மொபைலில் ரெக்கார்டிங் ஆப்ஷனை ஆன் செய்த மங்கையின் முகச்சிவப்பிலேயே எங்கேயோ ரூல்ஸ் பேசியிருக்கிறாள் என மருத்துவருக்கு புரிய.. சிறு புன்னகையோடு சுவாரஸ்யமானார் மருத்துவர்.
மங்கை.. “நல்லா நியாபகத்துக்கு வந்துடுச்சி.. இப்போ உனக்கு என்ன வேணும்?” என்றாள் அழுத்தமாக.
“சின்னதா ஒரு வார்த்தை சொன்னதுக்கு அன்னைக்கு டாக்டர்கிட்ட போட்டு கொடுத்தயில்ல? இப்போ அந்த தேவேஷ்கிட்ட நீதான் டோனர்னு சொன்னா உன்னால என்ன பண்ண முடியும்?” என்றாள் எள்ளலாக.
மருத்துவர் வேறு அருகிலிருக்க, சற்றும் இதனை எதிர்பாராத மங்கையின் முகம் பதட்டத்திற்குள்ளாகவே.. சௌமியா.. “என்ன சத்தத்தையே காணோம்?” என்றாள் எள்ளலாக.
மருத்துவரை பார்க்க, அவர் முகமும் அதிர்வில் இருக்கவே, இவருக்கு எல்லாம் தெரிந்துவிட்டது, இனி அமைதிகாத்து லாபமில்லை என முடிவெடுத்தவளாய்.. “போய் சொல்லு.” என்றாள் சவாலாக.
அன்று இரண்டு மணிநேரத்தில் பல லட்சங்களோடு வந்த மங்கையிடம், இதனை சொல்லி பணம் பறிக்கலாம் என்று சௌமியா நினைத்திருக்க, தற்போது மங்கை பட்டென சொல்லு என்றிடவும்.. “என்ன பயப்படாத மாதிரி நடிக்கிறியா? அந்த தேவேஷ் ஏற்கனவே உன்மேல செம கோபத்துல இருக்கிறார், இதுல நீதான் டோனர்னு தெரிஞ்சா செமையா இருக்கும்ல.?
அதோட கல்யாணமாகமலே உனக்கு ஒரு குழந்தையிருக்குனு வெளில விசயம் தெரிஞ்சா, முக்கியமா உங்கம்மாக்கு தெரிஞ்சா உன் நிலைமை என்னாகும்?” என்றாள் மிரட்டலாக.
“ஷர்மிளாக்காக்காகத்தான் நான் ஓவம் டொனேட் செய்தேன். மத்தபடி அந்த தேவேஷ்க்கும் எனக்கும் ஒரு சம்மதமுமில்ல, அவர் வந்து என்னை கேட்டா, உங்க வொய்ஃப் விருப்பப்பட்டு கேட்கவும்தான் நான் டொனேட் செய்தேன்னு ஈசியா சொல்லிக்குவேன். அதுக்கான டாக்குமண்ட்சும் பக்காவா இருக்கு.
என்னோட சீக்ரெட்டை பாதுகாக்க வேண்டியது ஹாஸ்பிட்டலோட பொறுப்பு.. அது வெளியாகும் பட்சத்துல நிர்வாகத்துமேல ஆக்ஷன் எடுக்கவே நான் தயங்கமாட்டேன்.. உன்னை சும்மா விட்டுருவனா?” என அடக்கப்பட்ட ஆத்திரத்தோடு சொன்னவள்.. “நீ உன்னால முடிஞ்சதை பார்த்துக்கோ, என்னால ஆனதை நான் பார்த்துக்கிறேன்.” என இணைப்பை துண்டித்தாள் மங்கை.
“மங்கை.. பிரச்சனை ரொம்ப சீரியஸ் போல. முதல்ல உங்க பேரண்ட்க்கு இன்ஃபார்ம் பண்ணி லீகலா ஆக்ஷன் எடுங்க..” என மருத்துவர் அறிவுறித்தினார்.
குழந்தையின்மையால் ஷர்மிளா அடைந்த மன அழுத்தங்களை சொன்னவள்.. “அவங்க எங்க பக்கத்து வீடுதான் சார்.. நம்மால முடிந்த உதவியை செய்வோமேனுதான் ஓவம் டொனேட் செய்தேன்.
ஷர்மிளாக்காவை தவிர்த்து இந்த விசயம் யாருக்கும் தெரியாது..” என ஷர்மிளாவின் இறப்பை சொல்லி, “இப்படி ஆகும்னு நான் நினைக்கவேயில்ல, ஷர்மிளாக்கா இருந்திருந்தா இப்படி பிரச்சனை வந்திருக்காது.” என வருந்தி..
“எங்கம்மாக்கு விசயம் தெரிஞ்சா கூட எப்படியோ சமாளிச்சிடுவேன்.. ஆனா பொண்டாட்டி இறந்த துக்கத்துல ஷர்மிளாக்கா ஹஸ்பண்ட் ரொம்ப உடைஞ்சி போயிருக்கார்.. ஒரு மனிதனோட மோசமான சுட்டிவேஷனை தெரிஞ்சிட்டு இப்படி ப்ளாக்மெயில் பண்றவங்களை சும்மாவிடவே கூடாது..
அதுலயும், குழந்தையோட ஜெனடிக் அம்மா நான்னு தெரிஞ்சும் திரும்பவும் என்கிட்டயே குட்டிசாத்தான்னு சொல்றா.. அதுக்கு தகுந்த பாடம் கத்து கொடுக்கறேன்.” என தான் ரெக்கார்ட் செய்த பகுதியை சௌமியா வேலைசெய்யும் மருத்துவமனையில், தனக்கு பரிச்சையமான டாக்டருக்கு அனுப்பி வைத்து, அம்மருத்துவருக்கு அழைத்து சௌமியா மேல நீங்க ஆக்ஷன் எடுக்கலனா நிர்வாகம் மேல நான் ஆக்ஷன் எடுக்கவேண்டி வரும்.” என எச்சரித்து இணைப்பை துண்டித்தாள்.
டாக்டர்.. “சூப்பர் மங்கை.. வீட்டுக்கு தெரியாம டொனேட் செய்தது தப்புனாலும், அதுல பிரச்சனை வந்தாலும் போல்டா இறங்கி ஏக்தம் பார்க்குறிங்க..” என பாராட்டி, “எதாவது ஹெல்ப் வேணும்னா சொல்லுங்க.. விசயத்தை எங்க ஃபேமலி லாயர்கிட்ட சொல்லி, உங்களை இன்ட்ரடியூஸ் செய்துவைக்கிறேன்..” என்றார்.
“கண்டிப்பா சார், தேங்க்யூ சோ மச்.” என்றவள் கூகுளில் எதையோ ஆராய்ந்து கொண்டிருந்தாள்.
பத்து நிமிடம் கழித்து.. “ஷர்மிளா ஓ.பிக்கு வர ஆரம்பிச்சிட்டாங்க, நான் ப்ரதிபாவை கூப்பிட்டுக்கிறேன், ஸ்டாஃப் ரூம்ல கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க. இல்ல வீட்டுக்கு கிளம்புறதுனாலும் கிளம்புங்க.” என்றார்.
“இல்ல சார், நானே பார்த்துக்கிறேன், இங்க வர குழந்தைகள் முகத்தை பார்த்தா எவ்வளோ கஷ்டம்னாலும் மறந்திடும்.. தனியா இருந்தா இதையே நினைச்சிட்டிருப்பேன்.” என பணியில் கவனமானாள்.
இரவு எட்டு மணிபோல் அனைத்து குழந்தைகளையும் பார்த்து முடித்திருக்க.. “சார் நான் கிளம்பறேன்.” என்றாள்.
“சரிங்க மங்கை.” என மருத்துவர் சொல்ல, அங்கே சௌமியா வந்து நின்றாள் பரிதவிப்போடு.
செளமியாவைப் பார்த்ததும் மங்கையின் முகம் இறுகவே.. “என்னாச்சு மங்கை?” என்றார்.
“போன்ல வெறப்பா பேசுன காட்டெருமை, இப்போ காத்து போன பலூன் மாதிரி வந்து நிக்குது..” என்றாள் எள்ளலாக.
மங்கையருகே வந்த சௌமியா.. “இப்படி செய்திருக்கிங்களே இது நியாயமா? நான் எதோ அன்னைக்கு நீங்க திட்டுனிங்கன்ற கோபத்துல சும்மாதான் சொன்னேன்.” என்றாள் பாவமாக.
“நீ சும்மா சொன்ன?” என நம்பாத பார்வை பார்வை பார்த்தவள்.. “டாக்டர்கிட்டயும் ஸரோகேட் மதர்கிட்டயும் தவிர வேற யாருக்கும் என் நம்பர் தெரியாது. ஃபைல்லயும் என்னோட நம்பர் இருக்காது, ஸரோகேட் மதர்கிட்ட நம்பர் வாங்க வாய்ப்பில்ல, டாக்டரும் கொடுத்திருக்கமாட்டார், ஆக டாக்டருக்கு தெரியாம அவங்க மொபைல்லயிருந்த என் நம்பரை எடுத்திருக்க.. சும்மா சொல்றதுக்குத்தான் இத்தனை வேலை பார்த்தியா?” என்றாள் கோபத்தோடு.
“நான் பேசினா என்கிட்ட பேசுறதை விட்டுட்டு, இப்படி ஹாஸ்பிட்டல்ல போட்டு கொடுத்து வேலையை விட்டு தூக்க வச்சி என் பொழப்புல மண்ணள்ளி போட்டுட்டிங்களே. இது நியாயமா?” என்றாள் கண்ணீரோடு.
“ஹா..ஹா.. இதோட போய்டுச்சினு நினைச்சியா? இதெல்லாம் ஹாஸ்பிட்டல் சீக்ரெட்டை வெளில சொல்லி செய்யும் தொழிலுக்கு நம்பிக்கை துரோகம் பண்ணினதுக்கான கூலி மட்டும்தான்..
டியூட்டி நேரத்துல டியூட்டியை பார்க்காம அரட்டை அடிச்சிட்டிருந்தது தப்புனு நியாயமா சுட்டிக்காட்டின என்னை பழி வாங்க நினைச்சதுக்கும், பச்ச குழந்தையை குட்டிசாத்தான்னு திரும்பவும் என்கிட்டயே சொன்னதுக்கும் உனக்கு ஸ்பெஷல் கவனிப்பு இருக்கு..” என்றாள் முறைப்பாக.
அதில்லாம, தாய்மையடைய முடியாத ஒரு பொண்ணுக்காக, தாய்மை எண்ணத்தோட ஓவம் டொனேட் செய்த என்னை, அதை பகிங்கிரமா வெளிப்படுத்துவேனு மிரட்டி, மன உளைச்சலுக்கு ஆளாகினதுக்கு செக்ஷன் 503 பிரிவின் படி ஏழு வருசம் தண்டனை கிடைக்குமாம்.
உன்ன மாதிரி கொஞ்சம் கிரிமினலா யோசிச்சா.. இன்னொரு பொண்ணோட சினைமுட்டையை தானமா வாங்கித்தான் நீ தாய்மையடைஞ்சிருக்கனு சொல்லி ஷர்மிளாக்காவையும் மன உளைச்சலுக்கு நீ உள்ளாக்கியிருக்கனு சின்னதா ஒரு பிட்டை போட்டு..
அந்த டிப்ரஸன்லதான் அவங்க கவனம் சிதறி விபத்துக்குள்ளானாங்கனு கேஸ் ஃபைல் செய்தா ஆயுசுக்கும் உள்ள இருக்கலாம். இதுல உனக்கு எது வசதின்னு முடிவு செய்துக்கோ.” என்றாள் அமர்த்தலாக.
பதறிய சௌமியா மங்கையின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கவே.. “ஏய் ச்சீய்.. எழுந்துரு.” என பின்னே நகரவும்.. “என்னை மன்னிச்சிடுங்க, நான் தெரியாம செய்துட்டேன்.
இப்போதான் எனக்கு நிச்சயம் முடிஞ்சிருக்கு, இன்னும் மூனு மாசத்துல கல்யாணம், என்மேல கம்ப்ளைன் கொடுத்துடாதிங்க.. நான் செத்தே போய்டுவேன்.” என கதறினாள்.
செத்துடுவேன் என்றதும் சற்றே மனமிறங்கிய மங்கை.. “நீ பேசினது இன்னும் பத்திரமா என் மொபைல்ல இருக்கு.. இனி எப்பவும் இருக்கும்.. இன்னைக்கு கால்ல விழந்துட்டு, திரும்பவும் என்னைக்காவது உன் புத்தியை காட்டின.. இன்னைக்கு போல மன்னிச்சி விடுவேனு மட்டும் நினைச்சிடாத.” என எச்சரித்து.. “நீ கிளம்பலாம்.” என்றாள் கட்டளையாக.
சௌமியா மீண்டும் பயந்த பார்வை பார்க்கவே, “நான் சொன்னா சொன்னதுதான்.. என்னை சீண்டாத வரைக்கும் உன்னை நினைக்கமாட்டேன்.. போ.” என்றாள்.
சௌமியா கிளம்பிடவே.. “மாஸ் காட்டிட்டிங்க மங்கை..” என பாராட்டிய மருத்துவன்… “ஆமா இந்த லா பாயிண்ட்லாம் எப்படி தெரியும்? நீங்க சொன்னதெல்லாம் உண்மையா?” என்றான் ஆச்சர்யமாக.
மங்கை.. “யாருக்கு தெரியும்? எல்லாம் கூகிள் உபயம்தான்.. எப்படியோ ஒர்க்கவுட் ஆகிடுச்சில்லங்க சார்?” என்றாள் இலகுவாக.
“சரிங்க மங்கை, லேட் ஆகிடுச்சி நீங்க கிளம்புங்க.” என்கவும் வீட்டிற்கு கிளம்பியவளிற்கு, நம்மகிட்ட சொல்லாம நேரடியா தேவேஷ்கிட்ட சொல்லியிருந்தா என்னவாகியிருக்கும்? என மனம் பதற..
ச்சு அதான் அப்படி நடக்கலயில்ல? கற்பனைக்கெல்லாம் பயப்படக்கூடாது என தேற்றிக்கொண்டவள்.. ச்ச.. பொசுக்குனு மன்னிச்சிட்டோம்.. பச்ச குழந்தையை குட்டிசாத்தானு சொன்னதுக்கு இன்னும் நாலு காட்டு காட்டியிருக்கனும்..
குட்டிசாத்தான்றது சின்ன வார்த்தையாம்ல? அந்த சின்ன வார்த்தையை கொஞ்சம் மாத்தி சௌமியாவாகிய நான் ஒரு குட்டிசாத்தானு அட்லீஸ்ட் தௌசண்ட் டைமாவது எழுத வச்சி அனுப்பிருக்கனும்.. என தன்னையே கடிந்தவாறு நடக்கலானாள்.
** ** ** **
மூன்று மாதங்கள் முடிந்திருக்க.. மங்கை வேலைசெய்யும் மருத்துவரின் தங்கைக்கு திருமணம் என்பதால், இரண்டுநாட்களுக்கு நான் வரமாட்டேன், நீங்களும் லீவ் எடுத்துக்கோங்க என சொல்லியிருந்தார்.
நேற்றெல்லாம் அன்னையிடமும் அண்ணனிடமும் மணக்கணக்கில் பேசி இன்பமாய் பொழுதை கழித்தாள். இன்று காலை மருத்துவரின் தங்கை திருமணத்திற்கு சென்று வந்தவள்.. நேரே கோவிலுக்கு வந்திருந்தாள்.
பிரகாரம் சுற்றிவந்தவள் அமரப்போக, அங்கே கற்பகம் குழந்தையோடு அமர்ந்திருந்ததைப் பார்த்த்தும் இப்படியே கிளம்பிடலாமா என யோசித்திருக்க, கற்பகம்.. “மங்கை.. வா வா.. அன்னைக்கு வீட்டுக்கு வந்தன்னைக்கு உன்ன பார்த்தது.. நல்லாயிருக்கியா? இந்த நேரம் ஹாஸ்பிட்டல்லதான இருப்ப? அதிசயமா கோவில் பக்கம் வந்திருக்க?” என்றார் ஆச்சர்யத்தோடு.
“ஆன்ட்டி..” என்றவளின் கண்கள் குழந்தையிடம் போக,
“இன்னைக்குத்தான் உன்னை சாரியில பார்க்குறேன், அப்படியே மகாலஷ்மி மாதிரி இருக்க.” என கற்பகம் மங்கையை ரசிக்க,
சிப்பி உதட்டில் எச்சில் வழிய, இணைந்திருந்த இருபுருவங்களையும் மேலுயர்த்தியும் கீழிறக்கியபடியும், கோவிலின் மேற்கூரையில் வரைந்துள்ள தெய்வங்களின் படத்தை பார்த்து.. ஊ.. கூ என பேசிக்கொண்டிருந்த குழந்தையின் அழகில் மயங்கியவளாய்.. “குழந்தை செம அழகா இருக்கான் ஆன்ட்டி.” என மங்கை குழந்தையை ரசித்தாள்.
தானும் வருந்தியபடி.. “விடுங்க ஆன்ட்டி.” என தேற்றினாள்.
“முன்னலாம் மதிய சாப்பாட்டுக்கு வரும்போது வீட்டுக்கு வருவதான? இப்ப என்னாச்சு?” என்றார் கோபமாக.
குழந்தைக்காகத்தான் இவள் செல்வதில்லையென்றாலும், “உங்க மகன்தான் பக்கத்து வீடுனு அதிக உரிமை எடுத்துக்கக்கூடாதுனு சொன்னதா சொன்னிங்க, அப்போ நான் எப்படி வரது?” என்றாள் கோபம்போல்.
“மங்கை..” என தவித்தவர், “அவனை விடு, என்னை பார்க்க வரலாமில்ல? எங்க காலத்துல வசம்பு, சித்திரத்த, கடுக்கா, ஜாதிக்கா, மாசிக்கா, வெள்ளை மிளகு, கருமிளகு, சுட்ட பூண்டுனு இப்படி உரமருந்துகள்தான் கொடுப்போம், ஒரு நோய் நொடி அண்டாது.
இப்ப என்னென்னவோ டானிக்கு குடுக்குறாங்க, எனக்கு ஒன்னும் புரிய மாட்டுக்குது, என்ன வரம் வாங்கி வந்தானோ.. தாய்பாலும் இல்ல..” என கண்கலங்கியவர், “குழந்தைங்க ஆஸ்பத்திரிக்குதான வேலைக்கு போற? உனக்கு எல்லாமும் தெரியும்தான? வாரத்துக்கு ஒருநாளாவது வந்து சொல்லிகொடுத்துட்டு போலாமில்ல?” என்றார் ஆதங்கமாக.
தேவேஷிற்கு குழந்தையின் மேல் ஆர்மிருக்கா என அறிய.. “ஏன் ஆன்ட்டி.. இவனோட அப்பா படிச்சவர்தான? அவர் சொல்லி கொடுக்கமாட்டாரா?” என்றாள்.
“என்னாலயே அவளை மறக்க முடியல, என் மகன் என்ன பண்ணுவான்?” என வருந்தியவர்.. “பித்து பிடிச்சவனாட்டம் இருந்தாலும், குழந்தைக்கு தேவையானதெல்லாம் செய்யிறான்தான், அவனோடதான் போய் தடுப்பூசிலாம் போட்டுட்டு வரேன் மங்கை, இதிது இந்த நேரத்துக்கு கொடும்மானு சொல்லிட்டுத்தான் போவான், எனக்குதான் குழப்பமாகிடுது.” என்றார்.
ஹப்பா, குழந்தை மேல அக்கறையிருக்கு என நிம்மதியடைந்தவள்.. “ஒருநாளைக்கு மதியம்போல மருந்தெல்லாம் எடுத்துட்டு வீட்டுக்கு வாங்க ஆன்ட்டி, நான் சொல்லிகொடுக்குறேன்.” என்றாள்.