காதல் வந்தாலே கண்ணோடு தான் கள்ளத்தனம் வந்து குடி ஏறுமோ கொஞ்சம் நடித்தேனடி கொஞ்சம் துடித்தேனடி இந்த விளையாட்டை ரசித்தேனடி
மதிய உணவு இடைவேளையில் அன்று ஆனந்தியைப் பார்க்க வந்திருந்தான் ஜீவா. கொண்டாட்டமாய் வந்தவனை வைத்து வாங்கிக் கொண்டிருந்தாள் அவனின் செல்லப் பாம்புக்குட்டி கூந்தல் அழகி.
“இப்ப மட்டும் ஏன் என்னைப் பார்க்க வந்தீங்க? அன்னைக்கு என்னவோ என்னைப் பார்த்ததும் அப்படியே ஃபோன வச்சுட்டு போனீங்க?”
“இங்க பாரு ஆனந்தி, அன்னைக்கு நான் கால் பண்ணும் போது வேதாவும் அத்தானும் உன்கிட்ட பேசிட்டு இருக்காங்கன்னு எனக்குத் தெரியாது. அவங்க என்னோட கால் அட்டன் பண்ணவும் தான் தெரியும் நீயும் இருக்குறது.”
“அதெல்லாம் சரி, நான் இருந்தா என்ன இப்போ, அதான் அண்ணி சொன்னாங்களே பேசு பேசுன்னு, அப்புறமும் சார் வச்சுட்டு போயாச்சு.” விட்டால் அடித்து விடுவாள் போன்ற வேகம் ஆனந்தியிடம்.
“என்ன ஆனந்தி புரியாம பேசுற. அத்தான் வேற என்னையே பார்க்கிற மாதிரி ஒரு பீல். உன்னை வீடியோ கால்ல ஒழுங்காவும் பார்க்க முடியல. புரிஞ்சுக்க டி.” கெஞ்சவே தொடங்கி இருந்தான்.
“ஹ்ம்ம், எனக்கும் தான் ஆசையா இருந்துது ஆனந்த். எப்பவும் ராத்திரில பேசும் போதும் உங்களப் பார்த்துப் பேச முடியாது. அன்னைக்கும் நீங்க என்னைப் பார்க்கல. ஏன் அப்படி செஞ்சீங்க? அதான் பயங்கர கோபம் எனக்கு.”
“இன்னும் ஒரு ரெண்டு மாசம், இல்லை அதுக்கும் முன்னாடி கூட சென்னைக்கு வந்திடுவேன். புரிஞ்சுக்க டி. வீக் டேல லீவு போட்டு வர்றேன் உன்னைப் பார்க்க.
வீட்லயே இருக்கலன்னு அம்மாவும் திட்டுறாங்க. இனி நைட் மறுபடி நான் கிளம்பிப் போகணும்.” அவனும் தன்நிலை விளக்க ஆனந்தி சிறிது சிறிதாக அவன் சூழ்நிலை உணரத் தொடங்கினாள். ஆனாலும் சிறு பிள்ளையென கோபம் மட்டும் குறைய மறுத்தது.
காதலில் சந்திப்புகள் தரும் தருணங்கள் எல்லாம் காதலர்கள் வாழ்வில் நறுமணம் சேர்க்கும் மலர்க் கொத்துக்கள். அத்தகைய சந்திப்புகள் எல்லாம் வெகுவாகக் குறைந்து என்றோ ஒருநாள் அவன் பேசும் சில நிமிடங்களுக்காகக் காத்திருந்து மனம் தெளிந்து கொள்ள ஆனந்திக்கு அனுபவம் போதவில்லை.
நேரில் காண வழியில்லை, காணொளியில் காணக் கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விட்ட ஜீவாவின் மேல் அவளின் கோபம் கரை புரண்டது இன்று.
“நான் அன்னைக்கு உங்களைப் பேச சொல்லீட்டு கால் கட் பண்ணவும் வேதா என்கிட்டே எதுவும் கேட்கல. இல்லைன்னா அவளுக்கும் தெரிய வரும். இதெல்லாம் தேவையா?”
“அடியே பைத்தியக்காரி, இப்பவே எல்லாருக்கும் கூப்பிட்டு சொல்ல எனக்கு பயமும் இல்ல. உன்னக் கழட்டி விட்டுப் போற ஐடியாவும் இல்ல. உன்னோட படிப்பும் நம்ம வயசும் தான் என் யோசனைக்குக் காரணம்.”
என்ன பெரிய வயசு? இன்னும் ஒரு வருஷம் மட்டும் தான் இருக்கு நானும் படிச்சு முடிச்சுடுவேன்.”
“ஹ்ம்ம்ம் நீ படிச்சு முடி, அப்புறம் டெய்லி வீடியோ கால் பண்ணுவேன்.”
ஆனந்திக்குக் கோபம் சிறிது குறைய அடுத்த சந்தேகம் தொடங்கியது.
“ஆமா, எப்படி ஆனந்த் உங்கள மட்டும் இப்பவும் கேம்பஸ் உள்ள விட்றாங்க? என்ன சொல்லி இன்னும் கேம்பஸ் உள்ள வர்றீங்க?”
“உனக்குத் தான் என் அருமை பெருமை எல்லாம் தெரியல. அதெல்லாம் என்னால எப்ப வேணும்ன்னாலும் இங்க வர முடியும்.” சட்டையைத் தோரணையாகத் தூக்கி வீட்டுக் கொண்டான் ஜீவா.
“கிரிக்கெட் டீம்னு சொல்லி வர்றீங்களா? என்ன ஆச்சு டீம் செலக்ஷன்? மார்ச்ல தமிழ் நாடு டீம் ஜாயின் பண்ணீடுவீங்களா?” ஆவார்வமாகக் கேட்டாள் ஆனந்தி.
“கிரிக்கெட் இல்லாமா வேற என்ன சொல்லி வர முடியும். அதுவும் ID கார்டு இல்லாம. டீம் செலக்ஷன் போன வாரமே சொல்லிருக்கணும், என்னமோ இந்த முறை கொஞ்சம் நம்பிக்கை இல்லாம தான் இருக்கு. பார்ப்போம். “
“நீதானே டி சொன்ன? எங்க அண்ணா வேண்டாம்ன்னு சொன்னா எனக்கும் வேண்டாம். அப்படி இப்படின்னு என்ன என்ன டென்ஷன் பண்ணின? இப்ப அத்தான் கிட்ட மட்டும் அப்படியே பம்மீருக்க.”
“பின்ன அண்ணன்கிட்ட போயி, நான் லவ் பன்றேன்னு திமிரா சொல்ல சொல்லுறீங்களா?”
“சும்மா சொல்லி பார்த்திருக்கலாமில்ல நீயும்.”
“ஏன் அர்ஜுன் அண்ணா என் மண்டைல ரெண்டு போட்டு உன்னைப் படிக்க அனுப்புனான்னு, பழைய வில்லன் டயலொக் எல்லாம் பேசணும்ன்னு எதிர் பார்த்தீங்க போல?”
“ஹ்ம்ம், எப்படியோ ஒரு சப்போர்ட் இருக்கு நமக்கு. இனி எங்க அக்கா என்ன சாமி ஆடுவாளோ? சமாளிப்போம்.”
கதை பேசியபடி அந்த குறுகிய நேரத் தனிமையை இருவரும் ஆசை ஆசையாய் அனுபவிக்க, அவர்களின் காதல் வானவில்லின் வண்ணம் சேர்த்தது.