“வெள்ளிக்கிழமை வீட்டு மஹாலக்ஷ்மியை இன்னொரு வீட்டுக்கு அனுப்பக் கூடாதுன்னு சொல்லீட்டாங்களாம். அதான் அக்கா இங்க நம்ம புக் பண்ண ரூம்லயே ஸ்டே பண்ணிட்டா அத்தான்”
“ஓ, துணைக்கு யாருடா இருக்கா?”
“அப்பத்தா தான் இருந்தாங்க. ஆனா காலைல பியூட்டீஷியன் சீக்கிரம் வருவாங்கன்னு அப்பத்தாவை என் ரூம்ல தூங்கச் சொல்லிட்டேன். அவ தனியா தான் இருக்கா. அதெல்லாம் இருந்துப்பா அத்தான். நான் இப்ப போய் பார்க்கிறேன்.”
மீண்டும் அர்ஜுன் மனதில் ‘கண்ணா ரெண்டாவது லட்டு தின்ன ஆசையா?’
“அப்ப வேதா தனியாவா இருக்கா?”
“ஆமாத்தான்.”
“டேய் ஒரு ஹெல்ப் பண்ணு. நான் இப்ப அங்க வர்றேன். கொஞ்சம் அவகிட்ட பேசணுமே.”
“நீங்க தனியாவா அத்தான் வர்றிங்க. யாரும் பார்த்தா ப்ராப்ளம் ஆகப் போகுதுத்தான்”
“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். வரும் போது இங்க பாப்பா இருக்கா கூட்டிட்டு வர்றேன். இன்னும் பைவ் மினிட்ஸ்ல வர்றேன். நீ அங்க ரூம் கிட்ட வா.”
“ஓகே அத்தான்.”
சொன்னது போலவே அடுத்த ஐந்து நிமிடத்தில் ஆனந்தியுடன் அங்கு வந்து சேர்ந்தான் அர்ஜுன்.
அத்தானிடம் பேச்சைத் தொடங்கினாலும் பார்வை என்னவோ நொடிக்கொரு முறை ஆனந்தியின் மேல் பட்டுத் திரும்பியது.
“என்ன அத்தான் திடீர்ன்னு வந்துட்டிங்க?”
“டேய் நீ சின்னப் பையன் உனக்கு இதெல்லாம் புரியாது.”
“ஹ்ம்ம் அது சரி. ஆமா பாப்பாவக் கூட்டிட்டு வர்றேன்னு சொன்னிங்க அத்தான், இப்ப இந்தப் பீப்… இல்ல இவங்களைக் கூட்டிட்டு வந்திருக்கீங்க. “
“டேய், அவளும் இல்லாம வேதாவ நான் மட்டும் எப்படிப் பார்க்க வர?”
“ஹ்ம்ம் அதுவும் கரெக்ட் தான் அத்தான்” என்றவன் வேதாவின் அறைக்கு அர்ஜுன் சென்றதும் மீண்டும் வந்து ஆனந்தியுடன் நின்று கொண்டான்.
ஏற்கனவே அவளை இருமுறை சந்தித்திருந்தும் இன்று முதல் முறை தனியே சந்திக்கிறான். கொழுகொழு மொழுமொழு அழகி. ‘இதென்ன தலையில் இத்தனை பாம்புக் குட்டிகள் சுருண்டிருக்கு’ என எண்ணம் தோன்றும் அளவு சுருள் சுருள் முடி. ஐந்தடிக்கும் மேல் உயரம். ‘இதென்ன இவளை இப்படிப் பார்க்கிறேன்’ மனதிற்குள் தலையில் தட்டிக் கொண்டான்.
ஆனந்திக்கு இது போன்ற எண்ணமெல்லாம் இல்லை போலும். ‘அட நம்ம ஆனந்தம்’ என வஞ்சனை இல்லாமல் அவனைக் கண்களால் விழுங்கிக் கொண்டிருந்தாள். “டேய், அவளும் இல்லாம வேதாவ நான் மட்டும் எப்படிப் பார்க்க வர?”
“ஹ்ம்ம் அதுவும் கரெக்ட் தான் அத்தான்” என்றவன் வேதாவின் அறைக்கு அர்ஜுன் சென்றதும் மீண்டும் வந்து ஆனந்தியுடன் நின்று கொண்டான்.
“ஓய் என்ன லுக்கு?”
அவன் கேள்விக்குப் பதிலில்லை. அமைதியாய் நின்றிந்தாள்.
“கேட்டா பதில் சொல்ல மாட்ட நீ. அன்னைக்குச் சேலை எடுக்க வந்த அன்னைக்கும் இப்படித்தான் என்னையே பார்த்த? என்ன சைட் அடிக்கிறியா?”
“நான் உங்களையே பார்த்தேன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்? அப்படீன்னா நீங்க என்னையே பார்த்துட்டு இருந்தீர்களா? அப்டீன்னா நீங்களும் என்னை சைட் அடிக்கிறீங்களா?” எதிர்க் கேள்வி கேட்டாள் ஆனந்தி.
அவளின் பதில் கேள்வியில் ஒரு நிமிடமெனும் தடுமாறிப் போனான் ஜீவா.
‘நல்லவேளை தப்பிச்சோம், ஆனந்தம் திடீர்ன்னு என்ன கேள்வி கேட்டுடுச்சு. இனி கொஞ்சம் கவனமா இருக்கணும்’ தனக்குத்தானே சொல்லிக் கொண்டவள் அமைதியாய் நின்றாள்.
“நீ அடுத்து என்ன படிக்கப் போற?” பேச்சை மாற்றினான்.
“உங்க காலேஜில் தான் சேரணும்.” என்ன தடுத்தும் அவன் தன்னை அறிகிறான் எனும் எண்ணம் அவளுக்கு உள்ளுக்குள் மகிழ்வே தந்தது.
“அதென்ன எங்க காலேஜ்?”
“ஏன் உங்க காலேஜ் நல்லா இருக்காதா?”
“அதெப்படி நான் இருக்கும் போது நல்லா இல்லாமல் போகும்?”
“அதானே நீங்க பெரிய ஹீரோ ஆச்சே, நீங்க இருக்கும் போது நல்லா இல்லாமப் போகுமா?” அவளின் நக்கல் குரலில் நன்கு தெரிந்தது.
“ஏய் நக்கலா?” அவன் குரலில் கோபம் தெரிய ஆனந்திக்குள் ஏனோ ஆனந்த மழை.
“நீங்க என்னை சைட் அடிக்கிறீங்களான்னு கேட்டேன் பதிலே இல்ல?”
“கொழுப்பு உனக்கு.”
அதற்குள் அவனுக்கு அலைபேசியில் அழைப்பு வர அது
‘ஏ காத்தாடி போல ஏன்டி என்ன சுத்துற
சூ மந்திர காளி போட்டு சுத்த வைக்கிற
என்னாடி வுட்டுபுட்டா ரொம்ப பேசுற
கண்ணாடி நெஞ்சு மேல கல்ல வீசுற’ எனப் பாடத் தொடங்கியது. பாட்டின் வரிகள் ஆனந்திக்கு புன்சிரிப்பைத் தர, ஆனந்த அவஸ்த்தை அவர்களுக்குள்.
“ஆமா நீ இந்தப் பாம்புக் குட்டி எல்லாம் எப்படிக் கட்டி வைப்ப?” அவளின் விரிந்து இருந்த கூந்தல் கண்டு அவனுக்குள் ஏனோ சந்தேகம்.
“பாம்பா?”
“அதான் உன் சுருட்டை முடி, கிட்ட வந்தாக் கூசாது?”
“இன்னைக்கு மட்டும் இப்பிடி, இல்லாட்டி வேற ஹேர் ஸ்டைல்.” பதில் சொன்னாள். ஆனால் அந்தக் கேள்வி அவளிடம் ஏன்? என இருவருக்கும் தோன்றவே இல்லையே. ஏன்? ஏன்? ஏன்? காதல் தெரியாதவர்களுக்கு இது போல ‘ஸ்வீட் நத்திங்ஸ்’க்கு என்றுமே பதில் கிடைப்பதில்லை பாவம்.
இன்னும் ஏதேதோ பேசியபடி நேரம் கரைய, அர்ஜுன் வரும் வரை பேச்சு நீண்டது. இப்போதும் அர்ஜுன் என யாரோ அழைக்கும் குரலில் இருவரும் மீண்டு வந்தனர்.
மணமக்கள் மத்திய உணவு முடித்து அனைவரிடமும் விடை பெற்று மாப்பிள்ளை வீடு செல்லத் தயாராயினர்.
பிறந்ததிலிருந்து உடனிருந்த பெற்றோர்; தனக்கு வாழ்நாள் முழுமைக்கும் இருக்கும் உன்னத உறவாய் தம்பி; தாய் தந்தையைப் பெற்றவர்கள்; இன்னும் பல உறவுகள் அனைவரிடமும் விடைபெற்றுத் தன்னை இன்னொரு குடும்பத்தின் ஆணி வேரெனப் பதிய வைக்கும் தருணம்.
சில உணர்வுகளை உணர்ந்தவர்களால் மட்டுமே உணர முடியும். அத்தகைய உணர்வுகளுக்குள் வேதாவும் இருந்தாள்.
எங்கே விழுந்து விடுமோ எனும் நிலையில் கண்ணீர்த் துளிகள். அப்பாவைக் கட்டி அனைத்தும், விடுபட மனம் தான் இல்லை, அப்பாவின் இளவரசிக்கு. அம்மாவையும் தம்பியையும் கண்களால் நிரப்பி, மனதில் விடைபெற்றாள்.
அவளது அஜுவின் கைகள் அவளை எங்கும் விட்டுவிடவில்லை. அவனின் கைகளுக்குள் அவளின் கைகளைக் கோர்த்து, உன்னோடு ஒவ்வொரு நொடியும் நான் இருப்பேன் இனி வாழ்நாள் முழுமைக்கும் எனப் பாதுகாப்பு உணர்வுகள் தந்தான்.
அந்த உணர்வு தந்த உந்தலில் அவளின் அழகுப் புன்னகை சிந்த அர்ஜுனின் வீடு வந்து சேர்ந்தாள் அவனின் சரி பாதி.
இடுப்பில் நீர் நிறைந்த சிறு வெள்ளிக் குடம், அதை அணைத்திருந்த அதே கையில் வெள்ளிக் குத்து விளக்கு, இன்னொரு கை தன் தலைவனுடன் இணைந்திருக்க வலது கால் எடுத்து வைத்து அவன் இல்லம் புகுந்தாள்.
இனி என்றும் அவள் அர்ஜுனின் வேதா. இந்த இல்லத்தின் திருமகள்.
சுட்டெரிக்கும் சூரியன் தலை சாய, மாலை நேர மயக்கம் தலைவனுக்கும் அவன் கைப்பிடித்த அந்த மங்கைக்குள்ளும்.
அவள் செல்லுமிடமெல்லாம் மலரைக் கண்டு மயங்கும் தேன் வண்டாய் அவன் கண்கள் அவளைச் சுற்றத் தொடங்கியது.
இரவு உணவு முடிய ஸ்ரீ வேதாவைத் தயார் செய்தாள். இளஞ்சிவப்பு மென் பட்டு, மஞ்சள் மின்னும் தாலியுடன் மெல்லிய சங்கிலி கண்களை உறுத்தாத அலங்காரம் என மயக்கும் புயலாய் மாறிப் போனாள் வேதா. அவள் இன்னும் மாடியில் உள்ள அர்ஜுன் அறைக்குச் செல்லவில்லை.
சாகரி வந்து விளக்கேற்றி வணங்கச் சொல்ல, கடவுளை வணங்கி வந்தாள்.
ஸ்ரீ, பதட்டமாய் இருந்தவளை அணைத்து விடுவித்து மாடிக்கு அழைத்துச் சென்றாள்.
வாழ்வின் அடுத்த படிநிலைக்கான படிக்கட்டுகளில் வேதா. கனவுகள் கண்களில் மின்ன அறைக்குள் காத்திருந்தான் அர்ஜுன்.
ஆயிரம் இரவுகள் வருவதுண்டு
ஆனால் இது தான் முதல் இரவு
ஆயிரம் உறவுகள் வருவதுண்டு
ஆனால் இது தான் முதல் உறவு
வருவார் வருவார் பக்கம்
உனக்கு வருமே வருமே ஊஹூம்
தருவார் தருவார் நித்தம்
இதழ் தித்திக்க தித்திக்க ம்ஹ்ம்ம்
நானாய் சொன்னது பாதி
இனி தானாய் தெரியும் மீதி
திருமணம் இவர்கள் வாழ்வின் புது அத்தியாயத்தின் தொடக்கம். உடலும் மனமும் மயங்கும் ஒரு உறவின் தொடக்கத்தை எண்ணி இருவரும் காத்திருக்க, கண்ணீரும் காயங்களும் தந்து தூக்கம் தொலைக்கும் இரவாக அது கடந்து செல்லும் எனப் பாவம் ஏனோ அவர்கள் அறியவில்லை. காலம் கற்றுத்தரும் வாழ்வியல் என்றுமே அர்த்தமுள்ளது அழகானது.
(நூல்: நாச்சியார் திருமொழி -ஆண்டாள் பாசுரம்: பாடல் – மத்தளம் கொட்ட