட்கிட்ட ஒப்படச்சிடுவோம். இல்ல அவங்கள்ல யாரவது வந்து பார்த்துக்க ஏற்பாடு செய்வோம்.” என்றார்.
“தேங்க்யூ டாக்டர்.” என குழந்தையிடம் சென்றாள்.
ரூமிலிருந்த வாஷ்பேசினில் தன் கைகளை கழுவியவள் குழந்தையை தூக்கி தன் மடியமர்த்தினாள். சற்று முன் முதல் முறை பார்த்தபோது ஆசையாய் ரசித்த குழந்தையை தற்போது ரசிக்க முடியவில்லை.
இந்த நிமிடம் வரை தன் குழந்தை என்ற எண்ணமெல்லாம் மங்கைக்கு இல்லை, அதேநேரம் செவிலிப்பெண்ணின் வார்த்தையையும் அலட்சியத்தையும் பொறுக்க முடியவில்லை. “உன்ன போய் குட்டிசாத்தானு சொல்லிட்டாளேடா பட்டு.” என உறங்கிக்கொண்டிருந்த குழந்தையின் கன்னத்தை வருடிவிட்டாள்.
“உன் வரவுக்காக உன் பாட்டி தவமிருக்காங்கடா.. நீ பிறந்தது அவங்களுக்கு தெரியாதில்ல? அதான் யாரும் வரல..” என்றவளுக்கு ஷர்மிளா நினைவு வர, “உங்கம்மா இல்லனா என்னடா? உன்பாட்டி, அத்தைங்கள்லாம் உன்ன ராஜாபோல பார்த்துப்பாங்க..” என கலங்கியவளுக்கு, தேவேஷ் பார்த்துப்பானா என்பதில் சந்தேகம் என்பதைவிட இனம்புரியாத பயம் உண்டானது.
“உங்கம்மா போன துக்கத்துல இப்போ உங்கப்பா பார்த்துக்கலன்னாலும், கொஞ்ச நாள் கழிச்சி பார்த்துப்பாங்கடா.. என்னயிருந்தாலும் நீ அவர் ரத்தம்தான?” என குழந்தையை தேற்றுவதாய் நினைத்து தன்னைதானே தேற்றிக்கொண்டிருந்தாள் மங்கை.
“குழந்தையை விட, தூங்குற குழந்தைகிட்ட பேசிட்டிருக்க நீங்க ரொம்ப அழகா இருக்கிங்க..” என்றபடி மலர் உள்ளே வந்தாள்.
“ம்கூம்..” என செருமி தன்னை சரிசெய்தவள்.. “நைட் சிஃப்ட்க்கு நீங்கதானா?” என்றாள் மங்கை.
“குழந்தைக்கு புரியுதோ இல்லையோ, இவன்கிட்ட பேசினதும் எனக்கு ரிலாக்சா இருக்கு.” என்கவும்..
“ஹம்.. குழந்தையோட அம்மா இன்னைக்கு இறந்துட்டாங்களாம், இப்போதான் டாக்டர் சொன்னாங்க. அவ்வளோ ஆசையா ஒவ்வொரு மாசமும் குழந்தையோட கண்டிசனைப் பத்தி டாக்டர்கிட்ட நேர்ல வந்து கேட்டுட்டு போவாங்க..” என வருந்தியவள்.. “குழந்தை மோஷன், யூரின் போனானா?” என்றாள்.
“நான் இப்போதான் வந்தேன், அதுக்கு முன்ன போனானா தெரியல..” என்றவள் பேச்சு நிற்க, “என்னாச்சு?” என நர்ஸ் கேட்கவும்.. குழந்தை வீரென்று கத்த.. “இப்போ போய்ட்டான்..” என குழந்தையின் ஈரத்தை காண்பித்தாள்.
“ஓஹ்..” என செல்ஃபில் எதையோ தேட, “நான் முன்ன வந்தப்பவே பார்த்துட்டுதான் போனேன், அங்க எதுவும் இல்ல, பணம் தரேன், கொஞ்சம் ஷாப்பிங்க்கு போய் வரிங்களா?” என்றாள் தயக்கத்தோடு.
“டியூட்டில இருக்கும்போது நான் போக முடியாது, குழந்தையை நான் பார்த்துக்கிறேன், நீங்க போய் வாங்கி வாங்க.” என குழந்தையை வாங்கவும்.. “ம் சரி.” என மங்கை கிளம்ப.. “இங்க ஹாஸ்பிட்டல் முன்னாடி இருக்க கடையிலயே எல்லாமும் கிடைக்கும்.” என்றாள்.
“தேங்க்ஸ்.” என விரைந்தவள்.. கால் மணி நேரத்தில் குழந்தைக்கு தேவையான உடை, ஸ்வட்டர், சாக்ஸ், பேம்ப்பர்ஸ் என அனைத்தும் வாங்கி வந்தாள்.
“ஏன் இப்படி கத்துறான்?” என மங்கை பரிதவிக்க.. “வேறென்ன? யூரின் போய்ட்டான்ல? ஈரம் பிடிக்கல, அதோட பசி எடுத்துடுச்சி.. ஃபீடிங் பாட்டில்ல குடிக்க கஷ்டப்படுறான்.. இரண்டு நாள் போனதும் பழகிப்பான்.” என்றாள்.
குழந்தையை வாங்கி உடை மாற்றிவிட்டவள்.. “ஹாட் வாட்டர் கிடைக்குமா? கொஞ்சம் அதுமட்டும் இந்த ஃப்ளாஸ்க்குல எடுத்து வரிங்களா?” என்றாள்.
தாய்ப்பால் இல்லாததால் குழந்தைக்கான தரம் வாய்ந்த பால்பவுடர் வாங்கி வந்திருப்பதை பார்த்து ஆச்சர்யமான நர்ஸ்.. “இதை யார் உங்களுக்கு சஜஸ்ட் பண்ணாங்க?” என்றாள்.
தன் தொழிலை சொன்னவள்.. “எனக்கே தெரியும்னாலும், டாக்டர்கிட்டயும் பிரிஸ்க்ரிப்ஸன் வாங்கிட்டுதான் போனேன்.. இதை கலக்கத்தான் ஹாட் வாட்டர் கேட்டேன்.” என்றாள் காரியத்தில் கண்ணாக.
இப்படியாக இரவெல்லாம் கருத்தாய் குழந்தையை பார்த்துக்கொண்டவளுக்கு தன் குழந்தை என்ற எண்ணமில்லாதபோதும், குழந்தை அழுதால் மனம் பதைக்கத்தான் செய்தது.
** *** ****
அடுத்த நாள் காலை ஒன்பது மணிபோல் ஷர்மிளா வீட்டிற்கு வந்தாள் நர்ஸ். “இந்த நேரத்துக்கெல்லாம் அரக்க பறக்க கிளம்புவா.. நேத்து காலைல அவ்வளோ அழகா கிளம்பி போனா கார்த்தி..” என அழுதார் கற்பகம்.
“ம்மா அழாத.” என தேற்றினாலும் கற்பகத்தால் அழுகையை நிறுத்த முடியாமல் போகவே.. “அத்த அழாதிங்க..” என விஜயன் தேற்ற, பின்னே கார்த்திகாவும்.. “ம்மா.. நீ அழுதா தேவா இன்னும் உடைஞ்சி போறான்.. அங்க பாரு.” என தேவேஷை காட்ட, கண்மூடி சோபாவில் படுத்திருந்த தேவேஷின் விழியோரத்தில் இடைவிடாது வந்துகொண்டிருந்தது கண்ணீர்.
மகனின் கண்ணீர் மனதை பதைக்க செய்ய.. “என் மகனை இப்படி விட்டுட்டு போய்ட்டாளே.. அவளை மாதிரி புருசன் மேல பாசம் வச்ச பொண்டாட்டியை என் வயசுக்கு எங்கயும் பார்த்ததில்லயே.. என் மகனை எப்படி மீட்டெடுப்பேன்?” என கதறினார்.
பத்து நிமிடம் வரை வாயிற்படியில் காத்திருந்த செவிலிப்பெண்.. “ஆன்ட்டி.” அழைக்கவே.. “யார் மா நீ?” என்றாள் கார்த்திகா.
“நான் அபி பேபி சென்ட்டர்லயிருந்து வரேன்.. இங்க தேவேஷ்.” என கேட்கவும்..
“என் மகன்தான், உள்ள வாம்மா.” என்ற கற்பகம்.. “தேவா உன்னத்தான் கேட்குறாங்க.” என்றார் மகனிடம்.
தேவேஷ் எழுந்தமர.. உள்ளே வந்தவள்.. “உங்களுக்கு மகன் பிறந்திருக்கான்..” என நிறுத்தி நிறுத்தி சொல்ல.. “என்ன குழந்தை பிறந்துடுச்சா? இது ஒன்பது மாசம்தான?” என பரபரத்தார் கற்பகம்.
“சில குழந்தைகள் ஒன்பது மாசத்துலையே பிறந்திடும்.. நேத்தே பிறந்துட்டான், ஹாஸ்பிட்டல்லயிருந்து ஷர்மிளாவுக்கு போன் செய்து சொல்லியும் அவங்க ஹாஸ்பிட்டலுக்கு வரல.. மிஸ்டர் தேவேஷ்க்கும் கால் செய்தாங்க, அவரும் அட்டன் பண்ணல..
நேத்து ஈவ்னிங்தான் ஷர்மிளா இறந்த விசயம் டாக்டருக்கு தெரிய வந்தது, அதனால நேர்ல போய் சொல்லிட்டு வர சொன்னாங்க..” என்றாள் பரிதவிப்பாக.
நர்ஸ் பேசியதை கேட்டிருந்த தேவேஷ்.. ஷர்மி சாக இரண்டு நிமிஷம் முன்னவரை பேசினோமே? குழந்தை பிறப்பு அவளுக்கு தெரிந்திருந்தா சொல்லியிருப்பாளே.. ஒருவேளை நேர்ல பார்த்து சொல்லலாம்னு வந்திருப்பாளோ என நினைக்க மீண்டும் கண்ணீர் துளிர்த்தது.
தன் மொபைலை எடுத்து பார்த்தவனுக்கு அப்பொழுதுதான் மருத்துவமணையிலிருந்து அழைப்புகள் வந்திருப்பது தெரிய.. வந்திருப்பவள் சொன்னது உண்மையென நம்பினான்.
“என்ன குழந்தை பிறந்திருக்கு? கார்த்தி கிளம்பு.. நாம போலாம்.” உடையை சரிசெய்தார் கற்பகம்.
“ஆன்ட்டி.. மிஸ்டர் தேவேஷ் வந்தாதான் குழந்தையை கொடுப்பாங்க, அவர் சைன் பண்ணனும்..” என்றாள் தேவேஷை பார்த்தவாறு.
குழந்தை குழந்தைனு கடைசியா அதை பார்க்காம கூட போய்ட்டாளே என்ற வேதனையில் தேவேஷ் இருக்க.. “தேவா..” என தம்பியின் கவனம் கலைத்தாள் கார்த்திகா.
தேவேஷ் குனிந்தேயிருக்க.. “நீ வந்தாதான் குழந்தையை கொடுப்பாங்களாம், கிளம்புடா.” என்றாள் தவிப்பாக.
“ம்..” என தனதறை சென்றவன், வீட்டிலிருந்த தொகை, தனது கார்டோடு ஷர்மிளாவின் கார்டையும் எடுத்து வெளியே வந்தவன்.. “ம்மா நீ இரு, நானும் கார்த்தியும் போய்ட்டு வரோம்.” என காரெடுக்க கிளம்ப.. “நானும் வரேன்டா.” என பிடிவாதமாய் கற்பகமும் கிளம்பினார்.
“அவங்க யாரையும் பார்க்க விரும்பலைங்க தேவேஷ்.. அக்ரிமன்ட்ல இதையும் சேர்த்தான் எழுதியிருக்கு, அவங்க நேத்தே கிளம்பிட்டாங்க” என்றதும்.. “அமௌன்ட் வாங்கிக்காம் எப்படி கிளம்புனாங்க?” என்க..
மருத்துவர் தடுமாறவே.. “முதல்ல குழந்தையை பார்க்கனும்..” என கற்பகம் பரபரக்க.. “அமெளன்ட் வாங்கிக்காம எப்படி கிளம்புனாங்கனு கேட்டனே?” என்றான் மீண்டும்.
“அமெளன்ட்தான் மிஸஸ் ஷர்மிளாவோட ஃப்ரண்ட் மங்கை கொடுத்துட்டாங்களே, அதை சொல்ல ஏன் தயங்குறிங்க?” என்றார் அங்கு வந்த மருத்துவமணை எம்.டி.
“என்ன மங்கை கொடுத்தாங்களா?” என தேவேஷ் அதிர.. “நம்ம மங்கைதான? நாம அவளுக்கு கொடுத்துக்கலாம்.. முதல்ல குழந்தையை பார்க்கலாம் வாடா.” என ஆவலோடு மருத்துவரை பார்த்தார் கற்பகம்.
அனைவரும் குழந்தையிருக்கும் அறைக்குள் நுழைய.. குழந்தையை அணைத்தவாறு சோர்ந்த முகத்தோடு கண்ணயர்ந்திருந்தாள் மங்கை. அதைப் பார்த்த தேவேஷ் மருத்துவரை முறைக்க.. “மங்கை” என எழுப்பினார் மருத்துவர்.
அவ்வப்போது குழந்தை அழுததாலும், ஷர்மியின் நினைவாலும், குழந்தையை தேவேஷ் பார்த்துப்பானா என்ற நெருடலோடும் இரவெல்லாம் தூக்கம் வராமல் போகவே, காலை ஏழு மணிபோல் குழந்தை தூங்கவும் தானும் கண்ணயர்ந்திருந்தாள்.
மங்கை எழவும்.. “மங்கை.. நீ எப்படி இங்க?” என கற்பகம் வியப்போடு கேட்க.. “இவங்க எதுக்கு என் குழந்தையோட இருக்காங்க?” என மருத்துவரை முறைத்தான் தேவேஷ்.
தேவேஷ் வரும்முன் கிளம்பிடலாம் என்றுதான் மங்கை எண்ணினாள். ஆனால் மருத்துவமணை பில் கட்டிருக்கிங்க, ஸரோகேஸிக்கு செட்டில் பண்ணிருக்கிங்க, என் குழந்தைக்கு இவங்க எதுக்கு பணம் கொடுத்தாங்கனு குழந்தையோட அப்பா கேட்டா, பதில் சொல்ல நீங்க இருக்கனும்.” என மருத்துவமணை எம்.டி கட்டளையிட, வேறு வழியின்றி இங்கேயே இருந்தாள் மங்கை.
“குழந்தை பிறந்ததும் ஷர்மிளாக்கு கால் செய்து சொன்னோம், என்ன குழந்தைனு கேட்டாங்க, ஒரு சர்ப்ரைஸ்க்காக நேர்ல வந்து தெரிஞ்சுக்கோங்கனு சொன்னேன்.
அதுக்கப்புறம் அவங்களும் குழந்தையை பார்க்க வரல, என் ஃபோனயும் அட்டன் பண்ணல, உங்களுக்கு கால் செய்தா நீங்களும் அட்டன் பண்ணல, ஸரோகேட் மதர்வேற எனக்கு செட்டில் பண்ணுங்க, என் குழந்தைகளை பார்க்க நான் போகனும்னு ப்ரஸர் கொடுத்தாங்க..
ஸரோகேஸியை இவங்கதான் அழைச்சிட்டு வந்திருந்தாங்க, எங்களுக்கு வேற ஆப்ஷன் இல்லாததால மங்கைக்கு கால் பண்ணினோம். இவங்க சொல்லித்தான் ஷர்மிளா இறந்த விசயம் தெரிந்தது..” என்றார் மருத்துவர்.
எப்படியாகினும் மங்கையின் உதவி பிடிக்காமல் போகவே, “நைட்டாவது எங்கம்மாக்கு கால் பண்ணி சொல்லியிருக்கலாமில்ல? உன்னை யார் இங்க இருக்க சொன்னது?” என கடிந்து மருத்துவரிடம்.. “மொத்தம் எவ்வளோ ஆனது?” என்றான்.
மருத்துவர் விளக்கமளித்துக்கொண்டிருந்த போதும், இவங்களுக்கு குழந்தை பிறந்திருக்கு.. இந்த நிமிடம் வரை ஆணா பொண்ணா? குழந்தை ஹெல்த் எப்படியிருக்கு என்று குழந்தை நலம் பற்றி ஒரு வார்த்தை விசாரிக்க வில்லையே, என வேதனையடைந்தவள்..
சரி போகட்டும், பொண்டாட்டி செத்த துக்கத்துல கத்துறாங்க, ஷர்மிக்காக்காகவும், ஆன்ட்டிக்காகவும பொறுத்துக்கலாம் என அமைதிகாத்தாள் மங்கை.
அக்ரிமன்ட் படி ஸரோகேஸிக்கு பேசிய தொகையையும், மருத்துமணை தொகையையும் மருத்துவர் சொல்ல.. அதில் பாதிதான் தேவேஷிடம் இருந்தது.
அவனின் நண்பனுக்கு அழைத்து பண உதவி கேட்கவும்.. “பக்கத்து வீட்டுலதான இருக்கேன்? இருக்கும்போது கொடுங்க..” என்றாள் தன்மையாகவே.
மங்கையின் உதவியில் மேலும் கரைந்த கற்பகம்.. “தேவாவை தப்பா நினைக்காத மங்கை. அவன் சூழல் அப்படி.” என்கவும்.. “பரவால்ல ஆன்ட்டி.” என்றாள்.
“நேத்தெல்லாம் நீதான் குழந்தையை பார்த்துக்கிட்டியா? அதான் ஷர்மிளா உடம்பு வந்ததும் கிளம்பிட்டியா?” என கண்கலங்கினார் நன்றியோடு.
“என்ன பொண்ணுபோல பார்த்துக்கிறிங்க? உங்களுக்காக இதை கூட பண்ணமாட்டனா ஆன்ட்டி?” என உரிமையாய் கோபித்தவள்.. பணம் கொடுக்க முடியாத சூழலில் தேவேஷ் முகம் இறுகியிருக்க, மேலும் அவனை சங்கடப்படுத்த விரும்பாமல்.“நான் கிளம்பறேன் ஆன்ட்டி..” என கிளம்பினாள்.
ஆனால் மனமெல்லாம் குழந்தையை சுற்றியே வலம் வந்தது. குழந்தை வந்த நேரம்தான் பொண்டாட்டி இறந்துட்டானு குழந்தைகிட்ட ஒட்டமாட்டாரோ என தேவேஷை நினைக்க மனம் கணத்தது மங்கைக்கு.